நேற்று 'டொராண்டோ'வில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட நிகழ்வு! - வ.ந.கி -

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தால் 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட 'தமிழ் இலக்கியத் தோட்டம்' கனடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை. 9 இயக்குநர்களையும், இரு போசகர்களையும் உள்ளடக்கிய இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசனிருக்கின்றார். காரியதரிசியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும், பொருளாளராக எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும் இருக்கின்றனர்.
நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள் பலரையும் காண முடிந்தது. எழுத்தாளர் முருகபூபதி பதிவுகள் இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதுபவர், அவரை இப்பொழுதுதான் முதன் முறையாகச் சந்தித்தேன். எழுத்தாளர் பாவண்ணனுடன் சில நிமிடங்களே உரையாட முடிந்தது. அவர் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கணையாழியில் எழுதிய 'குறி' சிறுகதை எனக்குப் பிடித்த சிறுகதைகளிலொன்று. அது பற்றி கணையாழிக்கு வாசகர் கடிதமொன்றும் எழுதியுள்ளேன். பதிவுகளிலும் பாவண்ணனின் 'போர்க்களம்' என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது.
நிகழ்வில் எழுத்தாளர்கள் பாவண்ணன், என்.கே.மகாலிங்கம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தம்பதியர், ராஜாஜி ராஜகோபாலன் (மணற்காடர்), குரு அரவிந்தன், அகணி சுரேஷ், கவிஞர் புகாரி, நடராஜா முரளிதரன், 'உதயன்' லோகேந்திரலிங்கம், பா.அ.ஜயகரன், கனடா மூர்த்தி, சாம்ராஜ், காலம் செல்வம், தேவகாந்தன், ஶ்ரீரஞ்சனி, சுமதி ரூபன், டானியல் ஜீவா, சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான பாலச்சந்திரன் முத்தையா, 'வெண்மேரி ' அறக்கட்டளை அநுரா , கலை இலக்கிய ஆர்வலர் முருகதாஸ், 'அகரம்தமிழ்' ஸ்தாபகர் (பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை) ஆகியோரைச் சந்திக்க முடிந்தது. நிகழ்வில் 'டொரோண்டோ'வின் வர்த்தக,கலை, இலக்கிய ஆளுமைகள் பலரைக் காண முடிந்தது.



யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை. அதன் நிறுவனர் அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக வந்தது. அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.
எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.
எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.

எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.
முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.
ஜூன் 1 1981 என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. தமிழர்களின் சர்வதேசப் புகழ்பெற்ற அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது சன நூல் நிலையம் எரிக்கப்பட்ட நாள். மனித நாகரிகத்தின் கறை படிந்த நாட்களில் ஒன்று. தனிப்பட்டரீதியில் என் பால்ய பருவத்தில் நண்பனாக, ஆசிரியனாக விளங்கிய நிறவனம் அது. நான் செல்லும் அறிவாலயங்களில் ஒன்று. வேலியே பயிரை மேய்ந்த கதையாக அன்றிருந்த த(ம்)ர்மிஷ்ட்டரின் அரசின் தூண்களாக விளங்கிய இனவெறி பிடித்த அமைச்சர்கள் சிலரின் தலைமையில் ,ஏவல் நாய்களாகப் படையினர் பாவிக்கப்பட்டு யாழ் நகர் எரிக்கப்பட்டது. யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் ,பூபாலசிங்கம் புத்தகக்கடையுட்பட, எரிக்கப்பட்டன. யாழ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.
முன்னுரை
அரசர்களின் விளையாட்டு எனக் கருதப்படும் சதுரங்கம் chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. மதியூகமும், தந்திரமும் முக்கியமானதாகக் கருதப்படும் இவ்விளையாட்டானது தற்காலங்களில் பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளங்களில் விளையாடுவதோடு, கணனிகளிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.

சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூசச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.


வரலாற்றுப் புகழ் வாய்ந்த எத்தனையோ கடிதங்கள் உலகில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன. இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திய காலிமுகத் திடல் 'அறகலய' எனப்படும் அறப்போராட்டம் நடைபெற்ற தீர்க்கமான காலகட்டம் ஒன்றில், வணக்கத்துக்குரிய அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகளாரால் எழுதப்பட்ட முப்பது கடிதங்களும் இவ்வாறே முக்கியத்துவம் பெறவேண்டியவை. 2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் 2022 .07. 16ம் திகதிவரை அவரது முகநூலில் 'அன்புள்ள ஆரியசிங்க...' எனும் தலைப்புடன் தமிழில் எழுதப்பட்ட இக் கடிதங்கள் இன்று சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் நூலுருவாகி உள்ளமை மகிழ்ச்சிகுரியது. 
என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) . கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில் பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர். முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது 'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)' என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன். அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai) விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.


1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








