எழுத்தாளர் செம்மனச்செல்வி தேசிகனின் மறைவுச் செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். இவர் எழுத்தாளர் வடகோவை வரதராஜன், 'நடு' இணை ய இதழின் ஆசிரியர் அமரர் எழுத்தாளர் கோமகன், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன் ஆகியோரின் சகோதரி. யாழ் பல்கலைக்கழகத்  தமிழ்க் கலைத்துறைப் பட்டதாரியான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அண்மையில் வெளியான இவரது சிறுகதைத்தொகுப்பான 'காலப்புனல்' மூலமே முதன் முறையாக இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்துகொண்டேன். 'காலப்புனல்' பற்றியொரு விமர்சனக் குறிப்பினையும் பதிவுகள் இணைய இதழில் எழுதியிருந்தேன்.

இவரது மறைவுச் செய்தி எதிர்பாராதது. இன்னும் நிறைய எழுதுவார் என்று எண்ணியிருந்தேன். இவரது எழுத்துகளூடு இவர் பெயர் இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்.  இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர்கள், சகோதரர்கள் , நண்பர்கள் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்ந்து கொள்கின்றேன். இத்தருணத்தில் 'காலப்புனல்' பற்றி எழுதிய எனது விமர்சனக் குறிப்பின்  முக்கிய பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன்.



செம்மனச்செல்வியின் 'காலப்புனல்'

அண்மையில் பழைய ஈழமுரசு பத்திரிகைகளை எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டுரையொன்று கண்ணில் பட்டது.  10.11.1985 வெளியான ஈழமுரசில் வெளியான சிறுகதைத்திறனாய்வுக் கட்டுரை. அம்பலத்தரசன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை. ஈழமுரசில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சிறுகதைகளத் திறனாய்வு செய்வது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் மாதச் சிறுகதைகளைத் திறனாய்வு செய்திருந்தார் அம்பலத்தரசன். அக்டோபர் மாதக் கதைகளை எழுதியிருந்தவர்கள்: வடகோவை தி.செம்மனச்செல்வி, வதிலி சுக்கின், ச.முருகானந்தன் & சந்திரா தியாகராஜா. இவர்களில் சந்திரா தியாகராஜா , ச.முருகானந்தன் ஆகியோரை ஏற்கனவே அறிந்திருந்தேன். சந்திரா தியாகராஜா தற்போது சந்திரா ரவீந்திரன் என்று நன்கறியப்பட்ட புகலிட ,இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.

வடகோவை தி.செம்மனச்செல்வி வேறு யாருமல்லர். எமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் வடகோவை வரதராஜன், யோக வளவன், அமரர் கோமகன் ("நடு' இதழ் ஆசிரியர்) ஆகியோரின் சகோதரிதான். யாழ்  பல்கலைக்கழகத் தமிழ்க் கலைத்துறைச் சிறப்புப் பட்டதாரி. ஆசிரியையாகப்  பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் பற்றி அண்மையில்தான் இவரது அண்மைக்காலச் சிறுகதைத்தொகுப்பான 'காலப்புனல்' மூலம் அறிந்திருந்தேன்.  இவரது பெயர் செம்மனச்செல்வி தேசிகன்.

மேற்படி ஈழமுரசுச் சிறுகதைத்திறனாய்வில் அம்பலத்தரசன் விரிவாகவே ஈழமுரசு பத்திரிகையில் வெளியான இவரது 'கெட்டுப் போனவள்'  சிறுகதை பற்றி  எழுதியுள்ளார். பதினெட்டு வயது இளம் பெண்ணொருத்தியின் நாகரிக, முற்போக்கு எண்ணங்களுக்கும், பழமையில் ஊறிய பெற்றோரின் எண்ணங்களுக்கும் இடையிலான மோதலையே அம்பலத்தரசனின் விமர்சனம் எடுத்துக்காட்டுகின்றது.

இவரது சிறுகதைகள் பெரும்பாலும் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்ததால் நான் பெரிதாக இவரைப்பற்றி அறிந்திருக்கவில்லை.  இவரது 'காலப்புனல்' தொகுப்பு மூலம் இவரது இலக்கிய ஆளுமையினை ஓரளவு அறிய முடிகின்றது.   சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் & வில்லுப்பாட்டு என இவரது பன்முக ஆற்றலைத் தொகுப்பு பிரதிபலிக்கின்றது. அருகி வரும் கலையான வில்லுப்பாட்டு மேலும் இவரது கவனம் திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது. இவரது படைப்புகள் ஒரு மையக்கருத்தை வாசகர்களுக்கு ஓர் அறிவுரையாகக் கூறும் தன்மை மிக்கவை. அதற்கு இவரது ஆசிரியப் பணி அனுபவம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இவரது புனைகதைகள் பின்னப்பட்டுள்ளதை  அவதானிக்க முடிகின்றது., உதாரணத்துக்குத் தொகுப்பின் முதற்கதையான  வீரகேசரியில்  வெளியான 'பிள்ளையார் பிடிக்கப் போய்..' சிறுகதை வர்க்க வேறுபாடு எவ்விதம் ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பெறுவதில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை செல்வச்செழிப்பில் வாழும் நிமலன் மற்றும் ஏழமையில் வாடும் நகுலன் ஆகிய சிறுவர்களை மையமாகக்கொண்டு கூறியிருக்கின்றார். வடகோவை வரதராஜன், கோமகன் ஆகியோருக்கு உள்ள நகைச்சுவை உணர்ச்சி இவரது எழுத்திலும் தென்படுவதைக் கதையின் நடை, முடிவு மூலம் அவதானிக்க முடிகின்றது. 'பிள்ளையார் பிடிக்கப் போய்..' கதை பின்வருமாறு முடிகின்றது:

"கடவுளே நான் என்ன செய்யப்போறன்' பாக்கியம் இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். பாக்கியத்தின் குரல் கடவுளுக்குக் கேட்டது. கடவுள் மனிதர்களைப் பார்த்துச் சிரித்தார். பிள்ளையார் பிடிக்கப் போன மனிதர்கள் நல்ல குரங்குகளைப் பிடித்திருக்கின்றார்கள். கடவுள் திருவாய் மலர்ந்தருளினார்."

பாக்கியத்தின் மகனான நகுலனுக்கு ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் புலைமைப்பரிசில் கிட்டாமல் போய்விடுகின்றது. புலமைப்பரிசில் கிடைத்திருந்தால் நகுலனுக்குப்  பொருளியல் ரீதியில் மிகுந்த நன்மை தந்திருக்கும். அதே சமயம் கட்டுப்பாடுகள் நிறைந்த படிப்பில் ஆர்வமில்லாமலிருந்த் நிமலனை அவனது பெற்றோர் நேரத்துக்கு நேரம் உணவு கொடுத்து,  கவனித்து, பாடப் பயிற்சிகளைச் செய்ய ஊக்குவித்து புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சித்தியடைய வைத்து விடுகின்றார். அவ்விதம் சித்தியடைந்தும் அவனுக்கு உதவிப்பணம் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவனது தாய் பல் வைத்தியர். தந்தையார் பொறியியலாளர். ஆனால் அவன் அவ்விதம் சித்தியடைந்தது அவர்களது குடும்ப்பெருமையை ஏற்றி விட்டிருக்கிறது. அவர்களது கெளரவம், அந்தஸ்து, பெருமையை மகன் காப்பாற்றி விட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இதுதான் கதை. இக்கதையினூடு கதாசிரியர் சாடியிருப்பது மானுடர் மத்தியில் நிலவும் வர்க்க வேறுபாட்டை.

இன்னுமொரு கதை 'சிற்பிகளும் சிற்பங்களும்' மதவெறி எவ்விதம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது என்பதைச் சாடுகின்றது. தற்போது இலங்கை அரசியலில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக  வெடித்திருக்கும் குருந்தூர் மலை ஆலயப் பிரச்சினையின் மத்தியில் இக்கதையின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகின்றது.  சமந்தா (சிங்கள ஆசிரியை), ராதிகா (தமிழ் ஆசிரியை),கதீஜா (முஸ்லிம் ஆசிரியை) என  மூன்று மதங்களைச் சேர்ந்த ஆசிரியைகளுக்கு மத்தியில் நிகழும் மதம் பற்றிய உரையாடல்தான் கதை.  இறுதியில் ராதிகா சக ஆசிரியைகளின் மதம் பற்றிய கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலிறுப்பாள்: "மதம் மதமாக இருக்கின்ற வரையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.  அது மதங்கொள்கின்றபோதுதான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. அது போலவே இனம் இனமாக இருக்கின்ற வரையில் முரண்பாடுகள் தோன்றுவதில்லை. அது இனவெறியாக மாறும்போது முரண்பாடுகளும்,  கலவரங்களும் தோன்றுகின்றன."

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல் இத்தொகுப்பை மேற்படி இரு கதைகளையும் வைத்து பதம் பார்க்க முடிகின்றது. நூலின் என்னுரையில் 85 காலப்பகுதியில் பல கதைகளை பத்திரிகைகளில் எழுதியதாக செம்மனச்செல்வி தேசிகன் கூறுகின்றார். நிச்சயம் எதிர்காலத்தில் நூலகம் மேலும் பல பத்திரிகைகளை ஆவணப்படுத்துகையில் காணாமல் போன இவரது கதைகள் பல மீளக்கிடைக்கும் என்று நம்புவோம்.
இத்தொகுப்பில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் & வில்லுப்பாட்டு இவை தனித்தனி பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு  அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் வடிவமைப்பு வாசகர்களுக்கு அவர்கள்தம் வாசிப்பை இன்னும் இலகுவாக்கியிருக்குமென்பதென் கருத்து. எதிர்காலப்பதிப்புகளில் இது பற்றியும் கவனம் எடுப்பார்களாக.

செம்மனச்செல்வி என்பது  இவரது புனைபெயராகவிருக்கக் கூடுமென்று முன்பு  எண்ணினேன். ஆனால் அது இவரது இயற்பெயர் என்பதைப் பின்னர் அறிந்தேன். அதற்காக இவரது பெற்றோரைப் பாராட்டலாம்.

நன்றி: பதிவுகள்.காம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்