- எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் சிறுகதை, கவிதை, நாடகம், உருவகக்கதை, நாட்டாரியல் சம்பந்தமான ஆய்வாளர் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பாளர். இவரது மறைவு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குப் பேரிழப்பே.  ஆழ்ந்த இரங்கல். இவரைப்பற்றிய விரிவான அறிமுகக்குறிப்பொன்றினை நூலகம் இணையத்தளம் ஆளுமைகள் பிரிவில் பிரசுரித்துள்ளது. அதனை நன்றியுடன் , முத்துமீரான் அவர்களின் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். நூலகத்தளத்தில் எழுத்தாளர்கள் பிரிவில் அவரது நூல்கள் பலவற்றை நீங்கள் வாசிக்கலாம். அவற்றில் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துள்ளோம். -

முத்துமீரான் சிறுகதைகள் |  கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் | மனப்பிரசவம் - சிறுகதைத்தொகுதி
முத்துமீரான் கவிதைகள்

நூலகம்  தளத்திலிருந்து: ஆளுமை:முத்துமீரான், எஸ்.

முத்துமீரான், எஸ். (1941.05.03 - ) நிந்தவூரைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி, நிருபர் (தினகரன், வீரகேசரிப் பத்திரிகை).இவர் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.

இதுவரை 100க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் , 250க்கு மேற்பட்ட கவிதைகளையும் , 100க்கு மேற்பட்ட உருவகக்கதைகளையும், 200க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும் எழுதியுள்ளதுடன் 30க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இஸ்லாமியர்கள் மத்தியில் பாரம்பரியமாகக் காணப்பட்ட நாட்டாரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். நாட்டாரியல் பற்றிய இவரின் நுால்கள் தென் இந்திய பல்கலைக்கழகங்களில் உசாத்துணை நூல்களாகவும் பயன்படுகிறது.

இவர் எழுதிய நூல்களாக உருவகக்கதைகள் (1982), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991), முத்துமீரான் சிறுகதைகள் (1991), முத்துமீரான் கவிதைகள் (1993), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் (1997), இயற்கை (1999), மானிடம் சாகவில்லை (2005), கருவாட்டுக் கஸ்ஸா (கவிதைத்தொகுதி) (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் (2005), மானிடம் உயிர் வாழ்கிறது (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள் (2007) , கக்கக் கனிய… (2007), அண்ணல் வருவானா? (2008), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள் (2011), என்னடா கொலமும் கோத்திரமும் (2013), கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும் (2013), மனப்பிரசவம் (2021) போன்றவை காணப்படுகின்றன.

1958.12.02ம் திகதி இலங்கை வானொலி தமிழ் சேவையில் இவரது முதல் நாடகமான ‘காதலும் கருணையும்’ எனும் சரித்திர நாடகம் ஒலிபரப்பப்பட்டது. முத்துமீரானின் நாடகங்களும் , கதைகளும் யதார்த்தமானவை. கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இடைவிடாது இலக்கியப்பணி ஆற்றிவரும் முத்துமீரான் அவர்கள் இலங்கையில் இதுவரையில் முஸ்லிம்களின் நாட்டார் இலக்கியத்தில் பல சிரமங்களுக்கிடையே கள ஆய்வு மேற்கொண்டு வியக்கத்தக்க முறையில் தேடுதல் செய்து ஏழு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களைத் தந்துள்ளார்.

எஸ். முத்துமீரான் அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பங்குகொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் வழங்கிவரும் தாலாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்து பாராட்டைப் பெற்றார். முத்துமீரான் அவர்களின் உருவகக் கதை தொகுதிகள் இரண்டும் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டிருப்பது இத்துறையில் இவருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம்.

அதுவும் புகழ்பெற்ற இரு கவிஞர்களான சாரணபாஸ்கரன் அவர்களுடைய தென்றல் மன்றத்தினாலும் தத்தினரும் கவிஞர் மீராவினுடைய நோவேன் அச்சக கம்பனியின் மூலமாகவும் வெளிவந்திருப்பது இவரின் ஆளுமைக்கு கிடைத்த நல்ல சிறப்பாகும். இத்தொகுதியில் திரு. முத்துமீரானின் ஒரு உருவகக் கதைத் தொகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளன. இக்கதைகளில் வேடம், துறவி, ஞானகுரு, மனமே, இறைவன், ஞானம், அழிவு, படைத்தவனும் படைப்பும், நெறியாளன், ஊனம், ஊழ் போன்ற கதைகள் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

இவரின் எழுத்துத்துறையை கெளரவிக்குமுகமாக இலங்கை அரசு 1998ம் ஆண்டில் ‘கலாபூஷணம்’ விருது வழங்கியது. அத்துடன் 1994ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் ‘தாஜபூல் அதீப்’ எனும் விருதையும், 2002ம் ஆண்டில் தென்கிழக்கு கலாசாரப் பேரவை ‘இலக்கியத்திலகம்’ எனும் பட்டத்தையும், 2003இல் ‘சமாதானம்' சஞ்சிகை 'கவிக்குரிசில் பட்டத்தையும் வழங்கி கெளரவித்தன. அத்துடன் 1998 டிசம்பரில் தென்னிந்திய கோட்டக் குப்பத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழாவில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் கெளரவ மு. தமிழ் குடிமகன் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கி கெளரவித்தார்.

இவரின் கிழக்கிழங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ எனும் ஆய்வு நூலுக்கு 1997 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அத்துடன் ‘இயற்கை’ எனும் நூலுக்கு மொழித்திணைக்கள விருதும் கிடைத்துள்ளது.

நன்றி: நூலகம்  - ஆளுமை:முத்துமீரான், எஸ்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்