எழுத்தாளர் அகணியின் 'இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு', 'கட்டுரைச் சாரல்' மற்றும் 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' நூல்களைப்பற்றிய சிந்தனைகள். - வ.ந.கிரிதரன் -

எனக்குப் பொதுவாக அதிகம் வாசிப்பவர்களை, அதிகமாக எழுதுபவர்களை. அதிகமாகத் தம் தர்க்கரீதியிலான சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களைப் பிடிக்கும், அவர்கள்தம் கருத்துகள் முரண்பட்டவைகளாக இருந்தால் கூட அவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத் தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பதற்காக இயங்குபவர்கள் என்பதால் நான் அவர்களை மதிப்பவன். எழுத்தாளர் அகணி சுரேஷ் (சி.அ.சுரேஷ்) அத்தகையவர்களில் ஒருவராக நான் அடையாளம் காண்பவன்.
பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் ஐக்கிய இராச்சியத்தில் கணனித் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். தற்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தலைவராகவும் இருந்து வருபவர். இவரது எழுத்துலகப் பங்களிப்பு கவிதை (மரப்புக்கவிதையுட்பட), சிறுகதை, நாவல், கட்டுரை (அறிவியல், ஆன்மிகம், இலக்கியம்) , இசைப்பாடல் எனப் பன்முகப்பட்டது. சிறந்த பேச்சாளர். இவரது கரகரத்த குரல் கேட்பதற்கு இனிமையானது. தமிழகத்துத் திமுகப் பேச்சாளர்களை நினைவூட்டுவது.




வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி… என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.



அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.






தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









