சி.யுவராஜ்முன்னுரை
சங்க இலக்கியம் அகம்,புறம் எனும் இருபகுப்புகளையுடையது. அகம் சார்ந்தஎட்டுத்தொகை நூல்களில் அகநானூறு ஒன்று. அகப்பாடலுள் காதல் உணர்வும்,காதல் சார்ந்தபிறநிகழ்;வுகளும் பேசப்படும். அத்தகையஅகப்பாடல் செய்திகளைசங்கப் புலவர்கள் முதல்,கரு,உரிஎன்றஅடிப்படையில் அமைத்துப் பாடியுள்ளனர். இவற்றுள் முதற்பொருள் என்பதுஅகமாந்தர் வாழ்ந்து நிலத்தினையும், நிகழ்ச்சிநிகழும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டஅமைகின்றது. இக்கட்டுரைஅகநானூறு பாலைத்திணைப் பாடல்களின் மலைப்பற்றி கூறுகள் அமைந்துள்ளவிதம் குறித்தப் புலவர்கள் தரும் செய்திகள் இக்கட்டுரையின் மையப்பொருளாகஅமைகின்றது.

பாலைநிலக்கூறுகள்
பாலைச்சூழலின் நிலத்தியல் கூறுகள் மலை, வழி, இடைவெளி, மணல்,பாறை, காடு ,பரப்பு, அறை, வயல், கழனி, கடல், வேங்கடல், பொதினி எனப் பலவகையானபெயர்களால் இடம் பெறுகின்றன. பாலைநிலத்தின் கூறுகளுள் ஒன்றாகிய‘மலை’என்பதை அடுக்கம், கவாஅன், குன்றம், சாரல், அறை, சிமை, கோடு, வரை, வெற்பு, விடாகம், பிறங்கல் எனப்பலப் பெயர்களில் சங்கப்புலவர்கள் விவரித்துள்ளனர்.

மலைப்பகுதிகள்

மலை
பாலைச்சூழலில் உயர்ந்தமலைஎன்பதை‘கல் உயர் பிறங்கல்’ (அகம்.313:17),‘உயர்பிறங்கல்;’(அகம்.321:17) எனவும்,‘கொடியமலை’என்பதற்கு‘வெம்மலை’ (அகம்.275:13) எனவும்,‘பெரியமலை’என்பதற்கு‘மைபடுமாமலை’ (அகம்.153;:17;187:2) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடுக்கம்
அடுக்கடுக்காகவரிசையாகச்செல்லும்அடுக்குமலைகள்‘அடுக்கம்’எனப்படுகின்றன. ‘உயர்ந் தோங்கியபக்கமலை’ என்பதை‘ஓங்குவரைஅடுக்கம்’ (அகம்.323:8) என்றும்,தெய்வம் விரும்பிஉறையும் பக்கமலையை‘கூர்புகல் அடுக்கம்’ (அகம்.359:11) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் அடைமொழிகளோடுகுறிப்பிடுவர். கோடையினால் மூங்கிலின் பசுமைஒழிந்துவதங்குவதுபற்றி‘மழைகரந்துஒளித்தகழைதிரங்குஅடுக்கம்’ (அகம்.347:10) எனப் புலவர்கள் பாடுகின்றார்.

அறை
நிலத்திலிருந்துஎழுந்தபெரியபாறைகள்‘கற்குன்று’போன்றதோற்றத்தைற்படுத்துவதுண்டு. திருச்சிக்குஅருகில் துறையூர் செல்லும் வழியில் ‘வெண்குன்றம்’எனப்பொருள்படும்‘திருவெள்ளறை’எனும்வைணவதிவ்யதேசத்தலம் இப்பெயர் கொண்டுஅழைக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது. அகன்றபாறைகள் ‘வியல் அறை’ (அகம்.103:8;357:5) ‘அகலறை’ (அகம்.309:6) எனக்குறிப்பிடுகின்றன.

கவாஅன்
கற்பாதைகள் நீண்டுஉயர்ந்திருக்கும் மலைப்பகுதிகவாஅன் எனஅழைக்கப் பட்டதைப் பாடல்கள் வழி அறியலாம். நீண்டநெடியமலை‘கல்லுயர் கவாஅன்’ (அகம்.189:6) எனவும்,நீண்டகற்பாறைகளையுடையமலை‘கல்அறைக் கவாஅன்’ (அகம்.385:8) எனவும் அழைக்கப்பட்டன. வானைத் தொடுமளவிற்குநீண்டுவளர்ந்துள்ளமலை‘விண்பொருநெடுவரைக் கவாஅன்’ (அகம்.173:17) என்றும,; ‘விண்தோய் சிமையவிறல் வரைக் கவாஅன்(அகம்.179:1) என்றும் அகநானூற்றுப் பாலைப் பாடல்களில் புலவர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

குன்றம்
மலையினும் சிறிய,அறையினும் பெரியசிறுமலையைக் குன்றம் என்றழைப்பர். அகன்றபெரியகுன்றினை‘அகன்பெருங் குன்றம்’ (அகம்.45:3)  என்றும்,நீண்டபெரியகுன்றினை ‘நெடும் பெருங் குன்றம் (அகம்.17:14;19;;5) என்றும் அகநானுற்றுப் புலவர்கள் அழைக்கின்றனர். தொலைதூரத்திலுள்ளமலை‘நெடுஞ்சேணிடையேகுன்றம்’ (அகம்.229:7) எனப்பட்டது. முருகன் வீற்றிருக்கும் நீண்டதிருப்பரங்குன்றம் ‘நெடியோன் குன்றம்;’(அகம்.59:11) எனவும்,குளிர்ச்சிவாய்ந்தமுருகன் விற்றிருக்கும் குளிர்ந்தமலை‘தண்பரங் குன்றம்’(அகம்.149:16) எனவும் அழைக்கப்பட்டது. பெரியஉச்சியையுடையமலை‘இருஞ்சியைக் குன்றம்’(அகம்.229:7) எனக் குறிப்பிடப்படுகிறது.

கோடு
‘கோடு’ என்பது‘வளைந்த’ என்றுபொருள்படும். மலைப்பகுதியில் வளைந்தசிகரங்களைக் குறிக்குக் ‘கோடு’என்றசொல்லைப் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நாளடைவில் ஊர்ப்பெயர்களிலும் மலையின் சிறப்புக்கருதி திருச்செங்கோடு‘ அதங்கோடு’என்றுவழங்கப்பட்டன. நீண்டமலையுச்சி‘நெடுங்கோடு’ (அகம்.145:9) என்றும்,‘வானுயர் நெடுங்கோடு’ (அகம்.397:14) என்றும் சிறப்பிக்கப்பட்டது. மலைச்சிகரத்தின் உயரம்; ‘வான்புகுதலையகுன்றம்’ (அகம்.201:5) என்றுஉயர்வுநவிற்சியுடன் பாடப்படுகிறது. அழகியஉச்சிமலை ‘காமர்சென்னி’(அகம்.205:18) என்றதொடரால் சிறப்பிக்கப்படுகிறது.

சிலம்பு
சிலம்புஎன்பதற்கு‘ஒலி’என்றபொருளும் உண்டு. அருவிகள் பாய்ந்துமலையில் ஒலிசெய்யுமானால் அம்மலைப்பகுதிசிலம்புஎனஅழைப்பட்டது. உயர்ந்தமலை‘ஓங்குமலைச்சிலம்பு’ (அகம்.249:15) என்றும்,நீண்ட மூங்கில் உயர்ந்தநிழல் பொருந்தியமலை‘நீடமைநிவந்தநிழல்படுசிலம்பு’ (அகம்.20:15-16) என்றும் புலவர்களால் குறிக்கப்படுகிறது.

சிமை
உயர்ந்தசிரங்களைக் கொண்டமலைஉச்சிப் பகுதிகள் ‘சிமை’என்றழைக்கப்பட்டன. நீண்டுஉயர்ந்தமலையுச்சியை‘உயர்சிமை’ (அகம்.145:9) என்றும்,‘கேண்சிமை’ (அகம்.159:13;291:15) என்றும் புலவர்கள் சிறப்பிக்கின்றனர். கதிரவனின் கடுவெப்பம் தாங்கமாட்டாமல் மலைஉச்சியில் வளைந்த மூங்கில்கள் கணுக்களில் வெடிக்கின்றனஎன்பதனை,

வேய்கண் உடைந்தசிமைய
வாய்படுமருங்கின் மலை                  (அகம்.399:17-18)

குறிப்பிடப்படுகின்றன.

பிறங்கல்
பாறைகள் அதிகம் செறிந்தமலை‘பிறங்கல்’ எனப்பட்டது. நீண்டஉச்சியையுடையபிறங்கல் ‘சேண்சிமைகோடுயர் பிறங்கல்’ (அகம்.247:12-13) எனவும்,வெப்பத்தின் காரணமாகஅழகொழிந்தபாறைகள் நிறைந்தபிறங்கல் ‘காய்கதிர் கடுகியகவின்அழிபிறங்கல்’ (அகம்.399:16) என்றுகடுங்கோடையின் கொடுமையால் மலையின் கவினெல்லாம் அழிகின்றதுஎன்றபொருளில் கோடையில் வெம்மையைப் புலவர் உணர்ந்துபாடியுள்ளார்.

வரை:-
நிலப்பகுதியின் எல்லையாகமலைஅமையுமானால் அது‘வரை’எனப்பட்டது. ‘உயர்ந்த் மலை’என்றபொருளில் ‘உயர்வரை ’(அகம்.393:19) என்றும்,‘பெரியமலை’என்றபொருளில் ‘பெருவரை (அகம்.91:3;291:5;359:16)என்றும்,நீண்டதாக இருப்பின் ‘நெடுவரை’ (அகம.69:10;;75:8;;141:28;;209:9) என்றும் எல்லையாகஅமைந்தமலைப்பகுதியைப் பாலைத்திணைபாடியஅகநானூற்றுப்புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

‘நெடுமால் வரை’ (அகம்.9:13) என்பதுமுருகன் உறையுள் மலையைக்குறித்தது. நிலத்தின் எல்லையைக் குறிக்கும் மலைப்பகுதியை‘நிலவரை’(அகம்.273:16) என்றும்,தமிழகத்தின் வடஎல்லையாகவேங்கடத்தில் எழுந்தநீண்டமலையை‘வேய்கடநெடுவரை’ (அகம்.85:9) என்றும்இ தமிழகத்தினுள் உள்ளகொல்லிமலையைக் ‘கொல்லிக் குடவரை’ (அகம்.213:15) என்றும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வானைத்தொடும்அளவிற்குஉயாந்தோங்கியமூங்கிலையுடையமலை‘விண்பொருநெடுவரை’ (அகம்.173:17) என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இமயமலைஎல்லையாகவிளங்குகின்றதுஎன்றகுறிப்பைப் பழந்தமிழர்; அறிந்திருந்தனர். அதனால் தான் மாமூலனார் தம்முடையபாலைத்திணைப் பாடலொன்றில் இமயமலையை‘இமயச் செவ்வரை’என்றுகுறிப்பிடுகின்றார். இன்றும் சிவந்தநிறத்தில் இமயஉச்சிக் காணப்படுவதை மூவாயிரம் ஆண்டுகட்குமுந்தையசங்கப்புலவரானமாமூலனார் அன்றுதம்முடையபாடலில் குறிப்பின் சுட்டியுள்ளார்.

புகைபோல்மேலேழுந்து,விண்ணிடத்தேஉயர்ந்துசென்றுஆங்கேபனிதவழ்ந்து மூடியதீச்சுடர்போல் இமயமலைவிளங்குகிறதுஎனும் எபாருள்பட,

 

புகையிற் பொங்கிவியல்விசும்பிஉகந்து
பனியூர் அழற்கொடிகடுப்பதிதோன்றும்
இமயச் செவ்வரை…                    (அகம்.265:1-2)

என்று மாமூலனார் பாடியுள்ளார்.

வெற்பு
மலையிலுள்ள உறுதிகானகற்பாதைப் பகுதிகள் வெற்பு என அழைக்கப்படுகின்றன. முதிர்ந்தநிலையில் இவை மிகப்பழமையானதும் உறுதியானதுமாகக் கருதப்பட்டிக்கவேண்டும். இதனைநோக்கியேகுறிஞ்சநிலத் தலைவன் வெற்பன் எனஅழைக்கப்பட்டிருக்கக் கூடும் எனக்கருத இடமுண்டு. உயர்ந்தமலை,‘ஒங்கல் வெற்பு’ (அகம்.267:13) எனஅழைக்கப்படுகின்றது.

விடரகம்
‘விடரகம்’என்பர்மலைப்பிளவு(பிளப்பு)இமலைக்குகை,மலைமுழைஞ்சுஎனஅழைக்கப்டுகின்றன. பெரியமலைப்பிளவு‘இருங்கல் விடரகம்’(அகம்.21:16)எனப் புலவர்களால் குறிக்கப்படுகின்றது.

முடிவுரை
உலகம் உருவாவதற்கு நிலமும,; பொழுதுமுதற்பொருள் இன்றியமையாததாகவிளங்குகின்றது.முல்லையும் குறிஞ்சியும் இருநிலங்களில் திரிபினால் வறண்டபகுதியைப் பாலைஎன்றதிணையாகவகுத்தார். குறிஞ்சித்திணைமலையும் மலைசார்ந்த இடம் என்பதைபுலவர்கள் வாயில் அகநானூற்றுப் பாலைதிணையின் பாடல்கள் மூலம் மலையைப் பற்றிய கூறுகள் இக்கட்டுரையின் மூலம் காணமுயலப்படுகின்றன.

துணைநூற்பட்டியல்
1.ச.வே. சுப்பிரமணியன்  சங்க இலக்கியம் எட்டுத்தொகைஅகநானூறு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: - சி.யுவராஜ் ,முனைவர்பட்டஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி -24 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்