ஏப்ரல் மாதச் `சிந்தனைக்களம்’ நிகழ்வு: ‘பண்ணிசைமரபும் ஓதுவார்மூர்த்திகளும்’
பகுதி–3
“மாறும் உலகின் முகம்”
இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.
இதற்கான சான்று அல்லது ஆதாரங்களை வெளிகாட்டி நிற்கும் தடயங்கள் இருவகைப்படுகின்றன. ஒரு புறம், அவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்காவின் உள்விவகாரங்களுக்கு உள்ளேயே, அடங்கி போகின்றன. (உலக நாடுகளில் இருந்து வெவ்வேறு விதத்தில் அமெரிக்கா கடன் பெற்று இயங்கும் ஒரு போக்கும், அதற்கான அதன் திட்டங்களும், இவ்வடிப்படையில் இருந்து எழும் அதன் கடன்பெறும் உச்ச வரம்பின் எல்லைப்பாடும், இதனுடன் சேர்ந்து ஒலிக்கும் கேள்விகளான டாலரின் ஆதிக்கம் ,காசடிக்கும் நடைறை அல்லது திறைசேரி முறிகளை விற்று பணம் பறிக்கும் முறை) போன்ற விவகாரங்களில், இதற்கான தடயங்கள் வெளிப்பட செய்கின்றன.
இதனுடன் இணைந்தாற்போல், அமெரிக்கா, அண்மையில் மேற்கொண்ட Hypersonic ஏவுகணையின் தோல்வி ARRW (13.02.2023) பின் இங்கிலாந்தின் VIRGIN ORBIT போன்ற விண்வெளி நிகழ்ச்சிகளின் தோல்வி (09.01.2023) பின் ஜப்பானிய முதல்தர விண்வெளி ராக்கெட்டின் ஏவுதலின் போதான தோல்வி (07.03.2023) -இவை அனைத்தும் மேற்கின் தொழில் நுட்ப அல்லது இராணுவத் துறையின் பின்னடைவுகளைச் சுட்டும் அதேவேளை இம்மூன்று பிரதான நிகழ்வுகளுமே, இவ்வருடத்தின் முதல் ஆரம்ப மாதங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற தோல்விகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
42 சிங்களக் கவிஞர்களின் கவிதைகளை எழுத்தாளர் இப்னு அஸுமத் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான கவிதைகள். வலம்புரி கவிதா வட்டத்தின் வகவம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலில் மரணித்த அனைத்து இன மக்களுக்கும் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. நூலுக்குக் கவிஞர் மேமன்கவி சிறப்பானதோர் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவு தினம் ஏப்ரில் 8. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. அறுபதுகள், எழுபதுகள் ஜெயகாந்தனின் எழுத்துலகப் பொற்காலம். உண்மையில் வெகுசன இதழ்களான விகடன், கல்கி, தினமணிக்கதிர் ஆகியவை அவருக்குக் களமமைத்துக்கொடுத்தன என்பது வியப்புக்குரியது. விகடனில் அவரது 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' தொடராக வெளியானது. அத்துடன் அவரது மிகவும் புகழ்பெற்ற நாவலான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' கோபுலுவின் உயிர்த்துடிப்பான சித்திரங்களுடன் தொடராக வெளியானது. கோபுலுவின் ஓவியங்களுடன் அந்நாவலைப் படிப்பது அற்புதமானதோர் வாசிப்பனுபவம். நாவலின் பாத்திரங்களை உள்வாங்கி, அவற்றின் உளவியலை உள் வாங்கி மிகவும் சிறப்பாக அவ்வோவியங்களைப் படைத்திருப்பார் கோபுலு.
- தமயந்தி (தமயந்தி சைமன்) கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்கலைஞர், காணொளிக் கலைஞர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர். ஏப்ரில் 8 அவரது பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர்களில் எழுத்தாளர் தமயந்தியும் ஒருவர். முகநூலில் அவர் பதிவு செய்திருந்த இக்கவிதைகள் அவர்தம் ஆளுமையினை வெளிப்படுத்தும். கடலுடனான அவர்தம் பிணைப்பை வெளிப்படுத்தும். தமயந்தி கடலின் மைந்தன். நவீனத்தமிழ் இலக்கிய உலகில் கடலைப்பற்றிய இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முக்கியமானவை. - பதிவுகள்.காம் -
1. சாட்சிகள் செத்த இரவு
எதுவுமே தெரியாததுபோல்
காலையில்
எழுந்துவரும் சூரியனிடம்
எதைத்தான் எடுத்துரைக்கும்
முகமுடைந்த பனந்தீவுகள்?
இரவோடு இரவாக
எல்லாவற்றையும் அள்ளிச்சென்ற
புயலின் வழித்தடம் பற்றி
எஞ்சியிருக்கும் கோரைப்புற்களிடம்
சாட்சியம் சொல்ல ஏது வார்த்தைகள்?
நிலமெங்கும்
கடற்கரை மணலைப்போல
சிந்திக்கிடக்கும் நட்சத்திரங்களை
கடகத்தில்
அள்ளிச் செல்கிறது கடல்.
புயல் பிரித்தெறிந்த
ஏதாவதோர் குடிசையின் கீழ்
நிலவு
உடைந்து கிடக்கக்கூடுமென
எல்லா திசைகளிலும்
தேடி அலைகிறது கடல்.
காரான் சுழி உறிஞ்சி
கரையில் போடப்பட்ட மீன்களுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருந்த
நிலவைக் கண்டு
விம்மி அழுதது கடல்
நிலவும் கடலும்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டபோது
பாதிப்பகலை முடித்துக்கொண்டு
மீண்டும்
பனந்தீவுகளுக்குப் பின்னால்
மறைந்துகொண்டது சூரியன்.
நாளையிரவோ
அல்லது
இன்னொரு நாளின் இருளிலோ
மீண்டும் புயல் வரக்கூடும்.
அப்போதும் சூரியனுக்கு
எதுவுமே தெரியாதுபோம்.
சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
தொடர்ந்து மன்றத்தின் ‘கலைச்சங்கமம் - 2023’ என்ற ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மருதநிலத்தின மாண்புகள் என்ற தலைப்பில் சண்டிலிப்பாயின் வரலாறு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய கட்டுரை ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. சண்டிலிப்பாய்க்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை ஆறு, கூவல் தெப்பக்குளம், கல்வளை அந்தாதி, கண்ணகி அம்மன் கோயில் போன்றவை பற்றிய விபரங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒளவை என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகழுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்கும்ச் சூட்டுவது இன்றும் நாம் காணும மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின பெயரைப் பின்னால் பலர் பெற்றுத் திகழந்ததில் வியப்பில்லை. மேலும் ஒளவை என்றாலே அறிவு என்பதாக அறிவுக்கேயுரிய பெயராக ஒளவை என்பது வழங்கலாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககால ஒளவையாரைப் பற்றிக் காண்போம்.
- தெளிவாகப் பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும். Zoom link
1
“31.4 ட்ரில்லியன் டாலர் கடன்?”
“,,,யாருக்கும், இது ஒரு செய்தியாக இருக்கலாம்.
எங்களுக்கு அல்ல.
கடன் பெறுவதே எமது தொழில்!
கடன் பெறுவதே எமது கம்பீரம்!!
கடன் பெற்றே இந்த சாம்ராஜ்யத்தை நாம் கட்டியெழுப்பி உள்ளோம்.
கடன் பெறுவதற்கூடாகவே உலகின் பெரும்பாலான நாடுகளை, நாம், எம் காலடியின் கீழ், கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம்…”
-இது கடனாளிகள் சார்பாக முன்வைக்கப்படும் வாதமாகும்.
மறுபக்கத்தில்:
“இதில் உண்மை இல்லாமல் இல்லை. இருக்கலாம். அல்லது இன்னும் சரியாக சொன்னால்- “இருந்திருக்கலாம்”. அதுவே உண்மை. ஏனெனில், இது கடந்த காலத்துக்கு உரித்தான ஒரு கூப்பாடு. 30 வருடத்தின் முன் இது ஓர் அப்பட்டமான உண்மையாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு. இன்றைய உலகம் மாறிவிட்டது”.
இது, மறுதரத்தவர் வைக்கும் எதிர்வாதமாகும். இவ்விரு தரப்பினரும்,இவ்வாறு முட்டி மோதும் ஒரு உலகிலேயே இன்று நாம் வாழ்கின்றோம். இவ்உலகிலேயே, பின்வரும் நகர்வுகளும் இடம்பெறுவதாக உள்ளது–விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!.
2
“ சொல்லுங்க சுமணாவதி……. சுகமா இருக்கியளா……” கம்பீரமாக்க் கேட்டேன்.
அவள் குரலிலே சிறிது கண்டிப்புத் தெரிந்தது.
“சுகமெல்லாம் இருக்கட்டும்….. நீங்க அண்ணனும், தங்கச்சியும் மெதுவா பேசினாலும், ரிசீவரில தெளிவா கேட்டிச்சு….. அவ அப்பிடி என்ன தப்பா பேசிட்டா…. என்னய உங்க ஆளுண்ணு சொன்னதில என்ன தப்பை கண்டுட்டிய….”
குளிர்நீரோடக் காற்று உள்ளத்தை ஊடறுத்தது.
“உணர்ச்சி வசப்படாத……..” புத்தி தடுத்தது.
“கலைக்குத்தான் லூசுண்ணா, உங்களுக்குமா……”
“போதும்….. முதல்ல இந்த, நீங்க…. வாங்க…. போங்க….. எல்லாத்தையும் உங்கவீட்டு உடப்பில போடுங்க….. சுமணாவதி என்ன சுமணாவதி….. ஏன் சுமணான்னு கூப்பிட்டா அய்யாவுக்கு வாய் கோணிக்குமோ…..”
உடலிலுள்ள எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொண்டை அடைத்தது. முகம் முற்றாக வியர்த்தது.
இருப்பினும், பதில் சொல்லமுடியாமல் என் தடுமாற்றத்தைக் காட்ட “ஈகோ” சம்மதிக்கவில்லை. ஏதாவது பேசி ஆகணுமே…..!
பயனில்லை. முந்திக்கொண்டாள் அவள்.
“நீங்கெல்லாம் என்னய்யா இலக்கியம் படிக்கிறிய….. புறநானூறில கணியன் பூங்குன்றன் சொல்லியிருக்காரில்லியா….. யாதும் ஊரே…. யாவரும் கேளிர்ண்ணு…. ஐ. நா. சபையிலையே இந்த வாசகம் இருக்கிண்ணு கேள்விப்பட்டிருக்கேன்.... அப்பிடிப் பாக்கிறப்போ, நீங்க என்ன பண்ணணும்…. என்னையையும் உங்க சொந்தக்காரியா ஏத்துக்கணுமா இல்லியா….. அப்பிடி ஏத்துக்கிட்டா நானு உங்க ஆளுதானே…..”
கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது பவளவிழாவையும், பிறந்தநாளையும் நேற்று கொண்டாடினார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது யாழ் பல்கலைக்கழகத்தில். நண்பர் ஆனந்தகுமார் அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அவர் ஒரு வருடம் சீனியர். பால்ய காலத்திலிருந்து அறிமுகமான நட்பு. அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். 80/81 வருட மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராகவிருந்தேன். 'நுட்பம்' சஞ்சிகைக்கு கலாநிதி கா.சிவத்தம்பி, கலாநிதி க.கைலாசபதி ஆகியோரிடமிருந்து ஆக்கங்கள் வேண்டி அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். அப்பொழுது ஆனந்தகுமார் மூலம் அறிமுகமானவர்தான் அப்போது அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மு.நித்தியானந்தன் அவர்கள்.
அப்போது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையக மாணவர்கள் வெளியிட்டிருந்த சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக உள்ளடக்கம் ஆ, ஆ .. வரிசையில் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அது பற்றிக் கேட்டபோது அதனைச் சித்திரா அச்சகத்தில் அச்சடித்ததாகக் கூறினார். அப்பொழுது எனக்கும் ஒரு சிந்தனை ஏற்பட்டது. அச்சஞ்சிகை போலவே 'நுட்பம்' சஞ்சிகையினையும் அச்சடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால் எழுந்த சிந்தனையே அது. எனக்கும் மொறட்டுவைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அலைவதில் சிரமமிருந்ததால் எங்களுக்கும் 'நுட்பம்' சஞ்சிகையை அவர் ஏற்கனவே சித்திரா அச்சகத்தில் அச்சடித்த சஞ்சிகை போன்றதொரு வடிவமைப்பில் அச்சடித்துத் தர உதவ முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் மனம் உவந்து உதவ முன்வந்தார். அத்துடன் அவரே சித்திரா அச்சக உரிமையாளரை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தினார்.
கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா. இவரது இயற்பெயர் திருச்செல்வம் தேவதாஸ். சந்திப்பதற்கு நான் பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற சோகம் மனதை வாட்டுகிறது. இவரது சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை படித்து, எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். முதலாவது உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய தன்வரலாற்றுச் சித்திரிப்பான குழந்தைப்போராளி என்ற நாவல். மற்றது இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய சிறை அனுபவங்களான நீண்ட காத்திருப்பு. இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.
தேவா , இவற்றை ஆங்கில மூலத்திலிருந்து அவற்றின் உயிர் சிதையாமல் தமிழுக்கு வரவாக்கியிருந்தார். இவை தவிர, அம்பரயா, அனோனிமா, என்பெயர் விக்டோரியா முதலானவற்றையும் தமிழுக்குத் தந்தவர்.
தேவாவின் மொழி ஆளுமை விதந்து பேசப்படவேண்டியது. பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள், படிக்கும்போது அயர்ச்சியை தந்துவிடும். ஆனால், தேவாவின் மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கும். அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருப்பவர். அதனால் அவருக்கு பிரெஞ், டொச் மொழிகளும் நன்கு தெரிந்திருக்கிறது. அம்மொழிகளிலிருந்தே நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது.
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவா, சுவிட்சர்லாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டவர். இம்மாதம் 26 ஆம் திகதி தேவாவின் இறுதி நிகழ்வுகள் தலைமன்னாரில் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேவா மொழிபெயர்த்த நூல்களை கருப்பு பிரதிகள், வடலி, பூபாளம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன. தேவாவின் மொழிபெயர்ப்பில் நான் படித்த குழந்தைப்போராளி நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவ பதிவுக்கு, “ சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் ! வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை ! “ எனத்தலைப்பிட்டிருந்தேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு அரங்கில் நான் முதல் முதலில் சந்தித்த மு. நித்தியானந்தனுக்கு அப்போது 25 வயது. பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இளமைக்கேயுரிய துடிப்போடு எழுத்தாளர் – சிந்தனையாளர் மு. தளையசிங்கத்துடன் இலக்கிய ரீதியாக விவாதித்த நித்தியானந்தனின் கலகக்குரல் இன்னமும் ஓயவில்லை. இலங்கை மலையக மக்களின் ஆத்மக்குரல் நித்தியானந்தனின் எழுத்திலும் உரைகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறது. அம்மக்களின் வரலாற்றினைப்பற்றி மட்டுமல்லாது, முழு இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகவும் விளங்கும் நித்தியானந்தனின் தந்தையார் முத்தையாபிள்ளை பதுளையில் கலைஒளி என்ற இதழையும் நடத்தியிருக்கும் சமூகப்பணியாளர். அன்னாரின் ஞாபகார்த்தமாக பின்னாளில் இலங்கையில் இலக்கியப்போட்டிகளும் நடந்திருக்கின்றன.
நித்தி, பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியபின்னர் சிறிது காலம் கொழும்பில் தினகரனில் துணை ஆசிரியராக 1970 களில் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த பாரதி விழாவுக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசார கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார். பாரதி விழாவில் நித்தியுடன் வந்து அங்கே உரையாற்றியவர்கள் எழுத்தாளர்கள் நவசோதி, மற்றும் எச். எம். பி. மொகிதீன். தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசாரக்கூட்டத்தில் நித்தியுடன் வந்து உரையாற்றியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி, மற்றும் சிங்கள எழுத்தாளர் குணசேனவிதான. அந்தச் சம்பவங்கள் இன்றும் நினைவுகளில் பசுமையாக வாழ்கின்றன.
1
என் தங்கை கலையரசிக்கு திருமணமான கையோடு , அவளும் கணவரும் கனடாவுக்கு குடிவந்து விட்டார்கள். அவர்களது வீட்டின் மூன்றடுக்கு மாளிகையின் மொட்டை மாடியில், வெற்றுத் தரையில், அகலக் கால்பரப்பி, ஆகாயத்தைப் பார்த்தபடி, மல்லாந்த நிலையில் படுத்திருக்கின்றேன். காற்றின் தாலாட்டால் கண்கள் சுழலக், கடந்துபோன நினைவுகளின் தாலாட்டால் நெஞ்சம் சுழன்றது.
சுமணாவதி கண்டியிலே சிங்களப் பள்ளிக்கூடம் ஒன்றில், வரலாறு (சரித்திர) பாடம் கற்பிக்கும் ஆசிரியை. நானோ தமிழகத்தில் திருநெல்வேலியில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியன். முகம் பார்த்துப் பேசும் அலைபேசியோ, அல்லது சாதாரண அலைபேசியோ புழக்கத்துக்கு வராதிருந்த காலம் அது. முன்பின் அறிமுகமில்லா உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுடன் தொடர்புகொண்டு, உள்ளப்பரிமாற்றம் செய்கின்ற கருவியாக, “பென் பிரெண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற “பேனா நண்பர்” தொடர்புக் கலாச்சாரம் அன்றய நடைமுறையில் அமோகமாக இருந்தது. தொடர்புகொள்ள விரும்புபவர்கள், தமது பெயர்,விலாசம் மற்றும் படிப்பு, தொழில் போன்ற இதர சூழல்பற்றிய விபரக் குறிப்புக்களை பத்திரிகை, சஞ்சிகை போன்ற ஊடகங்களின்மூலம் தெரியப்படுத்துவார்கள். அவற்றில் தமக்குப் பிடித்தமான விபரங்கள் கொண்ட நபரை, மற்றய நபர் தொடர்புகொண்டு தனது பேனா நண்பராக ஆக்கிக்கொள்வார். இந்த வகையில்தான் வரலாற்றுப்பாட ஆசிரியர்கள் என்னும் முறையில், என் முகவரிக்கு முதன்முதலில் கடிதம் அனுப்பினாள் சுமணாவதி.
எழுத்துக்கள் எல்லாமே முத்துமுத்தாக இருந்தன. சொற்குற்றம் ஏதுமில்லாமல் இத்தனை அழகாக தமிழில் , ஒரு சிங்களப் பெண்ணால் எப்படி எழுத முடிகிறது? ஒருவேளை, தமிழ் நண்பர்கள் யார்மூலமாவது எழுதுவிக்கின்றாளோ என்ற சந்தேகம் உள்ளிட, இருப்புக்கொள்ள முடியாமல் கடிதத்தில் கேட்டேவிட்டேன். பத்தாம் வகுப்புக்கான தமிழ்பாட பரீட்சையில் திறமையான பெறுபேறு பெற்ற சான்றிதழைப் போட்டோ எடுத்து, தனது குடும்பப் போட்டோவையும் சேர்த்து தபாலில் அனுப்பியிருந்தாள்.
நடுவிலே நாற்காலியில் அப்பா அமரதுங்க, பின்னால் அண்ணி கீதா, அவரது கையில் ஐந்து வயதுக் குழந்தையாக ராகுல, அடுத்து அண்ணன் நிசங்க மல்ல, அடுத்து சுமணாவதி. அப்பாவின் நெஞ்சோடு அணத்தபடி அம்மாவின் படம்.பெயர் : மெனிக்கா. இதிலே, அண்ணன் நிசங்கமல்ல, கனடாவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான். அப்பா கண்டியிலே பில்டிங் கன்ராக்டராக இருக்கின்றார். தவிர, தங்களின் வீட்டிலுள்ள தொலைபேசியின் எண்ணையும் குறிப்பிட்டு, தன்னோடு தமிழிலே பேசும்படி எழுதியிருந்தாள்.
எங்கள் வீட்டிலும் தொலைபேசி வசதி இருந்ததனால், தொலைபேசிச் செயலகத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, அப்போதெல்லாம் அரைமணி நேரமல்ல…. ஆறுமணி நேரம் காத்துக்கிடந்துகூட பேசினேன்…. பேசினோம். அதனை ட்ரங் கால் என்பார்கள். ஐயம் தீர்ந்தது. அது சுமணாவதிதான். எங்களைப்பற்றிய விபரங்களுடன் எங்கள் குடும்ப போட்டோவையும் அனுப்பினேன். பிறந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை தாங்கள் கொழும்பில் குடியிருந்ததாகவும், தங்களுக்குப் பக்கத்து வீட்டுக் குடும்பம், தமிழகத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் நெருங்கிப் பழகியதால், தானும், அண்ணனும் தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துகொண்டதாகவும், தெரிவித்தாள்.
இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.
அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு விரிவான நூலே எழுதி விட முடியும். அதற்கான விடயப்பரப்பும் பங்களிப்புக்குமுரிய வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. அந்தளவிலான விரிந்த இயக்கப் பரப்பு அவருடையது. தமிழ்கூறும் அறிவுலகம் தெரிந்து வைத்திருக்கும் , மதிக்கும் ஒரு ஆளுமை பற்றி விரிவாக எழுத இந்த பகுதி அதற்கு இடம் வழங்காது! எதைச் சொல்வது எதைத் தவிர்ப்பது என்கிற தெரிவு , அவரைப் பற்றி எழுதுவோருக்கு முன்னிருப்பது தவிர்க்க முடியாததே!
இன்னும், மூன்று–நான்கு மாதங்களில், நாட்டின் காங்கிரஸானது, அமெரிக்காவின் கடன் பெறும் வரையறையை உயர்த்தவில்லை என்றால், அதாவது எமது நாடான இலங்கையைப் போல், காசடித்தும் - இறை வரிகளை விற்று தீர்த்தும் அல்லது, இன்னும் இது போன்ற பல வழிகளில், மக்களை அடமானம் வைத்து கடன்களைப் பெற்று வாழ்க்கை ஜீவிதத்தை ஓட்டி செல்ல, வழி செய்து தரும் வகையில் -காங்கிரஸானது கடன் பெறும் தனது வரையறையை உயர்த்தவில்லை என்றால்;–அமெரிக்காவானது, தனது, வங்துரோத்து நிலையை உலகு அறிய பிரகடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்கத் திறைசேரியை சார்ந்த, யெலன் அம்மையார், அண்மையில் கூறிவிட்டார்.
இருந்தாலும் கடன் பெறும் உச்ச வரம்பை முற்றாக உதாசீனப்படுத்தி புறக்கணித்துவிட்டு– அப்புறக்கணிப்பிற்கூடாக இப்போதிருக்கும் வாழ்க்கை ஜீவிதத்தை தொடரலாம் அல்லது தொடர்ந்தும் உலக நாடுகளிடம் இருந்து பணம், புரட்டி, வாழ்வதைத் தொடரலாம் என அமெரிக்கப் பொருளியல் வல்லுனர்கள் சிலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். மொத்ததில் மூன்று வழிகளுமே, உலக வல்லரசாகிய அமெரிக்கா தேர்ந்து கொள்ள, அதன் முன் நிற்க கூடிய மூன்று வழிகளாகின்றன. அதாவது, ஒன்று, வட்டி கட்ட முடியாத வங்குரோத்து நிலைமையை அறிவிப்பது, அல்லது கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தி விட்டு மேலும் டொலர்களை அச்சிட்டு வெளியிடுவது, அல்லது கடன் முறிகளை மேலும் ஏற்படுத்துவது என இவ்வழிகள் தேரப்பட வேண்டியவையாகத் தோற்றம் தருகின்றன. ஆனால், அதால பாதாளத்துள் வீழ்ந்துள்ள இத்தகைய பொருளாதார நிலைமை, உலகின் முதல் வல்லரசு என கூறப்படும் அமெரிக்காவிற்கு வந்துள்ளது என்ற செய்தியே சங்கடத்தை உண்டு பண்ணும் செய்தியாக இருக்கின்றது.
இது போதாது என்று மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று, இன்று சீனாவும் ஜப்பானும் போட்டி போட்டு கொண்டு தாம் இதுவரை வாங்கி குவித்திருந்த, அமெரிக்க கடன் முறிகளை, உலக சந்தையில் விற்று கரைக்க வேறு தொடங்கிவிட்டன. ஜப்பானானது, இவ்வருடத்தின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்றே மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம், தன் கையிருப்பிலிருந்த 2.43 கோடி அமெரிக்க கடன்முறிகளை, உலக சந்தையில் விற்று தீர்த்து விட்டதாக அறிவித்து விட்டது. இதற்கு சற்றும் குறைவில்லாமல், சீனமும், தன் பங்கிற்கு, தான் பெற்று வைத்திருந்த கோடிக்கணக்கான பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை விற்று தீர்த்துள்ளது. 2012இல் இருந்து 2022 வரையிலான 10 வருட காலப்பகுதியில், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் முறிகளை, சராசரியாக தன் கைவசம் கொணடிருந்த சீனா, இன்று விற்று தீர்த்தது போக பெப்ரவரி 2023இல் வெறும் 123.25 கோடி டாலர் பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை மாத்திரம் தன் கைவசம் கொண்ட நாடாக இன்று திகழ்கின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகி விட்டன. இன்னும் யுத்தக்குற்றங்களைப் புரிந்தோர் மீதான் விசாரணைகள் நடைபெறவில்லை. காணாமல் போனோருக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. அபகரிக்கப்பட்ட நிலங்கள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை. இவ்விதமானதொரு சூழலில் பல்லின, பன்மத, பன்மொழி மக்கள் வாழும் இலங்கையில் மக்கள் அனைவரும் அமைதியாக, புரிந்துணர்வுடன் வாழுதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் கடமையாக , செயற்பாடாகவிருக்க வேண்டும். மக்களுக்குகிடையில் பிரிவுகளை ஏற்படுத்துவதாக எவையும் நடைபெற இடமளிக்கக் கூடாது. அண்மையில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாதச் சக்திகள் மீண்டும் தலையை நுழைப்பதற்கு இனவாதத்தையே கைகளிலெடுப்பார்கள். அதற்கு ஏற்கனவே புரையோடிப்போயிருக்கும் தமிழ், சிங்களப்பிரச்சினையைத் தூண்டி அதைத்தீர்க்கும் நடவடிக்கைகளுக்கெதிராகச் செயற்படுவார்கள்.
- அண்மையில் ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) எழுதிய எம்.எம்.நெளஷாத்தின் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' என்னும் அவரது முகநூற் பதிவிது. நாவலைப்பற்றிய நல்லதொரு , மனத்தைக் கவரும் வகையில் எழுதப்பட்டிக்கும் விமர்சனமிது. நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்ற விமர்சனம். முகநூலில் வெளியான இக்கட்டுரை விபரிக்கும் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' நாவலினை உலகளாவியரீதியில் வசிக்கும் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் அவசியம் கருதி மீள்பிரசுரமாகின்றது. பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, - பதிவுகள்.காம் -
1.
நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
சமீபகாலமாக தமிழில் அந்நியப் பெயர்களை (குறிப்பாக அறபுப் பெயர்களை) வைக்கும் ”மோஸ்தர் நிலவுகின்றது. உதாரணமாக மூமின், சலாம் அலைக், பர்தா, ஆயத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இதன் இன்னொரு வகையாக சமீபத்தில் மலையாள வாடை அடிக்கக்கூடிய இரண்டு தமிழ் வரவுகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று ”என்டெ சீவியத்திலிருந்து…” என்ற எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களுடைய கட்டுரைத் தொகுப்பு. மற்றையது டொக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் ”பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்” என்ற நாவலுமாகும்.
பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, இந்தியா ரூ 220.00. லார்க் பாஸ்கரனின் அட்டை வடிவமைப்பும், நீல நிறத்தில் தரமான அட்டையும், சந்தோஸ் கொலன்ஜியின் புத்தக வடிவமைப்பும், சிறப்பான துாய்மையான நுாலாக்கமும், நாவலுக்கு மேலும் ஒரு பெறுதியைச் சேர்க்கின்றது.
மொனறாகலை நகரிலிருந்து பதுளை நகரிற்கு செல்லும் வழியில் பதினாறாவது மைல் துாரத்தில் இடது பக்கம் மேல் நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு கிராமம் இருக்கின்றது. அது குக்கிராமம். அதன் பெயர் சாம்பல்மேடு. இந்தக் கிராமம் வருடாந்த கந்துாரி ஒன்றுக்கும் பெயர் போனதாகும். இந்த மக்கள் விருநதோம்பலுக்கும், ஆதரிப்புக்களும் பெயர் போனவர்கள். அங்கு வாழ்ந்துவரும் பேகம் கதீஜா என்னும் பெண்ணுடன் அல்லது பெண்ணை மையமாக வைத்து அவளின் சாமானிய ஜீவியக் கதை தொடங்குகின்றது. பேகம் கதீஜா பிறக்கும் போது அவளது தாய் இறந்து போகிறாள். பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்ததும் தகப்பனும் அவளை விட்டு அல்லது அந்தக் கிராமத்தை விட்டு ஓடிப் போகிறான். அதன் பின்னர் கதீஜா அன்பானவளும், கண்டிப்பானவளுமான தனது பாட்டியுடன் வளர்கிறாள். (கதீஜாவின் தாய், கதீஜாவின் பாட்டிக்கு திருமணம் முடித்து ஒரு மாத இல்லற வாழ்வில் கிடைத்தவள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாட்டியின் கணவனும் சந்தேகம் கொண்டு பல காலங்களுக்கு முன்பு பாட்டியை விட்டுப் பிரிகிறான் என்ற கிளைக்கதையும் இங்கு இருக்கின்றது).
முன்னுரை
இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
காவிரி ஆறு வந்த வரலாறு
கா- என்றால் சோலை.தான் செல்லும் இடமெல்லாம் பசுமையான சோலைகளை விரித்துச் செல்வதால் “காவிரி” என்று பெயர். பொன்னி ஆறு என்று அழைக்கப்படுகிறது.காவிரி நதியின் நீரில் பொன் தாது அதிகம் இருப்பதால் இது ’பொன்னி’ என அழைக்கப்படுகிறது. சப்த ரிசிகளில் ஒருவர் அகத்தியர். அகத்தியரால் கமண்டலத்தில் சிறைபிடிக்கப்பட்ட காவிரி நதி, காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அகத்தியன், எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும், அங்குள்ள உயிர்களும். நற்கதி அடையும்படி தனது கமண்டலத்தில் இணையற்ற காவிரி ஆற்றைக் கொண்டு வந்தவன். அந்த அகத்தியன்
“எண்திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான்”
(அகத்தியப்படலம் 161),
கம்பர் பஞ்சவடியை வருணித்து வியந்த போதும் 'பொன்னி' பற்றிப் புகன்றது நினைந்து மகிழத் தக்கது.
இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக் கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின் சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப் பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை அறிந்து கொள்வதும்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.
'எழுநா' இணையத்தளத்தில் வெளியான கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது கட்டுரை. இதனை https://ezhunaonline.com/article/kopay-fort/ என்னும் இணைய இணைப்பில் வாசிக்கலாம். - வ.ந.கி -
தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை.
எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வின்பொருட்டுப் பேராசிரியர் கா. இந்திரபாலாவை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் , ’சுவாமி ஞானப்பிரகாசர் பல வருடங்களுக்கு முன்னரே கோப்பாய்க் கோட்டை பற்றியும், அது இருந்ததாகக் கருதப்படும் இடம் பற்றியுமொரு கட்டுரையொன்றினை ஆய்விதழொன்றில் எழுதியிருப்பதாகவும், அது யாழ். பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருப்பதாகவும் ’ குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை ஜனவரி 1917 இல் வெளியான Ceylon Antiquary and Literary Register என்னும் வரலாற்றிதழின் 194, 195ஆம் பக்கங்களில் ‘Sankily’s Fortress at Kopay’ (சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை) என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை. கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகள் செய்யும் எவரும் அந்தக்கட்டுரையினைத் தவறவிட முடியாது. அத்துணை முக்கியத்துவம் மிக்க கட்டுரை அது. அதிலவர் போர்த்துகேய வரலாற்றாசிரியரான தியாகோ தோ கூத்தோ (Diego do Couto) கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்னும் போர்த்துகேயத் தளபதிக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் செகராசசேகரனுக்கும் (இவனே முதலாம் சங்கிலி என்பது வரலாற்றாய்வாளர் கருத்து) நல்லூரில் நடந்த போரின் போது சங்கிலி கோப்பாயில் அமைந்திருந்த கோட்டைக்கு ஓடியது பற்றியும், அந்தக் கோட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்ததைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்:
“கோப்பாய்க் கோட்டையானது சுடாத செங்கற்களானது. அதன் கொத்தளங்கள் (Bastions), கூண்டுக் கோபுரங்களுடன் (Turrets) சிறப்பாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டிருந்தது” (கூத்தோ) (‘சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை’, ‘பக்கம் 194)
A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார்.
நீண்டகாலமாக எழுத வேண்டுமன நினைத்திருந்த ஒரு குறிப்பை, அந்தக் குறிப்புக்கு காரணமாக இருந்த நூலை தமிழில் தந்த தோழர் தேவா மரணித்த போதும் விரிவாக எழுத முடியவில்லையே என்கிற நிலையில் , தோழர் தேவாவின் பணி பற்றியும் , தமிழ்பதிப்பாக வந்த “நீண்ட காத்திருப்பு ” பற்றியும் ஒரு சில வரிகளாவது எழுத வேண்டும் என்பதால் அவசரமாக இதனை பகிர்கிறேன். இத்துடன் தோழர் தேவாவைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள ஒரு ZOOM நிகழ்வையும் ஒழுங்கு செய்துள்ளோம் , இதுவே நாம் செய்யும் அஞ்சலி ! எம்மால் இப்போது செய்ய முடிந்தது. விரிவாக எதிர்வரும் 2 ஏப்ரல் - ஞாயிறு அன்று அவரது பல்துறை சார்ந்த பங்களிப்பினை அனைவரும் இந்த ZOOM வழியான நிகழ்வில் பேசுவோம்.
மன்னாரில் பிறந்து, திருக்கோணமலையில் தொழில் செய்து, சுவிட்சலாந்த்தில் வாழ்ந்து , புகலிட நாட்டில் இருந்த அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உதறித் தள்ளி , சொந்த மண்ணில் , அம்மக்களுடன் வாழ்ந்து , மரணிக்கும் திடசங்கற்பத்தில் இருந்தவர் அவர் என்பதே , அவரது இலக்கை, வாழ்வை, அவரது ஒரு பக்கத்தினை புரிந்து கொள்ள அவர் நமக்குத் தந்த நடைமுறை செயல் வாழ்வின் சாட்சியமாகும்.