- Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள் -

பத்மநாதன் மாணவர்களுக்குத் தனிப்பட்ட ரியூசன் கொடுக்கும் அந்த அறையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. மகாஜனாக் கல்லூரியில் படிக்கும்போது அறிந்திருந்த டொக்டர் லிமல், கவிஞர் இளவாலை விஜேந்திரன் ஆகியோருடன், 9c Osloஒ  குறும்திரைப்பட இயக்குநர் மற்றும் அந்தப் படங்களில் நடித்திருந்த சிலரையும்,  முகநூல்  மூலம் அறிந்த சஞ்சயன் செல்வமாணிக்கத்தையும் அங்கு சந்தித்துப் பேசமுடிந்தது.  அவர்கள் எவருடனும் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதபோதிலும் பத்மநாதனுக்காக அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

நடு’ கோமகன் மூலம் என்னைப் பற்றி அறிந்திருந்ததாகச் சஞ்சயன் குறிப்பிட்டார், சஞ்சயனின்  முகநூற் பதிவுகள் சுவாரஸ்யமானவையாக இருப்பதால் நானே அவரை என் முகநூல்  நண்பராகச் சேர்த்திருந்தேன். விஜித்தா என்பவரின் புற்றுநோய்க்கூடான வாழ்வு தொடர்பான அனுபவங்களை அவரது எழுத்துக்கூடாகச் சொல்லும் ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ என்ற நூலையும், தன் அம்மாவின் மறதி நோய் பற்றிக் கூறும் ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலையும் அவர் தந்திருந்தார். விஜித்தாவின் முன்னுரை மனதைக் கலங்கவைப்பதாக இருந்தது. அவவின் அனுபவங்களை இலகுவான தமிழில் சஞ்சயன் அழகாக எழுதியுள்ளார். முன்னுரிமை எதற்குக் கொடுப்பது என்ற புரிதல் இல்லாத, நோய் பற்றிய அடிப்படை விளக்கமற்றவர்களுக்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது என்பதை என் வாசிப்பு எனக்குப் புரியவைத்தது. (விஜித்தா ரதியின் உறவினராம் என அறிந்தபோது உலகம் சிறியதுதான் எனத் தோன்றியது). மறதிநோய் தொடர்பான யதார்த்தங்களை அம்மாவுடனான பாசத்துடன் கலந்து, ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலைச் சஞ்சயன் படைத்திருக்கிறார். இவை அவரின் முகநூலிலும் ஏற்கனவே பதியப்பட்டிருந்தன.

வன்முறைகளின் குரூரத்தை, அதன் வலியை, அது உருவாக்கும் உணர்வலைகளை இயல்பாகப் பேசுவதுடன், மனிதத்தின் அவசியத்தையும் உணர்த்தும், ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது’ என்ற அவரது கவிதை நூலை இளவாலை விஜேந்திரன், தந்திருந்தார். பின்னர் எழுத்தாளர் நவமகனின் ‘போக்காளி’ என்ற நூலும் பத்மநாதன் ஊடாக எனக்குக் கிடைத்திருந்தது. என் நூல்களை நானாக கொடுப்பதில் எனக்குத் தயக்கமிருப்பதால் அவற்றை நான் எடுத்துச் சென்றிருக்கவில்லை. பின்னர் பத்மநாதனுக்கு ஒன்றைக் கொடுக்கும்படி ரதியிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன்.

போக்காளி’ அளவில் பெரிய புத்தகமாக இருந்தாலும், இலகுவாகவும் விரைவாகவும் வாசிக்க உதவும்வகையில் அதன் மொழி நடை, எழுத்துக்களின் அளவு, சொற்களுக்கு இடையேயான இடைவெளி என்பன இருந்தன. போரின் துயரங்கள், வாழ்க்கையில் எதிர்கொண்ட அலைச்சல்கள், புலம்பெயர்வின்போதான அவலங்கள், புலம்பெயர் வாழ்வின் போராட்டங்கள், வேறுபட்ட கலாசாரத்தில் வாழும் பிள்ளைகளுடான முரண்கள் என அனைத்தையும் இது தொட்டுச் செல்கிறது. சினிமாப் பாடல்கள், பழமொழிகள் என்பவற்றுடன் கலந்து, 1988 முதல் 2019 வரையிலான எங்களின் வரலாற்றையும் புலம்பெயர் வாழ்வையும் கூறும் இது, சில பிற்போக்கான விடயங்களையும் கருத்துக்களையும் காவி நின்றாலும்கூட, வரலாற்றினைக் கூறுமொரு சிறந்ததொரு நூலாக இருக்கிறது. இருப்பினும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் ஒன்றும்விடாமல் சொல்ல முயற்சித்திருப்பதும், அவை தெரிந்தவிடயங்களாக இருப்பதும் சிலவேளைகளில் வாசிப்பை சுவாரஸ்சிமற்றதாக்கியது என்பதும் உண்மையே.

9c Oslo என்ற குறும்படத்தின் இயக்குநர் அதனை யூ ரியூப்பில் பார்க்கலாமெனச் சொன்னபடி இங்கு வந்ததும் அதைப் பார்த்தேன். பேய்கள் பற்றிய கதையாக இருந்தபடியால் அது என்னைக் கவரவில்லை, ஆனால் அவர்களின் சிற்பி என்ற பெண்ணியச் சிந்தனை கொண்ட குறும்படம் பாராட்டுக்குரியவகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. நாடகப் பாணியில் இல்லாமலிருந்தால், அது மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இப்படியாக இந்தச் சந்திப்பு இலக்கியத்துடன் தொடர்பானதாகவும் அமைந்திருந்தில் மகிழ்ச்சியாக இருந்தது.

பத்மநாதன் அங்கேயே வைத்துக் கரட் ஜூஸ் தயாரித்து, அதைப் பீசாவுடன் பரிமாறினார். கரட் ஜூஸ் சுவையாக இருந்தது, அது ஆரோக்கியத்துக்கும் நல்லதென்பதால், நானும் அப்படிச் செய்ய வேண்டுமென நினைத்தேன், ஆனால் இதுவரை செய்யவில்லை. பின்னர் விஜேந்திரன் மாமாவின் மகனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார். அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர், அவர்களுடன் பழைய கதைகளை மீட்டிவிட்டு நள்ளிரவில் படுக்கச்சென்றோம்.

                    -  Vøyenfallene நீர்வீழ்ச்சி -

அடுத்த நாள் காலையில் பேராசிரியர் ரகுபதியைச் சந்திப்பதாக இருந்தது. நாள்முழுவதும் அவரை எங்களுடன் அலையவிடக்கூடாது என நினைத்ததால், Vøyenfallene நீர்வீழ்ச்சி, Opera house, Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள், நூலகம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு மதியவுணவின் பின்னர் அவரைச் சந்தித்தோம்.

கற்காலத்தின்போது, கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்டிருந்த சித்திரங்களைக் காட்டுவதற்காக Ekebergக்கு எங்களை அவர் கூட்டிச்சென்றார். அங்கிருந்த 13 சிற்பங்களில், பத்து மான் போன்ற சில விலங்குகளையும், ஒன்று ஒரு நபரையும், இன்னொன்று பொறி ஒன்றையும், மற்றது பறவை ஒன்றையும் காட்டின. Ekebergஇன் உயர்வான பகுதியொன்றில் செதுக்கப்பட்டிருக்கும் இந்த அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் petroglyphs எனப்படுகின்றன. பெரும்பாலும் கிழக்கு திசையை நோக்கியவையாகவும் ஓடும் நீருக்கு அருகிலும் காணப்படும் இவை மனிதர்கள் மற்றும் கடவுள்களைப் பற்றிய எங்களின் முன்னோர்களின் பதிவுகள் என்று கருதப்படுகின்றன.

                         - Sculpture Park சிலையொன்று -

பின்னர் அதனருகிலிருந்த Sculpture Parkஐயும் பார்த்தோம். அங்கும் அழகான சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்கள் மிக உயரமான இடத்திலிருப்பதால் அங்கிருந்து முழுமையான ஒஸ்லோவைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

விமானத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் அங்கிருந்து அவசரமாக வெளிக்கிட வேண்டியிருந்தது. மீளவும் போகவேண்டிய ஓர் இடமென்றால் அது ஒஸ்லோதான், மீதி மியூசியங்களையும் பார்க்கவேண்டுமெனச் சங்கி சொல்லிக்கொண்டா.

ஐரோப்பாதான் Chocolatesக்குப் புகழ்பெற்ற இடமென்றார்கள், எனவே தாரளமாக அவற்றையும் வாங்கிக்கொண்டு ஶ்ரீகரனின் காரில் விமான நிலையத்தை அடைந்தோம்.

தெல்லிப்பழையில் எங்களின் எதிர்வீட்டுக்காரரான விமலைச் சந்திப்பதற்காக, எங்களின் பயணத்தை Copenhagen ஊடாக அமைந்திருந்தோம். தெல்லிப்பழை உப தபால் அலுவலகத்துக்கு அருகிலிருந்த ஒழுங்கையான நீலாவத்தையில் வாழ்ந்த நாங்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒன்றாக அங்கு சந்திக்கவேண்டுமென messenger ஊடாகக் கதைக்கும் போதெல்லாம் அவர் சொல்வார். அந்த அழகான கனவு, நனவானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கற்பனை செய்வதைத் தவிர வேறு எதைத்தான் செய்யமுடியும்?

எனவே, Copenhagenஇலாவது அவரைச் சந்திக்கலாமென்ற எண்ணத்தை அவர் வரவேற்றிருந்ததுடன், விமானநிலையத்துக்கு வந்து தன் வீட்டுக்கு எங்களை அழைத்துச் செல்வேன் என உடனேயே உத்தரவாதமும் தந்திருந்தார். ஆனால் அவர் வாழுமிடத்தை அறிந்ததும் அவ்வளவு தூரத்திலிருந்து அவரை வரச்சொல்வது சரியல்ல எனச் சங்கி தயங்கினா. ஆனால் அவரோ அதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

அப்படியே இரண்டாவது மகன் கார்த்திகனுடன் விமானநிலையத்துக்கு முன்கூட்டியே வந்து எங்களுக்காகக் காவலிருந்தார். அப்போதுதான் அவரால் கார் ஓட்டமுடியாது என்பது தெரியவந்தது. அவரின் 23 வயது மகன் அப்பாவை விஞ்சிய விதத்தில் ஏனையோருக்கு மிகவும் அனுசரணையாக இருப்பதை அந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் (Great Belt Bridge over Great Belt Strait) அறியமுடிந்தது. நீர்நிலையின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீண்ட பாலம், கடற்கரை, சூரிய அஸ்தமனம் என அவர்களின் வீட்டுச் சூழலில் பார்க்கக்கூடிய இடங்களுக்கும் அவர் எங்களைக் கூட்டிச்சென்றார்.

விமலின் மனைவி காஞ்சனாவையும் அங்குதான் முதன்முதலாகச் சந்தித்திருந்தோம், இருப்பினும் நீண்ட நாள்கள் பழகியவர்போல அவர் நடந்துகொண்டார். வீட்டில்வைத்து எங்களை உபசரித்ததுமல்லாமல் அன்பளிப்புகளையும் தந்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். எங்களுக்கு Danish Pastry பிடிக்குமென்பதை அறிந்த அவர்கள் அதை நாங்கள் இரு தடவைகளாவது சாப்பிடுவதையும் உறுதிசெய்து கொண்டனர்.

அவர்கள் வீட்டின் பின்வளவில் இருந்த Walnut மரமும், அதில் காய்த்திருந்த பழங்களும், முன் வளவிலிருந்த முள்கள் எதுவுமற்ற ரோஜாச் செடியில் மலர்ந்திருந்த பெரிய ரோஜாப் பூக்களும் மிகுந்த பிரமிப்பைத் தந்தன. சென்ற வருட  walnutகளையும் அவர்கள் அன்பளிப்பாகத் தந்தனர். அடுத்தநாள் அவர்களின் மூன்றாவது மகன் விக்னேஸ் பெற்றோருடன் எங்களை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

81ஆம் ஆண்டிலேயே தெல்லிப்பழையை விட்டு நான் நீங்கிவிட்டதால் அந்த நேரம் சிறுவனான இருந்த விமலுடனும் அதிகம் பேசியதில்லை. ஆனால், இந்தப் பயணம் அவரையும் அவரின் குடும்பத்தினரையும் அறியவும், மனம்விட்டுப் பேசவும் வழிவகுத்த இனிய பயணமாக நோர்வேப் பயணம் அமைந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

 முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here