- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -


 

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

 


From: "aravind athiththan"
To:
Sent: Saturday, September 23, 2000 6:35 PM
Subject: Pathivukal

Dear Editor,  I read your Pathivukal's recent issue. I am so impressed with your interview with industrialist Varatheswaran on Sethu Samuthira Canal. It is a very positive and optimistic interview. In fact , it is a great project which
will certainly benefit both countries. It is great to see Canadian tamil people's achievements. Tamil people living in Canada , whether they are educated or uneducated, Sri Lankan- born or Canadaian-born, they contribute
a lot to the Canadian society despite some negative publicity due to Tamil gang violence.

****************************************************************************
From: "Saminathan G."
Sent: Friday, August 18, 2000 10:53 PM
Subject: Re: pathivukal

ஆசிரியர் அவர்களுக்கு, 'தமிழ் தேசியம்' என்னும் கோட்பாட்டை சிலர் வளர்க்க முயலும் இவ் வேளையில் தமிழர்களை தேசியம் கடந்து பதிவு செய்ய முயல்வது நல்ல முயற்சியே. வாழ்த்துக்கள்.
[தங்கள் வாழ்த்துக்களிற்குப் பாராட்டுக்கள்-ஆசிரியர்-]

அருள் கூர்ந்து திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டும் வழக்கத்தைத் தவிர்க்கவும். 20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள், புலவர்கள் பெயரைக் கேட்டாலே என் போன்ற 'நவீன போக்கிரிகளுக்கு' அதிர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. [சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் யாரிற்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்வது 'பதிவுகளி'ன் நோக்கமல்ல. இருந்தாலும் எல்லைகளைக் கடந்த இணைய உலகில் எல்லைகளைப் போட முயல்வதன் மூலம் 'நவீன போக்கிரிகள்' 'பதிவுகளி'ற்கு அதிர்ச்சி வைத்தியம் தருவதில் மட்டுமென்ன நியாயம் இருக்க முடியும்? இணையத்தில் தமிழ் வாசகர்களை அதிகமாக ஈடுபடுத்துவதற்குப் 'பதிவுகள்' விரும்புகின்றது. அதற்கு உங்களைப் போன்றவர்கள் தான் 'பதிவுகளி'ற்குப் படைப்புகளை அனுப்பி அதிகமாக ஒத்துழைக்க வேண்டும். -ஆசிரியர்- ]

காதல், காமம் போன்ற சொற்களை Love, Sex போன்ற சொற்களுடன் ஒப்பிடும்போது சில தவிர்க்க இயலாத குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான். இருந்தாலும் கட்டுப்பாடற்ற காதல் என்பதற்கு Free Sex என்பது சரியான இணையல்ல. கட்டுப்பாடற்ற காதலிலோ காமத்திலோ உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக என் போன்ற தமிழ் பண்பாட்டு விரோதிகளின் சிற்றறிவுக்குத் தோன்றுவதில்லை - அவை ஒரு பாலினருக்கு மட்டும் மறுக்கப்படாத வரை.

[Free Sex என்னும் வார்த்தைப் பதம் கட்டுரை கூற வந்த விடயத்தை விட்டு வேறு திசையில் வாசகர்களைத் திசை திருப்பி விடும் அபாயம் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே அந்த வார்த்தைகளை நீக்கிக் கொள்கின்றோம். மகிழ்ச்சி தானே. கட்டுப்பாடற்ற காதல் சரியா பிழையா என்பதை விவாதிப்பதல்ல கட்டுரையின் நோக்கம். இவ்விடயத்தில் பாரதியின் நிலைப்பாட்டினை அவரது படைப்புகளூடாக ஆராய்வது தான் முக்கியமான நோக்கம். துரதிருஷ்ட்டவசமாக பாரதியின் கருத்து தங்களது கருத்துடன் முரண்பட்டு விடுகிறது. அதற்காகப் 'பதிவுக'ளை மன்னிப்பீர்களாக. ஆனால் இந்தக் 'களவு' 'காமம்' 'காதல்' எல்லாம் கரை புரண்டு ஓடிய படைப்புக்களைத் தந்த சங்ககாலப் புலவர்களின் பெயர்களைக் கண்டு 'நவீனப் போக்கிரி'யான தாங்கள் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும். அதிர்ச்சி அடைவதுதான் வியப்பினைத் தருகின்றது. -ஆசிரியர்- ]

****************************************************************************
From:
To:
Sent: Friday, August 18, 2000 1:38 PM
Subject: pathivukal

Dear Mr. Giritharan,

Glad to see your ezine. It seems pathivukal tries to give importance for Srilankan Tamil writers. If it is intentionally done, it is OK. Otherwise people like me, inclined towards mainstream (Tamilnadu) Tamil writing may not show much interest on this.

[ நண்பரே! தங்கள் கடிதத்திற்கு நன்றி. இணையத்தில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மலேசியத் தமிழர், சிங்கப்பூர்த் தமிழர் என்று பிரித்துப் பார்ப்பதைப் 'பதிவுகள்' விரும்பவில்லை. 'பதிவுகளி'ல் சிறு கதைகள் மற்றும் கவிதை படைத்துள்ள ஜெயபாரதன் தமிழக எழுத்தாளர். கவிஞர் தாஜ் சீர்காழியைச் சேர்ந்தவர். மேலும் பதிவுகளில் வெளிவந்துள்ள விடயங்களைப் பாருங்கள். 'பாரதியைப் பற்றி வந்திருக்கின்றது. எம்.ஜி.ஆரைப் பற்றி வந்திருக்கின்றது. ஜெயபாரதனின் சிறுகதைகள் தமிழ் நாட்டு மாந்தர்களைக் கொண்டு படைக்கப் பட்டிருக்கின்றன. பதிவுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு மட்டும் உரியதன்று. உலகமெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களிற்கும் பொதுவானது. யாரும் படைப்புகளை அனுப்பலாம். அண்மையில் தான் 'பதிவுகள்' ஆரம்பிக்கப் பட்டது. காலப் போக்கில் தமிழகத்திலிருந்து மற்றும் அனைத்து நாடுகளிலிருந்தும் நிறையப் படைப்புகள் 'பதிவுகளி'ற்கு வருமென எதிர்பார்க்கின்றோம். தரமானவை அனைத்தும் 'பதிவுகளி'ல் பதிவு செய்யப் படும்.

வள்ளுவர் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " என்று பாடியிருக்கின்றார். இதன் கருத்து 'எந்தக் கருத்தினை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அக்கருத்தில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு' என்பதாகும். 'பதிவுகள்' எழுத்தைத் தமிழக எழுத்து , இலங்கை எழுத்து, மலேசிய எழுத்து அல்லது சிங்கப்பூர் எழுத்து என்று பிரித்துப் பார்க்காதீர்கள் தமிழக எழுத்தாளர்கள் அனைவரையும் இலங்கைத் தமிழர்கள் அறிவார்கள். ஆனால் தமிழகத்தில் ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேரை அல்லது மலேசிய எழுத்தாளர்களில் அத்தனை பேரை அல்லது சிங்கப்பூர் எழுத்தாளர்களில் எத்தனை பேரை அங்குள்ளவர்களுக்குத் தெரியும்? 'பதிவுகளி'ல் உள்ள விடயங்களை வாசியுங்கள். அவை உங்களிற்குப் பயனாகவுள்ளனவா இல்லையா எனப் பாருங்கள். உங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். 'பதிவுகள்' தமிழர்கள் அனைவருக்கும் பயனாக இருக்க வேண்டுமென்பதுதான் பதிவுகளின் நோக்கம். இதுவரை எமக்கு வந்த அதிகமான ஆதரவுக் கரங்கள் தமிழகத்திலிருந்து வந்தவைதான் என்பதைப் 'பதிவுகள் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றது. -ஆசிரியர்-]

One more thing. You have translated 'Free Sex' as 'KattuppaadatRa Kaathal' in an article related with Bharathi. It must be 'KattuppaadatRa Kaamam'

[ உண்மையில் Free Sex என்ற ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றம் செய்திருப்பதென்று தாங்கள் கூறியிருப்பது தவறு. கட்டுப்பாடற்ற காதல் என்பதனைத் தான் அவ்விதம் குறிப்பிட்டுள்ளோம்.

"காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை
கடுகி வளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில்.
மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார்.
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்
வேதனையொன்றில்லாதே பிரிந்து¢ சென்று
வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்.
'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்.  "

என்பது பாரதியின் கவிதை. இக் கவிதையில் "மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்  மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார். பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே  பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால் " என்று கூறும் பாரதி அத்தகைய 'கூடி வாழு'தலைக் காமமாகக் கருதி 'காமத்திலே விடுதலையென்றாங்கோர் கொள்கை' என்று பாடவில்லை. இந்தக் கவிதையில் பாரதி பாவித்துள்ள வார்த்தை பிரயோகங்கள் ஆய்விற்குரியன. மேலும் Sex என்பதற்குப் பல கருத்துகள் உள்ளன. உடலுறவு கொள்வதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் 'Have Sex' என்பார்கள். அதேமாதிரி உடலுறவு கொள்வதைக் குறிப்பிட 'Love Making' என்னும் வார்த்தைகளையும் பாவிப்பார்கள். பாரதி மேற்படி பாடலில் கூறியுள்ள உடலுறவு 'காமத்தால் விளையும் உடலுற'வல்ல. ஒரு பெண் பல ஆண்களூடன் அன்பு கொண்டு உடலுறவு வைத்து வாழும் ஒரு கொள்கையைத் தான் அவர் இங்கு குறிப்பிட்டு விமர்சிக்கின்றார். கட்டுப்பாடற்ற காதல் என்பதற்கு Free Sex அல்லது Free Love என்னும் வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிக்கலாம் எனக் கருதுகின்றேன். -ஆசிரியர்-]

****************************************************************************

From: JEYARUBAN MARIADAS
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, July 12, 2001 7:54 PM
Subject: From Micheal (Montreal)


To: Mr.V.N.Giritharan
From: M.Micheal (Montreal)
Font: Bamini or Boopalam
அன்புடன் திரு.கிரிதரனுக்கு,

வணக்கம்!

பதிவுகள் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அண்மையில் திண்ணை இதழில் வெளிவந்த கன்னியாகுமாரி நாவலுக்கான விமர்சனம் படித்ததால் ஏற்பட்ட நிறைவைப் பாராட்டும் முகமாக இக்கடிதம் எழுதுகிறேன். ஐயமோகனது நாவல்கள் தரும் வாசக அனுபவத்தை ஜயமுற வைக்குமளவுக்கு அவர் முன்னுரைகளின் மூலம் வலிந்து கட்டிய ஒளிவட்டம் ஒன்றை தனது படைப்புகளைச் சுற்றிப் போட்டு புனிதப்படுத்தி விடுகிறார். அம்மாதிரி முன்னுரைகளை அகற்றிவிட்டு அவரது நாவல்களைப் படித்துப் பிறக்கும் வாசக உறவை வைத்துத்தான் அப்படைப்ப்¢ன் பெறுமானம், விமர்சனம் ஆகியவற்றை வந்தடைய வேண்டும்.

கிராவின் கன்னிமை கதையிலுள்ள (கிராமிய) மனிசநேயத்திற்கான ஏக்கத்திற்கும், கன்னியாகுமாரி நாவலின் மூன்றாந்தர சினிமாக்களில் வருவது போன்ற ஆபாச, அதிரடிச் சம்பவங்களுக்கும் என்ன பொருத்தம் என்று எனக்கும் புரியவில்லை! படைப்பாளியே தன்னுடைய படைப்பைத் து¡க்கி முன்வரிசையில் போடவேண்டியளவுக்கு தமிழிலக்கிய வாசகத்தரம் (குறைந்த வீதமானவர்களே ஆயினும்) தாழ்ந்து போய்விடவில்லை. படைப்பாளி மீதான பிரமிப்பே இன்று படைப்புகளை நிலைநிறுத்துவதற்கான உத்தியாக தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள்.

சில நல்ல சிறுகதைகள், பத்மவியூகம் குறுநாவல், இன்னும் வற்றாத படைப்பூக்கம், இலக்கியத்தேடல் என்பவற்றிற்காக ¦ஐயமோகன் பாராட்டப்படவும், கவனத்திற்குரியவராகவும் வேண்டியவரே. ஆனால் தனது இலக்கியக் கொள்கைகளே தமிழிலக்கிய எல்லைகள் என்ற தொனியில் தெரிவிக்கப்படும் அவரது கருத்துக்கள் சலிப்படைய வைக்கின்றன.

ஜதீகமரபுகளை கேள்விக்குள்ளாக்குவதற்கும், அவற்றிற்கு நவீன விளக்கம் கொடுத்து து¡சிதட்டுவதற்கும் இடையேயுள்ள நுண்ணிய வேறுபாடு படைப்பாளியின் சமூக அக்கறை சார்ந்துதான் வெளிப்படும். அங்ஙனம் பார்க்கும்போது ¦ஐயமோகன் தனது நாவல்க் கொள்கையில் கூறிச்செல்லும் விருப்பங்கள் திரும்பவும் ராமராகஐ¢யத்திற்கான ஆவலை அவர் மனம் கொண்டிருப்பது தெளிவாகிறது. மேலும் அவற்றிற்கு உரமேற்ற செவ்வியல் இலக்கியங்களை வேறு துணை சேர்க்கிறார். இதன் அடுத்த முனைப்புத்தான் சுஐ¡தா போன்றவர்கள் ஆழ்வார்களையும், திவ்வியபிரபந்தங்களையும் நவீன விளக்கம் கொடுத்து வருவதும்.

மற்றும் மிகவும் ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், புகலிட இலக்கிய ஆர்வலர்கள் சிலர் கற்றலின் மூலம் வரும் தெளிவைவிட, விளம்பரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், மேலோட்டமான அபிப்பிராயங்கள் மூலம் படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகள் பற்றியும் கற்பிதங்களை உண்டு பண்ணி வழிபட்டு வருகிறார்கள். இவை அரைவேக்காட்டுத்தனத்திற்கான ஆரம்பமாக எனக்குத் தெரிகிறது.

தங்களது விமர்சனம் மிக நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருப்பது மிகவும் நிறைவளிக்கிறது. ¦ஐயகாந்தன், நாகராஐன், ஐ¡னகிராமன் போன்றவர்கள் பாலியல்வேலிகளை மிகவும் நாசூக்காக உடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை நீங்கள் குறிப்பிட்டிருப்பது வாசகர்களுக்கு தேடி வாசிக்கவேனும் து¡ண்டக்கூடும்.

மனம் திறந்த பாராட்டுக்கள்!

இப்படிக்கு
மைக்கேல்.

****************************************************************************
From: paavannan bhaskaran
To:
Sent: Monday, July 30, 2001 11:42 AM
Subject: i am sorry
30.7.2001
பெங்க்ளுர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புள்ள நண்பர்களுக்கு, சற்று முன்னர் படிக்க நேர்ந்த குமார் மூர்த்தியின் மறைவுச் செய்தி பெரிதும் அதிர்ச்சியையும் துக்கத்தையும்  தருகின்றது.  மனித வாழ்வில் மரணம் வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் நம் மனத்துக்கு நெருக்கமான ஒருவரின்  மரணம் தாங்க இயலாததாக  மாறிவிடுகிறது.  இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட குமார்மூர்த்தியை நேரில்  பார்த்ததில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ் இதழுக்காக அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மதிப்புரை  எழுத நேர்ந்தது. அப்போதுதான் அவரது கதைகளை முதன்முதலாகப் படித்தேன்.  என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன  அக்கதைகள்.  மஞ்சள் குருவி என்னும் கதை இன்னும் கூட என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.   பெர்லின் சுவர்களின் தகர்ப்பையும் ஒரு குடும்பத்தில் தம்பதியினரின் மனப்பிணக்கின் தகர்ப்பையும் இணைத்து   அவர் எழுதிய மற்றொரு கதையும் மனத்தில் பதிந்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் எழுத்துகளைப் பற்றிப் பேச  நேர்ந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குமார்மூர்த்தியைப் பற்றிச் சொல்லி வந்திருக்கிறேன். எல்லாரிடமும்  சொன்ன நான் அவரிடம் சொல்லவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் அவர் இருக்க நான் மற்றொரு மூலையில்  இருக்க, என்றாவது ஒருநாள் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், அப்போது சொல்லிக் கொள்ளலாம் என்று  நினைத்திருந்தேன்.  அவர் மறைந்துவிட்டார் என்று அறியும் இத்தருணத்தில் என் மனம் குற்ற உணர்வால்  நிறைகிறது. அவர் உயிருடன் இருக்கும் தருணத்தில் ஒரே ஒரு முறையாவது அவருக்கு மடல் எழுதியிருக்கலாமே  என்கிற ஆதங்கம் பொங்குகிறது.

பாவண்ணன்

****************************************
From: balaji kothandaraman
Sent: Tuesday, August 07, 2001 4:17 AM
Subject: Re:3

anbulla giri avargalukku balaji.k.pathivugal  parthen sneha srinivasanin peetti padithen thangalin pathivukku
nandri

With warm regards,
K Balaji
Sneha
---------------------------------------------
Tagline: Veezhnthaal vithaiyaga vizhu
Yezhunthaal maramaga yezhu
-- Kaviyarasar Kannadasan
---------------------------------------------
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.snehapublishers.com

****************************************************************************
From: Elangovan N
To:
Sent: Tuesday, August 07, 2001 1:24 PM
Subject: Silambu madalhal

அன்பின் திரு.கிரிதரன் அவர்கட்கு,

வணக்கம்.
என் "சிலம்பு மடல்கள்" நூலை வலைத்தொடர் ஆக வெளியிடுதற்கு மிக்க நன்றி. உங்கள் மின்னேடு சிறக்க வாழ்த்துகள்!
நண்பர் அழியழலனுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
- தமிழர்க்கழகு தமிழெழுதல்-

[ தங்களது நூலினை 'பதிவுகள்' இதழில் தொடராக வெளியிட அனுமதியளித்த தங்களிற்கல்லவா நாங்கள் நன்றி கூற வேண்டும். - ஆசிரியர் -]

****************************************************************************

From: arul selvi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, August 23, 2001 2:40 PM
Subject: Tamil contribution


Respected Sir,

I am A.Arulselvi.Iam B.E graduate.I am basically from Tamilnadu. At present i am living in California.I visited your website.Thanks for encouraging tamil articles.I like to write tamil poetries in your website.I attacted my poetries with this mail.I will be glad, if my poetries published in your website.

Yours Sincerely
A.Arulselvi

[ உங்களது கவிதை பதிவுகளில் பிரசுரமாகியுள்ளது. தங்களது ஆர்வத்திற்கு எமது பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.
- ஆசிரியர் -]

From: paavannan bhaskaran
To:
Sent: Saturday, August 25, 2001 9:14 AM
Subject: new story


25.8.2001
Bangalore

Dear Sri.Giridharan,  Happy to receive your mail and to note your comment on my old story KURI  published in Kanaiyazhi.  I herewith enclosed a story to PAthivukal.  this  story also is an image of the political scenario only.  I hope that you will  like it.  This is in Muruasu Anjal-inaimathi TSC file.  I believe that this  will be readable

With love,
paavannan

[ திரு.பாவண்ணன் அவர்களே! 'பதிவுகள்' இதழ் மேல் தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும் பங்களிப்புக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள் பல. தொடர்ந்தும் தங்களது பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். - ஆசிரியர் -]

From: Mathi / Elango
To:
Sent: Monday, September 10, 2001 12:31 AM
Subject: "Eelavathu Sorkkam"

திரு.மைக்கல் அவர்களின் குறுநாவலான 'ஏழாவது சொர்க்கம்', மனித மனங்களின் வக்கிரகங்களை, வாழ்வில் பலவீனப்பட்டவனின்/ஏமாற்றப்பட்டவனின் பார்வையில் இருந்து விரிந்து செல்கிறது.  படைப்பாளிக்கு என் வாழ்த்தை இங்கே பதிவு செய்கின்றேன். நன்றி.

-இளங்கோ

****************************************************************************

From: Ishwaryan M.S
To:
Sent: Saturday, October 06, 2001 12:25 PM
Subject: Vanakkam


Dear Mr. Giridaran,

Recently I got a chance to view your Pathivugal. I am quite impressed. Wish u all the best. Could u give me suggestion how to get your novel in madras.  One more thing. I am a freelance Tamil writer from chennai. ( but working in
Saudi ) Last year vikatan published my novel Moontravathu pyramid .
Thanks & regards
Ishwariyan

[ ஐஸ்வரியன் அவர்களே! தங்களைப் போல் பலர் ஆஸ்திரேலியா,இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள், ரஷ்யா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, யப்பான்  என்று பல்வேறு நாடுகளிலிருந்தும் 'பதிவுகள்' மேல் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதோடு ஆக்கங்கள் அனுப்பி பங்களிப்பும் செய்து வருகின்றார்கள். தாங்களும் பதிவுகளுக்கு எழுதலாமே. - ஆசிரியர் -]

From: JEYARUBAN MARIADAS
To: V.N.Giritharan
Sent: Monday, October 08, 2001 2:14 PM
Subject: From Mic - Poem by Pasubathi


பதிவுகள் புதிய இதழ் பார்த்தேன். எல்லாப்பக்கமும் வாசல் நாடக நூலின் விமர்சனம் மெத்தப் பிடித்தது. அதன் இறுதிப்பாராவின் மூலம் தைத்து விசிறியெறியப்பட்ட தொப்பி இங்கு பலரது தலைகளுக்கும் பொருந்தக்கூடியது. வாழ்த்துக்கள்!
கவிஞர் அ.ந.க. பற்றித் தொடர்ந்து தாங்கள் பதிவுசெய்து வருவது மிகவும் சிறப்பான முயற்சி. நான் அவரது சில கவிதைகளைத் தவிர வேறு படைப்புகள் எதுவும் படித்ததில்லை. ஆனாலும் அவரைப்பற்றி, அவரது முன்னுதாரண சேவைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இப்போது பதிவுகள் வாயிலாக மேலும் அறிய முடிவதற்கு நன்றி!

இவரைப்போல இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டிய இன்னொரு சமூகப்போராளி, ஈழத்துக்கவிஞர் பசுபதி. இவர் யாழ்ப்பாணக்கவிராயர் என்றும் அறியப்பட்டவர். இவரது கவிதை ஒன்றையும், வாழ்க்கைக் குறிப்பையும் கீழே தந்திருக்கிறேன். (பிரதியில் இடப்பெற்ற அரைப்புள்ளிகள், என்னிடமிருக்கும் தமிழ்வடிவத்தில் இல்லாததால் அவற்றிற்குரிய இடங்களில் காற்புள்ளிகளையே பாவித்திருக்கிறேன். முடிந்தால் திருத்தியுதவவும்) இக்குறிப்பு அவரது ஒரேயொரு புத்தகமான புதுஉலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கைக்குறிப்பை எழுதியவர் பெயர் புத்தகத்தில் இல்லை. பெரும்பாலும் கவிஞரது மைத்துனரும், எழுத்தாளருமான என்.கே. ரகுநாதன் இக்குறிப்பை எழுதியிருக்கலாம். அவர்தான் தன்னிடமிருந்த ஒரேயொரு பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

இங்ஙனம்

மைக்.

கவிஞர் பசுபதி - வாழ்வும் கவிதையும்

கவிஞர் பசுபதி அவர்கள் 14-07-1925இல் பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார்: கந்தையா. தாய்: அன்னம். இளமைக்காலத்திலுந்தே கவி புனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்தமுருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார். இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியாகும் பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. பல நு¡று கவிதைகளை அவர் எழுதியுள்ளார். எனினும் இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்களிடையே காணப்பெறும் படாடோபத் தன்மை சிறிதும் அற்றவர். அவர் வெறும் கவிஞரல்லர், போராட்டவீரர். இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்ட கவிஞர். அவர் கவிதைகளில், கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும் போராட்ட உணர்வும் நிறைந்திருக்கும்.

கல்வி கற்ற காலம் முழுவதும், பாடசாலைகளில் சாதிக்கொடுமையை எதிர் நோக்க வேண்டி வந்ததால், இளமைக்காலத்திலிருந்தே சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும், சமூகசேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் இருந்த சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஜக்கிய சேவா சங்கம் போன்ற சமூக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவை செய்தார். சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதி. யாழ்ப்பாண தி. மு. க. வின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர்.

1956 இலிருந்து 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் இணைச் செயலாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும் கடமை புரிந்தார். இக்காலங்களில் மகாசபையின் முயற்சியால், யாழ்ப்பாணப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்கெனச் சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மகாசபை நடத்திய தேநீர்க்கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் முதலிய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுழைத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சனைகள், எதிர்காலத்திட்டங்கள் முதலியவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி 1959இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்கு பொறுப்பாசிரியராக இருந்து பணி செய்தார். 1956இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் அங்கத்தவராகச் சேர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக இறக்கும் வரை இதயபூர்வமாக உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுமுள்ள செவிடர் குருடர் பாடசாலைகளில் பணிபுரிந்தார். புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு 5-07-1965இல் மரணமடைந்தார். எவருடனும் இனிமையாகப் பேசும் இயல்பினர், நகைச்சுவை நிரம்பியவர். தன்னம்பிக்கையும் திடசித்தமும் கொண்ட உளத்தினர்.

ஸ்தாபனங்களில் நிதானமாகவும், உறுதிப்பாட்டுடனும் நின்று தம் கொள்கையை உருவாக்குவதில் வல்லவராயிருந்தார். கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் எப்போழுதும் ஒரு சண்டைக்காரராகவே இருப்பார் - தமர் என்றும் பிறர் என்றும் பார்க்கமாட்டார். எதற்காகச் சண்டை பிடிக்கிறோமென்ற தெளிவிருந்தால் சண்டைக்காரனாயிருப்பதில் தவறில்லை என்பது அவர் கொள்கை. 1954இல் திருமணம் செய்தார். துணைவியார்: திருமதி பாக்கியம். ஆறு குழந்தைகள் - நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். (குறிப்பு: கவிஞரது பிள்ளைகளில் மூத்தமகனும் பெண்களில் இரண்டாமவரும் மரணமடைந்துவிட்டனர். - மைக்)

[ தங்களது கடிதத்திற்கும் முற்போக்குக் கவிஞர் பசுபதி பற்றிய குறிப்புக்கும் அவரது கவிதைக்கும் நன்றிகள். அவை பதிவுகளில் விரைவில் வெளியாகும். இது போல் ஈழத்துப் ப்டைப்பாளிகள் பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள். உண்மையான படைப்பாளிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறு இது தான்.  - ஆசிரியர் - ]

From: "giri hari"
To:
Cc:
Sent: Thursday, October 25, 2001 1:45 AM
Subject: kavithai

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, நான் இத்துடன் ஒரு கவிதை அனுப்பியுள்ளேன், கவிதை தரமாக இருந்தால்
பிரசுரிக்கவும்.

இப்படிக்கு,
கிரி ஹரி

[ தங்களது கவிதை விரைவில் பிரசுரமாகும். - ஆசிரியர் - ]

****************************************************************************

From: "S. Jayabarathan"
To:
Sent: Thursday, October 25, 2001 5:49 PM
Subject: Tamil Poem "yaar villan?"


Dear Gritharan,

May I request you to publish my Tamil Poem, " Yaar Villan? " in Pathivukal  Web Page?

Truly Yours,
S. Jayabarathan

[ தங்களது கவிதைக்கு எமது நன்றிகள். விரைவில் 'பதிவுகளில்' பிரசுரமாகும்.
- ஆசிரியர் - ]

From: "S. Jayabarathan"
To:
Sent: Wednesday, October 31, 2001 1:10 PM
Subject: Publication of New Items in "Pathivukal"

Dear Gritharan,

One suggestion when publishing New Items in "Pathivukal."  If you can  highlight the New Items as "New Arrivals of This Week" at the top of the  Web Page every time, it will make a big impact upon opening the Page.

Regards,

S. Jayabarathan

[ தங்களது நல்ல யோசனைக்கு எமது நன்றிகள். தங்களது ஆலோசனையை இம்மாத இதழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 'பதிவுகள்' இதழ் மேல் ஆரம்பத்திலிருந்தே தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும், பங்களிப்புக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் தங்களது காத்திரமான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

- ஆசிரியர் -]

****************************************************************************

From: "Elangovan N"
To:
Sent: Monday, December 24, 2001 10:35 PM
Subject: Silambu madal

வணக்கம்.

தங்கள் இதழில் வந்து கொண்டிருக்கும் எனது சிலம்பு மடல் தொடரில் "சிலப்பதிகாரம்" , "தெளிவுரை" என்று தலைப்பிட்ட படம் இணைக்கப் பட்டுள்ளது. என் தொடர் தெளிவுரை அல்ல. ஒரு மடல் இலக்கியம் அல்லது கதை/கட்டுரைத் தொடர் என்று சொல்லலாம்.அன்பு கூர்ந்து அப்படத்தை எடுத்து விட்டால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வேறு ஏதேனும் படம் வேண்டுமானால் அனுப்பி வைக்க ஆவலாக உள்ளேன். கண்ணகி சிலையை சென்னையில் நீக்கி விட்ட இந்த கால கட்டத்தில் அச்சிலையின் படத்தைப் போட முடிந்தால் மகிழ்வேன். இத்துடன் அப்படத்தை இணைத்துள்ளேன்.

அன்புடன்
நாக இளங்கோவன்

[தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி இளங்கோவன் அவர்களே! மேலும் கண்ணகி படத்திற்கும் நன்றி. ஆசிரியர் - ]

 

****************************************************************************

From: JEYARUBAN MARIADAS
Sent: Thursday, January 03, 2002 7:25 PM
Subject: For - Jeevaa.

அன்பின் நண்பருக்கு,

இப்போது அ.ந.கந்தசாமியின் தேசிய இலக்கியம் சம்பந்தமான கட்டுரை படித்தேன். ஈழ இலக்கியம் தொடர்பான தமிழக ஜீவா போன்றவர்களின் புரிதலுக்கு இந்தக் கட்டுரை நல்ல விடயங்களைச் சொல்கிறது. முடிந்தால் இக்கட்டுரையினைப் பதிவுகளில் மீள் பிரசுரம் செய்வீர்களாயின் மிக்க சிறப்பாக அமையும். இக்கட்டுரை 1961 அக்டோபர் மாதம் மரகதம் சஞ்சிகையில் எழுதப் பட்டுள்ளது. தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் என்ற சுபைர் இளங்கீரனின் மேறப்டி புத்தகத்தில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

- மைக்கல் -

****************************************************************************

From: "Ragavan Nadarajah"
Sent: Monday, January 21, 2002 5:43 PM

அன்பின் ஆசிரியருக்கு,

மறைந்த பூலான்தேவி பற்றிய பதிவொன்றை கனடிய மாணவர்களின் பத்திரிகையொன்றான 'அக்கினிக் குஞ்சில்' செய்துள்ளேன்.இதனை சிறிது மாற்றிப் பதிவுகளில் எழுதியுள்ளேன்.இதனைப் பதிவுகளுக்கு அனுப்பி வைத்தால் பிரசுரிப்பீர்களா? அறியத் தரவும்.

- ராகவன் ( பெர்லின் )
[ தாராளமாக அணுப்பி வையுங்கள். - ஆசிரியர் -]

****************************
From: "Madhurabarathi"
Sent: Friday, February 01, 2002 10:46 PM
Subject: kavithai

Dear Editor,

I am attaching a poem for featuring in your e-zine.

Thanking you,

anbudan,
Madhurabarathi

[ தங்களது பதிவுகளிற்கான பங்களிப்பிற்கு நன்றி. தொடர்ந்தும் தங்களது பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். - ஆசிரியர் - ]

****************************************************************************

From: Deva Kanthan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, February 04, 2002 2:05 AM


அன்பார்ந்த திரு.வ.ந.கிரிதரன். பதிவுகள் பார்த்தேன். நன்றாகவே செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
- தேவகாந்தன்-

[ தங்கள் பாராட்டுதல்களுக்கு எமது நன்றி. - ஆசிரியர் -]

From: Tamilnaatham Web Page
Sent: Thursday, February 07, 2002 7:14 PM
Subject: About your book


பதிவுகள் இணையத் தள ஆசிரியர் கிரிதரன் அறிவது. உங்களுடைய பக்கத்தினை நீங்கள் ஆரம்பித்த காலந்தொடக்கம் பார்த்து வருகின்றேன். அருமையான தளத்தினை நடாத்தி வருவதற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- இ.கரன் -

****************************************************************************
From: "sivakumar veerabadran"
Sent: Thursday, February 14, 2002 4:27 PM
Subject: RE: Pathivukal


Now I can view  pathivukal in  IE better than earlier. Still Netscape has better feel than IE. In IE fonts are looks like made of dots like dot matrix printout. But in netscape it is Ok. Now over all view of the web has improved. I was
very happy to read a article about the canadian Tamil youths, their deviation from our culture and idelogy and their affinity towards violence and losing their live for nothing. I wish to see many more articles like this.

Sivakumar
********************
From: rajah
Sent: Friday, March 08, 2002 12:02 AM
Subject: Seetha Acca

Dear Giritharan,

I read your "Seetha Acca" short story and am very much impressed.
You have written nicely, what is happening in our society in the
western world today.

With regards,
Rajah.

****************************************************************************

From: "Iyan Pokkanavan"
To:
Sent: Thursday, April 11, 2002 2:49 AM
Subject: திலகபாமாவின் கவிதை பற்றி!

திலகபாமாவின் இவ்வாரக் கவிதை பற்றி!

"பதிவுகள்" இதழில் வெளிவந்திருக்கும் திலகபாமா அவர்களின் கவிதை பற்றி அவருக்கான ஒருநேரடிக் கடிதம்: அன்புடையீர் உங்கள் கவிதை இலகுவாக, சிறியதாக, நன்றாக  இருக்கிறது.  இவ்வாறான நேரடியாகவே பேசும் கவிதைகள்  தமிழில் இப்போதும் குறைவுதான். "இன்னும் அகலிகையின் காத்திருப்பு"  என்று இதற்குத் தலைப்பிட்டிருக்கலாம்  என்று  எண்ணிப் பார்த்தேன். "கணவனைக் கடிந்து...விமோசனத்தில்  மகிழ்ந்து...பெண்ணாய்  அல்லாமல் ...கலை  மனம் கொண்ட சிலை வடிக்கும் இராமனுக்கான காத்திருப்பு." என்பதே கவிதை சொல்லும் பொருள்.  இப்படிச் சொல்வதற்கு  இக் கவிதையில் வருகின்ற  துணிவினைப் பாராட்டாது இருக்க முடியாது. ஆனாலும்  நம் எல்லோரது சமூக வாழ்விலும்  மிகத் துணிச்சலான சாதாரண பெண்களைச் சந்திக்கின்றோம். அவர்களைச் சமூகம் பாராட்டுவதில்லை, மாறாக தன் கோரப் பற்களை ஆழப் பதித்து விடுகிறது.  ஒரு "நல்ல" கணவனை...ஒரு "நல்ல" சினேகிதனைத் தேடிக் கொண்டிருப்பது மிக இயல்பானது தானே. நான் இங்கே "நல்ல" என்பது அவரவர் தன் அறிவுக்கும், உணர்வுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவாறு  கட்டமைத்துக் கொள்வது.  உங்கள் கவிதைகளில்  மீண்டும் மீண்டும் இதிகாச பாத்திரங்கள் தலை நீட்டுவது...இன்றைய  நம்மோடு வருகின்ற அனுபங்களையும் வாழுகின்ற மனிதர்களையும் பற்றிய ஒரு புறநிலைப் பார்வையின் வெளிப்பாடாகவே நான் கருதுகின்றேன். அத்தோடு மரபுவழிப்பட்ட ஒரு போலி அழகியலை கவிதை போர்த்திக் கொள்ளவே இவ்வகைச் சொல்முறை பயன்படுகிறது. புராண முகமூடிகளுக்குப் பின்னால் தான் இன்னமும் இவை எழுதப் படவேண்டுமா என்பது பற்றிச் சிந்திப்பது நல்லதாகலாம்  என்பது என் அபிப்பிராயம். மேலும்   இக் கவிதையில் ந்£ங்கள் கருதுகின்ற  "கலை மனம் கொண்டு சிலைவடிக்கும் சிற்பி"  ஒரு ஆண் என்பதைத்  தவிர அது எப்படி என்று வேறொன்றும் சிந்தனைக்குள் அகப்படமுடியாததாகவே இருக்கின்றது.  இது பற்றி மேலும் மேலுமான சொல்லாடலுக்குள் செல்வது பயன் உடையதாக அமையலாம்.

செங்கள்ளுச் சித்தன்

****************************************************************************

From: Deva Kanthan
Sent: Monday, April 15, 2002 8:16 AM

பதிவுகள்.கொம் தக்க வளர்ச்சியை வெகு துரிதமாக அடைந்து கொண்டிருப்பதில் உண்மையாக மகிழ்ச்சியடைகிறேன். நாளை உங்கள் முயற்சிகள் சாதனையாகும். வாழ்த்துக்கள்.

தேவகாந்தன்.

 

****************************************************************************

From: "Surya Trust"
To:
Sent: Tuesday, April 30, 2002 4:41 AM
Subject: letter IGIA


Dear sir,
we perused the content in the website  and felt happy.
We thank you for this.

We have reqeusted the well wisher to donate in our
last letter. As we have not got FCRA yet we are not
elgible for accepting the donation. So kindly remove
the word Donation.

Thanking you

Surya educational trust
D.KUMAR

****************************************************************************

From: "S. Jayabarathan"
Sent: Friday, May 03, 2002 6:12 PM
Subject: Update the New Arrivals List


Kindly update the New Arrivals List. Gujarath article is simple & well written.

Regards,
Jayabarathan

From: S. Jayabarathan
Sent: Thursday, May 16, 2002 5:29 PM
Subject: Article on Jeyakantan Stories

Dear Giritharan,

The article on Jeyakantan Stories is sweet & simple.   But I feel the whole
thing has been dumped without any break, making it hard to
read.  Paragraphs & breaks make an article readable & interesting.
Here is a version with a new look   If you like it, kindly replace the
existing one.

Regards,
Jayabarathan


[ தங்களது கருத்துகளிற்கும் ஆர்வத்திற்கும் உதவிக்கும் பதிவுகள் தலை வணங்குகின்றது. தங்களைப் போன்ற ஆழமான வாசகர்களை எழுத்தாளர்களைப் பதிவுகள் பெற்றிருப்பது அது செய்த பாக்கியமே. - ஆசிரியர் -]

****************************************************************************

From: "Jeya J Mohan"
Sent: Thursday, May 16, 2002 10:14 PM
Subject: Re: Re:

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்

ஜெயமோகன்
[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க முயல்கின்றோம்.-ஆசிரியர்]

 

****************************************************************************From: "Ravindran Ravindrakumaran"

Sent: Tuesday, August 06, 2002 5:27 AM

புதிவுகள் ஆசிரியருக்கும்..அதற்காக தமது பொன்னான நேரத்தினை செலவழித்து சேவை செய்யும் அனைத்து அன்புள்ளங்களிற்கும் வணக்கம்! பயன்மிக்க இந்த இணயத்தளத்தின் சேவை உலகெங்கும் பரந்து
வாழும் தமிழர்களின் இலக்கிய..அரசியல்..தகவல் தாகத்தை ஓரளவேனும்
தீர்த்து வைக்க முயற்சி செய்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆயினும் தகவல்கள்..கனடா..இந்தியா..ஆகிய நாடுகளை மட்டுமே
அதிகம் சுற்றி நிற்பதாக  உணரமுடிகிறது.  உலகில் எங்கெங்கெல்லாமோ
எவ்வளவோ தமிழர்களின் சாதனைகள் ..தமிழர்கள் அறிய வேண்டிய விடயங்
கள் என பல்துறை நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவைபற்றி அறியலாம் என்று 'பதிவுகள்’ இணையத்தளத்திற்கு வந்தால்
ஏமாற்றமாகவும் இருக்கிறது.  அது மட்டுமல்ல சில தகவல்கள் மிகச்
சிறப்பாகச் சொல்லப்பட வேண்டியவை கூட வெகு சாதாரணமாக சுருக்கமாக
போதிய தகவல்கள் தரப்படாமல் சேர்க்கப்படுகிறது.  இவற்றைத் தகவல்கள்
தருபவர்கள் சரியாகத் தருகிறார்களா என்பதை ஆசிரியர் கொஞ்சம் கவனத்தில் எடுத்தீர்களானால் இப்பகுதி இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது
என் கருத்து.ஆனாலும்..உங்கள் நன்நோக்கும்..பணியும் நிச்சயம் பாராட்டப்பட
வேண்டியதே.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நன்றி

-சந்திரா ரவீந்திரன்.
[ உங்கள் பயனுள்ள கருத்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் எமது நன்றிகள்! பதிவுகள் இணைய இதழினை ஆஸ்திரேலியா தொடக்கம் நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இலங்கை, மத்தியகிழக்கு நாடுகள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சுவிட்சலாந்து, ருஷியா, தென்னமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான்,நியூசிலாந்து..எனப் பல்வேறு நாடுகளிலிருந்தும் வாசகர்கள் வாசித்து வருவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆயினும் பதிவுகளுக்கு இன்னும் அதிகமானவர்கள் ஆக்கங்களை அனுப்பி வைத்துப் பங்களிப்பு செய்யவேண்டுமென்பது எமது அவா. அப்போது உங்கள் ஆசையும் நிச்சயமாக நிறைவேறும். அது விரைவிலேயே வருமென்பதும் எமது நம்பிக்கை.--ஆசிரியர்-]

From: subramanian ramesh
To: pathivukal
Sent: Friday, August 09, 2002 12:08 AM
Subject: poems


Recently I tried to explore all the links of pathivukal...wow nice collection and very good effort and intension..thanks for that.

S.Ramesh

****************************************************************************rom: "Jeya J Mohan"
Sent: Saturday, August 10, 2002 12:31 AM

அன்புக்கும் மதிப்புக்குமுரிய வ.ந. கிரிதரன் அவர்களுக்கு ,

எங்கள் சிற்றிதழை ஒரு நண்பரின் உதவியுடன் இணையத்தில் கொண்டுவர முயன்று வருகிறோம். tscii எழுத்துரு சிறப்பானது என்று நண்பர் வெங்கட் சொன்னார் . அதை அந்த இணையதளத்தில் சென்று download செய்தோம். எங்களுக்கு சில ஐயங்கள்

1] tscii எழுத்துருவிலேயே பலவகை உள்ளனவே .அவை அனைத்துமே ஒன்றுதானா? முரசு அஞ்சல் tsc யை பயன்படுத்தலாமா ? மற்ற எழுத்துருக்களில் பல கட்டுரைகள் எங்களிடம் உள்ளன.அவற்றை இந்த எழுத்துருவில் எப்படி மாற்றுவது ? converter ஐ இறக்கிக் கொண்டோம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இணைமதி யில் உள்ள ஒரு கட்டுரையை convert செய்தாலும் முரசு எடிட்டர் பக்கத்தில் அது இணைமதி என்றோ tab என்றோ தான் காணப்படுகிறது .அதை வெட்டி இணைய பக்கத்தில் ஒட்டினால் போதுமா?

இணையத்தில் இதை பயன்படுத்த செய்யவேண்டியவை என்ன?வேறு ஏதாவது இறக்குவது தேவையா? பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்களுக்கு தமிழ் எழுத்துருவுக்கு மாறுமா?

ஜெயமோகன்
jeyamohan

[ ஜெயமோகனுக்கு: tscii எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள நன்மை என்னவென்றால்... நீங்கள் ஏதாவதொரு tscii எழுத்தைப் பாவித்துத் தட்டச்சு செய்திருக்கலாம். அதனைப் பார்ப்பதற்கு , படிப்பதற்கு நீங்கள் பாவித்த tscii எழுத்து இருக்க வேண்டுமென்பதில்லை. வேறேதாவது tscii எழுத்து இருந்தால் போதுமானது. உதாரணமாக நீங்கள் முரசு அஞ்சலின் இணைமதிtsc எழுத்தைப் பாவித்து எழுதியதை துணைவன்tsc அல்லது இன்னுமொரு tscii எழுத்து உங்களது கணினியில் இருக்கும் பட்சத்தில் வாசிக்க முடியும். ஆனால் tscii யில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால்.. மைக்ரோசாப்டின் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் உலாவி கொண்டு பார்க்கும் போது தமிழ் எழுத்து 'இ' யினைப் பார்க்க முடியாது. இதனை முரசு அஞ்சலின் இரண்டாவது பதிப்பில் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். tscii 1.71 பதிப்பில் உங்கள் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதன் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு InaiMathiTSCற்குப் பதில் TSCu_InaiMathi பாவித்துப் படைப்புகளைத் தட்டச்சு செய்ய வேண்டும். இணைமதியினை InaiMathiTSCற்கு அல்லது TSCu_InaiMathiற்கு மாற்றுவதற்குரிய வசதிகள் முரசு எடிட்டரிலேயே உள்ளதே. முதலில் முரசு எடிட்டரில் இணைமதி மூலம் தட்டச்சு செய்யப் பட்ட படைப்பினை திறந்து கொள்ளுங்கள். முதலில் முரசு எடிட்டரிலுள்ள edit மெனுவில் SelectAll என்பதைத் தெரிவு செய்யுங்கள்.அதனை TSCu_InaiMathiற்கு மாற்ற வேண்டுமானால்.. முதலில் +Murasu மெனுவிலுள்ள set encodingஐ tscii1.7ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் +Murasu மெனுவிலுள்ள Convert Selectionஇல் ToTSCII1.7 என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இணைமதியிலுள்ள உங்களது படைப்பு tscii1.7ற்கு மாற்றப் பட்டிருக்கும். இதன் பின் மீண்டுமொருமுறை எடிட் மெனுவிலுள்ள SelectAll என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் TSCu_InaiMathi என்பதையும் தெரிவு செய்யுங்கள். எ-கலப்பை என்னும் மென்பொருளினைப் பாவிப்பதன் மூலமும் தமிழில் இலகுவாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம். இதனை http://www.tamil.net/newtamil/ekalappai_1.html என்னும் இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்கள் கணினியில் தமிழில் தெரிய வேண்டுமானால் 'டைனமிக் எழுத்து' முறையினைப் பாவிக்க வேண்டும். இதற்கென்று சில மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன. உதாரணமாக bitstream.com (http://www.bitstream.com) இதற்குரிய மென்பொருளினை வழங்குகின்றார்கள். இதன் மூலம் நீங்கள் பாவிக்கும் எழுத்துக்குரிய டைனமிக் எழுத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பின் உங்கள் இணையப் பக்கத்திற்குரிய HTML Source Codeஇல் அதற்கு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். -ஆசிரியர் - ]

 

****************************************************************************

From: Abedeen
Sent: Monday, August 12, 2002 11:56 AM
Subject: THANKS
அன்பு மிக்க கிரிதரனுக்கு, பரபரப்பு விரும்பும் 'பதிவுகள்' பார்த்தேன். 'முரசு'வில் இவ்வளவு அழகாக ஒரு தளத்தை வடிவமைக்க முடியுமா என்று அசந்தும் போனேன். எனது இணையத் தளம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தமைக்கு நன்றி. முகவரியை link செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஒரு திருத்தம். 'தஸ்தகீர் - நெய்தல் நிலக் குறிப்புகள்' , நம்பிக்கையுடன் சாருவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த என் 'பழய வீடு' நாவலின் ஒரு பகுதி மட்டுமே. மிக இலேசான மாற்றம் செய்திருக்கிறார். அதைக் கூட செய்யாமல் இருந்தால் எப்படி ?!  இனி எத்தனைக் குறிப்புகளை வெளியிட்டு சாதனை செய்வார் சாரு என்று இதுவரை தகவல் இல்லை! எனது சிறுகதைத் தொகுப்பு 'கடை' ஓரிரு மாதங்களில் ஸ்னேகா பதிப்பகத்தாரால் வெளியாக இருக்கிறது. போதுமான ஆதாரங்கள் அதில் வைக்கபடுகின்றன. அதற்குள் ஓடு உடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ! நண்பர் ஜீவன் கந்தையாவுக்கு என் விசாரிப்புகள். இந்த மகா சமுத்திரத்தில் அவர் எப்படி என்னை கண்டு கொண்டார் !? அறிய ஆசைப்படுகிறேன்.

வாழ்க நட்பு !

- ஆபிதீன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[ உங்கள் கடிதத்திற்கு நன்றி. பரபரப்பிற்காகப் பதிவுகள் தங்கள் விடயத்தைப் பதிவு செய்யவில்லை. சாரு நிவேதிதாவின் படைப்புகள் பலவற்றை நான் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கப் பெறும் அவரது படைப்புகள் அவரது எழுத்தாற்றலை புலப்படுத்தினாலும் தங்கள் இணையத் தளத்தில் காணப்படும் அவரது இலக்கியத் திருட்டு பற்றிய தகவல்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தின. இது பற்றி விரிவாக விவாதிப்பதன் அவசியம் கருதியே அது பற்றிய தகவலினைப் பிரசுரித்தோம். திறமையுள்ள பலர் சமூகத்தில் திருடுவதைப் போல் எழுத்துத் திறமையுள்ள சாரு நிவேதிதா எதற்காகத் திருட வேண்டும்? அதுவும் உயிர் நண்பனிடம்? இலக்கியத் திருட்டுடன் நட்பிற்கு நம்பிக்கைத் துரோகமுமல்லவா செய்திருக்கின்றார்? இது பற்றி சாரு நிவேதிதா விளக்கம் அளிப்பது அவர் மேலுள்ள களங்கத்தின் கனத்தினைக் குறைக்கக் கூடும். - ஆசிரியர் -]

****************************************************************************

From: "Jeya J Mohan"
Sent: Wednesday, August 21, 2002 10:46 PM

அன்புள்ள வி என் ஜி

தங்கள் இணைய இதழை இன்றுதான் பார்த்தேன் . மன்னிக்கவும் நான் போன முறை தவறுதலாக நாங்கள் எழுதிய கட்டுரையின் செப்பம் செய்யப்படாத முதல் பிரதியை அனுப்பியிருக்கிறேன் . அதே கட்டுரையின் முழுமையா பிரதியை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன் .தயவு செய்து அதை நீக்கிவிட்டு இதை போட முடியுமா? மின்னஞ்சலில் இணைப்பு தந்தபோது வந்த பிழை அது .

இத்துடன் ஒரு  பகுதி உள்ளது . திகம்பரன் அவர்களின் வினாக்களுக்கு பதில் எழுதியுள்லேன்.சரவணனுக்கு அனுப்பியுள்ளேன். அவனது பங்கையும் சேர்த்தபிறகு அனுப்புகிறேன். திகம்பரன் சிறப்பான வினாக்களை அழக்காக எழுப்பியுள்ளார் .எங்களுக்கு மிக உதவிகரமானது ஜீவன் கந்தையா எழுதும் பகுதியும் மிகநன்றாக உள்ளது .நண்பர்களிடம் வாசிக்கும்படி சொல்லியுள்ளேன். அவரிடம் வாசிக்க வைக்கிற  தீவிரமான [சற்று அமிலம் கலந்த ] நடை உள்ளது .  அவரிடம் நான் முரண்படுவது அவர் இலக்கியத்தை ஒரு பயன்படுபொருளாக காண்பதில் அளிக்கும் அழுத்தம் . அத்துடன் அவர் மொழியில் ஒரு கசப்பு இருந்தபடியே உள்ளது .அது ஒரு இயல்பு , அதன் இடத்தையும் நான் மறுக்கவில்லை .நான் நேர்மாறாக நம்பிக்கை கொண்டவன் .

ஜெயமோகன்
jeyamohan

 

****************************************************************************

From: Mohamed Ishaq
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, September 13, 2002 6:03 AM
Subject: karuthu

அன்புமிக்க ஆசிரியருக்கு
பதிவுகள் படித்தேன் மிகவும் சிறப்பக உள்ளது
பல துறை செய்திகளை உள்வாங்கி
வெளிவருவது பாராட்டுக்குறியது
தமிழ்ச்சமூகத்துக்கு தங்களின்வலைதளம் மூலம்
மேலும் பல சேவைகளை செய்ய வேண்டும்

தங்களின் எழுத்துக்களையும் படித்துள்ளேன்
தொடர்ந்து படித்துவருகிறேன்
பாராட்டுக்கள்
தொடரட்டும்
தூய நேயத்துடன்
இ.இசாக்

 

****************************************************************************

From: "Durai Samy N"
Sent: Wednesday, September 25, 2002 2:17 AM
Subject: Vimarsanaththukku


Dear Sir,
I am hereby sending My Brother's second kavithai Book
'Nathikkaraiyil Tholaintha Manal' in pdf format for your view. If you like
you can publish these poems in your site.
His original name is N.Arul Murugan, He is MA. B.Ed, Tamil
Teacher in Tamil Nadu. I am moderating a kavithai Emagazine called 'ODAI'.
(http://groups.yahoo.com/group/odai), It contains Tamil poems.
your comments are most welcome.
If you like you can publish these poems in your site.


Duraisamy , N
Sr.Engr (I), IT Dept,
Gas Authority of India Limited,
U.P. Petrochemicals Complex,
Pata, Auraiya Dt -206 241, U.P, India.
phone: 05683-82090 (O)  Fax  : 05683-82446
Resi.:05683-83976 (PP)
Alternate Email:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[ தாங்கள் விமரிசனத்திற்காக அனுப்பிய நூற் பிரதிக்கு நன்றி. பதிவுகளில் அது பற்றிய விமரிசனக் குறிப்பினை விரைவில் எதிர்பாருங்கள்.
- ஆசிரியர் -]

 

****************************************************************************

From: "Jeya J Mohan"
Sent: Thursday, October 03, 2002 10:00 PM


I am enclosing the Arivippu of our web magazine. We will be glad if you publish this at your magazine .[Like the one  about  'Theem tharikida'  under the picture .
Thankyou
jeyamohan


My other id is
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

SOLL PUDHIDHU IS GOING ONLINE!
VISIT www.marutham.com a fortnightly web magazine

 

****************************************************************************

From: Arulsubramaniam Kanapathipillai
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, October 14, 2002 12:42 AM
Subject: Short Story


Mr. V. N. Giritharan
The Editor
Pathivukal

Dear Sir,

My short story "Niram" is enclosed.  Please publish it in your Pathivukal.
It is in 'Baamini" tamil font.  I have attached herewith, the font, too.

Thank you.

Yours faithfully

K. Arulsubramaniam
359, Court Road
Trincomalee
Sri Lanka


[ உலகமெங்குமிருந்து பலராலும் பதிவுகள் வாசிக்கப் பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்கள் சிறுகதைக்கு நன்றி. விரைவில் அது பதிவுகளில் பிரசுரமாகும். - ஆசிரியர் -]

****************************************************************************

From: "puthiyamaadhavi sankaran"
To:
Sent: Friday, October 25, 2002 4:51 AM
Subject: hello


Dear mr.Giritharan,

VANAKKAM.
This is puthiyamaadhavi from Mumbai, India. I came to know about ur
pathivukal.com through Mr. Na muthunilavan , Kovai, Tamil nadu.. I visited
the site. it is too good. Iam the secretary of the Maharashtra Tamil Writers Association. This  association was started on 26th Jan2001. Poet INQULAP from Chennai was the  special guest. Next year Poet ARIVUMATHI from Chennai was invited for the  First year annual celebration. Coming year Jan 26th 2003 we decided to stage  the drama MANIMEGALAI written by Poet INQULAP.
My collection of Poems named SURYAPAYANAM released and now waiting for the  second edition.

Here we are not full time writers. But at the same time writting is not our
hobby also. It is something more than that which makes our life meaningful.
I like to know more details about  ur site. Please explain to me how to send our PATAIPPUKAL to pathivukal. I have MURASU ANJAL2000. Ur site is mentioned about it. But still .. OK .If i send it through Murasu Anjal and any problem can you come back and update  us. Please let me know. Thanks

with regards,

Puthiyamaadhavi

[ உங்கள் கடிததிற்கு நன்றி புதிய மாதவி அவர்களே. உங்கள் படைப்புகளை முரசு அஞ்சலிலுள்ள Tscu_Inaimathi எழுத்துருவினைப் பாவித்து அனுப்பி வையுங்கள். படைப்புகளை அனுப்பும் பலர் பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து அனுப்பும் போது எமக்கு அதனை மாற்றுவது, பின் 'இ', 'ஆ' போன்ற எழுத்துகளை மீண்டும் தட்டச்சு செய்வது போன்ற தேவையற்ற சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்படுகிறது. ஆகவே பதிவுகள் இதழிற்கு ஆக்கங்கள அனுப்புபவர்கள் முரசு அஞ்சலினைப் பாவித்து Tscu_Inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். - ஆசிரியர் ]

****************************************************************************

From: "Kandiah Ramanitharan"
To: "NGiri"
Sent: Wednesday, October 30, 2002 9:17 AM
Subject: Re: thiNNai

பதிவுகளிலே ஜீவன் கந்தையாவின் தொடர்கட்டுரைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து வெளியிடவேண்டும்.

நட்புடன்,
-/இரமணி.

 

****************************************************************************

From: ABDUL KHADER IZZATH
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, October 31, 2002 7:21 AM
Subject: MAIL FROM A TAMIL READER


Dear Editor,
Vanakkam.
I have been reading the articles published in PATHIVUKAL. I congratulate you and your teams efforts. I am from Madurai working in Dubai UAE.
I read your explanation about Pathivukal's main objectives.
I understand Pathivukal is not coming as a printed paper version. Only Web edition is available.

I am really sorry for writing to you in English. Once I am comfortable with Murasu fonts I will write to you in Tamil. I admire your views about Marxism, Present Situation of Ethnic Conflict in Sri Lanka. Keep up the good work.

Endrum Anbudan
Izzath
My email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

From: "DJ _Tamilan"
To: ;
Sent: Thursday, November 07, 2002 9:41 AM
Subject: Jeevan Kandaiah's "Sooriyankaadu"

ஜீவன் கந்தையாவின், "சூரையங்காடு" மனதைப்பிசையும் வாழ்வியல் யதார்த்தம். நம்மைப்போன்றவர்களுக்கு, முன்னொரு காலத்தில் யானை கூட மீந்துபோன சொத்தாக இருக்கவில்லை. சூரையங்காடு சொல்லுகின்ற சம்பவங்களைப் போன்ற பலவாயிரம் நிகழ்வுகளே சுவடுகளாய் நின்று வலிதந்திருக்கின்றன. மரணம் பற்றிய நினைவுகள் மனத்திரையில்  வந்து எட்டிப்பார்க்கின்றபோதே கலக்கமடையும் எனக்கு, நேரில் நுரைதுதும்ப மரணத்தை கண்ட, அதன் வாசம் இன்னும் கரைந்தபடி இருப்பதாய் எண்ணும் ஜீவன் கந்தையாவின் மனநிலையை நெருங்கிப் பார்க்க முடிகிறது. நாம் கடந்துவந்த வாழ்வு முழுதும் அவலங்கள் தானே. போராட்டங்களால் வந்து நெருக்கிய அவலவாழ்வை அவ்வளவாக தீவிரத்துடன் பதிவுசெய்யப்படவில்லையென்ற என் எண்ணத்திற்கு ஜீவன் கந்தையாவின் "யாத்ரா மார்க்கம்" விதிவிலக்கு. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் நண்பரே!!!

அன்புடன்,
டிசே


********************

[ பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வ்மான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிகளில் ஏதாவதொன்றுக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]

****************************************************************************

From: Nagarathinam Krishna
To: NGiri
Sent: Wednesday, November 03, 2004 8:10 AM
Subject: mathippurai -kuRiththu


வணக்கதிற்குரிய ஆசிரியருக்கு, என் சிறுகதைத் தொகுப்பிற்கு தங்களிதழ் வெளியிட்டிருக்கும் மதிப்புரைக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றிகள்

பணிவுடன்,
நாகரத்தினம் கிருஷ்ணா

****************************************************************************

From: "Aravindan Neelakandan"
Sent: Wednesday, November 03, 2004 12:38 AM

Dear Giri,
Thank you for the nice sci-fi short story. I am planning to write in distant future an article on the idea of God in Indic sci-fi. The idea came to me reading yours - though I am well aware we donot see eye to eye on many things. Take care

S.Aravindan Neelakandan

 

 

****************************************************************************

From: appadurai muttulingam
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, November 02, 2004 8:27 AM
Subject: story


Dear Giri, I have read a good story today ' Thevatharisanam.' You have chosen the right language to tell the story and that was reason for its success. Congratulations.

anbudan
a.muttulingam

 

****************************************************************************

From: "suresh kannan"
To:
Sent: Friday, October 29, 2004 7:16 AM
Subject: Hi from Suresh


Vanakam, Naan Ungal sirukathai "thevatharisanam" padithen. Mihavum nandraha irunthathu. Ungaluku enathu Valthukkal.

Anbudan...
Suresh

****************************************************************************

From: Sumathy Balaram இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, October 20, 2004 4:38 PM

கடந்த காலச்சுவட்டில் கண்டதும் கேட்டதும் படித்தேன். அண்மைக் காலமாக பல இலக்கிய விரும்பிகள் பெண்களின் எழுத்து அவர்களின் மொழி பற்றி பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் என்று வசைபாடிய வண்ணமே இருக்கின்றார்கள். அன்று கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏறச்செய்ததும், தலை மழித்து வெள்ளைச் சீலை கட்டி இருட்டு அறைக்குள் இருத்தி வைத்ததும். பெண்களின் இந்த முலைகளும் யோனிகளும் ஆண்களுக்கு ஏற்படுத்திய பிரமையையும் பீதியும் தான் என்பது என் கருத்து. இந்த அடக்கு முறைகளை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகின்றாள். தன் மேல் இந்த ஆண் ஆதிக்க உலகம் சுமத்தும் சுமைகளை அம்பலப்படுத்துகின்றாள் என்ற பீதி எல்லா ஆண்களுக்கும்.. ஏன் மேலத்தேய நாட்டில் வாழும் ஆண்கள் உட்பட எல்லோருக்குமே ஏற்படத் தொடங்கி விட்டது. மெளனித்திருந்தால் கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கூசாமல் பெண்ணியம் பெண் மொழி என்பவற்றால் தம்மால் முடிந்தவரை தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்தி  மீண்டும் அவளை எங்காவது அடைத்து விடலாம் என்று முயன்று பார்க்கின்றார்கள். இது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையில்லை.. பல பத்தினிப் பெண்களும் இப்படியாகக் கோசம் போடுகின்றார்கள். திலகபாமா 'காலச்சுவட்டிற்கு கண்டனம்" என்று பதிவுகள் இணையத்தளத்தில் கூப்பாடு போட்ட வண்ணம் தவறாமல் காலச்சுவட்டையும் உயிர்மையையும் படித்து வருகின்றார். இப்படியான எழுத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளை தங்கள் மனைவி மகளை வாசிக்க அனுமதிப்பீர்களா என்று கேள்விக் கணையைத் தொடுத்திருக்கும் திலகபாமாவிற்கு அவர் இவற்றைப் படிக்க அனுமதி வழங்கியது அவர் தந்தையா? இல்லைக் கணவனா? பெண்ணின் உடலமைப்பும் உடல் அவயங்களும் தான் தமது கலாச்சாரம் பண்பாடு சமயம் போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்கின்றது என்று கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்ன என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம். - சுமதி ரூபன் (கனடா) -
****************************************************************************
From: "puvan eelanathan"
To:
Sent: Wednesday, October 20, 2004 10:09 AM
Subject: vanakkam

வணக்கம்! நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் மிளிரும் பதிவுகளுக்கான உங்கள் உழைப்புக்கு நன்றி.சில சில நேரங்களில் பதிவுகளின் ஆக்கங்களை வலைப்பதிவுக்காக பிரதி பண்ணிப் போடும் போது உங்கள் உழைப்பை சொல்லாமலே உறுஞ்சிவிடுவது மாதிரி ஒரு உள்ளுணர்வு.எனவே சொல்லிவிட்டு திருடிக் கொள்ளலாம் என நினைக்கிறேன் வேறொன்றுக்குமில்லை ஈழத்துப் படைப்பாளிகளின் நூலுருவாக்கங்கள் பற்றிய தகவல்களை வலையேற்றுகிறேன். www.padippakam.blogspot.com , www.padaippu.blogspot.com எனும் முகவரியில் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தாருங்கள்.

அன்புடன்
ஈழநாதன்

[உங்கள் பயனுள்ள முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். மேலும் பதிவுகளிலிருந்து பெறப்படும் எதனையும் மூலம் குறிப்பிட்டுப் பிரசுரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. ஆ-ர்]
****************************************************************************
From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, October 06, 2004 8:11 PM
Subject: Peace Message

Jerry KanagarajahI take this opportunity to introduce myself.  I am Raja Jerry Remigius Kanagarajah a Direct Descendant of the Jaffna Royal Family.  Although the Soveriegnity was ended on the 11th February 1621, there are still existing Descendants of the Jaffna Royal Family. Even if I live in a country which is not of my birth right, I am very aware of the situation in Sri Lanka.  I keep myself up to date on news and daily happenings in my country.  Although I am not a political person, it does concern me however that there has been so little progress in recent peace talks, thus despite of the helpful international support. I would like to take the occassion of my 40th birthday to pass on this message: That the peace process should go further! It is my only wish that as citizens of Sri Lanka we join hands, Look into the History of our country and the lives of our forefathers who lived in peace and unity.

It is unfortunate that for over 20 years we have not had this peace.  Although some things have improved over the last few years, it is an obligation that we express with stregnth our common will to live in a peaceful and prosperous country; something that is achievable. It is also a unique occassion for our nation to be a world model, especially in times of critical political situation in the world.  To achieve peace and unity in our country, the only way is that we, (without considering our ethnic, social or political membership) join together to put behind our differences and concentrate on what we have in common past, present and future, then we will be able to progressively build a national identity that both respects our ancestors and is a guarantee of stability for our descendants.

It is not my intention to take a big stand in the political arena of the country.  But as a descendant of the Jaffna Royal Family, I support all efforts made by the leaders of political and ethnic groups in the country to make Sri Lanka a peace loving and unified country. I wish all the people of Sri Lanka and around the world peace.  I hope with the support of the other countries of the world. to see Sri Lanka rise above its cultural and ethnic differences.
****************************************************************************

From:
To:
Sent: Monday, October 04, 2004 3:09 PM
Subject: pathivukal

அன்பின் திரு. கிரிதன் அவர்களுக்கு! அன்புடன். நலம். நலமே விளைவதாக! பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். பல்வேறு வகையான அனுபவப் பதிவுகளும் மனதில் பதிகின்றன. ஒருசில விடயங்கள்பற்றி உடனுக்குடன் எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்போல் எனது துடித்தாலும், எழுதுவதற்கான சூழ்நிலைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

ஒரு சிற்றிதழாளனுக்குரிய சிரமங்கள் தாங்கள் அறியாததல்ல. நேரமின்மை என்பது முக்கியமான காரணமாக இருப்பினும், பதிவுகளின் அனைத்துப் படைப்புக்களையும் படித்து முடித்துவிடவேண்டும் என்பதில் தீவிரம்காட்டி வருகிறேன். பதிவுகளின் ஒரு வாசகனாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தவிர, பூவரசு இதழ்களுக்குத் தாங்கள் அவ்வப்போது தந்துவரும் அறிமுகத்துக்கு எனது சார்பிலும் எமது கலை இலக்கியப் பேரவை சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். (பதிவுகளில் பூவரசுபற்றி அறிந்ததாக சில இலக்கிய நண்பர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள்.)

மேலும் அடுத்த ஆண்டு பூவரசின் 15வது ஆண்டுப் பயணம் தொடங்குகிறது. ஆகவே வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகளை, இம்முறை சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மட்டத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அது சம்பந்தமான விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். புதிவுகளிலும் இதுவெளிவரவேண்டும் என்பது எமது விருப்பம். மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
இந்துமகேஷ் (ஜெர்மனி)

From: Mohammed Sharvi
Sent: Tuesday, September 28, 2004 2:19 AM
Subject: SHARVI

Sharvis; English film

After My Tamil Project. I am Planning one English Project. I have Some People in London who is Interested to Join with My Project. In this Project Not Bruce willis. This Desigh I just Done for a Hollywood Company.  I am Planning A small Project With British Artists.The Production is a corporate Company. Any body can Join with Small Investment. Its a Scycho Triller Related to indian Tradition. SHARVI  www.geocities.com/directorsharvi
****************************************************************************
From: Swaminathan Venkat
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, September 28, 2004 2:21 AM


டி.செ.தமிழனுக்கு நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். 5.6.04 அன்று டொரண்டோ சந்திப்பில் நான் பேசியதன் பதிவுகளை வெளியிடத்தயார் என்று மிரட்டலாகச் சொன்னார் என்றாலும், . நானும் அதை வரவேற்றேன். இது வெற்றுச்சவுடால் இல்லை. எனக்கும் அந்தப் பேச்சின் பிரதி தேவை- ஒலி நாடாவாகவோ அல்லது கை எழுத்துப்பிரதியாக, ஏதேனும் மின் இணையம் மூலமாகவோ அப்பேச்சின் பதிவுகள் வெளியிடப்படுமானால் என் மீது குற்றம் சாட்டியவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எனக்கும் மகிழ்ச்சி, என் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்படுவதில், அதிலிருந்து நான் பின்னர் என் செளகரியத்துக்கு முரண்படமுடியாதல்லவா? மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தம் பேச்சுக்கள் காற்றோடு கலந்து மறைவதையே விரும்புவார்கள். அது தான் அவர்களுக்கு செளகர்யம். டி.சே.தமிழனோ, அல்லது, அன்று பதிவு செய்துகொண்டிருந்த மற்ற அன்பர்கள் யாராவதுமோ, இந்த உதவியைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் எல்லோருக்கும் இதன் மூலமாக என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

அடுத்து, இதே போன்ற இன்னுமொரு வேண்டுகோள், ஆத்மன் என்னும் நண்பருக்கு. திரு ஆத்மன் அவர்கள் டோரண்டோவில் நான் இருந்தபோது, சேரன் வழிகாட்டியதாக சொல்லி, அ.முத்துலிங்கம் மூலமாக, ஒவ்வொரு மணி நேர தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றும், வானொலிப் பேட்டி ஒன்றும் பதிவு செய்தார். அவற்றின் ஒலி/ஓளி நாடாப் பதிவுகளை என்க்கு தருவதாக/அனுப்பிவைப்பதாக எனக்கு வாக்கு கொடுத்திருந்தார். டோரண்டோ நண்பர்கள் மூலவும், திரு ஆத்மன் அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் நானும் எவ்வளவோ முறை, கடந்த மூன்று மாதங்களாக அணுகியும் அவரிடமிருந்து எத்தகைய பதிலும் இல்லை. அவர் தன் வாக்கைக் காப்பாற்றவும் இல்லை. இது எனக்கு மிகவும் மனவருத்தம் தருவதாகவும், நான் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறேன். கனடிய அரசு அதிகாரிகளிடம் கூட எனக்கு இத்தகைய அனுபவம் இருக்கவில்லை. தமிழ் அன்பர் ஒருவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நேரில் மிக இனிமையாக பழகியவர். ஏதோ காரணம் இருக்கவேண்டும். இன்னும் அவர் தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்றே நம்ப விரும்புகிறேன். இப்பதிவுகள் எல்லாவற்றையும் சமயம் வாய்க்கும்போது அச்சில் வெளியிடுவதற்காகவே கேட்கிறேன். -வெங்கட் சாமிநாதன்
****************************************************************************

From: "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To:
Sent: Wednesday, September 22, 2004 2:52 AM
Subject: Mahesuwaran from Tamilnadu

Vanakkam, I am Mahesuwaran from Tamilnadu.I have gone thru' your pathivugal e-magazine.It's not only encouraging tamil writers but also helps  developing  Tamil Mozhi among the Tamils all over the world.I read Sappathu short story written by kumar Murthy.Its interesting and explains the underlying pains of pulam peyarntha tamilargal.keep publishing such short stories.

Regards,
Mahesuwaran.S
****************************************************************************
From: Sumathy Balaram
To: Nav Giri
Sent: Tuesday, September 14, 2004 11:04 AM
Subject: see

காஞ்சனாவிற்கு, கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும் வரண்டு விடவில்லை. குமார்மூர்த்தி எழுதிய 'சப்பாத்து" கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது நண்பனும் கூட. அவருடைய 'சப்பாத்து" கதை ஒரு வயது வந்த இளைஞன் தனது காலுக்குப் பொருத்தமாக சப்பாத்து ஒன்றை வாங்குவதற்காக கனடாவில் கடைகடையாக ஏறி இறங்கி தேடி வாங்கி கடைசியாக கோவிலில் தொலைத்து விடுவதாக அமைத்திருக்கின்றார். எனது சப்பாத்துக் கதை எனது குடும்பத்தில் எனது அக்காவின் மகன் ஆசையாக 'நைக்கி' சப்பாத்து தனது பிறந்த நாளிற்கு வாங்கி முதல் நாள் பிள்ளையார் பால் குடிக்கின்றார் பார்க்க வா என்று நண்பர்கள் அழைத்துச் சென்று பறிகொடுத்தது. இரண்டிலும் சாயல் இருக்கின்றது. அண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட 'செருப்பு" என்ற குறுந்திரைப்படத்திலும் எனது சப்பாத்தில் வருவது போல் ஒரே சாயலான காட்சி- அதாவது பிள்ளை சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை தாயார் தனது தேவைக்காக எடுப்பது போல், வந்திருந்தது.. அப்போது அந்தத் திரைப்படத்தைப் பார்த்த எனது நண்பன் கூறினார் சுமதி.....இந்த 'செருப்பு" திரைப்படத்தைப் பார்த்து விட்டு சுமதி ரூபன்.. செருப்பைக் களவு எடுத்து விட்டார் என்று கூறினாலும் கூறுவார்கள் என்று. அதே வேளை இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே கருவைக் கொண்ட செருப்பு, சைக்கிள் எனும் இரு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. எதற்காக காஞ்சனா என்ற பெயரிற்குப் பின்னர் பதுங்கி கோழைபோல் என்மேல் காழ்புணர்சி காட்டுகின்றீர்கள். என் திறமையில் எனக்கு சிறிது சந்தேகம் இருந்தது. முதல் முதலாக உலத்தமிழர் நாடாத்திய திரைப்படவிழாவில் எத்தனையோ அனுபவமிக்க திறமைசாலிகளின் குறுந்திரைப்படங்களுக்குள் எனது படைப்பான 'இனி" பேசப்பட்டபோது எனக்குள் முழுமையான நம்பிக்கை வந்து விட்டது. 3வது சர்வதேச திரைப்படவிழாவிலும் பலர் எனக்குக் கைகொடுத்து மிகத்திறமையாச் செய்திருக்கின்றீர்கள் என்றும் இனி தமிழ் மக்களுடன் நேரத்தை வீணடிக்காது அதற்கு அடுத்த படிக்குச் செல்லுங்கள் என்று வாழ்த்தியவர்கள் பலர். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கின்றேன். எனது குறுந்திரைப்படங்களான 'இனி", 'மனுஷி", 'உஷ்" போன்றவை பேசப்பட்ட அளவிற்கு 'சப்பாத்து" பேசப்படவில்லை. அதன் கரு ஆழமற்றது என்று தெரிந்தும் எனது பிள்ளைகளிற்காக அதனைச் செய்தேன். மூன்று தரமான குறுந்திரைப்படங்களைத் தரும் திறமைகொண்ட சுமதி ரூபன் சப்பாத்து போன்ற ஒரு கருவைக் களவாட வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகின்றேன். காஞ்சனா அவர்களே! வேண்டுமானால் எனது குறுந்திரைப்படப் பிரதிகளை உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன் தாங்கள் அது எங்கிருந்து உருவி எடுக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரியப்படுத்தலாம்.

நன்றி உங்கள் சேவைக்கு
சுமதி ரூபன்
****************************************************************************
From: Kanchana Maniam இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, September 13, 2004 11:03 PM
Subject: Third International Short Film Festival

ஆசிரியருக்கு, 3வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சுமதி ரூபனின் சப்பாத்து குறும் படத்தின் கதை மறைந்த அமரர் குமார் மூர்த்தியினது கதையாகும்.  குமார் மூர்த்தியின் கதையை இத்துடன் அனுப்புகின்றேன். இக் கதை கணையாழி கனடா சிறப்பிதழில் இடம்பெற்றது. குமார் மூர்த்தியின் வார்த்தைகளில் 'மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது'. அவரது சப்பாத்து கோயிலுக்குள் களவு போய்விட்டது. அவரது கதை விழாவில் களவு போய்விட்டது. 3வது திரைப்பட விழா பற்றிய சிறு குறிப்பு. விழாவின் படங்கள் என் கணிப்பில் (தகுதிபெற்றது)

1. பயணம்
2. அடிமை;
3. கனவு
4. மனுஷி
5. It's All About
6. காசு மரம்
7. உஷ்
8. Untitled
09. இது விளம்பரம் அல்ல
10. ஈசல்
11. Dream Inside
12. துரோகம்
13. கோப்பை

- காஞ்சனா -

****************************************************************************

From: Bayadere
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, September 13, 2004 6:54 AM
Subject: Thank you for your support!

I would like to thank everyone at Pathivukal for having publicised the exhibition of paintings by V.P. VASUHAN, which is currently taking place at BAYADERE in Paris (23 rue Louis Blanc, 75010 Paris). The opening, on August 28, was a great success, with many visitors from the various communities which live in Paris, as well as travellers from abroad who had come to Paris specifically for the event. Discussions were active about the themes present in Vasuhan's work (nature, colour, movement...). If a single conclusion could be drawn from these exchanges, it would be that art expresses the emotions that we all share, whatever our cultural background. Very few Srilankan artists are present on the Parisian exhibition scene, making us all even more proud of this success. We wish the best of luck to Vasuhan in continuing his journey! You can see more of Vasuhan's own work and comments by visiting this link  http://vpvasuhan.tripod.com.

Thank you again,
Yours sincerely
Annick Garin
BAYADERE
www.bayadere.com
****************************************************************************
From: Sumathy Balaram
Sent: Wednesday, September 08, 2004 11:46 AM
Subject: Hi

கனடாவில் இடம் பெற்ற குறுந்திரைப்பட விழா பற்றிய இருவரது இரு விதமான பார்வைகளைப் பார்த்தேன். விமர்சனங்கள் தான் எப்போதும் கலைஞர்களை ஊக்குவிக்கும். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தொடர்ந்து வரும் எமது படைப்புக்களின் அதிக கவனம் கொள்ள முடிகின்றது. குறுந்திரைப்படம் என்பது எனக்கு மிகவும் புதிதான ஒரு தளம். அது பற்றிய அறிவு வாசிப்பாலும், குறுந்திரைப்படங்களைப் பார்த்தாலும் மட்டுமே நான் பெற்றுக்கொண்டேன். விமர்சனங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றை நாம் ஏற்று எம்மை வழப்படுத்த முடியும். அந்த வகையில் அருண் எனும் விமர்சகர் தனது பார்வையில் எனது குறுந்திரைப்படங்கள் பற்றிய பல குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். அவற்றில் தகுந்ததை எடுத்து நான் என்னை மேலும் வழம்படுத்திக்கொள்வேன். உதயராஜின் தரமான விமர்சனத்திற்கும் எனது நன்றிகள். மேலும் பதிவு வாசகர்கள் எனது குறுந்திரைப்படங்கள் சிலவற்றை எமது இணையத்தளத்திலும், அதற்கான விமர்சனங்கள் வாதங்களையும் கீழே கொடுக்கப்பட்ட இணையத்தளத்திலும் பார்க்க முடியும்.

http://homepage.mac.com/ruban/iMovieTheater15.html
http://www.thamilfilmclub.com/forum/viewtopic.php?t=16
http://www.womankind.yarl.net/

- சுமதி ரூபன் -
****************************************************************************
From: Dr.M.K.Muruganandan
To: NGiri
Sent: Wednesday, September 08, 2004 1:13 PM
Subject: OK

Dear Giri,  Today I read your article on `Being there`. It is very interesting. It reminded me of a French film where a dog changed into a man. I forgot the name of the film.

With regards
MKM
****************************************************************************
From: jeya mohan nagercoil
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, September 02, 2004 11:31 PM

டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை 'அம்பலப்படுத்தி விட்டது 'குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால்கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். - ஜெயமோகன் -


From: Nanda Kandasamy
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Cc: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, September 02, 2004 10:01 AM
Subject: Please publish this event


Editor Thinnai and Pathivukal I have attached the launch event for Collections of poems transalated by S Pathmanathan (Sopa)written from Southern Sri Lanka called Thenilankai kavithai. Please publish this event.

Thanks and Regards

Geevan
(Nanda Kandasamy)
****************************************************************************
From: I. ISHAQ
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, August 26, 2004 12:58 PM
Subject: Nandri

Anbumikka Pathivukal aasiriyarukku vanakkangkalodu, enathu Mazhai Ointha Neram nool veliyeettu vizhaa seydiyai Pathivukal idazil veliyittamaikku mikka nandri.

-Ishaq

"thamizum naamum vERalla
thamizh thaan namakku vEr"

****************************************************************************
From: "Abedeen"
Sent: Monday, August 16, 2004 12:54 AM
Subject: Re: Book Review on 'Idam'


My Dear Giritharan, Thanks for the review OF 'IDAM'.

- H. ABEDEEN

http://abedheen.tripod.com/

****************************************************************************
\
From: Mr Palaniswamy Ramaswamy
Subject: Pudhiya Maadavikku Parattukkal
Date: Fri, 23 Jul 2004 01:51:40 -0700 (PDT)

Anbudiayeer, Vanakkam, Nalam, Nalam Nadugurean.   Pudhiya Maadhavi yin Arabic Kadaloram-4 Unarchivayamana  Varigal NenchaithThodugirathu.
SaathigalaiOlikka Eluntha Arabic Kadalin Alaigal Meendum Saathiyak Kadalukkulle Adangi Meendum Alaigalaga Elunthu Meendum Adangi thodarkirathu Intha Porattam Anru Nadakkavilla Avargalin Saathi Olippu Manadu Inrum Atharku Saatchiyaga Arabin kadalin Alaigal Saathiyach Sanghangalin kakgalai VarudiUppukkarikindrathu Unmai Nilaigal.. Ippoluthellam Alaigalin Eeraththil Manitha Raththangalin Karaigal.. Alagailin Porattam Thodarum.. .... Enra varigalumEllap paththirigaiyilum, Saathich Sanghaththin Therthal vilambarangal Agila India Arasiyal Thalaivargalukkum Saathich Saantrithalgal Inge than Valangappadugindrna    ... Enra vairigalam Saathi Thee innum Arabic Kadalalum Anaikka Mudiyavillai Enra Vedhanaiyil.

Karur R.Palaniswamy
****************************************************************************
From: Swaminathan Venkat
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, July 20, 2004 1:11 PM

dear editor, i got to know of what is being written about my meetings and talks with the writers community in toronto. there are quite many misinterpretation, misrepresentations etc.I would like to have my say. Please inform of the font in which I have to write. I have murasu anjal 2000 Inaimathi. Would you be able to access my contribution, if i send it to you couched in this font? please inform me. thanks, yours sincerely,

[வணக்கம் வெ.சா அவர்களே! தாராளமாக உஙகள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம். அவ்விதம் அனுப்பும் போது tscu_inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பினால் நல்லது. Inaimathi யினைப் பாவித்து அனுப்பினாலும் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவ்விதம் வரும் கோப்புக்களை நாம் tscu_inaimathiஇக்கு மாற்ற வேண்டும். எமக்குச் சிறிது வேலை அதிகம் அவ்வளவுதான். அதனால் தான் நாம் tscu_inaimathi பாவித்து அனுப்பும்படி கோருகின்றோம். இருந்தும் எமக்கு வரும் ஆக்கங்களைப் பலர் 'பாமினி'யில் அனுப்பி வைக்கின்றார்கள். இதனை tscu_inaimathiக்கு மாற்றிப் போடும்படியாக எமக்கு மேலதிக வேலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் அவ்விதம் மாற்றும்பொழுது  தவறிப்போகும் 'இ', 'அ' மற்றும் 'ஆ' போன்ற எழுத்துக்களை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய தொல்லையும் சேர்ந்து விடுகிறது. நீண்டதொரு கோப்பில் இவ்விதம் திருத்தம் செய்யும்பொழுது ஏற்பட்டு விடும் நேரவிரயத்தை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதனால் எமக்கு ஆக்கங்களை அனுப்பும் பொழுது tscu_inaimathiயில் அனுப்பினால் எமக்கு அது மிகவும் உதவியாகவிருக்கும்... -ஆ-ர்]
****************************************************************************
From: "Muthammal Grant"
To:
Sent: Sunday, July 11, 2004 4:49 AM
Subject: book-- from shore to shore

sir, i have been reading pathivukal. very interesting and it's reallly good. i  am a malaysian indian- third generation of migrant labour family from india,-a retired teacher i am-. no body has ever written about the indian sufferings in this country. i thought why not? i didn't do much research--i wrote my family story-100% true story.-typical life gone through by millions of indians  as indentured workers in malaysia.i just releasd my book  "From Shore To Shore"-last year, can i send you a copy by post? my story covers three countries .recently i was in india to collect more facts for my tamil version of the book. i was invited by the plantation workers training  institute  and given a good reception.they liked my book--resembles the indian workers'  life in sri lanka. thank you for sparing your precious time.

anbudan
muthammal grant.

[தாராளமாக அனுப்பி வையுங்கள். ஆ-ர்]

****************************************************************************

From: "puvan eelanathan"
To:
Sent: Thursday, June 24, 2004 10:18 AM
Subject: kavithai

அன்பின் பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம்! எனது கவிதையைப் பிரசுரம் செய்தமைக்கு எனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன். மேலும் ஈழத்து இலக்கியங்கள் பற்றிய தகவல்களை இணையமயப்படுத்தும் எனது சிறுமுயற்சி பற்றிப் பார்வையிட்டு
உங்கள் கருத்துகளையும் இயலுமானால் தகவல்களையும் தந்துதவுவீர்களா?
www.eelanatham.yarl.net

நன்றி
அன்புடன்
ஈழநாதன்

[நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு, தங்களின் முயற்சி பாராட்டுதற்குரியது. பெரியதொரு பணியினை ஆரம்பித்துள்ளீர்கள். ஒழுங்காகப் பொறுமையாக முயன்றால் பெருவெற்றி அடைவீர்கள். ஏற்கனவே ரமணீதரன் (அமெரிக்கா) ஈழத்து இலக்கியம் பற்றிய செய்திக்குழுவொன்றினை பரமாரித்து வருகின்றார். தற்போது தாங்கள் ஆரம்பித்துள்ள முயற்சி இன்னும் விரிவானதாகவுள்ளது. உங்களது தளம் பற்றிப் பதிவுகளில் விரைவில் அறிமுகம் செய்வோம். பதிவுகளில் வெளிவந்த விடயங்கள் பலவற்றை மூலம் குறிப்பிட்டு மீள்பிரசுரம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒரு சிலர் இணையத்தில் வெளிவரும் விடயங்கள் பலவற்றை மூலம் குறிப்பிடாது பிரசுரித்து விடுகின்றார்கள். அண்மையில் கனடாவிலிருந்து வியாபாரத்தை நோக்காக வெளிவரும் ஒர் இதழில் இணைய இதழ்களில் (பதிவுகளுட்பட) வெளியான பல விடயங்கள் மூலம் குறிப்பிடாமல் வெளியாகியிருந்தன. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்தவிதக் குழு வேறுபாடுகளுமற்று ஈழத்தின் இலக்கிய வரலாற்றினை ஆறுதலாகப் பொறுமையாகப் பதிவு செய்வதில்தான் இறுதி வெற்றி தங்கியுள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். - ஆ-ர்]
****************************************************************************
From: "Maheswaran Sinnaiah"
To:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, May 24,2004 6:43 A.M.
Subject: Madal21

திரு.வ.ந.கிரதரன் அவர்கள் ஆசிரியர்:  பதிவுகள். அன்புநிறை ஆசிரியர் அவர்களுக்கு! அன்புடன். அண்மையில்தான்  இணையத்தளத்தில் பதிவுகளைச் சந்திக்க முடிந்தது.
ஒரு ஆர்வமுள்ள வாசகனாக பதிவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், படித்து மகிழவும் நிறையவே உண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதிவுகளின் முன்னைய இதழ்களையும் புரட்டிக் கொண்டிருக்கிறேன். ஆறுதலாக இதுபற்றி தங்களுடன் மின்னஞ்சல்கள்மூலம் பேசும் விருப்பம் உண்டு. தவிர, தங்கள்பார்வைக்காக  அனுப்பிவைக்கப்பட்ட பூவரசு இதழ்களை பார்வையிட்ட, உடனேயே அதுபற்றி பதிவுகளில் அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள். பதிவுகளுக்கு வாழ்த்துக்களோடு தங்களுக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும். தொடர்வோம்.

அன்புடன்
இந்துமகேஷ்
(ஆசிரியர்: பூவரசு)
****************************************************************************

From: "K S Sivakumaran"
To:
Sent: Thursday, May 20, 2004 7:17 AM
Subject: Indian Elections

Dear VNG: Your brief analytical comment on Sonia Gandhi is welcome. It is also noteworthy on her part to suggest a Sikh to be a premier of India, thus transgressing narrow communal bias. However I am not sure whether all members of the BJP  could be flocked together as detrimental as what some opinions proclaim. Your comments on the re-emergence of the DMK  also might  interest readers. looking forward for it.

K.S. Sivakumaran
Cincinnati, USA
****************************************************************************
From: "puthiyamaadhavi sankaran"
Sent: Friday, May 07, 2004 6:36 AM
Subject: From Deva

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, நன்றி.. அரபிக்கடலோரம் விமர்சனங்கள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. அதிலும் சிறப்பு என் மும்பை தமிழர்களும் வாசித்துவிட்டு தொலைபேசியில் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் நண்பர் ஒருவர் நான் இந்தத் தொடரை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்  எழுதுவதற்காக வருத்தப்பட்டு என்னிடம் வாதம் செய்தார். என் மும்பை தமிழர்கள் பெயர்களுக்கு அதிகம் முக்கியம் கொடுப்பவர்கள். நான் மறதியாக யார் பெயரையாவது  குறிப்பிடாமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான்.. அரபிக்கடலோரம் போர்க்களமாகிவிடும்!!! பார்க்கலாம். நீங்கள் எனக்கு நிறைய ஒத்துழைப்பை, ஊக்கிவிப்பைத் தருகின்றீர்கள். என் சூர்யா நட்பு மண்டலம்.காம் தொடரைப் புத்தகமாக வெளியிட விருப்பம். தொடர் பதிவுகளில் வெளிவந்ததால் முறைப்படி உங்களின் அனுமதியைக் கோருகின்றேன். இத்துடன் முகம் தெரியாத ஒரு அன்பர் எழுதியிருக்கும் விமர்சனத்தையும் இணைத்துள்ளேன். பொதுவாக நான் இந்தக் கடிதங்களைச் சேர்த்து வைப்பதில்லை. வருகின்ற விமர்சனங்களின் கருத்துகளுக்கு நான் பொறுப்பு.. நன்றி சொல்லவேண்டியது உங்களுக்குத்தானே...


"...Hello madhavi, I read your article, named "arabi Kadaloram" at pathivugal.com. I mailed just to praise that article. It sounds good, showing the reality behind, the present era of politics. Sorry for mailing you thro english. Its because I don't know tamil typing and dont have any software for that even. If possible prescribe me to view some good articles over net. Thanks and bye Wish U Goodluck , Plz reply to this  asap.

N.S.Devaraj
Programmer-Online Dept
Central Institute of Indian Languages.
ManasaGangothri,Hunsur Road, Mysore-6.
: (821) 2414568 / 69 Ext 379
Mobile : 09886139134
Web   : http://www10.brinkster.com/devab4u.."


நட்புடன்,
புதியமாதவி
மும்பை.

[நன்றி புதியமாதவி! பதிவுகளில் வெளிவந்தாலும் வெளிவரும் ஆக்கங்களின் உரிமைகள் அவற்றை எழுதியவர்களினுடையது தானே. எனவே பதிவுகளின் அனுமதி எதுவுமின்றியே தாங்கள் தாராளமாகத் தங்களது படைப்புகளை நூலாக்கலாம். -ஆ-ர்-]
****************************************************************************
From: "K S Sivakumaran"
To:
Sent: Wednesday, May 05, 2004 7:54 PM
Subject: MKM on Mu.Po's Poems

Dear VNG:

I enjoyed M.K. Muruganandan's impressionistic evaluation and appreciation on Mu.Ponnambalam's book of poems. Both are creative writers of strikingly individualistic in style. The humble way MKM introduces himself and then goes to the essence of Mu.Po's poetic sensibility is admirable. Thank you for providing varied material in your website.

Siva
( K.S. Sivakumaran )
USA
****************************************************************************
\
பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
ஏப்ரல் 28, 2004.

நண்பர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு,  பதிவுகள் இதழ் என் போன்று சிற்றூரில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

- திலகபாமா (சிவகாசி) -
****************************************************************************

From: "raja vaiz"
To:
Sent: Wednesday, April 21, 2004 6:00 AM

dear gridhar,

nice to see your pathivukal, it is really perfect one. I am the editor of  tamil post a popular tamil weekly from mumbai.

all the best

[உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி. மும்பாயிலிருந்தும் பலர் பதிவுகள் இதழினை வாசித்து வருவதை எமக்கு வரும் கடிதங்கள், ஆக்கங்களிருந்து அறிய முடிகிறது. இது எமக்கு மகிழ்ச்சியினைத் தருகிறது. உங்களது இதழ் பற்றிய விபரங்களை அறியத் தந்தால் அதனை எமது வாசகர்களுக்கும் அறியத் தருவோம். --ஆசிரியர் -]
****************************************************************************

From: "srinivasan raman"
To:
Sent: Tuesday, April 20, 2004 10:17 AM
Subject: Mridangists profile

The Editor, Pathivukal.com

Dear Sir/Madam: I am a mridangist from Delhi and am  accompnying most of the top ranking musicians in India and abroad. I would like to know how to have my profile in your website and magazine. Awaiting a reply from you.

Regards
Srinivasan

"Music should strike fire from the heart of a man and bring tears from the eyes of a woman."

[தாராளமாக உங்களைப் பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கலாம். உங்களுக்கு இணையத் தளமேதாவதிருக்கும் பட்சத்தில் அதன் முகவரியினையும் அறியத் தரவும். உங்களைப் போன்ற கலைஞர்கள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்வதும் எமது நோக்கங்களில் ஒன்றுதான். மேலும் நீங்கள் நடாத்தும் கலை நிகழ்வுகள் பற்றிய விபரங்களையும் அறியத் தந்தால் அதுபற்றிய விபரங்களைப் பதிவுகளின் 'நிகழ்வுகள்' பகுதியில் பிரசுரிப்போம். - ஆசிரியர் -]

****************************************************************************

From: "Venkataramanan"
To:
Sent: Sunday, April 18, 2004 8:55 AM
Subject: book release


வணக்கம். வருகின்ற சனிக்கிழமையன்று என்னுடைய அறிவியல் கட்டுரைத் தொகுப்புப் புத்தகம் 'குவாண்டம் கணினி' யின் வெளீயீட்டு விழா ஸ்கார்புரோ சிவிக் செண்டரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இன்னும் நான்கு புத்தகங்கள் (திருவாளர்கள் மகாலிங்கம், செழியன், அ. முத்துலிங்கம், மைதிலி) வெளியிடப்பட இருக்கின்றன.

அன்புடன்
வெங்கட்

****************************************************************************

From: Vasumathi Badrinathan
Sent: Tuesday, April 13, 2004 9:45 PM
Subject: Re: Your Program

Thanks for making this announcement to your readers. I really appreciate your efforts. perhaps, you could also do a kind of profile for your website if carnatic music and baharatanathem dance could interest your readers. For your info, I spend a lot of time in research work and had even released an exclusive album on Tamil Padams, and Tamilmarai Isai (Pasurams). I am working on a new project "Stree Gaanam" which will bring out the details of Women composers in Carnatic music. Do give a thought and probably a profile could be of great interest to your readers.

Thanks and regards
Vasumathi Badrinathan

[ பதிவுகளின் நோக்கமே 'அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது' தான். அந்த வகையில் இசை, நடனம் போன்ற சகல துறைகளைப் பற்றிய ஆக்கங்களையும் பதிவுகள் பிரசுரிக்க ஆவலாயுள்ளது. பதிவுகளுக்குத் தாங்கள் இவைபற்றி எழுத விரும்பினால் அவற்றினைப் பிரசுரிக்க ஆவலாயுள்ளோம். - ஆ-ர் -]

****************************************************************************

From: "K.S. Sivakumaran"
To:
Sent: Sunday, March 14, 2004 5:07 AM
Subject: Balanced Comment

Dear Giri:
I appreciate ' Oor Kutuvi ' comment on the current situation in Sri Lanka. It's neutral from my point of view.

Regards
Siva

****************************************************************************

From: Palaniswamy Ramaswamy
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, March 08, 2004 3:10 AM
Subject: Thanks

Dear Sir, Thank you very much for publishing the news alongwith Photo in Nikhazhvukal - Maharashtra State Tamil Writters' Association's MANITHA NEYAM  MALARATTUM  Nool Veliyeettu Vizha. Thanking you once again.

Yours sincerely,
Karuvoor R.Palaniswamy

****************************************************************************

From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, February 14, 2004 4:53 PM
Subject: Betrolt Brecht

Dear Editor,

I am sending as an attachment an article about  Betrolt Brecht. His  birth day fell on 10 th February. I shall be glad if you will publish this article in your issue of PATHIVUKAL.

with regards
Santhush

****************************************************************************

From: "Pallavan"
To:
Sent: Thursday, January 22, 2004 6:28 PM

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்! கே.எஸ்.சிவகுமாரனின் கட்டுரைக்கோர் எதிர்வினை!

ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் திரு.கே.எஸ்.சிவகுமாரனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. காலத்துக்குக் காலம் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி விமரிசனமென்ற போர்வையில் வெளிவரும் ஒருபக்கச் சார்பான கட்டுரைகள், நூல்களுக்கு மத்தியில் இவரது நூல்கள், கட்டுரைகளிலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய முடிவது அதிகம். அந்த வகையில் ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பதிவு செய்யும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இம்முறை இவர் எழுதி இலங்கையிலிருந்து வெளிரும் Daily News பத்திரிகையில் வெளிவந்து பின் பதிவுகளில் மீள்பிரசுரமாகியுள்ள இவரது Gleanings: Sri Lankan writing by K.S. Sivakumaran என்னும் கட்டுரையில் பல எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன. பாராட்டுக்கள். ஆனால் முக்கியமானதொருவரின் பெயர் விடுபட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஈழத்துத் தமிழ்ல் இலக்கிய உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்பு பற்றிய முயற்சிகளைப் பற்றிய தகவல்களை மேற்படி கட்டுரையில் காணமுடியவில்லையே. பிரபல பிரெஞ்சு நாவலாசிரியரான எமிலி சோலாவின் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'நாநா'வை ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மொழிபெயர்த்து 'சுதந்திரன்' பத்திரிகையில் தொடராக வெளியிட்டவர் அ.ந.க. அதுமட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தின் தகவற் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் , அப்பிரிவினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா'வில் 'பொம்மை மாநகர் என்றொரு சரித்திர நாவல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்ததாக அறிய முடிகிறது. அத்துடன் '!பேர்ட்ராண்ட்

ரஸ்ஸலின்' 'யூத அராபிய உறவுகள்' அ.ந.கவின் மொழிபெயர்ப்பில்  'இன்சார்ட்' இதழில் வெளிவந்ததாகவும் அறிய முடிகிறது. அ.ந.க.வைப் பற்றிய தனது நினைவுத் தொடரான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத் தொடரில் அந்தனி ஜீவா '...ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில்  சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகம்  போடுமளவிற்கு நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின்  ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்ற அறிஞர் ஆபிகாம் கோவூர்  போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன...' எனக் குறிப்பிடுவார்.  இவையெல்லாம் அ.ந.க மொழிபெயர்ப்புத் துறையில் ஆற்றிய பங்களிப்பினைத் தெரிவிப்பன.  அ.ந.க பற்றிய விரிவான ஆய்வொன்று வெளிவரும் பட்சத்தில் அவரது படைப்புகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென நம்புகின்றோம்.  இந்நிலையில் கட்டுரையாளர் அ.ந.க.வை மறந்து விட்டது துரதிருஷ்ட்டமானது. திரு.கே.எஸ்.சிவகுமாரன் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய தகவல்களையும் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்வாரென எதிர்பார்ப்போம்.

அதே சமயம் மேலும் பலர் மொழிபெயர்ப்பு என்றதும் நினைவுக்கு வருவார்கள்.  அவர்களில் ஒருவர் 'தேவன் - யாழ்ப்பாணம்'. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'மணிபல்லவன்' நாவலை நான் சிறுவனாக இருந்தபொழுது படித்திருக்கின்றேன். 'லூயி ஸ்டீவன்ஸனின்' 'Treasure Island' நாவலின் தமிழ் வடிவமே 'மணிபல்லவம்' இவர இது போல் வேறு பல மொழிபெயர்ப்புகளும்  செய்திருக்கின்றாரா என்று தெரியவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர் தாம் வாழும் நாடுகளின் பேசப்படும் மொழிகளில் வெளிவந்துள்ள படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கின்றார்கள். அவர்களில் சுசீந்திரன் (ஜேர்மனி), உதயணன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜி.நேசனின் மொழிபெயர்ப்பில் 'தாயகம்' சஞ்சிகையில் பிரெஞ்சு எழுத்தாளரும் , இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான 'ஜீன் போல் சார்த்தரின்' (Jean Paul Satire') படைப்பொன்று தொடராக வந்த ஞாபகம்.  வ.ந.கிரிதரனின் மொழிபெயர்ப்பில் கனடாக் கவிஞர்களின் கவிதைகள் சில திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன.  இவ்விதம் பல தமிழ்ப் படைப்பாளிகள் வேறு மொழிகளிலிருந்து பல படைப்புகளைத் தம்மால் முடிந்த வரையில் அவ்வப்போது மொழிபெயர்த்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் வருகின்றார்கள்.

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு எந்தவிதப் பாரபட்சமுமில்லாமல் எழுதப்பட வேண்டும். நேரத்துக்கு நேரம், சமயத்துகேற்றபடி ஒரு சில பெயர்களை அவ்வப்போது உதிர்த்து வரலாற்றினைக் குழப்பும் வேலையினை விமர்சகர்களோ படைப்பாளிகளோ செய்யக்கூடாது. அண்மையில் கூட திசைகளில் வெளிவந்த பேட்டியொன்றில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. ஈழத்து இலக்கியம் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூட மறந்தும் கூட 'அ.ந.க.பற்றி' மூச்சு விடாமலிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும் ஈழத்துப் படைப்பாளிகள் ஒருவரையொருவர் சார்ந்து நின்று ஆலவட்டம் பிடிப்பதை நிறுத்த வேண்டும். எஸ்.பொ. போன்றவர்களின் பெயரை வரலாற்றில் பதிப்பவை அவரது இலக்கியப் படைப்புகளே தவிர இத்தகைய பேட்டிகளல்ல. ஆனால் இத்தகைய பேட்டிகள் ஏனைய படைப்பாளிகளைப் பொறுத்த எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான படைப்பாளிகளை, அவர்களது படைப்புத் திறனை, பங்களிப்பினை அனைவரும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளப் பழகிட வேண்டும். விமர்சகர்கள் தாமரையிலைத் தண்ணீர் போலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் சரியான விமரிசனம் வளரமுடியுமென்பது எனது தாழ்மையான கருத்து.

****************************************************************************

From: "R. Srinivasan vasanth"
To:
Sent: Sunday, January 18, 2004 11:11 PM
Subject: My article.

Dear Pathivukal editor,

I wish to submit my article, which is banned in thinnai. I will make some changes and notes and send it to pathivukal for consideration. I would like to know before that, whether you would be interested in publishing it , given thinnai is a 'friendly magazine'. A copy of the ariticle is already sent, please go through it and see especially whether it has any abuses. I don't have to say, it is clear that
there are purely scientific mathematical issues which has to made clear.I will decide upon sending the artiucle after receiving your reply.

thanks and regards,
anbulla vasanth.

[திண்ணை எமது நட்புக்கும் மதிப்புக்குமுரிய சஞ்சிகை. ஒரு விரிவான விவாதமொன்றினைத் தொடங்கி வைக்க கூடிய சாத்தியமிருப்பதால் பிரசுரிப்பதில் எமக்கு ஆட்சேபனையில்லை. திண்ணைக் குழுவினர் இவ்விடயத்தினைப் பரந்த மனத்துடன் அணுகுவார்களென நாம் நிச்சயமாக நம்புகின்றோம் - ஆசிரியர் -]

****************************************************************************
From: Dr.M.K.Muruganandan
To: NGiri
Sent: Saturday, January 10, 2004 11:16 AM

அன்புள்ள கிரி, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்ற உங்கள் கட்டுரை படித்தேன். மிகவும் காத்திரமானதாக உள்ளது. பாரதி பற்றிய பார்வையில் இது முக்கிய திருப்பம் எனக் கருதுகிறேன். பொதுவுடமை பற்றி பாரதிக்கு ஒரு தெளிவான பார்வை இருத்திருக்க வில்லை என்பது உங்கள் கட்டுரையில் இருந்த எடுத்துக்காட்டல்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. ஆயினும் இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். அன்றைய சூழலில் அவன் இவ்வளவையும் அறிந்து கொண்டதே பெரிதல்லவா? அடுத்த கட்டுரையைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

எம்.கே.எம்.

****************************************************************************
From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To:
Sent: Thursday, January 08, 2004 4:54 AM
Subject: NanRi

அன்பினிய நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, பதிவுகளில் என் நட்பு மண்டலத்திற்கு வெளிச்சம் தந்தமைக்கு மிக்க நன்றி.  நிறைய வாசகர்களின் கடிதங்கள் வந்தன. ஆனால் அதிகமாக பெண்களே  எழுதியிருந்தார்கள். இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு உளவியல் கூறு  என்று நினைக்கின்றேன்.  வரும் ஜனவரி 15-21 வரை world social forum (www.wsf.org) உலக மாநாடு எங்கள் மும்பையில் நடைபெற இருக்கின்றது.  ஒரு பத்திரிகையாளராக நான் அதில்  கலந்து கொள்கின்றேன்.  உங்கள் நண்பர்கள், ஈழத்துச் சகோதரர்கள், படைப்பாளிகள் யாராவது கலந்து  கொண்டால் எனக்குத் தெரிவிக்கவும்.  பதிவுகளின் பணி தொடர்ந்து நடைபெற என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
புதியமாதவி,
[தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு பற்றிய விபரங்களைக் கட்டுரையாகப் பதிவுகளுக்கு அனுப்பி வைக்கலாமே. மேலும் தங்களது ஆக்கம் பற்றிய வாசகர் கடிதங்கள் சிலவற்றைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. அது பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதலாமே. - ஆசிரியர்]

****************************************************************************

From: "Janaki Balakrishnan"
To:
Sent: Monday, January 05, 2004 5:41 PM
Subject: Re: Barthirar Katturaikal......'Selvam'

மதிப்பிற்குரிய கிரிதரன் அவர்கட்கு,தங்கள் பாரதியார் கட்டுரை பற்றிய எனது அபிப்பராயத்திற்கு தாங்கள் அளித்த பதிலுக்கு நன்றி.  அது கண்டதும் மீண்டும் புத்தகங்களை ஆராய்ந்த போது, தாங்கள் தந்தது போலவே எழுதப்பட்டிருந்தது. தங்கள் சிரமம் பாராது,  அவ்விபரம் அளித்ததற்கு நன்றி. தாங்கள் கூறியது போல பாரதியா¡¢ன் முரண்பாடான கருத்துக்கள் வாசகர்களுக்கு சவாலாகவே அமைந்து விடுகின்றன.

நன்றி

ஜானகி பாலகிருஷ்ணன்

****************************************************************************
From: "Janaki Balakrishnan"
To:
Sent: Wednesday, December 31, 2003 3:47 PM
Subject: Re: Response to your review on Barathy


மதிப்பிற்குரிய கிரிதரன் அவர்கட்கு, தங்கள் பாரதியார் கட்டுரை பற்றிய ஆய்வினை அல்லது அலசலை வாசித்தேன். பாரதியார் கட்டுரைகள் என்ற புத்தகம் என் கைவசம் உள்ளது. அக்கடடுரைகளை வாசித்த போது, நானும் ஒரு சில விடயங்களைப் பார்த்து வியந்து பரவசமடைந்தேன். அதேவேளை தங்களுக்கு எழுந்தது போல் கேள்வகளும் எனது மனதில் எழுந்தன. முதலாவதாக, தாங்கள் ”செல்வம்” எனும் கட்டுரையிலிருந்து குறிப்பிட்ட பந்தியை எனது புத்தகத்தினுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, ஓ¡¢ரு வா¢கள் தவிர்த்து மற்றவை அச்சொட்டாக இல்லை. இதனால் அவரது கட்டுரைகள் மறுபிரசுரமாகும் போது, எனது புத்தகம் ஈறாக, ஏனையோ¡¢ன் கைவண்ணம் அதில் பதியலாம் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் சில சமகால நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள், அவ் ஜயப்பாட்டினை அதிகா¢க்க வைக்கிறது. முரண்பாடுகளுக்கு காரணம், இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பதே எனது ஊகம்.

பாரதியாரின்  கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள், செயல்கள், ஈடுபாடுகள் என்பவை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையில் சமூகம் அவருக்கு தகுந்த கெளரவம்  அளிக்கத் தவறியது அல்லது வேண்டுமென்றே நிராகா¢த்தது என்பதையெல்லாம் அறியும் போது, நிச்சயமாக அவர் ஒரு அரசியல் விளக்கங்கள் அறிந்த பொதுநலவாதியாக இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது சுதந்திரப் பாடல்களுடன் பராசக்திப் பாடல்களும், அக்கால நாட்டுநிலைமையும் அவரை ஒரு கவித்துவம் வாய்ந்த  சுதேசியாகவும், தெய்வ பக்தனாகவும் மட்டும் மக்களுக்கு காட்டி, மீதி விடயங்களிலிருந்து ஒதுக்கி வைக்க அவரது அறிவினாலும், திறமையினாலும் பீதியடைந்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.

இன்று அவரைப் பற்றிய பல பிரசுரங்கள் வெளிவருவது என்பதைத் தவிர்க்க முடியாத நிலையில், அவரது சில கூற்றுகள் திரிபடைந்து வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. பாரதியாரைப் பற்றி அவரது மனைவி செல்லம்மா எமுதிய கட்டுரைகள் அல்லது கூறியவை என்று ஒரு புத்தகம் படித்தேன். முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளத் தயக்கமாகவே இருக்கிறது.

எனது புத்தகக் கட்டுரைகளையும், தாங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளையும் பூரணமாக ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். சாத்தியமா?

நன்றி
ஜானகி பாலகிருஷ்ணன்

[ எண்பதுகளில் நான் பாவித்த பாரதியார் கட்டுரைத் தொகுதிகள் தற்சமயம் கைவசமில்லை. அத்தொகுதிகள் நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் பிரசுரமாகியிருக்க வேண்டும். அத்தொகுதிகளில் வெளிவந்த பல கட்டுரைகளில் கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் என்னால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் அடங்கிய எனது கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே என்னிடம் தற்சமயமுள்ளன.  அண்மையில் வெளிவந்த அவரது கட்டுரைத் தொகுதிகளில் சீனி.விசுவநாதனின் 'பாரதியின் கட்டுரைச் செல்வம்' மட்டுமே என்னிடமுள்ளது. அதில் மேற்படி 'செல்வம்' கட்டுரையில்லை. பாரதியின் கட்டுரைகள் பற்றிய மேலதிகள் விபரங்களுக்கு சீனி.விசுவநாதன், 'திசைகள்' மாலன் போன்றோருடன் தொடர்பு கொள்வது பயன் தரலாம்.

மேலும் என்னைப் பொறுத்தவரையில் நான் பாரதியின் மேதமையினை அவனது முரண்பாடுகளினூடு காண்பவன். அவனது முரண்பாடுகளே அவனது தேடலின பரிணாம வளர்ச்சிப் போக்காக இனங்கண்டு கொண்டவன். அதனால் அவனது ஆத்மீக/அறிவியற் தேடல்கள், அவனது அவன் வாழ்ந்த சூழலை மீறிய சிந்தனைகள்,  மெய்யியல், அறிவியல், அரசியல், சமூக அநீதிகள், இயற்கை, பிரபஞ்சம்,சக உயிரினங்கள் என அவனது பரந்த சிந்தனையின் தெளிவுகண்டு பிரமிப்படைபவன். அதனால் ஒரு சிலர் செய்வது போல் அவனது ஒவ்வொரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவனை என்றுமே நான் எடை போட முயன்றதில்லை. அத்தகைய குருடர்களைப் பார்த்து நான் எப்பொழுதுமே சிரிப்பவன். என்னைப் பொறுத்தவரையில் அவனது எழுத்தின் தெளிவு, அறிவு எப்பொழுதுமே ஆட்கொண்டவை.  - ஆசிரியர் -]

மேலதிகத் தகவல்:
ஜனவரி 3, 2004: இன்று தற்செயலாக 'நோர்த் யோர்க்' நூலகத்தின் 'Fairview' கிளையினில் வானதி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட 'மகாகவி பாரதியார் கட்டுரைகள்' பார்த்தேன். இந்நூலில் 'செல்வம்' என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளுள்ளன. அதிலுள்ள இரண்டாவது கட்டுரையே (பக்கம் 477) நான் என் மேற்படி 'பாரதி ஒரு மார்க்ஸிசவாதியா?' என்னும் கட்டுரையில் பாவித்துள்ள கட்டுரை.-ஆசிரியர் -

****************************************************************************

From: Paranirubasingam SRI RANGAN
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, December 24, 2003 7:44 PM
Subject: Kritisieren ற்ber den Artikel von Pathivugal

அன்புடையீர், மீளவும் தங்கள் இணையத்தளப் பதிவுகள் குறித்துக் கருத்துச் சொல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.கிரிதரன் குறிப்பிட்டுள்ள முன்’பின் நவீனத்துவக் கருத்தானதும், ஜெயமோகன் குறித்த அதி அற்புதக் கனவுகளும், தமிழ் மொழிசார்ந்த படைப்புகளும் உணர்வுகளின் எல்லைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.இதைத்தாண்டிப் போகின்ற எழுத்துக்களாக மலர்வதற்கு போதிய ஆற்றலைத் தமிழ்படைப்பாளிகள் மறுத்தே வருகிறார்களென்பதற்கு  பதிவுகளினது பல சுவடுகள் சான்று பகர்கின்றது,இ·து வருந்தத்தக்கது!

தமிழ் மொழிசார்ந்த விடயங்கள் மிகவும் கனதியான மொழிவாரி பிரிக்கப்பட்ட, செயற்றிறனற்ற போக்குகளே இயல்பாகப் போய்விட்டதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனாற்றான் எமது கனவுகளுக்கு படைப்பாற்றலின்றி புகழ்தல்களின் உச்சியில் ஏறிவிடுகறோம். நமது சமகால வரலாற்றில் எவ்வளவோ நடந்துவிட்டது! ஈழத்தினது வாழ் நிலை நம்மில் ஒரு பாரதியையோ, கம்பனையோ’ வள்ளுவனையோ அன்றி பாரதிதாசனையோ உருவாக்காது போய்விட்டது!அறிவைப் பெறுதல்’வழங்குதல் போன்ற கல்வியியல் சார்ந்த நமது மனோபாவம் மிகவும் குறுகியது. இதானாற்றான் நாமே நமக்குக் குறுக்கே நின்று தீங்கிழைக்கின்றோம்.இதன் தொடர்ச்சியாக அறிவு சார்ந்த பற்பல துறைகளை நமது விருப்புக்கேற்றவாறு புரிந்துகொள்கிறோம்.கிரிதரனின் பின் நவீனத்துவம் பற்றிய புரிதலும் இவ் வகைப்பட்டதே.பரந்த தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய அறிதலை முன்’பின் என்றடக்குவது அதன் உள்ளார்ந்த பரிணாமத்தை உள்வாங்காத அதே தமிழ்ப்புலமையை உறுதிப்படுத்தி நிற்க,விஷ்ணுபுரம் வராதது வந்த மா இலக்கியமாகிறது.¦ஐயமோகன் அன்னா கரீனினா படைத்த டால்ஸ்டாய் ஆகிறார்.

இந்தப்போக்கால் தமிழ்(கவனிக்க:தமிழ்நாடல்ல.) நாட்டுப் பேராசிரியப் பெருந்தகை நமக்கு மக்குப்பட்டம் தந்தபடி...

நல்லது. மொழியைப் பற்றி கோதே(ஜேர்மனிய மகாகவி) சொல்கிறான்:”ஓரளவு பிழையின்றி எழுத’வாசிக்க 80 ஆண்டுகள் எனக்குத் தேவைப்பட்டன.”1749இல் பிறந்து 1832 இல் இறந்த கோதேக்கு  சாவதற்கு இரண்டாண்டு முன்பெழுதி Faust துன்பியல் நாடகமே மகாகவியென பேச வைத்ததை அந்த பேராசிரியர் அறிய வாய்புண்டோ?

இரமணிதரன் (சித்தார்...) எழுதும் படைப்புகள்  இந்த 80 ஆண்டுகள் தவத்தை உறுதிப் படுத்த ஐமுனா இராஜேந்திரனோ தினமும் படிப்பான் புத்திஜீவி என்று முற்றுப்புள்ளியிட  நான் மெளனிக்கிறேன், கிரி.

நிறைந்த நேசத்துடன்
ப.வி.ஸ்ரீரங்கன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

['கிரிதரன் குறிப்பிட்டுள்ள முன்’பின் நவீனத்துவக் கருத்தானதும்...' , '..இதன் தொடர்ச்சியாக அறிவு சார்ந்த பற்பல துறைகளை நமது விருப்புக்கேற்றவாறு புரிந்துகொள்கிறோம்.கிரிதரனின் பின் நவீனத்துவம் பற்றிய புரிதலும் இவ் வகைப்பட்டதே.பரந்த தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய அறிதலை முன்’பின் என்றடக்குவது அதன் உள்ளார்ந்த பரிணாமத்தை உள்வாங்காத அதே தமிழ்ப்புலமையை உறுதிப்படுத்தி நிற்க...'  என் நண்பர் ஸ்ரீரங்கன் பொதுவாகக் கூறி விவாதிப்பதை விட, கிரிதரனின் கூறிய விடயங்களை விரிவாகக் குறிப்பிட்டு விவாதத்தினைத் தொடர்வது நன்றாகவிருக்கும்.  மேலும் என்னைப் பொறுத்தவரையில் எனது விருப்புக்கேற்றவாறு புரிந்து கொள்வதில்லை. ஒரு விடயத்தை எனது அறிவுக்கேற்றபடி புரிந்து கொள்ளவே எப்பொழுதும் முயலுகின்றேன். ஒரு சமயம் நான் புரிந்து கொண்ட விடயம் இன்னுமொரு சமயத்தில் அச்சமயத்திலுள்ள என் புரியும் அல்லது விளங்கும் ஆற்றலுக்கேற்ப பிழையானதாக எனக்குப் புரிந்தால் அதனை ஏற்றுக் கொள்வதிலெனக்கு எந்தவிதத் தயக்கமோ அல்லது வெட்கமோ ஏற்படுவதில்லை. விருப்புக்கேற்றபடி புரிந்து கொள்கிறோமென்பதற்கும், அறிவுக்கேற்றபடி புரிந்து கொள்கின்றோமென்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு. இவ்விதம் அறிவுக்கேற்றபடி ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதிலென்ன தவறு இருக்கிறதோ?  உண்மையில் பிரதியொன்றினைப் படைத்ததுமே அதனைப் படைத்த ஆசிரியர் இறந்து விடுகின்றாரென்றும், அதனைக் கட்டுடைத்து ஒருவித Post Mortem செய்வதையே Post Modernism என்றொரு கருத்து கூட நிலவுவதை நண்பர் மறந்து விட்டாரோ? எனவே ஒரு பிரதியினை ஒவ்வொருவரும் தத்தமது அறிவு நிலைக்கேற்ப விளங்கிக் கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. அதன் அர்த்தத்தையே தன் விருப்பத்துக்கேற்றபடி நண்பர் புரிந்து கொள்வதுதான் நண்பரின் கூற்றுப்படியே தவறாகப்படுகிறது. அதே சமயம் எதற்காக நண்பர் இன்னும் தமிழ் நாட்டுப் பேராசிரியப் பெருந்தகையின் மக்குப் பட்டத்தைப்பற்றிக் கவலைப் படுகின்றாரோ! நண்பரே!யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்த்துப் படைப்பதிலென்ன் அர்த்தமிருக்க முடியும். மேலும் பாரதியோ, பாரதிதாசனோ, கம்பனோ ஈழத்தில் இன்னும் தோன்றவில்லையெனக் கவலைப்படுவதும் தேவையற்றதொன்று. அதனைத் தீர்மானிக்க வேண்டியது காலமே தவிர இத்தகைய கூற்றுக்களல்ல. பாரதி இருந்த போதிலல்ல, இறந்த பின்னரே அவனை மாபெரும் கவியாக உலகம் அங்கீகரித்தது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனையோ படைப்பாளிகளைக் காலம் அவர்களது காலத்துக்குப் பின் இனங்கண்டு கொண்ட வரலாறுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றோம். அந்தவகையில் இன்று கண்டு கொள்ளப்படாத பலர் பின்னர் கண்டுகொள்ளப்பட வாய்ப்புகளுள்ளன. இந்நிலையில் இது போன்ற ஆதங்கங்கள் அர்த்தமற்றவை. உண்மையான படைப்பாளி யாருடைய அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. யாருடைய அங்கீகாரத்திற்காகவும் எழுதுவதில்லையென்பதை நண்பர் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான படைப்பாளிகள் கார்ல மார்க்சைப் போன்றிருக்கவேண்டுமென நினைப்பவன் நான். எத்தனை இடர்கள் வந்த போதிலும், வறுமையில் உழன்றபோதும் அவர் தன் இலட்சியமான 'மூலதனம்' படைப்பதிலிருந்தும் பின் வாங்கினாரா? இது போன்ற படைப்பாளிகளும் இலக்கிய ஆய்வாளர்களும் தான் நமக்கு வேண்டுமே தவிர முதுகு சொறிவதற்கும், திடீர்ப்புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, புலமையினைக் காட்டுவதொன்றினையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் இலக்கியக் குருடர்கள் நமக்குத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் இவ்விதம் முகாரி பாடாமல், இருப்பவற்றை விமர்சியுங்கள். தவறுகளிருந்தால் நாணயமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.வளர்வதற்கு இத்தகைய போக்குகளே இன்று அவசியம்.

மேலும் இன்னுமொரு விடயம்..பதிவுகளில் நாம் படைப்பாளிகள் எமக்கு எமக்குரிய எழுத்தினைப் பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கும் படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றோம். புதிய ஊடகமான இணையத்தை அதில் தமிழைப் பாவிப்பதற்குப் படைப்பாளிகள் மிகவும் அக்கறையெடுத்து முயலவேண்டும். இதற்குப் படைப்பாளிகள் காட்டிவரும் ஊக்கம் மதிப்புக்குரியது.  அதே போல் இன்னுமொரு ஆச்சர்யமான விடயத்தினையும் அவதானிக்க முடிந்தது. இணையச் சேவைக்கான செலவு குறைவாயுள்ள மேற்கு நாடுகள் பலவற்றில் வாழும் படைப்பாளிகளில் பலருக்கு இன்னும் தமிழில் எழுதி எவ்விதம் அனுப்புவது என்பது கூடத் தெரியாமலிருக்கிறது. [அதே சமயம் தமிழகம் , இலங்கை போன்ற நாடுகளில் வாழும் பலர் , இணையச் சேவைக்கான கட்டனம் அதிகமாகவுள்ள நாடுகளில் வாழ்ந்த போதும் மிகவும் விருப்புடன், அர்ப்பணிப்புடன் புதிய தொழில் நுட்பத்தினைப் பயின்று ஆர்வத்துடன் தங்களை மிக விரைவாகவே முன்னேற்றி வந்திருக்கின்றார்கள். வருகின்றார்கள்]. இந்நிலை மாறவேண்டுமென நினைக்கின்றோம். இதுபோல் படைப்பாளிகள் இணையத் தொழில் நுட்பத்தினை அதிகமாகப் பயன்படுத்தத் தம்மை வளர்த்தெடுக்க வேண்டுமென நினைக்கின்றோம். ஒரு சாதாரண 500 அல்லது 1000 பிரதிகள் அச்சடித்து ஒரு சில விமர்சக வித்தகர்களுக்கு, கலாநிதிகளுக்கு, பிரபல்ய எழுத்தாளர்களுக்கு மட்டும் அவற்றை அனுப்பி, அதன் மூலம் வரும் மதிப்புரைகளில் குளிர்காய்வதிலும் பார்க்க, ஆயிரக்கணக்கான தீவிர வாசகர்களைப் படைப்பாளிகளை, நாடென்ற எல்லையினை விரைவாகக் கடந்து சென்றடைவதற்கு இணையத்தினால் மட்டுமே முடியும். அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். இந்நிலையில் இணையச் சஞ்சிகைகள் ஆற்றும் பணி அபாரமானது. இதனைப் பாவிக்காத படைப்பாளிகள் ஓர் அரிய சந்தர்ப்பத்தினை நழுவ விட்டு விடுகின்றார்களென்றே கருதுகின்றோம்.

-- வ.ந.கிரிதரன் -]
****************************************************************************
From: madhu mitha
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, December 25, 2003 6:21 AM
Subject: kavidhai

respected editor, I saw this website & this is a good one. great effort.  wish u all the best.

with regards
madhumitha
****************************************************************************
From: pollachi Nasan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, December 24, 2003 9:28 AM
Subject: request

Respected Sir, For the past one week daily
more viewers are looking my web. Now
I came to know the secret,  ie., because of your
wonderful writings about me in your web.
I thank you very much for it. Once
again I want to expose my thanks to you.

Yours friendly,
Pollachi Nasan
Tamil Nadu.
(Tamil karppom was arranged by me  in such
a way for easy learning,  based on programmed
learning and psychological approach )

****************************************************************************
From: Paranirubasingam SRI RANGAN
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, December 22, 2003 11:56 AM
Subject: Info.

அன்புடையீர்,தங்கள் இணையத்தளத்தில் சதாம் கைது பற்றிய குறிப்புப் பார்த்தோம்,தமிழர்கள் இன்னும் விழிக்கவில்லையாவென எண்ணத்தோன்றுகிறது!சதாம் அமெரிக்காவிடம் ஏமாந்த கதை பல பத்திரிகைகளில் பரவலாகப் பேசப்பட்டபின்பும்கூட நாம் எவ்விடம்,எவ்விடம்,புளியடி புளியடி என்றபடி. யு.என்.ஓ வின்ஆயுதபரிசோதர்கள் சதாமை கர்ணனின் நிலைக்குத் தள்ளினார்கள்,மார்புக்கவசம் பறித்த கதை...பின்பு அமெரிக்கா--பாக்தாத் ஒப்பந்தம் அம்போவென்று ஏமாற்றியது, இதன்பிறகு பாக்தாத் வீழ்ச்சியுடன் சதாம் கைதாகிறார்.இங்குதாம் அமெரிக்க அரசியல் வியூகம் செயற்படுகிறது! அமெரிக்கா சதாமை பிடித்து வைத்துக்கொண்டு கதை விட்டது:சதாம்தப்பியோடியதாக. இ·தேன்?

1):சதாமின் அமரிக்க எதிர்ப்புக்கு அடிப்படை வசதியற்ற வாழ்வை வழங்குதல்,மன நெருக்கடியளித்தல்,மூளைச் சலவை செய்தல்

2):சதாமூடாக அமெரிக்காவுக்கெதிராக அறைகூவலிடல்(மூன்று  முறைகளுக்குமேல் ஒலி நாடாக்கள் மூலமாக...)

3):சதாமின் உரை மூலமாக வீச்சப்பெறும் அவரது விசுவாசப்போராளிகளை--ஈராக்கிய தேசிய சக்தியை இனம் கண்டு  கொத்துக்கொத்தாய் கொன்றழித்தல

4):சதாமின் குடுமபத்தை நயவஞ்சகமாகக் கொன்றழித்தல்

5):திட்டமிட்டபடி மன--மூளைச்சிதைவுற்றவுடன் வெளிப்படுத்தி,கைது நாடகமாடி அமெரிக்கர்களையும்,உலகையும் அமெரிக்க இராணுவ மேலாண்மைக்கு ஒத்திசைவாக்குவது.

6):மரணத்தண்டனை நாடகத்தை அவிழ்த்துவிட்டு பீன்பு,யு.என்.ஓ.--உலக வேண்டுகோளுக்குத் தலைவணங்கும் சனநாயகவேடம்போட்டு தன்கறைபடிந்த வரலாற்றை மறைத்து மேற்கொண்டு உலகை ஏப்பமிடல்.

இப்படியாக பல பின்னணிகள்...

நாமோ எங்கோ எதையோ தேடுகீறோம்! எங்கள் வீட்டுப் பிரச்சனைக்கும் இந்த நாடகத்தை அமெரிக்கா நடத்தலாம்,ஆனால்,நாம் விழித்துள்ளோம்?

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்

****************************************************************************
From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To:
Sent: Wednesday, December 03, 2003 9:50 AM
Subject: Re: Your article on "Developing Countries and HousingProblems"


Dear Giri,  I read your article on "Developing Countries and Housing Problems". I admire at your initiative and appreciate your article. It is very timely. In fact, there are many initiatives taken to develop North and East of Sri Lanka. I am a part of a non-profit organization focusing on capacity building in these regions. It involves bringing professionals and their expertise together in countries like this, train and coach local man and woman power, developing projects that are viable with local resources, with the support of foreign and local NGO's partnerships. I went on a tour in Sri Lanka in October. In fact building materials and the trades people are the major concerns. Many displaced communities are undergoing hardships without proper housing and water and sewage facilities.

I am currently holding meeting in small groups with GTA organizations, which help the homeland either to their schools or native places. This helps us to find out, what they are involved in now and what they intend to in the future in short term and long term. Then we plan to hold a bigger meeting.

I am amazed with your ideas and solutions of housing using local resources. In fact, we have to go back to mud and clay for buildings
than cement, because scarcity of cement is a national crisis. Somehow or other many small reservoirs (I mean ponds) have been closed. we need to dig the same or more ones, for reserving rain water. This would give us lots of mud and clay. Further, the climate is very very warm and hot in the North. As such, replacing tiles with our traditional roof is the best alternative. In fact almost all the displaced communities are living in small huts.

Further, there is not much man power in the North, but abundance of
woman power. I think your ideas will help us to use the available
resources very well.

With regards,

J.Balakrishnan
Project Engineer,
****************************************************************************
From: chezhiyan Thillai
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, November 29, 2003 9:57 AM
Subject: to get an informaiton


Hi N.Giritharan, I always read ur web site and also ur presentation is very good.

regards
Chezhiyan
****************************************************************************
From: Ravi subramaniyan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, November 23, 2003 10:02 AM
Subject: vallthukkal


anbana aachiriyarukku vannakkam! inru ungal ithazh padikka mudinthathu. migavum nanraga kondu vanthuleergal.
aannal vishayangal vellamaga irukkirathu. eninum  thamil thodarbana ungal muyarchigalukku enathu vandanangalum vallthukkalum.

Ravisubramaniyan

12/13 Peters Colony, Peters Road
Royapettah, Chennai- 600014
Ph: +91-44-2854 59 37
09444019069
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, November 13, 2003 1:42 PM
Subject: Thanks

அன்புடையீர்! பதிவுகளில் எமது தகவல்களை அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் சேவை தொடர்வதாக. தொடர்ந்தும் தங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகின்றோம்.

என்றும்  அன்புடன்
முல்லை அமுதன்

From: Chandra Selvakumaran
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, October 30, 2003 3:11 AM
Subject: emanudan sandaiyidda paalkari

சி. ஜெயபாரதன்(கனடா) இன் எமனுடன் சண்டையிட்ட  பால்காரி!  சிறுகதை ஒரு கற்பனைக் கதையானாலும் ஒரு வித நகைச்சுவைக் கலப்போடு சுவாரஸ்யமாக இருந்தது.

சந்திரவதனா

************************************
From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Cc: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, October 20, 2003 8:51 AM
Subject: Pathivukal Website


Editor, I'm siva from uk. i been your site really happy to see like this wonderfull tamil site. also most intersting tamil articals..
pray for your all success...

siva.

****************************************************************************
From: "Rajni Ramki"
To:
Sent: Friday, October 17, 2003 6:26 AM
Subject: www.rajinifans.com

Sir, Please visit www.rajinifans.com - The only website
for the fans of Super Star Rajinikanth.  It will be
grateful if you could add the link of
www.rajinifans.com in your site.

Thanking you.

anbudan, J. Rajni Ramki
for www.rajinifans.com

[விரைவில் இணைய அறிமுகத்தில் அறிமுகம் செய்வோம்.- பதிவுகள்-]

****************************************************************************

From: subramania
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, September 28, 2003 12:33 PM
Subject: Dr. Edward Said

அன்பின் பதிவுகள் ஆசிரியருக்கு, பேராசிரியர் எட்வர்ட் சயீட் காலமானதை தமிழ் மக்களுக்கு அறிவித்ததும் அதுபற்றித் தலையங்கம் எழுதியதும் பதிவுகள் செய்த மிகப்பெரிய முக்கியமான பணி. இன ஒடுக்கல் பற்றி ஆதங்கப்படும் யாவர் மனத்திலும் பதிவுகள் முக்கிய இடத்தை இப்பணியினால் பெறுகிறது.

பேராசிரியர் சயீட் அவர்களின் உரை ஒன்றை ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலராடோ மானிலப் பல்கலைக் கழகத்தில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. பலஸ்தீனியர்களின் பிரச்சனைகளை, இஸ்ரேலின் இன ஒடுக்கல்களைப் புறக்கணிக்கும் ஆதரிக்கும் ஊடக ஒலியாளர்களின் வெறுமையான ஆனால் வலிவடைந்த    பிரச்சாரக் குரல்களை மீறி,  அமெரிக்காவில் அறிவு பூர்வமாகவும் பொறுமையை இழக்காமலும் முன் வைக்கும் பேராண்மையை அவரிடம் பார்க்கக்கூடியதாக இருந்தது. உலகில் ஒடுக்கப்படும் மக்கள் யாவரும் அவருடைய அறிவுத் தலைமையினால் ஈர்க்கப்பட்டனர். இவ்வுலகின் மிகப்பெரிய கொடுமைப்பட்டியலில் முன்னிடம் வகிக்கும் பலஸ்தீனியப் பிரச்சனையை அவர் கொடுத்த குரலாலேயே பலம் வாய்ந்த நாடுகளால் புறக்கணிக்க முடியானதொன்றாக அமைந்து போனது.

உலக முழுவதுமான ஓடுக்கப்படும் இனங்கள் அவர் இறப்பினால் அவர்களின் அறிவுக்காவலனை இழக்கிறார்கள்.

ஸ்ரீதரன்

****************************************************************************

From: Chandra Selvakumaran
To: NGiri
Sent: Thursday, September 18, 2003 3:57 PM
Subject: Re: Stories...

நான் பதிவுகளுக்குள் விரும்பி வாசிப்பவைகளில் உங்கள் சிறுகதைகளும் அடங்குகின்றன. தப்பிப்பிழைத்தல் கதையை வாசிக்கையில் ஏதோ ஒரு நெகிழ்வான உணர்வு தோன்றியது. சீதாக்கா கதை நன்றாகப் பிடித்திருந்தது. மனைவி கதை கூட இன்னொரு கோணத்தில யாரும் அதிகமாகத் தொடாத பக்கமாக இருந்தது. இப்படியே உங்களது அனேகமான ஒவ்வொரு கதையுமே யதார்த்தத்துடன் மனதுள் ஒவ்வொரு விதமாக இடம் பிடித்துள்ளன. பாராட்டுக்கள்.

நட்புடன்
சந்திரவதனா

****************************************************************************

From: Jeyaruban Mariadas
To: NGiri
Sent: Monday, September 15, 2003 7:45 PM
Subject: mic - Montreal


அன்பின் கிரிக்கு, பாரதி பற்றிய உங்களின் கட்டுரை படித்தேன். அதில் பல விமர்சனங்கள் எனக்கு இருந்தும் பாராட்டப்படக் கூடியது. எதிர்வினை செய்வதற்கேற்ப எனக்கு பிரபஞ்சம் பற்றிய அறிவு குறைவு. அது தொடர்பாக நான் படித்தது சொற்பம். பாரதி பற்றி ஓரளவு பயின்றிருக்கிறேன். ஆனாலும் எமது விருப்புகளைக் களைந்துப் கொண்டு அவனை விமர்சிக்கக்கூடிய திறன் எனக்கு இன்னமும் கைவரவில்லை. அவனே நான் விரும்பும் கவி.

மிக்க அன்புடன்
மைக்.

****************************************************************************

From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: NGiri
Sent: Sunday, September 14, 2003 12:55 PM
Subject: letter

இம் மாத பதிவுகள் மின் இதழில் வெளியான இரு கட்டுரைகள் என் கவனத்தை ஈர்த்தன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஓவியப் பகுதி மிக முக்கியமானது. ஓவியர் ஐ£வன் பற்றிய குறிப்பும் அவரது ஓவியங்களும் சுவாரஸ்மானவை. எமது தமிழ் வாசகர்களின் ரசனையை விரிந்த எல்லைகளுக்கு இட்டுச் செல்பவை அவை. நு¡லறுந்த பட்டமாகத் தத்தளிக்கும் ஈழத் தமிழ் மக்களின் சோகங்களையும், தமிழ்ப் பெண்களின் கையறு நிலையையும் அவரது ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைஞனின் உள்ளக் குமுறல்களாகப் பதிவு செய்வதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஓவியரே தலைப்புக் கொடுத்தால் நாம் மேலும் கூடிய புரிதலுடன் அணுக உதவும் என நம்புகிறேன். ஆவன செய்யுஙகள்

மாதமாதம் நவீன ஓவியம் பற்றிய சிறு கட்டுரையையும் இணைத்துப் பிரசு¡¢ப்பது எமது ஓவியம் பற்றிய அறிவை வளர்க்கவும் உதவும் அல்லவா?

இரண்டாவது அஐ£வனின் எச்சில் போர்வை குறும்படம் பற்றிய குறிப்பு. உண்மையில் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களின் நிலை பரிதாபமானது. பணம் கொட்டும் பழமரங்களாக எண்ணும் பெற்றோர் மற்றும் உறவினர் இடையே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் நிலையை ஒருசில பெற்றோர்கள் முக்கியமாக சிறு விடுமுறையில் சுற்றுலா விசாவில் நேரிலேயே பார்த்து வந்ததும் உணர்ந்து கலங்குவதைக் கண்டிருக்கிறேன். ஆயினும் பெரும்பாலோருக்கு இவை தொ¢வதில்லை. அல்லது தொ¢ந்தும் தெரியாதது போல் பாசாங்கு பண்ணுகிறார்கள்.

இக்குறும்படம் இலங்கையில் காணக் கிடைக்குமானால்தான் செய்தி சரியான இலக்கை எட்டும்.

இன்னுமொரு விடயம் என்னவென்றால் நல்ல திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் தாம் இலங்கை ரசிகர்களை எட்டுகின்றன. திரைப்படங்கள் அல்ல. இதற்கு யார் உதவ முடியும்.

Dr.எம்.கே.முருகானந்தன்.

****************************************************************************

From: "AJeevan Veerakrthi.TH"
To:
Sent: Saturday, September 06, 2003 5:24 AM
Subject: Short film revew


Dear Giri, thanks for your kind sevice and engaragement for our coming up film makers activities bring your site. Your site is very nice ,very useful.Keep it up.

Thnaks and kind regards
AJeevan

****************************************************************************

From: pollachi Nasan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, September 05, 2003 1:49 PM
Subject: Appriciation

Dear Sir, I go through your web. It is interesting and informative. Lot of informations are loaded with beautiful tamil letters.
I congradulate you for your valuable deeds.

Pollachi Nasan
www.thamizham.net
email. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

From: meena muthu
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, August 24, 2003 8:41 AM
Subject: NanRi !

வணக்கம், நான் அனுப்பியிருந்த 'உயிர்ப்பூ' பற்றிய தகவலை தங்களின்  பதிவுகளில் பிரசுரித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

'பதிவுகள்' என் மனதில் பதிந்து விட்டது ! படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகிறது
இவ்வளவு விஷயங்களா!!! என்று பிரமிப்பாக! புதியமாதவி யின் 'விடியல்' அருமையாக
இருக்கிறது, எதை சொல்வது எதை விடுவது? அத்தனையும் சிறப்பு!

மீண்டும்
நன்றியுடனும்
அன்புடனும்
மீனா.

****************************************************************************

From: "jeevan Thamilchelvam"
To:
Sent: Sunday, August 24, 2003 10:46 AM
Subject: AJeevan


Thanks for your kind support.

with regards
AJeevan

****************************************************************************

From: "puthiyamaadhavi sankaran"
To:
Sent: Friday, August 22, 2003 2:06 PM
Subject: NanRi


அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கும் பதிவுகளில் நூல் வெளியீட்டை செய்தியாகப் பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.  விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 15,16,17 மூன்று நாட்கள் அண்ணன் அறிவுமதியுடன் நிறைய விசயங்கள் இரவு விடிய விடிய உட்கார்ந்து  பேசினோம். முடிந்தால் சிலச் செய்திகளை அவருடன் பேசிக் கொண்டிருந்த விடயங்களைப் பதிவுகளுக்கு
அனுப்பட்டுமா?

நட்புடன்,

புதியமாதவி

[தாராளமாக அனுப்பி வையுங்கள். பதிவுகளின் வாசகர்களும் அறிந்து கொள்ள அது உதவியாக இருக்குமே!
-ஆசிரியர் -]

****************************************************************************

From: "Janaki Balakrishnan"
To:
Sent: Monday, August 11, 2003 4:31 PM
Subject: Re: M Karthigesan Memorial Book Release


Dear Editor,

I am attaching a zip file of Page Maker 7.0. Please see whether you can open and publish. The committee will be very pleased and obliged to you, if you could this for Late M. Karthigesan, a great man who devoted his life for the service of mankind.

Thank you.

On behalf of Memorial Committee
Janaki

****************************************************************************

From: jayaradha
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, August 09, 2003 5:46 AM
Subject: Message From Media Relation & Publicity Commitee FOR TI2003(INTERNATIONAL EVENT)

Dear Sir/Madam, We, the Media Committee are very eager and happy to invite you into the fold of participants in the Sixth Tamil Internet Conference 'TI-2003. We, thank you for the co-operation you have been extending so far in propagating the above message that-IT2003 is going to be held in Chennai on August 22.08.2003 to 24.08.2003.

In continuation of the above, we expect you to involve yourself more in their endeavour. By the way, we expect you to do it by helping us in their mission-by displaying this banner (icon) in the homepage of your Site. We hope that it take this information to all our Tamil brothern who visit your Site.

Note : Check http://www.ambalam.com/sample.html for sample display
The message and relevent imaged are attached along with this mail

Thanks and Regards,
Media Relation & Publicity Commitee

****************************************************************************

From: K Shankar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, August 07, 2003 7:00 AM
Subject: My article in Pathivukal.com


Mr.V.N.Giritharan, Thanks a lot for immediately putting it in the web. i'll send more articles in the future. I'll write continuously on various In future I'll also inform about my Radio/TV shows. By the by AIR, Bangalore is braodcasting my programme with school children on "Creative Thinking" in their primary channel on sunday 10/08 at 9.50 A.M. to 10.10. A.M. I have started getting mails from people.

Thanks and Regards
K Shankar

****************************************************************************

From: 'azhagi' Viswanathan
To: giridharan (pathivukal)
Sent: Tuesday, August 05, 2003 1:42 AM
Subject: vishy here again


Dear Mr.Giri,

I had told about your site to many of my friends and one of my friends (President, Sindhanaich chirpigaL - http://sslindia.org - a social service organisation) writes as below (see his mail pasted below). Well, your site is indeed a 'treasure house' in Tamil.


anbudan,
-vishy

****************************************************************************

From: K Shankar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, August 04, 2003 5:13 AM
Subject: Fw: Message From K Shankar- Bangalore

Dear Mr.Giritharan,

This is  K Shankar, from Bangalore a Tamil living in Blore for the alst 7+ years.

I am a Chartered Mechanical Engineer and an MBA(Marketing) with 23+ years of Corporate experience. Currently I am a Technical, Management and HRD(Training) consultant and also a media writer and speaker in Radio as well as Television. I am doing programmes in DD(podhigai-Tamil) channel on various topics. They are live phone-in programmes. I'll inform you about my next programme.

I am attaching my Tamil speech in Bangalore, All India Radio _Vetri SIgarathai Nokki for u to publish in ur web journal. in future I'll send all my tamil radio and TV works.

I am giving below my URL links for my interviews and other articles in newspapers for ur kind information.


http://www.hinduonnet.com/lf/2002/12/08/stories/2002120800990200.htm
http://www.deccanherald.com/deccanherald/jan29/av4.asp
http://www.deccanherald.com/deccanherald/mar12/av4.asp
http://www.deccanherald.com/deccanherald/may14/av2.asp
Besides I have been delivering lectures both in Tamil and English in various prestigious platforms on various topics such as self-development, Personality Development, Value Based education, Profesionalism in Management and my training topics are more than 50.

please do the needful

regards
K SHNKAR
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Date: 04-08-2003

****************************************************************************

From: 'azhagi' Viswanathan
To: NGiri
Sent: Monday, August 04, 2003 3:06 AM
Subject: PRAYERS - From the bottom of my heart


Dear Mr.Giridharan,

Thanks for your gesture in publishing a FULL PAGE article on 'azhagi' in your popular website, in such a nice and sweet manner.

I should say that your website is just 'overloaded' (with information), just as azhagi is (with features). Its indeed a pleasure to see a site with I find your site very worthy. But, since I have only limited resources (which includes non-availability of 24 hours internet connection in my area and only dial-up - which is very slow and costly), I am unable to be a regular visitor/reader of your site. Thats the plight faced by many in India.

endrendrum anbudan,
- Vishy (Author, AzhagiNo.1)

****************************************************************************

From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, August 02, 2003 9:41 PM
Subject: Big Thanks


Dear Giri,

Thanks for placing our notice regarding Animal farm with picture  When click on uthayam web It is opening possibly some technical error

Thanks
Noel Nadesan
****************************************************************************
From: "kantharaja sivam"
To:
Sent: Friday, August 01, 2003 9:43 AM


ஜெயமோகனுக்கு இணை யாருமில்லை

- மனுஷ்யபுத்திரன் -


இலக்கிய உலகில் தாம் சாதனையாளராக நினைக்கிறவர் யாரென்று  கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம்  கேட்டோம்.

இலக்கிய உலகில் சாதனைகளை ஒரு ஓட்டப்பந்தயத்தில் முடிவு செய்வதுபோல நம்மால் முடிவு செய்ய முடிவதிஇல்லை. ஒரு கடலில் அதன் பிரம்மாண்டமான அலைகளும் சின்னஞ்சிறு மீன்களும் சேர்ந்துதான் கடலாக இருப்பதுபோல , ஒரேயொரு மகத்தான கவிதையை எழுதியவனும் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவனும் இலக்கிய நீரோட்டத்தில் முக்கியமான இடத்தையே வகிக்கின்றனர்.

ஆனால் தன்னளவில் ஓர் இயக்கமாகச் செயல்படும் படைப்பாளிகள் இலக்கியத்தில் ஒரு தீர்மானமான இடத்தை  வகிக்கிறார்கள். அவ்வாறு தானே இயக்கமாக மாறி செயல்பட்ட படைப்பாளிகளாக முந்தைய தலைமுறையில் பாரதி ,பாரதிதாசன் ,ஜெயகாந்தன், சுஜாதா ,சுந்தரமசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களது
படைப்பாளுமையும் வெளிபாட்டுக் களன்களும் முற்றிலும் வேறுவேறானவை. மாறுபட்ட மதிப்பீடுகளைசார்ந்தவை. ஆனால் தாங்கள் இயங்கிய களன்களில் எண்ணற்ற சாத்தியங்களுடன் அழுத்தமான பாதிப்புகளை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

என்னுடைய தலைமுறையில் அவ்வாறு தன்னையே இயக்கமாக மாற்றிக் கொண்டு உக்கிரமாகச் செயல்படும்  படைப்பாளி யார் என்று யோசித்தால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் ஜெயமோகன்தான். கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக நவீனத்தமிழிலக்கியத்தின் பல்வேறு சாதனைகளோடும் சர்ச்சைகளோடும் ஜெயமோகனின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ரப்பர் நாவல் வெளிவந்த போதே ஜெயமோகனின் உக்கிரமான தனித்த படைப்பாளுமை தமிழ் வாசகப்பரப்பால் கவனிக்கப்பட்டது. அதன்பிறகு திசைகளின் நடுவே சிறுகதைதொகுப்பு வெளிவந்தது.தமிழ் கதையுலகில் பல புதிய சாத்தியங்களை அந்த தொகுப்பு திறந்துவிட்டது. பல்வேறு விதமான கதைகளை பிரக்ஞைபூர்வமாக அத்தொகுப்பில் ஜெயமோகன் முயற்சித்திருந்தார்.'விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகனின் படைப்புநிலை தன் உச்ச கட்டங்களை நோக்கி பயணம் செய்தது எனலாம்.தமிழ் நாவலின் எல்லைகளை விஷ்ணுபுரம் ஒரே பாய்ச்சலில் தாண்டிக் கடந்து சென்றது . குடும்பக் கதைகளால் நசித்துப்போன தமிழ் நாவல் இலக்கியத்தில் விஷ்ணுபுரம் ஏற்படுத்திய உடைப்பு மிகத் தீவிரமானது. இந்திய தத்துவ மரபின் மாபெரும் கருத்துப்போராட்டங்களை  விஷ்ணுபுரம் காவியத்தன்மையுடனும் நவீன பிரக்ஞையுடனும் எதிர்கொண்டது. பின்னர் வெளிவந்த பின் தொடரும்  நிழலின் குரல் நாவல் மார்க்சியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட குற்றங்களை மனிதாறம் என்ற நோக்கில் கடுமையாக விமரிசித்தது. தமிழ்ச் சூழலில் அந்த நாவல் பல்வேறு மனோநிலைகளில் விமரிச்சனங்களைச் சந்தித்தது.

இலக்கிய விமரிசகராக ஜெயமோகனின் கருத்துக்கள் முரண்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் நவீன இலக்கியம் குறித்த கருத்துருவாக்கங்களில் ஜெயமோகன் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். 90களில் அரசியல்வாதிகளும் தொழில்முறைகோட்பாட்டாளர்களும் மோஸ்தர்களைப் பிந்தொடர்ந்து செல்பவர்களுமே தமிழில் இலக்கிய விமரிசனத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிரட்டி வந்தனர். இந்தக் காலத்தில் படைப்பின் அழகியல் மற்றும் தத்துவார்த்தத்தை படைப்பியல் நோக்கில் பேசிய ஜெயமோகனின் விமரிசனங்கள் பலவிதங்களிலும் முக்கியமானவை. ஜெயமோகனின் விமரிசனங்களை தனிப்பட்ட உறவுநிலைகள் பாதித்து வந்திருப்பதுதான் அவரது மிகப்பெரிய பலவீனம்.எனினும் இப்பலவீனம் ஏற்படுத்தும் முரண்பாடுகளைத்தாண்டி இலக்கியத்தின் அடிப்படைப்பிரச்சினைகளைப்பற்றி ஜெயமோகன் பல்வேறு  விதங்களிலும் உரையாடிக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு பரந்த தளத்தில் இவ்வுரையாடலை நடத்தக் கூடியப அவருக்கு இணையான இன்னொருவர் தமிழ் இலக்கியத்தின் இன்றைய காலகட்டத்தில் இல்லை .

ஏக்ஜி

குறிப்பு
=====
கல்கி வார இதழில் [ 3.8.03 சாதனை மலர்] வெளிவந்த இக்கட்டுரை என் கருத்துக்கள் போலவே இருக்கிறது. என்னால் இப்படி கோர்வையாக சொல்ல முடியவில்லை.

சிவம் கந்தராஜா

****************************************************************************

From: "ramakrishnan latha"
To:
Sent: Thursday, July 24, 2003 9:24 AM
Subject: thanks


dear mr.giritharan, thanks for publishing about kavidhaikkanam event.

Thanks once again

with regards
latha ramakrishnan

****************************************************************************

From: "V.Bharathi"
To: "NGiri"
Sent: Thursday, July 24, 2003 12:19 AM
Subject: Re:translation


Dear Giritharan, Yes, I found my translations in the latest issue of Pathivugal! Thank you very much for all your efforts on that. As I had mentioned earlier, I have my Tamil translation of Margaret  Laurence's essay, ready for submission. Would you be interested in looking  at it? Unfortunately, I have used the Tam-Porppu fonts for this as well. The following info. may be of interest to you. The conference I attended  in NZ was on the Poetics of Exile. I had presented a paper on the Writing  of the Tamil Diaspora in Tamil.Once I finish revising the paper, I'll send a copy of the same for your comments.

Many thanks and best regards,
Bharathi

****************************************************************************

From: "Abedeen"
To:
Sent: Thursday, July 17, 2003 12:58 AM
Subject: ABEDEEN'S 'IDAM' PUBLISHED


Dear brother

Finally the tiger has come!. Yes my book has come. I shall send a copy soon for your valuable comments.

With love,

H. ABEDEEN

****************************************************************************

From:
To:
Sent: Tuesday, July 15, 2003 2:17 PM
Subject: Accessing Pathivukal Discussion Forum


Anbudaiyeer,

Vanakam.

Sometime back I registered with Pathivukal Discussion Forum. My user id is  pksivakumar. But somehow I forgot my password. Can you please reset my password and let me know the new password. If it is not your job, can you please  redirect me to the right people.

Thanks and regards,
PK Sivakumar

****************************************************************************

From: "jerry kanagarajah"
To:
Sent: Friday, June 27, 2003 11:16 AM
Subject: HI!!!!!!!!!!!!

Vanakam!!!!

Dear Mr. Giritharan,

Many people have written to Kandi Raja and he as too received some money too. He wants to thank you specially for the good work what you did for him.

Thanking you,

May God Bless you,

Jerry Kanagarajah

****************************************************************************

From: Dr. M.K.Muruganandan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, June 17, 2003 12:22 PM
Subject: article


Editor
Padivugal. This is an article writen by me and publised in Mallikai Magazine in Sri Lanka For your view and if possible for publication in your journal

Dr.M.K.Muruganandan
Colombo

****************************************************************************

From: Nadesan
To: NGiri
Sent: Wednesday, June 11, 2003 10:08 PM


Dear Giri
Thank you again for publishing my story in pathivukal I want to pass my personal comment here .

"I do appreciate Pathivukal and you for continually selecting positive news toward the society and politics .It is very commendable job. I always picks up the negatives of the society. May be I was trained in such away? I do find you not updating regular as before .Please keep it up

Anpudan
Noel Nadesan

****************************************************************************

From: "Abedeen Dubai"
To:
Sent: Monday, June 09, 2003 1:19 AM
Subject: Abedeen's New Website Address


Dear brother Giri

My website in geocities (http://www.geociteis.com/hadeen_ncr/) closed
befoere one week by yahoo without any intimation. I don't know the exact reason. My new website address is : http://abedheen.tripod.com/
Please change the url in my Pathivugal's Page
(http://www.geotamil.com/pathivukal/abdeen.html)

affly,

H. Abedeen

****************************************************************************

From: "K. S. Sivakumaran"
To:
Sent: Thursday, June 05, 2003 6:23 AM
Subject: Re: Book Review


Dear Giri:

Many thanks for your review. Your understanding of the medium and the message astonishes me. Your own contributions are greatly appreciated.

K.S.Sivakumaran

****************************************************************************
From: "jerry kanagarajah"
To:
Sent: Wednesday, March 12, 2003 12:01 PM

VANAKKAM !!!

Dear Mr. V.N Giritharan,

I would like to thank you once again for publishing that news artical on your magazine. I do received number of calles and e-mails too.
They all spoke to me friendly way and asked many questions too.

I would like to say that God has given you a gift to write. I am so happy to read your articles and how nicely you have writen them and I am so proud to read about the " Nallur Rajadhani".

J.R.KANAGARAJAH.

****************************************************************************

From: Utilisateur1
Sent: Saturday, February 15, 2003 3:22 AM
Subject: Contribution - Kavithai

நாகரத்தினம் கிருஷ்ணா
10 - rue Hershel
67200 - Strasbourg
France

திருமிகு ஆசிரியர் அவர்கள்
பதிவுகள்

வணக்கத்திற்குரியவருக்கு,

இதுவரை தமிழக வார இதழ்களில் எனது கவிதைகளோ, சிறுகதைகளோ நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பெயரில் மட்டுமே வந்துள்ளது. குங்குமம் மட்டுமே இருமுறை 'பிரான்சிலிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இம்முகவரி அடையாளம் சற்றே நெருடுகிறது. ஆனால் அசௌகரியமெதுவும் இல்லை. இதுபோன்ற தகவல்கள், பதிவுகள் இதழ்களின் எல்லைகடந்த வாசிப்பை அடையாளப்படுத்துமென தாங்கள் விருபினால் தொடரலாம். மறுப்பேதுமில்லை. இன்னொரு உண்மையை பதிவு செய்துகொள்ளவேண்டும். பொதுவாக தமிழகப் படைப்பாளிகள் ஈழத்துப் படைப்பாளிகளை துச்சமாக நினைக்கின்ற பாங்கும், அவ்வாறே ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகத்துப் படைப்பாளிகளை துச்சமாக நினைக்கின்ற நிலை படைப்புலகத்திலிருக்கிறது. நடுநிலையாளர்கள் இரு தரப்பிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். 'பதிவுகள்' இக்குறையினைக் களைந்து, சரியான மதிப்பிட்டுக்கு உதவுமாயின் நன்றி.
வணக்கத்துடன்

நாகரத்தினம் கிருஷ்ணா
[ நண்பருக்கு, தங்கள் கருத்துகளுக்கு நன்றி. பதிவுகளைப் பொறுத்த அளவில் அகன்ற தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளாகத் தான் எல்லாரின் எழுத்துகளையும் பார்ப்பது வழக்கம். அது தவிர நாட்டை வைத்துப் பிரித்துப் பார்த்து மதிப்பிடுவதில் பதிவுகளுக்கு நாட்டமில்லை. ஆ-ர் ]


****************************************************************************

From: Utilisateur1
Sent: Friday, February 14, 2003 1:53 PM
Subject: amrar a.na.kanthasaami

நாகரத்தினம் கிருஷ்னா
பிரான்சு

திருமிகு ஆசிரியர் அவர்கள்
பதிவுகள்

அன்புடையீர்,

அமரர் அ.ந.க. அவர்களின் பெருமைகளை பதிவுகள் மூலமே அறிய நேர்ந்தது. அவரது 'சகலா கலா வல்லமை' யைப் படிக்கையில் பிரம்மிப்பு நேரிடுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல வாழ்ந்து மறைந்த பின்னரும் பேசப்படுவதற்கொப்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மூப்பினுக் கடுத்த எல்லை
மூச்சினை நிறுத்தச் சாய்த்து
தோப்பினில் மரம்வீழ் தல்போல்
தொலைப்புவி பயணம் போவார்!
சீப்புவா ழையிற் கொய்து
தின்றெறிந்திட்ட தோல் போற்
போய், உடலைத் தீக்குள்
பொசுக்கிட மறைவார். தோன்றார்

இப்படி மறைந்தார் கோடி;
என்னினும் அனைவோருள்ளும்
கற்படி சொல்போல் நின்று
கால காலங்கள் யாவும்
இப்புவி வரலாற்றிற்குள்
இருப்பவர் சிலரே....  என செப்பிய கவியரசனுக்கும் மேலாய் தமிழ்ப்பணி ஆற்றியிருக்கின்றார் எனவறிந்ததனால் கண்கள் துளிர்க்கின்றன.

இத்தகு ஈழத்துப் படைப்பாளிகளிடம் எங்களுக்குள்ள( தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு) பந்தம் மேம்போக்கானது.  அது அகற்றப்படவேண்டும். பதிவுகள் அவர்களைப் பற்றி நிறையப் பேசவேண்டும். காத்திருக்கிறோம்.
பணிவுடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

****************************************************************************

From: "JEYARUBAN MARIADAS"
To: "NGiri"
Sent: Tuesday, February 11, 2003 9:42 AM
Subject: Why?????? - From: Mic


அன்பு நண்பருக்கு,
இப்போது ஜமுனாவின் புதிய கட்டுரை பார்த்தேன். அது ஏஜேயின் பார்வை பற்றியது என தீரப் படிக்காது ஓடிப்பார்த்து அறிந்தேன். அதற்கு ஏன் மார்க்குவெஸின் படத்தைப் பிரசுரித்துள்ளீர்கள் என எனக்குப்
புரியவில்லை. ஏஜேயின் பல புகைப்படம் ஈழச்சுவடியில் இருக்கிறது. வாசகர்கட்கு ஏஜேயின் மூஞ்சையை அறிமுகப்படுத்தினால் என்னவாம்???

மிக்க நட்புடன்
மைக்

[ தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி - ஆ-ர் - ]

****************************************************************************

From: "jeevan atluri"
To:
Sent: Monday, February 10, 2003 6:20 PM
Subject: Europe Movies Festival for Final


Dear Mr.Giritharan,
Thanks for your Kind corporation.
I will send some new details to you to publish.
kind greetings
AJeevan
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

From: "JEYARUBAN MARIADAS"
To: "NGiri"
Sent: Thursday, January 30, 2003 10:08 PM
Subject: your new article

அன்பு நண்பர் கிரிக்கு, இப்போது உங்கள் புதிய கட்டுரை 'நெதர்லாந்தில்...'படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஆ/இ என்பவற்றைக் காணவில்லை. பாரதூரமான விபரக் குறையை அந்த எழுத்துக்கள் இன்மை தருகின்றன. நேரமிருக்கும்போது சரியாக்கி விட்டீர்களானால் வாசகர்க்குச் சுகம்.

? ஒரு கேள்வி. சங்கிலியனின் வாரிசான கனகராஜா எப்படி இன்றுவரை கிறிஸ்தவராக இருக்கிறார்? இது உண்மையில் முக்கியமான ஐயமாக எனக்கு இருக்கிறது. மைசூரின் ராஜா சிக்கவீரனின் குடும்பமே
இங்லாந்துக்கு சென்று இன்று ஆங்கிலேயராக மாறிவிட்டனர். ஏன் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் குடும்பமும் இன்று ஆங்கிலேயராகிவிட்டதாக அறிந்தேன். இதைக் கனகராஜாவிடமே கேட்டும் அறிந்து பாருங்கள்..

மிக்க நட்புடன்
மைக்

****************************************************************************

From: "jerry kanagarajah"
To:
Sent: Thursday, January 30, 2003 6:00 AM

I am highly impressedby your website and about Nallur Rajadhani city layout, I can say that you have done a excellent work. I dont think I have seen a website which was made so tasteful than yours. I am really very pleased that you have published my website and deatils about me in your magazine. I am really very honoured.

with warm regards,
Jerry

****************************************************************************
From: "era.murugan achwin"
To:
Sent: Saturday, February 22, 2003 11:12 AM
Subject: from era.murukan - on Kundhavai's short story collection


Dear Giridharan,

How are u? I am indeed happy to observe pathivukal is fast carving a niche for itself in the ezine space. Kudos to u for all yr efforts in giving it a distinct identity.

I am writing this to strike a slightly discordant note asynchronous with one of the articles that appeared in the recent issue of pathivukal - the review of Kundhavai's short story collection by our author-friend Karunakaramoorthy of Berlin.

I am really shocked at the tone and tenor of his artilce - he tends to treat Kundavai as a novice author and goes on listing the 'shortcomings' in her writing, only to wind up in a patronizing tone.

P'haps Karuna may not even know Kundavai is a veteran author or he is just prejudiced against the lady, for reasons better known to only him!

To be frank with you, my knowledge about Eeelam Tamil writters, till an year back was limited to ess.po, ganesalingan, you, yoganathan, karunakaramoorthy, ramanidharan and devakanthan - those whom I know personally.

After I arrived in the UK, I started regularly interacting with Thiru.Padmanabha Iyer who introduced me to the works of a number of other authors - significant among them being Kundhavai, Ranjakumar and Sreedharan.

Just because Kundhavai has written less, her achievements can not be swept under the carpet and she be painted in bad light as done by Karuna. If it is right, then we have to do mete out the same treatment to  the Thamizhagam authors Sampath, Krishnan Nambi
and G.Naagarajan as well, who have also written very less; nonetheless they are still considered major forces in modern Tamil literature by the discerning readers.

I am enclosing my recent article on Kundavai - a slightly revised one of that I wrote in my Inayam newsgroup 'Raayar Kaapi Klub' in Oct 2002 as an intro to Kundhavai's short story collection. I have also added a postscript - not a rejoinder to Karuna but to
place my artilce in the proper perspective. The file is in .txt format using TSCII font.

Warm regards,
era.murukan
Halifax, West Yorkshire, UK

****************************************************************************

From: "Shanmugampillai Jayapalan"
To: "NGiri"
Sent: Tuesday, February 25, 2003 2:28 PM
Subject: PLEASE HELP ME

பிழை திருத்தம்

சில சமயம் நமக்கு நன்கு பரீட்சயமான துறைகள் தொடர்பாக எழுதும்போது இறுமாப்பாக இருந்து விடுகிறோம். அதனால் எங்கள் பிரக்ஞைக்குத் தட்டுப்படாமல் பெரும் தவறுகள் இடம்பெற்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன.   “யாதும் ஊரே” பாடிய கணியன் பூங்குன்றனார் ஈழத்துக் கவிஞர் என்கிற ஒரு கருத்து எவ்வித தரங்களுமின்றி என் மனசுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. அதனால் போலும் எனது பகிரங்கக் கடிதத்தில் “இன்று அகில உலக அரங்குகளில் தமிழ் முழங்கும் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் சங்கக் கவிதை எம் முன்னோரானன பூதந்தேவனார் என்கிற ஈழத்துக் கவிஞரால் சொல்லப் பட்டது”  என்று எழுதி விட்டேன். அதன்பின் அந்த எழுத்துருவை ஆழ்ந்து படிக்கவில்லை. பின்னர் எனது பேர்லின் நண்பர் சுசீந்திரன் மேற்படி தவறு பற்றி குறிப்பிட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அப்படி எழுதியிருக்க முடியாது என்றே முதலில் கருதினேன். எதிர் காலத்தில் இப்படித் தவறுகள் இடம்பெற அனுமதியேன்.  மன்னிக்க வேண்டுகிறேன். மேற்படி பகுதியை “தமிழக சங்கத்தில் கவிதை சொன்ன பூதந்தேவனார் நமது முன்னோடியான ஒரு ஈழத்து கவிஞன்.” என திருத்தி வாசிக்கவும்.

பணிவுடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்

V.I.S.Jayapalan (Poet)
Linderud vaien 15
0594 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 640 487
mobil: 922 5832

****************************************************************************

From: "raghavan parthasarathy"
To:
Sent: Wednesday, February 26, 2003 6:11 AM
Subject: devakottai rastha/pa.raghavan

அன்புள்ள திரு. கிரிதரன் அவர்களுக்கு,

தங்கள் தளத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எத்தனை அர்ப்பணிப்பு தோய்ந்த பணி! தங்கள் பணி மேலும் சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தங்கள் அன்புள்ள,
பா. ராகவன்

****************************************************************************

From: "K. SathyaRajKumar"
To:
Sent: Sunday, April 13, 2003 2:05 PM
Subject: Where are you from


I read your short story "Where are you from". It is  really a good story. You could have removed the last line "idhu eppadi irukku".

[ தங்கள கருத்துக்கும் மடலுக்கும் நன்றிகள். உண்மையில் அந்தச் சிறுகதைக்குத் தாங்கள் கூறியபடி அந்தக் கடைசி வரியின் தேவை தேவையில்லை தான். அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். - ஆசிரியர் -]

****************************************************************************

From: "shanmumam pillai s"
To:
Sent: Wednesday, April 23, 2003 10:26 AM


I came to know this site from Tamil computer . Fine site Kudos The articles of Jeyamohan and Yamuna Rajendran are good. Jeyamohans article on Madhamata saddam is deep and strong.

Shanmukam

****************************************************************************
From: "K. S. Sivakumaran"
To:
Sent: Monday, April 28, 2003 7:52 PM


Dear VNG:

Pathivugal is indeed a desirable e-zine for most of us who long to read about contemporary literary scene in the wide world. Your coverage of the Thamilnadu scene and directions regarding affiliated websites is also welcome. Please keep up your productive endeavour. Personally I am delighted to read and benefit from your presentations in Pathivugal.

Best Wishes.
Siva

****************************************************************************
From: Mathubashini Ragupathy
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, May 21, 2003 12:09 AM
Subject: Thanks...

Thanks for putting all your effort into pathivukal.com & making it a literary website & sharing the knowledge.

Regards
aazhiyaal.

****************************************************************************

From: Kamala Devi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, May 30, 2010 5:40 AM

அன்பின் கிரி, நலமா? பதிவுகள் இதழை, மலையாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன், மலையாளிகளும் இப்பொழுது பதிவுகள் படிக்கத்தொடங்கியுள்ளார்கள்.

அன்புடன்,
கமலாதேவிஅரவிந்தன்.

[வணக்கம் கமலாதேவி: உங்களைப் போன்ற படைப்பாளிகளையிட்டுப் பதிவுகள் மிகவும் பெருமிதமடைகிறது. - ஆசிரியர், பதிவுகள் -}

****************************************************************************
From: aravindan .d
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, May 08, 2010 10:02 AM

திரு. வ.ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். 'நானா' - மொழிபெயர்ப்பு நூல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக் கிடைக்கும் என்றால் பதிப்பகம் பெயர் முகவரி, விலை தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

நன்றி
த.அரவிந்தன்

****************************************************************************

From: Muruganandan Kathiravetpillai
To: Pathivukal Editor ; Pathivukal neew
Sent: Tuesday, March 30, 2010 5:59 AM

அன்புள்ள கிரி. ஈழத்து சமகாலப் படைப்பாளிகளில் தொடர்ச்சியாகவும், மிகவும் அதிகமாகவும் எழுதும் நண்பர் ச்முருகானந்தனுக்கு இது மணிவிழா ஆண்டு. அது தொடர்பான இக்கட்டுரையை பதிவுகளில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். இது வீரகேசரியில் வந்ததின் மீள்பதிவு. போட்டோக்கள் இணைத்துள்ளேன். மருத்துவ கட்டுரைகளை பிரசுரித்ததற்கு நன்றி

எம்.கே.எம்

From: Chandra Ravindran
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, December 01, 2009 6:22 AM

****************************************************************************

பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த 22-11-2009 ஞாயிறு அன்று எனது மறைந்த சகோதரன் கவிஞர் தீட்சண்யன் அவர்களது “தீட்சண்யம்” நூல் வெளியீட்டு நிகழ்வு லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவை தலைமை தாங்கியவர் கவிஞர் பாலரவி அவர்கள் வரவேற்புரையை செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். மற்றும் ஆசியுரை வழங்கியவர்

சிவஸ்ரீ கமலநாதக்குருக்கள் அவர்கள், சிறப்புரைகள் வழங்கியவர்கள் கவிஞர் கந்தையா இராஜமனோகரன் மற்றும் புலவர் சிவநாதன் அவர்கள். ஆய்வுரைகள் வழங்கியவர்கள் ஆய்வாளர் பற்றிமாகரன் மற்றும் திரு.சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் அவர்கள். பதிலுரையும் நன்றியுரையும் கவிஞர்
தீட்சண்யன் அவர்களின் தங்கை திருமதி.சந்திரா இரவீந்திரன் அவர்கள் வழங்கினார். இவ்விழா நிகழ்வின் பார்வை ஒன்றை சில புகைப்படங்களுடன் இத்துடன் இணைத்துள்ளேன். அதனைத் தங்கள் இணையத்தளப் பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கிறேன்.

நன்றி
அன்புடன்
சந்திரா இரவீந்திரன்
லண்டன்.

****************************************************************************
From: puthiyamaadhavi sankaran
To: giritharan pathivukal
Sent: Tuesday, December 01, 2009 1:01 AM

கிரிதரன் நலமா ? என் இணைய எழுத்துகளுக்கு நீங்கள் தான் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். என் எழுத்துகளுக்கு அடையாளம் கொடுத்ததில் பதிவுகளுக்குப் பெரும்பங்குண்டு. இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

சில சமயங்களில் சோர்வு ஏற்படுகிறது. யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று. எந்தக் குழுவும் சாராமல் தனித்து இயங்குவதில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் உடையும் சில மனிதர்களின் பிம்பங்கள் என் போன்ற்வர்களை அதிகமாகவே பாதிக்கின்றன.

அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

நட்புடன்,
புதியமாதவி
மும்பை


****************************************************************************

From: mujeeb rahman
To: pathivukal
Sent: Saturday, November 21, 2009 1:13 AM

அன்புடையீர்! வணக்கம். தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக சர்ச்சைகளும், விவாதங்களும்,படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும் சார்ந்த படைப்புகளுக்காக,விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பின் நவீனத்துவம் சார்ந்த கலை,இலக்கியம்,சினிமா,கோட்பாடு,பின்காலனியம் உட்பட்ட அனைத்து வகையான இயல்களையும் ஆர்வமுடையவர் பங்களிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
வலைதள முகவரி:www.pinnaveenathuvam.wordpress.com
தொடர்பு இமெயில்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
New Delhi

****************************************************************************
From: sandhya giridhar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, November 08, 2009 9:50 AM

Respected Giritharan, After a long gap I am sending one article typed in amudam font for your esteemed magazine.

With regards,
Sandhya Giridhar

****************************************************************************
From: thamizha nambi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, October 24, 2009 8:50 AM

வணக்கம். பலருக்கும் பயன்படும் வகையிலான 'நிறுத்தக்குறிகளும் பயன்படுத்தமும்' என்னும் கட்டுரையை விடுத்துள்ளேன். 'யுனிகோடு - லதா' எழுத்துரு பயன்படுத்தியுள்ளேன்.

அன்பன்,
தமிழநம்பி.

****************************************************************************

From: "mani kandan"
To:
Sent: Sunday, October 18, 2009 9:47 AM

அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். தங்கள் பதிவுகள் இணைய இதழைப் படித்து வருகின்றேன். மாணவர்களுக்கும் தெளிவாக எடுத்து விளக்குகின்றேன். நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாவைப்பற்றிய கட்டுரையை எழுதியுள்ளேன். அவரது நூற்றாண்டு விழா என்பதால் இக்கட்டுரையை எழுதியுள்ளேன். நான் தற்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர்
கல்லூரியில் பணியாற்றி வருகின்றேன்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
விரிவுரையாளர்

****************************************************************************

From: அகநாழிகை
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, October 18, 2009 11:24 PM

அன்புள்ள திரு.வ.ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். தமிழிலக்கியச் சூழலில் புதிய சிற்றிதழாக ‘அகநாழிகை‘ சமூக கலை இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவருகிறது.

மிக்க அன்புடன்,
பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வலைத்தளம் : http://www.aganazhigai.com

****************************************************************************
From: Kamala Devi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, October 17, 2009 8:14 PM

அன்பின் கிரிதரன், தங்களின் சுய விமர்சனம் கட்டுரை மிக சிறப்பாக உள்ளது. நிகழ்விலக்கியத்தில் இது அழகிய பரிமாணம். மலையாளத்தில் இப்பொழுது இத்தகு கட்டுரைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்

மனமுவந்த வாழ்த்துக்கள்.
கம்லாதேவிஅரவிந்தன்.சிங்கப்பூர்.
http://www.kamalagaanam.blogspot.comFrom:

****************************************************************************

"ramakrishnan latha"
To:
Sent: Friday, September 11, 2009 11:34 AM
Subject: pudhupunal - amonthly literary magazine

மதிப்பிற்குரியீர், ஒரு புதிய மாத இதழ் - பன்முகம் இலக்கியக் காலாண்டிதழை முனைப்பாக நடத்திய திரு.ஆர். ரவிச்சந்திரனின் புதுப்புனல் பதிப்பகத்திலிருந்து இந்த மாதம் முதல் வெளிவர ஆரம்பித்துள்ளது. அது குறித்த விவரங்களை தங்களுடைய பத்திரிகையில் வெளியிட்டு உதவுமாறு திரு. ரவிச்சந்திரன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்

****************************************************************************

From: "na vin"
To:
Cc:
Sent: Friday, September 04, 2009 10:27 AM
Subject: க‌லை இல‌க்கிய‌ விழா

ம‌திப்புமிகு ப‌திவுக‌ள் ஆசிரிய‌ருக்கு . ம‌லேசியாவில் வ‌ல்லின‌ம் இத‌ழ் ஏற்பாட்டில் நிக‌ழ்ந்த‌ க‌லை இல‌க்கிய‌ விழாவை த‌ங்க‌ள் இணைய‌ இத‌ழில் ப‌திவு செய்யுமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

ம‌.ந‌வீன்
vallinam.com.my

****************************************************************************

From: Balachandran Suppiramaniam
To: Giritharan
Sent: Friday, September 04, 2009 8:11 PM
Subject: My Novel Release

அன்புக்குரியவர்களே எனது நாவலான"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் 3ந்திகதி, ரொரன்ரோவில் வெளியிடப்படவிருக்கிறது. உங்களை அன்புடன் அழைக்கிறேன். இணைப்பைப்பாருங்கள்
நன்றி
கே.எஸ்.பாலச்சந்திரன்

****************************************************************************

From:
To:
Sent: Friday, September 04, 2009 3:09 AM

Dear Editor, Mrs. Navajothy Yogaratnam brought to my notice about the article that she wrote and you have published in your popular website pathivukal.com about me to remember my seventy-fifth birthday year.

I feel grateful to her and to you for the honour. The facts stated in the article will no doubt inspire me to be of greater service to our Tamil language and literature and to our great Tamil people who are forging ahead and doing their best despite the many problems that have been unjustifyably imposed on them in recent decades.

I am sorry I have not equipped and trained myself to type in Tamil Unicode as yet, although, as you would appreciate, I do write poems and articles in Tamil almost daily using my favourite Bamini, Aabohi and Tamil fonts.

Thanks again. Please keep up your brilliant work.

Professor Kopan Mahadeva.

--------------------------------------------------------------

From: thamizha nambi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, September 03, 2009 7:16 AM
Subject: நன்றி

வணக்கம். நான் நா.பார்த்தசாரதியின் 'மொழியின் வழியே' என்ற இலக்கியக் கட்டுரையைப விடுத்திருந்தேன்.  அக்கட்டுரையைப் பிழையின்றி அழகாகப் படங்களுடன் பதிவுகளில் (செப். '09) வெளியிட்டு இருக்கின்றீர்கள். நெஞ்சார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பன்,
தமிழநம்பி.

--------------------------------------------------------------

From: thamizha nambi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, August 11, 2009 12:32 AM
Subject:

வணக்கம். நான் "பதிவுகள்" மின்னிதழுக்குப் புதியவன். அண்மையில்தான் பார்த்தேன்; படித்தேன். இதழின் அமைப்பும் உட்பொருள்களும் மிகவும் ஈர்க்கும் வகையில் இருந்தன.

அன்பன்,
தமிழநம்பி.

****************************************************************************
From: thilaga bama
To: va.na.giri Giri ; NAVARATMAM GIRITHRAN
Sent: Thursday, June 11, 2009 12:19 PM
Subject: puthiya valaip pakkam

www.thilagabama.com நண்பர்களே, எனது வலைப்பூவான www.mathibama.blogspot.com தற்போது www.thilagabama.com என்ற முகவரிக்கு மாற்றப் பட்டிருக்கின்றது

அன்புடன்
thilagabama
mathi hospital
15/1arumugam road
sivakasi 626123
9443124688


****************************************************************************

Sent: Tuesday, June 09, 2009 9:32 AM
Subject: blog sindhanai thuligal

Respected Giritharan, I am really thankful for publishing my articles in pathivukal. Pathivukal magazine is the only magazine which updates my knowledge in every field. Really your noble service is appreciable and I consider myself as one of the luckiest person for having connected with Pathivukal. Expecting reply

With warm regards,
Sandhya Giridhar

****************************************************************************

From: Muruganandan Kathiravetpillai
To: Pathivukal ; Pathivukal New
Sent: Monday, April 06, 2009 12:17 PM
Subject: French (Canadian) Film review

அன்புள்ள கிரி, இத்துடன் நான் அண்மையில் பார்த்த பிரென்சு திரைப்படம் பற்றிய விமரிசனம் அனுப்புகிறேன். பதிலுகளுக்குப் பயன்படும் என நம்புகிறேன். நன்றி

Regards,
Dr.M.K.Muruganandan
Family Physician

****************************************************************************
From: s.kalpana
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, February 14, 2009 2:27 AM

வணக்கம் இணைய அறிமுகத்தில் இணைய தளங்களை அறிமுகப்படுத்துவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. www.kalpanase.blogspot.com  என்ற தளத்தினை அறிமுகப்படுத்தும் படிக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

****************************************************************************

From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, November 20, 2008 1:09 AM
Subject: Vimbam-Report

அன்புடன் கிரிதரனுக்கு, விம்பம் போட்டி முடிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன். தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றியுடன்
கே.கே.ராஜா

****************************************************************************

From: susila ma
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, November 03, 2008 2:30 AM
Subject: blog

அன்புடையீர்,வணக்கம்.நவ.2 முதல் என் பெயரில் ஒரு வலைப்பதிவு தொடங்கியுள்ளேன்.எனக்கு வாழ்த்து கூறி வழி நடத்த அன்புடன் வேண்டுகிறேன்.எம்.ஏ.சுசீலா.புது தில்லி.www. masusila.blogspot.com

****************************************************************************

From: மு இளங்கோவன்
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, September 27, 2008 9:53 PM
Subject: letter

அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம் மலேசியத் தமிழறிஞர் முனைவர் முரசு.மெடுமாறன் அவர்களின் வாழ்க்கையை அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 1 என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன் தமிழ் ஓசை நாளிதழில் களஞ்சியம் பகுதியில் இன்று(28.09.2008) வெளிவந்துள்ளது..அதன் முழுமையான வடிவை என் இணையப்பக்கதில் காணலாம்.
காணவும்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா


****************************************************************************

From: Ponniah Karunaharamoorthy
To: Magazine Pathivukal
Sent: Saturday, August 30, 2008 11:15 AM
Subject: M.K.Karunanithy

அன்புடன் கிரிதரன் அவர்களுக்கு! கடல் கடந்த ஒரு தமிழனின் பார்வையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பற்றி ஒரு நூல்வெளியிடுவது எனது நெடுங்கால எண்ணங்களிலொன்று. எனது யோசனையை வெளியிட்டபோது வேறும் பல இலக்கியத் தோழர்களும் என்னை ஊக்கி உற்சாகம் தந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எழுத தயங்கும் விஷயங்களை நாம் போட்டுடைத்தாற்போல எழுதிவிடுவோமல்லவா?
இது நிச்சயம் ஒரு போற்றலாகவோ தூற்றலாகவோ இராது. அவை இரண்டினாலும் எனக்கு ஆகவேண்டியதும் எதுவுமில்லை.

கலைஞர் இந்திய தமிழர்களுக்கு - ஈழத்தமிழர்களுக்கு - உலகத்தமிழர்களுக்கு - தமிழுக்கு - கலைக்கு - இலக்கியத்துக்கு - அரசியலில் - செய்தது - செய்யாதது - செய்யவேண்டியது என்கிறவகையில் அவர்மீதான ஒரு நிறைவான விமர்சனமாக நூலாக அமைய என்னால் ஆனமட்டும் சிரத்தை கொள்வேன்.

சில ஆண்டுகளாக மேற்படி நூலுக்கான விஷயங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளேன். இம் முன்வரைபின் பிரதியில் சேர்க்கப்பொருத்தமான நீங்கள் தனிப்பட்டமுறையில் அவர்பற்றி அறிந்திருக்கக் கூடிய ஏதாவது விடயங்கள் பற்றி, அல்லது சேர்க்கப்பட்டால் நல்லது என்று கருதும் விடயங்கள் பற்றி அல்லது நான் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு ஏதாவது பதிவுகளில்/பிரதிகளில் குறிப்பிடப்படும் விடயங்கள் பற்றிய விபரங்களைத் தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறேன்.

கூடவே இன்னொரு சிந்தனையும் எல்லாக்கட்டுரைகளையும் நானே தனியாக எழுதாமல் ஐந்தாறு கடல்கடந்தவர்களினது கட்டுரைத் தொகுப்பாகவும் ஆக்கலாம். இம்முயற்சி பற்றியும் இன்னும் இந்நூல் எப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதுபற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் கோருகின்றேன்.

நன்றி.
இவ்வண்

--------------------------------------------------------------

From: RISHANTHAN S
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, August 19, 2008 11:19 AM
Subject: றிசாந்தன்

வணக்கம் உங்களின் கட்டுரை அபாரம்.நீங்கள் ஆதாரத்துடன் எல்லா நிகழ்வுகளினையும் அலசுவது நன்றாக உள்ளது

நன்றி .
சி.றிசாந்தன்

****************************************************************************

To: |athi
Sent: Thursday, July 24, 2008 3:33 PM
Subject: Ishaq puthaka veliyeettu viza azaippu

அன்பிற்கினிய தோழர்களே. எனது கவிதை நூலின் வெளியீட்டு விழா அழைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் பார்வைக்காக.. தங்கள் இதழில் அழைப்பை வெளியிட்டு உதவுங்கள்

அன்பு
இசாக்

"thamizum nAmum vERalla
thamizh thAn namakku vEr"
pEsa//+971 50 4804113
http//www.iishaq.blogspot.com
http://www.thai.tamilveli.com
http://www.keetru.com http://www.vaarppu.com

****************************************************************************
From: mani kandan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, July 12, 2008 2:42 AM
Subject: nalam

அன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு என் இதமான வணக்கம். மகிழ்ச்சியுடன் உள்ளேன். நலாமா நலமறிய ஆவல். வீட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா? இதழில் பல இல்க்கியக் கட்டுரைகள் நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளன. கவிதை திறனாய்வுகள் என் எல்லாம் தமிழுக்கு வலம் சேர்ப்பதாக உள்ள்ன. மேலும் இன்னும் வளர எங்களது பங்களிப்பு என்றும் உண்டு என்பதையும்
தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
விரிவுரையளர்
தேசியக்கல்லுரி
திருச்சிராப்பள்ளி
தமிழ்னாடு
இந்தியா.

****************************************************************************--------------------------------------------------------------

From: muthu nilavan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, July 18, 2008 2:13 PM
Subject: "Pathivukal'' - ithazil nikazvukal Pakuthikku :short story competition

பெறுநர்: ஆசிரியர் குழு நண்பர்கள், “பதிவுகள்”- இணையத் தமிழ் இதழ் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய “பதிவுகள்”ஆசிரியர் குழுவினர்க்கு வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2007இல், தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் காட்டிய ஆர்வம்
காரணமாக உலக அளவில் நல்ல ஆதரவு கிடைத்தது. வந்திருந்த 382 கதைகளில் 30க்கு மேற்பட்ட கதைகள் வெளிநாடுகளிலிருந்தே – மின்னஞ்சல் வழியாகவும், மண்ணஞ்சல் வழியாகவும் - வந்திருந்தன என்பதை, தங்களுக்கு நான்எழுதிய 18-09-2007 நாளிட்ட கடிதத்தில் நன்றியுடன் தெரிவித்திருந்தேன். அதற்குக் காரணம் இணைய இதழ்களில் போட்டி விவரம் வெளிவந்ததே!

கடந்த ஆண்டின் பரிசளிப்புவிழாவும் சிறப்பாக நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன்,, இந்திய அரசின் இணைஅமைச்சர் ரகுபதி, திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் முதலானோருடன், நினைவில் வாழும் எழுத்தாளர் கந்தர்வன் அவர்களுடைய துணைவியார், இரண்டு மகள்கள்-அவர்தம் கணவர் குழந்தைகளுடன், எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச்செயலரும் கலந்து கொண்டு, தேர்வுபெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகையை வழங்கியது என்றும் நினைவில் நிற்கக் கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.

“கந்தர்வன் நினைவாக, த.மு.எ.ச.நடத்தும் சிறுகதைப்போட்டி” அறிவிப்பை கடந்தஆண்டு வெளியிட்டுத் தந்தது போலவே இந்தஆண்டும் வெளியிட்டு, போட்டி விவரத்தினை உலகெங்;கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்கள் உதவவேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரியினையும் தவறாமல் குறிப்பிடவேண்டுகிறேன்.

வணக்கம்.
தங்கள் தோழமையுள்ள,
நா.முத்து நிலவன்
18-07-2008

****************************************************************************
From: Maravanpulavu K. Sachithananthan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, June 29, 2008 12:04 PM
Subject: போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய தொண்டு

அன்புடையீர், வணக்கம். மின்னம்பல தளம் அமைத்துத் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தாங்கள் ஆற்றி வரும் அளப்பரிய தொண்டு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

1. தமிழ்நூல் விற்பனைத் தளங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள். www.tamilnool.com தளத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது என் கடன். அனைத்துப் பதிப்பாளரிடமும் இருப்பிலும் விற்பனைக்குமிருக்கும் ஏறத்தாழ 40,000 தலைப்புகளை 80 பாட வாரியாகப் பகுத்து, தேடலை எளிதாக்க, தட்டச்சுத் தேடலை அறிமுகம் செய்து, தலைப்பையோ, ஆசிரியரையோ, பாட வகையோ கொண்டு தேடும் வசதியைக் கொடுத்து, தேடிக் கிடைத்த நூலைக் கூடைக்குள் ஒவ்வான்றாகப் போட்டுச் சேர்ந்ததும் பெயர் முகவரி முதலியன சேர்த்து உறுதி செய்தால் உடன் அப்பட்டியல் சென்னை காந்தளகத்துக்கு வரும், இருப்பு மற்றும் விலை, பொதி கூலி விசாரித்து உடனுக்குடன் பதிலில் கூறுவிலை அனுப்பி வைக்கிறோம். பணம் அனுபியதும் நூல்களை உரியவாறு அனுப்புகிறோம். ஏறத்தாழ 60 நாடுகளில் வாழும் தமிழரும் தமிழரல்லாதோரும் பயனடைகின்றனர்.

2.

அவ்வாறே உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்காகவும், சைவர்களுக்காகவும் தமிழ் தெரியாத, ஆனால் திருமுறைகளைப் பயில விளையும் பிற மொழியாளருக்காகவும் பன்னிரு திருமுறையின் 1256 தலைப்புகளுள் அடங்கும் 18,246 பாடல்களை www.thevaaram.org மின்னம்பல தளத்தில் வெளியிட்டு உள்ளோம். பாடல்பெற்ற 285 கோயில்களின் வரலாறும் பாடியருளிய 27 ஆசிரியர்களின் வரலாறும் உண்டு. பாடலின் முதற் சொல்லையோ, இடையில் உள்ள ஒரு சொல்லையோ தெரிந்த ஒருவர், அச்சொல்லைத் தட்டச்சுச் செய்து பாடலை, பதிகத்தை, ஆதிரியரை, கோயலை தேடும் வசதியை உள்ளடக்கினோம். 18,246 பாடல்களுக்கும் பொழிப்புரை உண்டு, குறிப்புரை உண்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. வடமொழி மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளையும் தேடிச் சேர்க்கிறோம். பிற மொழிபெயர்ப்புகளையும் தேடுகிறோம். தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, பர்மியம், சீயம், யப்பான், உருசியன், ஆபிரிக்கான்சு, மலாய், இந்தோனீசியா, பிடிசின், கிறியோல், சுவாகிலி, ஆங்கிலம் ஆகிய வரிவடிவங்களில் ஒலிபெயர்த்துத் தந்துள்ளோம். தமிழ்ச் சொல்லையோ தொடரையோ மேற்காணும் மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் கருவியை அத்தளத்தில் அடக்கி உள்ளோம்.
3.

இந்த இரு தளங்களைச் சென்று பாருங்கள். தமிழருக்குப் பயனுறும் எனக் கருதினால் உங்கள் தளத்தில் இணைப்புக் கொடுங்கள்.
நன்றி

அன்புடன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

****************************************************************************
From: Vijaya Bharati
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, June 15, 2008 2:25 PM
Subject: Greetings from S Vijaya Bharati, C Subramania Bharati's granddaughter. ...

Sir, I attach information about the Standard Edition of C Subramania Bharati's Works Volume 1 Desiya Githangal (2008) edited by me. I will be grateful to you, if you publicise the information in your e-magazine, Pathivugal. However, our purpose is NOT to raise money at any cost, and, therefore, Sri Lankan Tamil refugees living in many parts of Canada, who may be facing financial hardship, should be discouraged from  subscribing to the book (on account of their devotion to my grandfather, the Mahakavi)! Thank you, and best wishes,

S Vijaya Bharati Vancouver 604-221-5195
P K Sundara Rajan/ S Vijaya Bharati
"West Hampstead"
6 - 5760 Hampton Place
Vancouver, BC
Canada V6T 2G1

****************************************************************************
From: Navina Virutcham
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, June 10, 2008 1:27 PM
Subject: [Bulk] Re: நவீன விருட்சம் - Blog

அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் பதிவுகள் இதழில் விருட்சம் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி. ஆனால் என் பெயரை மட்டும் அழகியசிங்கர் என்பதற்குப் பதில் அழகியசங்கர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். தயவுசெய்து அழகியசிங்கர் என்ற பெயருக்கு மாற்றவும்

அன்புடன்
அழகியசிங்கர்

****************************************************************************
From: mani kandan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, June 06, 2008 2:06 AM

அன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இதழில் வரும் செய்திகள் எமது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கின்றன். எமது கட்டுரையை வெளியிட்டதற்குப் பதிவுகள் ஆசிரியருக்கு எமது உள்ளபூர்வமன நன்றிகள்

அன்புடன்
உங்கள்
இணைய வாசகன்
முனைவர் துரை.மணிகண்டன்.

From: Anamika Pritima
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, March 03, 2008 9:36 AM
Subject:  Kavithaigal annupugiren....

Vanakkam !. Thangalathu innaiya veliyedai naan vegu kaalammaga padithu varugiren. Migavum nanraga irukirathu, kurippaga kavithaigal. Ithudan
ennathu 3 kavithaigallaiyum innaithullen (attachment).

Miguthna nandrikaludan.- அனாமிகா பிரித்திமா ( Anamika Pritima)
E-mail address : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

From: sandhya giridhar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, March 14, 2008 10:06 AM
Subject: letter

An article about Sujatha ranganathan is a good article. Most of the recent artciles published in pathivugal are written with fine touching sense and I really appreciate for this noble deed as well as enriching readers' knowledge.

With regards,
Sandhya Giridhar
New Delhi

****************************************************************************

From: S.Kuneswaran Subramaniam
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, April 05, 2008 3:18 AM
Subject: kavithai.

சு. குணேஸ்வரன்
அல்வாய்.
யாழ்ப்பாணம்
04.04.2008

வ. ந. கிரிதரன் அவர்கள்,
ஆசிரியர், பதிவுகள் இணைய இதழ்.

வணக்கம், பதிவுகள் இணைய இதழைப் பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன். பதிவுகள் பல பயனள்ள படைப்புக்களைத் தாங்கி வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எனது புலம்பெயர் படைப்புக்கள் பற்றிய ஆய்வுத் தேவைக்கு பதிவுகளில் இருந்து பல கட்டுரைகள் உதவியிருந்தன. நான் 'துவாரகன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகள் வார்ப்பு, திண்ணை ஆகிய இணைய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகளுக்கு நான் முதல் முதல் அனுப்பும் படைப்பு இதுதான். இத்துடன் 'முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்' என்ற கவிதையினை அனுப்பி வைத்துள்ளேன்.

நன்றி


****************************************************************************
From: kanapathippillai subramaniam
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, April 21, 2008 9:24 AM
Subject: Reply > after reading pathivukal .com

Dear sir, Pathivukal.com is a good web site for all ages, i read this and learned a lot, in free time its good to see this web site i had read disees and medicins which was writen by Dr.Muruganandam thankyou and good wishes

your's truly
k.s.m

****************************************************************************

From: thillai murali
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, April 26, 2008 2:15 AM
Subject: thamizhmail.com


அன்புடையீர் வணக்கம்.

நாங்கள் தமிழ்மெயில்.காம் என்ற இணையதளத்தை நடத்துகிறோம். தங்கள் இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

அன்புடன்
தி.முரளி

****************************************************************************
From: Para Sundha
To: Giritharan Navaratnam
Sent: Friday, January 11, 2008 10:05 PM
Subject: canadavil' bharathiyaar

the bharathi vilaa revieiwed in your web site is very encouraging. i did not know bharathiyaar had translated into english some literary works. it would be good if you can publish some. recently i saw some translations of swamy vipulanandar's poems , including vellai nira mallikaiyo by mrs balam lakshmanan from melbourne. this is the only way our next generation will understand the greatness of our heritage, pongal vaalththukkal. anpudan aun


****************************************************************************
From: Jeya Arunagirinathan
Sent: Tue 12/18/2007 3:10 PM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: A Request....

Dear Editor, I have been browsing through your pages and I think they are extremely impressive. I congratulate you for your services to the Tamil Diaspora living in the west and also in Sri Lanka. I have studied Music in Sri Lanka and also in India. When I came to live in the UK, I went to SOAS, University of London and have done degrees in Religious Studies and Music and currently working as a lecturer at Tower Hamlets College, London. Moreover, I work as the chief examiner for the Oriental Fine Arts Academy of London.

I have written a book last year and it is being a source book for the academia, which pursue their career in the field of Art and Literature. I have attached a copy of the review on my book published last year. It has been written by the wife of famous Tamil scholar, Archaeologist and Musicologist Dr. John Marr's wife Windy Marr. She is also a renowned scholar in the same disciplines and actively working in the field of Art criticism.

In addition to these, I have also attached my book cover and I would appreciate if you could include this in your introductory pages.

I look forward to your reply and thank you so much.

Yours faithfully
Jeya Alaki Arunagirinathan


****************************************************************************

From: subbu raj
To: Pathivukal
Sent: Tuesday, November 13, 2007 5:28 AM
Subject: Tamil Articles for you review & Publication

Dear Sir, Thank you very much for publishing my Tamil Short Storey - Veeratrup pookiravarkal.
Thanks & Regards
S.Subburaj

****************************************************************************
From: thillaimurali
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, October 18, 2007 5:30 AM
Subject: aadhi

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு வணக்கம் ஆதி இதழ் பற்றி அறிவிப்பை பதிவுகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி. அன்புடன் தி.முரளி

****************************************************************************

From: durai raj
To: v.n giri
Sent: Monday, October 15, 2007 8:04 AM
Subject: reg. publication of dissertation

Dear sir , Happy to see my dissertation being published in your website. I thank you so much for considering and appreciating my work. As i continously browse your website, it helps me by providing many valuable informations. I once again thank you for taking my work to the view of the public.

Thank you
with regards
M.Durairaj

****************************************************************************
From: akil dharani
To: Giritharan Navaratnam
Sent: Tuesday, October 09, 2007 12:36 PM
Subject: Re: Randamoozham

Dear brother, I saw my paper in the magazine with my photograph. I am really grateful to u for this. It has come out well. The picture of the front page of a book is an apt addition. Really u have done a marvellous work. The magazine has come out well. I was going through the magazine. it was interesting to read about Margaret Duras' translated work, about Anthony Jeeva, Rajeswari Balasubramaniam on 'Gandhi, My father' Ur magazine is a multifaceted one which discusses politics, social reality, life in Canada and America, literature and so on. Really it is informative. I'll try to give more number of worthy articles to the magazine in the future.

Thank u once again.
R.Dharani

****************************************************************************
From: "K.S. Sivakumaran"
To: "V.N. Giritharan"
Sent: Sunday, October 07, 2007 3:27 AM
Subject: Thamayanthi Giritharan's Blog

Dear VNG:
I was curious to know more about Toronto although I had visited this place more than once, when I saw an account of Toronto in an easy readable, affable and conversational style by young Thamy and at once i felt that I should congratulate her for the fine piece of writing by a youngster of that age. Would you do that for me, please? I also next went her blog and found interesting pieces by her.She would certainly be a budding writer like her father.

Please accept my heartiest congratulations.
With kind regards and admiration
Siva
(K.S.Sivakumaran)

****************************************************************************

From: IMAMUDDIN GHOUSE MOHIDEEN
To: Editor PathivukaL
Sent: Tuesday, September 25, 2007 3:52 PM
Subject: கவிதை!

அன்புடையீர், வணக்கம். இதற்கு முன் நான் அனுப்பிய 'பூமித்தாயும் அன்னையரும்' கவிதையை பிரசுரித்தமைக்கு நன்றி. இத்துடன் மீண்டும் ஒர் கவிதையை இணைத்திருக்கிறேன். இதையும் பிரசுரித்து ஊக்கமளிப்பீர்களென நம்புகிறேன்.

அன்புடன்,
இமாம்.

****************************************************************************
From: மு இளங்கோவன்
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, September 15, 2007 8:59 AM
Subject: letter

அன்பின் ஐயா வணக்கம். தங்கள் புதிய நாவலைக் கற்ற பின்பு எழுதுவேன். இணையத்தில் தங்களின் தமிழ்ப்பணி கண்டு போற்றி வணங்குகிறேன்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
+9442029053

****************************************************************************

From: "durai raj"
To: "Giritharan Navaratnam"
Sent: Saturday, September 15, 2007 8:30 AM
Subject: M.phil dissertation

Dear sir, Iam happy to inform you that I have succesfully completed my M.phil dissertation.I have also attached my dissertation for your kind
notification. being a Thamizhan I feel very proud of you. I have done my level best in analysing your short stories which i find as having
contemporary relevance. I really enjoyed your stories very much.

Thank you
With regards
M.durairaj

****************************************************************************
From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Saturday, September 15, 2007 7:41 AM
Subject: 'AMERICA'

Dear Giri, It is great that you completed the novel. I read a few chapters when it appeared in THINNAI and was impressed by the writing. Each chapter was interesting on its own. I hope you will bring it out as a book so it can be available in libraries. Congratulations.

anbudan
a.muttulingam

****************************************************************************
From: mozhi net
To: To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, August 25, 2007 7:00 AM
Subject: [Bulk] மலேசிய நவீன இலக்கிய காலாண்டிதழ் இணையத் தளம்

அன்புடையீர் வணக்கம். மலேசியாவில் நம்பிக்கைக்குரிய தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் "வல்லினம்" காலாண்டிதழ் வெளிவந்துள்ளது. இதழின் ஆசிரியராக திரு. ம. நவீன் செயலாற்றுகிறார். நவீன இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் இளைஞர்கள் முயன்றிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வல்லினம். இதழை இணையத்திலும் வலம் வர செய்திருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் மலேசியத் தமிழ் இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

http://vallinam.6te.net/index.htm

மொழி

மொழி ஆய்வரண் - மலேசியா
Mozhi Research & Development Centre,
Kuala Lumpur, Malaysia
www.mozhi.net

****************************************************************************

From: sandhya giridhar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, August 23, 2007 10:03 AM
Subject: letter of thanks

I am very much delighted to see my article in Pathivugal September issue and I am very much overwhelmed with joy. I am really thankful to you for giving space for my contribution in Pathivugal and I would continue to give you my contributions regarding current affairs of New Delhi and other important unique articles which may be appreciated by vast readers of Pathivugal. Once again I convey my thanks for publishing my article about womens' rights.

With sincere regards
Sandhya Giridhar
New Delhi

****************************************************************************

* From: mozhi net Sent: Saturday, August 25, 2007 8:00 AM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: [Bulk] மலேசிய நவீன இலக்கிய காலாண்டிதழ் இணையத் தளம்

அன்புடையீர் வணக்கம். மலேசியாவில் நம்பிக்கைக்குரிய தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் "வல்லினம்" காலாண்டிதழ் வெளிவந்துள்ளது. இதழின் ஆசிரியராக திரு. ம. நவீன் செயலாற்றுகிறார். நவீன இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் இளைஞர்கள் முயன்றிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வல்லினம். இதழை இணையத்திலும் வலம் வர செய்திருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் மலேசியத் தமிழ் இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

http://vallinam.6te.net/index.htm

மொழி
மொழி ஆய்வரண் - மலேசியா
Mozhi Research & Development Centre,
Kuala Lumpur, Malaysia
www.mozhi.net

****************************************************************************

* From: sandhya giridhar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, August 23, 2007 11:03 AM
Subject: letter of thanks

I am very much delighted to see my article in Pathivugal September issue and I am very much overwhelmed with joy. I am really thankful to you for giving space for my contribution in Pathivugal and I would continue to give you my contributions regarding current affairs of New Delhi  and other important unique articles which may be appreciated by vast readers of Pathivugal. Once again I convey my thanks for publishing my  article about womens' rights.

WITH SINCERE REGARDS
SANDHYA GIRIDHAR
NEW DELHI

****************************************************************************

* From: "Sanchayan, Subha, Senthan && Seyon"
To: "'Giritharan Navaratnam'"
Sent: Thursday, August 16, 2007 10:04 PM

Dear Mr. Giridaran, Enjoyed reading your short stories. You have a multi dimentional social outlook. I had read the stories earlier on other sites.The story about the cow which is to be slautered was very touching

Anpudan
Parasakthy sundharalingam

****************************************************************************

* From: Kathiravetpillai Muruganandan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, August 13, 2007 1:52 PM
Subject: ஹாய் நலமா

அன்புள்ள கிரிதரன், பதிவுகள் இணைய இதழில் எனது ஹாய் நலமா வலைப் பின்னலை இணைத்ததற்கு நன்றி.
எம்.கே.எம்.

Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs : http://இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

* From: "puthiyamaadhavi sankaran"
To:
Sent: Monday, August 06, 2007 1:31 AM

நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். பதிவுகளில் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதைக் கண்டேன். பதிவுகளில் அறிமுகம் செய்ய தகுதியானதென்றால் என் வலைப்பதிவை அறிமுகம் செய்யவும்.அதிகமாக எதுவும் எழுதவில்லை இப்போதுதான் எழுத
ஆரம்பித்திருக்கிறேன். நன்றி.

www.puthiyamaadhavi.blogspot.com

அன்புடன்,
புதியமாதவி, மும்பை

****************************************************************************

* From: mani kandan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, August 05, 2007 3:30 AM
Subject: paper publication - reg

i am working as a lecturer in the dept. of tamil, national college, tiruchirappalli, tamil nadu.india. i am knew about your esteemed internet journal. i send a paper on "Bharathidasan Oru Ulaga Kavigan".

thanking you,

your sincerely,

Dr.D.Manikandan
Lect. in tamil
National College,
Trichy.

* From: tamil echo
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, August 04, 2007 3:57 AM
Subject: read

RAJINI LAUNCH NEW PARTY, SAYS CHO - for details read www.tamilgossips.blogspot.com
Tamilgossips

****************************************************************************

* From: Dr.M.K.Muruganandan
To: Pathivukal
Sent: Friday, August 03, 2007 12:58 AM
Subject: எனது இணைய தளம்

அன்புடன் கிரிதரன் அவர்கட்கு, எனது அண்மைய தினக்குரல் கட்டுரைகளை ஹாய் நலமா http://hainallama.blogspot.com என்ற இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறேன். இப்பொழுதுதான் உருவாக்கிய தளம். என்னுடைய கன்னி முயற்சி. எனவே குறைகள் இருக்கலாம். ஆயினும் ஆர்வமுள்ளவர்களுக்கு பயன்படலாம். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

நன்றி.
அன்புடன்,
எம்.கே.முருகானந்தன்.
Dr.M.K.Muruganandan
Family Physician

http://hainallama.blogspot.com
http://www.geotamil.com/pathivukal/health.html

****************************************************************************

* From: APPADURAI MUTTULINGAM
To: Giritharan Navaratnam
Sent: Wednesday, August 01, 2007 7:16 PM
Subject: NOMINATION FORM 2007

Dear Giri, The time has come for the nomination form. Like last year I shall be grateful if you will publish in PATHIVUKAL the 2007 nomination form that is attached. The font is tscu inaimathi. Thanks for your usual help.

anbudan
a.muttulingam

****************************************************************************

* திரு. வ.ந. கிரிதரன், எப்படி இருக்கிறீர்கள்? நலமா? என்னுடைய கவிதைத் தொகுதி "சித்திரம் கரையும் வெளி" (அகரம் பதிப்பகம்)  19.05.07 அன்று வெளியீடு காணுகின்றது. அவற்றில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை திண்ணை, பதிவுகளில் பிரசுரம் ஆனவை. இத் தருணத்தில் அவைகளை பிரசுரித்ததற்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். இலக்கியத்தின் சாத்தியப்பாடுகள்
குறித்து நான் பெரிதும் நம்பிக்கையிழந்திருந்த தருணங்கள் அவை.

இந்த அவநம்பிக்கை இப்போதும் இருந்தாலும், என்னுடைய தத்துவப்பார்வை மேலும் ஆன்மீகவயமானதின் ஊடாக " let us try what we can" & " atleast there is definitly one proof of a man who is evolving through writings (who else ME;) ) so let us continue" என்பது போன்ற மனோநிலை இருக்கிறது.

விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். தவிரவும் வேறொரு கடிதத்தில், நிகழ்ச்சிகள் பகுதிக்கென வெளியீட்டு விழாவைப் பற்றிய அறிவிப்பை அனுப்புகிறேன்.

நன்றி
நட்புடன்
சுப்பிரமணியன் ரமேஷ்.

****************************************************************************

* From: Sanchayan, Subha, Senthan && Seyon
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, June 23, 2007 6:15 PM

dear Editor, I had been a keen reader of your website though not a contributor. Herewith I am sending a review of Dr. Indrapala’s Book – I have reviewed both in English and Tamil as it is not a translation but different. I shall be thankful if you are able to publish it in your site.

Thank you and keep the good work going.

Parasakthy Sundharalingam
Sydney
Australia

****************************************************************************

* From: IMAMUDDIN GHOUSE MOHIDEEN
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Cc: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, June 28, 2007 9:07 AM
Subject: கவிதை!

அன்புடையீர், வணக்கம். இத்துடன் என் கவிதை ஒன்றை இணைத்திருக்கிறேன்.என் கவிதையைப் பிரசுரித்து ஊக்கமளிப்பீர்களென நம்புகிறேன். என் கவிதைகள் தமிழோவியம்,முத்துக்கமலம்,திண்ணை போன்ற இணையப் பத்திரிகைகளில் தொட்ர்ந்து பிரசுரமாகிக்
கொண்டிருக்கின்றன.

அன்புடன்,
இமாம்.கவுஸ் மொய்தீன்.

****************************************************************************

* From: I. ISHAQ
To: pargi ; pathi
Sent: Friday, June 29, 2007 3:55 AM
Subject: anbu nandri

அன்பு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. கவிதை திருவிழா அழைப்பையும் செய்தியையும் வெளியிட்டமைக்கு நன்றி.

அன்பு
இசாக்

****************************************************************************

* From: Thurai Kumaresan
Date: 21-Mar-2007 07:51
Subject: தமிழில் இணைய முகவரி
To: பதிவுகள்

வணக்கம், தமிழில் இணைய முகவரி www.நூல்தேட்டம்.com பதிவு செய்துள்ளேன். இது உங்கள் கணினியில் தெரிவதற்காக சில settings செய்வேண்டும். இதனை எனது வலைப்பதிவில் பின்வரும் முகவரியில் எழுதியுள்ளேன்.

http://viruba.blogspot.com/2007/02/blog-post.html அதேபோல மலேசியாவில் வாழ்கின்ற/வாழ்ந்த யாழ்ப்பணத்தவர்களின் பதிவாக ஒரு பெரிய நூல் வந்துள்ளது. அதைப்பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன். http://viruba.blogspot.com/2007/03/legacy-of-pioneers.html

பார்க்கவும்.
அன்புடன்,
விருபா
து.குமரேசன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


****************************************************************************
From: kanishka kala
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, April 13, 2007 1:57 PM
Subject: vanakkam

அன்புள்ள சகோதரர் திரு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். "இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்." தங்களது இணைய இதழ் மிகவும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. திரு நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் பேட்டி மிகவும் அருமையானதாகவும் பண்பானதாகவும் இருக்கிறது. சகோதரர் ஆல்பர்ட் அவர்களின் கேள்விகள் அருமையான தேர்வு.

நன்றி வாழ்த்துக்கள்
அன்புடன்
சகோதரி கனிஷ்கா

****************************************************************************

From: Krishna Nagarathinam இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, April 03, 2007 1:42 PM
Subject: Nilakadal-Reg

வணக்கத்திற்குரிய திரு.கிரிதரன் அவர்களுக்கு, உங்கள் அமெரிக்கா 11 படித்துவருகிறேன். (நீங்கள் குறிப்பிட்டுள்ள முதல் புத்தகத்தை படித்ததில்லை. நண்பருக்கு எழுதி இருக்கிறேன். கூடியவிரைவில் கிடைத்துவிடும்). மிக நன்றாக எழுதி வருகிறீர்கள். இரண்டாவது அத்தியாயம் மிக மிக அருமை. அதில் உள்ள பல வரிகள் என மனதைவிட்டு நீங்காதவை. பாராட்டுக்கள்..

என்றும் அன்புடன்
நாகி

****************************************************************************

From: muthu nilavan இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, March 02, 2007 2:20 PM
Subject: Thanks

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய 'பதிவுகள்' ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'பதிவுகள்' இதழில் உரிய இடம் தந்து 'கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி' அறிவிப்பை வெளியிட்டிருந்ததைப் பார்த்தேன். அதில் கந்தர்வனின் படத்தையும் தேடிப் பிடித்து வெளியிட்ட தங்களின் 'தேட'லுக்கும் மிக்க நன்றி. முடிவுத்தேதி முடிந்ததும் அமைக்கப்படும் நடுவர் குழுவிற்குத் தங்களின் இந்தப் பெரிய உதவியைச் சொல்வதோடு, தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளை வெளியிடும்போதும் தங்களின் இந்த உதவியை மறக்காமல் குறிப்பிடுவேன். மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.வணக்கம். - நா.முத்து நிலவன்.

****************************************************************************

From: thambirajah elangovan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, February 27, 2007 7:22 PM

ஆசிரியர், 'பதிவுகள்". அன்புடையீர், வணக்கம். எனது நூல்வெளியீடு சம்பந்தமான செய்திகள் யாவற்றையும் அழகுற, 'பதிவுகள்" இணைய இதழில் வெளியிட்டமை குறித்து எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நண்பர்கள் பலருடனும் 'பதிவுகள்" குறித்துப் பேசிக்கொள்வதுண்டு. இன்று மாலையும் அவுஸ்திரேலியாவிலிருந்து நண்பர் முருகபூபதி கதைத்தார்.

'பதிவுகள்" பார்த்தீரா..? தங்கள் கட்டுரையும் இருக்கிறதே..". எனக் கேட்டேன். 'நேரம் கிடைப்பது அரிது.. அத்துடன் எனக்கு நேரம் கிடைக்கும்போது வீட்டார் 'இன்ரநெற்" பார்க்கின்றனர். அதனால் பார்க்கவில்லை... விரைவில் பார்க்கிறேன்;.." என்றார். தோழர் நந்தினிசேவியரின் கட்டுரையையும் பயன்கருதி வெளியிட்டமை நன்று.!

அறிஞர் அ. ந. கந்தசாமியின் படைப்புகள் ஏதாவது தற்போது நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளதா? சில்லையூருடன் பேசிக்கொண்டிருந்த நாட்கள், பொழுதுகள் எல்லாம் சந்தோஷமானவை. அவ்வேளைகளில் அவர் அ. ந. கந்தசாமி குறித்து, அவர்தம் ஆற்றல் குறித்து, கவிதைகள் குறித்து, உளமார்ந்த நட்புக் குறித்து பேசியமை இன்றும் ஞாபகம். [அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 'எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தால்' 1989இல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது 'வெற்றியின் இரகசியங்கள்' (வாழ்வின் வெற்றிக்கான உளவியல் நூல்) 1968இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தால் எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் முயற்சியால் வெளியிடப்பட்டது. 'மதமாற்றம்' நாடகத்தையும் கொழும்பில் பதிப்பித்தது செ.கணேசலிங்கனின் குமரன் அச்சகம்தான். மேலும் இந்நூல் வெளிவருவதற்கு எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் பத்திரமாகச் சேகரித்து வைத்திருந்த அ.ந.க.வின் 'மதமாற்றம்' நாடகப் பிரதியும் முக்கிய காரணிகளிலொன்று. அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தும் இயலுமானவரையில் சேகரிக்கப்பட்டு நூலுருபெ பெறவேண்டுமென்பது எம் அவா. அது நிச்சயம் நிறைவேறுமென்ற நம்பிக்கை எமக்குண்டு. - ஆ-ர்]

தற்போது பதிவுகளில்; அந்த 'முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முதன்மையாளன்" குறித்து மீண்டும் மீண்டும் வாசிப்பதில் எனக்கு ஒரு திருப்தி தான்.

வி.ரி.இளங்கோவன்
****************************************************************************

From: "K.S. Sivakumaran"
To: "V.N. Giritharan"
Sent: Tuesday, February 27, 2007 6:16 PM
Subject: Congratulations

Dear Giri: I wish to congratulate you for the variety of writing one finds in your website. Your second series - the impressions on America- is bound to be interesting. I am looking forward to read them.

Sincerely
Siva (K.S.Sivakumaran)
Colombo, Sri Lanka

****************************************************************************
From: mathangi Krishnamurthi இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, February 27, 2007 6:19 AM
Subject: Thankyou

Vanakkam. Thankyou very much for publishing the nool arimugam ( tamil eelap pengalin kavithaigal ) in the March issue of your esteemed magazine This is my first article for Pathivugal. Thankyou once again

with regards
Mathangi
Singapore

****************************************************************************

To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, February 24, 2007 2:40 PM
Subject: A request to publish

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய "பதிவுகள்"ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறோம்.  அதற்கான அறிவிப்பை தங்கள் இதழில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா.முத்து நிலவன்

****************************************************************************

From: "Sathya Thillainathan"
To: ;
Sent: Thursday, February 22, 2007 2:18 PM
Subject: SECOND ANNUAL TAMIL STUDIES CONFERENCE (UNIVERSITY OF TORONTO)

Dear Editor, On be half of the Tamil studies conference co-ordinators, I am sending you an attachment of an e-poster and an announcement of the Second annual Conference in both English and Tamil. Please put this information on your website for it might be of interest to many. Please note that there is an online registration for the conference > and the dead line is May 10th 2007. For further information please feel free to contact me at இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். or check our website > at http://www.chass.utoronto.ca/~tamils/.

Thank you!
Sincerely, Sathya

****************************************************************************
From: elil rajan இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, February 20, 2007 7:21 AM
Subject: how to approach you

Dear Respected Sir, kindly let me know the means to send you my poems to be published if approved by your board...
thanks a lot.

Elil.
[உங்கள் ஆக்கங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு ஏதாவது யூனிகோட்டில் அனுப்பி வைக்கவும். - ஆ-ர்]
****************************************************************************
From: subbu raj
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, February 12, 2007 12:09 AM
Subject: Pathivukal Web magazine

Dear Sir, Recently I started reading your Web magazine - Pathivukal. It's very interesting & I am enjoying very much.
I will write my expressions in detail after wards in Tamil.

Thank you.

With Regards,
S.Subburaj

****************************************************************************

From: M. Ramanathan இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, January 31, 2007 11:45 PM
Subject: Willing to write

Dear Sir, I am a civil engineer, living in Hong Kong, and writing occasional Tamil articles, generally about Hong Kong, China and East Asia . Exemptions are 2 recent articles about Muthulingam's works. My articles have been published in Dinamani, Kalchuvadu and Thinnai, and I havelisted them at: http://mu.ramanathan.googlepages.com/

I wish to send my articles to Pathivukal for your consideration. I have 2 questions: Pathivukal is a monthly magazine. I note that you have updated today, February 1. Will the next update will be on March 1, or any time in-between as well? I need this information to up-date my article to the extent possible at the time of publishing. Any preferred date for sending the articles? I generally use Murasu fonts. Trust this is acceptable. Or do you recommend me to use Unicode? If you could drop a line in reply, I will be more than pleased.
I appreciate your tireless activities in promoting Tamil and wish to read more in Pathivukal.

Regards,
M.Ramanathan

****************************************************************************

*From: kasthuri Raj
To:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, November 16, 2006 2:08 PM
Subject: FW: rajabakshe's indian visit

Srilanka's President Rajabakshe's Indian Visit
- D.Ravikumar MLA,Tamilnadu
Viduthalai Chiruthaikal Katchi(DPI) -

Dear friends Srilankan President Mr.Mahinda Rajabakshe is scheduled to visit India on 26th November to inaugurate the Asian Mayors Conference at Deharadun.He is coming on the invitation of Smt.Manorama Dobriyal
Sharma.Smt Sharma is the Mahila congress President of The Uttaranchal
Pradesh Congress Committee and also an AICC member.She won the Mayor election with a margin of 4000 votes over her BJP rival in 2003 and became the mayor of Dehradun.She is the president of All India Council of Mayors(AICM) too.

I hope that you are well aware of the sufferings of Tamil people in
Srilanka and the protests raised by various political parties of
Tamilnadu including ViduthalaiChiruthaikal (DPI) over the Rajabakshe's
visit.Now the six and half lakh tamil population of jaffna is under
the threat of starvation death after the closure of A9 highway-the
main supply route to the Tamil area.Srilankan government is using
hunger as a weapon in the war against the Tamils.

Meeting the Indian Prime Minister is the main purpose of Mr.
Rajabakshe.His intention is to get military aid from India for the
ongoing war in Srilanka.I request you to send a telegram to
Smt.Manorama Sharma asking her to respect the sentiments of the Tamils
and cancel the invitation extended to the Srilankan President.the
following is her postal address:

Smt.Manorama Dobriyal Sharma
Mayor,Mahila Congress President,Uttaranchal Pradesh Congress committee
3,Court Road
Near Deen dayal Park
DEHRADUN
Uttaranchal State

Thanks
D.Ravikumar
MLA,Tamilnadu
Viduthalai Chiruthaikal Katchi(DPI)

****************************************************************************

*From: thambirajah elangovan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, November 14, 2006 4:08 AM

திரு வ. ந. கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்", அன்புடையீர், எமது நூல் வெளியீடு நிகழ்வினை அழகாய் 'பதிவுகளில்" இணைத்துள்ளமைக்கு எனது நன்றிகள். இதன்மூலம் இலக்கியத்துறை நண்பர்கள் சிலரின் தொடர்புகளும் நீண்ட நாட்களுக்குப்பின் கிட்டியுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
வி. ரி;. இளங்கோவன்.

****************************************************************************

*From: Vaigai Selvi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, July 09, 2006 1:59 AM
Subject: hello

அன்புள்ள திரு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். பதிவுகளில் தொடர்ந்து அம்மி பற்றிய கட்டுரைகள் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
வைகைச் செல்வி
****************************************************************************

*From: Dr. S. RAJARAM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, July 09, 2006 3:08 AM
Subject: FROM THE CHILDREN OF SIVANANDA ORPHANGE!!

Greetings from SIVANANDA ORPHANAGE a charitable organization near Chennai India.This mail comes to you specially pleading for the welfare of 300 orphans with the confidence you will consider our request to host a banner in your site. Your help in this regard will go long way in our efforts to provide upliftment for the orphans in our care. We hope many who log on your site will learn about the humanitarian work we do in this part of the world and offer their support.

Our Institution "SIVANANDA ORPHANAGE" is a non-profit NGO with the primary objective of protecting orphans, destitute women, the physically
handicapped, AIDS-affected children, and the elderly and providing them with shelter, food, and free education. An institution with 50 years of recorded services to thousands of poor orphans, we have helped them to become self-supporting responsible and productive citizens. We not only provide food, education and shelter, but also instill character and morals to help them grow responsibly, learn a means for livelihood and eventually become independent.

Many; Political leaders from the first PM of India Pt. Jawaharlal Nehru,
Shri R Venkatraman, Shri Rajiv Gandhi, Shri Morarji Desai, Shri
Chandrasekar, Shri Kamaraj, Kalaignar Karunanidhi, Selvi Jayalalitha (to
mention a few); Religious leaders like Swami Sivanana Saraswati (who was the motivator and guiding beacon for the founders, Paramacharya HH
Chandrasekarendra Saraswati of Kanchi Peetam, Sankaracharya of Puri peetam (to mention again a few); To leading public personalities like film stars, sportsmen, ambassadors, advocates, doctors, engineers, administrators,
industrialists, philanthropists, and normal devout kind-hearted noble-minded
person with a concern for the upliftment of downtrodden and deprived; have visited our ashram, witnessed, commented, advised, and guided us in our committed work. Our orphanage currently has free schooling up to x standard. In order to impart technical skills to deserving orphans we wish to start a technical education school like an industrial training institute or a polytechnic. It is needless for us to emphasize how such technical training will go a long way for the orphans to find a living after the orphanage.

We trust a banner in your web site will encourage discerning visitors to
think and extend us a helping hand. Upon receipt of your affirmative reply, I shall send 2 or 3 banners for you to select the one best suited to your site. Your generosity will help secure the futures for many orphaned
children as well as the others we help.  Please visit to our web site
http://www.sivanandagurukul.org to learn more about us.

SERVICE TO SUFFERING HUMANITY IS SERVICE TO GOD
MAY GOD BLESS YOU AND YOUR FAMILY.

PADMA SREE
DR.S.RAJRAM
SIVANANDA SARASWATHI SEVASHRAM.
NO 20 KAMBAR STRET EAST TAMBARAM
CHENNAI 600059
INDIA.
Phone: +91 44 2391078 or +91 44 2392444  CELL NO   98410 77690
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http:/www.buildhope.org  or http:www.sivanandagurukul.org
CHECK OR DRAFT IN ANY CURRENCY MAY BE FORWARDED
IN FAVOR OF SIVANANDA SARASWATHI  SEVASHRAM.

****************************************************************************
*From: M A N I T H A M
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, July 08, 2006 1:40 AM
Subject: Punishment in Chennai schools - A study' -MANITHAM REPORT

Manitham, a human rights organisation based in Chennai, India and working to promote Human Rights and Protecting Environment. Ms. Tashi Yangzom Bhutia, 4th year Law Student, Bangalore recently joined as internship student with us. Manitham ask her to submit an independent assignment reg. with,'Corporal Punishment in Chennai schools - A study'. With our support after taking survey, she submitted the report and the same report has been attached with this mail in .pdf format for your reference. This report is also available with our Manitham web site @ http://www.tamilinfoservice.com/manitham/report/corporalpunishmentchennai.pdf

We feel that this report has tell the true situation in Chennai schools.

Thanks

Subramanian.g
Executive Director, MANITHAM.
Mobile : +91-94433 22543
www.manitham.net
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

*From: YADARTHA PENNESWARAN
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, June 29, 2006 1:02 PM
Subject: VADAKKU VAASAL ISAI VIZHA

dear Mr.Giri here is the material on vadakku vaasal music festival to be held on 14th, 15th and 16th july 2006 at Delhi Tamil Sangam - Thiruvaluvar Auditorium, New Delhi. I shall be grateful if you could kindly published the attach the pdf material on pathivukal.
nanri.

anbudan
YADARTHA K.PENNESWARAN
Editor
VADAKKU VAASAL
NO.5210, BASANT ROAD PAHARGANJ,
NEW DELHI-110 055
9313302077/9212157106  
011-55937606
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************************************************************************

*From: Karumaiyam Arts Group
To: NAVARATMAM GIRITHRAN
Sent: Monday, June 26, 2006 11:13 PM
Subject: Re: Karumaiyam Announcement For 2006 Theate event

Thank you so much for publishing the Karumaiyam announcement.  We are appreciate your service. thanks
Karumaiyam

*From: Arun Sivakumaran
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, June 21, 2006 9:39 AM
Subject: Thank you

ஆசிரியருக்கு வணக்கம், எனது ஆக்கத்தைப் பிரசுரித்தமைக்காக கனேடிய தமிழ் சினிமா ஆர்வலர்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றி.

அன்புடன்
அருண்

*From: Arun Sivakumaran
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, June 14, 2006 1:57 PM
Subject: Canadian Tamil cinema

பத்திரிகை ஆசிரியருக்கு வணக்கம்! கனேடிய தமிழர் திரைப்படமுயற்சிகளுக்கு நீங்கள் எப்போதும் ஊக்கமும் ஆதரவுங் கொடுப்பது போலவே இந்த ஆக்கத்தையும் பிரசுரித்து ஈழத்துத் திரைப்பட வளர்ச்சிக்கு உதவிடுமாறு தயவுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன். இது பாமினி எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளது.நன்றி.

அன்புடன்
அருண்
தொலைபேசி இல: (905) 201-2631

****************************************************************************
*From: ciththan cengkaLLu
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, June 01, 2006 7:10 AM
Subject: Artical on a book release of Ranjini's poems

பெர்லினில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா பற்றிய கட்டுரை ஒன்றை இத்துடன் அனுப்பி வைக்கிறேன். பிரசுரத்துக்குச் சேர்த்துக் கொண்டீர்களானால் மகிழ்ச்சியடைவோம். இதற்கான சில படங்கள் இதற்கு அடுத்து வரும் இன்னொரு அஞ்சலில் தனியாக அனுப்பி வைக்கிறேன். இக் கட்டுரை ஏற்கனவே எனது blog இல் பதிவாகியுள்ளது. http://ciththan.blogspot.com

****************************************************************************

*From: K.S. Sivakumaran
Date: Friday, April 28, 2006 1:52 AM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: Re: sweeping statements are most slanderous

K.S.SivakumaranDear Ms. Ramakrishnan Latha: Greetings. I was pleasantly surprised to receive a response to my observations sent to Pathivugal. Thank you. Let me make two observatios in the first place: One: Your Knowledge of contemporary Thamil Liteature is astounding. Two:  Your style of writibg in English is befitting. Here are my responses to your criticisms of my piece: If you think that my generaliations on Little Magazines are tantamount to ' worst form of slander ', its o.k. Maybe, I should have explained in detail my premises. Since I wanted only to spotlight what I felt was obvious, I briefly confined myself to the basics. Anyway, I take your findings that mine were 'sweeping statements'

However, I still hold that some of the poets in Thamilnadu have been overated and that includes former Lankan writer Dharuma Civaramoo. It's true some of the latter's poems had memorable lines and yet a few had freshness of seeing things in different lights. But the main point is that his contribution as a short story writer outshines his role as a poet or a ' literay critic'

I think you misunderstood what I said about the 'Little Magazines'. Earlier  literary magazines did contribute to the enrichment of contemporary Thamil literature, but with the quarrel between the two people referred accelerated the ugly scene of attacks bordering on slander. You may disagree. At the sametime  the unwelcome tendency, a few current 'Little Magazines'   were discreet and maintained the standards  Credit, true, should be given to those journals.

I agree with you that if I don't read these magazines, I stand to lose. I shall try to keep abrest with these magazines whih are not readily available in my litle island. Again, there is a misconception on your part in equating my comments to the anarchical tendencies of both writers - Dharma Civaramoo and Venkat Swaminathan  - to  a comparison of both of them as literary figures. I did not compare their relative literary merits. I only referred to their peronal vendetta for each other.

Thank you for enlightening me on Venkat Swaminathan's recent writings, which I learn from you, are a continuum  of his old practice of unfair judgements. In the same breath, we must acknowledge the fact that we cannot totally dismiss the individual psitive contributions of both of them in the field of Thamil writing.

It was refreshing to read an intelligent response from a sensitive reader. I thank you for that.

Incidentally, I have a feeling that I wrote to you sometime back on the suggestion of Pathivugal Editor, Mr.V.N.Giritharan on some matter regarding e-zine, but I wasn't lucky enough to get a reply from you. I wish to contribute in Thamil as well, but unfortunately, I cannot type in Thamil. Hence I write in English only to ' Pathivugal '

With Kind regards
Siva
(K.S.Sivakumaran)

P.S.:  Please read my book in Thamil ( published by Manimekalai Prasuram  of Chennai) titled " India-Ilankai Ilakkiyam -Oru Kannottam" for an article on Dharuma Civaramoo. The same publishers published a book where I express my own interpretation or understanding of 'Literary Criticism'.The title of the book is " Thiranaivu Entra Enna?"

KSS

****************************************************************************

*From: "ramakrishnan latha"
To: ;
Sent: Saturday, April 22, 2006 12:16 AM
Subject: sweeping statements are most slanderous

Latha Ramakrishnandear Mr.Sivakumaran and the Editor of Pathivukal, Greetings. I happened to read your (Mr.Sivakumaran's) letter expressing concern over slander-campaign in the name of literary criticism. While the concern is shared, some of your observations do not go well with your concern. Such sweeping statements as 'Pramil is not a poet at all'  and that Tamil Little Magazines nurture and thrive on slanderous campaigns are but worst form of slanderous campaign. Over the years and against all odds and with absolutely  no official patronage  the Tamil Little Magazines have been contributing a lot towards the enrichment of Modern Tamil Literature. It is unfair to overlook all those and make them appear to be as harbingers  and storehouses of nothing but slanderous campaigns and personal attacks. Mr.Sivakumaran has the liberty to stop reading Tamil Little Magazines. But, he should know that the loss is more his. And , his comparing Mr.Venkat Swaminathan with poet Pramil is rather unwarranted and unfair, for Poet Pramil was primarily a creative writer. Also, Mr.Sivakumaran makes it appear that of the two Mr.Venkat Swaminathan is better and that of late he has stayed above personal prejudices in his critical evaluations, which is not at all true. To cite an instance, in one of his recent publication - a collection of  critical essays he has chosen to give only his attacks, remarks and observations and not the fitting rejoinders to them that have followed suit. Same way, in one of the recent issues of 'Kaalam', while going ga-ga over Poet Rajamarthandan's 'anthology of Modern Tamil Poems, Mr. Venkat Swaminathan observes that there are those who ask the poets themselves to send their 'best-poems' and such compilations would prove to be the mixture of dish in the bowl of the beggar. He may have his aversion against those who leave the selection in the hands of the poets themselves while those concerned may believe that the poets know best which is their best, but in his fervour to attack  'this approach' the way he brings in the beggar and his bowl with not the least social concern doesn't speak well on his worthiness as a critic. On the other hand, Poet Pramil's many poems champion the cause of the underprivileged. There is nothing wrong in discussing matters threadbare. And those who indulge in personal attacks will be exposing their own calibre and if required they should be exposed by others. Such strong approaches also have a place in critical evaluation. So, one cannot categorize all such strong-worded literary wranglings as unwanted and unwarranted. Lots to say on this issue. But, i conclude for  the time being with a simple suggestion- why not make the 'English Section' open to all?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here