படிக்கக் கிடைத்த இருபெரும் கவிஞர்களைப் பற்றிப் பார்க்கக் கிடைத்த இரண்டு ஆவணப்படங்கள்! - லதா ராமகிருஷ்ணன் -
கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் - நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை (Yellow Cat in Memory Lane)| ஆவணப்பட இயக்குநர்: திரு. T.பாண்டியராஜு (T Pandiaraju) - https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY
கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம் - கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் ; இயக்குநர் : திரு ‘நிழல்’ திருநாவுக்கரசு; தயாரிப்பு: குவிகம் இலக்கிய வாசல் - https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமா கிறது? முக்கியத்துவம் பெறுகிறது? ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்க மும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண் டியது அவசியமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேச வேண் டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேச வேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர் கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?