என்னைப் பற்றி.. - பிரபஞ்சன் -

பயனுள்ள மீள்பிரசுரம்: நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை! - ஜெயமோகன் -
எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -
[ஒன்று]
தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை அவன் காண்பான். பல எளிய இளம் வாசகர்கள் உடனடியாக அவரை ஒதுக்கி விடுவதுமுண்டு . அதே சமயம் தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும், எந்த பட்டியலிலும் அவரது இரு நாவல்கள் ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்ட புரம்’ இடம் பெற்றிருப்பதையும் அவன் காண்பான். மிகப் பெரும்பாலான விமரிசகர்களுக்கு அவர்களுடைய மிகச் சிறிய பட்டியலில் கூட கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அப்படைப்புகளை தவிர்க்க முடியவில்லை என்பது ஓர் எளிய விஷயமல்ல. இந்த நிலை அவ்வாசகனுக்கு ஒரு ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
நீல பத்மநாபனின் இலக்கிய பங்களிப்பின் முக்கியப் பகுதி அவருடைய இளமைப் பருவத்திலேயே நடந்து விட்டது என்பது ஒரு வகையில் சோகமானது. அதன் பின்பு மெல்ல, மெல்ல காலம் தன்னை கடந்து முன் செல்வதை கண்டபடி அவர் பின் தங்கி நிற்க வேண்டியிருந்தது. இலக்கியவாதிக்கு அங்கீகாரமும், புகழும் அவசியம் கிடைக்க வேண்டிய, முதிய காலத்தில் அவர் பழையவராக கணிக்கவும் படுகிறார் . எந்த படைப்பாளியையும் எப்போதாவது ஒரு நாள் காலம் கடந்து செல்லும். எப்போதைக்குமான படைப்பாளிகள் என்று நமக்கு தோன்றிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி சட்டென்று காலத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் நிற்பதை நாம் பார்க்கும் அனுபவம் இலக்கியத்தில் மிக வியப்பும், பிரமிப்பும், சில சமயம் அச்சமும் தருவதாகும்.
கலந்துரையாடல்: என்.கே.ரகுநாதம் - தகவல்: கற்சுறா -
நேரம் மாற்றப்பட்டிருக்கிறது நண்பர்களே! சனிக்கிழமை
4:00pm to 8:00pm. கொரோனாக்கால வரைமுறை தளர்த்தியதில்
கொஞ்சம் வசதியாக்கப்பட்டிருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
கவிதை: காலவெளிக் கைதியொருவனின் பிரகடனம்! - வ.ந.கிரிதரன் -
'காலவெளி'ச் சிறைக்குள் நான்
கிடந்து தவிக்கின்றேன்.
மேன்முறையீடு செய்யவும்
அனுமதியில்லா கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
'நேரவெளி' சுவர்களுக்குள்
நீட்டி நிமிர்ந்து படுத்திட முடியாமல்
நான் குடங்கிக் கிடக்கின்றேன்.
காலத்தை இச்சிறைக்குள்
கழிக்க நேர்ந்தது எதனால்?
இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -தொடர் உரையாடல் -06 - தகவல்: எம்.பெளசர் -
கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார் -
கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.
அவர் மேலும் கூறுவார்: “ வாழ்க்கையில் செயல்பட்டு வருகிற ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் விகாரப்படுத்தி வருகின்றது. அந்த ‘சக்தியைத்தான்’ இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அது விகாரப்படுத்தி வைத்திருக்கும் ‘விஷயங்களை’ அல்ல” என்று. இக்காரணங்களின் நிமித்தமே, சாராம்சத்தில், தஸ்தவாஸ்க்கி முதல் மேலும் அநேகரில் இருந்து கார்க்கி அடிப்படையில் வித்தியாசப்படுவதாய் இருக்கிறார். இப்பார்வையில் நின்றே, கார்க்கி, கிளிம் என்ற பாத்திரத்தை அணுகி உள்ளார் என நம்பலாம். இத்தகைய ஓர் பின்னணியில் கிளிம் ஒரு புதிய படைப்பாக புதிய வார்ப்பாக தோன்றுகிறான். (இதுவரை கார்க்கி படைத்தளித்த தாயின் பாவெல், பிரம்மச்சாரி மாட்வி போன்றவர்களிடமிருந்து வித்தியாசமுற்று…)
எழுத்தாளர் கோமகனுடனுடனோர் 'உட்பெட்டி' உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.
எப்பொழுதும் ஏதாவது ஆக்கமொன்று தேவையென்றால் 'வணக்கம் கிரிதரன், உங்களால் எனக்கு ஓர் உதவி வேண்டும் .' என்று உட்பெட்டியில் தகவல் அனுப்புவார். ஆனால் அவ்விதமான தகவல்கள் அவரிடமிருந்து இனி வரபோவதில்லை என்பது துயர் தருவது.
'நடு' இதழ் வெளியானபோது அதற்கான படைப்புகளை அவர் எழுத்தாளர்களை அணுகிப் பெற்று வெளியிட்டார். பின்னர் அது முக்கிய இதழாக நன்கறியப்பட்டதும் அதற்கான தேவை இருந்திருக்காது. பலரும் படைப்புகளைத் தாமே விரும்பி அனுப்பியிருப்பார்கள். 'நடு' இதழ் மீது அவர் காட்டிய ஆர்வத்தை, அதை வெளியிடுவதில் அவர் கொடுத்த உழைப்பினை இவ்வுரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அதனால் இலக்கியப் பெறுமதி மிக்கவை.
'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (4 -9) - ஜோதிகுமார் -
4
வேறு வார்த்தையில் கூறுவோமானால், வரலாறு வரலாறாக–அதாவது ஆதிக்க சக்திகளால், தந்திரோபாய ரீதியாக, களமிறக்கி விடப்பட்ட மேற்படி நகர்வுகளால், இலங்கையின் அரசியல் சுவாத்தியமே சீர்குலைந்து மாற்றமுற்ற ஒரு நிலையில், இனவாத ஒடுக்குமுறைக்கான சுவாத்தியங்களும் அதன் பதில் விளைவான தேசியத்திற்கான முகிழ்ப்புகளும், களமிறக்கப்பட்ட நிலையில், இவை பொறுத்த மார்க்சிய நிலைப்பாடுகள் யாவை என்பதுவே கேள்வியானது.
சிறுபான்மை தேசிய முதலாளிகளும், பெருந்தேசிய முதலாளிகளும் (அல்லது ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்படுவோர் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும்) கைக்கோர்த்திருப்பதை தன் வாழ்நாள் முழுவதும், (தன் பல்கலைக்கழக வாழ்நாள் முடிந்ததிலிருந்து) நாள்தோறுமாய் பார்த்து வந்த ஒரு மனிதர், ஒரு பொழுது முடிய மறுநாள் காலை, தன் விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்வார் என எதிர்ப்பார்ப்பது–சற்றே அதிகமானது. இங்கேயே டானியலின் மேற்படி பத்திரிக்கை குறிப்புகள் முக்கியத்துவப்பட்டு போகின்றன.
இருந்தும் கார்ல்மாக்ஸ்–எங்கெல்ஸ்–லெனின் ஆகியோரின் விடயங்களில், இவ்வகை மாற்றங்கள், சடுதியாக, அதிலும் தக்க தருணங்களில் கைப்பற்றப்பட்டது என்பதும் உண்மையே. அதாவது, ஆட்சியாளர்களின் நடைமுறை தந்ரோபாயங்களை, மிக நுணுக்கமாக பின்தொடர்ந்து, அதற்கூடு உய்த்தெறியும் கூரிய அறிவுத்திறன் கொண்டு, வரலாற்று அனுபவங்களிலிருந்து தம் நகர்வுகளை வகுத்த மேதைமை அவர்களுடையது. இதனுடன் கூடவே, தத்துவம்-அரசியல் விஞ்ஞானம்-பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளையும் அரவணைக்கும் விசாலித்த பார்வையையும் அவர்கள் பின்புலமாகவே கொண்டிருக்க செய்தனர் என்பதும் குறிக்கத்தக்கதே. மறுபுறம், 1971ஐ அடுத்து வந்த காலப்பகுதியில், தூவப்பட்ட இந்நச்சு விதைகளின் மொத்த அறுவடை 1977 ஆகியது. இதன் பரிமாணங்கள் - இருந்த மிச்ச சொச்ச, இடதுசாரி சிந்தனைகளையும் நிர்மூலமாக்குவதாகவே அமைந்திட்டன.
அறிதலும் பகிர்தலும் 14 _ அரசின் தோற்றமும் வளர்ச்சியும் | ஒரு சமூக மானிடவியல் நோக்கு நிகழ்விற்கான அழைப்பு! - விதை குழுமம் -
காலிமுகத் திடல் - 2022! - செ.சுதர்சன் -
01
வயிற்றிலடிக்கிற போது
ஒரு கொடிப் போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை
எவ்வாறு நிகழ்த்தும்!
ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்
மின்வெட்டும்....
அதை எவ்வாறு நிகழ்த்தும்!
பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனின்...
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும்!
ஒரு புரட்சியை நிகழ்த்தும்
அதிகாரக் கதிரையின் கால்களை
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன்!
'எதிர்' என்றொரு சொல்லை
எங்கு நடலாம்?
எவ்வாறு வளர்க்கலாம்?
அச்சில் வெளியான எனது முதல் ஐந்து படைப்புகள்! - வ.ந.கிரிதரன் -

இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -தொடர் உரையாடல் -05 - தகவல்: எம்.பெளசர் -
மலைத்தலைய கடற்காவிரி -பட்டினப்பாலை காட்டும் காவிரியின் அழகு! - இளவரசி இளங்கோவன் , மொன்றியல்,கனடா -
உலகத்தமிழ் உறவுகளுக்கு அன்பின் வணக்கங்கள். சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை மெய்ப்பிக்கும் இலக்கிய சான்றுகள். இவற்றில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். பழம் இலக்கியங்களை படித்து என்ன ஆகப்போகிறது என நினைப்பவர்கள் சற்றே நேரம் ஒதுக்கி இவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியலை படித்தர்களானால், அறம், காதல், வீரம் , வணிகம் , தலைமை , ஆளுமை என்பதெல்லாம் என்ன என்பதில் தெளிவான பார்வையை பெறுவார்கள். தெளிவு பிறந்தால் அச்சமூகம் நிச்சயம் சிறந்ததொரு சமூகமாக வளர வாய்ப்புள்ளது. மேலைநாட்டு வாழ்வியலை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் நம் பண்டைத்தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள காட்டுவோமாக.
இந்த கட்டுரையில் காவிரியின் பெருமையை, அழகை சங்க இலக்கியம் பட்டினப்பாலையின் வழியாக பருகுவோம் வாருங்கள்.
301 வரிகளைக் கொண்டதும் ,வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே கண்ணாடி போல காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் இயல்பு.
`நோ போல்’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து.. - கே.எஸ்.சுதாகர் -
ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.
கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகள் அளவில் சிறியவை. ஆனால் உள்ளடக்கத்தில் பல அம்சங்களைத் தொட்டு நிற்பவை. அசத்துபவை. `மகிழ்’ வெளியீடாக, இந்த வருடம் (2022) வந்திருக்கும் `நோ போல்’ சிறுகதைத்தொகுதியில் மொத்தம் எட்டுக்கதைகள் இருக்கின்றன. கடந்த பதினாறு வருடங்களில் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் குறிப்பிடுகின்றார். கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் இருந்த விடயதானம் தற்போதைய கதைகளில் காணக் கிடைக்கவில்லை. வேல் அன்பன், ஒரு வீடு – இருவேறு உலகம், பசி, சாப்பாடு சிறப்பாக வந்திருக்கின்றன. உயிர் சிறுகதை எழுதப்பட்டுள்ள உத்தி ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றது.
யார் பிழை? - முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை. -
நீ பிழையா …?
நான் பிழையா…?
அல்ல
நாம் தாம் பிழையா…?
எல்லாம் பிழைதான்.
பிழையாய்போனோம்
பிழையாய் வாழ்கின்றோம்
தவறுகளை
தட்டிக்கேட்காமல்
தவறுகளோடு சரியாகின்றோம்.
தவறாய்போன
வழியில்
நோ்மை
எவ்விடத்தில்
அறியவே முற்படுகின்றோம்.
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் கோமகன் நினைவுகள் ! குரலற்றவரின் குரலை ஒலிக்கச்செய்தவரின் குரல் ஓய்ந்தது ! ! - முருகபூபதி -
எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை குறிப்பிட்ட குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம் நிகழ்த்தியவர் கோமகன்.
எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.
அஞ்சலி: எழுத்தாளரும், 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் மறைவு!

இவரது 'நடு' இலக்கியப் பங்களிப்பு புலம்பெயர் தமிழர்தம் இலக்கியப் பங்களிப்பில் முக்கியமானது. இவர் முக்கியமான சிறுகதையாசிரியர்களிலொருவர். இவரது 'முரண்' சிறுகதைத்தொகுப்பு அவ்வகையில் முக்கியமானது. அதற்கு நான் எழுதிய குறிப்பு ஒன்றும் 'நடு' 'பதிவுகள்' , இணைய இதழ்களில் வெளியானது. இவை தவிர 'நடு' வெளியீடுகளாக எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமனின் 'ஒரு பிடி அரிசி' சிறுகதைத்தொகுப்பு வெளிவரக் காரணமாகவிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல்: மூன்று ஆண்டுகள் ! நீதியற்ற தேசத்தில் நாதியற்றவர்கள் !! - முருகபூபதி -
“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.
தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்? “ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப் போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது. அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.
“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக் குண்டைப்போட்டார் மைத்திரியார். இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.
டெஸ்ட்மண்ட் மொரிஸின் 'மனித மிருகக்காட்சிசாலை' (Human Zoo)! - வ.ந.கிரிதரன் -
இன்று மிகவும் சாதாரணமாக 'கட்டடக்காடு' , 'காங்ரீட் காடு' போன்ற பதங்களைப் பாவிக்கின்றோம். அண்மையில் வெளியான எனது சிறுகதைத்தொகுதியில் கட்டடக்காடு என்னும் சொற்பதத்துடன் கட்டடக்கூடு என்னும் சொற்பதத்தையும் உள்ளடக்கியிருந்தேன்.
'கட்டடக்காடு; என்னும் சொற்பதத்தைப் பாவித்துத் தமிழில் மேலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் 'காலம்' செல்வம் அருளானந்தம் அவர்களின் கவிதைத்தொகுதியொன்றும் 'கட்டிடக்காடு' (உண்மையில் கட்டடக்காடு என்றிருக்க வேண்டும். பலரும் கட்டடத்தைக் கட்டிடம் என்றே அழைக்கின்றார்கள். வழக்கில் இவ்விதமே பலராலும் அழைக்கப்படுவதால் ஆசியான் பதிப்பகமும், கவிஞர் செல்வமும் அவ்விதமே பாவித்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். கட்டிடம் - கட்டு+ இடம் = கட்டுமிடம். கட்டு + அடம் = கட்டடம். கட்டடம் கட்டுவதற்கான இடமே கட்டிடம். அடம் - அடுக்கு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதால் கட்டு + அடம் -> கட்டடம் என்றானது.) என்னும் பெயரில் , அமரர் எஸ். சபாலிங்கத்தின் ஆசியான் பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகியிருந்தது.
செ.வே.காசிநாதன் : விற்கன்ஸ்ரைனனின் மொழி, அர்த்தம், மனம் பற்றி... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர் என மதிக்கப்பட்ட விற்கன்ஸ்ரைன் பற்றிப் பல்வேறு மொழிகளில் கட்டுரைகளும், ஆய்வுகளும், புனராய்வுகளும் வெளிவந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் மொழியில் ஆய்வாளர் செ.வே.காசிநாதனின் இத்தகைய ஒரு நூலைப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. அவரின் இத்தகைய முயற்;சி மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியதாகும். ஆஸ்திரியாவில் பிறந்த பேராசிரியர் விற்கன்ஸ்ரைன் இங்கிலாந்தில் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை மெய்யியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அளவையியல், கணித அடிப்படைகள் போன்ற கருத்துக்களை சிந்தனை வழிகளில் நின்று அர்த்தம், மொழி, மனம் என்ற ஆய்வு நூலை எழுதியிருந்தார். இருந்தும் அவர் எழுதியவற்றை அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1953 ஆம் ஆண்டே இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்தமையை அறியமுடிகிறது.
லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் மெய்யியல்துறைப் பேராசிரியர் டி.டபிள்யூ. ஹம்லின் ( னு.று.ர்யஅடலn) கருத்தரங்குளில் பங்குபற்;றித் தான் பெற்ற அறிவும் அத்துடன் இத்தாலிய நண்பர் பிஎரோ பின்சவுற்றியுடன் (Pநைசழ Piணெயரவi) தான் மேற்கொண்ட எண்ணற்ற உரையாடல்களுமே இத்தகைய ஆய்வு முயற்சியை மேற்கொள்வதற்கு தனக்கு வழிகோலியதாகக் இந்நூலாசிரியர் காசிநாதன் குறிப்பிடுகின்றார். 1973 ஆம் ஆண்டிலிருந்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் கட்டுரை வடிவமே இவை என்று குறிப்பிடும் காசிநாதன் 1983ஆம் ஆண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் கற்ற மாணவர்களுக்கு இக்கட்டுரைகள் மூலமே தான் விளக்கம் அளித்ததாகக் கூறுகின்றார்.
அளம் நாவல் வெளிக்காட்டும் புலம்பெயர்தலின் அவலம்! - பேரா. செ.நாகேஸ்வரி, M.A.,B.Ed., M.Phil., NET, SET, (Ph.D), உதவிப்பேராசிரியர், இலொயோலா கல்லூரி, தமிழ்த்துறை, வேட்டவலம் -
ஆய்வுச் சுருக்கம்
சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடிச்செல்லும் நிலை தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் குடும்பத் தலைவன் தமது மனைவி, பிள்ளைகளை விடுத்து வெளிநாடு செல்லும் போது அக்குடும்பங்கள் சமூகத்தாலும், தங்களது சுயத்தேவைகளை நிவர்த்திச் செய்ய பொருளாதாரமின்றி பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இதனை ‘இன்னல்’ என்ற வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்துக் கூறிவிட முடியாது என்பதை “அளம்“ நாவலின் வழி தெளிவாக உணரலாகிறது. பொருளீட்டுதல் என்பது குடும்ப வாழ்க்கைக்கு தேவை என்றே இருப்பினும், அதைவிடத் தேவையானது குடும்பத்தின் மன நிம்மதியும் பாதுகாப்புமாகும். இவற்றை எவ்வளவு பொருளாதாராத்தை ஈட்டிக் கொணர்ந்தும் நிவர்த்தி செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் சுயகௌரவம் பார்த்து உழைக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்தும், தங்களின் திறமைகளைக் கொண்டு வேலைகளை உருவாக்கியும், பொருள் ஈட்டி வாழ்வது மட்டுமே தங்களது குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும் என்பது அறியலாகிறது.
கலைச்சொல்லாக்கம்
அளம் - உப்பளம்; புலம் - இடம், திசை; கால் நகை - சிலம்பு; வாய்நகை - புன்னகை; சோணாடு – சோழநாடு; புலம் பெயர்தல் - இடம் பெயர்தல் அல்லது சொந்த ஊரை விட்டுச் செல்லுதல்; ஆயா அப்பன் - தாய் தந்தை; கப்பக்காரன் - கப்பலில் சென்று வேலைசெய்பவன்; சீல – சேலை; பச்சி – பறவை; ஆப்பை – கரண்டி; காசி – பணம்; பிராணன் - உயிர் ; வூடு – வீடு; ஆம்புடையான் - கணவன்.
சிறுகதை : பெண்மனம்! - கடல்புத்திரன் -
அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது .எழுத்து வேலையில் , ' மனசு இறங்க மாட்டேன் ' என முரண்டு பிடிக்கிறது .தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . , மரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் . எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் . முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா . அவன் நிறுத்தி விட்டால் , யார் கோகுலனா , அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால் , அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா , ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள் .ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான் . இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில் ...அடையாளமே இல்லை . தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள் , வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார் ....சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகம் இப்படி தான் இயங்கிறது .எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு ,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை . வெளியிலும் அதே தான் நிலமை .
அமெரிக்கத் தலைவர் ' சுப்பர் போல் ' ( கிரிக்கெட் ) வருணையாளர் போல ' ரஸ்யப் போரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் . கனடாத் தலைவர் மூச்சு விடாமல் எஸ் .பி . பாலசுப்பிரமணியம் சினிமா பாட்டு பாடுறது போல , தடை உத்தரவுகளை விதித்துக் கொண்டிருக்கிறார் . ஒரு கொசுறுச் செய்தி , கனடிய தலைவரின் தந்தையார் , சோவியத் ரஸ்யாவிற்கு யாலுவா , சீனாவிற்கு யாலுவா , கியூபாவிற்கும் யாலுவாக இருந்தவர் . நேட்டோ தோழர்கள் பரிகசித்த போதிலும் இருந்தவர் . தற்போதையவர் வாரிசாக இருந்திருந்தால் இந்தப்போரை நிகழ விட்டிருக்க மாட்டார் . உலக வெப்பதிற்கு குரல் கொடுத்தவர் " போரும் ஒரு காபன் பிரச்சனை தான் ! " என்பதை புரிந்து நிறுத்தி இருப்பார் . இனி , இந்த ஜென்மத்தில் இந்த நாடு இவ்விரு பிரச்சனைகள் பற்றிக் கதைத்தால் கை கொட்டிச் சிரிப்பார்கள் .
பாரதி உரைநடை வகுக்கும் வாழ்வியல் மதிப்புகள்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
“புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே”
என்று எட்டயபுரம் மன்னா் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு கி.பி.1919 ஆம் ஆண்டில் எழுதிய பாடலில் தன்னைப்பற்றி தன்னம்பிக்கை மேலோங்கும் குரலில் உரைத்த திறம் ஒன்றே போதும் பாரதி பற்றிய அறிமுகத்திற்கு… பாரதியின் தேச பக்தி கருத்துக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி-மத-தீண்டாமை எதிர்ப்பும், பெண் விடுதலையும்,தேசம் தழுவிய மனித நேயமும், தமிழ்ப்பற்றும் இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் நமக்கு முழுமையாக வேண்டப்படுகிறது. ஆக காலம் பல கடந்தும் இன்றும் மகாகவியாய், மக்கள் கவியாய்,தேசத்தின் கவியாய் உயா்ந்து நிற்கும் பாரதி தனது உரைநடைதிறத்தாலே நாட்டில் விழிப்புணா்வையும், மொழியிலே புதிய மலா்ச்சியையும் உருவாக்கியவா். அவா் தம் உரைநடைப்படைப்புகள் மானுடா்களுக்கு எங்ஙனம் வாழ்வியல் மதிப்புகளை எளிமையாகவும், உள்ளத்தை நேராகத் தாக்கும்படியான வலிமையான சிந்தனைத் தெளிவுடன் அமைந்துள்ளன என்பதை, “பாரதி தமிழ் வசனத் திரட்டு” என்ற நூலின் தரவுகளை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதை பிறந்த வரலாறு! - வ.ந.கிரிதரன் -

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கழுதை ஓா் பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
முன்னுரை
கழுதை என்று ஒருவரைக் கோபத்தோடு திட்டும் போது அது வசவு வார்த்தையாகவே பயன்படுகின்றது. என்பது உண்மைதான் நாம் தேவையில்லாமல் கழுதையின் பெயரைக் கெடுக்கிறோம். கழுதை நமக்கு எவ்வாறு பயன்படுகிறது. அது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கிய வரை எவ்வாறு உழைத்து நமக்கு பயனுள்ள விலங்காக உள்ளத்தைப் பற்றியும், கழுதையின் வாழ்விடம், உணவு, விவசாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கிறது.
கழுதை வாழ்விடம்
ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ வீதம் இடம் தேவைப்படும் கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியமாகயிருக்கிறது. கழுதைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ளன. கழுதைகள் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டிருக்கவில்லை. மனிதா்கள் கொண்டு வந்த எந்த இடத்திலும் அவற்றைக் காணலாம்.
கழுதை உணவு
ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும், இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும். இதன் உடல் எடையில் 1.5 சதவிகீதம் அளவில் உலா் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும் . மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு வைக்கோல் மட்டும் தரப்படுகிறது.
நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும், கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும் மேய்ச்சலக்குச் செல்லாத கழுதையின் உணவில் 75சதவிகீதம் பசும்புல்லும், 25சதவீதம் உலா் தீவனம் கொடுக்கப்படுகிறது.