வித்துவான் வேந்தனார் குழந்தைப் பாடல்கள் பற்றிய சிறுகுறிப்பு! - வேந்தனார் இளஞ்சேய் -

வேந்தனார் குழந்தைப்பாடல்கள் 38 உம், மூன்று தனித்தனி நூல்களாக , குழந்தைகளின் வயதிற்கேற்றபடி மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.இப் பாடல்கள் அனைத்தும் இசைவடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் 'நூலகம் இணையத்தளத்தில்' உள்ளன. (www.noolaham.org இல் aavanaham.org உள்ளன.)
இப்பாடல்களில் ஏழு எட்டு பாடல்கள் ,கடந்த 70 வருடங்களாக இலங்கைத் தமிழ் சிறுவர் பாடசாலை பாடப் புத்தகங்களில் வெளிவந்து கொண்டுள்ளன. ( அம்மா, பாட்டி , எங்கள் வீட்டுப்பூனை , புள்ளிக்கோழி , மயில்,கூண்டிற்கிளி, அணில் , உதவி , ஒழுக்கம் மற்றும் சில பாடல்கள்...) வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் 38 உம் , குழந்தைகள் தாமாகவே சிந்தித்து , உணர்வுடன் பாடுவதாக அமைந்துள்ளன. தூய, இனிய, எளிய தமிழில் , குழந்தைகளின் உள்ளத்தில் அன்பு , கருணை , பாசம் , பற்றுப் போன்ற உணர்வுகளை விதைக்கக் கூடியதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன.
அம்மா , பாட்டி , ஆசைமாமா, நண்பி போன்ற உறவுகளை பூனை , மயில்,கோழி , குயில்,அணில் , மான், கிளி போன்ற உயிரினங்களை பந்தடிப்போம், ஊஞ்சல் ஆடுவோம், இளநீர் குடிப்போம் , கரும்பு தின்போம் போன்ற செயற்திறன்கொண்ட பாடல்களை நிலா , மல்லிகைப் பூந்தோட்டம் , வாழை , கீரிமலை, பண்ணைப்பாலம் போன்றவற்றை உதவி , தொண்டு , கால் இழந்த ஏழை, கண்பார்வையற்ற ஏழை போன்ற , குழந்தைகள் உள்ளத்தில் கருணையை ஊட்டும் பாடல்களை நாவலர், பொன்.இராமநாதன் போன்ற பெரியார் பற்றிய பாடல்களை நாட்டில் அன்பு வேண்டும் , இளமைப்பருவம் போன்ற நாட்டுணர்வுமிக்க பாடல்களைக் கொண்டதாக , பல துறைகளையும் சார்ந்த 38 குழந்தைப் பாடல்கள் , குழந்தை மொழியாக, குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.


இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
கதை சொல்லும்போது உம் உம் கொட்ட வேண்டும்.
இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. 



முன்னுரை

( அ ) 1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.

முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.



இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.



இன்னுயிரைப் பலர் ஈந்தார்
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முருகபூபதி அவர்கள் இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். புலம்பெயர் சூழலில் இருந்து பல்துறை சார்ந்து எழுதி வருகின்றார். இவரது நூல்களின் வரிசையில் முப்பதாவது வரவாக சினிமா : பார்த்ததும் கேட்டதும் என்ற கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகபூபதி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதையும் பெற்றுள்ளார். அத்துடன் இம்மாதம் ( ஓகஸ்ட் 06 ஆம் திகதி ) பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலை ஜீவநதி தனது 274 ஆவது வெளியீடாக வரவாக்கியுள்ளது.