அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அ.எப்தா நிஷான் A.bdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற  விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள்.  இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன. அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -


தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சு10ழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் 

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே 'புலம்பெயர் இலக்கியம்" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

கால வரையறை - இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. அக்காலத்தில் மலேசியா, அமெரிக்கா, லண்டன் என தொழில் காரணமாக ஆங்கிலக் கல்வியினூடாக வந்தவர்கள் அதிகம் புலம்பெயர்ந்தனர். ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்றொடருக்கு அர்த்தத்தை ஏற்படுத்தியதாகும்.

எனவே 1983 யூலைக்கலவரங்களின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வே இங்கு முக்கியமானதாகும். இன்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட பின்னரும் தொடர்கின்ற இந்நிலை தமிழர்களின் வாழ்வின் மத்தியிலும் அவர்களின் இலக்கியப் படைப்புக்களின் மத்தியிலும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றமை அனைவரும் அறிந்த ஒன்றாக காணப்படுகின்றது.

புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையாகவும் கவனத்திற்கு உரியனவையாகவும் காணப்படுகின்றன. இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் காணப்படுகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர்தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை. 1980 களின் இறுதிப்பகுதியில் இருந்தே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து நாவல்கள் வெளிவரத் தொடங்கின. பார்த்திபனின் பல குறுநாவல்கள் ஆரம்பத்தில் வெளிவந்தன. ஆரம்பத்தில் வெளிவந்த நாவல்கள் தாயக நினைவுடன் தொடர்புபட்டவையாகவும் சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை, காதல் மற்றும் திருமண உறவுகள், இனப்போராட்டத்தின் அவலம் என்பவற்றையே மையமாகவும் கொண்டிருந்தன. சிறிது காலத்தின் பின்னரே தாம் வாழ்கின்ற சு10ழலைச் சுட்டும் படைப்புக்களை வரையத் தொடங்கினர். இவ்வகையில் இன்று புலம்பெயர் நாவல்களைப் படைத்த படைப்பாளிகளில் ஷோபா சக்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், முல்லை அமுதன், மா. கி. கிறிஸ்ரியன், கி. செ. துரை, பார்த்திபன்;, இ. தியாகலிங்கம், வ. ந. கிரிதரன் ஆகியோரைக் குறிப்பிடலாம். அந்த வகையில் இவ்வாய்வானது வ. ந. கிரிதரன் அவர்களின் குறுநாவலில் ஒன்றான 'அமெரிக்கா" என்ற நாவலை புலம்பெயர் இலக்கியம் என்ற வகையில் ஆய்வுச் செய்வதாக அமைந்துள்ளது.

வ. ந. கிரிதரன் ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்

வ. ந. கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர், வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர், இங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார்.

எழுத்துலக வாழ்வு

மிக இளவயதிலேயே எழுத தொடங்கிய வ. ந. கிரிதரன், பல சிறுவர் படைப்புக்களை படைத்துள்ளார். இவரின் படைப்புக்கள் ஈழநாடு சிறுவர் மலர், சுதந்திரன், கண்மணி, சிரித்திரன், வீரகேசரி, ஈழமணி கணையாழி, சுபமங்களா, ஆனந்தவிகடன், துளிர், தாயகம், தேடல், சுவடுகள், திண்ணை, தடஸ் தமிழ் உட்படப் பல பத்திரிகை, சஞ்சிகை மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.

இவரது 17 வயதில் படைக்கப்பட்ட 'சலனங்கள்" என்னும் சிறுகதை சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டது. 'பொந்துப் பறவைகள்" என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டமொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதையொன்று குட்டிக்கதையாகி ஆனந்தவிகடனின் பவளவிழாக் குட்டிக் கதைப் போட்டியில் ரூபா 3000 சன்மானம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு, 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல், 'கோப்பாய்க் கோட்டை" பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. 'வானியற் பௌதிகம்" (யுளவசழ Phலளiஉள) பற்றிய அறிவியற் கட்டுரைகள் பல வீரகேசரி, கணையாழி, பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

மொறட்டுவைத் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்" மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார். கனடாவிற்கு புலம் புகுந்த பின்பு இவரின் பல படைப்புக்கள் இங்குள்ள சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் ரொறன்ரோவில் 'இரவி (வார பத்திரிகை), 'கல்வி (வார பத்திரிகை), குரல் (கையெழுத்துப் பிரதி), 'நமது பூமி (செய்தி கடிதம்), 'கணினி உலகம் (செய்தி கடிதம்)" ஆகிய பல ஆரம்ப கால தமிழ் படைப்பு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவை சில இதழ்களோடு நின்றுவிட்டன. எனினும் 2000 ஆண்டு இவர் ஆரம்பித்த பதிவுகள் இணைய இதழ் தொடர்ந்து வெளிவருகின்றது.

இவருடைய குடிவரவாளன் என்ற நாவல் தற்போது ஜீவநதி சஞ்சிகையில் தொடராக தற்போது வெளிவருகின்றது.

அமெரிக்கா (குறுநாவல்)

மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா" என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.

ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை" என்பதாகவே அமையும். இத்தகைய ஒரு சு10ழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான படைப்பாளி தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறார். இத்தகைய ஓர் உன்னதமான படைப்பாகவே வ. ந. கிரிதரனின் அமெரிக்கா என்ற சிறுநாவல் தொகுதியும் அமைந்துள்ளது.

அமெரிக்கா என்ற குறுநாவலின் கதைச்சு10ழல் மற்றும் கதைச்சுருக்கம்

இலங்கையில் 1983 ஜூலை கலவரத்தை தொடர்ந்து கிரிதரன் அவர்கள் கனடா செல்ல புறப்பட்டார். இவ்வாறு இவர் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் போது அவருடன் அதே விமானத்தில் 19 தமிழர்களும் பயணம் செய்தனர். 19 பேரின் அனுபவங்கள் ஐந்து பேரின் அனுபவங்களாக கதை அமைக்கப்பட்டுள்ளது. நாவலின் பிரதான கதாப்பாத்திரத்தின் பெயர் இளங்கோ. ஏனையோர் ராஜசுந்தரம், ரவீந்திரன், அருள்ராசா, மனோராஜா என்பவர்களாவர். இலங்கையிலிருந்து கனடா செல்வதென்றால் இங்கிருந்து அமெரிக்காவிலுள்ள பொஸ்டன் நகருக்குச் சென்று, பொஸ்டன் நகரிலிருந்தே கனடா செல்ல வேண்டும்.

இவர்கள் இலங்கையிலிருந்து அமெரிக்காவிலுள்ள பொஸ்டன் நகருக்குச் சென்று அங்கிருந்து கனடாவிற்கு செல்ல டெல்டா எயாலைன்ஸ் விமானத்தை எடுப்பதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் இவர்களை பொஸ்டன் நகரில் இருந்து கனடாவிற்கு எடுத்துச் செல்ல மறுக்கின்றது. இந்நிலையிலேயே பிரச்சனையும் ஆரம்பமாகின்றது.

பொஸ்டன் விமான நிலையத்தில் இவர்களை ஏற்றி செல்ல விமானம் மறுத்துவிட்டது. விசா இல்லாமல் இவர்கள் வந்ததால் இவர்களை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் பொலீஸ் காவலில் வைத்தார்கள். இதற்கிடையில் அங்கிருந்த குடியேற்ற அதிகாரி ஒருவர் இவர்களை கொழும்புக்கு திரும்ப அனுப்பப் போவதாக கூறினார். ஆனால் இவர்கள் கொழும்பிற்கு திரும்பிவர விரும்பாது எது வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்றிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசி தங்களுடைய நாட்டின் யுத்த நிலைமையை எடுத்துக்கூறி, தாங்கள் மீண்டும் இலங்கைக்கு செல்லாது அமெரிக்காவிலே அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கின்றோம் என்று கூறி அகதி விண்ணப்பம் கோறினர்.

இவர்களுடைய அகதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இவர்களை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அகதிகளாக இருக்க அனுமதிக்கிறது. இவ்வாறு இவர்கள் அமெரிக்காவில் அகதி விண்ணப்பம் கோரி அகதி முகாமில் தங்கியிருந்தனர்.

அகதி முகாமில் இவர்களுக்கு ஏற்பட்ட உரிமை மீறல், துன்பங்கள், துயரங்கள், அகதி முகாமின் வாழ்க்கைமுறை போன்றவற்றை இந்நாவல் உண்மை நிலையில் தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு இவர்கள் அகதி முகாமில் துன்பத்தில் வாடுவதும் அதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் அகதி முகாமின் இன்னல்களை வெளிப்படுத்துவதும் அமெரிக்காவைப் பற்றி விமர்சிப்பதும் தாங்கள் அகதி முகாமிலிருந்து வெளியேறுவதுமான நிகழ்வுகளைக் கொண்டதாக அதாவது அகதி முகாமின் வாழ்க்கை முறையினை கூறுவதாக இந்நாவல் அமைகின்றது. இதுவே இந்நாவலின் கதைச்சூழலும் கதைச்சுருக்கமுமாகும்.

கதையாசிரியர் தாம் புலம்பெயர்வதற்கு கனடாவை தேர்ந்தெடுக்க காரணம்

புலம்பெயர் இலக்கியங்கள் தாம் புலம்பெயர்வதற்கான நாட்டை எவ்வாறு தெரிவு செய்தனர், ஏன் தெரிவு செய்தனர் என்பதையும் தமது இலக்கியத்தில் கூறுவது மரபு. சிலர் திட்டமிட்டு ஒரு நாட்டை தெரிவு செய்து புலம்பெயர்வர். சிலர் திடீரென்று ஒரு நாட்டுக்கு புலம்பெயற வேண்டிய நிலை ஏற்படும். மேற்சொன்ன வகையில் கிரிதரன் அவர்கள் திட்டமிட்டு கனடா என்ற நாட்டை தெரிவு செய்ததாக குறிப்பிடுகிறார்.

ஒரு பொதுநலவாய நாட்டிலிருந்து இன்னொரு பொதுநல வாய நாட்டிற்குச் செல்ல அன்றைய காலங்களில் விசா தேவையாயிருக்கவில்லை. அந்த வகையில் கனடாவும் ஒரு பொதுநலவாய நாடு, இலங்கையும் ஒரு பொதுநலவாய நாடு. இதனால் அக்காலத்தில் கனடவிற்கு செல்ல விசா தேவையாயிருக்கவில்லை. அத்துடன் கனடா நாடானது அகதிகளை வெளியேற்றாது. இதனாலேயே கதையாசிரியர் தாம் கனடா என்ற நாட்டை புலம்பெயர்தலுக்கான நாடாக தெரிவு செய்தார். இடையில் அமெரிக்காவில் அகதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் இவர் புலம்பெயர்தளுக்காக எடுத்துக் கொண்ட நாடு கனடா என்ற வகையில் கனடா நாட்டிற்கு தான் செல்ல முயன்றமைக்கான காரணங்களை கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன வகையில் கதையாசிரியர் தாம் புலம்பெயர கனடாவை தெரிவு செய்தமைக்கான காரணத்தை குறிப்பிட்டிருப்பதை காணமுடிகிறது.

புலம்பெயர்வுக்கான காரணங்கள்

புலம்பெயர் இலக்கியங்களில் புலம்பெயர்வதற்கான காரணங்களையும் கூறுதல் இன்றியமையாதது. புலம்பெயர் இலக்கியங்கள் உருவாவதற்கு முதன்மைக் காரணியாக அமைவது நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் போர்ச்சு10ழல் ஆகும். அத்துடன் போரினால் ஏற்படும் கலவரங்கள், வம்செயல்கள், கொலை, கைது, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுதல், பாலியல் வன்புணர்வு ஆகியனவும் காரணிகளாக அமைகின்றன.

கிரிதரனாகிய இளங்கோ (நாவலில் கதை ஆசிரியர் பெயர் இளங்கோ) ஒரு பொறியியலாளர். 1983 இல் திண்ணைவேலியில் 13 இராணுவர்களை சுட்ட செய்தி நாடு முழுவதும் பரவியிருந்தது, இவர் பணியாற்றிய திணைக்களத்திலும் கலவரம் வெடித்திருந்தது. இவர் ஒரு பொறியியலாளர் ஆகையால் இன்னொரு பொறியியலாளரின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து தப்பி வெளியேறி கொழும்பிலுள்ள வெள்ளத்தை இராமகிருஷ்ண மண்டபத்தை சென்றடைந்து தங்கியிருந்தனர். அங்கும் குண்டர்களின் (கலவரக்காரர்) அட்டகாசம் வெடித்தது. பின் நடைபெற்ற கலவரங்களால் அடிபட்டு மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றார். இவர் மீண்டும் தப்பித்து யாழ்ப்பாணத்திற்கு வரும்போதும் தான் வெளிநாட்டுக்கு போவதாக எண்ணியிருக்கவில்லை.

அழிவும் கொள்ளையும் இரத்தக் களறியுமாக நாடிருந்த சு10ழலில் இவர் வெளிநாட்டிற்கு செல்வதே நல்லதென்று இவருடைய பெற்றோர் எண்ணினர். இந்நிலையில் கனடாவிற்கு அகதிகளாக செல்லலாம் என்ற விஷயத்தை அறிந்து தனது சின்னம்மாவின் பண உதவியுடன் கனடாவிற்கு செல்ல ஆரம்பித்தார்.

மேற்சொன்ன காரியங்களை வைத்து நோக்கம்போது நாட்டில் ஏற்பட்ட யுத்த மற்றும் கலவர நிலைமைகளே இவர் புலம்பெயர்ந்து செல்வதற்கான காரணமாய் இருந்ததென புலம்பெயர்விற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.‌

புலம்பெயர் இலக்கியங்கள் உருவாவதற்கு முதன்மைக் காரணியாக அமையும் போர் மற்றும் போர்ச்சூழல் கிரிதரன் அவர்கள் புலம்பெயர்வதற்கும் காரணமாக இருந்தது என அமெரிக்கா என்ற தொடர்கதையின் ஆரம்ப பகுதியில் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.‌ இவ்வாறாக இந்நாவலில் புலம்பெயர்விற்கான காரணங்களை காணக்கூடியதாயுள்ளது.

அகதியாக சென்ற நாட்டில் உடனடியாக நிகழ்ந்த பிரச்சனையும் அவர்களின் மனநிலையும்

புலம்பெயர் வாழ்க்கை பலருக்கு நல்வாழ்வைத் தந்தது போன்று இருப்பினும் உண்மையில் அதிகளவுக்கு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கதையில் வரும் கதையாசிரியர் உட்பட்ட ஐந்து நபர்கள் புலம்பெயர்ந்து செல்லும் போது அங்கு அவர்கள் அகதி நிலைக்கு தள்ளப்படுவோம் என்று நினைத்திருக்கவில்லை. இவர்கள் அகதி நாட்டிற்கு சென்றவுடன் உடனே தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையையும் மனநிலையையும் பதட்டத்துடனும் பயத்துடனும் உண்மைச் சம்பவமாக எடுத்துக்காட்டியுள்ளார் கதையாசிரியர்.

புலம்பெயர்ந்த ஒருவர் அல்லது குழு சென்ற இடத்தில் அதாவது தெரியாத நாட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவர்களின் மனநிலையும் செயற்பாடும் எவ்வாறு இருந்ததென்பதை இந்நாவல் புலம்பெயர் அனுபவங்களில் ஒன்றாக எடுத்துக்காட்டியிருக்கின்றது.

இளங்கோ (கதை ஆசிரியர்) உட்பட இவருடன் பயணித்தவர்கள் ராஜசுந்தரம், மனோராஜன் சிவக்குமார், ரவிச்சந்திரன் போன்றவர்களாவர். இவர்கள் பொஸ்டனில் லோகன் கிண்டர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இவர்களின் விசா பிரச்சனையால் இவர்களை கனடா ஏற்றுச்செல்ல டெல்டா எயாலைன்ஸ் விமானம் மறுத்ததால் இவர்களை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் பொலீஸ்காவலுடன் வைத்தனர். இந்நிலையில் இவர்களை மீண்டும் கொழும்பு அனுப்புவதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் கூறுகிறார். இச்சமயம் இவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இதற்கிடையில் என்ன பிரச்சனை நேர்ந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என இவர்கள் தங்களுக்குள் முடிவு செய்தனர்.

குடியேற்ற அதிகாரி திரும்பி கொழும்பு செல்வதற்கான போர்டிங் பாஸை எடுத்து வந்து இவர்களின் பெயர்களை அழைத்தார்.‌ இவர்கள் ஒருத்தரும் அசையாமல் மௌனமாய் இருந்தார்கள். அதிகாரியின் முகத்தில் ஆத்திரம் வளர்ந்தது. இதற்கிடையில் இன்னும் ஒரு பெண் அதிகாரி அவ்விடத்திற்கு வந்தார். அவரிடம் நாட்டின் யுத்த நிலைமைகளை இவர்கள் எடுத்துச் சொல்லி விளங்கப்படுத்தினார். அந்தப் பெண் அதிகாரியும் இவர்களின் பேச்சுக்களை நன்றாக செவிமடுத்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்களில் ராஜசுந்தரம் என்பவர் 'இந்த நிலைமையில் எங்களுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோறுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் எல்லோரும் அமெரிக்காவில் அகதிகளாய் இருக்க விண்ணப்பிக்கிறோம்." என்று கூறினார். இந்த விண்ணப்ப கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் இவர்களை அகதி முகாமிற்கு செல்ல அனுமதிக்கிறார்கள்.

இவ்வாறு புலம்பெயர்ந்த போது புதிய நாட்டில் தனக்கு ஏற்பட்ட உடனடி நிகழ்வுகளையும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையும் அதனை எதிர்கொண்ட விதமும் அந்நிலையில் அவர்கள் உடனடியாக எடுத்த முடிவுகளையும் கதையாசிரியர் புலம்பெயர் அனுபவங்களில் ஒன்றாக எடுத்துக்காட்டி இருக்கிறார். உண்மையில் நாம் ஒரு புதிய நாட்டிற்குச் சென்றால் பயந்து செயற்படுவோம். என்ன செய்வதென்னு தலைகால் புரியாமல் திண்டாடுவோம். ஆனால் இக்கதையில் இவர்கள் தைரியமாக பிரச்சினையை கையாண்ட விதம் பாராட்டுதற்குரியது.

அகதி முகாமின் சித்தரிப்புகள், அகதி முகாமின் வாழ்க்கை முறை, அகதி முகாமில் கதையாசிரியர் பெற்ற அனுபவங்கள்

புகலிடத்தின் புதிய சு10ழல்கள் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவதும் அகதி மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்களையும் புலம்பெயர் இலக்கியங்கள் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா என்ற நாவலிலும் இத்தகைய தன்மைகளை கதையாசிரியர் அகதி முகாமின் வாழ்க்கை முறைமைகளினூடாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் அகதி முகாமின் வாழ்க்கை முறைகளையும் அகதி முகாம் பற்றிய சித்தரிப்புகளையும் இதனூடாக கதையாசிரியர் பெற்ற அனுபவங்களையும் இனிக் காணலாம்.

அமெரிக்காவின் பொஸ்டன் நகரின் லோகண்டன் நெஷனல் விமான நிலையத்தில் விசா காரணமாக கைதான இளங்கோவையும் அவருடன் வந்த மற்ற ஐந்து இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருந்த நிலையில் அதிகாரிகளிடம் பேசி அமெரிக்காவிலே அகதி விண்ணப்பம் கோருகின்றோம் என கோரிக்கை விடுத்தனர்.‌ இவர்களது கோரிக்கையையும் ஏற்று இவர்களுக்கு அமெரிக்கா அகதி அந்தஸ்து வழங்கி அகதி முகாமில் கொண்டு சேர்க்கின்றது. இவ்வாறு இவர்கள் அகதி முகாமில் பெற்ற துன்பங்கள், இன்னல்கள், அனுபவங்கள் மற்றும் அகதி முகாமின் சித்தரிப்புகள் போன்றவற்றை கதையாசிரியர் இதனூடாக எடுத்துக்காட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலிருந்து நிய10யோர்க்கின் புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமில் இவர்கள் அகதிகளாக கொண்டு சேர்க்கப்பட்டனர்.

தடுப்பு முகமானது பழமையான கட்டிடமாக ஜெயில் போல இருந்தது. இடையிடையே சிறை காவலர்கள் போல கருப்பின மல்லர்கள் காணப்பட்டனர். 'எங்கள் உடமைகள் எல்லாம் எங்களிடமிருந்து நீக்கப்பட்டன. எங்களிடமிருந்த பணம் எங்களிடமிருந்து எடுக்கப்பட்டன. நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறும் சமயங்களில் அவை மீண்டும் திரும்பத் தரப்படும் எனக் கூறப்பட்டது. லோகன் விமான நிலையத்தில் நடைபெற்றது போல் ப10ர்வாங்க சோதனைகள் நடத்தப்பட்டன. கைரேகைகள் எடுக்கப்பட்டன. ஒருவழியாக சோதனைகள் எல்லாம் முடிவடைந்த பின்னர் எங்களுக்கு சிறை உடுப்புகள் தரப்பட்டன." சிறை உடைப்புகளை உடுத்தி உள்ளே சென்ற பின் முகாமின் கதவுகள் மூடப்பட்டன. இவ்வாறாக தடுப்பு முகாமிற்குள் சென்றவுடன் நிகழ்ந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து தடுப்பு முகாமின் அமைப்பையும் கூறியுள்ளார். ஒரு கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் தடுப்பு முகாம் இருந்தது. ஒவ்வொரு படுக்கை கூடத்திற்கும் எதிராக ஒரு கூடம் பொழுது போக்குவதற்காக காணப்பட்டது. இப்பொழுது போக்கு கூடத்தில் ஒரு மூலையில் டீ. வி, டேபிள் டென்னிஸ் விளையாட மேசை, டெலிபோன் ஆகியவை காணப்பட்டன. ஹாஸ்டல்களில் (hழளவநட) போல் இரண்டு கட்டிகள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக அமைந்திருந்தன. இவர்களைப் பாதுகாப்பதற்காக பலமான இரும்புக் கதவுகளுடன் காவலர்களும் காணப்பட்டனர்.

இதனுடன் இணைந்து குளியலறை, மலசலக்கூடம் ஆகியவை காணப்பட்டன. இது தவிர உணவுகூடம், தேகப்பியாச பயிற்சி செய்வதற்கான பகுதி ஆகியவையும் இருந்தன. நோய்வாய்ப்படும் சந்தர்ப்பத்தில் மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டன. டாக்டரின் அறை தடுப்பு முகாமின் முன்பகுதியில் ரிசப்ஷனின் முன்புறமாக அமைந்திருந்தது. ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் வேறு வேறு பகுதிகளில் இருந்தனர். இவ்விதமாக தடுப்பு முகாமின் அமைப்புக்களை கதையாசிரியர் சித்தரித்து காட்டியுள்ளார்.

அகதி முகாம் எனும் போது அது பல்வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அகதி விண்ணப்பம் கோரியவர்கள் என பல்வேறு பிரிவினரையும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த அகதி முகாமில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு நாட்டு மக்களும் தங்களோடு அகதி முகாமில் இருந்ததாக அவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் போதிய கடவுச்சீட்டுக்கள் ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள், அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்டவிரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதை வஸ்து முதலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்துவதற்காக காத்து நிற்பவர்கள் இவ்விதம் பங்களாதேஷ் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அகதி முகாமில் இருந்தனர் என்றவாறு பலவகைப்பட்ட அகதிகளையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.‌

இவ்வாறான நிலையில் இவர்கள் தடுப்பு முகாமிற்கு வந்து ஒரு மாதம் முடிந்தது இதற்கிடையில் தடுப்பு முகாம் வாழ்க்கைக்கு ஓரளவு பழக்கப்பட்டுவிட்டனர்.

முகாமின் உணவு முறையினை பொறுத்தவரையில் காலை, மதியம், மாலை என உணவு வழங்கப்படும். சாப்பாட்டை பொறுத்தவரையில் பழக்கம் இல்லாத போதும், சத்தான நிறையுணவு கொடுக்கப்பட்டது‌. உணவுகள் அளவாகவே வழங்கப்படும். படுக்கை அறைகளுக்குள் உணவை கொண்டு செல்ல முடியாது. தெரியாமல் உணவை உள்ளே கொண்டு சென்றால் காவலர்கள் பறித்து விடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் இரவு நேர சாப்பாட்டுக்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் இங்கு இரவு நேர சாப்பாடு இல்லை. இரவு சாப்பாடு மாலையோடு நிறைவடைந்து விடும். இரவு சாப்பாடு சாப்பிட்டு பழக்கப்பட்ட இவர்களுக்கு இரவெல்லாம் பசி வயிற்றைக் கிண்டும். ஆயினும் எப்படியோ களவாக பழங்களை கடத்திக்கொண்டு உள்ளே சென்று இவர்கள் உண்டனர். இவ்வாறாக இவர்களின் உணவு முறைகள் அகதி முகாமிற்குள் எவ்வாறு இருந்ததென்பதை மேற்கூறியவற்றினூடாக எடுத்துக்காட்டியுள்ளார்.

இன்னுமொரு முக்கியமான விடயம் அடிக்கடி முகாமில் கைதிகளை அப்படி அப்படியே இருக்கும் இடங்களில் நிறுத்திவிட்டு அதிகாரிகள் வந்து கணக்கிடுவார்கள் ‌ அப்படி கணக்கிடும் போது சில வேலைகளில் ஒன்றிரண்டு நம்பர் பிழைத்து விடும். அப்படி பிழைத்து விட்டால் மீண்டும் மீண்டும் கணக்கெடுப்பார்கள். இது ஒரு கொடுமையான நிலையாக காணப்பட்டது.

விரத்தியும் துன்பமுமான முகாமில் பொழுதுபோக்கவும் சில அம்சங்கள் காணப்பட்டன. டீ. வி பார்ப்பது, டேபிள் டென்னிஸ் விளையாடுவது, செஸ் விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது ஒருவருக்கொருவர் கேலி செய்து சிரிப்பது போன்ற அம்சங்களின் மூலம் பொழுதை போக்கினர். இவ்விதமாக இவர்கள் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்த ‌ பாதுகாப்பு அதிகாரிகள் விரும்புகின்றனர். வாரத்தில் ஒருநாள் அதுவும் அரைமணி நேரம் இவர்கள் விரும்பினால் அங்கிருந்த தடுப்புமுகாமின் கட்டிடத்திற்கு சொந்தமான சிறிய முள்ளுக்கம்பி பாதுகாப்புடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் விளையாடலாம். இரண்டிரண்டு பேராக விலங்கிலிட்டு பலத்த பாதுகாவலுடன் இவர்களை கூட்டிச்சென்று ‌ ஒரு பந்தை கொடுத்து விளையாட செய்வார்கள். இவ்வாறு பல குற்றங்களையும் வெளியில் செய்யும் கைதிகளை வெளியே விட்டு விட்டு அகதியாக சென்று வாழ்க்கை அமைத்துக் கொள்ள போராடும் இவர்களை குற்றவாளிகளாகவும் கைதிகளாகவும் நடத்தியது சிரிப்பையும் வறுப்பையும் இவர்களுக்கு தந்தது.

இவ்வாறாக ஒவ்வொரு நாளையும் ஒரு புதியநாளாக கருதி இவர்களது சிறை வாழ்வை மறக்க எண்ணி ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்ற போதும் இவர்களால் முற்றாக அதிலிருந்து விடுபட முடியவில்லை. எத்தனை நேரமாகதான் டீ. வீ பார்ப்பது, டேபிள் டென்னிஸ் விளையாடுவது, தேகப்பயிற்சி செய்வது சுதந்திரமற்ற சிறை வாழ்வின் கணம் இடைக்கிடை இவர்களை மேலும் அமுக்கத் தொடங்கி விடும். இத்தகைய சமயங்களில் இவர்கள் படுக்கையில் புரண்டு கிடப்பார்கள்.

மேற்சொன்ன வகையில் கதையாசிரியர் அகதிமுகாமின் தன்மைகளை சித்தரித்து முகாமின் வாழ்க்கைமுறை இப்படித்தான் அமையும் என்பதை இந்நாவலினூடாக எடுத்துக்காட்டி இருக்கிறார். அகதி முகாம் வாழ்க்கை பற்றி அறிந்திராத இக்கால தலைமுறையினருக்கு அகதி முகாமின் இன்னல்களை உண்மை சம்பவமாக காட்சி படிவமாக எடுத்துரைப்பது ஆசிரியரின் புலமையாற்றலை எடுத்துக்காட்டுகின்றது.

அகதிமுகாமிலிருந்து வெளியேறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் நாவலில் வெளிப்படும் விதம்

அகதிமுகாமிற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து வெளிவரவே முயற்சிப்பார். அதுபோலவே இவர்களும் பலவாறும் அகதிமுகாமிலிருந்து வெளியேற பலமுயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர்கள் வெளியே வந்த தன்மையினையும் கதையாசிரியர் இந்நாவலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

தடுப்பு முகாமிற்குள் இவர்களுக்கு ஓர் வசதி இருந்தது. உலகில் எந்த மூலை முடிக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள இவர்களால் முடிந்தது. பெரிய பெரிய கம்பெனிகள் செல்வந்தர்கள் ஆகியோரின் டெலிபோனிற்கான கிரெடிட் கார்ட் நம்பர்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் இருந்த இவர்களுக்கு கிடைத்த வண்ணமாக தான் இருந்தன. இவ்விதமாக கிடைக்கும் நபர்களைக் கொண்டு உலகின் மூளை முடுக்கெல்லாம் பேசிய நம்பர்கள் விரைவிலேயே செயலற்று போய்விடும். பழையன கழிதலும் புதியன புகுதலுமாஆக இவர்களது டெலிபோன் உரையாடல்களும் நீண்டு கொண்டிருந்தன. என்றவாறு கதையாசிரியர் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் தான் வெளியேற முயற்சித்ததை கூறியிருக்கிறார்.

மேலும் ஆரம்பத்தில் இவர்கள் விடயத்தில் அக்கறை காட்டிய தமிழ் அமைப்புகளின் அக்கறை குறைந்துவிட்டது. அதே சமயம் ஓரிரு நல்ல உள்ளங்களும் இருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தற்போது நியூயோர்க்கில் சேர்ச் ஒன்றில் பணிபுரியும் பாதர் ஏப்ரகாம் என்ற ஒருவர் பத்திரிகையின் மூலமாக கேள்விப்பட்டு இவர்களை பார்க்க வந்தார். பாதர் 'ஏதாவது என்னால் முடிந்த உதவிகள் ஏதும் இருந்தால் கூறுங்கள்" என்று கேட்க 'எங்களைப் பொருத்தவரையில் முதலாவது பிரச்சனை தடுப்பு முகாமை விட்டு வெளியேறுவதுதான்" என கூறினர். இதனைக் கேட்டப்பின் பாதரும் இவர்களுக்கு அவரால் இயன்ற உதவிகளை செய்து அடிக்கடி அழைப்பு விடுத்து விசாரித்தும் கொண்டிருந்தார்.

இப்படியான சூழ்நிலையில் விஜயபாஸ்கரன் என்ற யாழ்ப்பாணத்தவர் முகாமிற்கு அகதியாக வருகிறார். இவன் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வர்த்தகர்களில் ஒருவரான விநாசித்தம்பியின் ஒரே மகன். இவனும் இவர்களைப் போலவே கனடா செல்கையில் பிடிபட்டிருந்தான். விஜயபாஸ்கர் எனக்கு நியூக்கிலும் சொந்தம் இருந்தனர். இவன் பணக்காரன் ஆகையால் தனக்கென ஒரு லோயரை (சட்டத்தரணியை) வைத்து பிணையில் வெளியே சென்றான். இதனை அறிந்த அவர்களும் விஜயபாஸ்கரனின் லோயரை தங்களுக்குச் சார்பாக வாதாடவும் செய்தனர். இவர்களுக்கு விஜயபாஸ்கரனும் உதவி செய்தான். இந்நிலையில் லோயர் குடியேற்ற அதிகாரிகளிடம் பேசி தொடர்பு கொண்டு இவர்களையும் பிணையில் வெளியே எடுத்தார். இவர்களின் வழக்கு பல சுத்துமாத்துக்களைக் கொண்டு காணப்பட்டிருந்தது. ஆயினும் இவை எல்லாவற்றையும் கடந்து உண்மையை கண்டறிந்து லோயர் இவர்களை வெளியே கொண்டு வந்தார். ‌ இவ்வாறாக இவர்கள் முகாமில் இருந்து வெளியே வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும், இவர்கள் முகாமிலிருந்து வெளியேறிய தன்மையினையும் ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்காவின் கறுப்பு பக்கத்தை எடுத்துக்காட்டுதல்

புலம்பெயர் இலக்கியம் தாம் புலம்பெயர்ந்திருக்கும் நாட்டின் புதிய சு10ழலில் புதிய அனுபவங்களை பதிவு செய்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டின் நன்மை தீமைகளை வெளிக்காட்டுதல், அரசின் சட்டத்திட்டத்தின் சாதக பாதக விளைவுகளை இலக்கியங்களில் விமர்சித்தல் போன்றன புலம்பெயர் இலக்கியங்களின் பாடுபொருளாக காணப்படுகிறது.

அமெரிக்கா என்ற தொடர்கதைகளில் கதையாசிரியர் அமெரிக்காப்பற்றி நாமும் அவரும் எம்முடைய மனதில் கற்பனை செய்திருந்த மகத்தான சிந்தனையை உடைத்து அதன் கறுப்புப் பக்கத்தை காட்டியிருக்கின்றார்.

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்ப10வாம் உள்ளேயிருப்பது ஈரும் பேணுமாம், எனக்கூறி அமெரிக்காவின் கறுப்புப் பக்கத்தை காட்ட முற்படுகிறார்.

உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு, பராக்கிரமம் மிக்க வல்லரசு, இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் வரைக்கும் எனக்கும் அமெரிக்க ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைக்கு மதிப்புத் தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால் என் முதல் அனுபவமே என் எண்ணத்தை சுட்டுப்பொசுக்கி விட்டதுஎன கதையை தொடர்கிறார்.

கதையாசிரியரான இளங்கோ சிறுவயதாயிருக்கும் ;போது ஒரு கட்டுரைப் போட்டியில் 'நான் விரும்பும் நாடு" என்ற தலைப்பில் எழுதும்படி கூறியிருந்தார்கள். இதற்காக அவர் தெரிந்தெடுத்த நாடு அமெரிக்கா. அமெரிக்கா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. ஆபிரகாம் லிங்கன் போன்ற சாதாரண விறகு வெட்டிகூட ஜனாதிபதியாக வரமுடியுமென்ற சாத்தியமுள்ள நாடு. அமெரிக்காவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன. இதற்கு அவர்களது சுதந்திரதேவி சிலையே சான்றுஎன பலவாறெல்லாம் அமெரிக்காப்பற்றி தான் எழுதியதை நினைவூட்டிய கதையாசிரியர் அடுத்ததாக அதன் இன்னொரு பக்கத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள், விடாமுயற்சி மனோபாவம் மிக்கவர்கள். எத்தனையோவற்றில் உலகில் முன்மாதிரியாக திகழ்பவர்கள். ஆனால் அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு மனோவியாதி பிடித்த கொலையாளிகளும் இருக்கிறார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்கள் எ;ன்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகிறார்கள். வாய்க்கு வாய், நீதி, நியாயம். சமத்துவம் என்று முழங்கப்படுமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியதாக காணப்படுகின்றன.

போதிய ஆவணங்களின்றி அகதி அந்தஸ்துக் கோரியவர்கள், உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில் உணர்வுகளின்றி வாழும் அகதிகளின் நிலை வெளியில் பூச்சிப் பூசிக் கொண்டு மினுங்கிக் கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசின் இன்னொரு இருண்ட பக்கத்தை உணர்த்தியதாக அமெரிக்காவின் மற்றுமொரு இருண்ட பக்கத்தை கதையாசிரியர் காட்டியிருப்பதைக் காணலாம்.

அமெரிக்கவானது ஆப்கானிஸ்தான் மீது மிகுந்த எதிர்ப்பை காட்டியிருந்த சு10ழ்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாய் வந்திருந்த டானியல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அமெரிக்காவின் இருண்ட தன்மை காட்டப்பட்டிருக்கின்றது. 'இந்த அமெரிக்கர்களே இப்படித்தான் எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் பிரச்சனையை தருவதே இவர்கள்தான். எங்களுடைய நாட்டு பிரச்சினைக்கு காரணமே இந்த அமெரிக்கர்கள் தான். இவர்கள் தருகின்ற பிரச்சனையிலிருந்து தப்பிப்பிழைத்து இங்கு வந்ததாலோ மனிதபிமானமே இல்லாமல் மிருகங்களைப் போல அடைத்து வைத்து மனோரீதியாக சித்திரவதைச் செய்கின்றார்கள்." எவ்வாறு முகாமிலிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் டானியல் என்பவரின் வாய்ச்சொல்லாகவும் அமெரிக்காவின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டுகின்றார்.

இதேசமயம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள் விடயத்தில் அமெரிக்கா ஒரு வித்தியாசமான வினோதமான சட்டமொன்றை இயக்கி வைத்திருக்கின்றது. நீதியையும் நியாயத்தையும் பாதுகாக்கத்தான் சட்டங்கள். ஆனால் அந்தச் சட்டங்கள் எந்த நியாயத்தை போதிக்கின்றதோ தெரியவில்லையென அமெரிக்காவின் சட்டங்களையும் விமர்சிக்கும் போக்கினையும் இதனூடாக காணமுடிகின்றது. தொடர்ந்து சுதந்திர தேவியின் சிலை கம்பீரமாக காட்சியளித்திருக்கும் நியூயோர்க் மாநகரிலே தங்களது மனித உரிமை மீறப்பட்டதாகவும், செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பதாகவும் கூறி மனிதஉரிமை மீறப்பட்ட தன்மையையும் காட்டியுள்ளார்.

அமெரிக்காவை நாம் புறத்தே பார்க்கும்போது மாபெரும் பெரிய வல்லரசாக திகழ்ந்தாலும் அவற்றுக்கான இன்னொரு பக்கம் நமக்கு தெரிவதில்லை. அந்தவகையில் வாசகர்களாகிய எமக்கும் அமெரிக்க நாட்டின்மேலிருந்த நல்ல அபிப்பிராயத்தை நீக்கி அதன் கருப்பு பக்கத்தையும் ஆய்வு செய்யக்கூடிய ஆய்வு புலமும் இதனூடாக தரப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக வ. ந கிரிதரன் அவர்களின் புலம்பெயர்ந்த நாட்டின் உண்மைத்தன்மையை மறைக்காது வெளிப்படையாக அந்நாட்டின் கறுப்பு பக்கத்தை காட்டி அந்நாட்டு சட்டதிட்டங்களையும் விமர்சித்துள்ளார். இது புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பண்பாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் போர் மற்றும் கலவர நிலைமைகளை படம் பிடித்து காட்டுதல்.

புலம்பெயர் இலக்கியங்கள் உருவாகுவதற்கு முதன்மைக் காரணியாக அமைவது நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் போர்ச்சு10ழல் ஆகும். அத்துடன் போரினால் ஏற்படும் கலவரங்கள் வன்செயல்கள், கொலை, கைது, சித்திரவதை, பாலியல் வன்புணர்வு போன்றவையும் காரணிகளாக அமையும். இத்தகைய காரணிகளை தமது இலக்கியத்தில் காட்டுவதும் புலம்பெயர் இலக்கியத்தின் பாடுபொருளில் ஒன்றாக காணப்படுகிறது. இத்தகைய விடயங்கள் 'அமெரிக்கா" என்ற புலம்பெயர் கதையிலும் கதை ஆரம்பத்திலிருந்து கதை முடியும்வரை தன்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இலங்கையின் போர்ச்சு10ழல் மற்றும் கலவரத்தன்மையை ஆசிரியர் பலவகையிலும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

கதையின் ஆரம்பத்தில் கதையாசிரியர் தாம் புலம்பெயர்ந்தமைக்கான காரணத்தை குறிப்பிடும் போது, இலங்கையின் போர் மற்றும் கலவர நிலைமைகளே தாம் புலம்பெயர்வதற்கு காரணமென அவ்விடத்தில் இலங்கையின் போர்ச்சு10ழலை காரணம் காட்டி அந்நிலமையை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

1983 இல் கலவரத்தின்போது வெள்ளவத்தை பகுதியில் தான் நேரில் பார்த்த ஒரு கலவர நிலை காரணமாக தமிழர்கள் தப்பியோடிய சம்பவத்தை நேரில் பார்த்தவாறு அப்படியே குறிப்பிட்டிருக்கிறார்.

'வெள்ளவத்தை பகுதியில் வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தெகிவலை பக்கமாக ரயில்வே தண்டவாளம் வழியாக ஓடுவது தெரிந்தது. வெள்ளவத்தை பகுதியில் புகைமண்டலம் நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தது. தண்டவாளம் வழியாக வயதான தமிழ்ப் பெண்கள் முழங்கால்வரை சேலையை இழுத்துப் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தார்கள். பார்க்க பாவமாயிருந்தது." என்றவாறு தமிழர்கள் விரட்டப்பட்ட தன்மை, குண்டுவெடித்ததால் பரவியிருந்த புகைமண்டலக்காட்சி, பெண்கள் தப்பித்துக்கொள்ள சேலையை பிடித்துக்கொண்டு ஓடிய காட்சி போன்ற கலவர நிலைமைகளை நம் கண் முன்னால் படம்பிடித்து காட்டுகிறார்.

1983 கலவரத்தின்போது கலவரக்காரர்கள் பெண்களை பலாத்காரமாக தயக்கமின்றி பாலியல் வன்புணர்வு செய்தனர். இத்தன்மையினையும் ஓரிடத்தில் ஓர்கதையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கதையாசிரியர் தன் நண்பனான அருள்ராசா என்பவரின் கதையோடு இணைத்து இச்சம்பவத்தை விவரிக்கிறார்.

அருள்ராசா என்பவர் அண்மையில் திருமணம் செய்த ஒருவர். இவர் அண்மைய கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஒருவர். இவனுடன் பணியாற்றிய ஓர் தமிழ்ப்பெண்ணை கலவரக்காரர்கள் மாணபங்கப்படுத்தியதை நேரிலேயே பார்த்தவன். அந்தப்பாதிப்பிலிருந்து இன்னமும் விடுபடாதவனாய் அருள்ராசா காணப்பட்டான்.

அருள்ராசாவின் கதையைச் சொல்வது போல இலங்கையின் கலவரத்தால் ஏற்பட்ட பாலியல் வன்புணர்வு செயல்களையும் இதனூடாக ஆசிரியர் சொல்லிச் சென்றுள்ளார். இது இலங்கையின் போர் நிலைமைகளில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோக விடயங்களை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

தடுப்பு முகாமிலிருந்த காலகட்டத்திலும் இலங்கையில் நடந்த கொடூர செயல்களை செய்தித்தாள் வாயிலாக அறிந்து கொள்கிறார்கள். 'கொழும்பில் பயணிகள் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியை எரித்தது, "வவுனியாவில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொலை செய்தது" போன்றவரான சம்பவங்களையும், தான் செய்தித்தாள் வழியாக அறிவதன் மூலம் இதனை ஓர் உத்தியாக பயன்படுத்தி கலவர நிலைமைகளை மீண்டும் நாவலில் ஞாபகப்படுத்திச் செல்கிறார்.

முகாமிற்கு புதிதாக விஜயபாஸ்கரன் என்ற யாழ்ப்பாணத்தவரும் வந்து சேர்கின்றான். இவரிடம் நாட்டுப் பிரச்சனையை விசாரித்து அறிவது போல இவர் நாட்டின் கலவரத்தன்மை இன்னும் அப்படித்தான் இருக்கிறது என்பதனூடாகவும் இலங்கையின் போர் நிகழ்வுகளை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

'தொடர்ந்தும் இலங்கையில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலிருந்தும் பள்ளிக்கூட பெடியளுகள் எல்லாம் இயக்கங்களில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இனிப் பிரச்சனை முந்தின மாதிரி ஒருபக்க இடியாக இருக்காது" என்றவாறு விஜயபாஸ்கரன் ஈழத்தின் தற்போதைய நிலைமைகளை கூறுகின்ற வகையிலும் போர் மற்றும் கலவர நிலைமைகளை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

1983 ஜீலை கலவரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், அதிலிருந்து தமிழர்கள் தப்பியோடிய தன்மை, கலவரக்காரர்களின் பாலியல் துஷ்பிரயோக செயல்கள், பள்ளிக்கூட பிள்ளைகள் இயக்கங்களில் சேர்ந்தவை போன்றவாரான இலங்கையின் கலவர நிலமைகளை ‌ கதையோட்டத்தில் வௌ;வேறான உத்திமுறைகளைப் பயன்படுத்தி உண்மைச் சம்பவமாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

அந்நியமாக்கப்படும் தன்மை

புலம்பெயர்ந்தோரின் தமிழ் படைப்புக்களில் 'அந்நியமாதல்" (யுடநையெவழைn) என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களில் பாடுபொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றன. புகலிடத்தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடிய உளவியல் பிரச்சனைகளில் ஒன்று அந்நியமாதல் எனும் நிலைப்பாடாகும். இலக்கிய படைப்பில் கசப்பான வாழ்க்கை சு10ழலுக்கு ஆட்படும் தன்னால் படைக்கப்பட்ட உலகிலிருந்தும் தன்னிடமிருந்தும் சகமனிதர்களிடமிருந்தும் பிரிந்து நிற்கும் மனிதனின் மனநிலை சார்ந்த கோட்பாடே அந்நியமாதல்‌ ஆகும். 1980 களின் பின்னர் இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலிருந்து இனவுணர்வு சு10ழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் படைப்புக்களில் அந்நியமாதல் என்ற உணர்வு நிலை தொடர்ச்சியாக பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா என்ற குறுநாவலிலும் அந்நியமாதல் தன்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இளங்கோவும் அவருடன் சென்ற மற்ற ஐவரும் 1983 கலவரத்தின் போது கனடா செல்ல முற்பட்டபோது இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் அகதி அந்தஸ்துக்கு கோர வேண்டியநிலை ஏற்படுகிறது. அமெரிக்காவும் இவர்களின் அகதி விண்ணப்பத்தை ஏற்று இவர்களுக்கான அகதி அந்தஸ்தை வழங்குகின்றது.

இவ்வாறு அகதியாக்கப்பட்ட இவர்களை அமெரிக்காவின் நியூயோயோக் நகரிலுள்ள அகதி முகாமில் தங்கவைக்கின்றனர். இங்கே இவர்களை ஒரு குற்றவாளிகளைப் போல நடத்துகின்றனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இவ்வாறான தன்மை ஆய்வின் முன் பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கைதிகளைப் போல் சட்டதிட்டங்கள், காவலர்களின் அதட்டல்கள், உருக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து உள்ளுர் உறவினரை பிரிந்து நொந்த மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு பாரிய குற்றம் செய்தவர்களை போல ஒடுக்கி வைக்கும் பாங்கு, அடிப்படை மனிதஉரிமைக்கு மதிப்பளிக்காத தன்மை போன்றவாறான விடயங்களின் மூலம் இவர்களின் அந்நியமாக்கப்பட்ட தன்மை நாவலில் வெளிப்பட்டு நிற்கின்றது.

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தல்

புலம்பெயர் இலக்கியங்கள் தாய் நாட்டின் மீது காணப்படும் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்தும். இந்நாhவலிலும் அத்தன்மை வெளிப்படையாக காட்டப்படாவிடினும் சில சொற்பிரயோகங்களின் மூலம் ஒரு சில சம்பவங்களினூடாக குறிப்பாக வெளிக்காட்டப்படுகின்றது.

நேரம் கிடைக்கும் போது வீட்டிற்கு அழைப்பு விடுத்து நாட்டு நிலைமைகளை விசாரித்தல், ‌ எப்படியாவது நாட்டு நிலைமையை அறிந்து கொள்ள முயற்சி செய்தல் போன்ற சம்பவங்களினூடாக இதனை அவதானிக்கலாம்.

தொடர்ந்து முகாமிற்கு புதிதாக வந்த விஜயபாஸ்கரன் மூலம் நாட்டின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள அவா கொள்கின்றனர்.‌ விஜயபாஸ்கரனின் மூலம் நாட்டின் நிலைமைகள் இன்னும் முடிவடையாமல் தீவிரமாக இருக்கிறது என்பதை அறிந்த பின் 'இங்கிருந்து வெளியிலை போனால் இலங்கை அரசின் அக்கிரமங்களுக்கு எதிராக வெளிநாட்டு மக்களை திருப்ப பாடுபட வேண்டும்." என்கின்றனர். அதாவது இலங்கையின் நாட்டு பிரச்சனையை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டுவர வேண்டுமானால் வெளிநாட்டு மக்களை இலங்கை நாட்டு மக்களுக்கு சார்பாக திருப்ப வேண்டும். சர்வதேச ரீதியில் உள்ள நாட்டு மக்களை இலங்கைக்கு சார்பாக திருப்பினால் நாட்டின் யுத்த நிலைமை முடிவுக்கு வரும். இவ்வாறு இவர்கள் யோசிப்பது இவர்களின் நாட்டுப்பற்றை வெளிக்காட்டி நிற்கின்றது. இந்நாவலில் வெளிப்படையாக நாட்டுப்பற்று காட்டப்படாவிடினும் இப்படியான மறைமுகமான விடயங்களினூடாக நாட்டுப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருப்பதனை காணலாம்.

உறவுகளைப் பற்றிய ஏக்கம், நினைவு மற்றும் பிரிவுத்துயர்

புலம்பெயர்வாளர் தான் புலம்பெயர்ந்தபின் இன்னொரு நாட்டிலிருந்துக் கொண்டு தமது நாட்டிலுள்ள உறவுகளை நினைப்பது, அவர்களைப் பற்றிய ஏக்கம், பிரிவுத்துயர் போன்றவற்றை புலம்பெயர் இலக்கியங்கள் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவதுண்டு. இத்தன்மை இவ்நாவலிலும் சில இடங்களில் வெளிப்படுகிறது.

அகதி முகாமில் இருக்கும் இளங்கோவிற்கு வீட்டின் ஞாபகங்கள் வருகின்றன. 'எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உழைத்து வீட்டு பிரச்சினைகளை முடித்து விட வேண்டும். தம்பியை மெதுவாக இங்கே இழுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும். அக்காவின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி வைத்துவிட வேண்டும். எல்லாவற்றையும் முடித்துவிட்டுதான் கௌசல்யாவின் நிலையை பார்க்க வேண்டும்." கௌசல்யாவின் நினைவுகள் இவரின் நெஞ்சுக்கு இதமாக காணப்பட்டதாம். போன்றவாறான விடயங்கள் கதையாசிரியரின் வீட்டு மற்றும் உறவுகளின் நினைவாகவும், காதலி கௌசல்யாவை பிரிந்திருக்கின்ற தன்மை பிரிவுத்துயரையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

தலைப்பின் பொருத்தப்பாடு

ஒரு விமர்சகன் அல்லது ஓர் ஆய்வாளன் என்ற வகையில் இந்நாவலின் தலைப்பானது கதைக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றதா என்பதை கூறவேண்டியது கட்டாயக் கடமையாயிருக்கிறது. வ. ந. கிரிதரன் அவர்களால் எழுதப்பட்ட அமெரிக்கா என்ற இந்நாவல் அமெரிக்காவை கதைக்களமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

இளங்கோ உட்பட்ட நபர்கள் அமெரிக்காவில் கைதாகி அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள அகதி முகாமில் சேர்க்கப்பட்டது, அகதி முகாமின் அனுபவங்களை கூறுவது, பின்னர் முகாமிலிருந்து வெளியேறுவது போன்றவாறான சம்பவங்கள் அமெரிக்காவை கதைக்களமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் மீது நாம் இதுவரை கொண்டிருந்த நல்ல அபிப்பிராயங்களை நீக்கி அதன் இன்னொருபக்க கறுப்பு பக்கத்தையும் இந்நாவல் எடுத்துக்காட்டியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் அகதிகளின் நிலை, இவர்களை அமெரிக்க அரசாங்கம் நடத்தும் விதம் போன்றனவும் அமெரிக்காவின் சட்டத்திட்டங்களை விமர்சிப்பதுமாக இந்நாவல் காணப்படுகின்றது.

மேற்சொன்ன வகையில் நோக்கும்போது இந் நாவலானது முழுவதும் அமெரிக்காவை கதைக்களமாகக் கொண்டு இந்நாட்டை பலவாரும் விமர்சித்து எழுதியிருப்பதால் இந்நாவலுக்கு 'அமெரிக்கா" என்ற தலைப்பு பொருத்தப்பாடுடையதாய் காணப்படுகின்றது.

ஒரு விமர்சகன் என்ற வகையில் இந்நாவல் பற்றிய என்னுடைய கருத்துக்கள்

நான் 2001 ஆம் ஆண்டு பிறந்து தற்போது 23 வயதை கடந்தவனாய் காணப்படுகின்றேன். என்னை பொறுத்தவரையில் இலங்கையின் யுத்தம் மற்றும் போர் நிலைமைகள் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாது. பெரியவர்கள் கூறியும் வரலாறு பாடத்தில் கற்ற சில விடயங்களுமே இலங்கையின் போர் மற்றும் கலவரம் பற்றி நான் தெரிந்திருந்த சிறு தகவல்களாய் இருந்தது. இந்நாவலை படிக்கும் போது இலங்கையின் போர் மற்றும் யுத்த நிலைமைகளை இன்னும் அதிகமாக உணர்வுபூர்வமாக அறியக் கூடியதாய் இருந்தது.

நான் 'அகதி வாழ்க்கை" மற்றும் 'அகதி முகாம்" போன்ற சொற்களை செவிவழியாக கேள்விப்பட்டிருக்கின்றேன் என்பதைத் தவிர அதனைப் பற்றிய ஒரு விடயமும் இந்நாவலை படிக்கும் வரைக்கும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இதனை படிக்கும் போது அகதி முகாம் எனும் போது அது எவ்வாறு இருக்கும், எவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அகதியாக்கப்படுவோம், அகதி முகாம் வாழ்வின் அவலங்கள் போன்றவற்றை நான் இந்நாவலை வாசிக்கும்போது நானே அகதியாக இருந்து இந்நாவலை வாசிப்பது போல உணர்வுபூர்வமாக காணப்படுகின்றது. இவ்வாறாக போர் மற்றும் யுத்த நிலைமைகள் அகதி வாழ்க்கையின் அவலங்கள் போன்றவற்றை இந்நாவலை வாசிப்பதன் மூலம் அதைப்பற்றிய விவரங்களை உண்மை நிலையிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இதுபற்றி அறிந்திராத இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் ஓர் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பாத்திரப் படைப்பு - இக்கதையில் பெருமளவிலான பாத்திரப் படைப்புகள் இல்லை. இக்கதையில் இளங்கோ, மனோராஜன், ரவீந்திரன், ராஜசுந்தரம், அருள்ராசா போன்ற ஐந்து கதாமாந்தவர்கள் பிரதான கதாபாத்திரமாக காணப்படுகின்றனர். கதையாசிரியர் இளங்கோ என்ற பெயரில் வரும் தனக்கே முதலிடம் கொடுத்து இந்நாவலை நகர்த்திச் சென்றுள்ளார். ஏனைய கதாபாத்திரங்களை கதை நகர்வுக்காக சிறு சிறு இடங்களில் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். ரிச்சர்ட், தானியேல், ரோமியோ, அப்துல்லா, விஜயபாஸ்கரன், ஆபிரகாம் பாதர் போன்றோரையும் கதை நகர்வுக்காக சில இடங்களில் மட்டும் பாத்திரமாக படைத்துள்ளார். இவ்வாறு தன்னை பிரதான கதாபாத்திரமாகவும் ஏனையோரை கதை நகர்விற்காக சிறு சிறு இடங்களில் மட்டும் பயன்படுத்தி பாத்திரப்படைப்பை படைத்துள்ளார்‌. இவ்வாறாக இந்நாவலின் பாத்திரப்படைப்பு பற்றி காணக்கூடியதாக உள்ளது.

மொழிநடை - கதையாசிரியர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டதால் யாழ்ப்பாண பேச்சு வழக்குச் சொற்கள் இடையிடையே காணப்படுகின்றன.

உதாரணம் :

'அண்ணை நான் அதைச் சொல்லேலை, எப்படி இலங்கையிலிருந்து வெளியிலை போகலாமென்றதைத்தான் சொன்னன்."

'இப்படி இரண்டு மூன்று வருஷம் உள்ளேயே கிடக்க வேண்டுமென்றதை காசை செலவழித்து ஏன் வெளிக்கிட்டனென்றிருக்கு... ஊரிலை மனுஷியும் பிள்ளையையும் கனடாவிற்குப் போய் கெதியிலை கூப்பிடுறனானென்றிருக்கிறேன்..."

மேலும் இந்நாவலில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகம் அதிகமாக காணப்படுகின்றது.

உதாரணம் : 'சேர் வீ ஆர் சோ ஹங்றி இவ் யூ அலோ அஸ்டுபை சம்திங் டூ ஈட், வீ வுட் பீ ரியலி கிரேட் புல்"

'யு கென் கேவ் யுவர் பிரேக்பாஸ்ட் இன் கலம்போ."

இவ்வாறாக யாழ்ப்பாண பேச்சு மொழியும், ஆங்கில சொற் பிரயோகமும், எழுத்து நடையுமாக இந்நாவலின் மொழிநடை காணப்படுகின்றது.

கதையோட்டம் : இந்நாவலில் பெருமளவிளான நகைச்சுவை, காதல் சுவை போன்றவாறான விடயங்கள் கதையோட்டத்தில் இல்லை. இக்கதையின் தொடக்கம், கதை வளர்ச்சி, கதையின் உச்சம், முடிவு என அனைத்து கட்டங்களும் ஒரே நிலையாவவே காணப்படுகின்றது. அடுத்தடுத்து என்ன நடக்குமென்ற பரபரப்பாகவே இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக இதன் கதையோட்டம் பற்றி கருத்து தெரிவிக்கக்கூடியதாய் உள்ளது.

முடிவுரை

புலம்பெயர் இலக்கியமானது பல தளங்களிலிருந்து உருவாகக்கூடிய ஓர் இலக்கிய வகையாயினும் இத்தொடரானது ஈழத்தில் நடைபெற்ற இனப்போரின் காரணமாகப் புலம்பெயர்ந்து தாம் வாழ்ந்த தமிழ்ச்சு10ழலுக்கு முற்றிலும் முரணான அந்நிய நாடுகளுக்குப் பயணித்த மனிதர்களைப் பற்றிய பதிவுகளாக அமைகின்றது. எனவே, 'புலம்பெயர் இலக்கியம்" என்று குறிப்பிடப்படும் சொற்றொடரூடாக ஈழத்தமிழர்களின் படைப்புக்களே கருத்திற்கொள்ளப்படுகின்றன என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும். இவர்கள் புலம்பெயர்வதற்குப் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினாலும் மிக வலுவான காரணிகளாக இருப்பவை அரசியல் பிரச்சினைகளே ஆகும். அமெரிக்கா என்ற குறுநாவலும் இதற்கு விதிவிலக்கல்ல. சொந்த நாட்டு பிரச்சினைகளை மறக்க முடியாது. அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அதேசமயம் புதிய சூழலின் தாக்கங்களிலிருந்தும் தப்ப முடியாது. அமெரிக்கா என்ற நாவிலும் இத்தன்மைகள் வெளிப்படத்தான் செய்கின்றன. ஆங்கில மொழியிலுள்ள எத்தனை சிறுகதைகள் நாவல்களை படித்தாலும் தஞ்சம் புகுந்த தமிழர்களைப் பற்றி மட்டுமல்ல புகுந்த நாட்டவர் வாழ்க்கையையும் தமிழ் மொழி மூலம் படைக்கப்படும் எழுத்துக்கள் மூலம் அறிந்து நடந்து கொள்வது போல தெரிந்துக்கொள்ள முடியாது இதற்கு அமெரிக்கா என்ற இப்படைப்பும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

உதவி நூற்பட்டியல்

கிரிதரன். வ. ந, (1996), அமெரிக்கா, ஸ்நேகா மங்கை பதிப்பகம், சென்னை.
கிரிதரன் வ.ந.அமெரிக்கா, மகுடம் பதிப்பகம்ம், மட்டக்களப்பு, இலங்கை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R