தமிழுக்குப் புதிய சொல் `சதிவிரதன்’ – குரு அரவிந்தனின் சிறுகதைத்தொகுதிய முன் வைத்து - கே.எஸ்.சுதாகர் -

தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.
இயற்கையோடு மழை குளிருக்கு இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும் – மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.
'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.
முன்னுரை
சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.






ஹோரேஸ் ஹேமன் வில்சன் ஒரு ஆங்கில 'ஓரியண்டலிஸ்ட்' ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் முதல் போடன் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் (St Thomas’ Hospital) மருத்துவம் பயின்றார். மேலும் 1808 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ஸ்தாபனத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியா சென்றார். பொது அறிவுறுத்தல் குழுவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டு கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியின் படிப்பை மேற்பார்வையிட்டார்.



மாணவர்கள் மத்தியிலும் மரவள்ளி விதைபின் தேவையை விதைக்கிறோம். இன்றைய தினம் கிளிநொச்சி மலையாளபுர கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு எமது வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பின் ஊடாக மரவள்ளி தடிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்திய சமூக செயல்பாட்டாளர் சகோதரர் துளிர் தீபன் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய சிறிய முயற்சிகளை விழிப்புணர்வாக விதைத்து வருகிறோம் நீங்களும் உங்களுக்குத் தோன்றும் வழிமுறையில் விதைத்து வாருங்கள்.
கிளிம்மின் வாழ்வில், (இம்மூன்றாம் தொகுதியின் படி), குறுக்கிடக்கூடிய மூன்றாவது முக்கிய நபர் மரீனா எனும் பெண்மணியாவாள். இவளை சந்திக்கும் போது கிளிம்மின் மனநிலை அமைதி அற்றதாயும், உள் பிளவுகளின் கோரத்தாண்டவங்களால் துன்புறுவதாயும் வெறுமையின் பலிகடாவாகவும் இருக்கின்றது. ஓரு சூனியம் போன்ற தகிக்கும் வெறுமையின் வெளியில் இருந்து துன்புற்று வெளிவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அவன் மனம். அதேப்போன்று, சிந்தனைத் தளத்தில் அவன் தனக்குரிய தத்துவத்தை தேடிப் பற்றிக் கொள்ள அல்லது, உருவாக்கி கொள்ள அவன் பிராயத்தனம் செய்து கொண்டிருந்த தருணத்திலேயே மேற்படி மரீனாவுடனான சந்திப்பும் நடந்தேறுகிறது. மரீனா, பொதுவில், ஓரு மிகப் பெரிய – சரியாக சொன்னால் ஓரு பிரமாண்டமான ஆளுமைமிக்கவளாகத் திகழ்கின்றாள். தத்துவங்கள், அரசியல் இதைவிட முக்கியமாகத் தீவிர இலக்கிய பரீட்சயம் கொண்டவளாயும், இலக்கிய உலகின் தொடர்ச்சியான, ஆழ்ந்த அவதானிப்பு கொண்டவளாயும் இருப்பதை கிளிம் கண்டு கொள்கின்றான். ‘தேடல் கொண்டவர்களும், ஆன்ம விடுதலை அல்லது தூய ஆவியின் நிலை குறித்த விசாரிப்பு உள்ளவர்களும் என் கரிசனைக்கு உரிய மனிதர்களாவர்’ என்று அவள் தன்னை கிளிம்மிடம் வரையறுக்கின்றாள். கிளிம் ஆன்ம விடுதலை குறித்து சாடைமாடையாய் கேள்வியை எழுப்பியதுமே அவள் கூறுவாள்: “ஆன்மீகவாதிகள் இரண்டு வகைப்படுகின்றனர். ஒரு வகையினர் ர்நுனுழுNஐளுவுளு. அதாவது உச்சத்தைத் தொட்டு உள்ளம் கிளர்ச்சியுற்று, அந்த கிளர்ச்சியின் ஒரு கணத்துக்காய் வாழ்பவர்கள். (ஜெயமோகன் போன்றோர்களின் சித்தரிப்பில், விமானம் ஓடுவதை போல் ஓடுவதாகவும், பின் மேலெழுந்து – உச்சத்தை தொடுவது –ளுருடீடுஐஆநு– என்பது போல). மற்ற வகையினர் காந்தியைப் போல. ளுயுஊசுஐகுஐஊஐயுடு ஐ நோக்கி முன்னே ஓடுபவர்கள் - நீ எந்த வகை குறித்து கேட்கின்றாய் என்பது போல அவள் கிளிம்மை நோக்குவாள் அவள்.


நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.
கடந்த இரண்டு வருடங்களாக எம்மை அச்சுறுத்தி வருகின்ற பெருந்தொற்றும் அதனூடாக எம்மீது திணிக்கப்பட்ட உள்ளிருப்பு வாழ்வும் எமது வாழ்வில் மட்டுமல்ல நாம் இயங்குகின்ற எமது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் கூட பல்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தன. இப் பெருந்தொற்று காலகட்டத்தில் மாபெரும் வல்லரசுகள், அரசாங்கங்கள், மிகப் பணபலம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் கூட இயங்கமுடியாமல் முடக்கம் பெற்றிருந்த நிலையில் சமூக, பண்பாட்டு தளங்களில் இயங்கிய எமது சிறிய அமைப்புக்களும் முடங்கிப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முக்கியமாக நேரடி நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்ட இலக்கியக் கூடுகைகளும் பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் முடக்கம் பெற்று, அவை மெய்நிகர் நிகழ்வுகளாக காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. இதனால் உள்ளூர் ஆளுமைகளைக் கொண்டே மட்டும் நிகழ்த்தப்படக் கூடிய நேரடி நிகழ்வுகள் ஆனது மெய்நிகர் நிகழ்வாக மாற்றம் பெற்ற போது அது உலகெங்குமுள்ள ஆளுமைகளை இலகுவாக ஒன்றிணைத்து மாபெரும் கூடுகைகளாக இடம்பெற்றன. இது இந்நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான நேர்மறை அம்சமாகும். இது போன்ற பல்வேறு நேர்மறை அம்சங்களினாலும் மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றிருந்த இம்மெய்நிகர் நிகழ்வுகளானது காலப்போக்கில் கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் பல்கிப் பெருகியமையாலும், அனுபவங்கள் அற்ற, ஆளுமைகள் அற்ற பலரும் இதனை செய்ய தலைப்பட்டமையாலும் இந்நிகழ்வுகளில் காத்திரத் தன்மை மறைந்து, பெறுமதியற்ற நிகழ்வுகளாக மாறிப் போய் விட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பலரது அசிரத்தையானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் கூட இந்நிகழ்வுகளை மிகவும் கேலிக் கூத்தாக மாற்றிப் போட்டு விட்டிருந்தது. இந்நிலையில் நேரடி நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பினை பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தன.
