வேகமான எழுத்துக்கும் சிந்தனைக்கும் உரித்தான மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம்..! - வி. ரி. இளங்கோவன் -
[மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் பற்றிய எழத்தாளர் வி.ரி.இளங்கோவனின் கட்டுரை. பாரிஸில் மே 25, 2025 அன்று அமுத விழா காணவிருக்கும் காசிலிங்கம் அவர்கள் என் எழுத்துலக வாழ்க்கையிலும் முக்கியமானவர், ஈழநாடு மாணவர் மலர் மூலம் என் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் அவர். காசி என்னும் பெயரில் அப்போது ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் மாணவர் மலருக்குப் பொறுப்பாகவிருந்தவர் அவர். என் முதல் ஆக்கத்தை வரவேற்று வாழ்த்தியவர். அதுவே , அந்த ஊக்கமே அவ்வயதில் என்னை மேலும் எழுத்ததூண்டியது. அவருக்கு அமுதவிழா. அனைவருடனும் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள். -]
அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1930 -ல் 'யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின்" பகிஸ்கரிப்புக் கோரிக்கைக்கு வலுவூட்டும் அரசியல் கருத்துகளுடன் 'ஈழகேசரி" வெளிவந்ததாக கூறுவதுண்டு. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிகக் கவனம் செலுத்திய ஈழகேசரி இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியமான ஆரம்பத்திற்குத் தளமாக ஈழகேசரி அமைந்து படைப்பாளிகளை இனங்காண வைத்தது என்றால் மிகையல்ல.
நாளேடுகளாக 1930 -ல் வீரகேசரியும் 1932 -ல் தினகரனும் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கின. வேறு சில நாளேடுகளும் வெளிவரத்தொடங்கி சிறிது காலத்திலேயே அவை நிறுத்தப்பட்டுவிட்டன.



தனது சொந்தத் தலையிடிகளால், பெரிதும் அவஸ்தைப்பட்டுப்போன அமெரிக்கா, தன் வெளிநாட்டுக் கொள்கையுடன் உள்நாட்டுக் கொள்கையையும் உடனடியாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியது. முக்கியமாக, அது தான் எதிர்ப்பார்த்த போர்முடிவை உக்ரைனில் காணக்கிட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.











பாரதி வந்தார் பற்பல பாடினார்
முன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.





கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









