பதிவுகள் முகப்பு

ZOOM வழியான , 6வது தொடர் கலந்துரையாடல்: எஸ். பொன்னுத்துரை எழுத்தாளர் , பதிப்பாளர் (1932 - 2014) - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
16 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ்! இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் நாவல் நூற்றாண்டு காலம் 1976 இல் வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார். அக்காலப்பகுதியில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி. பின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள். அதற்கு முன்பே, இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார். ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர் செல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார். கைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.

அதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். சில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது. நூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

இத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது. அதன் உள்ளடக்கமும் கனதியும் பிரமிப்பைத்தருகிறது. அதற்காக உழைத்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். மொத்தம் 107 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

உதவிகளும் வறுமை ஒழிப்பும்! உலகில் இலங்கையின் அனுபவம்!

விவரங்கள்
- தகவல்: பாலநந்தினி பாலசுப்ரமணியம் -
நிகழ்வுகள்
12 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலி: சமூக,அரசியற் செயற்பாட்டாளர் நவரஞ்சன் (கோண்டாவில்) மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று ஒரு துயரம் நிறைந்த நாள். எதிர்பாராத தகவலொன்றினை நண்பர் சிவா கந்தையா 'மெசஞ்சர்' வாயிலாக அனுப்பியிருந்தார். நண்பர் குணபாலனும் தொலைபேசியெடுத்து அறியத்தந்திருந்தார். அவருடன் தொடர்பிலிருந்த நண்பர் கிருஷ்ணாவும் அறியத்தந்திருந்தார். நண்பர் நவரஞ்சனின் (கோண்டாவில்) மறைவு பற்றிய செய்தி. நம்ப முடியவில்லை. நேற்றிரவு கூட எட்டு மணியளவில் முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். செய்தியைக் கேட்டபோது மன அழுத்தம், கொரோனாத் தொற்று நோய்த்தனிமை இவையெல்லாம் இன்னும் எத்தனைபேரை நம்மிடமிருந்து பிரிக்கப்போகின்றதோ என்ற எண்ணமே மேலெழுந்தது. கூடவே அவரை முதன் முதலில் சந்தித்த காலகட்ட நினைவுகள் எழுந்தன. நாட்டை விட்டு நீங்கி, அமெரிக்காவில் ஒரு வருடம் அலைந்து திரிந்து, 'கல்வியங்காடு கண்ணன்' என்னும் நண்பருடன் மொன்ரியால் வழியாகக் கனடாவுக்குள் வந்தபோது கண்ணன் மூலம் தற்காலிகமாக மொன்ரியாலில் கோண்டாவில் சுந்தரி (சிவா ஸ்டோர்ஸ் சுந்தரலிங்கம்) , ரஞ்சன் போன்றோர் வசித்து வந்த அபார்ட்மெண்டில் தங்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளைக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் சுந்தரியும் அவரது நண்பர்களும். சுந்தரி, நவரஞ்சன், குணபாலன், ஜெயந்தி (உரும்பிராய்), கஜன் , குகன் என்று இளைஞர்கள் பலர் உத்தியோகபூர்வமாகக் கழகத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் மொன்ரியாலிலிருந்து 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.  நவரஞ்சன் அச்சஞ்சிகை வெளிவருவதற்காகக் கடுமையாக உழைத்தவர்களிலொருவர். இலட்சியக் கனவுகளுடன், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இயங்கிக்கொண்டிருந்த நவரஞ்சனின் முகம் இப்பொழுதும் நினைவில் பசுமையாக காட்சியளிக்கின்றது.

மேலும் படிக்க ...

அறிந்து கொள்வோம்: கேலிச்சித்திரக்காரர் அவந்த ஆர்டிகல (Awantha Artigala)! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அவந்த ஆர்டிகலா.  'டெய்லி மிரர்', 'அத்த' ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் அவரது கேலிச்சித்திரங்கள் தனித்துவமானவை. முக்கியமானவை. மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. சமூக,அரசியல் நிகழ்வுகளை படைப்புத்திறமையுடன், சமுதாயப்பிரக்ஞையுடன் விமர்சிப்பவை.

இலங்கை பல கேலிச்சித்திரக்காரர்களைக் கண்டுள்ளது. விஜேரூபகே விஜேசோமா (.Wijerupage Wijesoma)  அவர்களில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர். அவரது கேலிசித்திரமே அவந்தா ஆட்டிகல முதன் முறையாக , அவர் சிறுவனாகவிருந்த சமயம் எதிர்கொண்ட கேலிச்சித்திரம்.

பின்னர் விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் அதனை உதறிவிட்டு முழுநேரமாகக் கேலிச்சித்திரக்காரராக இயங்கத் தொடங்கி விட்டார். இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர்களிலொருவராக அவர் தன்னை அடையாளப்படுத்திவிட்டார்.

மேலும் படிக்க ...

பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவாக.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10!

பேராசிரியர் கா.சிவத்தம்பியை நான்  முதன் முதலில் அறிந்துகொண்டது அவரது 'தமிழில் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' ஆய்வு நூல் மூலம்தான்.  தினகரன் வாரமஞ்சரியில்  அவர் எழுதி வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அந்நூல். தமிழ்ப்புத்தகாலய வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது. அவ்விதம் தமிழகத்தில் மேற்படி நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் என்பதை நூலுக்கான முன்னுரையில் பேராசிரியரே கூறியுள்ளார்.

இந்நூல் எனக்கு எவ்விதம் கிடைத்தது என்பதும் என் வாழ்வில் சுவையானதோர் அம்சம். ஏழாம் வகுப்பு மாணவனாக , மட்டக்களப்பில் நடந்த அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவில் கட்டுரை எழுத வவுனியா மகா வித்தியாலய மாணவனாகச் சென்றிருந்தேன். அதில் எனக்குக் கிடைத்த முதற் பரிசுக்காகக் கிடைத்த நூல்களிலொன்றுதான் மேற்படி நூல்.

அக்காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் எழுதிய பலரும் தவறாது பாவித்த நூல்களிலொன்று இந்த நூல்.

இதன் பின்னர் என் வாசிப்பின் வளர்ச்சியினூடு இவரது கட்டுரைகள், நூல்களை வாசித்து வந்துள்ளேன். இவரது அறிவாற்றலில் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் இவரது பிற்காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் இவரது நிலை தளும்பியதையும், சிலவற்றில் சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன். முழுமதிக்கறைகளாக அவற்றை நான் அணுகுவேன்.

இவரை நான் ஒரு தடவை நேரில் சந்தித்துள்ளேன். நண்பர் ஒருவருடன் எண்பதுகளின் ஆரம்பத்தில் 'நுட்பம்' சஞ்சிகைக்காகக் கட்டுரை பெறுவதற்காகச் சந்தித்துள்ளேன். கட்டுரை தருவதாக உறுதியளித்தார். அச்சமயம் பேராசிரியர் கைலாசபதியையும் சந்தித்தேன். அவரும் குறிப்பிட்டதொரு தினத்தில் தருவதாக உறுதியளித்ததுடன் அத்தினத்தையும் தனது குறிப்பேட்டில் எம் முன்னால் வைத்தே குறித்துக்கொண்டதையும் அவதானித்தேன். குறித்த தினத்தில் பேராசிரியர் கைலாசபதி கட்டுரையினைத்தந்தார். பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை கிடைக்கவேயில்லை.

மேலும் படிக்க ...

சிறுகதை: பொற்கூண்டுக்கிளிகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
10 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தாயகம் (கனடா) பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 'கணங்களும், குணங்களும்' என்னும் பெயரில் வெளியான சிறு நாவலே அவ்விதம் எழுதிய முதற் படைப்பு. அதன் பின்னர் சிறுகதைகள் சில (ஒரு விடிவும், ஒரு முடிவும், பொற்கூண்டுக்கிளிகள், ஒட்டகங்கள், மழையில் சில மனிதர்கள், இன்னுமொரு கதை) மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தன. இங்குள்ள 'பொற்கூண்டுக்கிளிகள்' கனடாவில் வசிக்கும் முதியவர்களின் வாழ்வு பற்றியது. இதுவரையில் வெளியான எனது தொகுப்புகள் எவற்றிலும் வெளிவரவில்லை. இச்சிறுகதை தாயகம் பத்திரிகையாக தொடங்கிய காலகட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் வெளியானது. சில திருத்தங்களுடன் இங்கு மீண்டும் வெளியாகின்றது.  -


மகன் ராம்குமார், மருமகள் தமயந்தி, மகள் வதனா எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் மாலையில்தான் வருவார்கள்.  ராஜதுரையார் அது மட்டும் அப்பார்ட்மெண்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் செல்லம்மா மட்டும் இருப்பாளென்றால் அவருக்குத்தான் எவ்வளவு துணையாக இருக்கும். ம்... மகராசி நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டா..

'இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் .. உவங்கள்  ஆமிக்காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப்பதற்கு.. இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும்.

என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம் , உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....

இங்கு இவருக்கு என்ன குறை?

அன்பான பிள்ளைகள், பண்பான மருமகள், வேளை வேளைக்குச் சாப்பாடு, எல்லாமே இலகுவான வகையில் செய்யும்படியான வசதிகள்..வருத்தமென்றால் 'ஓகிப்' இருக்கிறது. .. டாக்டர் இருக்கிறார்... டி.வி.யைத்திருப்பினால் வகை வகையான நிகழ்ச்சிகள்.. அடிக்கடி உடனுக்குடன் ஊர்ப்புதினங்களை அறியத்தமிழ்ப் பத்திரிகைகள்.. தொலைபேசிச் செய்திகள்....

மேலும் படிக்க ...

அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்!

விவரங்கள்
Administrator
சுற்றுச் சூழல்
09 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அன்னையின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
 
 
அற்புதம்! இந்தக் கரடியன்னை தன் குழந்தைகளுடன் வீதியைக் கடக்க முற்படுகையில்தான் எத்தனை எத்தனை தடைகள்! குழந்தைக்கரடிகளின் குழந்தைத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, எத்துணை பொறுமையாக இந்த அன்னை வீதியைக் கடக்கின்றது.
அன்னையின் முயற்சி வெற்றியடையும் வகையில் பொறுமை காத்த மானுடர்களுக்கும் நன்றி!
 
https://www.youtube.com/watch?v=ho3IFJiBzrY

தொடர் நாவல் : கலிங்கு (2006 -10) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
09 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


10

லாம்பு கொளுத்த இன்னும் நேரமிருந்தது. மேற்கு மூலையில் சூரியன் அழுந்திச் செல்ல, கிழக்கு மூலையிலிருந்து கிளம்பி மேலே பரந்துகொண்டிருந்தது இரவு. பகலைச் சந்திக்கும் புள்ளியை இரவு கடக்கும் கணம் அது. பார்த்துக்கொண்டே சங்கவியிருக்க இரவு புள்ளியைத் தாண்டிற்று ஒரு பாய்ச்சலாக. நிலா தோன்றியிருக்க வேண்டிய நேரம். ஆனால் அதன் சுவடுகூட தெரியாதபடி வானத்தை மேகம் மூடியிருந்தது. எந்த நாளுமில்லாத ஒரு இருண்ட திரைபோல் வானத்தில் அது தொங்கிக் கொண்டிருந்தது. மடியில் கார்த்திகாவை இருத்தி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஒரு ஸ்தம்பிதத்தில்போல் மேற்குப் பார்த்தபடி இருந்தாள் சங்கவி.

மின்மினிகள் பறந்து இரவின் முழுமையைச் சொல்லிச் சென்றன.

மேலே இருளும், பூமியில் நிசப்தமும் நிரம்பி வழிந்தன.

எதிர் வீட்டுக்காரர் நல்ல சனங்கள். அவர்களும் போய்விட்டிருந்தனர். வீடு இருண்டு கிடந்தது. அம்மா, பாட்டி, அப்பா, தாமரையக்கா எல்லாரும் நல்லவர்கள். தாமரையக்காவின் தம்பி செழியனை ஆறு மாதங்களுக்கு முன் இயக்கம் வந்து தாய், தமக்கை, பாட்டி அத்தனை பேர் முன்னிலையிலும் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் அவனைப் போருக்கு இழுத்துச் சென்றது. கையிலே துவக்கு இருக்கிறபோதும் எதிரியை அவன் சுடுவானாவென சந்தேகப்படும்படி அவனது முகம் அந்தளவு பிள்ளைமைத் தனத்தோடு இருந்திருந்தது. ஊரிலே நடப்பது தெரிந்திருந்த தாயும் தந்தையும் கல்யாணமொன்றைச் செய்துவைக்க  அவனை நான்கு மாதங்களாகக் கெஞ்சினார்கள். வடிவான பெட்டை, பதினாறுதான் வயது, பொத்திப் பொத்தி வைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வீட்டிலே, அவளது ஒரு தமையனும், ஒரு தமக்கையும் இயக்கத்தில் இருப்பதால் போராளியாக வலுக்கட்டாயமாய் இயக்கத்தில் சேர்க்கிற பிரச்னையில்லாமல் இருக்கிறார்கள், அவளுக்கும் சம்மதமாயிருக்கிறதென என்ன அவர்கள் சொல்லவில்லை? தனக்கே பதினாறு வயதுதானாகிறது, ஓ.எல். எழுதியதும் ஏ.எல். படிக்கவேண்டும், கம்பஸ் போகவேண்டுமென்று விடாப்பிடியாக அவர்களது கெஞ்சல்களை செழியன் மறுதலித்திருந்தான். ஒவ்வொரு தெரிந்தவர் உறவினர் வீடாக கொஞ்சக் கொஞ்ச நாட்கள் ஒழித்தும் வைத்தார்கள். அவன் வீடு வந்திருந்த ஒருநாள் அதிகாலையில்  வந்து அவனை இயக்கம் பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டிலே மூன்று நாட்கள் விடாத அழுகையொலி கேட்டது. சோகம் மீறுகிற அளவில் அவனது தாய்க்கு ஒப்பாரியாகவே வந்தது. தாமரைதான், வில்லங்கமாய்க் கூட்டிப்போயிருந்தாலும், களத்தில் நிக்கப்போகிறவன்மேல் ஒப்பாரி வைக்கக்கூடாதென அவளை அடக்கிவைத்தாள். அப்போது அவள் கொஞ்சம் தெளிந்திருந்தாள். ஆனாலும் கண்ணீர் நிற்காதவளாகவே இருந்தாள். அதற்குள் சகலதையும் விட்டுவிட்டு அவர்கள் சொந்த மனை நீங்கிவிட்டார்கள்.

வெளிக்கிடுவதற்கு முன் தாமரையக்கா வந்து சங்கவியைக் கேட்டிருந்தாள். ‘சனமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கு, சங்கவி. நீயும் பாக்கிறாய்தான?’

மேலும் படிக்க ...

ஆய்வு: இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -
ஆய்வு
09 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்தியம்பும் இலக்கியக் காலக் கண்ணாடியாகத் திகழும் இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் மனிதனது வாழ்வின் பல்வேறு நிலையை வெளிக்காட்டுவதாகவும், தனி மனிதன் தன்னுடைய வாழ்விற்குத் தேவையான இனிய, இன்னாத செயல்களை அழகுற எடுத்தியம்பும் உயிரோட்டத்துடன் கூடிய இலக்கியமாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொண்ட இலக்கியமானது மனிதனோடு ஒன்றிணைந்து இயங்கும் நிலையைக் காணலாம். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மக்கள் எல்லோரும் தனக்கென வாழாது பிறர்க்காக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தன்னைத் தேடி வந்த புலவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை உபசரிக்கின்ற முறையையும் இலக்கியங்கள் பறைசாற்றும் நிலையைக் காணலாம். சங்க இலக்கியம் தமிழர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது. அவற்றுள் உணவு முறைகளைப் பற்றிய கருத்தினைத் தொகுக்கும் களமாக அமைகிறது.

தமிழர்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த சிறப்பிற்குரியது தொல்காப்பியம். பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பல் அமைந்தமையை,

“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர்மாண்புகள்” (தொல்.1102)

தொல்காப்பியர்சுட்டுகிறார்.

விருந்து

‘விருந்து’ என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகிறது. ‘ஓம்பல்’ என்ற சொல் பாதுகாத்தல், சிறப்புச் செய்தல் முதலிய பொருள்களில் வழங்கப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவு அளித்துச் சிறப்பு செய்த நிலமையைக் குறிக்கும்.

மேலும் படிக்க ...

நோர்வேயில் சிறுவர் கதைகள் நூல்களான நண்பர்கள்,வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திகாவின் பள்ளி நாள் நூல்கள் வெளியீடு! - யோகராணி கணேசன் -

விவரங்கள்
- யோகராணி கணேசன் -
நிகழ்வுகள்
09 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

17.04.2021 அன்று மாலை 6 மணிக்கு நண்பர்கள், வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திக்காவின் பள்ளி நாள் ஆகிய மூன்று சிறுவர் சிறுகதைகள் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது. தற்கால கொரோணா சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு இணைய முற்றத்தில் Team செயலியூடாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: இளங்கோவின் ‘மெக்சிக்கோ’: இன்றைய காலத்தின் நாவல்! - எஸ்.கே.விக்னேஸ்வரன் -

விவரங்கள்
- எஸ்.கே.விக்னேஸ்வரன் -
நூல் அறிமுகம்
07 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி இதழின் நாவல் சிறப்பிதழில் வெளிவந்த (150ஆவது இதழ்)  எழுத்தாளர் இளங்கோ  எழுதிய ‘மெக்சிக்கோ’ என்ற நாவல் பற்றிய எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் கட்டுரை. -


இளங்கோவின் ‘மெக்சிக்கோ’ நாவல் பற்றி ஜீவநதியின் 150 வது இதழுக்கு ஒரு விமர்சனம் எழுதமுடியுமா என்று இதழாசிரியர் பரணீதரன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அந்த இதழ்  ‘ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக’  வரப்போவதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அதிகம் யோசிக்காமல் அவருக்கு ஓம் என்று பதில் போட்டுவிட்டேன். ஆனால் நாட்செல்லச் செல்ல ஒருவகைத் தயக்கம் எழத் தொடங்கியது. நான் இதுவரை காலத்தில் எப்போதாவது ஒரு நாவல் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேனா, எழுதியவை எல்லாமே வெறும் அனுபவக் குறிப்புகளாக அல்லது அறிமுகக் குறிப்புகளாகத் தானே இருந்திருக்கின்றன. அப்படி இருக்க என்ன துணிவில் இந்த நாவலுக்கு மட்டும் எப்படி விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன்?. பேசாமல் ஒரு அனுபவ அல்லது அறிமுகக் குறிப்பை எழுதி அனுப்பிவிடலாமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.

இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாவலை மீண்டுமொருமுறை திரும்ப வாசித்தேன். இரண்டாவது வாசிப்பின் போது நாவலுள் இன்னமும் அதிகமாக உட்செல்ல முடிந்தது உண்மைதான். ஆயினும் விமர்சனம் எழுதுவதற்கான உந்துதல் எளவில்லை. ஆனால் இப்போது இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து சரியாக இரண்டு நாட்களுக்கு முதல் இளங்கோ தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டதென அவர் குறிப்பிட்டிருந்தாலும், இப்பதிவை நான் இப்போதுதான் முதலாவதாக வாசித்ததாக நினைக்கிறேன். அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்த ஒரு விடயம் என்னை சற்று நின்று திருப்பி வாசிக்க வைத்தது. அவர் எழுதியிருந்தார்:

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி! மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது. அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் நடேசன், இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின் சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும் அங்கதம் இழையோடியிருக்கும். அந்தரங்கம் கதைத்தொகுதியும் விலக்கல்ல. இதனை வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு, முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது தொடக்கம், இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத் தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும், நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். தமிழகத்தின் மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை முன்னுரையாக எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ...

Open Call: Translators from South Asia! - Kanchana Priyakantha -

விவரங்கள்
- Kanchana Priyakantha -
நிகழ்வுகள்
06 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வைரவிழாக் காணும் தேசபாரதி! கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் எடுக்கும் பாராட்டு விழா!

விவரங்கள்
- தகவல்: தேசபாரதி -
நிகழ்வுகள்
06 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்! - தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
06 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்"

இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகின் இரசிகர்களையெல்லாம் கவர்ந்தவர் நாட்டுப்புறப்பாடகர் டி.கே.எஸ்.நடராஜன்.  இவர் பாடிய கொட்டாம்பட்டி றோட்டிலே பாடலும் மிகுந்த  வரவேற்பைப் பெற்ற பாடல்.

'ரத்தபாசம்' திரைப்படத்தின் மூலம் நடிகராகத் திரையூலகில் நுழைந்தவர் ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக விக்கிபீடியா கூறுகின்றது. அவர் நேற்று (மே 5) மறைந்த செய்தியினை அறிந்தபோது அவரது பாடல்களை மீண்டுமொருமுறை மனது அசை போட்டது.

இள வயதில் வயதில் டி.கே.எஸ் நாடகக் குழுவில் பல நாடகங்களில் நடித்த காரணத்தினால் டி.கே.எஸ்.நடராஜன் என்று அழைக்கப்பட்டார்.

'வாங்க மாப்பிள்ளை வாங்க' திரைப்படத்தில் இடம் பெற்ற இவரது 'என்னடி முனியம்மா' பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.

இப்பாடல் பின்னர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த வாத்தியார் திரைப்படத்திலும், இமான் இசையில் சிறப்பாக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. அப்பாடலைப்பாடியவர்கள் பாடகர் கார்த்திக், பிலாஸ் (Blaaze). அதில் கெளரவத்தோற்றத்தில் டி.கே.எஸ்.நடராஜனும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு உடுமலை நாராயண கவி இலக்கிய விருது! - தகவல்: சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
05 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது. உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் வழங்கினார்.  இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி நாவலாசிரியர் முத்து நாகு, கீரனூர் ஜாகீர்ராஜா, கவிஞர் ஆண்டன் பென்னி, மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குனர் லெனின் பாரதி, பேராண்மை ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் போன்றோர்

உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். உடுமலை ஆய்வு நடுவத்தைச்சார்ந்த குமாரராஜா, அருட்செல்வன், பேரா ஜெயசிங், பேரா. கிருஷ்ணன், பேரா. கற்பகவள்ளி,சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றி மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் ), கிருஷ்ணன்( முதல்வர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கலூரி), வேலுமணி ( தமிழ்த்துறைத்தலைவர் உடுமலை ஆகியோர் பேசினர். எழுத்தாளர் குமாரராஜா வரவேற்பு நல்கினார்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: ஒரு கல் கரைந்தபோது (1) - ஶ்ரீராம் (நெல்லை, வீர்வநல்லூர்) -

விவரங்கள்
- ஶ்ரீராம் (நெல்லை, வீர்வநல்லூர்) -
நாவல்
03 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று!

பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களான, “பெரிய கோயில்” என்று உள்ளூருக்குள் அழைக்கப்படும், அருள்மிகு., ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் ஆலயம், ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை விக்கிரம பாண்டீஸ்வரர் ஆலயம்,ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சுந்தர்ராஜப்பெருமாள் ஆலயம் போன்றவற்றால் பழம்பெருமையும்….. அருள்மிகு.,புனித வியாகப்பர் ஆலயம், மல்கா மலியார் ஜிம்ஆ பள்ளி போன்றவற்றால் சகோதரத்துவமும்….. ஊரைச்சுற்றி நிறைந்துள்ள உயர்வுமிக்க வயல்வெளிகளால் செழிப்பும்…. அவ்வப்போ பருவங்களில் ஜீவநதிபோல ஓடும் “கன்னடியன் கால்வா”யால் வயல்களுக்கு உயிரும்…… பொலிவினைத் தர, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள, எங்க ஊரை “வீரவநல்லூர்”என்பாக.

இங்கு தெற்குரத வீதியில், வடக்கு வாசல் அமைப்பில்தான் எங்க வீடு உள்ளது.

அதன் மூன்றாவது மாடியில், அதாவது மொட்டை மாடியில் வடப்புறக் கிறிலோடு ஒட்டி, ஸ்டூல் போட்டு உட்கார்ந்த நிலையில் தூரத்தே தெரியும் வயலை ரசித்தவளாக நான்.

மஞ்சள் வர்ணத்தைப் பூசிக்கொண்ட மாலைக் கதிரவனின் ஒளியால், இயற்கைப் பசுமைக்கு இன்னும் மெருகூட்டப்பட, ஏற்கனவே வெளியுலகை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த “குடலை” நெற்குருத்தெல்லாம், “விடலை”ப் பொற்குருத்தாக மாயம் செய்தன.

மொட்டை மாடிக்கு யாரோ வந்துவிட்டுப் போனதுபோல தெரிந்தது. அதிலே கவனம் செலுத்தாமல் இருந்தேனாயினும், அடுத்துக் கேட்ட சத்தம் என்னை அதிரவைத்தது.

“பாரும்மா…. சித்தி இங்கை, மொட்டை மாடி விளிம்பிலயிருந்து வெளிய எட்டிப் பாத்துக்கிட்டிருக்காம்மா…..”

ஏதோ விசித்திரத்தைக் கண்டவன்போல பலத்த சத்தமிட்டுக்கொண்டு மாடிப்படியிலிருந்து தாவிக்குதித்து, கீழே ஓடினான், எனது அக்காளின் மகன்.

மேலும் படிக்க ...

தமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
02 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.

தற்போதுள்ள சூழலில் திமுகவின் வெற்றி முக்கியமானது. சூழலின் தேவையும் கூட. ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் தலைமையில் அதிமுக தமிழகத்தையே மோடியின் தலையாட்டும் பொம்மையாக மாற்றி வைத்திருந்தது. தமிழகத்தில் மதவாதக் கட்சிகளை மீண்டும் தலையெடுக்க முண்டுகொடுத்துக்கொண்டிருந்தது. இந்நிலையை மாற்றுவதற்கு ஸ்டாலினின் வெற்றி அவசியமாகவிருந்தது. தமிழகத்தின் சுயமரியாதைக்கு இவ்வெற்றி தேவையாகவிருந்தது. அது கிடைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்களிப்பாக நான் கருதுவது தமிழகத்தில் மதவாத மூட நம்பிக்கைகளுக்கெதிராக, வர்ணக் கோட்பாடுகளுக்கெதிராக, பகுத்தறிவுக்காக அது ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைத்தான்.

நாற்பதுகளிலிருந்து கலையின் பல்வேறு வடிவங்களினூடும் (சினிமா, நாடகம், இலக்கியம் என)  பகுத்தறிவுக்காக , சமத்துவத்துகாக, சமநீதிக்காக, மதவாதங்களுக்கெதிராக அது குரல் கொடுத்து வந்தது. அதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வை இதுவரை மத்திய அரசியல் கட்சிகளால் அழிக்கவே முடியவில்லை. இதில் தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

ஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம்! - முனைவர் செ. துரைமுருகன் -

விவரங்கள்
- முனைவர் செ. துரைமுருகன் , தமிழ் உதவிப் பேராசிரியர் , குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி . கொயம்புத்தூர் – 49 , தமிழ்நாடு-
ஆய்வு
02 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்போமா?நிலவுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழலினை ஏற்படுத்தி தருவது இயற்கையின் அறமாகும். இயற்கையின் சமநிலைத்தன்மையில் ஏதேனும் இடர்கள் நேரிட்டால் பாதிப்பென்பது அதன் ஒவ்வொரு கூறிலும் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுவதை, மனிதனை தவிர்த்த பிற உயிரினங்கள் அனைத்தும் தங்களின் நுண்ணுணர்வினால் உணர்ந்து கொள்ளவியலும் . ஆனால் அதை உணரும் திறனை மனித சமூகமானது தொடர்ந்து இழந்து கொண்டே வருகின்றது. தவிரவும் ஒவ்வொரு தலைமுறையும் தொடர்ந்து இயற்கையின் பிணைப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே விரும்புகிறது. இவ்வாறு விலகி செல்லும் மனிதர்கள், இயற்கையின் அருட்கொடையாக விளங்கும் இயற்கையின் அறத்தினை மட்டும் எவ்வாறு அறிந்திட இயலும். அதனுடன் ஒன்றி, உறைந்து வாழ்பவர்களால் மட்டுமே அதை உணர்ந்திட இயலும்.

அவ்வழியில் இயற்கையுடன் தங்களின் வாழ்வினை இடையறாமல் இணைத்தும் பிணைத்தும் வாழும் பழங்குடி மக்களால் மட்டுமே அதன் சிறப்பினை உணர்ந்திட இயலும். நீலகிரியானது மேற்குத்தொடர்ச்சிமலையின் தொடர்ச்சியாகவும் தமிழ்நாட்டின் மலை மாவட்டமாகவும், உலகின் தலைசிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாகவும், தொல்பழங்குடிகள் செறிவாக வாழும் பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கையுடன் இயைந்த வாழும் பணியர் என்னும் பழங்குடிகளின் காடுபடுபொருள் சேகரிப்புச் செயல்பாட்டிலும், காட்டுநாயக்கர் பழங்குடிகளின் வாய்மொழிப் பாடலிலும், ஆலுகுறும்பர் பழங்குடிகளின் விடுகதைகளிலும் எவ்வாறு இயற்கை அறமானது வெளிப்படுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை வழியே காணலாம்.

அன்பும் அறமும்

அறக்கூறுகளில் தலைசிறந்ததாக ஒன்றாக விளங்குவது அன்பாகும். ஆகவேதான் அன்பு அறத்தில் உறைந்திருக்கிறது. அன்புடைய ஒருவர் இவ்வுலகில் எதையும் தமக்கு மட்டுமே உரிமை உடையது என்று எண்ணமாட்டார். பொதுமை உணர்வினை உருவாக்கும் இயல்பு அன்புக்கு உண்டு. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு எனும் அப்பொதுமை உணர்வே அறம் எனப்படுகிறது. எனவேதான் அன்பினூடாக அறம் பிறக்கிறது. அன்பின் வழியில் பிறப்பதே அதன் தனிச்சிறப்பாகும் . அன்பற்ற வழிகளில் அறம் பிறக்குமானால் அது அழிவுக்கே வழிகோலும் என்கிறார் திரு.விக. அத்தகு உயர்ந்த மாண்பினை பெற்றது அன்பும் அறமுமாகும்.

மேலும் படிக்க ...

ஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்)! - முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
ஆய்வு
01 மே 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -உலகப் பூர்வக்குடிகளான நீலகிரி படகர் இன மக்களிடம் பல தொன்மையான தனிக்கூறுகள் விரவிக்கிடக்கின்றன. நீலகிரியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற படகர்களின் வாழ்வியல் பரிணாமம் மற்றும் பரிணாமத்தினை விளக்கும் மரபு, பண்பாட்டின் நிலைச்சான்றாக விளங்கிவருகின்றது “அக்க பக்க” எனும் அமைப்பு.

“நாடு” அல்லது “சீமெ”, “ஊரு”, “ஹட்டி” எனும் தம் வாழ்க்களத்தினை வகுத்து வாழும் படகர்களின் “ஊரு” எனும் பகுப்பில் உள்ள படகு மூதாதையர்களின் தொல்வாழிடம் மற்றும் தொல்குறியீடாக இந்த “அக்க பக்க” திகழ்கின்றது.

அக்க பக்க –

படகர்களின் இந்த “அக்க பக்க” அமைப்பு “ஹெப்பாயிலு” (பெருவாயில் அல்லது பெருவாசல்), “கருகம்பு” (எருமைக் கன்றுகளைக் கட்டும் கல்தூண்), “அஜ்ஜிகூடு” (முன்னோர்களின் உறைவிடம்) எனும் மூன்று குறியீடு மற்றும் அமைப்பு நிலைகளைக் கொண்டது. இதை “அக்க பக்க” என்ற இணைச்சொல்லோடுப் படகர்கள் சுட்டினாலும் பொதுவாக இப்பகுதியைப் “பக்க” என்றே அழைக்கின்றனர். ஆதியில் இவை படகு முன்னோர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்து இன்று குறியீடாக, புனித இடமாக, முன்னோர் மற்றும் மரபு வழிபாட்டுத் தளமாகத் திகழ்கின்றன.

மேலும் படிக்க ...

அந்தரங்கம் (சிறுகதைகள்) நோயல் நடேசன் நூல் விளக்கம்

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
28 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரூபா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஸ்ரீரஞ்சனி -
கலை
27 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்மவரை ஊக்குவிக்க வேண்டுமென்ற உந்துதல், எங்களின் கதை எப்படிச் சொல்லப்படுகின்றது என்பதை அறியும் ஆர்வம், நடிகர்கள் தெரிந்தவர்களாக இருத்தல், தெரிந்த இடங்களின் காட்சிப்படுத்தலைப் பார்ப்பதிலுள்ள பரபரப்பு - இப்படியான காரணங்களினால் இலங்கைத் தமிழர் பற்றிய அல்லது இலங்கைத் தமிழர் இயக்கும் படங்களை/நாடகங்களைப் பொதுவில் நான் தவறவிடுவதில்லை.

அவ்வகையிலேயே ரூபா என்ற இந்தத் திரைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். நடிகர்களின் நடிப்பு, உடல்மொழி, கமெரா யாவும் நன்றாக இருந்தன. உடல் ஆரோக்கியம் மிகவும் குன்றியிருப்பதால், குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதும் ஒழுங்காக மருந்தெடுப்பதும் அவசியமென மருத்துவர் ஆலோசனை வழங்கும் ஒரு சூழலில் கதையின் நாயகனான அன்ரனி அறிமுகப்படுத்தப்படுகிறான். ஆனால், அந்த ஆலோசனையை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அந்தக் காட்சியமைப்பும் தொடர் நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு நன்கு புலப்படுத்தின. மருத்துவர் என்ன சொன்னார் என விசாரிக்கும் மனைவியுடன் அந்த உரையாடலைப் பகிர்ந்துகொள்வதிலோ அல்லது குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதிலோ, இரண்டு சிறிய பெண் பிள்ளைகளின் அப்பாவான அவனுக்கு எந்தவிதமான ஈடுபாடும் இருக்கவில்லை. அவ்வாறே குடும்பத்திலும் பெரிய ஈர்ப்பு எதையும் அவன் காட்டவில்லை. வசதியான, பெரிய வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள், ஆனால் கடனால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் அவனின் barக்கு வரும் ரூபா என்ற ஓர் இளம் பெண்ணுடன் அவனுக்கு ஏற்படும் பழக்கம் காதலாகிறது. அதன்பின்பே அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பது அவனுக்குத் தெரியவருகிறது (ஆனால் ரூபாவின் குரலும் தோற்றமும் அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பதை அவள் படத்தில் அறிமுகம் ஆகும்போதே எங்களுக்குக் கூறிவிடுகிறது என்பது வேறுவிடயம்). முதலில் அந்த உண்மை அவளில் அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. பின் அவனுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனின் barக்குப் பொருள்கள் வாங்கவேண்டுமெனப் பொய்சொல்லி மனைவியின் கிரடிற் காட்டில் காசெடுத்து தாய்லாந்துக்குப் போய் அவள் செய்துகொள்ள விரும்பிய பால்மாற்றுச் சிகிச்சையை விரைவாகச் செய்யும்படி அவளுக்குப் பணம் வழங்கவும் அவன் முன்வருகிறான்.

மேலும் படிக்க ...

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'இலையுதிர்கால நினைவுகள்' மற்றும் 'வசந்த காலம் 1971' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீன இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களிலொருவர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞர் என்று அறியப்பட்டாலும் இவர் கவிதை, கதை, கட்டுரையென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர். சிறப்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி கவிதைகளைப் படைக்கும்  பலர் விடும் முக்கிய தவறு: அவர்கள் தம் உணர்வுகளைக் கவிதைகளாக்குவதில்லை. தம் அறிவினை, புலமையினை வெளிப்படுத்தவே கவிதைகள் எழுதுகின்றார்கள். உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்கள்தம் கவிதைகள் இல்லாததனால்தான் அவர்கள்தம் கவிதைகள் வாசகர்களின் இதயங்களைத் தொட்டு அவர்கள்தம் இதயங்களில் இடம் பிடிப்பதில்லை. இவர்கள் தம் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையெழுதுதலைப் பார்க்கும் போக்கினைக் கைவிட வேண்டும்.

இவ்விதம் கவிதை எழுதுபவர்களுக்கும், அன்று தம் மேதாவிலாசத்தைக் காட்ட மரபுச்சூத்திரத்துக்குள் கவிதைகள் படைத்தவர்களுக்குமிடையில்  வித்தியாசமில்லை. சிறந்த மரபுக் கவிஞர்கள் உள்ளனர்.அவர்கள்தம் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. மரபுக்கவிதையின் எதிரியும் நானல்லன். மரபுக்கவிதை படைப்பதாக எண்ணித் தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகக் கவிதைகள் படைத்தவர்களையே குறிப்பிடுகின்றேன். அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதில், புலமையினை வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர்களைப்போன்றே இன்று வாழும் கவிஞர்கள் பலர் உள்ளனர். இவர்கள் புலமையினைக் காட்ட எழுதும் கவிதைகளைக் குறிப்பிடுகின்றேன். இவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்கள் விளைவாக எழுந்த, எழக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையினைக் கருத வேண்டும். அவ்விதம் கருதியே கவிதைகளை எழுத வேண்டும். அவ்விதம் எழுதினால் இவர்கள்தம் கவிதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இவ்விடயத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வித்தியாசமானவர். தன் வாழ்க்கை அனுபவங்கள் தந்த உணர்வுகளையே கவிதைகளாகப் படைக்கின்றார். அதனால்தான் அவற்றைக் கேட்கையில்யே சிந்தையில் இன்பம் பொங்குகின்றது. எம்மை அவரது கவிதை வரிகள் ஈர்க்கின்றன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்
  2. தொடர்: பயிற்சி முகாம்! அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! - கடல்புத்திரன் -
  3. அஞ்சலிக்குறிப்பு : நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் ! - முருகபூபதி -
  4. கோவிட் 19: தப்பி வாழும் வழிமுறைகள்! - அன்ரனி யூட் -
  5. டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் - வ.ந.கிரிதரன் -
  6. ஞானம் சஞ்சிகை தொடர்பான கலந்துரையாடல்! - தகவல்: - தி. ஞானசேகரன் (ஞானம் ஆசிரியர்) -
  7. ஜெயகாந்தன் : உலகப்பொதுமனிதன் - ஏப்ரில் 24 பிறந்த தினம்! - தகவல்: - முருகபூபதி -
  8. முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ? - நடேசன் - அவுஸ்திரேலியா -
  9. ஆய்வு: சமூக நோக்கில் இணையவழி - ‘தமிழ் கவிதைகள்’ முனைவர். கு. செல்வஈஸ்வரி -
  10. பொலனறுவை வானவன்மாதேவி ஈஸ்வர ஆலயச் சிற்பங்கள்! - வ.ந.கிரிதரன் -
  11. கவிதை: காலிக்கோப்பை! - அருணா நாராயணன் -
  12. ஆய்வு: சிலம்பில் மருதநில மக்களின் வாழ்க்கை நிலை! - முனைவர் மூ.சிந்து -
  13. ZOOM வழியான ,நான்காவது தொடர் கலந்துரையாடல்: - கே.டானியல் ( நாவலாசிரியர், சிறுகதையாளர், அரசியல், சமூக செயற்பாட்டாளர்)
  14. அவுஸ்திரேலியா - மெல்பனில் மிருதங்க அரங்கேற்றம்! - தகவல்: முருகபூபதி -
பக்கம் 101 / 107
  • முதல்
  • முந்தைய
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • அடுத்த
  • கடைசி