கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதை பிறந்த வரலாறு! - வ.ந.கிரிதரன் -

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கழுதை ஓா் பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
முன்னுரை
கழுதை என்று ஒருவரைக் கோபத்தோடு திட்டும் போது அது வசவு வார்த்தையாகவே பயன்படுகின்றது. என்பது உண்மைதான் நாம் தேவையில்லாமல் கழுதையின் பெயரைக் கெடுக்கிறோம். கழுதை நமக்கு எவ்வாறு பயன்படுகிறது. அது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கிய வரை எவ்வாறு உழைத்து நமக்கு பயனுள்ள விலங்காக உள்ளத்தைப் பற்றியும், கழுதையின் வாழ்விடம், உணவு, விவசாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கிறது.
கழுதை வாழ்விடம்
ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ வீதம் இடம் தேவைப்படும் கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியமாகயிருக்கிறது. கழுதைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ளன. கழுதைகள் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டிருக்கவில்லை. மனிதா்கள் கொண்டு வந்த எந்த இடத்திலும் அவற்றைக் காணலாம்.
கழுதை உணவு
ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும், இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும். இதன் உடல் எடையில் 1.5 சதவிகீதம் அளவில் உலா் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும் . மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு வைக்கோல் மட்டும் தரப்படுகிறது.
நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும், கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும் மேய்ச்சலக்குச் செல்லாத கழுதையின் உணவில் 75சதவிகீதம் பசும்புல்லும், 25சதவீதம் உலா் தீவனம் கொடுக்கப்படுகிறது.
சிறுகதை: ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது….. - ஸ்ரீராம் விக்னேஷ் , நெல்லை வீரவநல்லூர் -
“பாருவதி….. இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்….. என்னபண்ண…. ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…. ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்….”
கேட்டுக்கிட்டே நாட்டாமை நாச்சிமுத்து ஐயா எங்கவீட்டு குச்சி வாசல் ஓரமா ஒக்காந்துகிட்டாரு.
எங்கம்மா மொகத்த பாக்கவே ரொம்பவும் பாவமா இருந்திச்சு. அழுகை ஒண்ணுதான் வராத கொறை.
“தப்பா நெனையாதீரும் நாட்டாமை ஐயா…. வர்ர வெள்ளிக்கிழமைதான் பீடிக்கடையில சம்பளம் போடுவாங்க…. வாங்கின கையோட குடுத்துப்புடுறேன்…..”
கெஞ்சிற மாதிரி பேசிச்சு எங்கம்மா.
நாட்டாமை நாச்சிமுத்து விடல்ல.
“ ஒன்னய மாதிரி ஆளுங்க கஷ்டப்படக் கூடாதுண்ணுதான், நாம நூத்தி ஒண்ணுண்ணு வரிய பிரிச்சோம்…. இல்லேன்னா போனமாசம் தெற்கு ஊர்க்காரனுக நடத்தின கொடையில, அவங்க போட்ட ஆட்டத்துக்கும், காசைக் கொட்டி ரொம்ப ஜோரா பண்ணின திருவிழாவுக்கும், நாம பதிலுக்குப் பதிலு பண்ணிக் காட்டணும்னு, வீட்டுக்கு வீடு இருநூத்தம்பதோ, முன்னூறோன்னு பிரிச்சிருப்போம்…. பரவாயில்ல…. ஏற்கனவே ஊர்ப்பணம் கொஞ்சம் இருக்கு…. அதையும் போட்டு இந்தத் தடவை நம்ம சாமிக்கு, கொடைய ஜாம்ஜாம்னு நடத்திப்புடலாம்…. பாட்டுக் கச்சேரிக்கெல்லாம் டவுண்லயிருந்து ஆளு வருது…. தெரியுமா…..”
“பாட்டுக் கச்சேரியும், வாண வேடிக்கையும் வெச்சுக் கூத்தடிச்சாத்தான் சாமி வரங்குடுக்குமா ….. காசை கொட்டிக் கரியா ஆக்கித்தான் சாமி கும்பிடணும்னு நெனைக்கீரா நாட்டாமை ஐயா ….”
இப்ப கொஞ்சம் அம்மாகிட்ட துணிவு தெரிஞ்சிச்சு. நாட்டாமை ஐயாக்கு கோவம் வந்திருக்கணும்போல.
“இந்த எடக்குப் பேச்சுத்தான் வேண்டாங்கிறது…. தெற்கு ஊர்க்காரனுகளை விட , நாம ஒண்ணுங் கொறைஞ்சவங்க இல்லைங்கிறத காட்டிக்க, வேற என்னதான் வழி இருக்கு…. மனுசனுக்கு கவுரவம்னு ஒண்ணு இருக்கில்லையா…. இதப்பத்தியெல்லாம் நீ எங்கே நெனைச்சுப் பாக்கப்போறே…. நீ இதுமாதிரி நடந்துக்கப் போயிதான், காளிமுத்து ஒன்னையையும், ஓம் புள்ளைங்க ரெண்டையும் விட்டுப்பிட்டு அவ பின்னாடியே போய்ட்டான்…..”
இன்னும் என்னமோ எல்லாம் பேசினாரு. எங்கம்மா மெதுவாத்தான் பதில் சொல்லிக்கிட்டிருந்திச்சு. ஆனா என்னாலதான் முழுசா புரிஞ்சிக்க முடியல்ல.
தமிழர்களின் புத்தாண்டு எப்போது? - குரு அரவிந்தன் -
தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.
இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.
கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (1) - ஜோதிகுமார் -
மக்ஸிம் கார்க்கியின் இறுதி நூலான, ‘கிளிம்மின் சரித்திரம்’ எனும் இப்பிரமாண்டமான பேரிலக்கியத்தின் நான்கு தொகுதிகளில், முதல் தொகுதி 1927 இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் தொகுதி 1928 இலும் மூன்றாம் தொகுதி 1930 இலும் 4ம் தொகுதி 1936 இற்கு பிறகேயும் அச்சேற்றப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தை பிழிந்து தரும் நூலாகவும், தான் வாழ்வில் சந்தித்திருக்ககூடிய அனைத்து சவால்களிலும் ஆகப் பெரியதும் பலமிக்கதுமான சவால் என்றும், தன் வாழ்வின் இறுதிச் சாசனம் எனவும் கார்க்கியால் வரையறுக்கப்பட்ட இந்நூல் ஓர் 40 வருட கால ரஷ்ய வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தையும், அதன் உக்கிரமான பல்வேறு திருப்பு முனைகளையும், அவற்றை ஓர் ‘நவ’ மனிதன் முகங் கொடுக்கும் விதத்தையும், அன்னியப்பட்ட, பண்பாட்டுக்கு எதிரான ஆனால் மேலோட்டமான பண்பாடு மூலாம் பூசப்பட்ட அவனது அந்தரங்க நகர்வுகளையும் நூல் இனங்காட்ட முனைகின்றது.
மக்கள் சாரிகள் உருவாக்கித் தந்த பிரமித்தியூஸ் போன்ற கட்டறுந்த வரலாற்று கட்டமைப்புகளின் பின், அத்தகைய ஒரு பாத்திரம் நவீன இலக்கியத்திலும் சாத்தியப்படுமா என்பது கார்க்கியின் வாழ்நாள் கேள்வியாக இருந்து வந்துள்ளது. தன் இறுதி காலத்தில் இவ்வரலாற்று பணியை, செய்து முடிக்க வேண்டிய பொறுப்பை வரலாறானது தன்மீதே சுமத்தியுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். பெரிதும் தயக்கத்துடனேயே தன் பேனையை தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளாவதை, நூல் குறித்த அவரது குறிப்புகள் தெளிவுற வெளிக்கொணர்கின்றன. ஒரு கட்டத்தில், இப்பொழுது நான் பயப்படுவதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை பற்றி மாத்திரமே. அதாவது, நான் இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன் மரணம் என்னை அணுகிவிடுமோ என்ற ஒரே அச்சம் தான். இந்நூலை மனுகுலத்தின் இன்னுமொரு சாதனை என நாம் வகைப்படுத்தலாம் - இதில் உள்ளடங்கும் சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை சரியாக நாம் கையேந்த முடியுமானால்.
சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் கற்பனைகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
சித்திரையைக் கொண்டாட சிறகடிக்கும் கற்பனைகள்
எத்தனையோ எல்லோரின் மனத்தினிலும் இருக்கின்றன.
அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை?
அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகியிருக்கு.
தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்.
ஊரெல்லாம் கொண்டாட்டம், உறவெல்லாம் கூடிடுவர்.
தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்.
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் “சித்திரைப் புத்தாண்டு - வானியல் நோக்கு”
வாசிப்பு அனுபவம்: பெண் ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பேசும் முருகபூபதியின் “ யாதுமாகி “! - விஜி இராமச்சந்திரன் – மெல்பன் -
பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும். இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.
இந்நூலில் இடம்பெறும் முதல் பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், ஆறு தசாப்த காலம் தமிழ் எழுத்துலகில் சில முக்கியமான படைப்புக்களை தந்தவர். அவர் களப்பணி ஆற்றி எழுதிய நாவல்கள் பற்றியும், அவரது துயரமான இறுதி நாட்கள் பற்றியும் எழுதியுள்ளார். அடுத்த ஆளுமை அருண். விஜயராணி. 1970 களில் இலங்கை வானொலியில் யாழ்ப்பாண மண்ணின் மொழி வாசனையோடு விசாலாட்சி பாட்டி என்ற தொடரை எழுதி புகழ்பெற்றவர். அங்கதம் தோய்ந்த நடையில் சமூக சீர்திருத்த சிறுகதைகள், நாடகங்கள் எழுதியவர். மத்திய கிழக்கு, லண்டன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர். அடுத்த ஆளுமை கமலினி செல்வராசன். இயல்பிலேயே கலை இலக்கிய நடன இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தவர். இலங்கை வானொலியில் கணவர் சில்லையூர் எழுதி இயக்கிய நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். ஆதர கதாவ, கோமாளிகள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கலை இலக்கிய மேடைகளிலும் தோன்றியவர். கணவர் இறந்த பின்னரும் நெற்றித் திலகத்துடன் வலம் வந்த புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். கணவரின் மறைவுக்குப் பின் அவரது கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். பலதுறைகளில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி 61வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியையும் இந்த நூலின் வாயிலாக அறிகின்றோம்.
ஜீவநதி (இலங்கை) பதிப்பகத்தின் மலிவு விற்பனை!

'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (3) - ஜோதிகுமார் -
3
சண்முகதாசனின் தலைமையில் இச்செந்தீ மலையக தோட்டங்களின் உள்ளேயும் வெளியேயும் ஆழ ஊடுருவி கொழுந்துவிட்டு எரியத்துவங்கிய காலகட்டம் அக்காலகட்டம். மலையகத்தின் போர்ப் பறைகள், மலையகத்தின் மேற்குறித்த, பத்தாம் பசலி கட்டுவிப்புகளை, ஆட்டம் காண செய்த ஒரு இடியேறு போக்கு அது. இலங்கை முழுவதும் இப்படியாய் சூள் கொண்ட ‘இப்போக்கினை மாற்றவோ என்னவோ’, இத்தகைய ஒரு அரசியல் பின்னணியிலேயே, மேல் குறித்த 1971இன் எழுச்சியும், இலங்கையில் இறக்கிவிடப்படுகின்றது. இதில், யாருமே எதிர்பார்க்காத நிலையில், நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்றதும் அன்றைய ஒரு யதார்த்தம் ஆகியது. இருந்தும், இவ் எழுச்சியின் படுதோல்வியும், கூடவே, பங்கேற்றவர்கள் போக எழுச்சியில் பங்கேற்காத, ஆனால், இடதுசாரி அணிகளை சார்ந்த பெரும்படையினர் - சரியாக கூறினால் - எழுச்சிக்கு எதிரானவர்கள் அல்லது அதனை விமர்சன ரீதியாக ஆழமாக எதிர்க்க தலைப்பட்டவர்கள் கூட- பிரதானமாக, சண்முகதாசனின் இயக்கத்தை சேர்ந்த அநேகர், அது மலையகமாய் இருந்தாலென்ன, வடக்காயிருந்தாலென்ன, அல்லது தெற்காயிருந்தாலென்ன – எதுவாயிருந்தாலும், கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகியதும் அன்றைய விதிமுறைகளின் பிரதானமான ஒன்றானது.
இதனையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எழுச்சியில் பங்கேற்காத இவர்கள் அனைவரும், எழுச்சிக்கு நேரடி எதிரானவர்கள் இவர்கள் என்ற போதிலும், மேற்படி எழுச்சியை பிற்போக்கானது என இவர்கள் வரையரை செய்துக்கொண்டு, வாதிட்டு பரப்புரை செய்துக் கொண்ட போதிலும், “எழுச்சியை” “காரணமாக” வைத்து இவர்களை ஒட்டு மொத்தமாக அடக்கி நிர்மூலமாக்கும் செயற்றிட்டத்தை அரசு இறக்கிவிட்டது - அதில், வெற்றியும் கண்டது.
சிந்தனைக்களம்: 'பரதக் கலையில் நாயகியர்'
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
குவியம் கனடா – கொலுசு சஞ்சிகைகள் இணைந்து நடத்தும் 2022 ஆண்டின் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சிறுகதைப் போட்டி!
குவியம் கனடா – கொலுசு சஞ்சிகைகள் இணைந்து நடத்தும் 2022 ஆண்டின் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சிறுகதைப் போட்டி
தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் சிறுகதைகள் விபரம்
முதலாம் பரிசு 6000 ரூபா (இந்தியன்)
இரண்டாம் பரிசு 4000 ரூபா (இந்தியன்)
மூன்றாம் பரிசு 2000 ரூபா (இந்தியன்)
நான்காம் பரிசு 1000 ரூபா (இந்தியன்)
ஆறுதல் பரிசுகள் எட்டு ஓவ்வொன்றும் 500 ரூபா (இந்தியன்)
அந்தமான் இலக்கிய சந்திப்பும் வரலாற்றுப்பதிவும்!
பயணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு பயணமும் வரலாறாய் பதிவு செய்யப்பட வேண்டும். இனிய நந்தவனம் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு பயணமும் வரலாறாக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் மட்டுமல்ல - வாசிப்பை நேசிப்போம்! - இளவரசி இளங்கோவன், மொன்றியல் , கனடா -
சுயமுன்னேற்றம் மற்றும் தனி நபர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி முன்னேறுவது எப்படி இது போன்ற விடயங்களை யோசிக்கும் பொழுதும் அது பற்றிய புத்தகங்களை யோசிக்கும் பொழுதும் எப்பொழுதும் எல்லோரும் முன்வைக்கும் நூல்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில நூல்களாகவே இருப்பதையும் ஆங்கில எழுத்தாளர்கள் மட்டுமே இவை அனைத்தையும் அறிந்து இருப்பது போலவும் ஒரு மிகப்பெரிய மாயை நம்மவர்களிடையே தொடர்ந்து வருகிறது.
இதற்காக ஆங்கில எழுத்தாளர்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் குறைத்து மதிப்பிட்டு குறை சொல்ல முன்வருகிறேன் என்று பொருள் கொள்ள கூடாது .மாறாக அதற்கு இணையாக சில சமயங்களில் அதற்கு முன்னோடியாகவும் மேலாகவும் தமிழிலும் நூல்களும் எழுத்தாளர்களும் உள்ளனர் என்பதைத்தான் நான் இங்கே சொல்ல வருகின்றேன்.
அந்த வகையில் மனிதவள மேலாண்மை,ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணராக உள்ளவர் சுயமுன்னேற்றம் பங்குச்சந்தை உணர்ச்சிகளை கையாள்வது பற்றிய நுண்ணறிவு, நேரத்தை எவ்வாறு நேரமேலாண்மை விற்பனை தலைமைப் பண்பு மற்றும் சுய ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பற்றிய புத்தகம் எழுதிய ஆகச்சிறந்த தமிழ் எழுத்தாளர், பயிற்சியாளர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றித்தான் என்னை கவர்ந்த நான் வியப்புக்கு ஆளான பல்வேறு விடயங்களை இக்கட்டுரையின் வாயிலாக நீங்களும் அறிந்து கொள்ள முன்வைக்கின்றேன்.
எழுத்தாளர்களைப் பற்றி நிறைய தேடல்களை செய்து கொண்டிருக்கும் வேளையில் எதேச்சையாக நான் கண்டறிய நேர்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் தான் சோம வள்ளியப்பன் அவர்கள். அவருடைய சுயமுன்னேற்ற நூல்களையும் அவர் எழுதிய "இட்லியாக இருங்கள்" என்ற புத்தகமும் மிகவும் சுவாரசியமாக கவரக்கூடியதாக இருந்தது. அவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் 45 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிக்கை இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுபவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட மனிதவளம், பொருளாதாரம் ,பணம் பங்குச்சந்தை,நேர மேலாண்மை ,ஆளுமை மேம்பாடு போன்ற பல்வேறு கருத்துக்களை சொல்லி வருபவர்.
முகநூற் பதிவுகள்: யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும் ! நாடக நெறியாளர் க. பாலேந்திராவின் தொகுப்புரை! - க. பாலேந்திரா -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
- யுகதர்மம் நாடகக் காட்சி -
சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் 30-03-2017 இல் இந்த நூல் இலங்கையில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது . இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நாடகமும் அரங்கிலும் பயிலும் மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்த நூலுக்கு நான் எழுதிய தொகுப்புரையை இன்று முகநூலில் பதிவு செய்கிறேன். நாடக மாணவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு நீண்ட விபரமான பதிவு. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள்.
ஜேர்மனியரான பேர்டோல்ட் பிரெக்ட்(1898-1956) உலக நாடக வரலாற்றில் மிக முக்கியமானவர். இலங்கையில் தற்போது தமிழ் நாடக ஆர்வலர்களுக்கு பேர்டோல்ட் பிரெக்ட் நாடகங்கள் பரிச்சயமாகி வருகின்றன என்று சொல்லலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நிலைமை வேறு. இந்த நிலைமையை இளம் தலைமுறையினர் குறிப்பாக அரங்கியல் பயிலும் மாணவர்கள் அறிய வேண்டும். ஈழத்து நவீன நாடகங்கள் பற்றிய பதிவுகள் அவசியம் என்று கருதியே இந்த நூலாக்க முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
எழுபதுகளின் ஆரம்பங்களில் கொழும்பு மொரட்டுவ (கட்டுபெத்தை) பல்கலைக் கழகத்தில் நான் பொறியியல் துறை மாணவனாக இருந்தபோது பிரபல சிங்கள நாடக நெறியாளர் ஹென்றி ஜெயசேனா அவர்கள் நெறிப்படுத்திய ஜேர்மன் நாடகாசிரியர் பேர்டோல்ட் பிரெக்டின் நாடகமான “கோகேசியன் சோக் சேர்க்கிளை” (Caucasian Chalk Circle ) கொழும்பில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலங்களில்தான் நான் தீவிர நாடகத்துறையில் பிரவேசித்தேன். தீவிரமான நாடகத் தேடலில் நான் ஈடுபட்ட காலம் அது. “ஹு னுவட்டயே கதாவ” என்ற பெயரில் மேடையேறிய அந்த சிங்கள நாடகம் என்னில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாடகத் தாயாரிப்பு என்னைப் பிரமிக்க வைத்தது. நான் பார்த்த முதலாவது பிரெக்டின் நாடகம் அது. தொடர்ந்து பிரெக்ட் பற்றி நிறைய ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தேன். தமிழில் அவர் பற்றிய எழுத்துக்கள் அப்போது மிகக் குறைவு. அவருடைய நாடகம் ஒன்றை தமிழில் செய்ய விரும்பினேன்.
'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (1-2) - ஜோதிகுமார் -
திரு.சாந்திகுமாரின் எழுத்துக்கள் இரு தளங்களில் உருவாகின. ஒன்று இலக்கியம். மற்றது சமூக-அரசியல்-வரலாற்று கட்டுரைகள். இலக்கியம் அவரது சிறுகதைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், உலக இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளையும் உள்ளடக்கும். அவரது சமூக வரலாற்று அரசியல் கட்டுரைகள் மலையக வரலாறு, மலையக சமூக உருவாக்கம், தத்துவ அரசியல் விமர்சனங்கள் என்ற வகையில் வகைப்படும். இங்கு, அவரது அரசியல் சார்ந்த தத்துவார்த்த பார்வை பின்புலமாய் இருக்க இன – சாதீய அடிப்படைகளை கேள்விக்குட்படுத்திய கட்டுரை இது.
1
"ஒவ்வொரு முன்னெடுப்பும் மனிதனாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவை, ஒவ்வொன்றும் மனிதனாலேயே, மேலும், பிரமாண்டமடைகின்றன." -மக்ஸிம் கார்க்கி-
“மலையகம்”; என்ற குறியீடு, பல கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கிய ஒரு யதார்த்தம் என 1980களில் நந்தலாலா எழுத நேர்ந்தது. ஒரு 200 வருட கால நகர்வின் பின்னர் மலையகம் என்ற இவ்யதார்த்தம், வந்து சேர்ந்திருந்த, ஒரு வரலாற்று புள்ளியை, தன் வாழ்வின் மிக ஆரோக்கியமான காலப்பகுதியில், சரியாக எதிரொலித்த ஒரு சிலரில், சாந்திக்குமாரின் பெயர் மிக துலாம்பரமானது என்பதிலேயே அவரது முக்கியத்துவம் உள்ளடக்குகின்றது எனலாம். அது காலம் வரை, மலையகம் தொடர்பில் பனிமூடம் போன்ற ஓர் கற்பனை படர்ந்த கலங்கலான கருத்துப்படலமே எங்கும் பரவியிருந்ததாய் காணப்பட்டது. இது பொதுவானது. அதாவது, பனிமூடங்கள் என்பன உலகில் பொதுவானவைதான். ஏனெனில் கனவுகளிலும், பனி மூடங்களிலும் ஜீவிதம் நடத்துவதென்பது ஒருவகையில் வசதிகளையும், வாய்ப்புகளையும் உள்ளடக்குவதுதான் என ஆகிறது – யதார்த்தம் அதன் குரல்வலையை நசித்துப் போடும் வரை.
2
இவ்வகையில், இடதுசாரிகளின் கனவுகளிலும், மலையகம் என்ற இவ்யதார்த்தம், ஒரு பிரச்சினைகளும் இல்லாததாய் ஜீவிதம் கண்டது–புரட்சி வரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன். இருந்தும், 1930களில், இடதுசாரிகளின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட இம்மலையகம், 50களில் தமது கட்சிகளின் தத்துவார்த்த புரள்வுகளினாலும், உள்ளிருந்து முகிழ்த்த புதிய யதார்த்தங்களினாலும், தன் இடதுசாரி சோபையை ஓரளவு களையத் தொடங்கியிருந்தது எனலாம்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அஞ்சலிக்குறிப்பு: பேராசிரியர் சோ. சந்திரசேகரம் விடைபெற்றார்! மலையகத் தமிழ் மாணவர்களுக்கான குரலாகத் திகழ்ந்த ஆளுமை! - முருகபூபதி -
“இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு. ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகம், வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன் கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் (சகல இன மாணவர்களும் பயிலும்) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இன்று இயங்கிவரும் 16 தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் காலப்போக்கில் நிச்சயமாக புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படப் போகின்றன. அவற்றின் வளர்ச்சி நின்று விட முடியாது. புதிதாக உருவாக்கப்படும் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றை நுவரெலியாவில் நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. “ இவ்வாறு தொடர்ந்து குரல் எழுப்பிவந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள், நேற்று 04 ஆம் திகதி திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்தார்.
வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றிய முனைவர் சு.குணேஸ்வரனின் உரை!
அஞ்சலி: கலை, இலக்கிய, சமூக நேசர் மருத்துவர் வாமதேவன் விடைபெற்றார்! - முருகபூபதி -
“ சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா…?
அட என்னாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா…?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா…? “
இந்தப்பாடலை கேட்டிருப்பீர்கள். கடந்த 28 ஆம் திகதி வடபுலத்தில் தெல்லிப்பழையில் தமது 99 வயதில் மறைந்த எமது கலை, இலக்கிய சமூக நேசர் மருத்துவர் தம்பிப்பிள்ளை வாமதேவன் அவர்களின் இறுதிநிகழ்வையும் அவரது இறுதி யாத்திரையையும் அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாக பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணீர் மல்க குறிப்பிட்ட அந்தப்பாடலைத்தான் நினைத்துக்கொண்டேன். அன்பர் வாமதேவன் எனது நீண்ட கால நண்பர். எனக்கு மட்டுமல்ல, இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து இயங்கிய பலருக்கும் அவர் நல்ல நண்பராகவே திகழ்ந்தவர். மருத்துவர் வாமதேவன் மறைந்தார் என்ற துயரச்செய்தியை எமக்கு முதலில் தெரிவித்த கலை, இலக்கிய ஆர்வலர் நவரத்தினம் இளங்கோ அவர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்தான்.
வாமதேவன் தமது இளமைக்காலத்தில் மருத்துவம் படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று M R C P பட்டத்துடன் திரும்பியவர். அவர் நினைத்திருந்தால், இங்கிலாந்திலோ அல்லது வேறு மேலைத்தேய நாடுகளிலோ தமது மருத்துவத்துறையில் பணிகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தினரையும் அழைத்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் தமது ஊரான தெல்லிப்பழையிலிருந்து மருத்துவம் படிக்கச்சென்றபோது, அவரது தாயார் கூறிய அறிவுரையை கேட்டு, அதன்பிரகாரம் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தான் கற்கும் மருத்துவம் மக்களின் சேவைக்குத்தானேயன்றி, தனியார் துறை மருத்துவமனைகளுக்கு அல்ல, என்ற மனிதநேயச்சிந்தனையுடன் அரச பொது மருத்துவமனைகளிலேயே இறுதிவரையில் நலிவுற்ற மக்களுக்காக பணியாற்றினார். அவரது புதல்விகள் இருவர் அவுஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் வசிக்கின்றனர். இறுதியாக அவர்களிடம் கடந்த ஆண்டு வந்தவர், தனது எஞ்சியிருக்கும் காலத்தில் ஊரோடு சென்று வாழவே விரும்புவதாக கூறி விடைபெற்றுச்சென்றார். இப்போது அவரது விருப்பத்தோடு, 99 ஆண்டுகாலம் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து நினைவுகளை எமக்கு தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
ஓவியர் 'செள' - ஒரு படைப்பாளியின் கதை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
" இதை கொஞ்சம் பாருங்க..... எப்படி இருக்கு?"
"ச்சா! சோக்கா இருக்கு..... ஆச்சிய இன்னும் கொஞ்சம் வயசானவராக கீற முடியுமோ?"
"ஓ! அதுக்கென்ன..... ஏலும்."
சில கிறுக்கல்களில் பின்
"இப்ப இதை பாருங்க..... சரிதானே?"
"அட, இதுதான் என்ர ஆச்சி!"
"ஆச்சி பயணம் போகிறாள்" கதைக்கான கேலிச்சித்திரம் வரைவது பற்றி ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானுக்கும் ஓவியர் "செள" என அழைக்கப்படும் கருணாகரன் செளந்தரராஜாவிற்கும் இடையே நடந்த உரையாடல் இது! இந்தப் புள்ளிதான் இரு படைப்பாளிகளின் எண்ணங்களும் சங்கமிக்கும் இடம். எழுத்தும் ஓவியமும் இலக்கியத்தின் இரு கண்கள். அவை ஒரு காட்சியை ஒருமித்து காணும் போது ஒரு தேடல் அங்கே நிறைவடைகிறது. ஒரு காட்சியைப் பற்றி படித்ததும் ஓவியன் மனதில் பதியும் சுவடுகளே அவன் வரைய இருக்கும் ஓவியத்தின் ஊற்றுப்புள்ளி. அருவம் உருவமாகும் உருமாற்றத்தின் முதல் படி இது. இங்கு எவரும் தம் படைப்புகளின் மேல் பீடமிட்டு அமர்வதில்லை. இரு கலைகளும் சமதரையில் சந்திக்கும் ஒரு ஞானநிலை அது! இது ஒன்றும் புதிதல்ல. ஒரு கவிஞனும் இசையமைப்பளனும் இந்தப் புள்ளியில் சந்திக்கும் போது ஒரு கானம் பிறக்கிறது. கவிஞனின் கருத்துள்ள பாடல் வரிகள். அவ்வரிகளுக்கு வழிவிடும் இன்னிசை. மமதைகள் விடைபெறும் இடம் இது! கர்வம் இங்கு கடை விரிப்பதில்லை!
வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- ஜீவநதி வெளியீடான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் பார்வையிது. - பதிவுகள்.காம்-
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் உள்ளத்து உணர்வுகள் சிக்கலானவை. புதிய தாயகத்தில் காலூன்றித் தலையெடுக்கவும் கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளவும், மொழிவழக்கினை அறிவதற்கும், தனக்கோர் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்குமான முயற்சிகள் மிகமிகக் கடினமானவை. புலம்பெயராத வாசகர் ஒருவரால் இவற்றை உள்ளபடி உணர்வது சிரமமானது. எனினும் அந்த இலக்கினைப் படைப்பாளி வெற்றிகரமாக எட்டியுள்ளார் என்றே கூறலாம். புலம் பெயர்வாளனாகவும், அவனை உற்று நோக்கும் வேறொரு மனிதனாகவும் எதிர்நின்று தன் புதிய தாயகத்தின் உள்ளக பரிமாணங்களை, இழந்த தாயகத்துடன் எடைபோடும் அணுகுமுறையில் வாசகருக்குப் புதியதோர் வாசலைத் திறந்து விட்டிருக்கிறார் கதாசிரியர்.
சம்பவக் கோர்வைகளால் கதைகளின் போக்கை நிர்ணயிக்காமல், உணர்வுகளின் மிகச்சிறிய இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தேழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஜீவநதி பதிப்பகத்தின் 194 ஆவது வெளியீடாகும்.
கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது.
வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - கே.எஸ்.சுதாகர் -
ஜீவநதி பதிப்பகம் வெளியீடாக வெளியான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு பற்றி , எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய குறிப்புகளிவை. - பதிவுகள்.காம்-
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
`மனைவி’ , `கணவன்’, `யன்னல்’ போன்ற கதைகளின் ஆரம்பப்பகுதிகளின் அழகிய வர்ணனைகளை மிகவும் இரசித்தேன். மனைவி சிறுகதை ஒரு தீர்க்கமான முடிவை எட்டாத போதிலும், கணவன் சிறுகதை மன நிறைவைத் தருகின்றது. மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவன், திடீரென்று மனம் மாறுவது வியப்பைத் தருகின்றது. ஆனாலும் நல்லதொரு முடிவைச் சொல்லியிருக்கின்றீர்கள்.
`மனித மூலம்’ சற்றே பொறுமையைச் சோதிக்க வைக்கின்றது. இந்தக் கதை மூலம் என்னத்தைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. `மான்ஹோல்’ அற்புதமான கதை. மூன்று அகதிகளின் சங்கமம் என்று சொல்லலாம். மான்ஹோலில் மீது குடியிருக்கும் சாமியார் அனாதைப்பிண்மாக இறக்கும் தறுவாயில், `ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. `சுண்டெலி’ சற்றே நகைச்சுவைப் பாங்கானதாகவும், வலிந்து முடிவைத் திணிக்காமல், கதையின் போக்கிலேயே முடிவை விட்டுவிடுவதும் சிறப்பு. `பொந்துப் பறவை’ சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது. தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை எடை போட முடியாது என்பதைச் சொல்கின்றது. அதுவும் அந்த `எடை போடுதல்’ தவறானது என்பதை சுயநலத்தின்பால் கதையின் நாயகன் கண்டுகொள்ளும்போது வெட்கம் கொள்வதும் காட்டப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக் ஏவுகணைத்’ தாக்குதல்! - குரு அரவிந்தன் -
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
இத்தகைய ஏவகணைகளில் அணுவாயுதம் இணைக்கப்பட்டால், தடுத்து அழிக்க முடியாத நிலை ஏற்படலாம். சென்ற டிசெம்பர் மாதம் தங்களிடம் இத்தகைய ஆயுதங்கள் இருப்பதாக ரஸ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். அது வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதைச் செய்கையிலும் காட்டி இருக்கின்றார். முதலாவது ஏவுகணைத் தாக்குதலை நம்பாதவர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் கருங்கடலில் உள்ள கப்பலில் இருந்து அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இத்தடவை உக்ரேனிய கவசவாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகின்றது. உக்ரைனின் எரிபொ