வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் ஐந்து!
1. கண்டிட்ட நன்றியெலாமிவர் மறந்தார்!
பெற்றிட்ட உதவிகளின் தரமறியார்.
பேணிட்ட நட்பின் உயர்வறியார்.
கற்றிட்ட கல்வியின் பொருளறியார்.
கிடைத்திட்ட உறவின் உயர்வறியார்.
உற்றிட்ட நன்மைகளின் நலனறியார்.
உதவிட்ட நட்புகளின் உளமறியார்.
கொண்டிட்ட வாழ்வின் கோலத்தில்
கண்டிட்டநன்றியெலாமிவர்மறந்தார்.
2. வாழ்வில் நன்மைகள் கண்டிடலாம்!
நேர்மையாய் வாழ்ந்திடுவோம்.
நிம்மதியாய் இருந்திடுவோம்.
உண்மையாய் நடந்திடுவோம்.
உழைப்பைப் போற்றிடுவோம்.
நல்லவற்றை நினைந்திடுவோம்.
நன்றிமறவாது பழகிடுவோம்.
மற்றவர்களுடன் நமைஒப்பிடோம்.
முயற்சிகளை நாம்கைவிட்டிடோம்.
தானங்கள் கொடுத்திடுவோம்.
தர்மங்கள் பலசெய்திடுவோம்.
வன்ம்ங்கள் நாம் மறந்திடுவோம்.
வாழ்வில் நன்மைகள் கண்டிடலாம்.