சென்னை புத்தகத் திருவிழா – 2022! - குரு அரவிந்தன் -

புத்தகத் திருவிழா என்றதும் பழைய ஞாபகங்கள் சில காட்சியாய் மனதில் ஓடின. எங்க மாணவப் பருவத்தில் இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய நூலகம் கட்டாயம் இருக்கும். அது அறை முழுவதும் பரப்பப்பட்டும் இருக்கும், அல்லது ஒரு அலுமாரிக்குள் அடங்கியதாகவும் இருக்கும். பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் நூலகங்கள் இருந்தன. வீடு தேடியும் இதழ்கள் வரும். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு எங்கள் அடையாளங்களை அழிக்க முற்பட்ட சம்பவங்களும் அவ்வப்போது நினைவில் வந்து போகும். வாசிப்பு என்பது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்குத் தந்த கொடைகளில் ஒன்றாகும்.
சின்ன வயதில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துத் தந்ததால் நாங்களும் வாசிப்புக்கு அடிமையாகி விட்டிருந்தோம். அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி, கல்கண்டு போன்ற புத்தகங்கள் கிடைத்தன. வளர்ந்ததும் எங்களுக்குப் பிடித்தமான நூல்களை நாங்களே தெரிவு செய்து வாசித்தோம். இன்று தமிழ் உலகறிந்த ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது வாசிப்பு மூலம் எனக்குக் கிடைத்த அனுபவமும் எனது வாசகர்களும்தான். இம்முறையும் சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி, கனடிய எழுத்தாளரான எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கடைசியாக நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தன.

ஓதிமம் நடையே என்றார்
வாகனத்தின் வானொலியை இயக்கினான் . ' குட்டிக்கதை ' ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார் . இதில் இடம் பெறுகிறது ' மனம் ' என்ற இத்தூணித்துண்டு . அது தலையிலே , நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும் . " ஒரு ராஜா .... " ஏன் அவரை இழுக்கிறார்கள் . பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது . அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார் . என்ன , நடை பயில்கிறாரா ? . எளிமையாகப் போகிராராம் . ஊரிலே தெரு , கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார் . நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது , நடக்கிறது , முடிகிறது . ஏன் ? . அழுத்தம் கொடுக்க ...மனதிலே ஒருவர் தோன்றுகிறார் . அவரின் அடுத்த நகர்வு என்ன ? , தெரியாது . எனவே எளிமையாக தொடர்வது . அதுவும் ஒருவிதத்திலே ...சரி போலவே தோன்றுகிறது . இன்று லொஜிக் மீறலையே கதைக்கருவாக எடுத்து , கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக ...கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள் . தொழினுற்பம் கதை சொல்லி . சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது .


உரத்த குரலால் உலகை முத்தமிட்டு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் ஒருமையைத் தேடி. திரு. மூஸா ராஜா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் IN SEARCH OF ONENESS. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல் . மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு.மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள: புதுப்புனல் பதிப்பகம்




இந்த இரு வார்த்தைகளின் பின்னே உள்ள சோகங்களையும் இழப்புகளையும் வேதனை வடுக்களையும் பற்றி சொற் சுனாமிகள் இனி கரைதட்டத் தொடங்கும். 'ஏன் போர்?' என்பதற்கான வியாக்கியானங்களை போர் ஆராய்வாளர்கள் எம்முன் படைக்கத் தொடங்கிவிட்டனர். எந்தப் போருக்கும் பல பரிமாணங்கள் உண்டு. இப்பரிமாணங்கள் முற்றிப் பழுத்து போராய் வெடிக்கும் போது நிகழும் இழப்புக்கள் மீட்டெடுதலுக்கு அப்பாற்பட்டவை! நேட்டோவில் (NATO) இணைவதற்கான உக்ரையினின் நகர்வு, ரஷ்ய ஆதிக்கத்தை விஸ்தரிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முன் நகர்வு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரின் உச்சம் என பல பரிமாணங்கள் இங்கு உண்டு. இப்பரிமாணங்களின் தொகுப்பை ஆராய்ந்து அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாததால் ரஷ்ய- உக்ரைன் போரின் ஒரு பரிமாணத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் தாய்மண்ணின் மீதான பாசம் எல்லோருக்கும் பொதுவானது. இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் அந்த நேசம் மனதை விட்டுச் செல்வதில்லை. அந்த மண் பசுமை கொண்ட விவசாய நிலமாக இருந்துவிட்டால் சொந்தப் பிள்ளைகளைப் போல் பேணிவளர்ப்பதும், வளர்ச்சி கண்டு பூரிப்பதும், பலன் தரும்போது பெருமிதம் கொள்வதும் மனிதஇயல்பு. 










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









