eKuruvi Steps 2023!
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
- ஓவியம் - செயற்கை அறிவு (AI) -
அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும் கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று. உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது தொலைத்து விடக்கூடிய பொருட்கள் என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக் குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?
அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன். இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.
எட்கர் ஆலன்போ (செயற்கை அறிவு, AI, உருவாக்கிய ஓவியம்) -
முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.
நான் இரவு உணவை உண்டு விட்டு மறுநாள் காலையில் சற்று நேரம் வரை தூங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். உடனடியாகத் தூங்கி விட்டேன். ஆனால் நான் நினைத்ததைப்போல் இரவில் நன்றாகத் தூங்க முடியவில் லை. நான் தூங்கி அரை மணி நேரம் ஆகி இருக்காது, முன் கதவிலிருந்து அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது. யாரோ பொறுமை இல்லாமல் கதவைத் தட்டினார்கள் ஒரு நிமிடம் கழிந்திருக்கும் நான் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவி மூக்கிற்கு நேராகக் குறிப்புச் சீட்டு ஒன்றை நீட்டினாள். மிகவும் நெருங்கிய மருத்துவ நண்பரான பானனரிடமிருந்து அந்தச் சீட்டு வந்திருந்தது. “நண்பரே என்னை சாந்தியுங்கள்’ என்று அந்தக் குறிப்பு சொன்னது. “எங்களுக்கு உதவுங்கள், எங்களுடைய அதிர்ஷ்டம் அருங்காட்சியகத்தின் இயக்குனர் இறுதியில் பதப்படுத்தப்பட்ட மம்மியைச் சோதித்தறிய எங்களை அனுமதித்திருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதைப் பிரிக்க எனக்கு அனுமதி இருக்கிறது. சில நண்பர்கள் மட்டுமே உடனிருப்பார்கள். நீங்களும் தான், நீங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றிருந்தது. மம்மி இப்பொழுது என் வீட்டில் இருக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு நாம் அதைத் திறக்கலாம் என்றும் இருந்தது.
அப்பா உலகைப் பிரிந்த நாளதிலிருந்து
எழுதுகோல் தாளுடன் உறவாடவில்லை.
சூரியக்கதிர்கள் வெளியை மஞ்சளாக்க
நிலவின் கதிர்கள் நீலம் காட்ட
காலங்கள் கடந்தன.
குறுந்தாடிச் சகோதரனவன்
நிலவது வட்டம் தோற்கும் அழகின் முகம்
பெண் மொழி பேசுவான்.
பெண் மொழியச் சொல்வான்.
மலர் நிறை தடாகத்தில் துள்ளும் மீன்களது நீச்சலென
மொழி புனையும் பெண்ணெழுத்தைக் காதல்கொள்பவன்.
1.
சமூக நீதிக் காவலர் கலைஞர்!
திருக்குவளையில் பிறந்தவரே,
திருக்குறளை மீட்டவரே!
பதினான்கு வயதில் அரசியலில்
புகுந்தவரே. செயற்
பட்டவரே!
திராவிடத்தின் அணையா விளக்கே!
தமிழரின் கலங்கரை விளக்கே!
கலைஞருக்குப் பிடித்த கலைஞர்!
காளையரைக், கன்னியரைக்
குழந்தைகளைக் கவர்ந்த கலைஞர்!
கலைஞரின் பேனா,
காகிதத்தில் அலைபாடும்
தானா!
பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாதுகாப்பு முதலான திரைப்படங்களை இயக்கிய பிரபல இந்திய நெறியாளர் ஏ. பிம்சிங் அவர்கட்கு புத்தர் மீது பேரபிமானம். அதனால், தனது திரைப்படங்களில் புத்தர் சிலையை அடிக்கடி காண்பிப்பார். எம்.ஜி. ஆர் . இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்தகோயில் ( 1968 ) இலங்கையில் வெளியானது. இத்திரைப்படத்திலும் புத்தர் சிலை வருகிறது. ஒரு எம்.ஜி.ஆர். படுகாயங்களுடன் ஒரு வீட்டினுள்ளே நுழைந்து பெருங்குரல் எடுத்து ஒரு ஷோகேஸில் ஓங்கித் தட்டுவார். அப்போது அதிலிருந்த சிறிய புத்தர் சிலை ஆட்டம் காணும். அக்காலப்பகுதியில் அந்தக்காட்சியை நீக்கவேண்டும் என்று இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவலும் இருக்கிறது. சமகாலத்தில் புத்தர் இலங்கையில் பேசுபொருளாகிவிட்டார்.
தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன்.
கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா ) ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் பரவலாகப்பேசப்படுகிறது. இத்திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. எனினும் வசூலில் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதன் கதை சமகாலத்திலும் பேசுபொருளாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.
ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் முதலான திரைப்படங்களையும் சாதிப்பிரச்சினையை மையப்படுத்தி எடுத்திருக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் மூலம் வடிவேலுவின் மற்றும் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காண்பித்துள்ளார்.
இன்னுயிரைப் பலர் ஈந்தார்
ஈன்ற மண்ணை மீட்பதற்கு
பல் கொடுமை அனுபவித்தார்.
பாரதத்தாய் துயர் களைய
காந்தியெனும் மகான் வந்தார்
கை பிடித்தார் அனைவரையும்
சாந்தி சாந்தி என்று
சத்தியத்தை தூக்கி நின்றார்.
கொள்ளை கொண்ட வெள்ளையர்
குமுறி கனல் கொப்பளித்தார்.
வெள்ளமாய் குருதி மண்ணில்
பெருகுவிட வழி சமைத்தார்.
ஈரமின்றி உயிர் பறித்தார்.
இரக்கமதை மறந்து நின்றார்.
பாரத்தாய் துயர் அறியா
பாதகராய் மாறி நின்றார்.
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முருகபூபதி அவர்கள் இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். புலம்பெயர் சூழலில் இருந்து பல்துறை சார்ந்து எழுதி வருகின்றார். இவரது நூல்களின் வரிசையில் முப்பதாவது வரவாக சினிமா : பார்த்ததும் கேட்டதும் என்ற கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகபூபதி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதையும் பெற்றுள்ளார். அத்துடன் இம்மாதம் ( ஓகஸ்ட் 06 ஆம் திகதி ) பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலை ஜீவநதி தனது 274 ஆவது வெளியீடாக வரவாக்கியுள்ளது.
இந்நூல் சினிமாவைப் பற்றிய 16 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன், மனோரமா ஆச்சி, இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா, சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும் - தழுவலும் - திருட்டும் - எதிர் வினைகளும், பேசாப் பொருளைப் பேசத் துணிந்த திரைப்படம் President Supper Star ஆகிய தலைப்புகளில் 16 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. சினிமா தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது அனுபவங்களை இக்கட்டுரைகள் மூலம் முருகபூபதி வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் ஒ ரு சிறந்த ஊடகவியலாளராகவிருந்தவர். சிறந்த நடிகையாக ஒளிர்ந்தவர்; திறமை மிக்க நர்த்தகியாக மிளிர்ந்தவர். இவரதும், இவரது கணவரதும் நினைவு தினம் ஆக்ஸ்ட் 12. இவர் நடித்த திரைப்படம் இலங்கையில் வெளியான முதலாவது சினிமாஸ்கோப் தமிழ்த்திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு' அதில் இவர் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்தார். நடிகர் ஏ.ரகுநாதனுடன் நடித்திருந்தார். இவரது இனிய குரல் இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக மின்ன வைத்தது.
அரசியலில் ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரியிறைப்பார்கள். அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின்போது மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உரியதொன்றல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயுதப்போராட்டங்களில் இவ்வகையான போக்கு நிலவியதைக் காண்கின்றோம். இவ்வகையான போக்கே பல நாடுகளில் ஆயுதப்போராட்டங்களின் தோல்விகளுக்கும் முக்கிய காரணங்களிலொன்றாகவிருந்தது.
இவரது கணவர் இவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார். முன்னாட் போராளிகளிலொருவரான அவர் கொல்லப்பட்டபோது மனைவியுடன் சேர்ந்து 'பயண' வர்த்தக நிறுவனமொன்றினை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட இவர்கள்து பெண் குழந்தைக்கு வயது ஒன்று. இவர்தான் 'தெய்வம் தந்த வீடு' என்னும் இலங்கைத்தமிழ்த்திரைப்படத்தில் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்த ரேலங்கி செல்வராஜா. கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரது கணவரான சின்னத்துரை செல்வராஜா ஓமந்தையைச் சேர்ந்த முன்னாட் போராளி.
மேனாட்டில் அறிவியல் அறிஞர்கள் சாதாரண வாசகர்களுக்காக மிகவும் சிக்கலான அறிவியல் விடயங்கள் பற்றியெல்லாம் மிகவும் எளிமை8யான மொழியில், அனைவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் நூல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார்கள். உதாரணத்துக்கு ஸ்டீபன் ஹார்கிங்கின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூலைப்பற்றிக்கூறலாம். இது போன்றதுதான் பேராசிரியர் இரா. முரளி தனது 'சோக்ககிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப் சானல்' மூலம் பகிர்ந்து வரும் காணொளிகள்.
- தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் வெளியான 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள எனது நினைவுக் குறிப்பினை அவரது நினைவு தினத்தையொட்டிப் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது நினைவு தினம் ஆகஸ்ட் 8. மேற்படி நூலினைத்தொகுத்திருப்பவர் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரன். -
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களில் கலாநிதி க.கைலாசபதி, சிவப்பிரகாசம், எஸ்.டி.சிவநாயகம் ஆகியோர் வரிசையில் கலாசூரி சிவகுருநாதனையும் வைப்பார் பேராசிரியர் சோ.சந்திரசேகரன். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 1956இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்து , செய்தி ஆசிரியராகவும் விளங்கியவர். பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரிய பீடத்திலிருந்து விலகியபோது அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு வந்தவர் சிவகுருநாதன் அவர்கள். 1961இலிருந்து 1995 வரை 34 வருடங்கள் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
யாழ் இந்துக் கல்லூரி, சாகிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. பின்னர் சட்டத்துறையிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாகவும் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவுமிருந்திருக்கின்றார்.
விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். கலை, இலக்கியத்தின் மீதான இவரது ஆர்வம் இவரது மாணவப்பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது. சாகிராக் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்ச்சங்கச் செயலாளராக விளங்கியிருந்திருக்கின்றார். பேராதனைப் பல்கலைககழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழ்ச் சங்க வெளியீடான 'இளங்கதிர்' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்திருக்கின்றார், அதே சமயம் இந்து மாணவர் மன்றத்தின் 'இந்து தர்மம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார். இவை தவிர பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தலைவராகவும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் ( இரு தடவைகள்) இருந்திருக்கின்றார்.
அத்தியாயம் ஒன்று: அன்னலிங்கம் (அன்னர்) வாத்தியாரின் வருகை!
அனஂனர் ,மலையகத்தில் படித்து ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய மலையகத்திற்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்களின் எழுத்தில் ஏற்பட்ட காதலில் வடக்கு .கிழக்கிற்கு மாற்றம் கேட்டு வெளியிலும் செல்லாமே எனத் தோன்ற விண்ணப்பித்தார் . இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தது . இலங்கை பஞஂசக் கோட்டுள் வீழ்ந்து கொண்டிருதது .மீள்வதற்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது . மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தது . அராலி கிராமம் தொடர்ச்சியாக தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பச் சொல்லி பல தடவைகள் கோரி வர இங்கே பொட்டலமாக கட்டி அனுப்பி விட்டார்கள் . கொழும்பைப் போல கிராமங்களில் அறைகள் வாடகைக்கு இல்லை . வீடுகளில் சாப்பாட்டு ஒழுங்கு எல்லாம் பண்ண முடியாது . யாழ்ப்பாணம் பழைய நகரம் . அவருடைய மனைவியின் தம்பி சேகர் ஏற்கனவே அங்கேயிருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கணக்கியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான் . நகரத்து சிறுகடைகளுக்கு வரித் தேவைகளுக்கான .... கணக்குகளை எழுதியும் , டியூசனஂ கொடுதஂதும் சமாளிக்கிறானஂ. இவருக்கு பஸ் செலவு தான் . வாழ்க்கை ஒரு போராட்டமே! " என்ற காண்டேகரின் வரி அவருக்கு நிறைய பிடிக்கும் . யாழ்ப்பாணம் வந்து விட்டார் . இனஂனமும் நிறைய , நிறைய பிடிக்க... வேண்டும்.
பகுதி 2ஹைலன்ஸ் கல்லூரி தனது 131வது வருடாந்தத்தை, கடந்த மாத இறுதியில் கொண்டாடிய போது, அதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கலாநிதி சரவணகுமார், ‘ஹைலன்ஸ் மலையகத்தின் ஒரு முதுசம்’ என்ற அடைமொழியை அதற்கு சூட்டி ப10ரித்து நின்றார்.
உண்மையாக இருக்கலாம். கடந்த சில வருடங்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், பீடங்களுக்கும் அனுப்பி வைத்த பெருமையை அது போற்றி வருகின்றது. இருந்தும், சென்ற கட்டுரை தொடரில் மிக தெளிவுற சுட்டிக்காட்டப்பட்டதை போன்று, 29 குற்றச்சாட்டுக்களை தன்னகத்தே சுமந்த, மலையக பணிப்பாளர் ஒருவராலேயே, அக்கல்லூரி இன்று அடியோடு சிதைக்கப்பட்டதாய் உள்ளது. (தற்சமயம், கணபதி கனகராஜ் அவர்கள் எடுத்த பெரு முயற்சியின் பலனாய், மேல்நீதிமன்றம் இப்போது தந்துள்ள இடைக்கால உத்தரவின் மூலம், அன்னாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் பிறிதொரு விடயமாகும் - Writ/7/2023)
இருந்தும், கடந்த மாதத்தில் மாத்திரம் 500-600 ஆசிரியர்களை ஒரே தருணத்தில், இடமாற்றம் செய்து முடித்து, இன்னும் நான்கே நான்கு மாதங்களில் தமது இறுதி பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவ மணிகளை, விழிப்பிதுங்க பரிதவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ள பெருமை இவ் அதிகாரியையே சாரும் - (இன்னும் இப்பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கின்றது. ஹைலன்ஸ் அதிபர் நிலைமையை சீர்ப்படுத்த தன்னால் இயன்றதை முயன்று பார்த்தாலும் கூட).
- சமாதிகள் அமைந்திருக்கும் சூழல் -
அறிமுகம்தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தொன்மையும் அருட்பெருமையும் வாய்ந்தது. இவ் ஆலய வரலாற்றுடன் சித்தர்களும் இணைத்துப் பேசப்படுகின்றனர். செல்வச்சந்நிதிக்கு அருகில் தெற்குப் புறமாக கரும்பாவளியில் அமைந்துள்ள சித்தர்களின் சமாதிகள் இவற்றை உறுதி செய்கின்றன. செல்வச்சந்நிதி ஆலயத்தின் தொன்மை, அதன் வழிபாட்டு முறை, அங்கு வாழ்ந்த சித்தர்கள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் அருகே ஓடிய ஆறு ‘வல்லியாறு’ என அழைக்கப்பட்டது. இது சோழர் வரலாற்றுக்குப் பின்னரே ‘தொண்டைமானாறு’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. ‘படைக்கோயில்’ ஆகிய கதிர்காமத்துடன் தொடர்புபடுத்தி சந்நிதியும் நோக்கப்படுவதன் ஊடாக வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் முருக வழிபாடு இங்கு நிலவி வந்துள்ளமையை இப்பிரதேசத்தின் இயற்கைச் சூழமைவும் வெளிப்படுத்துகின்றது.
ஈழத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆகமமரபு சார்ந்தும் ஆகமமரபு சாராமலும் இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் நிலவி வந்துள்ளன. கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டூர் கந்தசாமி ஆகியவை ஆகம மரபு சாராத பூசை முறைகளைக் கொண்டமைந்தவை. செல்வச்சந்நிதியில் அந்தணர் மரபல்லாதவர்கள் பூசை செய்கின்றனர். கதிர்காமத்தில் சிங்கள வேடுவர் பரம்பரையினர் பூசை செய்கின்றனர். இவர்கள் ‘கப்புறாளைமார்’ என அழைக்கப்படுவர். “மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இன்னுமொரு முருகன் ஆலயம் சித்தாண்டிக் கந்தசுவாமி கோயிலாகும். இதுவும் ஒரு திருப்படைக் கோயிலாகும். இக்கோயிலை ஆரம்பத்தில் வேடுவரும், பின்னர் சித்தர் எனப்படும் ஆண்டியும் வழிபாடு செய்து வந்தமையினால் சித்தாண்டி எனப் பெயர் பெற்றதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது.” (1) இவ்வகையில் இம்மூன்று முருகன் கோயில்களிலும் ஆகமம் சாராத வழிபாட்டு மரபு நிலவி வருவதோடு அவை அந்தணர் அல்லாதவர்களால் பூசை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடற்பாலது.
முன்னுரை வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
கிரகணம்
கிரகணம் என்பது வானியல் பொருள் ஒன்று, வேறொரு பொருளின் நிழலிலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்வதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும்போது சந்திர கிரகணத்தையோ விவரிக்கிறது.
கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார்.
நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது உள்ளகக் கணக்காய்வுக்காக நான் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் இவர்களைச் சந்தித்திருக்கின்றேன். பல ஜோடிகளுக்கு மத்தியில் இவர்கள் மட்டும் விசேடமாக என் கண்ணில் பட்டதற்குக் காரணம், அப்போது காதலர்களாக இருந்த இருவரும் தமிழர்களாக இருந்ததே. அங்கு சந்தித்ததில் அவர்களுடன் நட்பாகப் பழகமுடிந்தது. விமலின் மனைவி யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் எனது மனைவியின் வீட்டின் அயலவர் என்பதால் எங்கள் நட்பு மேலும் தொடர்ந்தது.
சொற்கள் அற்ற தொடர் அமைப்பே தகவல்தொடர்பியல் கூறாக அமைகின்றது. இதில் தன்னுடைய கருத்துக்கள், எண்ணங்கள், மனநிலை, அறிவு, நடத்தை போன்றவற்றை மற்றவரிடம் தெரிவிக்க இச்செய்தி பரிமாற்ற புலப்பாட்டு முறைமைகளைக் கையாளுகின்றோம். மேலும் உடலலைசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரலொலி போன்றவற்றின் மூலம் நேரடியாகவோ, தனியாகவோ (அல்லது) கூட்டமாகவோ செய்திகள் பரிமாற்றப்படுகின்றன. இது குறியீட்டு அடிப்படையில் படமாகவோ, சொற்களாகவோ, உடலசைவாகவோ இடம்பெறும். அடுத்தவரின் மனதைப் பாதிக்கச் செய்யும் செயல்முறைகள் இங்கு மிகுதிபட அமைகின்றன. ஆதியில்மனிதன் சீழ்க்கை ஒலி எழுப்புதல், கூவியழைத்தல், புகை எழுப்புதல், பறையடித்தல், மணியடித்தல், தீயம்புகளை வானில் எறிதல் போன்றவற்றின் வாயிலாகத் தனது கருத்தை எடுத்தியம்பினான். காலமாற்றத்தால் தகவல் தொடர்பியல் வழி இணையத்தின் வழி செய்திகள் விரைவில் பரிமாற்றப்பட்டு வருகின்றது. ‘திருக்கைலாய ஞான உலாவில்’ இடம்பெறும் தலைவியின் மனநிலை செய்திப் பரிமாற்ற அடிப்படையில் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
கொடி –கருத்துப் புலப்பாடு:
ஆரம்பக் காலத்தில் ஓவியங்கள், சைகைகள் மூலம் செய்தி ஒலிபரப்பப் பட்டன. நாளடைவில் கொடிகள், படங்கள் முதலியன கொண்டு செய்திகள் பரிமாற்றம் செய்தனர். மன்னன் தனது வெற்றிச் சின்னமாகக் கொடிகளைக் கோட்டையில் ஏற்றினான். பலவண்ண நிறங்களில் கொடிகள் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. காமக்கடவுகாளகிய மன்மதன் ஐந்து விதமான அம்புகளும், மலர்களும் மற்றும் கொடிப்படைகளும் கொண்டு இருப்பது வழக்கமாகும். அதாவது தனது முதுகில் இடப்புறத்தில் அம்புகளை ஏந்தி இடது கையில் கரும்புவில்லைப் பற்றி, சங்கு போன்ற முன்கைகளால் மலர்க்கணைகளை வீசிவரும் காட்சி திருக்கைலாய ஞான உலாவில் பதிவாகி உள்ளது. இதனை,
நூல்: “எனினும் நான் எழுகிறேன்” | ஆசிரியர்: திரு க.நவம்
மொழிமாற்றங்கள் ஒன்றும் புதிதல்ல, நூல் வெளியீடுகளும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் எவற்றை மொழிபெயர்க்கிறோம், அவற்றை எங்ஙனமாய் மொழி மாற்றங்கொள்ளும் மொழிக்குள் உள்வாங்குகிறோம், அவற்றை யார் மூலமாக யாரிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என்பவற்றை இந்நூலும் இந்நூல்சார்ந்த வெளியீடும் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் வாயிலாக,வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் இவ்வரைபின் முக்கிய நோக்கம்.
இந்நூலுக்கு முகவுரை எழுதியவன் என்ற வகையில் , நூலைப்பற்றியும், இந்நூல் வெளியீடு பற்றியும் என் மனதில் தோன்றியதை எழுதவேண்டும் என்ற ஆர்வமும் இக்குறிப்பின் இன்னொரு காரணமாக அமைகிறது.
சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது.
கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக இப்படியான நிகழ்வுகளுக்கு இளந்தலைமுறையினர் வருவதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இங்கே பல இளந்தலைமுறையினரைக் காணக்கூடியதாக இருந்தது. காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி ஆகியன பரிமாறப்பட்டன. ஓவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவது ஒரு உணவை வீட்டிலே தயாரித்துக் கொண்டு வந்திருந்தனர். உறவுகளையும், நண்பர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்ற வகையில் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசுகளும் கொடுக்கப்பட்டன.
சனிக்கிழமை 22-7-2023 அன்று கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.