ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “கனடாவில் தமிழ் மரபுக் கவிதைகள் - உள்ளடக்கங்களும் உணர்த்துமுறைகளும்”
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268


காலச் சுழற்சிக்குள் ஊரில் வாழ்ந்து, அனுபவித்து மகிழ்ந்தவையெல்லாம் இப்போது ஞாபக முடிச்சுக்களாகவே மனசுக்குள் பின்னிக் கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விடுதலையாக்குதல் என்பதும் ஒருவித சுகம்தான்! அதிலொன்றுதான் அன்று நாம் எழுதிய கடிதங்கள்.
பிறந்த மண்ணையும், ஊர் கூடி மகிழ்ந்த வாழ்வையும் தொலைத்துவிட்டு, பெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் பிரிந்து முன்பின் தெரியாத வெளிநாட்டுக்கு வந்த நம்மினத்தின் முதல் எதிர்பார்ப்பு என்றால் என்ன தெரியுமா? ஊரிலிருந்து ஒரு கடிதம் வராதா, அப்பாவோ, அம்மாவோ, சகோதரங்களோ, சொந்தங்களோ எல்லோரும் என்ன பாடோ? ஒவ்வொருநாளும் கடிதத்திற்காகக் காத்திருந்து, ஏமாந்த நாட்களைவிட, மாதங்களே அதிகம். என்றோ ஒருநாள் வீட்டிலிருந்து கடிதம் வந்துவிட்டால், என் மனசு துள்ளிக்குதித்துக் கொண்டாடும்.
கடிதங்கள் என்றதும், கற்றுவந்த கல்லூரிகள்தான் எல்லோர்க்கும் நினைவு வரும். கடிதம் எழுதுவது என்பதிலும்கூட பயிற்சியெடுத்து, அதிலும் தாராளமாய்ப் பிழைகள் விட்டு, ஆசிரியர்களிடம் அடிவாங்கியவர்களும் உண்டு ."இந்த இடத்தில ஏன் காற்புள்ளி போடேல்ல, இங்கே முற்றுப்புள்ளியை மறந்திட்டாய். ஒன்றை மற்றவர் சொன்னமாதிரி எழுதிவிட்டு, அதற்கு ஏன் மேற்கோள் குறிகள் போடேல்ல, அது என்ன உன்ர வீட்டு ஆடு, மாடே சொன்னது? கடிதத்தில ஆச்சரியமா! லட்சுமி குட்டிகள் போட்டதில ஒரு குட்டி செத்துப்போய்ச்சு என்று கவலையா, அதுவும் வடிவா எழுதிப்போட்டு அந்த வசனத்தை முடிக்கேக்க ஆச்சரியக்குறியை போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும். அதையும் மறந்திட்டியா, இல்லை நான் படிப்பிக்கேக்க நீ கிரகிக்கேல்லயா" என்று அதுக்கும் சேர்த்து ஒரு அடி விழும். கடிதமோ, கதையோ, கட்டுரையோ என்று எல்லாவற்றையும் எப்படி ஒழுங்காக, உறுப்பெழுத்தாக எழுதுவதென்று பயின்று, கற்றுத்தேர்ந்து வந்த எமக்கு இன்று எம்மொழியிலேயே பிழையின்றி எழுதுவதென்பது கல்லில் நாருரிப்பதுபோல!
' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' (V.N.Giritharan Songs & Views) என்னும் 'யு டியூப் சான'லில் செயற்கை அறிவின் (AI) துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பல்வேறு விடயங்களைப் பற்றிய என் பார்வைகளையும் கேட்டறிந்து கொள்ளலாம். அவ்வப்போது காப்புரிமைப் பிரச்சனை அற்ற , எனக்குப் பிடித்த மகாகவி பாரதியார் போன்றோரின் கவிதைகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்து, பாட வைத்துப் பகிர்ந்து கொள்வேன். பாடல்களும், பார்வைகளும் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வரலாறு தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் தருணங்களில், மொழி தனது வழக்கமான அழகியலை இழந்து ஒரு 'சாட்சியமாக' (Witness) மாறுகிறது. "பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது” (When the School Bell Fell from the Sky) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஒரு மீ-கவித்துவப் புலம்பல் (Meta-Poetic Lament). இங்கே 'பள்ளி மணி' என்பது காலத்தின் அறிவிப்பு. அது வானத்திலிருந்து விழும்போது, ஒரு தலைமுறையின் எதிர்காலம் புவிமட்டமாக்கப்படுகிறது. இந்தக் கவிதைகளில் தாய்மார்களின் துயரம் ஒரு தனிநபர் உணர்வல்ல; அது மனித நாகரிகத்தின் தோல்வியைக் காட்டும் ஒரு கண்ணாடி. நவீனத்துவக் கவிதையின் சுருக்கமும், மௌனத்தின் அடர்த்தியும் இதில் இழையோடுகின்றன. ஒரு பள்ளி அழிக்கப்படும்போது, அங்கே ஒரு கட்டிடம் வீழ்வதில்லை; மனிதகுலம் தன்னைக் குறித்து வைத்திருந்த 'நம்பிக்கை' எனும் விதை கருகிப் போகிறது. இநப் பிரதி அந்த இழப்பின் உண்மையை மறதிக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரு தார்மீகச் செயல்.
வரலாறு தடம் புரளும் தருணங்களில், மொழி ஒரு 'நெறியியல் ஆயுதமாக' (Ethical Tool) மாறுகிறது. "பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது" என்பது அந்த மாற்றத்தின் சாட்சி. ஒரு பள்ளி மணி வீழ்வதிலிருந்து தொடங்கும் இந்தக் காவியம், இடிபாடுகளுக்குள் சிதறிக் கிடக்கும் கனவுகளைச் சேகரிக்கிறது. இங்கே தாய்மார்களின் துயரம் கண்ணியமானது; அவர்களின் மௌனம் அதிகாரத்தை அச்சுறுத்துவது. ஒரு நாகரிகத்தின் தகுதி, அது தனது குழந்தைகளை எப்படிக் காக்கிறது என்பதில் இல்லை; அவர்களை எப்படி நினைவுகூருகிறது என்பதில்தான் உள்ளது.
பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது WHEN THE SCHOOL BELL FELL FROM THE SKY (A High-Modernist Meta-Poetry Sequence) - ஈழக்கவி -
Epigraph:
ஈரானின் மினாப் நகர பாடசாலை மீதான தாக்குதல் என்பது
வெறும் போர் விதிமீறல் அல்ல;
அது எதிர்காலத்தின் மீதான
அமெரிக்க – இஸ்ரேலிய குரூரர்களின் திட்டமிட்ட படுகொலை.
I. தடையுற்ற காலை (The Interrupted Morning)
காலை –
ஜன்னல் வழியே நுழையக் காத்திருந்த
ஒரு மென்மையான கவிதை.
ஆனால்,
வானம் 'இரும்பு' கொண்டு
ஒரு தீர்ப்பை எழுதியது.
அந்த ஒரு வாக்கியம்,
ஒரு தலைமுறையின்
குரல்வளையைத் துண்டித்து,
நிசப்தத்தை நிலவச் செய்தது.
கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முன்னுரை
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
வெறியாட்டு
வேலன் என்பவன் முருகனுக்கு வெறியாட்டு நடத்திய மரபினன். இவர்கள் இன்றும் கேரளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதை, வேலன் வழிபாட்டு மரபினராக விளங்கும் வேலன் சாதியினர் இன்று கேரளத்தில் தான் உள்ளனர். (தமிழகப் பழங்குடிகள், ப.19) என்ற பக்தவத்சல பாரதியின் கூற்றுவழி அறிய முடிகின்றது.
சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை.
இவர் சிறந்த நாட்டுக் கூத்துக்கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயற்பட்டவர் அத்துடன் விருதுகள் பலவற்றையும் பெற்றவர். இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
ஈரான் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் இவை!
சதாம் ஹுசைன் வீழ்ச்சி: ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, அமெரிக்கா மிக விரைவாக அவரது இராணுவத் தலைமையையும், கட்டளை மையங்களையும் தாக்கியது. ஒரு சில வாரங்களிலேயே ஈராக்கின் பாரம்பரிய இராணுவம் சிதைந்து, சதாம் பதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வு, ஒரு வலிமையான ஆனால் மையப்படுத்தப்பட்ட இராணுவ அமைப்பு, தலைமை மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது எவ்வளவு எளிதாகக் கவிழும் என்பதற்கான ஒரு நேரடி உதாரணமாக ஈரானுக்கு அமைந்தது.
முகமது கடாஃபி மரணம்: லிபியாவில் கடாஃபி கொல்லப்பட்டபோது, அங்கும் மேற்கத்திய படைகள் அவரது கட்டளை அமைப்புகளைத் தகர்த்து, அவரது தலைமையை குறிவைத்தன. ஒரு தனிநபரின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய லிபிய அரசு, அந்தத் தலைவர் அகற்றப்பட்டவுடன் எந்தவித ஒருங்கிணைப்பும் இன்றி சிதறியது.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
பாடலைக் கேட்டுக் களிக்க
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பெரும்பாலும் கவிஞனாகவே அறியப்பட்ட பாரதி, பெருமளவு எழுதியது என்னவோ கட்டுரைகளே. அதிலும் 1905-1907 காலப்பகுதியில் அவனது கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியல் கட்டுரைகள் என வரையறுக்கப்படலாம். இன்னும் சில சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றும் கூறப்படலாம்.
1905 முதல், அவன் தமிழ் நாட்டை விட்டு அகன்று, (1907 ஆகஸ்ட் நடுப்பகுதியில்), புதுவையில் அடைக்கலம் புகும் வரை கிட்டத்தட்ட 454 விடயங்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதியுள்ளான். 1904இல் எழுதப்பட்ட அவனது ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதையும் சேர்த்து கூட்டி பார்த்தாலும் ஜுலை 1907 வரை அவன் எழுதிய கவிதைகளின் மொத்த எண்ணிக்கை 28 அல்லது 29 ஐ தாண்டாது.
ஆக, மிகுதி 415உம் கட்டுரைகளாகவே தேறும்.
ஸி.எஸ்.சுப்ரமணியம் எழுதுவார்:
“1906 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரசில் இருந்து திரும்பி வந்தவுடன் பாரதி தீவிர அரசியலில் ஈடுபட்டான்”
(பாரதி தரிசனம்: 2ம் பாகம்: பக்கம் XV)
இருக்கலாம். பாரதி, அரசியல் தளத்திலேயே இயங்கிய ஒருவன். அவ்வப்போது இலக்கிய சோலையினுள் தரித்து நின்று கவிதைகள் ஆற்ற முனைந்தான் என்பதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இப்படி கூறுவதற்கூடு, அவனது கவிதைகளை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாகாது. கவிதைகளில், சிலர் கூற முனைவது போல, வாழ்வை சாறு பிழிந்து கொடுக்க முற்பட்டான் என கூறலாம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

நந்தா, போரின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு பீனிக்ஸ் பறவை. குண்டுச் சத்தங்கள் காதுகளில் ரீங்காரமிட, இரத்த வாடை நாசியில் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த தேசத்தை விட்டு வெளியேறினாள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கணவனையும், நினைவுகள் உறங்கும் வீட்டையும் விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ஒரு ஐரோப்பிய தேசத்தில் வந்திறங்கினாள்.
அது ஒரு நீண்ட பயணம். உறங்காத இரவுகள், புரியாத மொழி பேசும் அதிகாரிகள், முடிவில்லாத விசாரணைகள் என அத்தனைத் தடைகளையும் கடந்து, இறுதியில் அவளுக்கு அகதித் தஞ்சம் கிடைத்தது. அது அவளுக்கு ஒரு புதிய மூச்சு; தன் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான குடை போன்ற வானம்.
காலம் நகர்ந்தது. ஒரு நாள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்த அவளது கணவன் பிணையில் விடுவிக்கப்பட்டான் என்ற செய்தி காற்றோடு வந்தது. நந்தாவின் சோர்வுற்ற கண்களில் நம்பிக்கை மீண்டும் சுடர்விட்டு எரிந்தது. "குடும்பம் ஒன்று சேர வேண்டும்" என்ற ஆசையோடு, கணவனைத் தன்னுடனும் குழந்தைகளுடனும் இணைக்க விண்ணப்பித்தாள்.
ஆனால், விதி அங்கேதான் தன் விளையாட்டைத் தொடங்கியது.
குளிர்சாதனப் பெட்டியென உறைந்துபோயிருந்த அந்த அலுவலக அறையில், அதிகாரிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தார்கள். "நான்கு குழந்தைகளுக்கும் அவர்தான் தந்தை என்பதை பரம்பரையியல் ரீதியாக, அதாவது டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்." நந்தாவுக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று நினைத்தாள். உண்மைதானே என்றும் துணை நிற்கும் என்று நம்பினாள்.
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
பாடலைக் கேட்டு மகிழ
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ? என்றேன்.
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்
இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம் என்றாள்
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ ? என்றேன்.
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ? என்றாள்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
ஏலத்திலே விடுவதுண்டோ எண்ணத்தை? என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண், என்றாள்
மூலத்தைச் சொல்லவோ. வேண்டாமோ? என்றேன்,
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
பாடலைக் கேட்டு மகிழ
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=WjHI9FnBLsM
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம் அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்
கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=oxFjQpf5aso
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ?-
இந்த ஞாலமும் பொய்தானோ?
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்
பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=wkaVVbHCrhE
நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென்று..
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

1
1882இல், டிசம்பர் 12 இல் பிறந்த பாரதிக்கு, 1906இல், வயது இருபத்தி நான்காய், இன்னமும் அரும்பியிராத ஒரு காலப்பகுதி. சரியாக சொன்னால் தனது 23-24 வயது காலப்பகுதியிலேயே இவ் இளைஞன் இவ் உலக பரப்பினை கூர்ந்து நோக்க தலைப்படுகின்றான். இவனது இந்த செய்கைக்கு, பல்வேறு கூறுகள், அடித்தளமாய் அமைந்திருக்க கூடும் என்றாலும், இவற்றில் தலையானதாய் தெரிவது, இவனது ஆழ்ந்த வாசிப்பு திறன் எனலாம். (அதாவது, கசடு அற கற்பது என்பது இவன் பின் கொண்ட ஒரு கூறே).
இதனுடன் இணைந்தாற்போல், கைலாசபதியின் கூற்றான, “உணர்ச்சி பிழம்பாக தோன்றுபவன்” என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.
இப்படி, “உணர்ச்சி பிழம்பாக” தோன்றியது எந்த காலப்பகுதியை சார்ந்தது என்பதனை கைலாசபதி அறுதியிட்டு கூறாமல் இருந்தாலும், இவ் உண்மையானது அவனது இறப்பு வரை நீடித்திருப்பதை அவனது எழுத்துக்கள் எதிரொலிக்காமல் இல்லை. இருப்பினும், தனது உணர்ச்சி பிரவாகத்தை ஒரு கட்டுக்குள் கொணரும் ஒரு மனிதனாக இவன் பிற்காலத்தில் உருவாகியிருக்க கூடும் என்பதனை அவனது அதே எழுத்துக்கள் எமக்கு காட்டாமலும் இல்லை.
வேறு வார்த்தையில் கூறினால், 23-24 வயது காலப்பகுதியில், இவ் இளைஞன், ஒப்பீட்டளவில், அடிப்படையில், தன் “எதிர்வினையை” அப்படியே காட்டும் “பச்சை” மண்ணாகவே இருந்துள்ளான். ஆனால், இப் பச்சை எதிர்வினைகள், ஒப்பீட்டளவில், மிக உயரிய மட்டத்தில், எந்த ஓர் சராசரி மனிதனும் இலகுவில் எட்டி பிடிக்க முடியாத தளத்தில் இயங்கின என்பதும் வேறு விடயம். இருந்தும், இவன், கால நகர்வோடு, “வையத் தலைமை கொள்” எனும் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்கின்றான் எனலாம்.


[மார்ச் 14] ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் அவர்கள் தனது 96’வது வயதில் நேற்றுக் காலமானார். அவர் , நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் .
பொதுவெளி உரையாடல் குறித்தும் தகவல் தொடர்பு நடவடிக்கை குறித்ததுமான அவரது ஆழ்ந்த தத்துவார்த்தப் பணியின் மூலம், அவர் அரசியல், தத்துவம் , ஜனநாயகக் கோட்பாட்டை சிலாகித்து , நோய்வாய்ப்பட்ட முதலாளிய அமைப்பை ஆரோக்கியமாக்க முனைந்த வைத்தியர்தான் ஜூர்கன் ஹொபர்மாஸ் . பொதுத்துறை கோட்பாடு மற்றும் தகவல்தொடர்புச் செயல்பாடு குறித்த அவரது பணிகள் உலகளவில் அரசியல் தத்துவத்தையும் மக்களாட்சிக் கொள்கையையும் ஆழமாக வடிவமைத்தன. அவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஜெர்மனியில் அரசியல் , சமூகவியல் , பொருளாதாரம் , மனிதவள மேம்பாடு சார்ந்த சட்டவாத விவாதங்களிற் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினார். ஜூர்கன் ஹோபர்மாஸ் அவர்கள் , நாசிகளின் கடந்த காலத்தை மறுவாய்வுக்குள் உட்டபடுத்தியது முதல் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பற்றிய கேள்விகள் வரை அவரது பங்களிப்புகள் இருந்தன.
அவரின் முதன்மையான படைப்பாக "தகவல்தொடர்புச் செயல்பாட்டுக் கோட்பாடு(Theorie des kommunikativen Hand)”கருதப்படுகிறது.
கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் புலம்பெயர்வு இலங்கையின் வழிபாட்டு மரபிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானிய காலனித்துவ பொறிமுறையில் இலங்கையில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்யும் முனைப்பில் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். இலங்கையில் 1823ம் வருடத்திற்கு முன்னர் வர்த்தக நோக்கம் கருதிய புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான புலம்பெயர்வுகள் இலங்கையில் பூர்வீகத்தில் இருந்த முருக வழிபாட்டை மேலும் வலுப்படுத்தும் கைங்கரியத்தை ஆற்றியுள்ளது. மலையகம் உட்பட நாடுமுழுவதும் செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கை நோக்கம் கருதிய வரவுகளால் சத்திரங்கள் உருவெடுத்தன. பின்னர் அச் சத்திரங்கள் முருகன் ஆலயங்களாக உருவெடுத்தன. அவ்வாறான ஆலயங்களுள் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமும் குறிப்பிடத்தக்கதாகும்.

வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்"
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா!
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=94OrPEO5arI
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்
வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?
ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்
புத்தகம் அற்ற உலகம் எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.

- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம்.
இந்த மாத்தளை மண்ணை தன் சுவாசத்தில், மூச்சில், ரத்தநாளங்களில், சிந்தனையில் ஏற்றிப் பெருமிதம் கொள்பவர் மாத்தளை வடிவேலன். மாத்தளைப் பிராந்தியத்தில் அவர் காலடிகள் படாத இடமேயில்லை. அங்குலம் அங்குலமாக அந்தப்பிரதேசத்தை அளந்து வைத்திருப்பவர் அவர்; தெரிந்து வைத்திருப்பவர்; வடிவேலன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த மண்ணோடு போராடி வந்திருக்கிறார்.அந்த மண்ணில் நடந்து முடிந்த அரசியல் மாற்றங்கள், எழுச்சிகள், புரட்சிகர இயக்கங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெற்ற இனவன்முறைகள், அவற்றிற்கு எந்த நேரத்திலும் பலியாகும் மக்களாக குறிவைக்கப்பட்ட மலையக மக்கள், உண்ண உணவின்றி தமிழ்த் தொழிலாளர்கள் அந்த மண்ணை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவலம், தோட்டங்கள் அரச உடைமை ஆக்கப்பட்டபின், மாத்தளையின் பெருந்தோட்டங்களின் பொலிவே சிதைந்து போன கோலம், இன சௌஜன்யம் குலைந்து போன கொடுமை - இத்தனையையும் அவர் கண்கூடாக்கண்டிருக்கிறார். தன் நெஞ்சிலே தணல் கொண்டு திரிந்திருக்கிறார். தோல்வியையும் துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார். மாத்தளை வீதிகளிலே அணிவகுத்துச் சென்ற ஊர்வலங்களில் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். அரசியல் மேடைகளில் அவர் துணிவோடு முழங்கியிருக்கிறார்.

நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
கருப்பசாமி மொறட்டு கண்களோடு வீச்சருவாள் கையில் கொண்டு மிகவும் ஆக்ரோசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். உச்சிப் பொழுது உச்சிக் காலப் பூசையை வீரமணிகண்ட பூசாரி சூடம் காட்டிட்டு பக்தர்கள் முன் தட்டைக் காண்பித்தார். எல்லோரும் தொட்டு கண்களில் வைத்துக் கொண்டார்கள்.
கனகராஜ் மீனாட்சிபுரத்தில் இருந்து படித்துப் பட்டணம் சென்ற இளையதலைமுறை. வருடம் ஒரு முறையேனும் வந்துப் போகனும்னு குடும்பத்தை அழைத்துப் பார்த்தான். செலவு விட்டுத் தள்ளு, மனைவி வந்தாவுல புள்ளகவர, அவளே காரணங்களைத் தேடுவாள்.
பிள்ளகளக் கேட்க வேண்டுமா… எப்பவும் படிக்கனும் வீட்டுப்பாடம் எழுதனும் அப்பறம் டியூசன் போகனும்னு ஆத்தாளும் பிள்ளைகளும் காரணங்களைத் தேடுவார்கள். இருந்துட்டுப் போகட்டும்னு கனகராஜ் காரணங்களைக் களைந்து குலதெய்வம் கோயிலுக்கு வரணும்… (வந்தாத்தானே பூசாரிக்கு வரும்படி.)
பாவம் கோயிலே கெதின்னு கிடக்கிற மனுசன். நாலு சாதிசனம் வந்து பொங்கல் வைக்கனும், மொட்டை போடனும், கிடாவெட்டனும், காது குத்தனும், ஆளும் பேரும் கோயிலுக்கு வந்து போகனும். அப்பத்தான் உறவும் வளரும் ஊரும் நல்லா இருக்கும். மக்க மனுசர் கோயிலுக்கு வந்து போனாதான் பூசாரி ஆசையா வேல வெட்டிச் செய்யச் சந்தோஷமா இருக்கும். அவனும் மனுசன் தானே. “குல சாமி” மாதிரி கம்மாக்கரையிலே.. பூசாரி எத்தனை நாளைக்கி தனியா வெறும் கண்மாயியயும் கருவேல மரத்தையும் பாத்துக்கிட்டே இருக்கமுடியும்.
போனத் திருவிழாவுலப் பார்த்தது, பூசாரியப் பாத்ததும், சாமியக் காயப்போட்டாச் சாமிக் குத்தம் வந்துரும். பூசாரிக்கு வாய் வயிறு இருக்கு. குடும்பம் குட்டி… நாலு நல்லது கெட்டது இருக்கு, நீர் வார்த்த முத்து அய்யன்… ஆத்தா வெயிலா முன்னோடும் கருப்பசாமி… அவுக அவுகளுக்குப் பூசைப் போட்டாத்தானே மனம் குளிரும்… சாமி மனசு குளுந்தாப் பூசாரி மனசு குளுந்த மாதிரி.

திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
காட்டில் வாழும் யானை தன் தாகத்தை தீர்க்கவும் உணவைத் தேடவும் நீண்ட தூரம் நடந்து செல்கிறது. அது நடந்து செல்லும் பாதைகள் பின்னர் மற்ற மிருகங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, யானைகள் உலகின் முதல் சிவில் பொறியாளர்கள் என்று சொல்லலாம். அவை காடுகளுக்குள் முதல் பாதைகளை உருவாக்கியவையாகும்.
அதேபோல் மனித வாழ்க்கையும் இலக்கியம் உருவாக்கிய பாதைகளால் வடிவமைக்கப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு இலக்கியப் புத்தகம்கூட வாசிக்காதவர்கள்கூட அதன் தாக்கத்தில் உருவான ஒழுக்கப் பாதைகளிலேயே வாழ்கின்றனர். அது எப்படி?
ஒரு மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கம் குறைந்திருந்தாலும், தனது மனைவி சீதை போன்ற பண்புடையவளாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்புவான். ஆனால் அதற்காக அவன் வால்மீகி அல்லது கம்பர் போன்ற இராமாயணத்தை எழுதிய கவிஞர்களை அறிந்திருக்க வேண்டியதில்லை.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
பாழும் நாவெதுவும் பரிதவிப்பைக் கேட்டதிலை
கண்ணெதுவும் கலங்கியே கடுந்துக்கம் கொண்டதிலை
மண்ணில் பிறந்தநாள் முதலாய் தூண்டியதில்லை யான்
கவலைநிறை எண்ணத்தையோ மகிழ்வின் புன்னகையையோ
இரகசிய இன்பத்தில் இரகசியக் கண்ணீரில்
மாறிடும் இவ்வாழ்வு நழுவி விலகியது
புதிதாய்ப் பூமியில் பிறந்த நாளின் தனிமைபோல்
பதினெட்டு அகவை பின்னும் நண்பர்கள் இன்றியே.
மறைக்க இயலா தருணங்கள் இருந்ததுண்டு
நிறை துயர்விளை தருணங்களாம் அவை
தன்பெருமை மறந்து என்னுயிர் வருந்தியபோது
தன்னை இங்கொருவர் நேசிக்க ஏங்கியது.