ஆய்வு: ஆண்டாள் பாசுரங்களில் அழகியல்நடை - முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
முன்னுரை
“வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது. கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல், விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது. மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும் பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது. இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உவமை நடை
செய்யுளுக்கு அணி சேர்ப்பதே உவமை. தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டு விளக்குவது.
“உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்“ என்பது பேராசிரியர் தரும் விளக்கம். (தொல்.பொரு.ப.57)
சிறுபெண்ணான ஆண்டாள் மழை எங்ஙனம் பொழிய வேண்டும் என்ற அறிவியல் கோட்பாட்டினை, ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு அழகாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார். கடல் நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. அங்கு குளிர்ந்த காற்றுப்பட்டவுடன் அது மழையாகப் பொழிகின்றது. இந்த அறிவியல் உண்மைக்கு அழகானதொரு அறிமுகத்தொடு விளக்கவுரை தருகிறார். அதாவது,
”ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைய பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்“ (திருப்.4)


-
தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப் இம்மாதம் 21 ஆம் திகதி அதிகாலை வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார். அமைதியான இயல்புகளைக் கொண்டிருந்த அவர், ஆழ்ந்த உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார். அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன். தனக்கு சற்று சோர்வாக இருப்பதாகச் சொன்னார். அவருடனான முதல் சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தீம்புனல் வார இதழில் அண்மையில் எழுதியிருந்தேன். எனினும், அவர் அதனைப் பார்த்தாரோ தெரியாது. தற்போது ஆழ்ந்த துயரத்துடன் இந்த அஞ்சலிக் குறிப்புகளை எழுதுகின்றேன். அவரது மறைவுச் செய்தியறிந்ததும், அவரது புதல்வி சியாமளாவுடன் தொடர்புகொண்டு ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவிட்டே இந்தப்பதிவை எழுதுகின்றேன். அவர் தனது புதல்விகள் திரேசா – சியாமளா ஆகியோரின் பெயர்களிலும் முன்னர் தினகரனில் இலக்கிய பத்தி எழுத்துக்களை எழுதினார். 

சென்ற முறை, அத்தியாயம் 17இல், குறிப்பிட்டிருந்த ஆட்சியாளரின் இருசக்கரங்களின் செயற்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பிலான அக்கறைகள், தமிழ் அரசியலின் ஒரு பிரிவினருக்கு, முக்கியமாக, புலம்பெயர் அரசியலின் ஒரு சார்பினருக்கு, தேவைப்படும் விடயங்கள்தாமா என்ற சந்தேகங்கள் இன்று எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. காரணம், அண்மையில் ‘தமிழ்வின்னில்’ திலீபன் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘ஆதங்கங்கள்’ குறித்து பின்வருமாறு பிரகடனம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது: 

அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்...... அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம் அது. "சத்தியன்..... சத்தியன்" என அம்மா என்னை அழைக்கிறாள். நான் தலைவாரி புது சட்டை அணிந்து அவர்கள் முன் வந்து ' டிப் டாப்' ஆக நிற்கிறேன். அம்மா என் தோளைப் பற்றி "இவன்தான் மகன் சத்தியன். ஹி இஸ் எ டாக்டர்" என்கிறாள். எல்லோர் கண்களும் என்னில் ஆணி அடிக்கின்றன. ஆம், அவர்கள் நம்பவில்லை. பத்தாவது படிக்கும் அரும்பு மீசை கூட முளைக்காத நானா 'டாக்டர்'? 'இவனை டாக்டராக ஆக்க வேண்டியதே என் கனவுணு' சொல்லியிருக்கலாமில்லையோ?


எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். உண்மையில் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமும் அண்மைக்காலம் வரையிலும் என்னுடன் தொடர்பிலிருந்தார். கடைசியாக இவரது குவியம் அமைப்பும் (குவியம் என்னும் பெயரில் மின்னிதழ் நடத்தி வந்தவர்) தமிழகத்திலுள்ள கொலுசு அமைப்பும் நடத்திய " 2022 ஆம் ஆண்டிற்கான குவியம் - கொலுசு சிறுகதைப்போட்டி'க்காக என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக என் சிறு பங்களிப்பையும் அவருக்கு அனுப்பியிருந்தேன். 
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.


சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது . 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









