பதிவுகள் முகப்பு

மக்சிம் கார்க்கியின் 'இன்னும் சில கங்குகள்' நாவலுக்கான முன்னுரை! - எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் ( இந்தியா) -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் ( இந்தியா) -
நூல் அறிமுகம்
08 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மக்சிம் கார்க்கியின் இறுதி நாவலான கிளிம் சாம்கினின் வாழ்க்கை 2000 பக்கங்களைக் கொண்ட , நான்கு பாகப் பெரு நாவல். அதன் மூன்றாம் பாகமே தற்போது நிழல்வண்ணன் (இந்தியா), எல்.ஜோதிகுமார் (இலங்கை)  மொழிபெயர்ப்பில் வெளியான 'இன்னும் சில கங்குகள்' . சவுத விஷன் புக்ஸ் (தமிழநாடு), நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்ட நாவல். -


I

இந்நூல், மக்சிம் கார்க்கி யின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொள்கின்றார் கார்க்கி : ''இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை ”.

நான்கு தொகுதிகளாய் (கிட்டத்தட்ட 2000 பக்கங்களாய்,) விரியும் இந்நூலின் இறுதி தொகுதியை கார்க்கி எழுதிக்கொண்டிருக்கும் போது, மரணித்தார். “இப்போதுள்ள என் ஒரே பயம் - இந்நான்காம் தொகுதியை நான் நிறைவு செய்யும் முன்னமே மரணம் என்னை தழுவி விடுமோ” என்பதேயாகும். கார்க்கி பயந்தது நிறைவேறியது. இருந்தும், தொகுதி நான்கின், அரைவாசிக்கும் மேலான பகுதியை, அவரே நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. மிகுதி அரைவாசியை, அவரது குறிப்புகளையும் வரைவுகளையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் குழுவினர் அதனை நிறைவு செய்தனர்.

உலக நடப்புகளில், இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தேறிய ஒன்றுதான். பெரும் கலைஞர்களின் தவிர்க்க முடியாமைகளை உலகம் இவ்வாறுதான் கையாண்டு வந்தது. இருந்தும், அந்த மகா புருடனுக்கும், ஒரு எழுத்தாளர் குழுவுக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்கள் அனந்தம்.

இந்நூலின் விடயதானம் எனப்படுவது, கார்க்கி யின் சிந்தனையில் ஒரு 40 வருட காலம், இடைவிடாது, தொடர்ச்சியாய் ஓடி புடம் போடப்பட்ட ஒன்று என்றால் அது மிகையாகாது. இதற்கான தடயங்களை, கார்க்கி யிலேயே, பல்வேறு சந்தர்ப்பங்களில், வெளிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்நூலிலேயே அவை தீர்க்கமாகவும், படிவுற்றும், பொறிக்கப்பட்டும் உள்ளன.

மனுக்குலத்தின் ஒரு மிகப் பெரிய சுமையை அல்லது கடமையைத் தன் தோளில் சுமக்க முன்வருவது ஒருவரது இதயத்தின் உறுதியையும் நாகரிகத்தையும் மாத்திரம் அல்ல-மாறாக குறித்த தோள்களின் திராணியையும் பொறுத்ததாகின்றது. இவையிரண்டும் ஒரு பார்வையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தை எழுதத் துணிந்த போது, தன் எழுதுகோலை அவன் நோக்கிய விதம் -இறைவன் வியாசரை அழைத்து அவருக்கு 60 வயது முடிந்தாகி விட்டது, இனி அவன் ஒரு மகா பாரதத்தை ஆரம்பிக்கலாம் எனும் ஐதிகங்கள் போன்றே - கார்க்கி யும் இந்நூல்“என் இறுதி சவால்” என்று தேர்ந்து கொள்கின்றான்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி: எழுத்தாளர் அ.யேசுராசாவுடனான நேர்காணல்! - இலக்கியவெளி சஞ்சிகை -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
08 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெள் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் அ. யேசுராசாவுடனான நேர்காணலுக்கான காணொளி. நேர்காணலைக் கண்டவர்கள் எழுத்தாளர்கள்  கலாநிதி சு.குணேஸ்வரன் & எஸ்.ரமேஷ்.

https://youtu.be/inRhsmjh74Q

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தேசியம் வழங்கும் பெருமயம் - 'எண்ணம் இடும் மேடை'

விவரங்கள்
- தகவல்; இலங்காதாஸ் பத்மநாதன் -
நிகழ்வுகள்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சட்டத்தரணி சுவஸ்திகாவின் விடுதலைப்புலிகள் பற்றிய கூற்றும், யாழ் பல்கலைக்கழகத்தின் மறுப்பும்! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
அரசியல்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான  சுவஸ்திகா அருள்லிங்கம் விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று கூறியதற்காக , நீதித்துறை பற்றி  அவர் ஆற்றவிருந்த உரையினை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழர் அரசியலில் இருக்கும் சகல முன்னாள் ஆயுத அமைப்புகளும் விடுதலைப்புலிகளுடன் முரண்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பாசிஸ்டுகள் என்றே கூறி வந்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எதிரான அமைப்புகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என்றே கூறி வந்தனர்.

விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று விமர்சித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சட்டத்தரணி  சுவஸ்திகா அருள்லிங்கத்தை  எதிர்க்கலாம். அதற்குப்பதிலாக மாணவர்கள் மாற்றுக் கருத்தினை முன் வைக்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி உரையினைத் தடுத்திருப்பது சரியான செயலா? என்னைப்பொறுத்தவரையில் பல்கலைக்கழகம் பல்வேறு அரசியல் கோட்பாடுகள் பற்றியும் மாணவர்கள் கற்குமொரு கல்விக்கூடம். மார்க்சியம், சோசலிசம், நாசிசம், சியோனிசம், ஃபாசிசம் ,, என்று பல்வேறு வகையான அரசியல் கருத்து நிலைகள் உள்ளதை நாம் அறிவோம். இவற்றைப்பற்றிக் கற்கும்போது காய்தல் உவத்தலற்றுக் கற்கும் இருப்பிடமாக இயங்கவேண்டியது பல்கலைக்கழகமொன்றின் கடமையாகும். பல்வேறு  வகையான அரசியல் கோட்பாடுகளையும் கற்று, அறிந்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்புகளை, விடுதலை அமைப்புகளை விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். அவ்விமர்சனங்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டும்.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள் பிரசுரம்: கண்ணோட்டம் பாசிசம் என்றால் என்ன? எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து.. - பிரளயன் -

விவரங்கள்
- பிரளயன் -
நூல் அறிமுகம்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?

பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bundle] என ‘பாசிசம்’ எனும் இச்சொல்லுக்குப் பொருள்கொள்ள லாமென விக்கிபீடியா சொல்கிறது. தனித்துள்ள ஒரு குச்சியை எளிதாக உடைத்துவிடலாம். அதே நேரத்தில் அவை ஒரு கட்டாக கட்டப்பட்டிருந்தால் குச்சிகளை எளிதில் உடைத்துவிடமுடியாதல்லவா அந்தப் புரிதலிலே இப்பெயர் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது. பலதும் சேர்ந்த ஓர் கூட்டமைப்பு என்ற பெயரிலும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஒரு புரிதலில்தான் இத்தாலியில் தான் ஆரம்பித்த அரசியல் அமைப்புகளுக்கு புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கற்றை [Fasces of Revolutionary Action] போருக்கான இத்தாலியக் கற்றை [Italian Fasces of Combat] என்று தொடக்கத்தில் பெயர்வைத்த பெனிட்டோ முசோலினி சிலவருடங்களுக்குப்பிறகு தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] என்று ஆரம்பித்து 1922 இல் இத்தாலியின் பிரதமராகவே ஆகிவிடுகிறார். முதல் உலகப்போருக்கு பின் இத்தாலியில் தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] யினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக அரசியல் ‘சிந்தனைப்போக்கினையே’ வரலாற்றாளர்கள் பாசிசம் என இனம் காண்கிறார்கள்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
06 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.

 இந்தப் படைப்பின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார் இது நாவல் தான் என. ஆம்.நாவல்தான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.இந்த நாவல் அறிவும் அழகும் இணைந்த புதியதோர் வடிவம் எனக் கொள்ளலாம். இங்கும் காலம், களம், கதைமாந்தர், மையக்கருத்து அனைத்தும் உண்டு.இங்கு கூறப்பட்டிருக்கும் விடயங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும் வழமைக்கு மாறான அழகியல் ரசனைக்கும் உரியவை என்பதிலும் சந்தேகம் ஏதும் இல்லை.

மேலும் படிக்க ...

இலக்கியவாதி மல்லியப்பு திலகர், அரசியல்வாதியாகி, மீண்டும் இலக்கியவாதியான கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"சங்ககாலத்திலிருந்து  புலவர்கள்,  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்  அரசியல்   பேசி வந்தவர்கள்தான்.   அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும்,   சங்க காலப்புலவர்கள்   மன்னர்களை  புகழ்ந்து  பாடியே   வாழ்க்கையை   ஓட்டினர். விதிவிலக்காக"மன்னவனும்   நீயோ   வளநாடும்  உனதோ..." என்று தமது   தர்மாவேசத்தை   கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான்  கவிச்சக்கரவர்த்தி கம்பர்.  

வள்ளுவரும்    இளங்கோவும்  அவருக்குப் பின்னர்  வந்த  பாரதியும் அரசியல், அறம்  பற்றியெல்லாம்  எழுதினார்கள். நவீனகாலத்து  எழுத்தாளர்கள் அரசியல்  பேசியதுடன்  எழுதினார்கள், அரசியல்வாதிகளாக  தேர்தல்களிலும்  தோன்றினார்கள்.    அரசியல் தலைவர்களை   நம்பி   அவர்கள்  பின்னாலும்  சென்றார்கள். " எனத்தொடங்கிய பதிவென்றை சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத நேர்ந்தது. காரணம் இல்லாமல் காரியம் இல்லையல்லவா..?

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நானறிந்த சில இலக்கியப்படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி  முன்னாள்   ஆசிரியர்  தேவராஜ்,   சக்தி தொலைக்காட்சி ‘ மின்னல்  நிகழ்ச்சி ‘ ரங்கா, மற்றும்   இலக்கியவாதி  மல்லியப்பு சந்தி  திலகர்  என  அழைக்கப்படும் மயில்வாகனம் திலகராஜன், ஆகியோரும்  யாழ்ப்பாணத்தில்  வல்வை  அனந்தராஜ் என்ற  எழுத்தாளரும்  போட்டியிட்டனர்.  அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர்  நகரசபையில் மேயராகவும்  அங்கம் வகித்தவர். முன்னாள்  உதயன்,  சுடரொளி  பத்திரிகைகளின்  சிரேஷ்ட ஊடகவியலாளர்  வித்தியாதரன்,  ஊடகவியலாளர்  யதீந்திரா,  கவிஞர் அதாவுல்லா,  எழுத்தாளர்கள்  செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் ,  அந்தனி ஜீவா ஆகியோரும் தேர்தல்களில் போட்டியிட்டனர்.  ஆனால்,  மல்லியப்பு சந்தி  திலகரைத்தவிர  மற்றவர்கள்  தோல்வியுற்றனர்.

மேலும் படிக்க ...

வித்துவான் வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப்பாடல் 'காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று, நவம்பர் 5,  வித்துவான் வேந்தனாரின் பிறந்தநாள்.  ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘  நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’.

மேலும் படிக்க ...

ஆண்களின் குரல் 360 ( Voice of Men 360) நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: 2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்! - ஆண்களின் குரல் 360 -

விவரங்கள்
- ஆண்களின் குரல் 360 -
நிகழ்வுகள்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்

இந்தக் கருப்பொருளில் அல்லது பொதுவாக ஆண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேச விரும்பினால் தயவுசெய்து எங்களுடன் Nov 10, 2023ம் திகதிக்கு முன் தொடர்புகொள்ளவும்.

பின்குறிப்பு: இலங்கையிலுள்ள சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ-சுகாதார தளங்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புக்களில் பணிபுரிபவர்களை நாம் குறிப்பாக எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க ...

தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும்  தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டுதானுள்ளார்கள்.  இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து  இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.

தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:

1. நூலகப் பங்களிப்பு.
2. சமூக, அரசியற் செயற்பாட்டுப் பங்களிப்பு.
3. நாடகத்துறைப் பங்களிப்பு.
4. பதிப்புத்துறைப் பங்களிப்பு.
5. சஞ்சிகைப் பங்களிப்பு.
6. பல்வகை இலக்கிய நிகழ்வுகளை (நூல் வெளியீடு உட்பட) ஏற்பாடு செய்து நடத்தும் பங்களிப்பு.

1. நூலகம்

எண்பதுகளில், தொண்ணூறுகளில் பார்ளிமெண்ட் & வெலஸ்லி பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தேடகம் அமைப்பினரின் நூலகம்  கனடாத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நூலகம்.  அங்கு தமிழப்பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிப்பதற்காகவும், நூல்களை இரவல் பெறுவதற்காகவும் சென்றவர் பலர். தேடகம் நூலக எரிக்கப்பட்டதானது கனடாத் தமிழர் மத்தியில் ஒரு கரும்புள்ளியாக எப்போதுமிருக்கும்.

மேலும் படிக்க ...

சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல்  300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர,  கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின்  நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.  சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று  தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல்  சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.  'சிலுவை'  நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும்,  நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.  -


( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது.)

என்  'சிலுவை'  நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள்

பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது.

மேலும் படிக்க ...

ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: பி.விக்னேஸ்வரன் -
நிகழ்வுகள்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விழி 156 : 'ஆண்களின் குரல் 360 கலந்துரையாடல்!' - தகவல்: சிவம் வேலாயுதம் -

விவரங்கள்
- தகவல்: சிவம் வேலாயுதம் -
நிகழ்வுகள்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தின் பாவிகம் - அறம் வெல்லும்! பாவம் தோற்கும்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது கம்பராமாயணத்தின் பாவிகமாகும். இப்பாவிகத்தினைக் கம்பர் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கதாப் பாத்திரங்கள் மூலமும், ஆசிரியர் கூற்றின் வாயிலாகவும் வலியுறுத்திக் கூறுகிறார். உலகில் அறம்தான் வெல்லும், அறம்தான் வெல்லவேண்டும் என்ற பாவிகத்தைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

பாவிகம்

காப்பியத்தின் பண்பாகப் ’பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்தினையேப் பாவிகம் என்று கூறுவர்.

“பாவிகம் என்பது காப்பிய பண்பே”
(தண்டியலங்காரம் 91)

நூல் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினைப் பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது பாவின் தனி செயல்களிலோ, பகுதிகளிலோ தெரிவதில்லை. தொடக்க முதல் முடிவு வரை நூலை முழுவதிலும் பார்க்கும் போதே பாவிகம் விளங்கும்.

அறத்தின் ஆற்றல்

எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி, தருமம் தழைக்கவில்லையோ, அப்பொழுதெல்லாம் அறத்தை நிலைநாட்டப் பரம்பொருள் அவதரிப்பதாகக் கம்பர் கூறுகிறார்.

" அறம்தலை நிறுத்தி வேதம்
அருள்சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச்
செந்நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உகநூறித், தக்கோர்
இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன் பாதம்
ஏத்துவார் பிறப்பு அறுப்பான்"
(பிணிவீட்டுப்படலம் 1125)

என்ற கம்பராமாயணத்தின் பாவிகம் காப்பியம் முமுவதும் ஒலிக்கிறது.

மேலும் படிக்க ...

பெற்றோராக நாங்கள் ... - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிள்ளைவளர்ப்பு என்பது ஒரு கலை, அதில் யாருமே பாண்டித்தியம் பெற்றுவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கெட்டியவகையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பெற்றோரியத்தில் இதுதான் சரியான வழியென்று ஒன்றில்லை என்பதுடன், ஒரு பிள்ளைக்குச் சரிவரும் உத்திகள் இன்னொரு பிள்ளைக்குச் சரிவர மாட்டாது என்பதாலோ என்னவோ பெற்றோரியம் தொடர்பாகக் கற்பதிலோ, அது பற்றிய புத்தகங்களை வாசிப்பதிலோ அதிகமானோர் ஆர்வம் காட்டுவதில்லை.

முன்பொரு காலத்தில் பிள்ளைவளர்ப்பு என்பது பெற்றோரினதும், உறவினரினதும் வழிகாட்டலில் அமைந்திருந்தது. இந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பமாகவும் இல்லாமல், அயலில் வாழ்பவர்களையும் அறிந்திராமல், தனித்துவாழும் பெற்றோருக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி கொடுக்கும் சவால்களுக்கும் பிள்ளைவளர்ப்பில் முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினை இருக்கிறது.

எங்களில் பலர் தண்டனையால் வழிநடத்தப்பட்டோம். அப்படிப் பயத்துடன் வளர்ந்ததால்தான் நாங்கள் நன்றாக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில், எங்களில் சிலர் இப்போதும் அதற்கே வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அது சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் குடும்பப் பிளவுகளுக்கும்கூட சிலவேளைகளில் காரணமாகிறது. அதேவேளையில், இப்போது பரவலாக வன்முறை ஏற்கத்தகாதது என்ற அறிவிருப்பதால், வேறு சிலர் பிள்ளைகளின் உடலும் மனமும் நோகாமல் அவர்களை வளர்க்கவேண்டுமெனப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பிள்ளைகள் விரும்புவதையெல்லாம் எப்பாடுபட்டும் பூர்த்திசெய்ய வேண்டுமென்றும் நினைக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

கவிஞர் கந்தவனத்துக்கு அகவை தொண்ணூறு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் எழுத்துலக அனுபவத்தில் என் வாசிப்பனுபவத்துடன் பின்னிப்பிணைந்த இலங்கை எழுத்தாளர்களில் ஒருவர் கவிஞர் கந்தவனம். வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் நான் எழுதத்தொடங்கிய என் பால்ய பருவத்தில் அச்சஞ்சிகை மூலம் அறிமுகமானவர். பின்னர் எப்பொழுதும் இவரது படைப்பையோ அல்லது இவர் பற்றிய செய்தியையோ ஏதாவதொரு பத்திரிகையிலோ அல்லது சஞ்சிகையிலோ பார்த்திருக்கின்றேன். வாசித்துமிருக்கின்றேன்.

இலங்கையில் இருந்தபோதும்,  போர்ச்சூழலால் இடம் பெயர்ந்து புகலிடம் நாடிக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபோதும் இவர் தொடர்ந்து அயராமல் எழுதிக்கொண்டேயிருந்தார். இலக்கிய நிகவுகளில் கலந்துகொண்டேயிருந்தார். கவியரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டும், தலைமையேற்று நடத்தியுமிருப்பதால் இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'கவியரங்குக்கோர் கந்தவனம்' என்றும் அழைப்பார்கள். அயராது இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த கவிஞர் தனது தொண்ணூறாவது வயதினைப் பூர்த்தி செய்த நிலையில்,  உடல் நலப்பாதிப்பால் வீட்டிலேயே சிறிதுகாலமாக இருந்து வருகின்றார். விரைவில் பூரண நலத்துடன் அவர் மீண்டெழ வேண்டுகின்றேன்.

மேலும் படிக்க ...

ஒரு பலஸ்தீனக் குரல் - எம். ஏ. நுஃமான் -

விவரங்கள்
- எம். ஏ. நுஃமான் -
கவிதை
02 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார்: ‘We are fighting with human animals’. இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சொல்கிறார்: ‘Israel is fighting with the enemies of civilization … this war is between forces of civilization and the forces of barbarism’ இக்கவிதை அதற்கு ஓர் எதிர்வினை. -

நீ சொல்கிறாய்
நாங்கள் விலங்குகளுடன் போரிடுகிறேம் என்று.
அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்
என்று சொல்கிறாய்.
நீ அப்படித்தான் சொல்வாய்.
உன் மூளை மரத்துவிட்டது.
உன் இதயம் காய்ந்துவிட்டது.

விலங்குகளை அவமதியாதே.
விலங்குகள் மனிதரின் தோழர்கள்.
விலங்குகள் இல்லாத உலகில்
நீயும் நானும் வாழமுடியாது.
விலங்குகளை அவமதியாதே.

விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை.
விலங்குகள் குண்டுவீசி மனிதரைக் கொல்வதில்லை.
விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை.
விலங்குகள் மனிதரைத்
தங்கள் வீடுகளை விட்டுத் துரத்துவதில்லை.
கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை.
விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை.
விலங்குகளை அவமதியாதே.

மேலும் படிக்க ...

ஒளிப் பரிசு - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
02 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராதனைப் பல்கலைக்கழக, அரசறிவியல் துறையின் நிறைவு வருட மாணவி அமரர் N. நித்தியவதனி அவர்கள், நேற்று முன்தினம் சிறுநீரகங்கள் செயலிழப்பால், கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார். அவர் உயிருக்காகப் போராடிய வேளையிலும், தமது கண்களை உவந்து தானம் செய்தார். மானுட வாஞ்சையை உணர்த்திய அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம். -

கண்களைக் கொடுத்து
ஒளியைப் பரிசளித்தாய்!
ஆகையால்...
கரைந்துபோன பின்பும்
நீயே காண்கிறாய்...!

அவனதோ அவளதோ
கண்களில் பூக்கையில்...
நீ
அவனதும் 'கண்மணி'
அவளதும் 'கண்மணி'

மேலும் படிக்க ...

'இலக்கியவெளி'யின் ஏற்பாட்டில் நடந்த எழுத்தாளார் ஐ.சாந்தனுடனான உரையாடல் பற்றிய சில எண்ணங்கள்.. . - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இலக்கியவெளியின் சார்பில் எழுத்தாளர் ஐ.சாந்தனுடன் நிகழ்ந்த உரையாடலொன்றின் காணொளியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவரை நேர்காணல் கண்டவர்கள் கலாநிதி சு.குணேஸ்வரன் மற்றும் எழுத்த்தாளர் எஸ்.ரமேஷ்.

இவ்வுரையாடலின் ஆரம்பத்தில் ரமேஷ் கேட்ட கேள்வியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எழுத்தாளர் சாந்தனின் ஆங்கிலத் தமிழ்ப்புலமை பற்றியது. இரு மொழிகளிலும் எழுதும் அவரது ஆற்றல் பற்றியது. கேள்வியைக் கேட்கையில் ரமேஷ் அவர்கள் தமிழில் ஆங்கிலத்திலும், தமிழிழும் எழுதும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்குப் பின்னர் அவ்விதம் எழுதும் ஆற்றல் பெற்ற ஒருவர் சாந்தனே என்று குறிப்பிட்டிருந்தார். அது தவறானதொரு கூற்று என்பதால் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்து ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி.  அவர் திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் எழுதியுள்ளார். திருக்குறள் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியதை ஒரு நூலாகப் போட  முடியுமென்று எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது அ.ந.க பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில், தினகரனில் தொடராக வெளிவந்தது, பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

மேலும் படிக்க ...

பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் . நூல் அறிமுகம்! - எஸ் . இஸட் . ஜெயசிங் முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர். ), திருநெல்வேலி. தமிழ் நாடு . இந்தியா. -

விவரங்கள்
- எஸ் . இஸட் . ஜெயசிங் முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர். ), திருநெல்வேலி. தமிழ் நாடு . இந்தியா. -
நூல் அறிமுகம்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இலங்கை மலையகத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளரும்,  சமூக ஆர்வளரும்,  மார்க்ஸிய சிந்தனையாளரும்,  சட்ட தரணியுமான தோழர் எல். ஜோதிகுமார் அவர்களால் எழுதப்பட்டு கடந்த வருடம் நந்தலாலா பதிப்பகத்தால்  " பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " .  என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந் நூல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது .  இலங்கையில் 1980 களில் வெளிவந்த " தீர்த்தக் கரை " எனும் முற்போக்கு அரசியல் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனுபவம் உடைய எழுத்தாளர் ஜோதிகுமார் அவர்கள் தாயகம் திரும்பிய மலையக மக்களின் மன உணர்வுகளை அவர்களின் வாழ்வியலை நேரில் கண்ட  அனுபவம் வாயிலாக இந்நூலை திறம்பட வடிவமைத்துள்ளார் .
 
200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து இலங்கை மலையகம் சென்று அங்கு அடர்ந்த காடுகளை வெட்டி பெருந்தோட்டப் பயிர்களை விளைவித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திய தமிழ் மக்கள் பேரினவாத அரசியல் வாதிகளால் வஞ்சிக்கப்பட்டனர் . அவர்களில்  ஒரு பகுதியினர்  மீண்டும் இந்தியாவிற்கே சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் வந்தனர் . அவ்வாறு வந்தவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்கத்து மாநிலங்களிலும்  குடியமர்த்தப்பட்டனர் . அவர்கள் எதிர்பார்த்து வந்த மறுவாழ்வு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது கடந்த கால வரலாறு . சதுப்பு நிலப் பகுதிகளில் ஏற்படுத்தப் பட்ட மறுவாழ்வு திட்டங்கள் பெருமளவு தோல்வி அடைந்த நிலையில் சிலர் கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களை நோக்கி நகரலாயினர் . அவ்வாறு கொடைக்கானல் மலைகளை நம்பி சென்றவர்களின் துயர வாழ்க்கையை , அடிமை நிலையை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற சமூக உணர்வுடன் இந்நூலை எழுதியுள்ள தோழர் ஜோதிகுமார் பாராட்டுதலுக்கு உரியவராவார் .
மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - 2023 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*புகைப்படங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின்  அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.

எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க ...

சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
ஆய்வு
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மக்களின் வாழ்வாதரமாக அமைவதும் முதன்மை பெறுவதும் உணவாகும். உணவு வகைகளுள் தானியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பது சிறுதானியங்கள் ஆகும். சிறுதானிய வகைகளில் மிகவும் பழமை வாய்ந்தவையாக கேழ்வரகு, சாமை, தினை, கம்பு, சோளம். வரகு குதிரைவாலி போன்றவை அடங்கியுள்ளன. சிறுதானியங்களை சங்ககால மக்கள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளன. அவர்களைப் போல் இன்றையக் காலக்கட்ட மக்களும் மிகுதியாக பயன்படுத்தி வருகின்றன, சிறுதானியங்கள் சங்ககால மக்கள் பயன்படுத்திய உணவு வகைகளில் பெரும்பங்கு வகித்துள்ளன என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளதை காணமுடிகின்றது. அது மட்டுமின்றி நீதி இலக்கியமான திருக்குறளில் பல்வேறு குறட்பாக்களில் 'தினை' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. எனவே. சங்ககாலம் முதல் சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்தினர் என்பதையும் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள்

சங்ககால மக்கள் சிறுதானியங்களைச் சோறாக அவித்தும், தின்பண்டமாகவும், மாவாக இடித்து இனிப்பு சேர்த்தும் உண்டுள்ளனர். தினையரிசிச் சோற்றை நெய்யில் பொரித்த இறைச்சியுடன் சேர்த்து உணவாக உண்டனர் என்பதை,

பருஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 168-169)

என மலைபடுகடாம் பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

ஆடு, மாடுகளை மேய்த்தல்‌ தொழிற்புரியும்‌ ஆயர்குலப்‌ பெண்கள்‌ மோர்‌, நெய்‌ ஆகியவற்றை விற்று, பின்‌ கடும்பசியுடன்‌ தன்‌ வீட்டை அடைவாள்‌. அவள்‌ தினையால்‌ ஆக்கிய சோற்றைப்‌ பாலுடன்‌ சேர்த்து உண்பாள்‌ என்பதை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.100-103) உணர்த்துகின்றது.

மேலும் படிக்க ...

அறிமுகம்: ஆண்களின் குரல் 360! இலாப நோக்கற்று இயங்கும் ஆண்களுக்கான அமைப்பும் ஒரு 'நேர்-உரையாடற் காணொளியும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சமூகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2020ஆம் ஆண்டிலிருந்து டொரோண்டோ, கனடாவிலிருந்து இலாப நோக்கற்ற அமைப்பொன்று , ஆண்களின் பிரச்னைகளை மையமாக வைத்து 'Voice of Men 360 (ஆண்களின் குரல் 360) என்னும் பெயரில் இயங்கி வருகின்றது. இதன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம். 'சர்வதேச ஆண்கள் தினம்' (International Men's Day) என்னும் சர்வதேசரீதியில் இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பின் பகுதியாக இயங்கி வரும் அமைப்பிது. பல்வயது ஆண்களும் (சிறுவர் தொடக்கம் முதியவர் வரை)  சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை, அதனால் அவர்களுக்கு எற்படும் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்குப் பல் வழிகளிலும்  உதவிகள் வழங்குவதையே நோக்கமாகக்கொண்டு இயங்கிவரும் அமைப்பிது.

           -  'ஆண்களின் குரல் 360' அமைப்புன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம்-

 'சர்வதேச ஆண்கள் தினம்'  அமைப்பானது சுமார் தொண்ணூறு நாடுகளில் இருபது வருடங்களுக்கும் அதிகமாகச் செயற்பட்டு வரும் அமைப்பு. இவ்வமைப்பின் முக்கியமான தூண்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

மேலும் படிக்க ...

நாவல் வாசிப்பு அனுபவம்: மகாலிங்கம் பத்மநாபனின் ' அது ஒரு அழகிய நிலாக்காலம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
நூல் அறிமுகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலப்பயணம் செய்வது விஞ்ஞானிகளின் கனவு. ஆனால் ஒரு சாமானியன் தன் நினைவுகளால் பின்னோக்கிப் பயணம் செய்வதற்கு விஞ்ஞானம் அவசியமற்றது. மண்ணில் மீது கொண்ட விருப்பும் முன்னோர்கள் மீது கொண்ட மதிப்பும், வரலாற்றை ஆவணப்படுத்தும் சமூகநோக்கும், இலக்கிய ரசனை கொண்ட மனமும் அமைந்தால் போதுமானது. பண்டைய சரித்திரங்களைக் கேட்கும் போதும் படிக்கும் போதும் அக்காலகட்டத்திற்கு மனோவேகத்தில் சென்று நனவிடை தோய்தல் ரம்மியமானது. அவ்வாறான ஒரு அனுபவத்தைத் தருவதே 'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்னும் கவிதைமயமான தலைப்பினைக் கொண்ட நாவல்.

முன்பு காடாகக் கிடந்த சில பிரதேசங்களைத் தம் கைவண்ணத்தால் பொன்விளையும் பூமியாக மாற்றி, நகரங்களை உருவாக்குவதற்கு தோற்றுவாயாக அமைவதும், அடுத்த தலைமுறையினருக்கு கையளித்தலும் எல்லோராலும் இயலக் கூடியதல்ல. அவ்வாறாக, வன்னியில் பெரியபரந்தன் எனும் கிராமத்தை உருவாக்கிய தமது முன்னோடியான (pioneer ) கொள்ளுப் பேரர்களின் முயற்சிகளை, தந்தை வழிப் பேரரின் வழியாக அறிந்து, தனக்கு முந்திய மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுதியுள்ளார், படைப்பாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள்.

மேலும் படிக்க ...

குறிப்பேடு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்! - திக்குவல்லை கமால் -

விவரங்கள்
- திக்குவல்லை கமால் -
நூல் அறிமுகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்(2023)என்ற வ.ந.கிரிதரனின் இரண்டாவது கவிதைத்தொகுதி ,  புலம்பலைச் சித்தரிக்கும் அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ளது. சுயகவிதைகள் நாற்பதும் இன்னும் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளுமாக சுமார் 100 பக்கங்கள்.

குதிரைத் திருடர்களே ! உங்களுக்கொரு செய்தி - மின்னலே ! நீ மின் பின்னியதொரு பின்னலா  ? - தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு - இப்படி நீண்ட தலைப்புக்கொண்டனவாகவே பெரும்பாலான கவிதைகள் காணப்படுகின்றன.

இயற்கையோடு கவிதைகள் உரையாடுகின்றன.மனித வாழ்வை இணைத்துப் பார்க்கின்றன.உருவ உள்ளடக்க மாற்றங்களுடனான எந்தக் கவிதைப் போக்கையும் இவர் கவிதைகள் வெட்டியோ ஒட்டியோ செல்லவில்லை.சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் எழுதிச் செல்கிறார்.ஒரு கவிதைக்குள் ஒன்பது அர்த்தங்களைத் தேடவேண்டியதில்லை. வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து மந்திர ஜாலம் காட்டவுமில்லை. கவிதைகளை சற்று நிதானமாக வாசித்துச் செல்லும்போது  மீண்டும் மீண்டும்  வாசித்துச் சுகிக்கக்கூடிய வரிகள் நிரம்பிக் கிடக்கின்றன.சில உதாரணங்கள்...

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலிக்குறிப்பு: வீரகேசரி முன்னாள் விளம்பர – விநியோகப்பிரிவு முகாமையாளர் து. சிவப்பிரகாசம் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -
  2. எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -
  3. மணிமேகலையில் கல்விமுறை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
  4. பயணியின் பார்வையில் – அங்கம் - 04: ஒக்டோபர் 28 நடிகை ருக்மணி தேவியின் நினைவு தினம்! - முருகபூபதி -
  5. சிறுகதை: நல்லாசிரியர் விருது! - ஸ்ரீராம் விக்னேஷ் -
  6. அகதிமுகாமின் குழந்தை அல் சைமா அக்ரம் சைடம்! - வ.ந.கிரிதரன் -
  7. ஜெயமோகனின் டொரோண்டோ அனுபவங்கள்! - ஜெயமோகன் -
  8. கணேஸ் ( துரைராஜா கணேஸ்வரன்) கவித்துளிகள்!
  9. பதிவுகளில் அன்று: புதியமாதவியின் 'ஹே...ராம்!' கவிதைகளினூடான ஒரு பயணம்! - ரவி(சுவிஸ்) -
  10. நினைவு கூர்வோம்: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் ( 12.11.1937 - 24.10.2020) - லதா ராமகிருஷ்ணன் -
  11. பிரமிள் , சுப்ரபாரதிமணியன் பற்றிய சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பற்றிய குறிப்புகள்! - சுப்ரபாரதிமணியன் -
  12. வசந்தம் உளவளத்துணை நிலையம் - சமூக உளவளம் பேணும் தொடர் - 63
  13. என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன் ~ டிசே தமிழன் -
  14. சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -
பக்கம் 47 / 115
  • முதல்
  • முந்தைய
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • அடுத்த
  • கடைசி