பதிவுகள் முகப்பு

நண்பர் முருகபூபதி! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
இலக்கியம்
11 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.

88 களில் முருகபூபதி கேட்தற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. தற்போதைய இந்தியாவை இணைப்பது மதமோ கலாச்சாரமோ அல்ல தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல்க் கட்டுரை “நடுகாட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில்( 1987 வைகாசியில்) வந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள் , சிறுகதைகள், நாவல்கள் அவரே சீர் பாத்திருப்பார். கடைசியாக வந்த தாத்தாவின் வீடு நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்த இடத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம் .

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
11 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 826 0364 5021 | Passcode: 383598

அன்புடையீர் வணக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். எமது சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, இம்மாதம் 14 ஆம் திகதி ( 14-01-2024 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக மெய்நிகரில் இடம்பெறும். சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் படிக்க ...

எனது புதிய ஆங்கில வலைப்பதிவு 'vngiritharancorner' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது புதிய  ஆங்கில வலைப்பதிவு  'vngiritharancorner' - 'My English Journey (எனது ஆங்கிலப் பயணம்') என்னும் தலைப்பில் எனது ஆங்கில வலைப்பதிவில் பதிவொன்றினை இட்டிருந்தேன்.  அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

(பயனுள்ள மீள்பிரசுரம்) நூல் அறிமுகம்: பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’ - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
நூல் அறிமுகம்
05 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.

உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை வாழ்க்கைக்கு அதீதமான விஷயங்களைப்பேசிவந்த இலக்கியம் சட்டென்று நேரடியான அன்றாட யதார்த்ததை நோக்கி திரும்பியது. யதார்த்தவாதம் இலக்கியத்தில் பிறந்தது. குஜராத்தி யதார்த்தவாதத்தில் காந்தியத்தாக்கம் மிகவும் அதிகம்.

காந்திய யுக படைப்பாளிகளில் முதன்மையானவர் பன்னாலால் பட்டேல். அவரது வாழ்க்கை ஒரு நாடகம் , மூலத்தில் ‘மானவீனீ பவாயி ‘ குஜராத்தி யதார்த்தவாதத்தின் ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. 1946ல் எழுதப்பட்டு 1973ல் தமிழில் மொழியாக்கம்செய்யபப்ட்ட இந்நாவல் இன்றும் அதன் அடிப்படையான சத்திய வேகத்தால் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

மேலும் படிக்க ...

என்ன நினைச்சே. நீ என்ன நினைச்சே' - 'சொக்கத்தங்கம்' பாடலொன்று.

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
03 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்ந் நினைவாக ஒரு பாடல்.  கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர்கள் உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஶ்ரீராம்.
 
விஜயகாந்த்துடன் நடித்திருப்பவர் சவுந்தர்யா. மருத்துவப் படிப்பை உதறிவிட்டு நடிக்க வந்து வெற்றியீட்டியவர். ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டார். விளைவு விமான விபத்தில் பலியானார்.
 
இசை - தேவா. பாடல் வரிகள் - ஆர்.வி.உதயகுமார்.
 
நல்லதொரு பாடல். https://www.youtube.com/watch?v=PrwKFS4V42A

 

சமுதாயவியல் சார்ந்த பண்பாட்டுச் சிந்தனை! - கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -

விவரங்கள்
- கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -
ஆய்வு
03 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் புஸ்பா கிறிஸ்ரி என்று அறியப்பட்ட புட்பா கிறிட்டி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (கனடா) முதுகலை பட்டம் பெற்றவர்.  பின்னர் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம்) 'மறையியல் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர். அவருக்கு எம் வாழ்த்துகள். -


முன்னுரை

பண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும்.  பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன

தமிழரின் நாகரிகம் பழமை வாய்ந்தது. முன்னர் சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் சிறந்தது எனச் சொன்னவர்கள், கீழடியின் நாகரிரீகம் கண்டு, திகைத்துள்ளனர். தமிழர்தான் நாகரிகவாதி என்கின்றனர். தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க, முன்னின்ற மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேச நிலைப்படுத்தப்பட்டது. முதலில் தமிழைக் கற்று, அதன் மேன்மை கண்டு, அதனை உலகறியச் செய்தனர் மேற்குலகினர். இப்போது உலக நாடுகள் எங்கும், குறிப்பாகத் தமிழர்கள் செல்கின்றனர். நமக்குள் நமது புகழைப் பேசிக்கொள்ளாமல், தமிழை, தமிழ்பண்பாட்டை உலகப் பொதுமேடையில் பேசி, மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர் சங்கங்கள், ஆய்வுக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும் வள்ளுவரை பல கட்டங்களில் ஆராய்கின்றனர். வள்ளுவத்தை உலகப் பொதுமறையாக்க முனைகின்றனர். திருவள்ளுவர் தந்த திருமறை வாழ்வின் நெறிகளைக் கற்றுத் தருவது தனிமனித ஒழுக்கத்தை, சமுகத்திற்குக் கற்றுத் தந்தவர் வள்ளுவர்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்னும் பாரதி வாக்கு, திருக்குறளை உலத் தரத்திற்கு உயர்த்தி வைத்தது. பாரதி பாடிய அன்றே இந்தூல் உலகெங்கும் பரவி விட்டது எனலாம்.

மேலும் படிக்க ...

கனடாவில் பாவலர் பாலரவியின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
02 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமைதாங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் கவிஞர் பாலரவியின் தங்கை சசிகலா தனது மாணவி என்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்க்கும் இவர்களைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் முருகபூபதிக்கு பாராட்டு விழா! - தகவல்: கிறிஸ்ரி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- தகவல்: கிறிஸ்ரி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
01 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்,  2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை,  இலக்கியச் சாதனையாளர் விருதையும்   வழங்கிக் கௌரவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024  ஜனவரி  மாதம் 7 ஆம்திகதி   ஞாயிற்றுக்கிழமை  மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது. 112 High St, Berwick VIC - 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள,  மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்த விழாவில், முருகபூபதியின்   இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள்  என்பவற்றைப்பற்றி, அறிஞர்களும், இலக்கியவாதிகளும்,  சமூகச் செயற்பாட்டாளர்களும்  உரையாற்றவுள்ளனர்.

மேலும் படிக்க ...

'செயற்கைப் புலமை'யும் (AI) சர்வதேச நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் மீதான அதன் தாக்கமும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
01 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.

ஆனால் இக்கட்டுரை விவாதிக்க முற்படுவது, துவாரகாவின் உரையானது செயற்கைப் புலமை கொண்டு தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. மாறாக இன்று புது வரவாக கருதப்படும் செயற்கைப் புலமை எனும் தொழிநுட்பம், இனி எவ்விதம் உலகில் கோலோச்சப்போகின்றது என்ற கேள்வியேயாகும்.

கிட்டத்தட்ட, பத்து தினங்களின் முன்னர் மோடி அவர்கள் தனது காசி உரையில், பாஷ்னி எனும், AIயின் உதவி கொண்டு உடனுக்குடன் தமிழுக்கு பரிவர்த்தனை செய்தார் எனக் கூறப்பட்டது. இதனை அவர் AIயின் உதவி கொண்டுதான் ஆற்றக்கூடியதாக இருந்தது என்பதும் உலகளவில் இச்செய்தியானது பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக்கப்பட்ட  ஒரு விடயமாயிற்று (19.12.2023).

இதனாலோ என்னவோ ஏட்டிக்குப் போட்டியாக நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டும் வகையில் மோடி பேசி முடிந்த சில தினங்களிலேயே பாகிஸ்தானின் இம்ரான்கான் சிறையில் இருந்தவாறே AIயை பாவித்துத் தன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததாக செய்தி வந்தது.

மேலும் படிக்க ...

புதுவெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -
கவிதை
31 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நல்லன நடக்க வேண்டும்.
நாடெலாம் சிறக்க வேண்டும்.
வல்லமை பெருக வேண்டும்.
வாழ்வது உயர வேண்டும்.

தொல்லைகள் தொலைய வேண்டும்.
தோல்விகள் அகல வேண்டும்.
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்.

போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்.
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும்.

ஊழலும் ஒழிய வேண்டும்.
உண்மையே நிலைக்க வேண்டும்.
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்.

உழைபவர் உயர வேண்டும்.
நல்லூதியம் கிடைக்க வேண்டும்.
கொடுப்பவர் பெருக வேண்டும்.
குவலயம் சிறக்க வேண்டும்.

கல்வியில் உயர்வு வேண்டும்.
கசடுகள் அகல வேண்டும்.
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: பாடகர் இளமைந்தன் இளஞ்சேயின் பாடல்கள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
30 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் வேந்தனாரின் மகன் வேந்தனார் இளஞ்சேய். அவரது மகனே இளமைந்தன் இளஞ்சேய். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரைப்பற்றிய குறிப்பொன்றினை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.  இளமைந்தன் இளஞ்சேய் தன் இசைப்பயணத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

விதைப்பந்து திருவிழா – இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - றியாஸ் அகமட். சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- றியாஸ் அகமட். சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
சுற்றுச் சூழல்
29 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

25.11.2023 - இன்று காலை போக்கும் வரத்துமாக, மருதமுனை, எருவில், பழுகாமம், அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, தாண்டியடி, பாவற்கொடிச்சேனை ஊடாக பயணம் செய்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அடைந்தோம்.

மேலும் படிக்க ...

நிருவாகிகள் தெரிவு - இலங்கை மாணவர் கல்வி நிதியம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
29 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்திருந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.

மேலும் படிக்க ...

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
28 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1. நேரமது கிடைத்திடல் வேண்டுமே

நற்றமிழ்தனை ஆய்ந்திடல் வேண்டும்
நன்னூல்கள்பல படித்திடல் வேண்டும்
கற்றவருடன் பழகிடல் வேண்டும்
கவிதைகள் எழுதிடல் வேண்டும்

உற்றவர் உறவுகள் வேண்டும்
உண்மை நண்பர்கள் வேண்டும்
பெற்றவர் ஆசிகள் வேண்டும்
பிள்ளைகள் பெருமை வேண்டும்

ஆக்கங்கள் ஆக்கிடல் வேண்டுமே
ஆய்வுகள் செய்திடல் வேண்டுமே
நோக்கங்கள் நிறைவுறல் வேண்டுமே
நேரமது கிடைத்திடல் வேண்டுமே!

மேலும் படிக்க ...

அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
28 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
 
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக்  கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : அமுதா விழா காணும் கலை, இலக்கிய ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது. அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும் அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம்.  இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம் சாதித்தன. தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால் அல்ல, அவரது அரசியல் இயக்கம் தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.

ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி,  தன்னை முன்னர் தடை செய்த எல்லா நாடுகளாலும்  ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார். அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள், வன் முறையாளராக பார்க்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)."

 இந்த வரிகள் இடம்பெற்ற அரசியல் ஆக்கம் ஒன்றை முன்னர் எழுதியவர் பற்றித்தான் இந்த முதல் சந்திப்புத் தொடரில் எழுதுகின்றேன். அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் ஆய்வாளர். இம்மாதம் அவருக்கு எண்பது வயது பிறக்கிறது. எம்மால் அன்புடன் என்றென்றும் , 'ரவி அண்ணன்'  என அழைக்கப்படும் அவரை வாழ்த்திக்கொண்டே இந்த அங்கத்தை தொடருகின்றேன். தொடக்கத்தில் நான் இங்கு குறிப்பிட்ட வரிகளை தான் எழுதிய , ' இந்தியா - ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும்' ! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.

மேலும் படிக்க ...

சமரசங்களுக்கு ஆட்படாத எழுத்தாளர் சீ.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய அரசியல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
26 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த " மலையகம் 200" என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைகு என் நன்றி.  -


“பிரட்டின் அதிர்விலே
விடியலே அதிர்ந்து போய்
தேயிலையின் மீது
சரிந்துகிடந்து…
… …
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரைகளை
அமைவுற நோக்கியே…
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…”

மலையக மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அல்லது நான்கு ஐந்து தலைமுறைகள், கழிந்தப் பின், மலையக மக்கள் தாமும் இந் நாட்டில் ஒரு குடியினர்தாம் என்று தமது சமூக இருப்பை இந்நாட்டில் கட்டமைத்து வேர்பதித்து கொள்ளத்துவங்கியதன் பிரதிபலிப்பாய், அவர்களின் பிரதிநிதியாய் தோன்றியிருக்கக்கூடிய ஒரு கவிஞன் இப்படியாய்ப் பாட முன் வந்தான். பெயர்: சீ.வி. வேலுப்பிள்ளை.

வேலுப்பிள்ளையின் முக்கியப்படைப்புக்களான 'தேயிலைத்தோட்டத்திலே' (In The Ceylon Tea Garden 1952–1953) அல்லது 'உழைக்கப்பிறந்தவர்கள்'  (Born To labour 1958–1959) போன்றே 1959 இல் வெளிவந்திருக்கக்கூடிய அவரது 'மலையக அரசியல் தலைவர்களும், தளபதிகளும்' என்ற நூல் மிக முக்கியமானது.  அவரது அரசியலை நுட்பமாக வெளிக்கொணரக்கூடியது. ஆனால், அவரது அரசியலைப் போன்றே அவரது கவிதை மனநிலையையும் இங்கே அலச முற்படுவது, இனி மலையகத்தில் உருப்பெறபோகும் இளம் கவிதை மனங்களுக்கு பயன் தருவதாய் அமையக்கூடும். இதனை இசை உலகின் விளிம்புகளில் ஒளிரக்கூடிய சில உதாரணங்களுடன் விளக்க முற்படலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 33: மலையக ஆளுமைகள் இருவர்: தெளிவத்தை ஜோசப், லெனின் மதிவானம் - நினைவுமீட்டலும் உரையாடலும்

விவரங்கள்
- தகவல்:அகில் -
நிகழ்வுகள்
25 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் மு.மேத்தாவுடன் 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் எழுத்தாளர் வதிலைப்பிரபா -

ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

மேலும் படிக்க ...

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்.. - ஊர்க்குருவி - -

விவரங்கள்
- ஊர்க்குருவி - -
கலை
24 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.அறுபதுகள், எழுபதுகளில் கண்ணன்,  அருணா இசைக்குழுப் பாடகர்கள் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் பாடிய பாடல்களிலொன்று  இந்தப்பாடல். வேதாவின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், ஜெய்சங்கர் & எல்.விஜயலட்சுமி நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின்  'இரு வல்லவர்கள்'.

அக்காலகட்டம் அழகான ஜெய்சங்கர் 'ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்க'ராகக் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த காலம். இவரும் , விஜயலட்சுமியும் அதிக படங்களில் இணைந்து நடித்த காலகட்டம். - https://www.youtube.com/watch?v=BD8qYBBEf9o

மேலும் படிக்க ...

கனடா வரலாற்றில் தமிழர் படகுகள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
23 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மங்களவிளக்கேற்றல், கனடியதேசிய பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து ச. சாந்தினியின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து தேவா சபாபதியின் வரவேற்புரையும், தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸின் தலைமையுரையும் இடம் பெற்றன. அவர் தனது உரையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்தவர்களையும், நிதி உதவி செய்தவர்களையும் பாராட்டி, கனடியத் தமிழர்பற்றி அடுத்த தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணம் இது என்பதையும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரை நிகழ்த்திய செல்வி ருக்ஸா சிவானந்தம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்திய திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் நூலின் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். செல்வி ருக்ஸா சிவானந்தம் விழாவில் பங்குபற்றிய புதிய தலைமுறையினருக்காக ஆங்கிலத்திலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பொன்னையா விவேகானந்தன் ஒரு குறும்படக் கதைபோலப் படகில் நடந்த சில சம்பவங்களைத் தமிழில் எடுத்துச் சொன்னார்.

மேலும் படிக்க ...

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

மேலும் படிக்க ...

விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை ! வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்கு இம்மாதம் 69 வயது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
22 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன. ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.

எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.

ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்! மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வாழ்வு! - தகவல்: இளஞ்சேய் -

விவரங்கள்
- தகவல்: இளஞ்சேய் -
நிகழ்வுகள்
22 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* விளம்பரத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதற்குமேல் ஒரு தடவை அழுத்துங்கள்.

இடம்: 'சங்கரப்பிள்ளை மண்டபம்',
கொழும்பு தமிழ்ச் சங்கம்,
வெள்ளவத்தை, இலங்கை
காலம்: டிசம்பர் 24, 2023 மாலை 5 மணி

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் அசதியாடல்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -
ஆய்வு
20 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அசதியாடல் ஆகும். அசதியாடல் குறித்துப் பல்வேறு இலக்கியங்களில் காணப்பட்டாலும் பக்தி இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிலம்பில் இளங்கோவடிகளும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.கம்பரும் தம் இராமாயணத்தில் அசதியாடல் குறித்துப் பாடியுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

அசதியாடல்

அசதியாடல் என்பது தனித்தும், ஓரிருவரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டும் விளையாடும் விளையாட்டாகும். அசதியாடல் என்பது பரிகசித்தல், வேடிக்கை வார்த்தைக் கூறுதல், சிரித்துப் பேசுதல் என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. உடன்பாடாக உரைப்பதுபோல் எதிர்மறைப் பொருள் பேசுவதே அசதியாடல் என்பதாகும்.அவ்வாறு எதிர்மறைப் பொருள்கள் வெளிப்படுவதேப் பாடலை அமைப்பது கவிஞரின் திறமையாகும்.

சிலம்பில் அசதியாடல்

இராமன் வனம் சென்று போது உயர்திணை, அஃறிணை உயிர்கள் எல்லாம் அழுதன. இதை வைத்துக் கொண்டு இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்

‘மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாலிய சேவடி சேப்பத் தம்பியொரடும் கான் போந்து
(ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல் 1 )

இராமா காலில் கல்லும், முள்ளும் குத்த கானகம் செல்கிறாயா, மகாபலிச்சக்கரவர்த்தி மூன்று அடி நிலம் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, நீ ஒழுங்காக உன் பிஞ்சு விரல்களால் மூன்று அடி நிலத்தை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு அவன் தலைமேல் கால் வைத்து விளையாடினாய். இப்போது அனுபவி என்பது போல் பாடுகிறார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை : உப்பிட்டவரை... - கடல்புத்திரனஂ -
  2. முனைவர் செ. இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்! - ஊர்க்குருவி -
  3. அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
  4. ஆவணச்சிறப்பு மிக்க முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) - வ.ந.கி -
  5. ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -
  6. நாடுகளின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாக்கம்! - ஜோதிகுமார் -
  7. ராசமணியும் பள்ளிக்கூடமும் - முனைவர் பெ.இசக்கிராஜா , உதவிப்பேராசிரியர் -
  8. கடவுளின் பசி - முனைவர் பெ.இசக்கிராஜா, உதவிப் பேராசிரியர் -
  9. ஒலியும் மொழியும் குழந்தைகள் இசையும்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி – பிரான்ஸ்) -
  10. கணினித் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும், தீர்வுகளும்! - பி.ஆர்.இலட்சுமி.,(முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) -
  11. எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -
  12. வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  13. கனடா இலக்கியவெளி வெளியிட்ட 'மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்' - குரு அரவிந்தன் -
  14. பிடித்த பக்கங்கள் (1) - ஆதவன் கதிரேசர்பிள்ளை -
பக்கம் 43 / 115
  • முதல்
  • முந்தைய
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • அடுத்த
  • கடைசி