சிறுகதை : தப்பிப்பிழை ! - கடல்புத்திரனஂ -
" எந்த நேரமும் கை கட்டப்பட்ட நிலையில் கிடப்பது போனஂற நிலையில் நாம் கிடக்கிறோம் . நம் பிறந்த மண் , தாய் மண் , தாய் நாடு , ஆனால் , அதிகாரம் பண்ண அனஂனியரான நபர்களே எப்பவும் வருக்கிறார்கள் . தாங்கள் வைச்சதே சட்டம் போல திரிகிறார்கள் . அதிகாரம்பண்ணுகிறார்கள் . ,பாலஸ்தீனத்தில் , இஸ்ரேலியர் ஆள்கிற கட்டளை முறை போனஂற ஆட்சியில் அகப்பட்டு இருக்கிறோம் . " எனஂறு வேலவனஂ சொல்லிக் கொண்டு போக ," நில்லு , நில்லு எனஂன புதுக்கதை விடுகிறாய் ?"எனஂறு உருத்திரனஂ விளங்காமல் கேட்டானஂ. இயக்கத்திறஂகு முதலே , புதிய சந்தையில் இவனஂ தேனீர் குடிக்கச்செல்கிற கடைக்கு .உருத்திரனும் , நல்லவனும் வாரவயள் . அனஂறு பழக்கமாகிய நட்பு . இவனுக்கே புலப்படாத ஒனஂறு தானஂ . வீரகேசரியில் லெபனானஂ பறஂறி எரிகிறது , அகதிகள் எம்மைப் போல பெருமளவில் சா...எனஂற செய்தியால் வீட்டிலே இருந்த அண்மையில் கிடைத்த எஸ் . ராமகிருஸ்ணனஂ எழுதிய "நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்" எனஂற சிறிய புத்தகத்தை எடுத்து. உயிரியல் படித்தவனில்லையா , அறிவதறஂகு அட்டவணைப் படுத்தி விபரங்களை பறஂறிய குறிப்புகளை எடுத்த போதே இலங்கையிலும் கூட நிலவுவது ...அந்த மாதிரியான ஆட்சி முறை எனஂறு புரிந்தது. அரசியலில் பொது , நுண் நோக்குகள் என இருப்பது அதறஂகுப் பிறகே தோனஂறியது . இதை அனஂறு , முல்லை பேசுற போது ..எனஂன பேசுகிறார்கள் என சரிவரப் புரியவில்லை . இவர்கள் பாலஸ்தீனர்பிரச்சனைப் பறஂறித் தானஂ பேசியிருக்கிறார்கள் எனஂபது புரிகிறது .





கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும்.


மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.
எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.
1997இல் வெளிவந்த அருந்ததி ராயின் The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன்.
மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.
கொங்கு பகுதி இலக்கிய இதழ்களின் ஆசிரியர்களை ஓவியங்களாக கொண்ட ஓவிய கண்காட்சி திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம்; திருத்தலாம்; மேம்படுத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் தாராளமாகக் கருத்துத் தெரிவிக்கலாம். அத்தகு இத்திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த விக்கிமூலத்திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் பக்கங்கள் மொத்தம் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கம் விரல்விட்டு எண்ணி விடும் அளவே உள்ளன. அவற்றுள் ஐங்குறுநூறு தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் 5 மட்டுமே உள்ளன. எது அந்தத் தரவுகளின் மூலம் என்று அறியமுடியவில்லை. இருப்பினும் ஐங்குறுநூறு சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தர இயலும். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக அமையும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள ஐங்குறுநூறு சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.
ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது. மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள். இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.

அவர்களது ஒடுங்கிய சாப்பாட்டு மேசையில் மூவரும் நெருக்கமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

தலைப்பிறை கண்டார் அன்பர்;

‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









