- எண்பதுகளில் நியூ யோர்க  மாநகரத்து வீதி ஓவியர் என்னைப் பார்த்து வரைந்த பென்சில் ஓவியம். -

நேற்று மலை மெய்நிகர் வழி மூலம் எனது எழுத்துலக அனுபவங்களைப் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வு சிறப்பாக  அமைந்திருந்தது. கனடா (டொராண்டோ, மொன்ரியால்), ஆஸ்திரேலியா, இலங்கை பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டார்கள்.  இந்நிகழ்வைக் கனடாத்  தமிழ் எழுத்தாளர் இணையம் ஒழுங்கமைத்து நடத்தியிருந்தது. அவ்வமைப்புக்கு என் நன்றி. இந்நிகழ்வில் கால எல்லை காராணமாக எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் முழுமையாக உரையாற்றியதாகக் கூற முடியாது. முடிந்தவரையில் என் எழுத்துலக அனுபவங்களை விபரித்திருந்தேன். இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும், தூண்டுதலாகவிருந்த அதன் முன்னாள் தலைவர் எழுத்தாளர் அகணி சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.

நிகழ்வின் பின் என் எழுத்துலக அனுபவங்களை ஏன் விரிவாக எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரைத்தொடர். இத்தொடரை என் எழுத்துலக அனுபவங்கள் பற்றி விளக்குவதற்குரிய ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இத்தொடரில் என் வாழ்க்கைப்பருவத்தின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றிய அனுபவங்களை, அக்காலகட்டச் சிந்தனைகளை எல்லாம் மனந்திறந்து வெளிப்படுத்தலாம் என்று கருதுகின்றேன்.

பொதுவாகவே நான்  எழுத்தாளர்களின்  எழுத்துலக அனுபவங்களை, அவர்கள் தம் நனவிடை தோய்தல்களை அறிவதற்கு பெரு விருப்பு மிக்கவன். நீங்களும் அவ்விதமான மனப்போக்கு உள்ளவர்களாகவே இருப்பீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. நிச்சயம் நீங்கள் இத்தொடரை ஆர்வத்துடன் வாசிப்பீர்கள்  என்பதும் அவ்விதமானதொரு நம்பிக்கையே.

எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம். நான் அறிவியலூடு இருப்பு பற்றிய தேடல்களை மேற்கொள்பவன்.

எழுத்து எளிமையானதாகவிருக்க வேண்டும், மக்களின் வாசிப்புக்குரியதாக அமைந்திருக்க வேண்டும். ஆழமான விடயங்களையும் மிகவும் எளிய, மனத்தைத் தொடும் இனிய மொழியில் எழுத வேண்டுமென்பதுதான் என் விருப்பம். மகாகவி பாரதியாரின் எழுத்துகள் எளிமையானவை; வாசிக்கும் உள்ளங்களைக் கட்டிப்போடுவன; தெளிந்த ஞானத்தின் விளைவுகளாகப் புடமிடப்பட்ட எழுத்துகள் அவை. தர்க்கச்சிறப்புள்ள, நெஞ்சையள்ளும் அவர் பாவிக்கும் மொழி என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானது. பாரதியாரின் பல கவிதைகள் என் நெஞ்சிலெப்போதுமூறிக் கிடப்பவை.  நினைத்த மாத்திரத்தில் உற்சாகம் தரத்தக்கவை.

என் எழுத்துலகப் பயணத்தில் என்னைப் பாதித்த சிந்தனைகளின் பரிணாம வளர்சியாகச்  சமயச் சிந்தனைகள், திராவிடப் பண்ணைச் சிந்தனைகள் , மார்க்சியச் சிந்தனைகள் ஆகியவற்றைக் கூறுவேன். ஆனால் என் எழுத்துகள் எல்லாமே இவற்றின் நேரடிப் பிரச்சாரங்களாக அமைந்து விடுவதில்லை. சமூகம்,அரசியல், பொருளியல் சூழல் காரணமாகச் சில சமயங்களில் பிரச்சார இலக்கியத்தின் தேவையும் உண்டு. மு.வரதசராசனின் படைப்புகள் ஒருவகையில் பிரச்சார இலக்கியமே. அவரது வாழ்வு பற்றிய எண்ணங்களின் தீவிர பிரச்சாரத்தை அவற்றில் காணலாம். மார்க்சிம் கார்க்கியின் தாய் ஒருவகையில் பிரச்சாரப் படைப்பே. ஆனால் அது இன்று உலக இலக்கியப் படைப்பாக நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணம் அது அது உருவான காலகட்டத்து மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இருப்பதுதான். அதே சமயத்தில் கலைத்துவம் மிக்கதாகவும் அது படைக்கப்பட்டிருப்பதும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் முக்கிய நாவல்கள்  ஒரு வகையில் மதப் பிரச்சாரப் படைப்புகளே. ஆனால் அப்பிரச்சாரத்தன்மையையும் மீறி உலக இலக்கிய அரங்கில் உன்னதப்படைப்புகளாக அவை  இருப்பதன் காரணம் அவற்றின் கலைத்துவ வெற்றி. பாவிக்கப்பட்டுள்ள மொழி, பாத்திரப் படைப்பின் சிறப்பு, பாத்திரங்களின் உளவியலின் வெளிப்பாடு, கதைப்பின்னல் என்பவை அக்கலைத்துவ வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.

இவ்விதமான சிந்தனைப் போக்கு மிக்கவனாக நான் உருவானதை அறிய வேண்டுமானால் என் கடந்த கால வாசிப்பு, எழுத்துலக அனுபவங்களை அறிய வேண்டும். அவற்றைப்பற்றிச் சிறிது பார்ப்போம்.

என் எழுத்துலக அனுபவங்களை நான் மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது பொருத்தமாகவிருக்குமென்று நினைக்கின்றேன்.

1. பால்ய, பதின்ம வயதுக் கால எழுத்துலக ஆர்வமும், முயற்சிகளும்.
2. இலங்கையில் என் பதின்ம வயது மற்றும்  இளமைக்காலப் படைப்புகள்.
3. இன்று வரையிலான புகலிடத்தில் என் எழுத்துலக அனுபவஙகள்.

இக்காலகட்டப் பிரிவுகள் சரியான பிரிவுகள் என்று கருதுகின்றேன். இக்காலகட்ட விபரிப்புகள் எவ்விதம் என் சிந்தனையில் , வாசிப்பில், எழுத்தில் பரிணாம மாற்றங்களை , வளர்ச்சியினை ஏற்படுத்தின என்பதை உங்களுக்கு எடுத்துக்கூறும். அதே சமயம் இந்நனவிடை தோய்தல் எனக்கும் இன்பத்தைத் தரும்.

[தொடரும்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்