'பண்பாட்டுப் பெட்டகம்' நூல் வெளியீட்டு விழா!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது .
எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் . மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல் கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது . பின்வளவின் மத்தியிலே இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடிய கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ....நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ?
இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
6
தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும்.
எண்ணெய் தொடர்பில், இலங்கை போன்றே பாகிஸ்தானும் சலுகைகளை தன் மக்களுக்கு அளித்து வந்த காலம், அந்த காலம். கூடவே, பாகிஸ்தானின் கடன் முறி உள்ளடங்கலான, வெளிக்கடன் 130,192 மில்லியன் டொலர்களாகும். (அதாவது 130.2 பில்லியன்களாகும்) - இதில் 30 கோடி டொலர் சீனக்கடன் 30மூ எனவும் கூறப்படுகின்றது.
அதாவது, 2006 இல், வெறும் 37.2 பில்லியன் டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன், இன்று மேற்படி 130.2 பில்லியன் டொலராக பரிணமித்துள்ளது என்பதும், இதில் IMFஇன் திட்டமிடுதல் எந்தளவுக்கு பங்கு வகிக்கின்றது என்பதும் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாகும். ஏனெனில் இதுவரையில், பாகிஸ்தான், IMFஇடம் 22 முறையில் கடன் வாங்கிய சரித்திரத்தை கொண்டுள்ளது, என்பதுவே இங்கே முக்கியமானதாகின்றது. சுருக்கமாக கூறினால், இம்ரான்கானின் பதவி பறிப்பு என்ற ஓர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஓர் நாட்டை வீழ்த்தும் பொருளாதார பொறி, அந்நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும் வலுவான காரணியாகின்றதா என்ற கேள்வி, சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முன்னோக்கி நகர்வதாயுள்ளது.
1. 'அலைகடலும் தூங்கையிலே அகக்கடல்தான் பொங்குவதேன்'
பொன்னியின் செல்வனில் வரும் இப்பாடல் இலட்சக்கணக்கான பொன்னியின் செல்வன் வாசகர்களைக் கவர்ந்த பாடல். ஆனால் இதனை இயக்குநர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன் 1'இல் பாவிக்கத்தவறி விட்டார். இன்னும் நான் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த என் தங்கையொருத்தியின் கூற்றுப்படி படத்தில் இப்பாடலில்லை. மிகவும் அரியதொரு சந்தர்ப்பத்தை இவ்விடயத்தில் தவற விட்டதாகவே நான் கருதுகின்றேன். எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.
'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.
1
அண்மையில் வெளிவந்த நிட்டின் கோக்லேயின் பேட்டி மிகுந்த பரபரப்பை, சர்வதேச மட்டத்தில் எழுப்புவதாக அமைந்திருந்தது. பல்வேறு, மிக அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பிய இப்பேட்டியானது, அண்மையில் வெளிவந்திருந்த இன்னுமொரு பேட்டியான, கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு நேரெதிராக அமைந்திருந்தது, அதன் முக்கியத்துவத்தை குறித்து காட்டுவதாக அமைந்து போனது. ‘ஒன்று சேர்ந்து, கப்பலை கரையேற்றுவோம்’ அல்லது ‘ஒன்று சேர்ந்து கப்பலை காப்பாற்றுவோம்’ என்பதே கவிஞர் ஜெயபாலன் பேட்டியின் தொனிபொருளாக இருந்த போதிலும், கோக்லேயின் பேட்டியானது கப்பல் செல்ல உத்தேசித்திருக்கும் ‘திசையை’ இலை மறை காய் மறையாக காட்டி நின்றதே அதன் அடிப்படை சிறப்பு எனலாம். அதாவது ஒருபுறம் அவா – கவிஞனின் கனவு – கவிஞனின் லட்சியம். மறுபுறம், நடைமுறை யதார்த்தம்.
2
இரண்டு பேட்டிகளும், சொல்லி வைத்தாற்போல் ஜெனீவா கொண்டாட்டத்தின் இடைநடுவே வெளிவந்த போதிலும், இரண்டுமே அது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டி நில்லாது இருந்தமை பேட்டிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் என கருதலாம். வருடந்தோரும் வந்து போகும் சரஸ்வதி பூஜையை போல, இதுவும் கடந்த பல வருடங்களாய் வந்து போவதால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவும் இவ் அசட்டை தோன்றியிருக்க வாய்ப்புண்டு. எனினும் ஜெனீவா முன்னெடுப்புக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அரங்கேற்றி கொண்டிருந்த போது ‘தினக்குரலில்’ அடுத்தடுத்து வந்த இரு செய்திகள் ஓரளவில் திகைப்பை தருவனவாக இருந்தன. ஒன்று ‘26 வருடங்களாய் போராடிய இன்னொரு தாய் (விக்னேஸ்வரன் வாகீஸ்வரி) நீதி கிடைக்காது மரணமானார்’ என்பதும் ‘மனித உரிமை பேரவை தலைவரை பீரிஸ் சந்தித்தார்’ என கூறி பீரிஸ் அவர்கள், மனித உரிமை பேரவை தலைவருடன் கைகுலுக்கி கொண்டிருக்கும் காட்சி படத்துடன் வெளிவந்தது (17.06.2022). இது, விடயங்களின் சாராம்சத்தை கூறுவதாய் அமைந்து போனது.
அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்!
தட்டையர்கள் என் மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில் வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள். முக்கிய வேறுபாடு மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.
அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.
“படிப்பை விட்டிடாதை ஒ எல் சோதினையை எடுத்து பாஸ் பண்ணுடா”
அப்பா போனதில் இருந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். தம்பியைப் படிக்க அனுப்பினேன்.
“நானும் படிக்கப் போனால் குடும்பத்தை ஆரம்மா பாக்கிறது. படிக்கிறதுக்கு உதவி கிடைச்சாலும் நாளாந்த செலவுக்கு நான்தானே உழைக்கவேணும்”
“பதினெழு வயசு படிக்கிற வயசடா. நீயும் படிக்கவேணும் எண்டு அப்பா ஆசைப்பட்டாரே.. படிக்கிற வயசில எந்த வேலைக்குப் போவாய். அப்பா மாதிரி கூலி வேலைக்குத்தான் போகவேணும். வேண்டாமடா அப்பா ஏமாந்ததும் துன்பப்பட்டதும் போதும் நீ படிக்கப் போடா” அம்மா கெஞ்சினாள்.
வருமானம் இல்லாமல் எப்படிப் படிக்கமுடியும். அப்பாவின் இடத்திலிருந்து இனி இவர்களை நான்தானே பார்க்கவேணும் அப்பா இருந்திருந்தால் இந்த நிலைமை வருமா. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அன்று நடந்ததை இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
1. அண்ணலும் நோக்கினாள்! அவளும் நோக்கினாள்!
வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டியார் & பெரிய பழுவேட்டரையர். ஓவியர் வினுவின் கைவண்ணம். வந்தியத்தேவன், குந்தவை இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவதாக வரைந்திருக்கும் ஓவியர் வினுவின் ஓவியத்திலிருக்கும் உயிர்த்துடிப்பு அனைவரையும் கவருமொன்று. 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்னும் கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
'எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.' - கம்பர்
- எழுத்தாளர் என்.செல்வராஜா -
'நூலகர் திருமதி ரூபவதி நடராஜா' என்னும் அக்டோபர் 2022 'தாய்வீடு' பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் எழுத்தாளர் என்.செல்வராஜா பின்வருமாறு கூறுகின்றார்:
'இந்நிலையில் யாழ்ப்பாண நூலகம் 1981 மே மாதம் 31ம் திகதி பின்னிரவில் அரச கூலிப்படையினரால் தீ வைக்கப்பட்டது. 97 ஆயிரம் புத்தகங்களும் தளபாடங்களும் ஒரு சில மணி நேரத்தில் எரிந்து தணியக் கூடியவையா என்ன? மே 31 பின்னிரவில் தொடங்கி, ஜூன் மாதம் 1ம் திகதியும் சுற்றாடலில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கை துப்பாக்கி முனையில் பிறப்பித்து விட்டு, தீயணைப்புப் படையினரையும் நுழையவிடாது ஒட்டுமொத்த நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டே அந்தக் கயவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றார்கள்.'
அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!
இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
கட்டடக்காட்டு விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில் 'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால் வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின் இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி, இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும் பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம் தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப் பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை மறந்திருக்கின்றேன்.
எழுத்துகள் எவ்வகையியாயினும் , கவிதை, கதை, கட்டுரை எவ்வகையினதாயினும் அவற்றில் விபரிக்கப்படும் மழைக்காட்சிகள் என் வாசிப்பனுபவங்களுக்கு இன்பத்தைத் தந்தன. எத்தனை மழைக்காட்சிகளில் என்னை நான் பறி கொடுத்திருக்கின்றேன்.
சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி, “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..? “ எனக்கேட்டார். “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத் தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ? “ எனக்கேட்டேன். “ இது குதர்க்க வாதம் “ என்றார் மனைவி.
மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும், அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை. அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள், “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள் “ என்றார். “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள், அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “ என்றேன். இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.
சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?...அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று கூறுவதாம்?
செங்கல்பட்டிற்கு அருகே உள்ள இந்த 150 ஏக்கர் பண்ணைக்குள் ஆசிரியர் பல பாத்திரங்களை தன் எண்ணக்கூடையில நிரப்பிவந்து இங்கே கொட்டுகிறார். எண்ணிக்கொள்ளுங்கள்: கதைசொல்லி இலங்கை கால்நடை வைத்தியர், பண்ணை மனேஜர் கறுப்பையா, முதலாளி நீலமேகம், பண்ணை வாசிகள்: மாணிக்கம், கிருஷ்ணன், வீரராகவன், பால்காரர் ராமசாமி, மேஸ்திரி, நாயகி: கமலம், பார்வதி, சுமதி, சிறுவர்கள் : ராசு, ராமு, சுப்பு, அறுபது மாடுகள் : சிவப்பி, பொன்னி, மூக்கன் கடா. ஆடுகள்: வேலன். பயிர்கள்: நிலக்கடலை, காய்கறி போதுமா? இல்லையென்றால் அமானுஷ்ய பாத்திரமான கற்பகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மெய்நிகர் அரங்கு ( 11-09-2022 ) காணொளி - https://youtu.be/9XKG3bJ-77I
அத்தியாயம் ஒன்று - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!
என் பெயர் விக்கிரமாதித்தன். என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத் தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.
அட்டா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.
பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அவ்வப்போது எழுதிய குறிப்ப்புகளிவை. பெரும்பாலும் எனது முகநூற் பக்கத்தில் வெளியானவை. அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கின்றேன். இக்குறிப்புகள் ஏற்கனவே பதிவுகள் இணைய இதழிலிலும் அவ்வப்போது துண்டு துண்டாக வெளியானவைதாம். 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகவுள்ள இத்தருணத்தில் இக்குறிப்புகளை வாசிப்பதும் இனிமையானதுதான். - வ.ந.கி - -
அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)
மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.
நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.
ஒரு காலத்தில் எம் பால்ய, பதின்மப் பருவங்களில் நாம் வாசித்த படைப்புகள் (வெகுசன, குழந்தை இலக்கிய) எல்லாம் பின்னர் எம் வாழ்வின் அழியாத கோலங்களாகி நிரந்தரமாக எம் ஆழ் மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மீண்டுக் காண்கையில் இன்பம் கொப்பளிக்கின்றது. மகிழ்ச்சியால் பூரித்துப்போய் விடுகின்றோம். அவை எம்மை வாசித்த அப்பருவங்களுக்கே தூக்கிச் சென்று விடுகின்றன. அவற்றையெல்லாம் அழகாக ஓவியங்களுடன் வெளியான அத்தியாயங்களுடன் 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்; தொலைத்து விட்டோம். அவ்விதமான பல்வகைப்படைப்புகளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் என்னைப்போல் பலர் இழந்திருப்பார்கள். ஆனால் இன்று இணையம் ஓரளவுக்கு அவ்விதம் இழந்ததையெல்லாம் மீண்டும் கண்டு அனுபவிக்க இடமேற்படுத்தித் தந்துள்ளது. நான் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் வாசித்துக்குவித்த கல்கி சஞ்சிகையின் படைப்புகளை அக்கல்கி இதழ்களினூடே மீண்டும் வாசிப்பதற்கு இணையம் வழியேற்படுத்தித் தந்துள்ளது. நூல்கள் பலவற்றைப் பழைய புத்தகக் கடைகளில் தேடிக்கண்டுபிடிக்க இணையம் உதவுகின்றது.
விரிபெருவெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!
- எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படம் -
எழுத்தாளரும், 'நவீன விருட்சம்' சஞ்சிகை ஆசிரியருமான அழகியசிங்கர் அவர்கள் போட்டிருந்த இந்தப்பதிவு மனத்தைத்தொட்டது. அவரது நண்பரும் , எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மூத்த புதல்வருமான ராமச்சந்திரன் அவர்களின் மறைவு பற்றிய பதிவு. இப்பதிவு ராமச்சந்திரனின் மறைவு பற்றிய தகவலுடன் , அவருடைய ஆளுமையையும் விபரிக்கின்றது.
எழுத்தாளர் கு.அழகிரிசாமி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.என் பதின்ம வயதுகளில் கல்கியில் வெளியான அவரது 'தீராத விளையாட்டு' தொடர்கதையை விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது மகனின் மறைவுச்செய்தி கு.அழகிரிசாமி அவர்களையும் நினைவுபடுத்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல். மேற்படி பதிவில் அழகியசிங்கர் அவர்கள் காலையில் மறைந்த ராமச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலிக்காகச் சென்றபோது ஏற்கனவே அவரைத் தகனம் செய்துவிட்டிருந்தார்கள். பதிவில் அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படத்தினையும் அழகியசிங்கர் பகிர்ந்திருந்தார். அதில் ராமச்சந்திரன் சிறுவனாகவிருக்கின்றார்.
ஒரு எழுத்தாளரை பெயராலும் பெற்ற புகழாலும் அறிந்தபின் அவரது படைப்பினை வாசிப்பதைவிட , படைப்பினை வாசித்தபின் உருவாகும் ரசனையால் படைப்பாளி யார் என தேடி அறிதலே அப்படைப்புக்கு மகிமை தரும். இதனை அண்மையில் உணர்த்திய நாவல் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் 'குஞ்சரம் ஊர்ந்தோர் ' . இந்நாவலை வாசிக்கும் வரை எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது எந்தப் படைப்பையும் வாசித்ததும் இல்லை. ஏன் பெயரைக் கூட அறிந்தது இல்லை. இந் நாவலின் வடிவில் எழுத்தால் மட்டுமே அறிமுகமானவர். ஆனால் வாசிக்க கையில் எடுத்தது முதல் இறுதிவரை சோர்வில்லாது வாசிக்க வைக்கும் இயல்பான கதையோட்டம்,எளிமையான நடை, வேஷங்கள் அற்ற நிஜமான மனிதர்கள் எழுத்தாளர் யாரென்று தேட வைத்தன.
இவரது படைப்புகளில் வங்காலை பிரதேசத்தின் மண்மணமும், கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலும், பிரதேச வழக்கும், கலைவடிவங்களும்முன் அறிந்திராத காட்சிப் புலத்தை கண்முன்னே கொண்டு நிறுத்தின. வாசித்த நாள் முதலாக ரசித்ததை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் அறிமுகமில்லாத அந்தக் களமும், காலமும், கருப்பொருளும் பற்றிய எனது தெளிவின்மையால் எண்ணம் உடனடியாகக் கைகூடவில்லை.
இதன் பின் சீமான் அவர்களது 'திசையறியாப் பயணங்கள்', 'தோற்றுப் போனவர்கள்' ஆகிய நாவல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது படைப்புகளில் பொதுப் பண்புகள் சில மனதில் ஆழப் பதிந்தன. வாசகர் மத்தியில் அதிகம் கவனம் பெறாத கடல் சார்ந்த பரதவ சமூகத்தினரின் அன்றாட வாழ்வியல் சோகங்கள்; பல வஞ்சனைகள், சில நட்புகள் தியாகங்கள்; நடைமுறை யதார்தங்களுடன் இயல்பாக வெளிப்படுத்தப் படும் பெண்கள்; மதம் இம்மக்களின் வாழ்வியலில் செலுத்தும் பங்கு ஆகியன.
கவிஞர் விக்கிரமாதித்யனின் பிறந்ததினம் செப்டெம்பர் 25.
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.
– விக்ரமாதித்யன் நம்பி -
ஒன்ன நினைச்சுப் பார்க்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது அதை எழுதணும் உட்கார்ந்தா எழுத்துதான் வரமாட்டேங்குது என குணா கமல் அபிராமியிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அதுபோலத்தான் நிறைய விசயங்களை எழுதணும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதையெல்லாம் உடனே எழுத முடியாது. அதற்கும் ஒரு வல்லமை வேண்டும்.
கவிதைகள் என்றாலே பாரதியைத்தான் எனக்குத் தெரியும் பள்ளிநாட்களில். மற்றபடி கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படிப்பெல்லாம் முடித்த பிறகு ஒரு சமயம் நூலகத்தில் விக்ரமாதித்யன் கவிதைகள் நூலைப் பார்த்த போது அட்டைப் படத்தில் தாடியோடிருந்த விக்ரமாதித்யன் முகம் மிகவும் ஈர்த்தது. அந்த கவிதை நூலைத் திறந்து கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போனது. வீட்டிற்கு எடுத்து வந்து பலமுறை வாசித்தபின் எனக்கு மிகவும் பிடித்த இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைத்தேன். எனக்கு சோர்வேற்படும் போதெல்லாம் அதையெடுத்து வாசிப்பேன். அந்தளவிற்கு விக்ரமாதித்யனின் இரசிகனாகிவிட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான சில கவிதைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் விக்ரமாதித்யன் கவிதை குறித்து ச.தமிழ்ச்செல்வன் எழுதியதையும் வாசித்துப் பாருங்கள்.
அண்மையில் மறைந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த எழுத்தாளர் பூர்ணிமா கருணாரன் முகநூலில் பின்வருமாறு குறிப்பொன்றினை இட்டிருந்தார்:
"நேற்றையதினம் இலக்கிய ஆளுமை திரு. K.S சிவகுமாரன் ஐயா அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு, அவரது சிதைக்கு தீ மூட்டிய வரையில் உடனிருந்தேன். மிகவும் வேதனையான உண்மை என்னவென்றால் அவரால் முன்னுக்கு வந்ததாக முகநூலில் பலரது பதிவுகளை காண முடிந்த அளவுக்கு, அவரது மரணச் சடங்கில் பலரைக் காண முடியவில்லை. யாரோ என் அருகில் இருந்த ஒருவர் கூறியதும் என் காதுகளில் விழுந்தது. 'ஆனானப்பட்ட பாரதியின் சாவுக்கே பதினொரு பேர் தான் என்று. தமிழ் சங்கத்தில் எனக்குத் தெரிந்த பலரையும் காணவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவர் வந்திருந்தார்கள். தமிழ் சங்கம் என்பது இலக்கியவாதிகளின் இளைப்பாறும் இடமாக மாறி விட்டதா? தயவுசெய்து திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது போனாலும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள். இதை நான் கூட கற்றுக் கொண்டது பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தான். அவர்களின் இலக்கியவாதி ஒருவர் இறந்திருக்கும் பட்சத்தில் அங்கு எவ்வாறான மக்கள் கூட்டம் இருக்கும் என்பதைக் கண் கூடாக கண்டிருக்கிறேன். சென்று வாருங்கள். உங்கள் ஆளுமை எதிர் காலத்தில் ஏனும் புரிந்து கொள்ளப்படும். மிகவும் வேதனையோடு இதனைப் பகிர்கின்றேன்."
கொழும்பில் அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பதிப்பாளர்கள் என்று பலர் உள்ளார்களே. அவர்களில் முகநூலில் அவரது நண்பர்களாகப் பலர் இருக்கின்றார்களே. அவர்களில் பலர் செல்லவில்லைபோல் தெரிகிறதே. பூர்ணிமா கருணாரனுக்கு கே.எஸ்.எஸ் அவர்களை முகநூல் மூலமே தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். அவர் தன் இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். ஆனால் ஆண்டுகள் பலவாக கே.எஸ்.எஸ் அவர்களை அறிந்த கொழும்பில் வாழும் கலை, இலக்கியவாதிகளுக்கு அது முக்கியமாகப் படவில்லையென்பது நவகாலத்தின் யதார்த்தம்.
- கவிஞர் மு.மேத்தா -
முன்னுரை
"ஆணாதிக்கத்தினின்று விடுதலை சமுதாயத்தில் ஆணுக்கு இணையான உரிமை , எக்காலத்தும் எச்சூழலிலும் எப்பருவத்திலும் ஆணுக்கு நிகரான மதிப்பு, பெண் தன்னம்பிக்கையுடன் தன் காலில் நின்று எதிர்நிற்கும் சிக்கல்களைத் துணிந்து எதிர் கொண்டு தன் இழிவகற்றி முன்னேறுதல், வாழ்வில் தன் இன்றியமையாமையை உணர்த்துதல், பெண்ணை இழிவுபடுத்தும் அனைத்தையும புறக்கணித்து அவற்றை வேரோடு களைதல் ஆகியவற்றை மையமிட்டுப் பெண்ணியம் இயங்குவதாகக் கொள்ளலாம்”
என்று பெண்ணியத்திற்கு விளக்கமாக முனைவா் ச. சிவகாமி அவா்கள் தன் 'காலச் சூழலில் பெண்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
'தற்பொழுது பெண் சமுதாயம் பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். ஆனாலும் அவை முழுமையான அளவை எட்டவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்றச் செயல் புள்ளிவிவரப் பிரிவு சென்ற ஆண்டில் என்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள். ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சிணைக் கொலைகள் நிகழ்கின்றன என்றெல்லாம் புள்ளி விவரங்கள் பெண்ணின் அவல நிலையைக் கூறுகின்றன. இந்தநிலை ஓா் ஆரோக்கியமான முன்னேறும் சமுதாயத்துக்கு உரிய அடையாளங்கள் ஆகுமா? '
என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன அவா்கள் 'பெண் விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதின் வாயிலாக அறிய முடிகிறது.
”உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினும் இந்தப் பெண்மையினிதடா” (பாரதியார் கவிதைகள். ப.235)
என்று ' பெண்கள் வாழ்க' என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார்.
பெண்மை என்பது தாய்மையின் வடிவங்களன்றோ! அவ்வியப்பூட்டும் சக்தியைப் பெற்ற பெண்கள் சார்புப் பிராணிகளாக்கப்பட்டு விட்டார்கள். இத்தகைய நிலையில் வானத்து விடிவள்ளி போன்று சில எழுத்தாளர்களில் ஒருவா்தான் கவிஞா் மு. மேத்தா. அவா் எழுதியகவிதைகளில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.