வி.சந்திரகுமாரின் (தம்பா) சிறுவர் நவீனம் 'கொரில்லா அரக்கன்' - வ.ந.கிரிதரன் -

குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியமென்பது குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்துக்கு முக்கியமானதொரு படிக்கட்டு. வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியத்துக்குப் பக்கங்கள் ஒதுக்கும் பத்திரிகை, சஞ்சிகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி , ஈழநாடு (பழைய) ஆகியவற்றில் வெளியான சிறுவர் பக்கங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பக்கங்கள் அவை. சிரித்திர்ன கண்மணி என்னும் சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டது. அழகான ஓவியங்களுடன், குழந்தைகளைக் கவரும் ஆக்கங்களுடன் வெளியான அச்சஞ்சிகை சில இதழ்களே வெளிவந்தது. கண்மணி நின்ற பின்னர் கண்மணி என்னும் பெயரில் சிரித்திரனில் சிறுவர் பக்கங்கள் வெளிவந்தன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அவ்வப்போது சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அவை நிலைத்து நிற்பதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது. எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவும் அண்மையில் அறிந்திரன் என்னும் நல்லதொரு சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டார்.அதுவும் நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் அதனைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார். இம்முறை அவர் வெற்றியடைய அனைவரும் உதவ வேண்டும்.


திருமாலுக்கு ஆட்பட நினைத்தமையாலும், திருமாலால் ஆட்கொள்ளப்- பட்டமையாலும் ஆண்டாள் என்பர். ஆடித் திங்கள் பூர நட்சத்திரத்தில் தோன்றிய இவர் பூமகள் அம்சம். பின்னர் கோதை நாச்சியார் எனவும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி எனவும் போற்றப்படுபவர். மார்கழி மாதத்தில் திருமாலை அடையும் வகையில் ஆண்டாளின் வழிபாடும் அமைகின்றது. இவ்வகையில் பாவை நோன்பு
பட்டலந்த படுகொலையின் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின், (13.3.2025) மலையக பாராளுமன்ற தலைமைகள் பின்வரும் கூற்றுக்களை கூறினர்:

சிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சிரஞ்சீவிகள் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வேடியப்பன் மற்றும் வேண்டியம்மன் வழிபாடு. மக்களால். பரவலாக வழிபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழரின் வீரத்தின் எச்சமான நடுகல் வழிபாட்டில் தொடங்கி உள்ள வேடியப்பன் வழிபாடானது இன்றும் மக்களால். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேடியப்பன் என்றாலே எல்லோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி என்ற ஊரில் உள்ள வேடியப்பனைத்தான் பொதுவாக அடையாளமாகக் கொள்கின்றனர். “கிருஷ்ணகிரி மாவட்டத்து கல்லாவி ஊரில் வேடியப்பன் கோவில் உள்ளது. வன்னிமரம் கோவிலில் உள்ளது. வேடியப்பன் உருவம் கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்லாக இருக்க வேண்டும். இவன் வன்னியர்களின் குலதெய்வம். 500 ஆண்டுகள் பழமை உடையது. நாள் பூசைகள் உண்டு. தைமாதத்தில் 7 நாட்கள் திருவிழா. நடைபெறும். அருகிலுள்ள முனியப்பனுக்கே ஆடுவெட்டி அழைத்து ஏழை எளியவர்களுக்குத் தருமம் செய்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூசைகள் உண்டு. மற்ற சாதியினரும் தற்போது வழிபடுகின்றனர்.”1
தலைப்பிறை கண்டார் அன்பர்!
NetFlix இல் வெளியாகியிருக்கும் Adolescence என்ற குறுகிய தொலைக்காட்சித் தொடரைப் பதின்மவயதினருடன் தொடர்பாக இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டும். நான்கு பகுதிகளைக் கொண்ட இதன் முதல் தொடர் தொடர் என் ஆசிரியர் வேலையுடனும், மொழிபெயர்ப்பாளர் வேலையுடனும் தொடர்பானதாகவும், நான் பார்த்திருந்த காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்ததால், ஒரேயடியாக இருந்து முழுவதையும் பார்த்துமுடித்தேன்.
திரு. எஸ். பி. சாமி என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு. செல்லையா பொன்னுச்சாமி 19-2-2025 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், யாழ்ப்பாணம் சென்ரல் மருத்துவ மனை, நொதேன் பீச் ஹேட்டல் போன்றவற்றின் உரிமையாளருமான இவரது மறைவு எங்கள் தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.

- தாவரவியல் அறிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் ஆசி.கநதராஜா அவர்களின் பவள விழாவினையொட்டி வெளியாகும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை. பதிவுகள் சார்பில் அவரை இத்தருணத்தில் வாழ்த்துகிறோம். - வ.ந.கிரிதரன் -

பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எமது குடும்பங்களைப் பார்வையிட அல்லது உல்லாசப்பயணியாக போகும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு ஆனால் இலங்கையின் உட்பிரதேசங்களுக்குச் சென்று வசதி குறைந்த மக்களுடன் பழகும்போது அவர்களின் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்விநிலை பற்றி அறியும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு. இலங்கை போன்ற நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியில் எந்தவொரு பாலமும் இதுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது மனவருத்தம் தரும் விடயம்.
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.




அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.

முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.
உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








