பதிவுகள் முகப்பு

சிறுகதை: புற்றுப் பாம்புகள்! - அ.கந்தசாமி -

விவரங்கள்
- அ.கந்தசாமி -
சிறுகதை
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



                                           - ஓவியம் AI -

நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.

வந்தவனோடு ஆறவமர இன்னும் எதுவும் பேசவில்லை, கும்பகர்ணனுக்குச் சொந்தக்காரன் போல் உறங்குகிறான் என்று எண்ணிய தமக்கை, அருகே சென்று தலைமயிரைத் அன்போடு கோதினாள். உடலெங்கும் நிறைந்திருந்த பயண அலுப்பு, இமைகடந்து வழிந்து விழக் கண் விழித்தான்.

வீட்டுக்குள் அறை மாறிப் படுத்தாலே அவனுடைய தொடர்தூக்கத்தில் பல இடைவெட்டுக்கள் ஏற்படும். இன்று தடித்த போர்வையுள் குறங்கிக் கால் மடங்கிப் படுத்தபின் கனவுகள் குழப்பாத கண் கனத்த உறக்கம்.

பிறந்த மண்ணை விட்டுவிலகி, முன்பின் பரிச்சியம் இல்லாத பயணமாய் ஆசையோடு விமானத்தில் ஏறியவன், பாதிப்பயணத்தில்தான் அது பலமணிநேரச் சிறை என்பதை உணர்ந்தான். ஒருவாறாக விமானம் பியர்சன் விமானநிலையத்தில் தரைதட்ட, பலர் விட்ட நிம்மதிப் பெருமூச்சுகளால் விமானம் தள்ளாடி தரித்தது. அவ்வேளை நிர்மலனுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியைச் சற்று நேரத்திலேயே குடிவரவு அதிகாரிகள் இடறினார்கள். ஆங்கிலம் என்ற ஒருமொழியை இருவிதமாய்ப் பேசும் பேரிடைவெளிக்குள் சிக்கித் தவித்து ஒருவாறு வெளியே வந்தான்.

விமானத்தில் வந்தோரை விட வரவேற்க வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். அக்காவை, அத்தானை தேடிய கண்கள் பெர்மூடா முக்கோணத்தில் சிக்கிய காந்தஊசி போல் திசை தெரியாமல் தடுதடுத்தன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் பாடலைக் கேட்க

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

யார் படைத்தார் பேரண்டமிதை.
பார்த்தால் பிரமிக்க வைக்கும்
பேரண்டத்தை யார் படைத்தார்?
யார் படைத்தார்? ஏன் படைத்தார்?

நுண்ணியதிலும் நுண்ணியதான குவாண்டம்
உருப்பெருக் காட்டிகள் இல்லையெனில்
உள்ளவற்றைப் -பார்க்க முடியாது.
உள்ளவற்றை உணர முடியாது.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

மேலும் படிக்க ...

இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
ஆய்வு
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                          ஓவியம் - AI -

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம். எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

              நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும், அக்கிரகங்கள் பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றித் “தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும்” 1 என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் கண் இமைக்கின்ற நொடிக்குள் 60.000 நட்சத்திரங்கள் பிறக்கும். 60 மில்லியன் கோள்கள் உருவாகும். எங்களுடைய பால்வீதி 1000 கிலோ மீற்றர் கடந்து போயிருக்கும். 120 கருந்துளைகள் (Black Holes) உருவாகியிருக்கும். 1200 நட்சத்திரங்கள் வெடித்திருக்கும். இந்தப் பிரபஞ்சம் 20 கோடி விரிவடைந்திருக்கும் என்று   விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இங்கு எங்களுடைய பங்கு என்ன இருக்கிறது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதி விரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுவோம்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதி அண்மையில் இருதயம் சம்பந்தமான சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஓய்வெடுத்து வருகின்றார். விரைவில் பூரண நலத்துடன்  மீண்டு வந்திடப் பதிவுகள் சார்பில் வேண்டுகின்றோம். எப்பொழுதும் இன் முகத்துடன் இருக்கும் முருகபூபதி அவர்களின் ஆளுமை நிச்சயம் அவருக்கு ஒத்துழைக்கும்.

ஒஸ்லோவில் தமிழ் மரபோடு இணைந்த அரங்கேற்றம் - மாதவி சிவலீலன் -

விவரங்கள்
- மாதவி சிவலீலன் -
நிகழ்வுகள்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.

கூத்தப்பெருமான் அண்டம் முழுவதையும் தனது ஆடல் அரங்காகக் கொண்டு ஆடும் போது உயிரினங்கள் அனைத்தும் சுகம் பெறுகின்றன. அந்த இன்பத்தை ஆடலரசிகள் இருவரும் கண்ணுக்கு முன் கொண்டு வந்தனர்.

குரு ஸ்ரீமதி கவிதாலக்ஷ்மி அவர்கள் பல்துறை சார்ந்த ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். பரதக்கலை மீது அவர் கொண்ட ஈடுபாட்டை அர்ப்பணிப்பை அதனை மாணவரிடையே கொண்டு சேர்க்கும் முறையையும் அன்றுஅரங்கில் தரிசிக்க முடிந்தது. கவிதாலக்ஷ்மி நடன ஆசிரியர் மட்டுமல்ல. கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், தமிழ் புலைமையாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு குருவின் தகுதியும் அதுவே. அதனை நன்னூல் ’கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்’ வேண்டும் எனக் கூறும். அதாவது பல கலை அறிவும் அதனை மாணவருக்குப் போதிக்கும் வன்மையும் வேண்டுமென்பர். புதுமைகளும் நுட்பங்களும் கட்டுடைப்பும் இந்த அரங்க்கில் சிறப்புப் பெற்றன. தமிழ் பாரம்பரிய முறையில் அமைந்த அரங்கேற்ற நிகழ்வாக அமைந்தமை யாவரையும் கவர்ந்திருந்தது. ஆடையலங்கார நேர்த்தியும் பின்னணி ஒலி ஒளியமைப்பும் இன்னோர் உலகிற்கு எம்மை அழைத்துச் சென்றன. பெண் அர்ச்சகர் சிவாஜினி ராஜன் அவர்கள் தமிழில் பூசை செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் படிக்க ...

என் அபிமான டியூசன் மாஸ்டர்களில் ஒருவர் எழுத்தாளர் அ.கந்தசாமி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     - எழுத்தாளர் அ.கந்தசாமி ('கந்தசாமி மாஸ்டர்') -

நான் க.பொ.த (உயர்தரம்) பெளதிகம் பாடம் ஒன்றைத்தான் முழுமையாக டியூசன் சென்று படித்திருக்கின்றேன். டியூசன் மாஸ்டர் கந்தசாமி மாஸ்டர்தான். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை  முகநூல் அறிவித்தது. இனிய  பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவரது டியூசன் வகுப்புகள் பற்றி நான் முதன் முறையாக அறிந்தது என் ஒன்று விட்ட அக்கா ஒருத்தி மூலம். அவர் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்து விட்டார். மீனா என்றழைப்பார்கள். சிறந்த ஓவியர்.அப்போது ஆச்சி வீட்டில் தங்கியிருந்து யாழ்  இந்துவில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காவும் , சிநேகிதிகளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து க.பொ.த (சாதாரண தரம்) பாடங்களுக்காக கந்தசாமி மாஸ்டரின் டியூசன் வகுப்புகளுக்குச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் புகழ்பெற்று விளங்கிய டியூசன் சென்ரர்களில் கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரும் ஒன்று.

பின்னர் புகழ் பெற்று விளங்கிய 'பொன்ட் மாஸ்டர்' (இவரது இயற்பெயர் கனகசபை ஆனந்தகுமார்) கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரில் க.பொ.த(சாதாரண தரம்) இரசாயன மாஸ்ட்டராகவிருந்தவர்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 41 -"நீலாவணனின் பன்முக ஆளுமை" -- தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மேலும் படிக்க ...

சிறுகதை: காற்றில் கரைந்த நதியின் ஓசை! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
21 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

சிறுகதை வாசிப்போம்!

ஊரின் கிழக்குப் புறத்தே பல மைல்களுக்கப்பால் உலை மூடி மலை என அழைக்கப்படும் தொடர் மலைக்குச் சற்று விலகி ஓங்கி ஒற்றையாய் நிற்கும் பெருமலைக்குள்  உட்கார்ந்திருந்தான் சூரியன். இது அவனது வீடு. மாலைப் பொழுதில் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களை மெல்ல மெல்ல புரட்டிக்கொண்டிருந்தான். அப்போது வெளியில் ஒரு மெல்லிய ஓசை கேட்டது. அதற்கு முன்பு கேட்டது போல இல்லாத ஓசை.

வீட்டின் முன்புறத்தில் சிறிய நதியை ஒத்த ஒரு வெறும் சின்ன நீர்நிலை மட்டுமே இருந்தது. ஆனால் அந்த ஓசை, பெரியதொரு நதியின் பாய்ச்சலைப் போல சத்தமாகவும் இனிமையாகவும் இருந்தது. அது சூரியனின் மனதை ஆவலோடு பிடித்தது. ஏற்கனவே மெல்ல இயங்கிக் கொண்டிருந்தது சூரியனின் வாழ்க்கை; வீட்டில் இருந்த சாமான்கள் கூட அவனைப் போலவே மந்தமாக இருந்தன.

புத்தகத்தை மூடிவிட்டு சூரியன் எழுந்தான். பெருமரங்களில் தங்கி நிற்கும் காற்றினைப் போல அந்த ஓசை அவனை உச்சியில் தொட்டு கீழே இறக்கியது. காற்று அந்த நதியின் ஓசையை எடுத்து வந்து சூரியனின் செவிகளுக்கு மாற்றியிருந்தது. காற்றில் நதியின் ஓசை கலைந்து போய்விட்டது.

மேலும் படிக்க ...

திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதி வெளியிட்டு விழா! - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
21 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

கொழும்பு மருதானை தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரபல எழுத்தாளரும் கவிஞரும் நாவலாசிரியரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை கமால் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.
 
பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் வாசனா தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்வதோடு நூலின் முதன் பிரதியையும் பெற்றுக் கொள்வார்.

ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.எம். ஹிஸ்புல்லாஹ் சிரேஷ்ட அதிதியாக கலந்துகொள்வார். கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணிகளான எம்.ஆர்.எம். ரம்ஸீன், சால்தீன் எம். ஸப்ரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க ...

லக்ஷ்மி சிரித்தாள்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
20 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.

"அப்பு, இந்த கோப்பிய குடிச்சிட்டு இருங்கோவன்" என மருமகள் செல்வி காலையில் கொண்டு வந்த பால் கோப்பியை ஏறெடுத்தும் பார்க்கமல் "அந்த மேசையில வையுங்கோ பிள்ள" என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு முனுகலாக பதில் சொல்லிவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டார்.  வழமையாக, கோப்பியின் நறுமணம் மூக்கில் நுழைந்ததுமே,  எழுந்து கட்டிலில் உட்கார்ந்து இரு கைகளையும் உரசி சூடேற்றி நாக்கில் ஊறும் உமிழ்நீரை ஒரு மடக்கு விழுங்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அந்த முருகேசர் எங்குதான் தொலைந்தாரோ? ஆம், மாறித்தான் விட்டார்.

முருகேசர் இப்படி கட்டிலில் முடங்கி தூங்குவதை மகன் சபேசன் அவதானித்தே இருந்தான். அவரின் ஆறடி  உடல் இப்படி ஏன் குறுகிக்கொண்டது என அவன் கவலைப்படாமல் இல்லை. அப்பா எந்த கூட்டத்தில் நின்றாலும் அவர் கம்பீரம்  அனைவரையும் ஆட்கொள்ளும். ஆனால் அவரின்  குரலில் உள்ள பணிவு அவர்களுக்கு ஆச்சரியமே.  உருவத்தால் உயர்ந்தவர்கள் உறுமத்தான் வேண்டும் என்பது உலக நியதியா என்ன? ஆலமரத்தில் இருந்து தேங்காயா விழுகிறது?

வந்த வேகத்தில் வார்த்தைகளை தெளித்து விட்டுப் போகும் மனிதரல்ல முருகேசர். ஆழ யோசித்து வார்த்தைகளை அடுக்கி அதன் இடையே பரிவு எனும் வெண்ணை பூசி வாயிலிருந்து விடுவிப்பார் அவர். கேட்போரின் செவிப்பறையை லாவகமாய் தட்டித் திறந்து வார்த்தைகள் பந்தியமைத்து அவர்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அப்படி ஒரு இங்கிதம் அவரிடம்!

மேலும் படிக்க ...

இரு கவிதைகள் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         - ஓவியம் - AI -

1. பூவுலகில் காதல் புனிதமே !  

      
மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்
உண்மையில் காதல் தானே
உயிராக இருக்கு தன்றோ

எண்ணிடும் போதே நெஞ்சில்
இன்பமே ஊற் றெடுக்க
பண் ணிடும் பாங்கை
காதல் பண்புடன் தருகுதன்றோ

உண்ணிடும் சோறு கூட
உடலுடன் சேர வேண்டில்
கண்ணிலே காதல் வந்தால்
கஷ்டமே கழன்றே போகும்

பழம் இனிது பாலினிது
பசித்தவர்க்கு உண வினிது
உள மினிக்க செய்வதற்கு
ஊக்கமது காதல் அன்றோ

மேலும் படிக்க ...

ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
சமூகம்
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆங்கிலேயர், போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிருந்து மாறிப் போர்ச்சூழலின் காரணமாகப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், பணி நிமிர்த்தமாகப் புலம்பெயாந்த இந்தியத் தமிழர்களும் இலகுவாகப் புலம்பெயர்ந்து தாம் வாழுகின்ற நாட்டினரின் பண்பாட்டிற்குத் தாமாகவே மாறக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்னும் விடயம் பொதுவாகவே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும் என்று கூறி என்னுடைய உரைக்குள்ளே நுழைகின்றேன்.

ஜெர்மனியில் வாழுகின்ற தமிழர் பண்பாட்டு மாற்றம் என்ற விடயத்தை முதலில் எடுத்து நோக்குவதற்கு முன் பண்பாடு என்றால் என்ன? ஜெர்மனியர் பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் தற்போது எவ்வாறு மாற்றத்தைக் கண்டுள்ளது என்பவற்றை எடுத்து நோக்க வேண்டும்.

1350 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றிவிட்டன. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்துக்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றினார்கள் எனச் “சேப்பியன் மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு” என்னும் நூலிலே யுவா நோவால் ஹராரி என்பவர் கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியின் பின்னே மனித இனம் தோன்றியது. அது பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் உண்ணவும், உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், மனிதனின் பண்பாட்டுக் கூறுகளில் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. காலநிலை, பௌதீக சூழலினால், பண்பாட்டுக்கூறுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. பண்பாடு என்பது எழுதப்படாத சட்டம் என்பதை சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்! -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
-சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
சமூகம்
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

357,386 கி.மீற்றர் பரப்பளவுள்ள ஒரு நாடு ஜெர்மனி. இது இரும்பைக் கொண்டு உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பூமி என்று அழைக்கப்படக் கூடிய நாடு. அதன் முக்கிய வளமே இரும்புதான். இங்கு 83.02 மில்லியன் மக்கள் வாழுகின்றார்கள். வடக்கே வட கடலும், டென்மார்க்கும், கிழக்கே போலந்து, தெற்கே ஆஸ்திரியா, சுவிற்ஸலாந்து, மேற்கே பிரான்ஸ் லக்ஸம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளன. 16 மாநிலங்களைக் கொண்ட ஒரு குடியரசு நாடாகும். இங்குள்ள மக்கள் ஜெர்மனிய மொழி பேசுகின்றார்கள்.

இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, அவர்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழ்ந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்.

மேலும் படிக்க ...

முனைவர் பீ. பெரியசாமி கவிதைகள்!

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி -
கவிதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



முருகன்

அழகனவன்
ஆறுமுகன் கொண்டவன்
வெறியாட்டு நாயகன்
சேயோன், செவ்வேலோன்
தமிழன் முப்பாட்டன்
இன்று சைவனாய்….!

படிப்பு

படித்தால் முன்னேறலாம்
பலரும் சொன்னார்கள்
யாரும் சொல்லவில்லை
யார் முன்னேறுவாரென்று…

கைம்மை

நெற்றியின் பொட்டு
புதியதாய் நிறமற்று போனது
வாழ்க்கையும் தான் …

மேலும் படிக்க ...

தோரணை! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

                                           ஓவியம் : AI

ஜோதிக்கு  சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத்  தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு   சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை  இருக்காது.  ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி  செய்து  கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.

         சுகுமாரனின் அண்ணன் மகளின் மாமனார் இறந்து விட்டார். அதற்காகச் செல்வதற்கான ஆயத்தங்களில் சுகுமாரன் இருந்தான். இதுபோன்று இழவு காரியங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் செல்ல வேண்டும் என்று பல சமயங்களில் சுகுமாரன் நினைப்பான். ஆனால் அந்த ஜாக்கிரதைத்தனம் எதுவும் இல்லாமல் சென்று விடுவான்.

 வருத்தம் தரும் நேரங்களில் அதுவும் ஒன்றாகிவிடும்.

 இப்போது கூட எந்த உடை அணிந்து கொள்வது என்பது தான் குழப்பம் இருந்தது வழக்கமாக அவன் அணியும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அவனுக்கு எப்போதும் ஒத்துழைப்புத் தந்து கொண்டிருக்கிறது. அதை பல நாட்களாக அவன் பயன்படுத்தி வந்தான். பத்து நாட்கள்., பதினைந்து  நாட்கள் அணிந்துவிட்டால் பின்னர் அதை அழுக்குக் கூடைக்கு அனுப்புவான். அப்படி அழுக்கோடு இருப்பது தான் அந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உயர்ந்த பட்ச அழகு என்பது அவனுடைய எண்ணம். பிறகு அழுக்கும் சாதாரணமாகி விடுகிறது. அடிக்கடி பேண்ட் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்க இலக்கியச் சந்திப்பு: ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்!

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

சிறுகதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
17 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                               ஓவியம் - chatGPT AI

[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ பனியும் பனையும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தாயகம் (கனடா) பத்திரிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது. எனக்குப் பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று. பத்திரிகைகள் பலவற்றில் மீள் பிரசுமான கதை. சிறுகதை.காம் தளத்திலும் இடம் பெற்றுள்ள எனது கதைகளில் ஒன்று. ]

ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

மேலும் படிக்க ...

'ரவி அல்லது' கவிதைகள்: பால்ய வடுக்களின் ஈர்ப்பு & தவித்தலையும் காதல்.

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
16 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                          - ஓவியம் AI -


1. பால்ய வடுக்களின் ஈர்ப்பு.

இந்த அகாலத்தில்
கிளர்ந்தெழும்
அன்பை
மடை மாற்ற முயலும் பொழுது
வீசிய தென்றலின்
வாசனையில்
இழுத்துச் சென்றுவிட்டது
பால்ய கால
பள்ளி நிகழ்வுகளுக்குள்
விடாமல்‌.

சிதிலமடைந்த
கட்டிடத்தில்
சிலேட்டுகளில்
நாங்கள் கிறுக்கி
விளையாடியபொழுது
மேசை மீதமர்ந்து
மேல வீட்டு
ஜோதியக்கா
லிங்கம் வாத்தியாரிடம்
என்ன சொன்னதென
தெரியாது.
நாற்காலியில்

இருக்கும் வாத்தியாரின்
உள்ளங்கையில்
உள்ள தோலை உரித்து
ஒவ்வொன்றாக வீசி.
செல்லும்போது
சிரித்து
கையசைத்தது
அக்கா
காட்சியாக கடக்கிறது
தாவணியில் பேரழகியாக
இப்போதும்.

மேலும் படிக்க ...

சந்தன நுஃமான் வாழ்க! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
16 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஆகஸ்ட் 10 அன்று அகவை எண்பது காணும்  ஆசானுக்கு வாழ்த்து!  

மனிதமே உருவும்; என்றும்
மனதிலே கனிவும்; மேவும்
புனிதமே செயலும்; நாளும்
பூவெனச் சிரிப்பும்; எந்தைத்
தனிமுக வடிவும்; பெற்ற
தாயவள் தயைவும்; நாவின்
நுனிதனில் கவியும் கொள்ளும்
நுஃமானே என்றும் வாழ்க!

குருவென ஆகி நின்றே
குவலயம் அறியவைத்தாய்!
பெருமனதோடு நல்ல
பெற்றிகள் எய்த வைத்தாய்!
'உருவது உண்மை' என்றே
ஊன்றி நீ பதிய வைத்தாய்!
குருவென நின்றாய்! எந்தன்
குருபர நுஃமான் வாழ்க!

மேலும் படிக்க ...

சிறுகதை : ' புல்லாங்குழலே என் ஜாதி , நீயும் நானும் ஒரு ஜாதி' - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
16 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

' நான்,  இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? ... உமா உனக்கு ஏன் இப்படி ,  பையித்தியக்கார​ எண்ணங்கள் எல்லாம் வருகின்றன​ ' . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா  , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு ​ வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய​ பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ' பத்மினி , தாரகை , இந்த​ குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து உடற்பயிற்சி   எடுக்க​ முடிகிறது ' ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற​ எண்ணமே மேலோங்கி  இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த​ பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ... நம் தாய்நாடில்லை 'என்று மறக்க​ வைக்க​ முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த​ பிறகு 'ஒரு பிடி மண்ணைக் கூட​ எடுத்துச் செல்ல​ முடியாது ' என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய​ காலத்தையாவது  கலாயிப்போம்  ​ என​ நினைப்பை மாற்றினான்.

குழந்தாய் சொரூபிக்கு என்னை விட​ நாலு வயசு குறைவாக​ இருக்கும் . ' நாதம் என்னும் கோவிலே நானும் விளக்கு ஏற்றி வைத்தேன் ' வரிகளுக்கு   ...அடேயப்பா எத்தனை உணர்ச்சி அபிநயங்கள் , மிச்சபாட்டைத் தான் அவனுள் மனம் இட்டுக்கட்டி பாடிக் கொண்டு போகிறதே ...! . ஒரு  கவிஞரின் வரிகள்...பல்லவி  , சரணத்தில் ..    நேராக   அல்லது  தட்டி நெளிக்கப்பட்டோ ...வாழ்கிறது தான் . நீங்களும் கவிதை எழுதுங்கள்  .  ' புல்லாங்குழலே என் ஜாதி , நானும்  நீயும்  ஒரு ஜாதி ! ' இப்படி ,  முணு முணுக்க​ உங்களுக்கே தெரியாத​ ஊர்பேர் தெரியாத பலபேர் இருக்கிறார்கள் .

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு உதவி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
அரசியல்
13 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க ...

ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.

தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப்  பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

வலிமையான பாரதத்துடன் ஏற்படுத்திய 13 அம்ச ஒப்பந்தத்தையே இதுவரையில் நடைமுறைப் படுத்தாமல் இலங்கை அரசு இருக்கும் நிலையில், முதலில் செய்ய வேண்டியது அதனை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்துவதுதான். அவ்விதமானதொரு சூழல் எற்பட்டால், அத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இலங்கையில் மாகாண சபைகள் நன்கு செயல்படத் தொடங்கினால், மாகாண சபைகளின் குறைபாடுகளை மேலும் நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை வலியுறுத்தலாம். அடுத்த கட்டமாக  மாகாண சபைகளை மாநில அரசுகளாக மாற்றும்படி , சமஷ்டி முறையிலான மாநில அரசுகளாக மாற்றும்படி வலியுறுத்தலாம்.

மேலும் படிக்க ...

காக்கை விடுதூது கூறும் காக்கையின் பெருமை! - முனைவர்.ஆ.ஆனந்தி, 1/1881, பழனிச்சாமி தெரு, ஜக்கதேவி நகர், பாண்டியன் நகர், விருதுநகர் -

விவரங்கள்
- முனைவர்.ஆ.ஆனந்தி, 1/1881, பழனிச்சாமி தெரு, ஜக்கதேவி நகர், பாண்டியன் நகர், விருதுநகர் -
ஆய்வு
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                          ஓவியம் AI -

காக்கைவிடுதாது ஆசிரியா பாந்தவூர் வெண்கோழியார் ஆவார். புறப்பொருள் பற்றிய தூது நூலாகும். 1937-39ஆ ம் ஆண்டு வரை சென்னை மாநில முதலமைச்சராக பள்ளிகளில் கட்டாயமாக்கப்  பெறவில்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது அந்திலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாயப்பாடமாக்க உத்தரவிட்டார். அப்பொழுது தமிழ் விருப்பப்படாமாகவே இருந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்காமல் அயல் மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலை அடிகளார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் சோமசுந்தரபாரதியார், தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை போன்றோர் இத்திட்டத்தினை எதிர்த்தனர் மூதறிஞர் இராசாசி அவர்கள் நமது கட்சிப் பெரும்பான்மையைக் கொண்டு தமது திட்டத்தை கைவிட வில்லை இதிட்டத்தை எதிர்த்து பெரியார், துறவிகள், பெண்கள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சூழலில் 1989 ஆம் ஆண்டில் பாடப்பெற்றதே காக்கைவிடு தூது என்னும் நூலாகும்.

அண்டங்காக்கை - பெயர்க்காரணம்

கருங்காக்கையை அண்டங்காக்கை என நிறத்தை மையப்படுத்தி மனிதர்கள் கூறுவதுண்டு ஆனால் ஆசிரியரோ கடவுளுக்கும் கருமை நிறம் உண்டு உனக்கும் கருமைநிறம் உண்டு.  அண்டம் என்றால் உலகம், காக்கை என்பதற்கு காத்தல் என்று பொருளும் உண்டு. ஆக அண்டங்காக்கை என்பது உன் நிறம் குறித்துக் கூறுவதன்று. உன்னைப் பெருமைப்படுத்தும் பெயர் என்கிறார்.  இதனை,

"அண்டங்காக கையென்ன ஆயினாய்
மண்டு நிறத்தைக் கருதாது
நின்பெருமை நின்னை யுறவே
கருங்காக்கை யென்பர் திறல்சேர்
கருமைநிறத் தானுங் கடவுளமைத்திட்ட
பெருமை யடையாளப் பேரே"

என்ற பாடலடிகள் வழி அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


 
ஓசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk   வ.ந.கிரிதரன் பாடல்கள் அனைத்தையும் கேட்க -  https://www.youtube.com/@girinav1

விண்ணைப் போன்றதொரு நூலகம்

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

மேலும் படிக்க ...

தமிழும் திராவிடமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர்

                            இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I   | தேவநேய பாவாணரின் திரவிடத்தாய் -

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அப்பாச்சியின் புதையல் பற்றிய ஞாபகம்! - முல்லைஅமுதன் -
  2. கம்பராமாயணத்தில் தேர்ப்பாகன் - முனைவர் க.மங்கையர்க்கரசி,,உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
  3. நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -
  4. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 24
  5. ரொறன்ரோவில் பரதநாட்டிய அரங்கேற்றம். - குரு அரவிந்தன் -
  6. நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -
  7. பன்முக இலக்கிய ஆற்றல் மிக்க எழுத்தாளர் ஈழக்கவி பற்றி... - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -
  8. ஓடை II - ஜோதிகுமார் -
  9. இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -
  10. நான் பார்த்த சீக்கிய மதத் திருமணம்! - கனகசபை குருபரன் -
  11. ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -
  12. மாணிக்கவாசகா் வரலாறும் படைப்புச் சூழலும்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  13. அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -
  14. பிரசன்ன விதானகேயின் Paradise திரைப்படம்! இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், இராமாயண ஐதீகத்தைப் பேசும் உலக சினிமா ! - முருகபூபதி -
பக்கம் 18 / 104
  • முதல்
  • முந்தைய
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • அடுத்த
  • கடைசி