உலக அரசியல்: பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் முன்னணியில் லண்டன் கருத்தமர்வில் சட்ட ஆலோசகர் எஸ்.பி. ஜோகரட்னம்
‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.
பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின் வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.