தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக ஆர்வலர் தாமரை சி. மகேந்திரனுடன் சந்திப்பு!
Join Zoom Meeting | Zoom Meeting ID: 897 1209 2206 | Passcode: 914664
Join Zoom Meeting | Zoom Meeting ID: 897 1209 2206 | Passcode: 914664
நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.
மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல் , தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள், அதாவது அகத்தின் வெளிப்பாடுகள் என்றாலும் சில பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிளிந்து நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வருவதே எனக்குப் பிடித்தது.
முதல் கவிதையே சிறு குழந்தைக்குத் தலையில் ஊற்றிய ஒரு குடம் வெந்நீர்போல் என்னைத் திக்கு முக்காடப்பண்ணியது.
1. அழைப்பிதழ்!
அழைப்பு வந்திருந்தது.
பிரித்துப் படித்ததில் ஆச்சரியம்..
கண்களுடன்,
மனதும் வியந்தததுடன்
ஒருவித அச்சமும் வந்தது.
மனைவியிடம் கொடுத்தேன்.
இதில் உங்கள் பெயர் இல்லையே
என்றாள்.
அப்படியாயின்
உனக்காக இருக்குமோ?
அவள் பயந்தாள்.
இருவரும் எதுவும் செய்ததில்லையே..
நல்லது செய்தாலும் அச்சமே நண்பன் சொல்லியிருந்தான்.
நாளை உனக்கான தண்டணை நிறைவேற்றப்படும்.
அவை கடுமையாக இருக்கும்..
ஆயுதங்களின் கடிதங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாது..
கடவுளின் தண்டணையைவிட
ஆயுதங்கள் முன் தன்னைப் பலியிடுதல் என்பது
கொடூரம்தான்..
நாங்கள் முழந்தாளிட்டுள்ளோம்.
பரமபிதாவே!
ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள்(cents ). அவ்வளவுதான். மேலும் அதில் அறுபது சென்ட் பெனிஸ் (pennies ) ஆக இருந்தது. பார்ப்பனியத்தின் மௌனக் குற்றச்சாட்டால், மறைமுகமான கையாளுகையால் அச்சுறுத்தி ஒருவரின் கன்னம் எரிக்கப்படும்வரை மளிகைக் கடைக்காரரையும், காய்கறிக்காரரையும், இறைச்சிக் கடைக்காரரையும் அந்தக் காசு காப்பாற்றியது. மூன்று முறை டெல்லா அதை எண்ணினார். ஒரு டாலர் எண்பத்தேழு சென்ட். அடுத்த நாள் கிறிஸ்துமஸ்.
இடிந்த சிறிய படுக்கையில் விழுந்து அலறுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. எனவே டெல்லா அதைச் செய்தார். இது வாழ்க்கை என்பது அழுகை, முகமூடிகள் மற்றும் புன்னகைகளால் ஆனது என்ற தார்மீக பிரதிபலிப்பைத் தூண்டுகிறது.
வீட்டின் எஜமானி முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கும் போது, வீட்டைப் பாருங்கள். தளபாடத்துடன் கூடிய அறைகள். வாரத்திற்கு $8. அதைப் பற்றிச் சொல்ல இன்னும் கொஞ்சம் இருக்கிறது.
கீழே உள்ள முன்மண்டபத்தில் ஒரு சிறிய கடிதப் பெட்டி இருந்தது. ஒரு கடிதத்தின் அளவை விட சிறியது. மின்சார அழைப்பு மணிக்கான பொத்தான் இருந்தது. ஆனால் அதனால் ஒளி எழுப்ப முடியவில்லை. மேலும், “திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங்.” என்பதைக் குறிக்கும் பெயர்ப்பலகை இருந்தது.
அங்கு பெயர் வைக்கப்பட்டபோது, ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் இற்கு வாரத்திற்கு $30 கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது, அவருக்கு 20 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் போது பெயர் மிக நீளமாகவும் முக்கியமானதாகவும் தோன்றியது. அது ஒருவேளை “திரு. ஜேம்ஸ் டி. யங்.” ஆகியிருக்கலாம். ஆனால் திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அலங்கரிக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைந்தார், உண்மையில் அவரது பெயர் மிகவும் குறுகியதாக மாறியது.
திருமதி. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் தன் கைகளால் அவரை இறுக்கப் பற்றிக் கொண்டு "ஜிம். நீங்கள் ஏற்கனவே இவளை சந்தித்திருக்கிறீர்கள். இவள் டெல்லா" என்றார்.
முன்னுரை
ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன் உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் தலைவனின், மன்னனின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பர். தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் இரகசியமாக என்ன நடக்கிறது என்பதை, தான் அறிந்து கொள்ளவே இரகசிய ஒற்றர்களை வைத்திருப்பர். ஒரு நாட்டில் வேற்று நாட்டு ஒற்றர்கள் பிடிபட்டால், அவர்களைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள் குறித்து ஆராய்வோம்.
புறநானூற்றில் ஒற்றன்
சோழன் நலங்கிள்ளியிடமிருந்து நீங்கி, நெடுங்கிள்ளியின் உறையூரை இளந்தத்தன் என்ற புலவன் அடைந்தான். அவனை நெருங்கி ஒற்றன் என கருதி, கொல்லத் துணிந்தான். அப்பொழுது புலவனைக் கொல்லாதவாறு நெடுங்கிள்ளியைத் தடுத்தார் கோவூர்கிழார்.
“ வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி”
(புறநானூறு 47)
இதிலிருந்து பிற நாட்டு ஒற்றர்கள் என்ற ஐயம் ஏற்படின் அவர்களைக் கொலை செய்வதும் இருந்தது என்பதையும், அவ்வாறு இல்லை எனில் அவர்களை விடுதலை செய்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் சாவகச்சேரி மருத்துவ நிலையக் குறைபாடுகள் ,மற்றும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகளைப் பார்த்தேன். இவர் கூறும் மருத்துவச் சீர்கேடுகள் முக்கியமானவை. தீர்க்கப்பட வேண்டியவை. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.
அதே சமயம் பொதுவெளியில் நடந்து கொள்ளும் இவரது ஆளுமை அம்சங்கள் விடயத்தில் இவர் சிறிது கவனம் எடுக்க வேண்டும். தனக்குச் சார்ப்பான விடயம் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவர் குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கின்றார். ஊடகவியலாளர் ஒருவருடன் இன்னுமொரு மருத்துவர் பற்றி உரையாடும் சமயத்தில் , அவ்வூடகவியலாளர் இவர் குற்றஞ் சுமத்தும் மருத்துவரை வானலைக்கு அழைக்கையில் அம்மருத்துவர் இணைப்பைத் துண்டித்து விடுகின்றார். அம்மருத்துவர் செய்தது சரியான செயல். உடனே இவர் துள்ளிக் குதித்து 'நான் சொன்னேன் பார்த்தியா' என்பதுபோல் ஏதோ கூறுகின்றார்.
இவர் இன்னுமொரு மருத்துவருடன் அவருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே , அம்மருத்துவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கின்றார். அம்மருத்துவரோ ஆளுமை விடயத்தில் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார். பரதேசி என்று வார்த்தைப் பிரயோகமும் செய்கின்றார்.
- எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அவர்களின் அகால மரணம் பற்றிய எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவு. போர்ச்சூழலில் பாதிப்புகளுக்கு உள்ளாகி, மீண்டும் தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கையில் எழுத்தாளர் பிரேமுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். - பதிவுகள்.காம் -
கை ஒன்றினையும் கால் ஒன்றினையும் போராட்ட காலத்தில் இழந்த கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள் 05.07.2024 இரவு மரணித்தார். சிறை வாழ்வும் அனுபவித்தவர். அதன் தாக்கத்தால் 'கம்பிகளின் மொழி பிரேம்' என தன்னை அடையாளப்படுத்தியவர். இப்படம் 2017இல் பிரேம் எடுத்தது. தன்னைப் போலவே போரில் காயமுற்ற ஒருவரை திருமணம் செய்தவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆனவர்.
2016இல் 'காய்ந்து போகா இரத்தக்கறை' எனும் நாவலினை யாழ்ப்பாணம் நெல்லியடியில் வெளியீடு செய்திருந்தோம். அந்நாவல் இவர் எழுதியது. இக்காலத்தில் இவர் அச்சு ஊடகம் ஒன்றில் பணியாற்றியிருந்தார் இந்நூலுக்காக பின்னட்டைக் குறிப்பினை எழுதிக் கொடுத்திருந்தோம். அதன் பின்பு 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலினை யாழ்ப்பாணத்திலும், 'பொன்னான பரிசு' நூலினை மன்னாரிலும் வெளியீடு செய்திருந்தார்.
1
சம்பந்தன் இறந்துவிட்டார். அவரின் மரணத்தை ரணில் மாத்திரம் அல்ல – புலம்பெயர் அரசியலும் தமக்கேற்ற வகையில் பயன்படுத்தி அரசியல் செய்ய துணிவது காணக்கிட்டுவதாய் உள்ளது. ஆனால், இதுவரை காலமும், தமிழ்த்தேசியம் பின்பற்றிய சம்பந்தரின் அரசியலும் இறந்துவிட்டதா? – அல்லது அது புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளதா? என்பது தெளிவற்றே காணப்படுகிறது. இதற்கிடையில் அவரது வாரிசான சுமந்திரன், பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டு நகர்கின்றார் என்பதிலும் சந்தேகமில்லை.
இச்சூழலில், மிக அண்மையில் வெளிவந்துள்ள சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்கள் காரசாரமானதாயும் வன்முறை கலாசாரத்தைத் தூண்டுவதாகவும் எதேச்சதிகார போக்கினை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன என்பது துயர்தருவது. உதாரணத்திற்கு :
“இத்தகைய தமிழ்த்தேசிய விரோதிகளைத் துரத்தியடிக்காமல், கருவறுக்காமல் தமிழ்த் தேசியத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது....” (திபாகரன் : தமிழ்வின் : 16.06.2024).
ஆட்டங்கான துவங்கியுள்ளதாய் கூறப்படும், தமிழ்த்தேசியத்தினைப் பாதுகாக்கும் வழிமுறை இதுவெனக் கூறப்பட்டாலும், இப்பார்வைச் சற்றே நிதானிக்கக் கூடியது. இதே காலப்பகுதியில் (ஓர் பத்து நாட்கள் இடைவெளியில்) வெளிவந்துள்ள மன்சூரின் அண்மித்த கட்டுரை ஒன்றும் இது பொறுத்தே கதைப்பதாகவுள்ளது. (விடிவெள்ளி : 27.06.2024).
எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.
இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'காலாடியில் பிரதிஷ்டை' என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.
இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.
ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபையின் முன்னாள் உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களின் மறைவுச் செய்தியை முகநூல் தாங்கி வந்தது. இவர் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. எதிர்பாராத மறைவுச் செய்திகளைத் தாங்கி வருவது முகநூலின் இயல்புகளில் ஒன்று. இவரது மறைவுச் செய்தியும் அவற்றிலொன்று. இவரது திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.
இவரை நான் ஒரு தடவை, நவம்பர் 2018இல் 'டொராண்டோ'வில் சந்தித்துள்ளேன். நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா), எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சந்தித்து உரையாடிய தருணங்களைப் பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதனை இத்தருணத்தில் மீண்டுமொரு தடவை நினைவு கூர்கின்றேன்.
(பதிவுகள்.காம்) நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!
தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மக்கள் இந்த நாட்டில் குடியேற மூல காரணமாக அமைந்தது.இலங்கையில் முதல் முறையாக 1820 களை ஒட்டிய தசாப்தத்தின் முற்பகுதியில் இலங்கை க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகும். மலைநாட்டின் கம்பளைக்கருகாமை யில் காணப்பட்ட சிங்ஹபிட்டி என்ற இடத்தில் வெறுமனே 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு தசாப்த காலத்திலேயே இலட்சம் ஏக்கர்களாகப் பெருகி அதற்கப்பாலும் வளர்ச்சியடைந்து, பின்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற்றமடைந்தது.
கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.
- எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் சிறுகதை, கவிதை, நாடகம், உருவகக்கதை, நாட்டாரியல் சம்பந்தமான ஆய்வாளர் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பாளர். இவரது மறைவு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குப் பேரிழப்பே. ஆழ்ந்த இரங்கல். இவரைப்பற்றிய விரிவான அறிமுகக்குறிப்பொன்றினை நூலகம் இணையத்தளம் ஆளுமைகள் பிரிவில் பிரசுரித்துள்ளது. அதனை நன்றியுடன் , முத்துமீரான் அவர்களின் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். நூலகத்தளத்தில் எழுத்தாளர்கள் பிரிவில் அவரது நூல்கள் பலவற்றை நீங்கள் வாசிக்கலாம். அவற்றில் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துள்ளோம். -
முத்துமீரான் சிறுகதைகள் | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் | மனப்பிரசவம் - சிறுகதைத்தொகுதி
முத்துமீரான் கவிதைகள்
நூலகம் தளத்திலிருந்து: ஆளுமை:முத்துமீரான், எஸ்.
முத்துமீரான், எஸ். (1941.05.03 - ) நிந்தவூரைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி, நிருபர் (தினகரன், வீரகேசரிப் பத்திரிகை).இவர் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.
இதுவரை 100க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் , 250க்கு மேற்பட்ட கவிதைகளையும் , 100க்கு மேற்பட்ட உருவகக்கதைகளையும், 200க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும் எழுதியுள்ளதுடன் 30க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இஸ்லாமியர்கள் மத்தியில் பாரம்பரியமாகக் காணப்பட்ட நாட்டாரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். நாட்டாரியல் பற்றிய இவரின் நுால்கள் தென் இந்திய பல்கலைக்கழகங்களில் உசாத்துணை நூல்களாகவும் பயன்படுகிறது.
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நோக்கலில் இரக்கம்!
பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.
இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.
காலமும் மனிதர்களும் நூலின், ஒரு துளியாக, நூல் பக்கம் 191 இல் இருந்து:
“எங்கிருந்தோ வந்து தயாராகவிருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்ல மலையக மக்கள். அவர்கள் எந்தவொரு நாகரிக சமுதாயத்தினதும் உருவாக்கத்தின் மூலத்தை போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதொரு பொருளாதார துறையை அடைந்தவர்கள். இவர்கள் அமைத்த இந்த பொருளாதார துறையும் அதைச் சார்ந்த அமைப்புகளும் இன்றும் இந்நாட்டின் ஆதாரமாயிருக்கின்றன. இம்மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இந்த மண்ணின் மக்கள் என்பதை ஆதாரப்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடையே தன்னம்பிக்கையினையும் உறுதியினையும் வளர்க்க உதவும்” (– எல்.சாந்திகுமார் - மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும்- தீர்த்தக்கரை – 1980 நவம்பர்-டிசம்பர்).
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர். முருகவழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்திலேயே குறிக்கப்பட்டதாய் உள்ளது. மலைநாட்டுக் கடவுளாக முருகப்பெருமான் சங்க இலகக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளார். சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ இனத்தவர் தங்களது கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்திய அணங்கில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (புறநானூறு : 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (குறிஞ்சிப்பாட்டு: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (அகநானுறு. 22:11); முருகு அயர்தல் (குறிஞ்சிப்பாட்டு: 362:1); வெறி (நற்றிணை. 273:4-5; பரிபாடல்i. 5:15); வெறியயாடல் (அகநானூறு 182:17-18); வெறியாட்டு என்பார்கள். ஐந்குறுநூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடல் குறித்து கூறப்பட்டு உள்ளது.
வெறியாடு – சொல் விளக்கம்
‘வெறி“ என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும் செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.
பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.
'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில். ]
2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.
3. சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விரியும் வரிகளைப் படிக்கையில் நாமும் அவ்வனுபவங்களை அடைவோம். பொதுவாக நாம் அனைவரும் அவ்வப்போது அடையும் அனுபவங்களை அவற்றில் இனங்கண்டு மேலும் மகிழ்ச்சியடையோம். மீண்டுமொரு தடவை அவ்வனுபவங்களில் எம்மை நனவிடை தோய வைத்து விடும் தன்மை மிக்கவை இவரது கவிதைகள்.
4. ,மானுட அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவை இவரது கவிதைகள்.
5. நான் இயற்கைப் பிரியன். இந் 'நிலம் என்னும் நல்லாள்' கவிதையில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வர்ணனை என்னை இயற்கை வளம் கொழிக்கும் வன்னி மண்ணில் வாழ்ந்த என் பால்ய பருவத்துக்கே கொண்டு சென்று விட்டன.
ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து என் கிராமத்தை , அராலியைப் பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான். முன்பும் , அராலித்துறை போக்குவரத்துக்கு வள்ளப்பாதையாக விளங்கி இருக்கிறது . காலனிக்காலத்திலிருந்தே அரசாங்கம் தரைவழிப்பாதை அமைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறது புங்குடு தீவு (கைவேப்) பாதையின் நீட்சி செயல் வடிவம் பெறவில்லை . கடலில் கல்லைக் கொட்டி பண்ணை வீதி , காரை வீதி , புங்குடுதீவு வீதி போன்றவை என்று அமைக்கப்பட்டன ? அப்படி அராலித்துறை வீதி ஏன் அமைக்கப்படவில்லை ? விபரம் தெரியவில்லை . பண்ணைப்பாலம் என்கிறார்கள் . அங்கே பாலம் ஒன்றும் இல்லை . பாலங்கள் இல்லாது இருப்பதால் தான் இவை வற்றுக்கடலாகிக் கொண்டு செல்கிறதா ? அந்த ஃபைலை , மகிந்தா தன் ஆட்சியில் எடுத்து தூசி தட்டி பார்த்திருக்கிறாரோ ? என்று தோன்றுகிறது .
1985 இல் பண்ணை வீதியை , காரைநகர் ஃபெர்ரி பாதையை இலங்கைப்படையினர் மூடி விட வேலணை , புங்டு ...நயினை மக்கள் தம்தேவைகள்....வள்ளங்களின் மூலம் அராலித்துறைக்கு வந்து ...கல்லுண்டாய் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லத் தொடங்கினர் . வள்ளம் , பெரு வள்ளமாகி , படகுகளாகி ...பிறகு , புளட் அமைப்பினால் .சிறிய ஃபெர்ரி போன்ற மிதவையும் கூட தயாரிக்கப் பட்டு மிதக்க விடப்பட்டது , அதில் , மோட்டர் சைக்கிள் ... கறுவாட்டுச்சிப்பம் என கணிசமானளவில் கொண்டுச் செல்வதில் முன்னேற்றம் கண்டவர்கள் . மிதவையில் ட்ராக்டர் , கார்கள் கூட ஏற்றிச் செல்ல தலைப்பட்டனர் . அந்த நேரமே நானும் ...இது சிறிய கடல் தான் என்பதை அறிந்தேன் . இடைப்பட்ட கடலில் பெரிதும் கழுத்தளவு நீர் உயரம் தான் என்பது என்னையும் ஆச்சரியப்படுத்தியது . பிறகு , அவ்வூரவருக்கு நானும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனேன்.
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைப் பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும். அந்தவகையில் அண்மையில் நான் மெல்பனில் பார்த்து, வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம் எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது. அத்துடன் இனக்கலவரத்தால் தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும் தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.
வாக்கு வங்கிக்காக மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப் போட்டியினால், இக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார். 1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.