தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.

இயற்கையோடு மழை குளிருக்கு இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும் – மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.

தொகுப்பின் அடுத்த சிறுகதை `புல்லுக்கு இறைத்த நீர்’. ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்கள் எல்லோரையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. இங்கே ஆசிரியர், மாணவன் ஒருவரை அடையாளம் கண்டுகொள்கின்றார். படிக்கும் காலத்தில் அவன் `அப்பிடி’ இருந்திருக்கின்றான். அவனுக்குப் படிப்பும் ஏறவில்லை, வாழ்க்கையும் சரிவர அமையவில்லை. ஆனால் மாணவனுக்கோ ஆசிரியரை நினைவில் இல்லை. இருவருக்குமிடையே சுவாரஸ்யமாகச் செல்லும் உரையாடலின் முடிவில் ஒரு திருப்பம். கதையின் முடிவு இப்படி அமையும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. விழலுக்கு இறைத்த நீர் தான்.

நடேசு என்பவன் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகின்றான். 22 வருடங்களுக்கு முன்னர், ஊரடங்கு நேரத்தில் குழந்தைக்குப் பால்மா வாங்கச் சென்றவிடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டுக்கொள்கின்றான். செய்யாத குற்றத்திற்காக நரகவேதனைப்பட்டு வெளியே வந்தபோது எல்லாமே மாறியிருந்தன. மனைவி இறந்துவிட்டாள். குழந்தை பெரியவளாகி, திருமணம் செய்து ஒரு பையனுக்கும் தாயாகிவிட்டாள். அவளின் கணவன் தொலைந்து போய்விட்டான். தனது கையறு நிலையில் சுமையாகத் தெரியும் தந்தையை ஏற்றுக்கொள்ள அவள் மனம் மறுக்கிறது. இது `சுமை’ சிறுகதை.

ஹரம்பி – மிருகக்காட்சிச்சாலையில் தவறி விழுந்த சிறுவன் ஒருவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் `ஹரம்பி’ என்ற கொரில்லாவைப் பற்றிய கதை. மனிதரின் பார்வையிலிருந்து விடுபட்டு, கொரில்லாவின் சிந்தனையில் விரிகின்றது இச்சிறுகதை.

ரியாட்டில் அன்னியப் பெண்களைக் காரில் ஏற்றிச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். கதைசொல்பவர் ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணி காரை மறிக்கின்றாள். மனிதாபிமானம் விடவில்லை. அவளைக் காரில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்கின்றார். வைத்தியசாலையில் அவளுக்குக் குழந்தை பிறக்கின்றது. ஆனால் தாய் இறந்து விடுகின்றாள். பிரச்சினை உருவாகின்றது. குழந்தைக்குத் தகப்பன் யார்? தன்னைக் காரில் கூட்டிவந்தவரே கணவன் என இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் சொன்னதாக தாதி சொல்கின்றாள். கோர்ட்டில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம்---டி.என்.ஏ பரிசோதனை---கதைசொல்லி தந்தை இல்லை என உறுதியாகின்றது. கூடவே புதிய தலையிடி. கதைசொல்லியினால் தன் வாழ்நாளில் தந்தையாவற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவப் பரிசோதனை அறிக்கை சொல்வதாக நீதிபதி சொல்கின்றார். அப்படியானால் கதைசொல்லி பெற்றெடுத்த பெண்குழந்தை பிரியாவிற்கு தந்தை யார்? அதிர்ச்சி அவருக்கு மாத்திரம் இல்லை, எங்களுக்கும் தான். `ஓ.ஹென்றி’ பாணியில் அமைந்துள்ள கதை `யார் குழந்தை?’ சிறுகதை.

`அட மானிடா நலமா?’ வித்தியாசமான கற்பனை. நாம் வளர்ப்பு மிருகங்களை நடத்தும் விதத்திற்கு எதிர்மாறான கருவைக் கொண்டது. மிருகங்கள் கையில் அகப்பட்டுக் கொள்ளும் மனிதர்களைப் பற்றிய கதை. ஆனால் நமது பூமியில் இது நடப்பதற்கு அவ்வளவு சாத்தியமில்லை எனலாம். `சிந்து மனவெளி’ சிறுகதை `சந்து சமவெளி’ சினிமாவின் தாக்கத்தில் எழுந்த கதை. மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அவை களைந்து எறியப்படவேண்டும் என்பதைச் சொல்லும் கதை`செளப்படி’. பெண்களைப்பற்றி பெண்களே சொல்லத் தயங்கும் கதை இது.

மணிமேகலைப் பிரசுரமாக 2019 ஆம் ஆண்டில் வந்திருக்கும் குரு அரவிந்தனின் `சதிவிரதன்’ சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 17 கதைகள் இருக்கின்றன. தொகுப்பின் பெயர் உருவான விதம் பற்றி, குரு அரவிந்தன் தனதுரையில்: `பாவனையில் இல்லாத இந்தச் சொல்லை நானே கண்டுபிடித்தேன். `பதிவிரதையின்’ ஆண்பால்சொல் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது `சதிவிரதனை’ உருவாக்கிக் கொண்டேன்’ என்கின்றார். குரு அரவிந்தனின் பெரும்பாலான கதைகளில் அறிவியலும் உளவியலும் கலந்து இருப்பதைக் காணலாம். தமிழில் தற்போது பாவனையில் இல்லாத `செளப்படி’, `வித்தாரம்’ போன்ற சொற்களைக் கதைத் தலைப்புகளாக்கி மீண்டும் உலவ விட்டிருக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனேக கதைகளின் முடிவுகள் வாசகரைக் கவரும் `ஓ.ஹென்றி’ பாணியில் அமைந்தவை.

கணக்காளர், ரொறன்ரோ கல்விச்சபை ஆசிரியர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எனப் பன்முகங்கள் கொண்ட குரு.அரவிந்தனின் இந்தக் கதைகள் - ஆனந்தவிகடன், கணையாழி, இனிய நந்தவனம், உதயன், தாய்வீடு, உயிர்நிழல், கூர்கனடா என்பவற்றில் ஏற்கனவே வெளியானவை.

சமுதாயத்திற்கு ஒரு சிறுகதை என்னத்தைச் சொல்ல வருகின்றது என்பதிலேதான் ஒரு சிறுகதையின் வெற்றி அடங்கியிருக்கின்றது. நல்ல செய்திகளைச் சொல்வதிலும், சிந்தனையை வளர்ப்பதிலும் குரு.அரவிந்தனின் சிறுகதைகள் முன் நிற்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்