இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா ( 1988 – 2021 )! மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்! - முருகபூபதி -

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது. நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

அவன் கன்னங்கள் இரண்டிலும் வழிந்த கண்ணீர் உதட்டில் விழுந்து உப்பு கரித்த போதுதான் அது கண்ணீர் என்பதை, உணர்ந்தான் ஏகாம்பரம்.
தாயகம் (கனடா) பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! பின்னர் அச்சிறுகதை இந்தியாவில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும் பனையும்' புலம்பெயர் தமிழர் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியானது. அச்சிறுகதையை குறுநாடகமாக்கியுள்ளேன். அதனையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். - வ.ந.கி 
பதினெண் மேற்கணக்குநூல்களில் இடம் பெற்ற பத்துப்பாட்டில், பத்தாவதாய் இடம்பெற்ற நூல் மலைபடுகடாம் ஆகும். இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார், கல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்சூவன் நன்னன் சேய் நன்னனைப் பாடிய ஆற்றுப்படைநூலாகும். கூத்தரை ஆற்றுப்படுத்திப் பாடியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெறும்.
அதிர்ச்சி…. ஆச்சரியம்…. குழப்பம்….. சந்தேகம்….. எல்லாமே என்னிடம் சமத்துவம் புரிந்தன.
"இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிபட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற வாயு புத்திரர் அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலையை இலங்கைக்கு வான் மார்க்கமாக எடுத்துச் சென்றார்......"
பொருள் ஒன்றின் பயன்பாடு அல்லது பழக்கப்பட்டுப்போன நடத்தை ஒன்று எங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பது தெரிந்தாலும்கூட, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை அல்லது குறித்த நடத்தையில் ஈடுபடுவதை எங்களால் நிறுத்தமுடியாமல் இருக்கிறதெனில், அந்தப் பொருள்/நடத்தை எங்களைக் கட்டுப்படுத்துகிறது எனலாம், இல்லையா? இதுவே அடிமையாதல் (addiction) எனப்படுகின்றது.
“நேத்தே வருவியளெண்டு பாத்துக்கொண்டு இருந்தம்.” என தயாநிதி சொன்னதற்கு தனபாலன் சலிப்போடு சொன்னான்: “நேற்றே வெளிக்கிட்டிட்டன். வரேலாமப்போச்சு. ஒரு பக்கம் சன நெரிசல். சாமான் ஏத்தின மாட்டு வண்டிலுகள் ஒரு பக்கம். ட்ராக்ரர் லாண்ட் றோவருகள் இன்னொரு பக்கம். காருகள் வானுகளெண்டு அதுகள் வேற. வன்னியில உவ்வளவு வாகனங்கள் நிக்கிறது நேற்று ராத்திரித்தான் தெரிஞ்சுது எனக்கு. அதுக்குள்ள பாதையெல்லாம் வெள்ளமும் சேறுமாய்க் கிடக்கு. பிரமந்தனாறு மேவிப் பாயுது ஒரு பக்கத்தால. அதுக்குள்ள மாட்டுப்பட்டு அரக்க ஏலாமல் நிண்டுகொண்டிருக்கு வாகனமெல்லாம். கண்டாவளை, தறுமபுரம், விசுவமடு எங்கயும் வெள்ளம்தான். வெள்ளம் வீடுகளுக்குள்ள ஏறி நிக்குது. இப்ப வந்ததே கடவுள் புண்ணியத்திலதான்.”
நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
புனைவிலக்கிய எழுத்தும், ரசனைகளும் இன்றைய இலக்கிய உலகின் முக்கிய பேசுபொருள். புனைவின் கலைத்தளமும் அதன் புரிதலும் வாசகரின் ரசனைக்குரியது மட்டுமன்றி வேறுபடக் கூடியதுமாகும். இதனால் சிறுகதைகள், நாவல் முதலான கலைப் படைப்புகள் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பானது. இலத்திரனியல் சாதனங்களும், சமூக ஊடகங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில் யாதும் ஊரே என்பது போல், எல்லோரும் எழுத்தாளர்களே. அனைவரும் மனங்கவரும் வண்ணமோ புலன்களில் பதியும் வண்ணமோ எழுதுவதில்லை என்பது உண்மைதான். எனினும் இதுதான் இலக்கியத்தின் இலக்கு என்ற முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள் யார்...?, எனும் வினா வாசகர் மனதில் உருவாவது இயல்பானதே. எனது மனதிலும் அவ்வினா உண்டு. இவ்வினாவுக்கு மூலகாரணமாக அமைந்தவர், இன்றைய தமிழ்இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள். அவரது இணையத்தளத்தில் சமீபகாலத்தில் வெளியான வாசகர் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக கீழ்வரும் கருத்துகள் கூறப்பட்டிருந்தன. கேள்விகள் அவரது இலக்கிய ரசனை பற்றியதும், எழுத்தாளர் முத்துலிங்கத்தின் புனைகதைகளின் ரசனை பற்றியவையும் ஆகும்.
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
பாடகி கல்யாணி மேனன் தனது எண்பதாவது வயதில் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஒரு கர்நாடகப் பாடகர். திரைப்படங்களிலும் பாடியுள்ளார். குறைந்த அளவிலேயே இவர் திரைப்படங்களில் பாடியுள்ளபோதும் ,இவர் பாடிய பாடல்களில் பல நெஞ்சில் நிலைத்து நிற்பவை. குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் எழுத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் , பாடகர் ஜெயச்சந்திரனுடன் பாடிய 'நீ வருவாய் என நான் இருந்தேன்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. நான் நினைக்கின்றேன் அந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் மெல்லிசை மன்னருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றாரென்று.


மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள். 
பாரி 1932-இல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை ஆராய்ந்த பாரிக்கு அவற்றில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஐயம். இந்த ஐயத்தைத் தீர்க்கும் முகமாக அமைந்ததே வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடாகும். இந்த ஐயத்தினைத் தெளிவுப்படுத்தும் முகமாக, பாரி யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணிச் செய்து வாய்மொழிக் காப்பிய பாடல்களைச் சேகரிக்கிறார். அவரது மாணக்கர் லார்டு தொடர்ந்து களப்பணிச் செய்து ஆய்வை முடிக்கின்றார். இவ்விருவரும் உருவாக்கிய ‘கோட்பாடு’ என்ற அடிப்படையில் ‘பாரி–லார்டு கோட்பாடு’ என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தக் கோட்பாட்டில் வாய்பாடு என்பது மையமாக அமைகிறது. இது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

நீர்கொழும்பு கடற்கரையோரம்.
கப்பிட்டல் மகாராஜா குறூப் நிறுவுனர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மரணச் செய்தி ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தாலும், 1980 களில் என் நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது. அற்புதமான சிந்தனையாளர், எத்தனையோ போட்டிகள், பொறாமைகளுக்கு மத்தியில் மகாராஜா நிறுவனத்தைத் திறம்படக் கொண்டு நடத்தியவர். தமிழரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரின் திறமைக்கும் முதலிடம் கொடுத்து, ஒரு குடும்பமாகத் தன்னிடம் பணிபுரிந்த எல்லோரோடும் அன்பாகப் பழகியவர். சுருங்கச் சொன்னால் தமிழரைத் துணிச்சலோடு ‘எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல’ என்று இலங்கையின் தலைநகராம் கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கவைத்தவர். அவரது திடீர் இழப்பு எமக்கு, எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









