முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய படையினரின் மனித உரிமை மீறலகள்! (ஓவியம் - AI) - நந்திவர்மப் பல்லவன் -

யப்பானில் சில நாட்கள் (12) :ஹிரோஷிமாவில் நதிகள் சலனமின்றி ஓடுகின்றன! - நடேசன் -

ஹிரோஷிமா நகரத்தின் நதிகளின் மேலே உள்ள பாலத்தில் நடந்தபடி, தற்போது நினைவுச் சின்னமாக இருக்கும் எலும்புக்கூடான (Atomic Bomb dome) என்ற ஒரு கட்டிடத்தைப் பார்த்தவுடன், எனது வயிற்றில் அமிலம் ஊற்றி வயிற்றில் நெருப்பு பற்றுவது போன்று எரிவைக் கொடுத்தது. லைவ் சஞ்சிகைக்காக (life Magazine) க்காக அனுப்பப்பட்ட ஜோன் ஹிசியின் (John Hersey) ஹிரோஷிமா என்ற நாவலின் சுருக்கம் ஏற்கனவே வாசித்திருந்தேன். அந்த நாவலில் 1946 ஆண்டு அமெரிக்காவிலிருந்து செய்திகளை சேகரிக்க சென்ற ஜோன் ஹிசி ( John Hersey), அணுக்குண்டு வெடித்தபோது அங்கு வாழ்ந்த ஆறு மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து செவ்வியினைப் பெற்றார்.
அதன் பிரகாரம், அணுக்குண்டு வெடித்தபின் அவர்களது அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் அடைந்த அனுபவங்களை வைத்து ஹிரோஷிமா நாவலை எழுதினார். அவர்கள் ஆறு பேரில் , இரு வைத்தியர்கள் , எழுதுவினைஞர், யப்பானிய கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மன் கிறிஸ்துவ பாதிரியார் மற்றையவர் யப்பானியத் தாயாகும். இந்த நாவல் அவர்களது மூன்று நாட்களை நமக்குத் தரும்போது இதயத்தை நிறுத்தி உறையப் பண்ணுகிறது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் காலை 8.15 மணியளவில் அந்த அழிவுக்கு நேரம் குறிக்கப்பட்டது. அமரிக்க அதிபர் ஹரி ரூமன் கட்டளைப்படி சிறிய பையன் (Little Boy )என்ற பெயரில் அணுக்குண்டு போடப்பட்டது. தற்பொழுது உள்ள நினைவு கட்டிடத்தின் மேலாக வெடித்தது. அப்பொழுது அந்தக் கட்டிடத்தின் (Industrial Promotion Hall) இரும்பைத் தவிர மற்றைய எந்த கட்டிடப் பொருட்களும் அங்கு மிஞ்சவில்லை . போட்ட குண்டு ஆகாய வெளியில் நிலத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது- காரணம் நிலத்தில் வெடித்ததால் அதனது தாக்கம் சுற்றியுள்ள கட்டிடங்களால் குறைக்கப்படும்.
நடேசனின் 'தாத்தாவின் வீடு' நாவல் பற்றி... - புஷ்பா ஜெயா நயினை ஊராள் -

அனுபவங்களே சிலரை நம்முன் அறிமுகப்படுத்துகின்றன. சிலரை நண்பராக, சிலரை உறவினராக. சிலரை எழுத்தாளராக, கவிஞராக அறியச்செய்கின்றன. நடேசனை எனக்குத் தந்தது என் ஊர் உறவுமுறைதான். ஆனால், அவரது எழுத்துகள் எனக்குள் ஒரு புதிய உறவைப் பிறக்கச் செய்தன—ஒரு வாசகர்–எழுத்தாளர் உறவு. நடேசனின் பல நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த நாவல் தனித்துவம் வாய்ந்தது.
இது நம்மை ஒரு மறக்கப்பட்ட தீவுக்கு அழைத்துச் செல்கிறது. வளங்கள் குறைந்த, உறவுகள் குறைந்த, மக்கள் சத்தமும் கூட மெல்லியதாகத்தான் இருக்கும் ஒரு இனச்சூழலை; ஆனால் அந்த மண்ணின் வாசனை மட்டும் அழியாதது.
மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய சிந்தனைகள்! (1) - எல்.ஜோதிகுமார் -

- இளைஞன் எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை - ... டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiiah) -

- 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் In Ceylon's Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் எழுத்தாளர் சக்தீ அ. பால ஐயா (சக்தீ அ.பாலையா) அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு பாக்கியா பதிப்பகத்தால் இரு பதிப்புகள் 1956, 2007 இல் வெளியிடப்பட்டன. மேலுமொரு பதிப்பு செய்தி பதிப்பகத்தால் 1969இல் வெளியிடப்பட்டது. -
முன்னுரை:
“அமர காவியம் இது” என ஆர்ப்பரித்து மொழிப்பெயர்த்துள்ள சக்தீ பாலையா கூறுவார்: ‘நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்ப்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள்’ (மேற்கோள்:திலகர்:சூரியகாந்தி:25.12.2023).
இக்கூற்றில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்றாலும் திரு.சக்தீ பாலையா அவர்களே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.
கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரில் இருந்து சற்றே மாறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாய் இருக்கக்கூடும்.
1952இல், மலையக மக்களின் வாக்குரிமை பறிபட்டமைக்கு எதிராக, காங்கிரஸ், பிரதம மந்திரியின் அலுவலக வாயிற்படியில், காந்திய மோஸ்தாரில் ஒரு சத்தியாகிரகத்தை நடத்தியிருந்தது. கிட்டத்தட்ட 798,000 தொழிலாளர்களை அன்று கொண்டிருந்த மலையகம் இக் கொடுஞ்செயலுக்கு எதிராக, ஏன் வேலை நிறுத்தங்களில் இறக்கப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானதொன்று. வெறும் 6000 தொழிலாளர்களை மாத்திரமே, வேலை நிறுத்தம் அல்லாமல், வெறும் சத்தியாகிரகம் என்ற பெயரில் பங்குபற்ற செய்தமை ஒரு வரலாற்று கேள்வியாகின்றது.
வாணிதாசனின் தொடுவானம் கவிதை மறுவாசிப்பு! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.
கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில வரிகளைக் காலச் சூழலுக்கு மட்டும் ஏற்றவை என்று கொண்டாலும் அவற்றில் ஏராளமான செய்திகள் சமகாலத்தின் தேவையாகவும் சமூகத்தின் அங்கலாய்ப்புகளை வெளிப்படுத்தி உள்ள ஆவணமாக அமைந்துள்ளதுள்ளன. இத்தகைய தன்மைகளைக் கொண்ட இப்பிரதி வாசிக்கின்ற பொழுது அவற்றில் சில கூறுகளை நாம் அடையாளம் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்று அழகியல் சார்ந்த விவரிப்புகள். இது எக்காலத்திற்கும் உரியதான ஒன்றாக விளங்குகிறது. அழகியலை வெளிப்படுத்தும்விதம் காலந்தோறும் தொடர்ச்சியாக மாறுதல்களைச் சந்தித்து வந்தாலும், அதன் உள்ளார்ந்த அகம் என்றும் நிலைபெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படிப் பார்க்கிறபொழுது கவிஞன் தான் கண்ட - தன் மனதைக் கவர்ந்திழுத்த அழகியலை எளிமையான சொற்களில் சொல்லிச் சென்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
சான்றாக,
‘’மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும் !
மலர்கள் பரப்பி உயிர்களைக் கூவிடும் !
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும் !
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும் !
கொடுமை இருளகல ஒளி எங்கும் தாவிடும்!’’
என்ற முதல் கவிதை இயற்கையின் அழகை எளியச் சொற்களால் சித்தரித்துவிடுவதைப் பார்க்கலாம். என்றாலும், கவிதையின் இறுதிவரி கவனிக்க வேண்டியதாக உள்ளது. அந்த வரி ஒளி பற்றியதாக இருந்தாலும், அந்த ஒளியால் அகற்றப்படும் இருள் வெறும் இருளா? என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் அது ‘கொடுமை இருள்’ என்று சுட்டப்பட்டுள்ளது. இருள் என்பதன் பொருள் என்ன? இருள் யாருக்கு என்ன கொடுமை தந்தது என்பன போன்ற வினாக்கள் பின்னணியில் நாம் விரித்துப் பொருள் கொள்ளலாம். மேலும், எழுதப்பட்ட காலத்தில் மட்டுமன்றி இன்றும் புதுமையானதாகவே அவ்வரி உள்ளதை உணரலாம்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 36
Join Zoom Meeting | Meeting ID: 838 9328 0707 | Passcode: 2025

Dr. Kawsalya Subramaniam and Dr. Subramaniam Nagarasa Iyer invite you for a scheduled Zoom meeting in Chinthanai kalam(isai-Nadanam)
Join Zoom Meeting | Meeting ID: 885 9929 2299 | Passcode: 372549

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “தமிழ்ப் பண்பாட்டை உலகமயப் படுத்துவதில் பேச்சுக்கலையின் அரசியல்”
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். அந்நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் , ஒரு சில மாறுதல்களுடன் ஒளிபரப்பப்பட்டது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். சோக்கல்லோ என்னும் அடைமொழியை இவருக்கு வழங்கிய இந்நாடகத்தை இவரைப்பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் முதலில் பார்க்க வேண்டிய நாடகமாக நிச்சயம் பரிந்துரைக்கலாம்.
நூல் மதிப்புரை: எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்! - அம்ஷன் குமார் -

கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.
ஈழ நாடக அரங்கினதும் கல்விப்புலத்தினதுமான முக்கிய அடையாளமாக விளங்கும் பேராசிரியர் சி.மௌனகுரு இம்மாநாட்டின் துவக்க உரையை நிகழ்த்தியுள்ளார். ஈழ நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டு நாடகம் பற்றியும் அவர் வரலாற்றுப் பார்வையுடன் சுருக்கமாகவும் செறிவுடனும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நாடகம் பிரதானமாக ஆற்றுகை வடிவம் என்றாலும் அது இலக்கியப் பிரதியாகவும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்த இலக்கியப் பாரம்பரியம் நம்மிடையே இருந்தபோதிலும் நாடகம் பற்றிய நல்லெண்ணங்கள் வளராததன் காரணமாகவே அதன் வரலாறும் பிரதிகளும் தொலைந்து போனதை குறிப்பிடுகிறார். செவ்விலக்கியங்கள் நாடகப் பிரதிகளை தம்முள் கொண்டுள்ளன என்பதை தெரிவிக்கும் அவர் நாடகமாகவே இலக்கிய கர்த்தாக்கள் அவற்றை எழுத முன்வராதது பற்றிய தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். “ அது கம்பராமாயணம் அன்று. அது ஓர் கம்ப நாடகமே. கம்பன் நாடகம் எழுதியிருப்பின் தமிழருக்கு காளிதாசன் போல ஒரு நாடக ஆசிரியன் கிடைத்திருப்பான்” என்கிறார். கூத்துப் பனுவல்களாக பள்ளு, குறவஞ்சி நூல்கள் 16, 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நம்மை தொடர்வன என்பதைக் கூறிவிட்டு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நவீன தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றுவாய் என்று குறிப்பிடுகிறார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோரைத் தொடர்ந்து சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் புனைகதை எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ராமானுஜம், நா.முத்துசாமி, மு.ராமசாமி, இன்குலாப் ஆகியோர் நாடகப் பிரக்ஞையுடன் எழுதிய நாடகங்கள் ஆகியவற்றையும் நாடக இலக்கியத்தின் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இப்போக்குகளுக்கு இணையாக ஈழத்தமிழ் நாடக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். பேச்சோசை நாடகங்கள், கவிதை நாடகங்கள், அபத்த வாத நாடகங்கள், சிறார் நாடகங்கள், பெண்ணிய நாடகங்கள் என்று பலதரப்பட்ட போக்குகளையும் இதில் அறிமுகம் செய்கிறார். மேலைத் தேய மரபுகளின் வழிவந்த சிந்தனைகளின்பாற்பட்டவற்றை நாம் கண்மூடித்தனமாக அணுகாது விமர்சனப் பார்வையுடன் நமக்கானவற்றை அடைய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் மௌனகுரு.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடந்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
2021இல் பதினொரு மணிநேரம் இணைய வழியில் சிறப்புற நிகழ்ந்த பேராதனைத் தமிழ்த்துறையின் 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி நூல் குறித்து இந்தியத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை 'எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்'
(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2021 டிசம்பர் 15 ஆம் திகதியன்று இணையவழியூடாக, காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதும் அது இயலாமல் போனது. உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனாப் பெருந்தொற்றினால் இலங்கையும் அடிக்கடி பொதுமுடக்கங்களை எதிர்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிப்புற்ற நிலையில், இம்மாநாட்டினை இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
”ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்பதைப் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டமைந்தது ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டு. ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் கோரப்பட்ட போது, ஒழுங்கமைப்புக் குழுவினருக்குக் கிடைத்த ஆய்வுக்கட்டுரைகள் புலமையாளர் குழுவினால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு தரத்தின் அடிப்படையில் 29 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன. மாநாட்டில் அவற்றை அளிக்கை செய்வதற்கான அனுமதி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டினைத் ஆரம்பித்து வைத்த தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையுரையை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எம். டி. லமாவன்ச மற்றும் கலைப்பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ஈ. எம். பி. சி. எஸ். ஏக்கநாயக்க ஆகியோர் முறையே பிரதம அதிதி, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தமிழ்த்துறையின் இச்சிறப்பான முன்னெடுப்பினை வாழ்த்தி மகிழ்ந்தனர். அத்தொடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஆதார சுருதி உரையினைப் பேராசிரியர் சி. மௌனகுரு நிகழ்த்தியிருந்தார். தொடக்க நிகழ்வில் நிறைவாக மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நன்றியுரையை நிகழ்த்தினார்.
பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (11) - ஜப்பானிய மதுக்கள் - நடேசன் -

நாங்கள் யப்பான் போகும் போது எனது மகன் கேட்ட விடயம் ‘’ யமசாகி 12 வருடங்கள் (Yamazaki 12 Year Old Single Malt Japanese Whisky)’’ வரும்போது வாங்கி வரும்படிகேட்டான். விலையைப் பார்த்துவிட்டு ‘’ இது அதிகமானது’’ என்றபோது ‘’ யப்பானில் மலிவாக கிடைக்கும்’ என்றான்.
அதைப்பற்றி அறிவதற்கு கூகிளில் பார்த்தபோது மற்றைய புகழ்பெற்ற ஜப்பானிய மதுக்கள் எல்லாம் அரிசியிலிருந்து வடிக்கப்படுவன. ஆனால், இது மட்டும் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டு, செப்பு கொள்கலத்தில் வைத்து ஆவியாக்கப்பட்டு, மீண்டும் வரும் அல்ககோலில் மலையிலிருந்து வரும் நீர் கலக்கப்படுகிறது . இந்த முறையை ஸ்கொட்லாந்தின் வெளியே யப்பானியரால் மட்டுமே கையாண்டு தயாரிக்கப்பட்டது. அத்துடன் இந்த விஸ்கியில் மலையிலிருந்தவரும் நீருடன் சில பழங்களின் வாசனை சேர்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஸ்கொட்லாந்தில் விஸ்கியை பற்றியும் அயர்லாந்தில் பியரைப் பற்றியும் அறிந்ததுடன், அவர்கள் தயாரிப்பதை சென்றும் பார்த்தேன். எனது முதுநிலைப் படிப்பில் (Applied biotechnology) இதை ஒரு பாடமாகச் செய்ததால் என்னை அறியாது அல்ககோல் தயாரிப்பில் ஒரு கவர்ச்சி உள்ளது.
மனித வரலாற்றின் ஆரம்பத்தில் வலி நீக்கும் நிவாரணியாகப் உலக மக்களால் பாவிக்கப்பட்டது பியரே (நாம் கள் பாவித்தோம்). ஓபியம் எனப்படும் அபின் பாவனைக்கு வரும்வரையில் சாதாரண மக்களுக்கு பியரே கிடைத்தது . 7000 வருடங்கள் முன்பு சீனாவில் பியரை வடித்த கலங்களையும் மற்றும் வடித்த பொருட்களை ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தார்கள் .
தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -- வ.ந.கிரிதரன் -

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன்.
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்-
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதை: அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை -தேவகாந்தன்-

*ஓவியம் - AI
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை.
அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன.
அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது.
நடந்தது இதுதான்.
கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அனைவரும். ஜுன் கடைசியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறையென ஒரு விளம்பரத்தைக் கண்டு ஞாபகமாகும் கணநாதன், குதூகலத்தில் கிரீச்சிடுகிறான். ‘என்ன, அவ்வளவு சந்தோஷம்!’ என்றபடி அவனைப் பார்த்து சிரிக்கிறார் தோமா. ‘மிஷேலுக்கு இந்தமுறை மொன்றியலுக்குப் போகிற திட்டமிருக்கிறது. உனக்கு ஸ்கார்பரோதான். உன் ஆங்கில வகுப்பு கட்டாயம். அது முடிய நேரமிருக்குமென்றால், பக்கத்தில்தானே இருக்கிறது மிலிகன் பார்க், போய் ஏலுமானவரை சுற்றிக்கொண்டே இரு.’
அவர் வேடிக்கையாகத்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆனாலும் கணநாதன் மனம் தாங்குப்பட்டுப் போனான். பெறா மகன் – வளர்ப்புத் தந்தை ஆகிய உறவுகளுக்கிடையில் எப்போதாகிலும் ஒரு விரிசலின் கணம் சம்பவிக்கக்கூடுமோ?
சண்முகதாசனின் நினைவாக...(2) - எல். ஜோதிகுமார் -

6
ஆனால், இவை அனைத்தும், கிட்டத்தட்ட, நேற்றைய அரசியலாகின்றது. அதாவது, இவை அனைத்தும் ஒரு முனை உலக ஒழுங்கின், ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளன. இன்றோ, நிலைமை வேறுபட்டுள்ளது. அமெரிக்கா, தானே ஏற்படுத்திய கடந்த கால ஒப்பந்தங்களில் இருந்தும் அமைப்புகளில் இருந்தும், தனது சர்வதேசிய போலிஸ்காரன் என்ற கடப்பாட்டில் இருந்து வாபஸ் வாங்கியும் வெளிக்கிளம்பி ஒதுங்கிக் கொள்ளும் சூழ்நிலையானது, இன்றைய உலகில், உருவாகி விட்டது.
உதாரணமாக, 2021இல், தனது முழு மூச்சில் ஏற்படுத்திய கால சுவாத்தியம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொள்வதாக 20.01.2025 இல் ட்ரம்ப் கைச்சாத்திடும் சூழ்நிலை தோன்றி விட்டது. (நான்கு வருடங்களில்).
இதனைப் போன்றே, அல்லது இதனை ஒத்ததாய், உலக வர்த்தக சந்தைக்கு (WTO) தான் வழங்க வேண்டிய பொருளாதார கடப்பாடுகளைத் தாமதித்து வழங்க போவதாகவும் இதேபோல் ஐக்கிய நாடுகளின் பல அமைப்புகளில் இருந்து விடைபெற்று கொள்வதாகவும் (UNESCO போன்றவை) அல்லது அவற்றின் பல அமைப்புகளுக்கு கொடுபட வேண்டிய நிதியைக் குறைத்தும் தாமதப்படுத்தியும் வழங்குவதாகவும் அல்லது UNHRC போன்ற மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் இருந்து 03.02.2025 முதல் முற்றாக விலகியும் தனது புதிய அரசியலை இன்று அமெரிக்கா கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்கா தனது அரசியல் முகத்தையும் மீள வடிவமைக்க வேண்டிய தேவையை இந்த மாறிய உலகானது ‘உருவாக்கி’ உள்ளது எனலாம். இனியும் சர்வதேச போலிஸ்காரன் என்ற முகத்துடன் வலம் வராமல் புதிய அரசியல் முகத்தைத் தரிக்க அமெரிக்கா இன்று நிர்பந்திக்கப்பட்டுப் போகின்றது.
ஏர் என்னும் சொல் அமைந்த திருக்குறள்கள் - முனைவர் புட்பா கிறிட்டி -

ஏர் என்றால் கலப்பை. இது ஒரு உழவுக்கருவி. வயலில், மண்ணை உழுது, பதப்படுத்தி, விதைப்பின் முன்பும், நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி, கீழ் மேலாகக் கிளறப் பயன்படும் கருவி ஆகும். ஏர் மரத்தால், அல்லது இரும்பால் செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி, மண்ணைக் கிட்ட பயன்பட்டது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாங்கருவி ஆகும். முதலில் மாந்தர் ஏரை இழுத்தனர். பின்னர் ஏர் மாடுகள், குதிரைகள் பூட்டி உழுதனர். இன்று இதற்கென இழுபொறி இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
ஏர் என்ற சொல், பள்ளு என்னும் தமிழ் சொல்லில் இருந்து பிறந்துள்ளது. பள்ளு என்றால், உழவு. உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால், பள்ளம் தோன்டுவதால், அது ஏர் எனப்பட்டது.
ஏரின் அடிப்படை உறுப்புகள்.
1. நுகம் அல்லது கிடைவிட்டம்.
2. ஏர்க்கால்
3. குத்து நிலைக் கட்டுப்படுத்தி,
4. துளறு.
5. உளி (முன் கொழு)
6. கலப்பை அல்லது கொழு
7. பரம்பு அல்லது வார்பலகை.
1975ஆம் ஆண்டின் இத்தாலி நாட்டில், நாணயத்தில் இத்தாலிய லிரா நாணயத்தில் கொழுவின் இலச்சினை படம் பொறிக்கப் பட்டுள்ளது.
கலப்பை = ஏரினுழார் உழவர் (குறள். 14)
உழவு ஏரினுநன்றா லெருவிடுதல். (குறள் 1038)
அழகு = கடனறிவார் முன்னின்றிரப்புமோ ரேஎ ருடைத்டு (குறள். 1053)
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். (குறள் . 14)
நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு - தேடல் ) - வ.ந.கிரிதரன் -

*ஓவியம் AI
அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!
இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம் எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்? இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை. சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை.
கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்?
இவ்விதமான சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத் தட்டினாள். அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.'கண்ணா!" என்றாள்.
பதிலுக்கு நான் " கண்ணம்மா" என்றேன்.
சண்முகதாசனின் நினைவாக...(1) - ஜோதிகுமார் -

அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.
ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.
வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.
2
மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.
இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.
வெளிவந்து விட்டது எழுத்தாளர் எல். ஜோதிகுமாரின் '23ம் வயதில் பாரதி'

'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியான , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ம் வயதில் பாரதி' தற்போது நூலாக வெளியாகியுள்ளது.
பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 | நூலை வாங்க
நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும் செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26) அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு
வீரகேசரி, தினகரன் & மித்திரன் நிறுவனங்களின் கவனத்துக்கு.....

இன்று நூலகம் தளத்தில் ஈழநாடு , சுதந்திரன், உதயன் போன்ற பத்திரிகைகளின் பழைய பிரதிகள் பலவற்றைப் பார்க்க முடிகின்றது. ஆனால் வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தினகரன், ராதா, செய்தி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் பிரதிகள் பலவற்றைக் காண முடிவதில்லை. இப்பத்திரிகைகளில் வெளியான ஆக்கங்களைத் தேடுவது சிரமமாகவுள்ளது.
கோவை சொல் முகம் சந்திப்பு பற்றி... - சுப்ரபாரதிமணியன் -

கோவை சொல் முகம் சந்திப்பு 6/7/25 கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம் சிற்றரங்கில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பற்றிய நான்கு அமர்வுகள், நாவல்கள் பற்றிய நான்கு அமர்வுகள், நடைபெற்றன.சிறப்பான ஆய்வுகள். விகரம், பூபதி, சுஷில்குமார், சுதா சீனிவாசன்,நவீன், அருணா, , உமா பாலாஜி, நரேன் ஆகியோர் உரையாற்றினர். நுணுக்கமான இளைஞர்களின் பார்வைகள் . பெண்களின் பார்வையில் மீட்சி தேடும் விடுதலை என்று அமைந்தது.
சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

ஓவியம் - AI
கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.
நான்கு மொழிகள் பேசக்கூடியவள் கிளியோ.பியானோவில் அழகான பல இராக இசைகளை வாசிக்கக்கூடியவள்.சமையல் அல்லது தோட்டத்து வேலைகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போதும் மனம் கவரும் ஏதோ ஒரு இசையைக் கேட்கும் கலாரசிகையான புத்திசாலித்தனமான கிளியோ இன்று அவளின் பல தரப்பட்ட பொருட்களால அலங்கரிப்பட்ட அறையில் இல்லை. வீட்டை விட்டு காணாமல் போனாளா அல்லது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனாளா?
கிளியோவைத் தத்தெடுத்து வளர்த்த ‘அம்மா’ ஸாரா பல யோசனைகளுடன் கிளியோவின் படுக்கைக்கு அருகில் ஒரு மரக்கட்டை போல விறைப்பாக நிற்கிறாள். ஸாராவால் நகர முடியவில்லை. பய உணர்வு அவளைச் சூழ்ந்திருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. வெளியில் இலையுதிர்காலக் காற்று பலமாகவும் கோபமாகவும் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் குண்டன் பலவீனமான பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதைப் போல அது கண்ணாடி ஜன்னலைத் தாக்குகிறது. சூரியன் வெளிச்சம் குறைந்து பரிதாபமாக இருக்கிறான். கிளியோவின் மறைவில் சூரியனும் மகிழ்ச்சியடையவில்லை போலும்.
நியூசிலாந்து சந்திரனின் (ஜோர்ஜ் அருளானந்தம்) ‘புலம் பெயர்ந்தவனின்; கனவுகள்’ என்ற சிறுகதை குறித்து... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
- புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் , அவர்கள்தம் அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ,இவை எவ்விதம் புகலிடச் சூழலில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியற் சூழலின் தாக்கங்களுக்கு உள்ளாகின்றன, அவை எவ்விதமான பாதிப்புகளை முதலாவது தலைமுறையினருக்கு ஏற்படுத்துகின்றன என்பதை இக்கதை ஆராய்வதை நவஜோதி யோகரட்னத்தின் இந்தக் குறிப்பிலிருந்து உணர முடிகின்றது. இழந்த மண்ணின் சமூகக் கட்டமைப்புகளை, அபிலாசைகளைச் சுமந்து வந்து புதிய இடங்களில் நட்ட , முதலாவது தலைமுறையினரின் மன உணர்வுகளை மேற்படி கதை விபரிப்பதையும் உணர முடிகின்றது. - பதிவுகள்.காம் -
நல்ல புத்தகம் ஒன்று வாசகனின் கையில் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே அதற்கொரு உயிர் வந்துவிடும். எல்லாக் காலகட்டத்திலும், புறக்கணிப்புக்கள் மத்தியிலும் கதைகள்தான் எம்மோடு பேசக் காத்திருக்கின்றன. புத்தகங்கள்தான் அத்தகைய அந்தரங்கமான விடயங்களையும் நினைவுகளினூடாக எமக்குப் பரிசளிக்கின்றன. கதைகளுக்கு இதயம் இருக்கிறது என்று நம்புகின்றேன்.
தத்துவப் புத்தகங்களை படிக்கும்போது என்னுள் ஓசையை எழுப்பாது சத்தமில்லாமல் படித்து சத்தமில்லாமலே போய்விடுகின்றன. ஆனால் கதைப்புத்தகங்கள் என்னுள் துணிச்சலுடன் ஒரு கலகக் குரலாகித் தொனிக்கிறது. பொதுவாக எல்லாப் படைப்பாளிகளும் தனது காலகட்டத்தில் செல்லாத காசாகவும் பல காலங்களுக்குப் பிறகு அவர்கள் அரிய பொக்கிஷங்களாகவும் மாறிவிடுகின்றார்கள். இத்தகைய பல படைப்பாளிகள் வெளிச்சம் காட்டுவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். வாழ்க்கை பற்றிய பாடத்தை இத்தகைய படைப்பாளிகளால்தான் காட்ட முடிகின்றது. படிப்பது கதையை அல்ல நிஜவாழ்வின்; மாற்றங்கள் பற்றிய தெளிவை நம்முள் உணர்த்துகிறது.
அந்த வகையில் சற்று வித்தியாசமாக ‘புலம் பெயர்ந்தவனின் கனவுகள்;’ என்ற ஜோர்ஜின் சிறுகதை என்னுள் பேசியது.
ஊருக்கும் நாட்டிற்கும் பெரும் சேவையாற்றிய பெரும் மனிதரை இழந்து நிற்கின்றோம். மேடையில் இரங்கலுரை வழங்கிய ஒருவர் தழுதழுத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார் என்று ஜோhஜ் கதையை ஆரம்பிக்கின்றார். எனக்குத் தவன் என்பவரை முப்பத்தைந்து வருடங்களாகத் தெரியும். தவன் இலங்கையின் வடக்குப் பகுதியல் இருந்து எமது நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தவன். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறியதாக அடிக்கடி கூறிக்கொள்வான். தவன் தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் எமது நாடான நியூசிலாந்திற்குக்; குடியேறியிருந்தான். அந்த நேரத்தில் இலங்கையிலிருந்து வருகை தந்தோர் பெரும்பாலாக வைத்தியர்களும், பொறியியலாளர்களும் ஆக இருந்தனர். அவர்களுக்குக் கூடத் தகுந்த வேலை வாய்ப்புகள் எமது நாட்டில் வந்தவுடன் கிடைக்கவில்லை. இதனால் அதிகமானோர் ‘பீசாகட்’, ‘பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் வேலை செய்தனர்.
நடிகர் திலகத்தின் நினைவாக... ஊர்க்குருவி -

நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும் நடிகர் திலகத்தின் படங்களைப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு. அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய அம்சம். பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும், வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம் நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.