லண்டனில் ‘விம்பம்’ கலை இலக்கிய அமைப்பினூடாக குறும்பட விழாக்கள், ஓவியப் போட்டிகள், மலையக இலக்கியம், சமகால நாவல், சிறுகதை, கவிதை இலக்கியங்கள் குறித்த விமர்சன நிகழ்ச்சிகள் என நீண்டகாலமாக பயணித்து வருகின்றமை மிச்சிறப்பான விடயமாகும்.

விம்பத்தின் முக்கிய அமைப்பாளரான ஓவியர் கே.கே.கிருஷ்ணராஜா அவர்கள் தனது தாராள மனத்துடனும், மனித நேயத்துடனும் முன்னெடுத்துச் செல்லும் இத்தகைய பணி பெரிதும் பாராட்டுக்குரியன.

அந்த வகையில் கடந்த பத்தொன்;பதாம் திகதி லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் அமைந்த ரிறினிற்ரி மண்டபத்தில் ஒன்பது பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கை ‘விம்பம்’ ஏற்பாடு செய்திருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த நூல்களின் அறிமுகம், விமர்சன நிகழ்வு சமகால இலக்கியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்திருந்தது.

இவ்விழாவிற்கு நோர்வேயிலிருந்து கவிதா லட்சுமி, ரூபன் சிவராஜா போன்ற இளம் படைப்பாளிகள் வருகை தந்து அன்றைய நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். அத்தோடு அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை இந்நிகழ்வுக்கு மேலும் மெருகு சேர்த்திருந்தமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய தொன்றாகும்.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்ச்சிகளை அஞ்சனா சிவாகரன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

அஞ்சனா சிவாகரன் தனது தலைமை உரையில் ‘லண்டனில் ‘விம்பம்’ அமைப்பினால் தொடர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடுகள் தனக்கு இலக்கியத்தின்பால் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் பெண் ஆளுமைகளின் அறிமுக விமர்சனத்தை இந்த நிகழ்வு தேர்ந்தெடுத்திருப்பதைத் தான்; பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்’

தொடர்ந்து கறுப்பி சுமதியின் ‘உங்களில்  யாராவது முதல் கல்லை எறியட்டும்’ என்ற நூலை பூங்கோதை ஸ்ரீதரன் அவர்கள் பேசும்போது: ‘புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்வின் சமூகக் கட்டமைப்பு மாற்றமடைவதற்கான அகப்புறக் காரணிகளை கோடிட்டு காட்டுவதோடு, சரிபிழை என்பதைக் கூறி நியாயத் தீர்ப்பு சொல்வதைவிட்டு சுயபரிசோதனை செய்வதை வலியுறுத்தும் தோரணையிலும், பெண்ணியக் கருத்துக்களோடும் சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் உணர்வுப்பதிவாக அவரின் சிறுகதைகள் அமைந்திருப்பதைச்’ சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

குமாரி அவர்களின் ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ என்ற நூலை தோழர்; வேலு, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் போன்றோர் தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பேசும்போது ‘கடத்தப்பட்ட இளம் சமூகத்தினர்பற்றி ஒரு வித்தியாசமான எழுத்து நடையில் இந்நூல் அமைந்திருப்பதை எடுத்து விளம்பினார். கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள், அவர்களின் சொந்த பந்தங்களின் அவலங்களையும், தனது அனுபவத்தையும் துன்ப உணர்வுகளையும் இந்த நூலில் அசத்தலாகவே பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் மாற்றங்களையும் அழகாகச் சித்தரிப்பதையும் எடுத்துக் கூறியிருந்தார்.

தோழர் வேலு மேலும் ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகளை’ வேறு கோணங்களில் சிலாகித்து அருமையாகவே  பேசியிருந்தார். ‘இதனைச் சுருக்கப்பட்ட உரையாடல் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக்கூறிய தோழர் வேலு அவர்கள் இரு சமூகங்களுக்கிடையே நடந்த போராட்டத்தை ஒரு சிங்களக் குடும்பம் எப்படிப்புரிந்து கொள்கின்றது என்பதைப் பார்க்கமுடிகின்றது என்றார். குழந்தைப்போராளிகளின் துயரங்கள், இயற்கை அழுத்தங்கள், குழந்தைகளைக் கடத்தல் போன்ற பல்வேறு நெருடல்களை எளிமையாகச் சொல்லும் கனதியான தொகுப்பு’ என்று கூறியிருந்தார்.    

கவிதா லட்சுமியின் ‘வீட்டு எண் 38ஃ465’ என்ற நூல குறித்து  மாதவி சிவலீலன் அவர்கள் பேசும்போது: ‘அழகிய சொல்லாடல்களைக் கையாண்டு கட்டுரைகளை நகர்த்திய விதம் சிறுகதைகளை வாசிக்கும் உணர்வினை ஏற்படுத்தியதாகக் கூறியிருந்தார். அதில் அடங்கியுள்ள பன்னிரண்டு கட்டுரைகளும் ஆழமாக, நுணுக்கமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தததாகவும்’ தெரிவித்திருந்தார்.

இந்நூல் குறித்து எஸ் கஜமுகன் கருத்துத் தெரிவிக்கையில் ‘கவிதா’வின் கட்டுரைகளில் வீPட்டு எண் 38ஃ465 கட்டுரை தன்னைக் கவர்ந்ததாகவும். தேவதாசிக் குடும்பத்தின் மாற்றங்களை அதாவது முன்பு இருந்த மரபையும் தற்போதைய நிலையையும் ஆராய்ந்து எழுதிய கட்டுரையாக அமைந்திருந்தது. முன்பு சமூகத்தின் பரதநாட்டியக் கலையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்கள் தற்போது முதுமை, சமூகப்பார்வை அத்துடன் பொருளாதார வறுமைக்குத் தள்ளப்பட்டு இருப்பதையும், தற்போதைய பரநாட்டியக்கலையின் நிலையை அக்கட்டுரை அழகாக வெளிப்படுத்தியருப்பதாகக’; கூறியிருந்தார்.

கபர் என்ற நாவல் குறித்து ராதா தினேஷ் தனது கருத்தை முன்வைக்கும்போது ‘வரலாற்று உண்மைகளையும்; இரண்டு பெண்களுக்கிடையில் உள்ள மனப் போராட்டங்களையும், ஒரு மலையாள குடும்ப வாழ்க்கையில்; பெண்களுக்குரிய பண்புகளோடு அந்நாவல் விரிந்து செல்வதாகத்’ தனது உரையில் தெரிவித்திருந்தார்.

கவிதா லக்சுமி ஸ்ரீவள்ளியின் கவிதை நூல் ‘கனதியான சொற்களை கொண்டதாக அமைந்தவை என்றும், சொற்களின் தொன்மை சங்ககாலத்தின் தொடர்ச்சியாக அக்கவிதைகள் அமைந்திருப்பதை தாந் அவதானித்தமையை வெளிப்படுத்தியிருந்தார். நுண் உணர்வுகளை அகம் - புறம் என்று வகைப்படுத்தும் வகையில் அக்கவிதைகள் அமைந்திருப்பதும், பாரதியாரின் கவிதைகளில் சித்தாந்தம் தொனிப்பதையும், காலத்தை பாரதியார் மனித மனதின் ஒரு கருவி என்கின்றார். நான் என்பதை எப்போது இழக்கிறோமோ அப்போதுதான் எமக்குப் பேரின்பம் கிடைக்கும் என்ற சித்தாந்தத்தை’ தனது உரையில் தெரிவித்திருந்தார்.

எம்.என்.எம் அனஸ் அவர்கள் ஸ்ரீவள்ளியின் கவிதை பற்றிக் கூறும் போது ‘ ‘தற்போது உலக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மீட்டு, அவரின் ‘மீட்சி’ என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி மனிதநேயத்தை இழந்திருக்கும் சமூகங்களைப்பற்றி’ எடுத்துரைத்தார்.    

பூங்கோதை கலா ஸ்ரீஞ்சன் அவர்கள் ரொக்கேயா பேகம் அவர்களின் ‘சுல்தானாவின் கனவு’ என்ற வங்காள மொழிபெயர்ப்பு நூல் குறித்துக் கருத்து தெரிவிக்கையில் ‘நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ரொக்கேயா பேகம் பெண்;ணியக் கருத்துக்ளோடு அதாவது பெண் அடிமைத்தனம், பெண்கல்வி, ஆண்- பெண் சமத்துவம் பற்றிய சிந்தனைகளோடு இந்நூல் புரட்சிகரமான கருத்துக்களோடு புனைந்திருப்பது நோக்கப்பட வேண்டிய தொன்றாகும்’ என்று தெரிவித்தார்.

ஹரி ராஜலட்சுமி வி.வி.கணேஷானந்தனின் டீசழவாநசடநளள Niபாவ  இன் மொழிபெயர்ப்பு நாவலைத் ‘தனது பாணியில் அழகாக விவரித்திருந்தார். இந்நாவல் யாழ்ப்பாணத்து பெண் போராளிகள், அங்கு நடைபெற்ற வன்முறைகளை மற்றும் யாழ்ப்பாணத்து குடும்ப விழுமியங்களை ஒரு சாராம்சவாத அடிப்படையில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருத்தார். அந்நாவலில்; சிலவற்றை வாசிக்கும்போது கீழைத்தேய மனோநிலையில் சொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூபன் சிவராஜா ’ஒரு அடிமைச்சிறுமியின் லாழ்க்கை நிகழ்வுகள்’ என்ற ஹெரியட் ஜேகப்ஸின் சுயசரிதை நூலை விவரிக்கும்போது ‘150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூலின் பெறுமதியை இலக்கியத்துக்குரிய தகமைகளுடன் எழுதப்பட்ட உணர்வு பூர்வமான நூல் எனக் குறிப்பிட்டார். பெண்ணியப் போராட்டத்துக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, மிக மோசமான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் காலகட்டங்களைக்கூறும் சிறந்த ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்றும்’ குறிப்பிட்டிருந்தார்.

நிர்மலா ராஜசிங்கம் இச் சுயசரிதை நூல் குறித்துத் தொடர்ந்துப்  பேசுகையில்: ’சமரசமற்ற உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட இச்சுயசரிதை வாசகனைப் பின்னிப் பிணைத்துவிடுகின்றது. அன்றைய கறுப்பின மக்களின் கொடூரமான வாழ்க்கை நிலைப்பாட்டை விபரித்த அவர், கறுப்பின மனிதர்கள் பண்டமாக விற்கப்பட்டதை மனித நேயம் ததும்ப விபரித்தார். வெள்ளை இனத்தின் மனதைத் தட்டி எழுப்பக்கூடிய வகையில் இச்சுயசரிதை அமைந்திருப்பதையும், அவ்வேளை கிறிஸ்த்தவ மதம் அடிமை முறையை நியாயப்படுத்தும் முறையில் செயற்பட்டதையும் சுட்டிக்காட்டிப்’ பேசியிருந்தார்.

மார்புப் புற்றுநோய் குறித்து பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ‘புற்றிலிருந்து உயிர்த்தல்’ என்ற சாலை செல்வம் அவர்களின் நூலை நிரோஜினி றமணன் அவர்கள் நுணுக்கமாக விபரித்திருந்தார்.

நோர்வேயிலிருந்து வருகை தந்த படைப்பாளிகளின் நேரடி நேர்காணல்கள் இடம்பெற்தோடு, ‘கவிதையின் அசைவு’ என்ற கவிதா லட்சுமியின் அழகான சிறப்பு நாட்டிய நிகழ்வோடும், சுiவாயன உணவோடும் அன்றைய பொழுதை இனிமையாக ரசித்தோம் என்றால் அது மிகையாகாது.

திரு..சாந்;தன் அவர்கள் படப்பிடிப்புகளை அவதானத்துடன் மேற்கொண்டிருந்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here