கோபிநாத்தின் 'நீயா நானா' பற்றி நான்! ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன்நண்பர் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் கூறியதால் இன்று (ஜனவரி 19, 2014)  கோபிநாத்தின் 'நீயா நானா' பார்க்கவேண்டுமென்று நினைத்தேன். சந்தர்ப்பமும் அமைந்தது. இதுதான் நான் முதல்முறையாக 'நீயா நானா' நிகழ்வொன்றினை முழுமையாகப் பார்ப்பது. கல்லூரியில் படிக்கும் ஏழை , பணக்கார மாணவர்களின் உளவியலை அவர்களுடனான உரையாடல் மூலம் கோபிநாத் வெளிக்கொணர்ந்தார். இந்நிகழ்வின் முக்கியமானதோர் அம்சமாக அவர் ஏழை மாணவர்கள் பக்கத்திலுள்ளவர்களிடம் 'நேரு இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும், பணக்கார மாணவர்கள் பக்கத்திலிருந்தவர்களிடம் 'அம்பேத்கார் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் இரண்டு நிமிடங்களாவது பேசக் கூறியபோதூ அவர்களிலொ ருவராளாவது பேச முடியவில்லை. அப்பொழுது கோபிநாத் மாணவர்களைப் பார்த்து இதனைப் பார்வையாளர்களிடமே மதிப்பிட விட்டுவிடுகின்றேன். என்று கூறியதுடன் மாணவர்களைப் பார்த்து இதே நேரம் உங்களிடம் இரு நடிகர்களைப் பற்றிப் பேசுமாறு கூறினால் பேச மாட்டீர்களா என்று கேட்பார். மாணவர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கேள்வியது. இன்னுமொரு மாணவர் அரசியல்வாதியாகப் போக விரும்புவதாகக் கூறியிருப்பார். அவராலும் நேரு, அம்பேத்கார் பற்றிச்சிறிது நிம்மிடங்களாவது பேச முடியவில்லை. வெட்கப்பட வேண்டிய விடயமிது. அதனையும் கோபிநாத் சுட்டிக்காட்டியிருப்பார்.
 
இதேபோல் செந்தில்நாதன் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய விடயமும் முக்கியமானது. இன்று இணையம் ஒன்றே போதுமானது எத்தனையோ விடயங்களை அறிவதற்கு. ஊடக வசதிகள், பயன்கள் இவ்வளவுதூரத்துக்கு முன்னேறியிருக்கும் இச்சமயத்திலும் மாணவர்களுக்கு ஓரிரு உழைக்கக்கூடிய வேலைகளைத் தவிர வேறு கல்வித் துறைகளைப் பற்றித் தெரியவில்லையென்பது மாணவர்களின் ஊக்கமின்மை காரணமாகத்தானே தவிர அவர்களது பொருளாதாரத்தால் அல்ல என்னும் கருத்துப்பட அவர்  கூறியதும் சரியான கூற்று.  பொருளியல்ரீதியில் பிளவுணடிருந்தாலும் மாணவர்கள் இந்த விடயத்தில் ஒன்றாகத்தானிருக்கின்றார்கள். அந்தஸ்த்துக்காக, ஆடை அலங்காரங்களுக்காக ஊடகங்களைப் பாவிக்க முடிந்த மாணவர்களுக்கு தங்களது அறிவினை அதிகரிப்பதற்கு முடியவில்லையென்பது செந்தில்நாதன் கூறியதுபோல் அதிர்ச்சிகரமானதுதான்.  அபிலேஷ் சந்திரன் தன் கருத்துரையில் தெரிவித்திருப்பதைப்போல் மாணவர்களில் பெரூம்பாலானவர்களின் நோக்கம் ஒரு வசதியான, உறுதியான வேலையொன்றில் அமர்ந்து வாழ்க்கையின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்வதுதான்.
 
இதற்கு முக்கியமானதொரு காரணம் இன்று இந்தியா போன்ற நாடுகள் உலகமயமாக்கல் மூலம் தங்களது வாழ்க்கை முறைகளை மேற்குலகநாட்டு வாழ்க்கைமுறைக்கு மாற்றிக்கொண்டிருப்பதுதான். எல்லாவற்றையுமே கடனுக்கு வாங்கும் வாழ்க்கை மக்களை வாழ்நாள் முழுவதும் உழைப்பு அடிமைகளாக வைத்திருப்பதற்கே வழிகோலுகிறது. அதற்கு முக்கியமான தேவை ஊதியத்துடன் கூடிய வேலைப் பாதுகாப்பே. எனவேதான் இவ்விதமான மேற்குலக வாழ்க்கைமுறைகளின் மீது நாட்டம் கொண்டுள்ள இன்றைய மாணவர்களுக்கு (அவர்கள் எந்த வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலென்ன) அத்தகைய வாழ்க்கை முறைகளுக்குத் தேவையான தொழில்களைப் பற்றி மட்டுமே தெரிந்திருக்கிறது. ஏனையவற்றைப் பற்றி அறிவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.
 
மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம் வர்க்கப்பிளவுகளும், மாணவர்களும், இன்றைய கல்வித்திட்டங்களும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நேரு பற்றியோ அம்பேத்கார் பற்றிய ஆழமாக அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சில நிமிடங்களாவது பேச முடியவில்லை. ஒரு சில பாடத்திட்டங்களைத் தவிர ஏனையவற்றைப் பற்றி போதிய அறிவு இல்லை. முக்கிய காரணம்: இன்று தாராளமாகக் தகவல் சுரங்கங்களாகவிருக்கின்ற பல்வேறு ஊடகங்களையும் பயன்படுத்தித் தம் அறிவினை வளர்ப்பதற்குரிய ஆர்வம் அவர்களுக்கில்லை. வாசித்தறிவினை வளர்க்கும் ஆர்வம் அவர்களுக்குப் போதிய அளவிலில்லை. தலை முடியினை அழகு படுத்துவதற்கு, விதம் விதமான காலணிகளை வாங்குவதற்கு, 'பார்ட்டிக'ளுக்குச் செலவழிப்பதற்கு எல்லா மாணவர்களுமே நாட்டமாகவிருக்கின்றார்கள் (வர்க்க வித்தியாசங்களென்ற எல்லைகளையும் மீறி). அந்த நாட்டத்தை தம் அறிவினை வளர்ப்பதற்கும் அவர்கள் பாவிக்க வேண்டும். அதற்கு இணையம் போன்ற நவீன ஊடகங்களே போதுமானவை. ஒரு முறையாவது கூகுளில் 'நேரு' பற்றி, 'அம்பேத்கார்' பற்றித் தேடிப்பார்த்திருந்தீர்களானால் , உங்களால் இந்நிகழ்வில் திணறியதைபோல் திணறியிருந்திருக்கத் தேவையில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்