அத்தியாயம் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...
நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள் மனோரஞ்சிதம்.
விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.
விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும். இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது. அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்.
"என்ன கண்ணா, யாரை அழைக்கின்றாய். அருகில் என்னைத்தவிர வேறு யாருமேயில்லையே?" என்று கூறியபடி என் தாடையைச் செல்லமாகத் தட்டினாள் மனோரஞ்சிதம்.
"கண்ணம்மா, நான் என் அண்டத்து நண்பனைப்பற்றி எண்ணினேன். அவனை அழைத்தேன்." என்றேன்.
"அண்டத்துச் சிநேகிதனா? இல்லை சிநேகிதியா?'' என்று குறும்பு குரலில் தொனிக்கப் பதிலுக்குக் கேட்டாள் மனோரஞ்சிதம்.
"ஏன் கண்ணம்மா, சிநேகிதி ஒருத்தி எனக்கு இருக்கக் கூடாதா?" என்று பதிலுக்கு அவளைச் சீண்டினேன்.
"கண்ணா, உனக்கு என்னைத்தவிர சிநேகிதி வேறு எவளும் இருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாது."
"கண்ணம்மா, நீயா இப்படிப் பேசுவது?"
"நான் பேசாமால் வேறு யார் பேசுவதாம் கண்ணா? அது சரி நான் பேசியதிலென்ன தவறு கண்ணா?"
"கண்ணம்மா, நீ நட்பையும், காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறாயடி. நட்பு எத்தனை பேருடனும், எந்தப் பாலினருடனும் இருக்கலாம். ஆனால் காதல் காதலுக்குரியவரிடம் மட்டுமே இருக்க முடியும். காதலுக்குரியவர் சிறந்த நண்பராகவுமிருக்க முடியும். ஆனால் சிறந்த நண்பர் எல்லாரும் காதலர்களாக இருந்து விட முடியாது கண்ணம்மா. நீ என் காதலி கண்ணம்மா. நீ என் சிநேகிதி கண்ணம்மா."
இரு தினங்களின் முன், இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட, இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை, புதுடெல்லியில் சந்தித்து சீன உளவு கப்பல் யுவாங்-5 வரவின் பின்னராய், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக Hindustan times செய்தி வெளியிட்டிருக்கின்றது. (16.01.2023) இதற்கு இரு தினங்களின் முன்னதாக, இலங்கை தூதுவர் அவர்கள், குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, குஜராத் முதலமைச்சருடனும், வேறு சில பாரதிய ஜனதா முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் செய்தி குறிப்புகள், பதிவு செய்திருந்தன.
அஜித் டோவாலுடனான மேற்படி சந்திப்பானது, யுவாங்-5இன் வரவால், சீர்குலைந்ததாய் கருதப்பட்ட இலங்கை-இந்திய உறவுநிலையை, மறுசீரமைப்பது குறித்தும், இனி வார இறுதியில் வரவிருக்கும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் வரவு குறித்துமே சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. உறவுகளை மறுசீரமைப்பதற்கான இவ்வகையான முயற்சிகள், இலங்கை-இந்திய உறவுகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு பிரச்சினை என்றிராது, இஃது ஓர் உலகலாவிய நடைமுறையாக இன்று உருவாகத் தொடங்கியுள்ளது என்பது குறிக்கத்தக்கதாகும்.
* படங்களை அழுத்துவதன் மூலம் பெரியதாக, தெளிவாகப் பார்க்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (18-01-2023) ஆரம்பமாகிறது. “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நாளையும் (18-01-2023) நாளை மறுதினம் (19-01-2023) இணையவழியாகவும் நடைபெறவுள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டின் இணையவழி அமர்வுகள் 19-01-2023 காலை 9 மணிக்கு ஆரம்பிக்கின்றன.
இணைவதற்கான வழி: Join Zoom Meeting
- எழுத்தாளர் சேசாத்திரி ஶ்ரீதரன் அவர்கள் மனுஸ்மிருதி பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரையில் எழுதியுள்ளார். இது பற்றிய உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -
மனுநூல் ஒரு நாட்டின் அல்லது நிருவாகத்தின் சட்டம் போன்றது அல்ல. அது தனிநபர் ஒழுக்கத்திற்கான இயமம், நியமம் (dos and dont's) போன்ற ஒழுக்க விதியை உரைப்பதே ஆகும். இது 12 அத்தியாயங்களில் 2,685 பாக்களாக உள்ளது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் நால்வகை கூறுகளை எப்படி கடக்க வேண்டும் என்று விவரிக்கிறது. நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக உள்ள நடக்கை விதிகள் பற்றி விவரிக்கிறது.
நூலின் காலம்: எந்த ஒரு நூலுக்கும் காலக் கணிப்பு செய்வது மூக்கணாங் கயிறு போடுவது போன்றதாகும். அதை முன்பு மத நோக்கில் தப்பும் தவறுமாக செய்ததால் இன்று இந்நூல் குறித்து பல சச்சரவுகளுக்கு வழிவகுத்துள்ளது. இனி மனுநூலின் காலம் குறித்து ஆய்வோம். வேதங்கள் இருக்கு, யசுர், அதர்வணம் என மூன்றே ஆகும். இம்மூன்று வேதங்களின் கலவையாகவே சாம வேதம் நான்காவதாக பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இதை செய்தவர் சைமினி மகரிஷி. சாம வேதம் குறித்து இந்நூல் குறிப்பிடுவதால் இந்நூல் சைமினிக்கு பிற்பட்ட காலத்தில் தான் எழுந்திருக்க வேண்டும். புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம்- மீமாம்சம் பற்றி இந்நூல் ஆங்காங்கே கூறுவதால் பாகவதம் இயற்றிய வாதராயண வியாசர், அவரது மாணாக்கர் சைமினி ஆகியோர் காலத்திற்கு கி.பி. 550-650 பிற்பட்டது இந்நூல் எனத் தெரிகிறது. அதன்படி இதை கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8 ஆம் நூற்றாண்டு முற்பகுதி நூல் எனக் கொள்வதில் தவறில்லை. வியாசரின் புராண தெய்வங்களுக்கு நான்கு கைகள் உண்டு ஆனால் குப்தர் கால தெய்வச் சிலைகளில் இரண்டு கைகள் மட்டுமே உண்டு என்பதால் வியாசரின் காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளப்படுகிறது. புராணங்களை எழுதிய வாதராயண வியாசர் அதில் திருப்தி கொள்ளாமல் தான் ஆரண்யங்களை இயற்றினார் என்பது பொதுக் கருத்து. அவரது மாணாக்கர்கள் தான் உபநிடதங்களை உருவாக்கினர். இந்த புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம் பற்றிய குறிப்பு இந்நூலின் காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.
'டொரோண்டோ'வில் எனது நூல்களான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுப்பு), குடிவரவாளன் (நாவல்), அமெரிக்கா (நாவல்) மற்றும் நல்லூர் இராஜாதானி (சிங்கள மொழியில்) ஆகிய நூல்களை முருகன் புத்தகசாலையில் வாங்க முடியும். முருகன் புத்தகசாலையில் இலங்கை, இந்திய மற்றும் புகலிடத் தமிழ் நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளைப் பெற முடியும்.
முருகன் புத்தகசாலை, 5215 Finch Avenue East, Suite# 109, Toronto , Ontario என்னும் முகவரியில் இயங்குகின்றது. GTA ஸ்குயரில் அமைந்துள்ளது. தொலைபேசி இலக்கம்: 416-321-0285
இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று.
பர்மாவின் பண்டைய தலைநகரான (Bagan) பாகனில் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாகன் நகரத்தில் உள்ள ஒரே ஒரு வைணவம் விஷ்ணு கோயிலுடன் ( Nat Hlaung Kyaung Temple) தொடர்புடையதாக இந்த கல் பொறிக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17. அவர் எனக்கு என் பால்ய பருவத்தில் அறிமுகமானது திரைப்படங்கள் மூலம். முதலில் நினைவு தெரிந்து பார்த்தது 'எங்க வீட்டுப்பிள்ளை' . இரண்டாவதாக பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்'. முதல் பார்த்தலிலேயே குழந்தைகளான எங்களைக் கவர்ந்து விட்ட வசீகர முகம் அவருடையது.
'ஆயிரத்தில் ஒருவன்' பாடல்கள் எல்லாமே மனத்தில் நிலைத்து நிற்பவை. அவற்றில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. மானுட விடுதலையை வேண்டும் வரிகள் இப்பாடலை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டன.
- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021) நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -
வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.
மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.
அடையாளம் குறித்த கதைகள்
அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.
Where are you from? என்று தலைப்பிட்ட சிறுகதையானது, புகலிடத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களை அந்நாட்டவர்கள் முதலில் கேட்கும் கேள்வியாக அமைகின்றது. இந்தக் கேள்வியினை எதிர்கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சலை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் இவ்வாறு கேட்பதோடு அடுத்தடுத்த வினாக்களையும் தொடுப்பார்கள் ‘அண்ணை ஊரில எந்த இடம்?’ என்பார்கள். இவர்களின் வினாக்களில் தொக்கி நிற்பது சாதியத்தை அறியவேண்டும் என்பதே!
அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் இறுதிவரை, தன் உடல் நிலை இடம் கொடுக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார். இங்கு அவர் நினைவாக அவர் என் முகநூல் பதிவுகளுக்கு எழுதிய எதிர்வினைகள், முகநூல் உரையாடலில் பகிர்ந்த கருத்துகள், அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். இவை ஒருவகையில் ஆவணங்களாகவும் இருக்குமென்பதால் இவ்விதம் பகிர்ந்துகொள்வது நல்லதேயென்றும் தோன்றுகின்றது.
அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் முகநூல் எதிர்வினைகள் சில...
எனது கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனின் மறைவையொட்டிய முகநூல் பதிவுக்கான எதிர்வினை.
Kopan Mahadeva - 16.9.2022
I first met Sivakumaran in the field of literature when he did expertly review my English book, 'The Pearly Island &. Other Poems' in Colombo, in 1974. At that time he was working in regular contact with Drs. K. Kailasapathy and K. Sivathamby, and Daily News Editor Mervyn de Silva (who himself wrote a review of my book in his columns later). From that time I too had watched the work and progress of Siva. It appeared to me that he seemed overpowered by the academic 'stature' that Kailas and Sivathamby were wielding at that time. May be, that was one reason, he was outwardly modest to make high claims for his writings. That was one of Siva's noble and uplifting qualities. I believe Mervyn too, readily published the review of my poetry book that Siva wrote at that time. Thus I support Pathivukal editor Giritharan Navaratnam, in his long and thorough research type of article he has published above, on the quality of the many reviews and critical commentaries that the late Mr. K.S. Sivakumaran wrote over the past several decades, internationally. Any university, in my opinion would have seriously considered him for a PhD, had he submitted his works for an academic award. Even now, it is not too late for some interested university to award a posthumous PhD/DLitt so as to honour him. -- Prof. Kopan Mahadeva, 16.9.2022.
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
1. உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!
- மறைந்த அவரது மனைவி வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -
நித்திரையே வாராத நீள் இரவின் நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.
எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்
சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி
முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து
சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றையும், அவரைப்பற்றி ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் எழுதி ஞானம் சஞ்சிகையில் வெளியான அறிமுகக் கட்டுரையினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - - ஆசிரியர், பதிவுகள்.காம் -
(பதிவுகள்.காம்) பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா
- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.
யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.
தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்
தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்
கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்
கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம்
பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்
புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம்
மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்
பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம்
உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்
உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்
அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்
அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம்
புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்
புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்
அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்
அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம்
அளவில் சிறிய இந்த நாவல். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கின்றது. முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
zoom இல் இணைந்து கொள்ள: https://bit.ly/thaipongalbook
என் புகலிட வாழ்க்கையில் ,நியூ யோர்க் மாநகரத்து அகதியாக அலைந்து கொண்டிருக்கையில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இன்னுமொரு குரல் பாடகி சிந்தி லோப்பரினுடையது (Cyndi Lauper) பல் வர்ண ஆடை அணிகலன்களுடன் கூடிய அலங்காரம், நிறமூட்டப்பட்ட சிகையலங்காரம் இவை இவரது தனித்துவம் மிக்க அம்சங்கள். இதன் காரணமாக இவரது பாடசாலைக் காலத்தில் சக மாணவிகளின் தாக்குதல்களுள்ளாகினதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடானது 24.12.2022 அன்று சிலாவத்துறை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலின் முதல் பிரதியை கலைத்தென்றல் கவிஞர் ஹாமித் எம். சுஹைப் அவர்கள் நூலாசிரியரும் ஆய்வாளருமான எஸ்.எம். அன்ஸார் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும், இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.
இன்று என் வாழ்வில், உலகத் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத துயர நினைவுகளைச் சுமந்து நிற்குமொரு நாள். இருக்கும் வரையில் என் நினைவை விட்டு இந்நாள் ஒருபோதும் ஓடி விடப்போவதில்லை. ஏனென்றால் இந்நாளில் நடந்த அந்தத் துயர நிகழ்வின் நேரடிச் சாட்சிகளில் ஒன்றாக நானிருந்திருக்கின்றேன். 1972இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10இல் , இரவில் நடந்த கூட்டத்தில் பொலிசார் ஏற்படுத்திய கலவரமும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக அறுந்து விழுந்த மின் கம்பியில் அகப்பட்டு உயிரிழந்த துயரச் சம்பவமும், அது வரை அமைதி வழியில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திசை திருப்பின.
இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் முதன் முதலில் உரும்பிராய் சிவகுமாரனை ஆயுதம் தூக்க வைத்தது அன்று நடைபெற்ற தமிழ் மக்களின் மரணங்கள்தாம். அன்று யாழ் மேயராக விளங்கிய அல்ஃபிரட் துரையப்பா அவர்களைப் பொன்னாலையில் வைத்துத் தமிழ் இளைஞர்கள் பின்னர் படுகொலை செய்ததற்கும் முக்கிய காரணமாகவிருந்தது அன்று நிகழ்ந்த தமிழர்கள் மீதான வன்முறையும், அழிவும்தாம்.
- தேவகி கருணாகரனின் 'பிரியாவும் ஜேம்சும்' என்னும் இச்சிறுகதை மாறிவரும் உலகின் மாற்றத்தின் விளைவொன்றைப்பற்றிப் பேசுகிறது. அம்மாற்றம் என்ன என்பது பற்றி அறிய இச்சிறுகதையை முழுமையாக வாசியுங்கள். இக்கதையின் கூறு பொருளும், எழுத்து நடையும், பாத்திரப்படைப்பும் இதனை நல்லதொரு முக்கியமான சிறுகதையாக இதனை மாற்றியுள்ளன. இச்சிறுகதையில் வரும் குழந்தை கீர்த்தி நெஞ்சைத்தொடுகின்றாள். முடிவில் அவளில் ஏற்படும் மாற்றம் முக்கியமானது. அவ்வகையில் அவளொரு குறியீடு. மாறாத உணர்வுகள், கருதுகோள்களுடன் மாறுவதற்குச் சிரமப்படும் சமுதாயமொன்றைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடு அவள். - பதிவுகள்.காம் -
அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் குளிக்கும் தொட்டியில் பதமான சூட்டுக்கு வெந்நீரை, நிரப்பி கீர்த்தியைக் குளிப்பாட்டி, அவளுக்குப் பிடித்த `பணானாஸ் இன் பிஜாமாஸ்` பிரிண்ட் போட்ட, பிஜாமாவைப் போட்டு விட்டு, ”எங்கள் கீர்த்தி இளவரசி நல்ல வாசனையாக இருக்கிறாள்,” எனக் கீர்த்தியை முகர்ந்தபடி சொன்ன பிரியாவை., கீர்த்தி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். பிரியா கிச்சனுக்கு போகவும், அறையிலிருந்த விளையாட்டுப் பொருட்களில் கீர்த்தியின் கவனம் லயித்துப் போக, முற்பள்ளியில் அவளது சின்ன மூளையில் எழுந்த சந்தேகம், கேள்வி எல்லாமே மறைந்து போய்விட்டது,
”கீர்த்திக் குட்டி, டினர் ரெடி!” எனப் பிரியா கிச்சனிலிருந்து அழைக்கவும், வாசற் கதவைத் திறந்து கொண்டு அவளது ஜேம்ஸ் டடி வரவும் சரியாகவிருந்தது. அவரைக் கண்டதும் கீர்த்தி ஓடிச்சென்று ஜேம்ஸ் மேல் தாவி அவர் கைகளுக்குள் தஞ்சமானாள். தந்தையைக் கொஞ்சியவளின் முகத்தில் ஒரே சந்தோசம். ஏனோ அவளுக்கு ஜேம்சோடு இருப்பதில் ஒரு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும்.
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பால் -
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல் ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால் நடாத்தப்பட்டது. மொஹமெட் இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர். தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. -
கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?
பதில்: கிட்டத்தட்ட 40 பாடல்கள். 100 இசை கச்சேரிகள் அளவில் நிகழ்த்தியுள்ளேன். இதில் நான் வீதிகளிலும், தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சாலைகளிலும், சிறு குழுவினரிடையேயும் நடாத்தும் நிகழ்ச்சிகள் கணக்கில் அடங்காதவை ஆகும். இது தவிர சில வருடங்களில் Guitar Festival யும் நடத்தியுள்ளேன். இவைகள் அனைத்தும் மிகுந்த பணத் தேவையை உள்ளடக்குவதாய் உள்ளன. இதனால் இவற்றின் எல்லைப்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே.
கேள்வி: உங்கள் பாடல்களில் முக்கியமான இரண்டை எமது வாசகர்களுக்காக தெரிவு செய்வீர்கள் என்றால் அவை எவை எவையாக இருக்கக் கூடும்?
பதில்: ‘மொனரவில’ என்ற பாடலையும் ‘மினிசா’ என்ற பாடலையும் நான் குறிப்பிடலாம்.
கேள்வி: ‘மொனரவில’ பாடல் எதைப் பற்றியது? அதன் பின்னணி என்ன?
பதில்: 1817இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ இடத்தில் நடந்த மாபெரும் போராட்டமே, இலங்கையில் நடந்த, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முதலாவது போராட்டம் எனலாம். இதற்கு தலைமை தாங்கியவரே ‘மொனரவில கெப்படிபொல’ எனும் வீரர். இப்போராட்டத்தின் பிறகு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அவரைப் பற்றிய பாடலே இது.
83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.
அத்தியாயம் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!
"கண்ணம்மா, எத்தனை எத்தனை தளைகள். சுற்றியெங்கு பார்த்தாலும் தளைகள். உள்ளே தளைகள். வெளியேயும் தளைகள்."
என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?"
"பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"
"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"
"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள். இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா? இவ்வகையான தளைகள் அனைத்திலுமிருந்து விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"
அண்மையில் மறைந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கரியைகள் எதிர்வரும் 11.01.2023 அன்று லிவர்பூலில் நடைபெறவுள்ளது.
- எழுத்தாளர் 'ஆவூரான்' சந்திரன் -
வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார். அவர்தான் 'ஆவூரான்' சந்திரன் நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண். அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம். இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும் சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவு கடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.
ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.