பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS): தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் 2024! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க ...

ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன.  தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.

இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப்போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச்சென்றவர் ! 1869 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி வன்முறையினால் கொல்லப்பட்டார்.

ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... எனப்பாடி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர் உனது இறுதி விருப்பம் என்ன ? – என நீதிமன்றில் கேட்டபொழுது, “பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் தனது அஸ்தி (சாம்பல்) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் . “ எனச்சொல்லியிருக்கிறான். அதனால் - அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் தகவல் உண்டு.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட போட்டி தொடர்பான அறிவித்தலை வெளியிட்ட இலங்கை மற்றும் புகலிட தேசத்து ஊடகங்களுக்கும் இந்தப்போட்டிக்கு சங்கத்தின் போட்டி விதிமுறையின் பிரகாரம் நூல்களை தபாலில் அனுப்பி வைத்த எழுத்தாளர்களுக்கும் சங்கத்தின் நன்றியைத் தெரிவிக்கின்றோம். போட்டி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இம்முறை, கட்டுரை இலக்கியத்துறையில் நூல்கள் எவையும் சங்கத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

மேலும் படிக்க ...

பொது வேட்பாளர் கோரிக்கையும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

I

அண்மையில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை:  தமிழரசு கட்சியின் தேர்தல், லோகன் பரமசாமியின் வீரகேசரி கட்டுரை &    கலாநிதி அமீர்அலியின் 'விடிவெள்ளி'யில் வெளியான கட்டுரை.

இவை மூன்றும், இவ்வருடத்தின் ஜனவரி மூன்றாம்-நான்காம் கிழமைகளில் நடந்தேறி உள்ளன. இம்மூன்றின் முக்கியத்துவமும் தமிழ் அரசியலின் செல்திசை நோக்கி இவை கூடியிருக்க கூடிய அதேவேளை, அதற்குரிய விமர்சனங்களையும் இவை உள்ளடக்கச் செய்தன. தமிழ் தேசியம் என்பது ஒரு  30-40 வருடகாலமாய் தொடர்ந்து வரும் ஒன்றாகவே இந்நாட்டில் காணப்படுகின்றது. (பெருந்தேசியவாதத்தை போலவே).

தனிநாடு என்பதும் சமஷ்டி என்பதும் சுயநிர்ணயம் என்பதும் காலத்துக்கு காலம் தமது புது வடிவை ஏந்தியிருந்தாலும், பெரும்பாலும் இவை பெருந்தேசியவாதத்திற்கு எதிரான ஓர் எதிர்ப்பலையே. இதனாலோ என்னவோ இக்கோட்பாடுகளும் நகர்வுகளும் தமிழ் மக்கள் வாழ்வில் பாரிய தாக்கங்களை அல்லது வடுக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வை அவ்வவ் காலக்கட்டங்களில் நிர்ணயிப்பதாக இருந்துள்ளன. இச்சூழ்நிலையிலேயே அண்மைக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் என்ற விடயமும் இது பொறுத்து தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் உருவாகி உள்ளது. இப்பின்னணியில் தமிழ் தேசியம் என்பது பகிஸ்கரிப்பு என்ற வேலைத்திட்டத்திலிருந்து முன்னேறி, பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

மேலும் படிக்க ...

பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
26 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர்.

'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை  ஈர்த்தவர்.  இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.

அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு' -  https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான விவேகி! தேர்ந்த வாசகர்களையும் ஆற்றல்மிக்க படைப்பாளிகளையும் உருவாக்கிய சிற்றிதழ்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இன, மத, கட்சி சார்பற்ற இதழ் என்ற மகுட வாக்கியத்துடன் விவேகி இதழ், இலக்கம் 32, கண்டி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியிலிருந்து 1960 களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. விவேகியின் கௌரவ ஆசிரியர்: மு.வி. ஆசிர்வாதம், நிர்வாக ஆசிரியர்: மாட்டின் . ஆசிரியர்கள்: செம்பியன்செல்வன், செங்கை ஆழியான். இதனை வெளியிட்டவர்கள் மட்டுமல்ல, இதில் எழுதிய பலரும் தற்போது நினைவுகளாகிவிட்டனர். சிலர் பின்னாளில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளாகவும் விளங்கினர். சிலர் புலம்பெயர்ந்தனர்.

மேலும் படிக்க ...

சென்னையில் நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில்.. - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
25 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜனவரி 16- 18ம் தேதி வரை சென்னையில் நடந்த  சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 50 நாடுகள் பங்கேற்றன.பிரமாண்டமான ஏற்பாடுகள். துவக்க தினத்தில் 50 தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய திரைக் காட்சிகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் கொங்கு பகுதியை சார்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம். நாஞ்சில்நாடன்.பெருமாள்முருகன். சுப்ரபாரதிமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் .

இவ்வாண்டு மலேஷியா சிறப்பு கவுரவ  நாடாகக் கொண்டதால் மலேசியா எழுத்தாளர்கள், கலைஞர்கள் பெருமளவில் பங்கு பெற்றிருந்தார்கள்.50 எழுத்தாளர்களில் மறைந்தவர்கள் தவிர கலந்து கொண்டவர்கள் மூவர் மட்டுமே. அவர்கள் இமயம், மனுஷ்யபுத்திரன்,  சுப்ரபாரதி மணியன் ஆகியோர் கவுரவப்படுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க ...

யாழ்நூலக எரிப்பும் எம்.ஏ.நுஃமானின் சக்திவாய்ந்த கவிதையும்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
இலக்கியம்
20 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலி வீதியில் அவளைக்கண்டேன்
ஐந்து மணிக்குக்
கந்தோர் விட்டதும்
கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த நெரிசலில்
மனிதர் நெளிந்து செல்லும்
காலி வீதியில் அவளைக் கண்டேன்.

மேலும் படிக்க ...

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் ( 1931 – 2003 ) நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொள்ளுப்பிட்டி   ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன்.  நூலாசிரியரின் பதிலுரைக்கு  முதல், விழாத்தலைவர் என்னை இவ்வாறு பேசுவதற்கு அழைக்கிறார். “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி  அடுத்துப் பேசப் போகிறவர்  முருகபூபதி. அவருக்கு  ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க  ஓடவும்.” சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது.

பம்பலப்பிட்டி  சாந்திவிஹார் ஹோட்டலில்  ஒரு  பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு  பிரிவுபசார விழா.  புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக  இயங்கி, படங்கள் எடுத்துக்   கொண்டிருந்தார்.   விடைபெறவுள்ள  பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்  தலைவரால்   அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை   உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம்   பாராட்டு   விழா  நடத்த வேண்டும்” என்கிறார்.

உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன்.  அவர்  எடுத்த   வேறு படங்களையும் பார்த்துள்ளேன். ” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது.  அந்தப்புகைப்படக்கலைஞர்   நாணத்துடன்  தலைகவிழ்ந்து   சபையின்  பின்புறம் ஓடி  வந்துவிட்டார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி..... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக்  குறிப்பொன்றினை எனது ஆங்கில வலைப்பூப் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது ஒரு திறனாய்வுக் கட்டுரையல்ல. நினைவில் இருந்த விடயங்களை வைத்து எழுதப்பட்ட அறிமுகக் குறிப்பு மட்டுமே. இதில் உதாரணத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்கள் முழுமையானவை  அல்ல. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும்  பகிர்ந்துள்ளேன்.

On Canadian Tamil Literature!

Diaspora Tamil literature is a common term denoting the literature of expatriate Tamils. Tamil people live worldwide in many countries, including Western countries. Most of them migrated to other countries after the communal riots that happened in 1983, which is generally known as 'Black July '83.' Now, more than thirty years have passed since they left. During this time, the diaspora literature of Tamils has achieved many milestones in various literary forms such as short stories, poems, dramas, novels, and non-fiction. To Read the full article

On Twitter     On Facebook

 

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "தமிழில் சில வினை வகைப்பாடுகளும் கூட்டு வினைகளும் - ஒரு பார்வை"

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
18 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் கலாசூரி சிவகுருநாதன் நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்னேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்னேஸ்வரா -
நிகழ்வுகள்
18 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது.

கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி,இலக்கிய ஆர்வலர், எழுத்தாளருமான திரு. க. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க ...

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத்  தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அண்மையில் அவரைப்பற்றி எழுதிய எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை பற்றி, 'அக்கினிக்குஞ்சு' பாஸ்கர்,  அமரர் எஸ்.பொ, ஓவியர் செள, ஓவியர் மூர்த்தி, ஓவியர் கனகலிங்கம் , கவிஞர் மஹாகவி, 'மஹாகவி'யின் குறும்பா, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, செம்பியன் செல்வன், செங்கை  ஆழியான், மு.தளையசிங்கம், அவரது 'புது யுகம் பிறக்கிறது' (அரசு வெளியீடாக வெளியான சிறுகதைத்தொகுப்பு), யாழ் தேவன், சொக்கன், பத்மநாப ஐயர் என அவரது உரையாடல் பல்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தொட்டுச் சென்ற நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.

மேலும் படிக்க ...

பண்டைத்தமிழ் இலக்கியத்தில் முரசு - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
16 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

1.தோல் இசைக்கருவிகள்

முரசம், துந்துவி, முரசு, தண்ணுமை, படகம், ஆகுளி, சிறுகட்பறை பேரி பம்பை, துடி திமிலை, தட்டி, தொண்டகம் குறிஞ்சிப்பறை தாளக்கருவிகளுக்குப் பொதுவாக பறை குறிக்கப்படுகிறது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை வெறுப்பறை, வெறியாட்டப் பறை என பல வகைப்படும். வீர முரசு, போர் முரசு, விருந்துன்ன குருதி பலி கொடுக்கும்போது என்று முரசின் பயன் நீண்டது.

மேலும் படிக்க ...

சிறுகதை: சில துரோகங்கள் மன்னிப்பதற்கல்ல! - ஸ்ரீராம் விக்னேஷ் –

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ் –
சிறுகதை
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.

அன்னராஜ் பாதிரியார் எனது மாமனாரிடமும், அத்தையிடமும்ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.

“சாரி ஜோசப்…. சாரி ரெஜினா…..மணப்பொண்ணே கலியாணத்தில இஸ்டமில்லைங்கிறப்ப என்னால எதுவுமே பண்ண முடியாது….. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் உங்களுக்கு புரியவைக்கணும்னு இல்லை…. உங்க பொண்ணுகிட்ட பேசி, அவளை ஒத்துக்க வையுங்க….”

“அவள்கிட்ட பேசமுடியாது பாதர்…. சொன்னதையே சாதிப்பா….”

“பெத்தவங்க உங்களாலையே பேசமுடியல்லைங்கிறப்போ, நான் பேசிமட்டும் என்ன ஆகப்போவுது…. ஆனா ஒண்ணைய்யா ஜோசப்… உங்க பெரியமவ ஸ்டெல்லாவால நீங்க குனிஞ்ச தலையை, உங்க சின்னமவ திரேசா, அவ சொன்னமாதிரியே நிமித்திப்புட்டாயா…. ஆனா தாலிகட்டுறப்ப பாத்து ஏன் கலியாணம் வேண்டாங்கிறாண்ணு தெரியலியே....”

திரேசாவைச் சரிசெய்யும் பொறுப்பிலே நான்.

“ கலியாணப் பேச்சு எடுத்த நாளிலயிருந்து இப்போ கடைசி நிமிசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.…ஸ்டீபன் அப்பிடி என்னதான்டி பண்ணிப்புட்டாரு…..”

இந்த சம்மந்தத்தை பேசி ஒழுங்குபண்ணுறதுக்கு உங்க அண்ணன் என்னபாடெல்லாம் பட்டாருன்னு தெரியுமா….”

என்னை வேண்டாவெறுப்புடன் பார்ப்பதுபோல பார்த்தாள் திரேசா.

“அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சம்பவத்தைநெனைச்சுப் பாக்கணும் அண்ணி…. ஒரு வருசத்துக்கு முன்னாடி இதேசர்ச்சில வெச்சு, எல்லாரு முன்னாடியும் ஒரு சத்தியம் பண்ணினேனில்லியா….”

அவள் சொல்லும்போது, நடந்த சம்பவமெல்லாம் மனத்துள்ளே படமாக ஓடின.

எனது கணவர் ஆபிரகாமின் மூத்த தங்கை ஸ்டெல்லாவின் திருமண நிகழ்வு இரண்டு ஆண்டுக்குமுன் நடைபெற்றது.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத கனடிய அனுபவம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு தடவை  தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில்  ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய  இதழ்களில் அக்கதை பிரசுரமானது.  பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும்,  Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குரு அரவிந்தனின் எழுத்துகள் பற்றி.... - முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -

விவரங்கள்
- முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -
இலக்கியம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

4

7-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.

கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நூல்களைப் பார்வையிட்டும், வாங்கியும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைய இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. அரங்கு எண் 604, 605 இன் முதல் விற்பனையாகிய ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ ஆகிய நூல்களைப் பிரபல கவிஞர் இந்திரன் அவர்கள் கவிஞர் மு. முருகேஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளை வழங்கும் தமிழ் ஆளுமைகளுக்கான உயர் விருதுகள் 2024!

விவரங்கள்
- தகவல்; அநுரா -
நிகழ்வுகள்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன  அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்  குறித்த ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன்  அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.  வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை, நாடகம்  என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.  

திண்ணை இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவரது அறிவியல் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.  அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார்,  இவர் பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். பெர்னாட்ஷாவின் நாடகமொன்றினையும் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.ஜெயபாரனை வாழ்த்துகினறோம். மேலும் இவரது இலக்கியப்பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.

மேலும் படிக்க ...

பொங்கலோ பொங்கல் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
உயர்வான எங்களது பொங்கல் விழாவே

வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

மேலும் படிக்க ...

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கவிதை
14 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
உலகைக் காக்கும் உழவர்கள் திருநாளில்,
உவகை ஆறு ஊற்றெடுத்துப் பெருகட்டும்.
உலகம் ஆனந்தத்தில் கூத்தாடட்டும்.
உன்மத்தம்கொண்டவர்தம் ஆட்டத்தால்
உருக்குலைந்து கிடக்கும் உலகில்
நன்மத்தம் எங்கும் நிலவட்டும்.
என்மத்தம் இதுவே!
உன்மத்தமும் இதுவாக இருக்கட்டும்.
இருப்பின்,
உன்மத்தம் நீங்கி,
நன்மத்தப் பூ மலரும்.
நானிலம் செழிக்கும்.

இலங்கைக்கு மார்க்கம் படிக்க வந்த ரஹ்மான் 'இளம்பிறை' மாத இதழ் ஆசிரியரான கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இளம்பிறை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  'இவரது   அரசு பதிப்பகமும் பல சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பினை நல்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  'இளம்பிறை'யின் இதழ்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்: - பதிவுகள்.காம்- 


மூத்த தலைமுறையினருக்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும். கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தினால் ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை அக்கால ஊடகங்கள் அப்போது அதற்குச் சூட்டி, சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன. ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும் அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! அப்போது நான் படித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இருந்தேன். எம்மைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.

எமது வீட்டிலே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம். அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும் யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம். 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

மேலும் படிக்க ...

தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'

நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்'  என்று எனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன். இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள். அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.

எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.

இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா. இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: 'தஞ்சைநால்வர் குடும்பத்தினர் வடிவமைத்த நாட்டிய மரபு'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 842 3057 8587 | Passcode: 525751

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நண்பர் முருகபூபதி! - நோயல் நடேசன் -
  2. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு! - முருகபூபதி -
  3. எனது புதிய ஆங்கில வலைப்பதிவு 'vngiritharancorner' - வ.ந.கி -
  4. (பயனுள்ள மீள்பிரசுரம்) நூல் அறிமுகம்: பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’ - ஜெயமோகன் -
  5. என்ன நினைச்சே. நீ என்ன நினைச்சே' - 'சொக்கத்தங்கம்' பாடலொன்று.
  6. சமுதாயவியல் சார்ந்த பண்பாட்டுச் சிந்தனை! - கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -
  7. கனடாவில் பாவலர் பாலரவியின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா. - குரு அரவிந்தன் -
  8. அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் முருகபூபதிக்கு பாராட்டு விழா! - தகவல்: கிறிஸ்ரி நல்லரெத்தினம் -
  9. 'செயற்கைப் புலமை'யும் (AI) சர்வதேச நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் மீதான அதன் தாக்கமும்! - ஜோதிகுமார் -
  10. புதுவெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -
  11. அறிமுகம்: பாடகர் இளமைந்தன் இளஞ்சேயின் பாடல்கள்! - வ.ந.கி -
  12. விதைப்பந்து திருவிழா – இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - றியாஸ் அகமட். சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் -
  13. நிருவாகிகள் தெரிவு - இலங்கை மாணவர் கல்வி நிதியம் - முருகபூபதி -
  14. வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்!
பக்கம் 42 / 115
  • முதல்
  • முந்தைய
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • அடுத்த
  • கடைசி