பதிவுகளில் அன்று: தான்யாவின் கட்டுரை தொடர்பான எதிர்வினைகளின் தொகுப்பு!

- பதிவுகளில் (ஜூன் 2004 ) தான்யா கவிஞர் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்னும் தொகுப்பை விமர்சித்துக் கட்டுரையொன்றை 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து... ' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். இது பெரியதொரு விவாதத்தைக் கிளப்பியது. விவாதத்தில் சூடு பறந்தது. விவாதத்தில் செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) , எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் , எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன், எழுத்தாளர் அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம், எழுத்தாளர் நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோர் பங்குபற்றினர். தானியாவின் கட்டுரைக்கான எதிர்வினைகளின் தொகுப்பிது. -
தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்! - செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) -
'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்' எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
'
அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே 'பெண்' சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பிரிவு இணைப்பாளர் சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று 'பெண்' வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் 'பெண்' சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2 ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்துள்ளார் அன்றி 'பெண்' சஞ்சிகை என்பது பேராசிரியர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
சித்ரலேகா அவர்கள் 'சொல்லாத சேதிகள்', 'சிவரமணி கவிதைகள்' ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார். 'சொல்லாத சேதிகள்' கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. வையகத்தை வெற்றி கொள்ள என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. பறத்தல் அதன் சுதந்திரத்தில் சன்மார்க்காவின் பெயரில் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு ' பறத்தல் அதன் சுதந்திரத்தின்' ஆசிரியர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.

பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72 
விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவே இருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலா தேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.

கொடை வள்ளல் கர்ணனிற்கு, கொடுப்பது மட்டுமல்ல குணம். கொடுக்கையிலும் மற்றவர் நிலையுணர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவன் கர்ணன். நாம் நண்பர்களுக்கோ, அறிந்தவர்களுக்கோ, உதவி புரிதல் மட்டும் முக்கியமல்ல. ஒருவரிற்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த போது , அவரதனை நம்மிடம் கேளாமல் இருக்கையிலேயே, அவரின் நிலையுணர்ந்து, அவரிற்கு எம்மால் முடிந்த வகையில் உதவுதலே உண்மை நட்பாகவும். அதுவே வள்ளுவரின் குறளான உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788) என்ற குறளுக்கு முன்னுதாரணமாகும்.

35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது.
“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற மானுக்குப் பினஂனால் ஓட கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை பொய் ' என விளக்க முற்பட்டார் . " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல விசயங்கள் தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த , மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது போல கூறுகிறது .









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









