கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை ! - மா.சித்திவினாயகம் -
[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன்.
புலம்பெயர்ந்த மக்களின் புண்பட்ட இதயங்களுக்குக் கவிதையே மருந்தாகிறது. அவர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்குக் கவிதையே மகுடமாகிறது.
இத்தகையதொரு சீரிய உரையாடலை, அவசியமான உரையாடலை ஒருங்கிணைத்த ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கும், அதன் நெறியாளர், மதிப்பிற்குரிய பேராசான் சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கும், அவருக்குத் தோள் கொடுக்கும் தோழர் அகில் போன்றோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
கடந்த மாதம் இதே அவையில் மானிடவியல் குறித்த தேடல் ஒன்று இடம் பெற்றது ... மனிதன் குரங்கிலிருந்து கிளைத்தானா அல்லது கடவுளின் கையால் படைக்கப்பட்டானா என்ற அந்தப் பதிலறியாப் பெரும் போர் இன்றும் எங்கும் தொடர்கிறது. அதே போன்றதொரு தர்க்கமும், மயக்கமும் தான் கனடாவில் நவீன கவிதையின் தோற்றம் குறித்தும் நமக்கு எழுகின்றது.
கனடியத் தமிழ்க் கவிதையின் வேர்களைத் தேடுவது என்பதும் அதிலும் நவீன கவிதைக்கான பிறப்பை ஆராய்வதென்பதும் அதன் பூர்வீகம் அறிய முற்படுவதும்.. .. ஓர் வில்லங்கமான முயற்சி. இது ஒரு சிக்கலான, தேடல்.. ஆனால் அந்தத் தேடலை தேடுவதுதான் தமிழர் வாழ்வின் வரலாற்றின் நீட்சியென்பதை தன் குறிக்கோளாக கொண்டுள்ள ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கென் வாழ்த்துகள்.

கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 
மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் 'அரசியல் யதார்த்தவாதம்' (Political Realism) மற்றும் மகாத்மா காந்தியின் 'தார்மீக அரசியல்' ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறையற்ற எதிர்ப்பு (Satyagraha) மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (Sarvodaya) மூலம் காந்தி எப்படி ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கினார் என்பதை விளக்குகிறது.
அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.