தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று  ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.

இவர் கிராமத்துக் காட்சிகளை விவரிக்கிற அழகில அந்தக் கிராமமும் எளிமையான மனிசரும் , ஆடுமாடு நாய் பூனையளும் , அப்புவும் ஆச்சியும் , எழுதியவரும் அவர் வேலிப் பொட்டுக்கால  சில்மிசம் பண்ணுற  பக்கத்து வீட்டு பதின்மத்துக் காதலி மலரும்  கண்ணுக்கு முன்னால கலைப்படம்  மாதிரி வந்து வந்து போகினம். அப்பிடி ஒரு சரளமான இயல்பான எழுத்து. இந்த எழுத்தில மலர் மாதிரி கொஞ்சம் மயங்கிப் போகாத ஆக்கள் இருக்கேலாது.

வடக்கின்ரை பிரதேச வழக்கிலையே முழுப்புத்தகத்தையும் எழுதி, அந்த மொழிவழக்குக்கு ஆவணப் பெறுமதி சேர்த்த   உவருக்கு , உண்ணாண நாங்கள் எல்லாரும்  ஒருக்கா  நன்றி சொல்லத்தான் வேணும்.

கனபேர் உவரின் முகமறிஞ்சது முகப் புத்தகத்திலதான். (Kandiah Pathmananthan ) எந்த நேரமும் பகிடி விடுகிற படங்காட்டுற இவர் ஆர் எண்டு  தேடிப்பாத்தா, இவர் ஒண்டும் லேசுப்பட்ட ஆளில்லை. இவருக்குள்ள பல முகங்கள்  விஸ்வரூபங்கள் வித்துவரூபங்கள் இருக்குதெண்டு விளங்கும்.

காலம பேஸ்புக்கை திறந்தால் இவர்ரை பூனைதான் முமுவியளமாக வந்து நிக்கும். இவருக்கு 3 மகள்மாரும் ஒரு மகனும் இருக்கினம். ஆனா ஊருக்கு தெரியாமல் இரண்டு பெடியும் ஒரு பெட்டையும் வைச்சிருக்கிறாராம். அவையும் வீட்டிலதான் இருக்கினமாம்.

வில்லங்கமா யோசிக்காதேங்கோ.

இரண்டு நாயும் ஒரு பூனையும். இதென்ன தேவையில்லாதது எல்லாம் இங்கை வந்து சொல்லுறதோ எண்டு நினைக்காதேங்கோ.

தேவை இருக்கு.

   - நூலாசிரியர் காரைக்கவி. கந்தையா பத்மானந்தன் -

சீத்துவக் கேடு புத்தகத்தில எட்டு அத்தியாயங்கள்ல, மனிசருக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்து , நாலு அத்தியாயங்களை வீட்டு விலங்குகளுக்கெண்டு ஒதுக்கி இருக்கிறார். அந்தக்கால மனிசர் அதுகளோட  உப்பிடித்தான் ஒண்டுமொண்டா சீவிச்சவை எண்டது உங்களுக்கும் தெரிஞ்ச விசயம் தானே.

மற்றது , இவர் முகப்புத்தகத்தில எழுதிற பதிவுகளைப் பாத்தா , கடவுளே வீடுகளில ஆம்பிளையளைக்கு இப்படியும் ஒரு கொடுமையோ என்ற இரத்தக் கண்ணீர் வரும். இவ்வளவு வீட்டு வேலை செய்து போட்டு இதெல்லாம் எழுத எங்கை இவருக்கு நேரம் இருக்கெண்டு யோசினை வரும்.

நீங்களும் வாசிச்சிருப்பீங்கள். இவர் விடியப்பறம் எழும்பி வீடுவாசல் கூட்டி தேங்காய் திருவி சமைச்சு , சட்டி பானை கழுவி, பேந்து பூனை நாயோடை செல்லம் கொஞ்சி அதுகளுக்குப் படிப்பிச்சு , பேஸ்புக்கில நாலஞ்சு படமும் பதிவு போட்டு அதோடை முடியுமோ எண்டால், இல்லையே.

வல்லபம் கெட்டதுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த இந்த வீட்டுக்கார அம்மாவுக்கு , தலைசீவி சீலை உடுக்க உதவி ஒத்தாசை செஞ்சு,

என்ரை கடவுளே, வாரிவளவுப் பிள்ளையாரே!

உப்பிடி  எழுத்திப்  போட்டினம் எண்டு ஐயாவும் வீட்டம்மாவும் குறை நினைக்கப்படாது. உங்கட பதிவுகளைப் பாத்து பாத்து இதெல்லாம் வாய்ப்பாடமா போயிட்டுது. அதால இப்ப எழுதிறதிலையும் உங்கட சொல்லுகள் வசனங்கள் எல்லாம் வந்து வந்து போகும். முகப்புத்தகத்தில ஆர்ரையும் பதிவை கொப்பி பண்ணி போடுற ஆக்கள் மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளுங்கோவன்.

காரைக்கவியாரின் ஒரு முகப்புத்தகப் பதிவு இப்பிடிச் சொல்லுது.

//சீத்துவக் கேடு புத்தகம் வெளியிடுறதைப் பத்தி நான் யோசிச்சு கொண்டு இருக்க , அங்கை வந்த வீட்டம்மா , எப்ப பாத்தாலும் யோசிச்சுக் கொண்டு இருந்தால் சரியே. அடுப்படியில எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கெண்டா. நான் ஒண்டும் இல்லையப்பா எல்லாரும் என்ரை புத்தகத்தை நல்லம் நல்லம் எண்டுகினம். அதுதான் ஒரு நூறு புத்தகம் அடிப்பமோ எண்டு பாக்கிறன் எண்டன்//

அதுக்கு வீட்டம்மா சொல்லுறா....

//அடியடா புறப்படலையிலை எண்டானாம். அடிச்சுக் கொண்ணந்து வைக்கிற புத்தகங்களுக்கு எலிக்கு கறையானுக்கு ஆராம் காவல் இருக்கிறது. புத்தகம் அடிக்கிறதா இருந்தால் கோத்தையைக் கூட்டியந்து காவல் வைக்க வேணும். அவ்வளவுதான் சொல்லிப்போட்டன் எண்டிறா//

பிறகு கோத்தை என்ன சொல்லுறா...

//செம்மறி உதை எழுதிற நேரம் எதையாவது படிச்சு பட்டம் வாங்கி இருக்கலாமே எண்டு.//

இதையெல்லாம் வாசிக்கிறவை திகைத்து மலாரடிச்சு போவினம்.

ஆனா இது உண்மையில்ல.

புத்தகத்தில என்னுரையை வாசிச்சால் தெரியும்.

இவர்ரை குடும்பம் அனுசரணையுடன் இருக்கிறதால தான் பத்தரால இவ்வளவு இலக்கியத்தில மினக்கட முடியுதெண்டு. முதல்ல எழுதினதெல்லாம் பகிடிக்குதான் பாருங்கோ.

உண்மையில, எங்கட ஊரில நாங்கள் முந்தி எப்பிடிச் சீத்துவமா சீவிச்சனாங்கள் எண்டு உருப்படியா ஏதாவது எழுதலாம்தானே எண்டு இந்த வீட்டம்மாதான் உசாரேத்தி விட்டவா. அவாதான் வலு அமத்தறையா இருந்து எழுதினதில திருத்த வேலையளும் செய்திருக்கிறா.

இவர்ரை அம்மா , 96 வயது சிமாட் லேடி அதை வலுவா ஆதரிச்சிருக்கிறா. பிள்ளைகள் உதவியிருக்கினம். முன்னுரை நயவுரை பின்னுரை தந்த ஆளுமைகள் பேராசிரியர்கள் மகேஸ்வரன் அவர்கள், சிவலிங்கராஜா அவர்கள் ,ஞானம் ஆசிரியர் வைத்தியர் ஞானசேகரன் அவர்கள் உற்சாகம் தந்திருக்கினம் .

எல்லாம் சேர்ந்து இவரை அமானிக் கள்ளுக் குடிச்ச மாதிரி போதேயேற்றிப் போட்டுது. எழுதித் தள்ளி விட்டார். இப்ப நாங்கள் கிடந்து கஷ்டப்படுறம்.

சரி இனி சீரியசான கதைக்கு வருவம்.

சீத்துவக் கேடு என்னும் இந்த நூலின் சமர்ப்பணமே வித்தியாசமானது. அன்பும் நன்றியும் நிறைஞ்சிருக்கு. ஆசிரியர் சொல்லுறார்,

//நாங்கள் நல்லா இருப்பம் எண்டு நம்பிச் செத்துத் துலைஞ்சு போன எங்கடையள் எல்லாத்துக்கும் //

சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் இது எண்டு.

 'செத்துத் துலைஞ்சு போன' என்ற வார்த்தை எவ்வளவு ஆழமானது. வலி தருவது. தொலைஞ்சு போன முன்னோர்கள் மற்றும் அனைவரது தியாகங்களுக்கும் இதய அஞ்சலிகள்.

பழமையை நினைக்க வைக்கிற அட்டகாசமான அட்டைப்படம். எங்கட வரலாறு, வாழ்க்கை பற்றி நல்ல திறமான விசயங்களோட , பச்சை பச்சையாயும் சிலது இருக்கு. சில இடங்கள்ள கடுஞ் சிவப்பாயும் இருக்குது.

ஒரு திறமை வாய்ந்த கதாப்பிரசங்கி கதை சொல்லுற போது , சனம் ஆவெண்டு திறந்த வாய்மூடாம கேக்கிற மாதிரி பல விசயங்கள் இந்தப் புத்தகத்தில இருக்குது . காரைநகர் எண்டு  இப்ப வழங்கப்படுற காரைதீவின்ரை வரலாறு சம்பிரதாயங்கள் பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்த அறியாத பல சங்கதிகள் இருக்குது.

ஆனா பிறந்து வளந்த ஊரை மையப்படுத்தி எழுதினாலும், இது பொதுவான ஈழத்து தமிழ்க் கிராமங்கள் எல்லாத்துக்கும் பொருந்தும் . இதை வாசிக்கிற ஆருக்கும் சீத்துவக்கேடு என்கிற இந்தப்  புத்தகம் , துலைஞ்சு போன எங்கட வடிவான வாழ்க்கை முறை எண்டது  நினைவு வரும்.

//மெய்ஞ்ஞானம் தத்துவம் மருத்துவம் பொறியியல் வரலாறு உளவியல் அளவியல் மெய்யியல் பெண்ணுரிமை சிறுவர் உரிமை விலங்கு உரிமை//

எண்டு இண்டைக்கு சொல்லப்படுற வாழ்வியல் உரிமைகள் , மனித உரிமைக் கோட்பாடுகள்  எல்லாத்துக்குமான விசயங்களை சங்ககால மற்றும் இடைக்கால இலக்கியங்கள் அண்டைக்கே எடுத்துக் கூறியிருக்கு எண்டதை, நூற்றுக்கணக்கான செய்யுள் ஆதாரங்களோட விளக்கி இருக்கிறார்.

அதை , இப்பத்தைய நேற்றைய வாழ்வோட ஒப்பிட்டுப் பாத்திருக்கிறார். உண்மையில சங்க காலத்தில ஆரம்பிச்சு விகாரமடைந்த தமிழர் வாழ்வுதான் இப்ப இருக்கிறதாம் .

இப்பிடியாக சங்ககாலத்தில் தொடங்கி , காரைக்கவியாரின் சின்னவயசு நினைவுகளோட இண்டைய காலத்தில முடியிற பலபல கதையள் இருக்கு.

 படைப்பாளர் நல்ல தலைக்கனம் உடையவர் எண்டு முன்னமே உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும். புத்தகத்தை பாத்ததும் ஆதளிமாதளிப்பட்டுப் போவியள். புத்தகமும் அவ்வளவு கனதி. பக்கங்களால மட்டுமில்லாமல் நல்ல இலக்கியக் கனதியும் இருக்கிற நூல் இது.

இந்தப் புத்தகத்தில எட்டு அத்தியாயங்கள்.

எங்கட ஊரடி ,எங்கட தலைவாசலடி ,எங்கட அடுப்படி , எங்கட கிணத்தடி எங்கட மாட்டடி எங்கட ஆட்டடி எங்கட கோழிக் கூட்டடி எங்கட நாயடி என எட்டு இயல்கள். எங்கட நாயடியில் அழகான குடும்பப் படமும் இருக்குது. வரலாற்றில இவரோடை , இவரிண்ட இரண்டு நாயும் பூனையும் இடம்பெறப் போகுதுகள். அதிஸ்டம் பண்ணினதுகள்.

 இண்டைக்கு காரைநகர் எண்டு சொல்லுற காரைதீவு ஊர் பற்றிய வரலாறும் அந்த ஊரின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட எல்லா பாரம்பரிய பழக்கவழக்கங்களும் விலாவாரியாக பிரதேச வழக்கில எழுதி இருக்கிறார் .

 சுட்டுச் சொல்லுகளான உவன் உவள் உவை என்கிறதை, உவட்டை எண்டும் உவட்டையள் எண்டும் பாவிக்கிற வழக்கம் காரைநகரில இருக்குதாம். ஊரில நினைவு கூர வேண்டிய மூதாதையர் வாத்திமார் பெயரையும் புத்தகத்தில உவட்டையள் சொன்னது எண்டு சொல்லி, அவைக்கும் ஆவணப் பெறுமதியை கொடுத்திருக்கிறார்.

நன்றியுள்ள மனிசன்.

மொத்தத்தில சீத்துவக்கேடு வலு சீத்துவமாக இருக்கு.

இந்த எழுத்தில இருக்கிற அழகியல் ரசனை எப்பிடி இருக்கும் எண்டு அவரிண்டை வசனத்திலயே சொல்லுறன்.

குலுக்கி விட்டுட்டு மூடியைத் திறந்த சோடா போத்தல் மாதிரி பொங்கி பிரவாகிச்சு வந்து கொண்டே இருக்கும். அதுக்குள்ள மலரின்ரை நினைவுகளும் பழச் சோடா மாதிரி வந்து மணம் வீசும்.

காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவில் தேர்முட்டியடியில நிண்டு கதைபேசி சோமபானம் குடிச்ச மாதிரி ஒரு கிக் வரும்.

மற்றது...,

விசயங்கள் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது மாதிரி ஒண்டில தொடங்கி இன்னொண்டு அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். .

இதில மிக விசேசமா   சொல்ல வேண்டியது  என்னெண்டா , வலு சீரியசான விசயத்தையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லுற இவர்ரை நகைச்சுவை உணர்வு பற்றி. சிரிப்பு மனிசரின் மனநிலைய மேம்படுத்துற ஒரு அருமருந்து எண்று எல்லாருக்கும் தெரியும்.

மற்றது ஒரு விசயத்தை இன்னொண்டோட சேர்க்கிறதுக்கு உத்தியாகப் இவர் பாவிக்கிற உவமை ஒப்பீடுகளின் அழகுகள் பற்றி. அவை சிரிக்கிறதோட சிந்திக்கவும் வைக்கிது.

முதல்ல , சிந்தனையை தூண்டுற ஒரு ஒப்பீடு.

காரைநகரில இருக்கிற போர்த்துகேயர் ஒல்லாந்தர் கால கோட்டை பற்றி சொல்லுற போது ,

சங்ககாலத்திலயே  சேரசோழ பாண்டிய மன்னர்கள்  பெரிய பெரிய கோட்டைகள் கட்டினவை . அங்கை பாதுகாப்பு பொறிமுறை, மற்ற ஆயுதங்கள், போர் முறைமைகள் எப்பிடி பலமானதா இருந்தது எண்டு அப்பு சொல்லுவார்.

ஆச்சி உதைக் கேட்டுப் போட்டு, 'கோதாரி விழுவார் உவங்கள் சேரசோழபாண்டியர் உவ்வளவு அள்ளுகொள்ளையா உந்த அம்புகளை வைச்சிருந்து ,

நான் பெரிசோ நீ பெரிசோ எண்டு தங்களுக்குத் தாங்களே அடிபட்டது தானே மிச்சம். பிரளுவார் சனத்தை அழிச்சதை விட வேறென்னத்தைக் கண்டவங்கள். உதைத்தானே பேந்து எங்கட இயக்கங்களில இருந்த விறுமதடியன்களும் செய்தவங்கள்'  எண்டு சொல்லுவா.

பாருங்கோ இந்த வசனத்தில இருக்கிற வரலாற்றுத் தகவல்கள். ஒப்பீடுகள். கிண்டல் மிகுந்த யதார்த்தம். அருமையான வாழ்த்துரைகள்.

நீங்கள் நினைப்பீங்கள், இப்ப மட்டும் எங்கட அரசியல்வாதிகள் என்ன குறைவோ எண்டு. உண்மைதான் .

அடுத்ததா, நகைச்சுவையான ஒப்பீட்டுக்கு ஒரு உதாரணம் சொன்னால்.....

காரைநகரில டபுள் டெக்கர் ஓடின கதையை சொல்லுவார். அதோடே ஒப்பு நோக்கி இரண்டு பெண்டாட்டிக் காரரின்ரை கதை இவருக்கு ஞாபகம் வரும். பிறகு அந்தக் காலத்தில பேமஸ் ஆக இருந்த சின்னமேளம் பற்றின கதை வரும். அவையில சிலபேர் சக்களத்தியா  வந்து  குடும்பத்தில பிரச்சனையளும்  இருந்ததாம்.

அதோடை பாரம்பரிய பழக்கவழக்கங்களில இருக்கிற அறிவியல் காரணங்களையும் இதே மாதிரி முஸ்பாத்தியா சொல்லுவார்.அதில ஒண்டு இது.

போனகிழமை ஊரில சிடிபி பஸ்ஸில தனிய இருந்து ஒரு படம் போட்டிருந்தார். அங்கை தனிய பஸ் பிடிச்சு போறது ஆட்டோவை விட மலிவாம் எண்டு. காரைநகரில அப்ப போக்குவரத்து பிரச்சனை ஒண்டும் இல்லை போல எண்டுதான் ஆரும் நினைப்பினம்.

ஆனா, சீத்துவக் கேடு புத்தகத்தில தாம்பத்தியத்தில ஒரு முக்கியமான போக்குவரத்து பிரச்சனையைப் பற்றி விலாவாரியாக அலசியிருக்கிறார்.

அட்டணக்கால் போடுற பொம்பிளையள் எப்ப போடக்கூடாது, எப்ப போடோணும் எண்டு. போடக் கூடாத நேரத்தில போட்டா போக்குவரத்து பிரச்சனைகள் வருமாம். அதுமாதிரி, போட வேண்டிய நேரத்தில போடாட்டியும் வருமாம்.

 ஐயா சொன்னால் சரியாத்தான் இருக்கும் . குறிப்பா பெண்புரசுகள் அதை வாசிச்சு குடும்ப வாழ்க்கையில பயனடையுங்கோ . ஆம்பிளையள் வேலி தாண்டாம பாத்துக் கொள்ளுங்கோ .

தன்னுடைய ஊரான காரைதீவு பற்றி சரியான பெருமிதம் கொண்ட ஊர்வாசி இவர்.

ஆதிச்ச நல்லூரில கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தவை இங்கையும் கண்டுபிடிக்கப்பட்டதால , பெருங்கற்காலத்தில இருந்து  (கி.மு 10 - கி.மு 1 வரை) தமிழ்பேசும் சமூகமாகிய நாகர் குடியிருப்புகள் இங்கை இருந்திருக்க வாய்ப்புண்டு எண்டு சொல்லுறார்.

மற்றது பண்டைய துறைமுகம், அயல் நாட்டு வியாபாரங்கள், போர்த்துகேயர் கோட்டை பற்றிய விரிவான  தகவல்கள் தந்திருக்கிறார் .

ஈழத்து சிதம்பரம் எண்டு அழைக்கப்படுற காரைதீவு சிவன் கோயில் இங்கை இருக்கு. இங்கை உள்ள சைவமகாசபையில மகாத்மாகாந்தி இந்திராகாந்தி சுவாமி விபுலானந்தர் இப்படியான பல பெரும் தலைவர்கள் உரையாற்றிய வரலாறும் கொண்டதாம்.

சப்த தீவுகளில ஒன்றான காரைதீவு இயற்கை வளங்கள் நிறைஞ்சது. பழமையான நூலகம் இருக்கு . இது யாழ் நூலகத்திற்கும் முன்னோடியாக அமைந்ததாம்.

கல்விமான்களால் நிறைந்தது; ஒற்றுமை கடும் உழைப்பு விருந்தோம்பலுக்குப் பெயர் போனது என்ற தகவல்களும் இருக்கு .

இதெல்லாம் சொன்னவர் என அப்புவின்ரை தலையில பழியை போட்டுட்டார். மறுத்தான் விடுறவை அப்புவிட்டை தான் போகோணும்.

 சுருட்டு சுத்துற தொழில் அங்கை முக்கியமாக இருந்ததையும், உலக விசயங்கள் பரிமாறப்படுற இடமாக சுருட்டுக்  கொட்டில்கள் இருந்ததையும், இங்கத்தைய சுருட்டு இலங்கை முழுக்க விற்பனை செய்யப்பட்ட தகவல்களையும் எழுதி இருக்கிறார்.

'தீவார் திடுக்கிடுவார் திண்ணைக்கு மண்ணெடுப்பார்' ...

மற்றும் ....

'காக்கா பறக்காத இடமில்லை காரைதீவான் போகாத இடமுமில்லை' எண்டு சொல்லுறதுக்கும் , ஏற்றுக் கொள்ளுற மாதிரி நல்ல காரணங்கள் சொல்லி இருக்கிறார். அதாவது உலகத்தில எங்கை இருந்தாலும், காகம் மாதிரி குணம் நிறம் மாறாத தன்மை, விடிய வெள்ளன எழும்பிற  சுறுசுறுப்பு , ஒற்றுமை எல்லா இடமும் பரந்திருக்கிற தன்மை , செய்யிற வேலையில கவனம்  , சேர்ந்து 'கரையிற'  பண்பு இப்பிடி பல.

அவட்டையள் சொல்லுறதை நம்பத்தானே வேணும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே .

குஞ்சு எண்டதும் , காரைக்கவியார் மாதிரி இன்னொரு ஞாபகம் குறுக்கால வரும். முட்டைக் கோப்பியும் ஆட்டிறச்சியும் நெஞ்சுக்கு மட்டுமில்ல வேற சிலதுக்கும் நல்லதாம் எண்டு சொல்லுறார். அதோட முருக்கங்காயும் நல்லதாம் எண்டு செய்யுள் ஆதாரமும் தந்திருக்கிறார். தேவைப்பட்டவை கவனத்தில் கொள்ளுங்கோ.

 இண்டைக்கு தூசணம் மாதிரி நாங்கள் சொல்ல தயங்கிற 'புக்கை' எண்ட சொல்லு , பழந்தமிழ் இலக்கியங்களில சொல்லப்படுற 'புட்கை' என்கிற சொல்லுத்தான் என்கிற பிரயோசனமான தகவலும் இருக்கிறது . கைலாகு கொடுத்து வரவேற்கிறது இங்கிலீசு காரரிட்டை இருந்து நாங்க பழகேல்லை. அந்தக்கால அரசர்களும் கைகொடுத்து வரவேற்கிறவையாம் எண்டும் சொல்லுறார்.

எங்கட தலைவாசலடி என்ற இயலில் , அந்தத் தலைவாசல்களும் திண்ணைகளும் வட்டமாகப் பெண்கள் கூடியிருந்து கதைக்கும் பள்ளையடிகளும் வாரிவளவு தேர்முட்டியடிகளும் மதில்களும் குந்துகளும் , அன்றைய வாழ்க்கையில உறவுகள் வளர்க்கும் இடமாகவும் ஊர்புதினம் துளாவும் இடமாகவும் இருந்ததாம். சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் கூட , மன ஆற்றுகை தருகிற இன்றைய கவுன்சிலிங் சென்டர்களை ஒத்ததாகவும் இருந்த கதை கூறி ஏங்க வைக்கிறார்.

இதை வாசிக்கேக்கை சத்தியஜித் ரே மிருணாள்சென் , எங்கட பாலு மகேந்திரா லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படங்கள் பாத்த மாதிரி அப்பிடி ஒரு அழகியலோடை இருக்குது.

சங்கடப் படலை என்கிற அமைப்பு வீட்டுக்கு பாதுகாப்போடை அந்தக்கால சாதிப் பாகுபாட்டை பாதுகாக்கிற இடமாகவும் விளங்கினதாம்.

எங்கட அடுப்படிளும் கிணத்தடியளும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி நிலையமாக இருந்ததாம். குந்தி மூட்டும் அடுப்பு, ஆட்டுக்கல் , திரிகை, மத்து, உரல், அள்ளும் கிணறு என வீட்டுக்குள்ள ஒரு ஜிம் இருந்ததாம்.

அதால சீவிய காலத்துக்கும் ஆச்சி உட்சட்டை போடாமல் கட்டுக் கோப்பா உடம்பை மெயின்டெயின் பண்ணினவாம். அப்புவும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி வேலி தாண்டாமல் இருந்தவராம்.

அந்தக் காலத்திலே வீடு ஒரு ஜிம் மாதிரி. இப்ப வீட்டுக்கு வீடு ஜிம் போகினம் எண்டு இந்தக்கால பெண்டுகளைப் போட்டுத் தாக்கிறார்.

இந்த சைனாக்காறர் ஊரில் கண்டது நிண்டது எல்லாம் தின்னுறாங்கள் எண்டு நாங்கள் பகிடியா கதைக்கிறம்.

ஆனா சங்ககாலத்தில் எங்கட ஆக்களும் பூச்சி தவளை உடும்பு ஈசல் எலி ஆமைமுட்டை எல்லாத்தையும் ஒரு கை பாத்திருக்கினம்.

'கோதாரி விழுவார் யானையைக் கூட விடேல்லாயாம்' எண்டு ஆச்சி சொல்லுறா. அதோடை இந்தக்காலத்தில இங்கிலிசுப் பேரில் உலாவிற ஸ் ரீக், பாபிகியூ, கேபாப், பிரியாணி இதெல்லாமே அப்பவும் வேற பேரோட இருந்திருக்கு என்று சங்ககாலப் பாடல்களை ஆதாரம் வைச்சு விளக்கி இருக்கிறார்.

எங்கட மாட்டடி தான் எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். இந்த இயல் முழுக்க நகைச்சுவைக்கு ஈடாக ஓடிக் கொண்டிருக்கிற இன்னொரு விசயம் விலங்குகளில இருக்கிற  ஜீவகாருண்யம். விலங்குகள் மனிதர்களுடனே ஒண்டுமொண்டாக தமது வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட அற்புதமான காலகட்டம் அது.

மற்றது உவமையாக இவர் சொல்லுற விடயங்கள் .

பால் குடிச்சு வாய்விளிம்பில் நுரையோடு நிற்கும் கண்டுக்குட்டிக்கு , குழந்தைப் பிள்ளயளுக்கு சொந்தமான அத்தனை அழகும் இருக்கெண்ணுறார். புதிசா லாடன் அடிச்ச மாடுகளின்ரை நடையை புதிசா குதி உயர்ந்த செருப்பு போட்ட பொம்பிளையள் மாதிரியாம். அமரிலை நிக்கிற லட்சுமிக்கு கண்ணில ஜுவாலை எரியுமாம் . மாட்டுக்கு மாடு விடக் கூட்டிக் கொண்டு போனா , இந்த நாம்பன் வந்து பஸ்ஸில பாய்ஞ்சு ஏறுகிற இளந்தாரிப் பெடியள் மாதிரி ஏறும் என்கிறார்.

 லட்சுமியின் இளங்கன்று வெள்ளையன், கொஞ்சம் வளர்ந்த பிறகு 'எலெக்ஷன் ரிசல்ட் பாத்துக் கொண்டு ஓடித்திரியிற வேட்பாளர்' மாதிரி ஓடித்திரிவானாம். பாத்துக் கொண்டிருக்கிற தாய்க்காரி லட்சுமி என்ன செய்வாள் ? 'கட்டுக்காசு இழந்த வேட்பாளர்' மாதிரி அசை போட்டுக் கொண்டு படுத்திருப்பாளாம்.

அடுத்த எலக்சனிலை எங்கடயள் எத்தினைபேர்  உப்பிடி அசைபோடப் போகினமோ தெரியேல்லை.

அதோட ...

கன்று வளரும் போது நாணயம் குற்றல் , வண்டில் நடை பழக்கல், நுகத்தில கட்டல் மற்றும் மாட்டு வண்டில் சவாரி எண்டு பலதரப்பட்ட விசயம் சொல்லுறார்.

வண்டிலை கட்டுற நாம்பனுகளுக்கு நலமடிக்கிறதை வலு ஆதங்கத்தோட இவர் சொல்ல , ஆச்சி காத்திரமான கருத்தொண்டு சொல்லுறா.

'பெட்டையளோடை சேட்டை விடுற காவாலியளுக்கும் உப்பிடித்தான் நலமடிக்க வேணும்' எண்டு.

ஏறுதழுவல் திருமணத்திற்கான வீரவிளையாட்டாக இருந்ததையும் , ஆநிரை அந்தக் கால மன்னர்களின் செல்வங்களுள் ஒன்றாக இருந்ததாலை , ஆநிரை கவர்தல் யுத்த முறைகளில ஒன்றாக இருந்ததாம் எண்டு சொல்லுறார்.

 மனிசரைப் போல மாட்டுக்கும் சாமுத்திரிகா இலட்சணங்கள் உண்டாம். சைவசமயத்தில தெய்வங்களுக்கு , மிருகங்களை வாகனம் ஆக்கினதுக்கும், அதுகளில அன்பு செலுத்தி அரவணைக்க வேணும் என்கிற  காருண்யமே காரணமாம்.

இப்படியாக காரைநகர் பற்றிய பெறுமதியான வரலாற்றினை எழுதி , தான் பிறந்து வளர்ந்த தாய்நிலத்துக்கான நன்றிக்கடனை நிறைவேற்றிய காரைக்கவியார் , இண்டைக்கும் அடிக்கடி ஊர்மண்ணை மிதிச்சு, அந்த மண்ணின் வாசனையை கவிதை போல மனசில சுமந்து கொண்டு வாறவர் எண்டதை உண்ணாண நாங்கள் மனசார பாராட்ட வேணும்.

அவர் எப்பவும் இதே சிரிப்போட , இதே வீட்டம்மாவோட சந்தோசமா சுகமா வாழவும் , சுந்தரத் தமிழில நல்இலக்கியங்கள் படைக்கவும் வாரிவளவு பிள்ளையார் எப்பவும் அருள் புரிய வேணும். நலம் சூழ்க!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here