[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50 

அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும்  ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.

பல்கலையின் துணைவேந்தர் திரு சொக்கலிங்கம் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவரும், அறியப்பட்ட தமிழறிஞருமான- 'அறியப்படாத தமிழகம்' முதலான நூல்களின் ஆசிரியர்- முனைவர் தொ.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அந்த மூன்று நாள்களிலும் தமிழறிஞர்கள்/ஆங்கில இலக்கிய விமர்சகர்கள்/ தமிழ் இலக்கிய முன்னோடிகள், பெரும் பேராசிரியர்கள் - (Senior Doctorates), நெல்லை, மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுவை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் ஆகிய 7 பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த சுமார் 36 மூத்த பேராசிரியர்கள் ஆய்வுரைகளை (Research Papers) முன்வைத்தனர். (இதில் நான் மட்டும்தான்  பள்ளிக்கூட வாத்தியாருங்கோ!)

அந்த மூன்று நாள்களிலும் நெல்லை ப.க.வைச்சேர்ந்த -பல்வேறு கல்லூரிகளின் ஆங்கில மற்றும் தமிழ்த்துறை சார்ந்த- 60 பேராசிரியர்களுடன் அங்கேயே முதுகலை படிக்கும் சுமார் 60 மாணவர்களும் பார்வையாளர்களாக - விவாதங்களிலும் - கலந்துகொண்டனர்.  ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள், ஒவ்வொரு வேளையும் இரண்டு அமர்வுகள், ஒவ்வொரு அமர்விலும் ஒரு தலைவர், ஒரு பொருண்மை உரை(Key Note), + இரண்டு அல்லது மூன்று ஆய்வுரை, ஒரு கருத்துரை என, 5 அல்லது 6 பேர். எனும்படியாக,

1.கட்டமைப்பியம் , கட்டுடைப்பியம், 
2.புதுமையியம் , பின்னைப் புதுமையியம்,
3.மார்க்சியம் , பெண்ணியம் , 
4.காலனியம் , பின்னைக் காலனியம்,
5.நாடகம் - நாட்டார் இலக்கியம், 
6.தலித்தியம் , மறுகட்டமைப்பியம் 
ஆகிய 6 அமர்வுகள் நடந்தன. 

ஆக, மூன்று நாள்களிலும் தொடக்கவிழா, நிறைவு நிகழ்வு உட்பட சுமார் 40 ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இவற்றில்,சாகித்ய அகாதெமியின் தென்மண்டலச்செயலர் திரு கிருஷ்ணமூர்த்தி (பெங்களூர்), அலுவலகப் பொறுப்பாளர் திரு ஜிதேந்திர நாத் (சென்னை), திட்ட அலுவலர் திரு அ.சு.இளங்கோவன்(சென்னை),  ஆய்வாளரும் பத்திரிகையாளருமான கோவை ஞானி, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான 'காலச்சுவடு' கண்ணன்,  நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான், நாவலாசிரியரும் 'வானம்பாடி' மூலவர்களில் ஒருவருமான சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோருடன், முனைவர்கள் - சிற்பி (பொள்ளாச்சி), பாலா(நெல்லை), வீ.அரசு(சென்னை), அ.மங்கை(சென்னை), பத்மாவதி(சென்னை), கரு.அழ.குணசேகரன்(புதுவை), முத்துமோகன்(மதுரை) இரா.மோகன்(மதுரை), நிர்மலா(மதுரை), அ.இராமசாமி(மதுரை), இரா.முத்தையா(மதுரை), பூர்ணச்சந்திரன்(திருச்சி), பஞ்சு(புதுவை),நடராசன்(புதுவை), சம்பத்(புதுவை), ராஜா¡(புதுவை), ஆனந்தராஜன்(காந்திகிராமம்), தனஞ்செயன்(பாளை), முதலான பேராசிரியர்களுடன், நா.முத்து நிலவன் (புதுக்கோட்டை) போன்றோர் பங்கேற்ற கருத்தரங்குகள்!முனைவர் கா.செல்லப்பன் - நிறைவுரை.

தி.க.சி. நெல்லையே ஆயினும் தற்போது சென்னையிலிருப்பதால் வர இயலவில்லை.  தி.சு.நடராசன், திருமலை (இருவருமே மதுரை) வரவில்லை.  நான் இரண்டாவது நாள் காலை, 'மார்க்சியம்-பெண்ணியம்' எனும் முதல் அமர்வில் 'முற்போக்குக் கவிதைகள்' (progressive school of poems) எனும் தலைப்பில் பேசினேன். Many of the papers were submitted in English! கா.செல்லப்பன், பாலா, தோப்பில், ஞானி, காலச்சுவடு கண்ணன்,கே.ஏ.குணசேகரன், னந்தரா^, மற்றும் நான் போன்ற வெகுசிலரே தமிழில் பேசினோம். அதிலும் பாலா ஆங்கிலத்தில் கட்டுரையை வைத்து, தமிழில் பேசியது நன்றாக இருந்தது. ('பின்னைக் காலனியம்' - 'Post Colonialism' - எனும் அமர்வுக்குத் தலைமையேற்றிருந்த இவரது கவித்துவம் மிகுந்த பேச்சுக்கு, "சாம்சங் விளம்பரமும் சமஸ்கிருதச் செய்தி ஒளிபரப்பும்" என்று நான் குறிப்பெடுத்துக்கொண்டேன்) 

நான் முழுமையாக கட்டுரையைத் தயாரித்துக்கொண்டு போகாததற்கு ஒரு காரணம், குறிப்புகளை வைத்துக்கொண்டு பேச விரும்பியது. 'அந்த'அளவுக்கு ஆங்கிலம் தெரியாதது மற்றொரு காரணம். இனிமேல்தான் முழுமைப்படுத்தி, ஆங்கில வல்லாரிடம் தந்து மொழிபெயர்த்து, அடுத்த மாதத்திற்குள் அகாதெமி வெளியீட்டுக்கு அனுப்பவேண்டும். ஆய்வுக்கட்டுரைகளை தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களாக அகாதெமியே விரைவில் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்தார்கள். இந்த நூல் வந்தால், தமிழில் 'இசங்கள்'பற்றிய நல்லதொரு கையேடாக அது நிற்கும் என்பது உறுதி.

இது நிற்க. நெல்லை - பத்தமடைக் காரரும் நல்ல தமிழ்ச்சிறுகதையாளரும் எனது நெருங்கிய நண்பரும், கோணங்கியின் அண்ணனுமான 'வெயிலோடு போய்' தமிழ்ச்செல்வனை அன்று மாலை நிலவோடுபோய்ச் சந்தித்தோம்! (தற்போது 'தீம்தரிகிட' இதழில் தனது 'அறிவொளி' அனுபவங்களை அழகாக எழுதிவரும் அவர், முதுகுத்தண்டில் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்தார். அவரைப் பார்க்கப் போகிறேன் என்றதும் பாலாவும், சிற்பியும், சி.ஆர்.ரவீந்திரனும் தாமும் வருவதாக என்னுடன் கிளம்பிவிட்டார்கள்!  அவர் வீட்டில் ஓர் அழகான நூலகம், அதில் சில யிரம் அரிதான புத்தகங்கள்! இப்போதுதான் அஞ்சல் துறையில் இருந்து VRS கொடுத்து வந்திருக்கும் அவர், அந்தக் காசில் PC, Printer, Scanner எல்லாம் வாங்கி, 'எதற்கோ' தயாராகிவிட்டது போல் தோன்றியது! அவருடனே -அவர் மனைவி வெள்ளத்தாய் அவர்களின் அன்பான விருந்தோம்பலில், இரவுச்    சிற்றுண்டியை முடித்து நாங்கள் கிளம்பும்போது, அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் 'இருட்டு எனக்குப் பிடிக்கும்' எனும் குழந்தைகள் நூல் ஒன்றைத் தந்தார். நமது 'தமிழ் மடற்குழுக்களை'ப் பற்றிச்சொல்லி, விரைவில் இணைய இணைப்புப் பெற்று, 'முரசு அஞ்சல்' கற்றுக்கொண்டு உறுப்பினராகக் கேட்டுக்கொண்டேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாலாவும், சிற்பியும் தாமும் உறுப்பினராவது குறித்து ஆர்வமுடன் கேட்டனர்.  நமது இணைய மடற்குழுக்களின் மட்டுறுத்துநர் - நண்பர்கள் அவர்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் எழுதி, உறுப்பினராக அழைத்து, பிறகு தமிழில் முரசு அஞ்சலில் எழுதுவது குறித்தும் விளக்கிட வேண்டுகிறேன். வானம்பாடிக் கவிஞர்களும், புதுக்கவிதை முன்னோடிகளுமான இவ்விருவரும் நமது இணைய நண்பர்களாவது, நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதுதானே? அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் இதோ:

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அதோடு, கவிஞர் சிற்பி அவர்கள், நமது இணைய நண்பரான திரு நா.கணேசன் அவர்களின் நெருங்கிய உறவினர் என்று தெரிவித்ததோடு, அவர்கள் சில ண்டுகளுக்கு முன் லண்டன் வழியாக பாரீஸ் சென்ற நினைவுகளை எல்லாம் பகிர்ந்துகொண்டதும் சுவையாக இருந்தது. 

இன்னும் கருத்தரங்கில் கிடைத்த பல நல்ல குறிப்புகளை, சில நல்ல நண்பர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை! உண்மையில் அதுதான் என் மகிழ்ச்சிக்குரியதே! இயன்றால் அதுபற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

அன்புடன்,
நா.முத்து நிலவன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்