மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்!
பயனுள்ள மீள்பிரசுரம்: இனியொரு.காம்
மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.

http://www.washingtonpost.com
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.
[
மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். சாதாரணப் பெண்களின் சாதனைகளைப் பற்றி பேப்பர்களிலும், பத்திரிகைகளிலும் படித்துத் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக கிராமத்துப் பெண்களின் சாதனைகளைப் பற்றியும், அவர்களுடைய மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவைகளைப் பற்றியும், பெண்களைத் தழுவிய எண்ணங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என்று அன்றைய தினப் பேப்பர்கள் பெண்களைச் சார்ந்த பேப்பர்களாகவே அச்சிடப்படுகின்றன. இதைக் கேட்பதற்கு பெருமிதமாகத் தான் இருக்கிறது. வாழுகின்ற இந்தப் புவியை “பூமித்தாய்” என்று அழைக்கிறோம், நம்முடைய நாட்டை எதிரிகள் படையெடுக்கும்போது நமது படைவீரர்கள் “பாரத் மாதா கி ஜய்” அதாவது “பாரத அன்னைக்கு வெற்றி” என்ற முழக்கத்தோடு போர்க்களத்துக்கு செல்லுகிறார்கள், அதே களத்தில் ஒரு வீரன், உயிர்போகும் தருணத்தில, தாய்மண்ணுக்கு சலாம் போட்டுட்டு உயிரிழக்கிறான். வாழுகின்ற கிரகத்தையும், குடியிருக்கும் நாட்டையும் பெற்ற தாய்க்கு சமமாக கருதுகிறோம், போற்றுகிறோம், பூஜிக்கிறோம்.
"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை இறந்தபோது சவப்பெட்டி இல்லை" - ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்? பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









