'தமிழ் டைம்ஸ்'ஆசிரியர் இராசநாயகம் அவர்களின் மறைவைப்பற்றியும் , அவரது ஆளுமைச்சிறப்பு பற்றியும் முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. ஊடக தர்மம் பேணிய இதழாசிரியர்களிலொருவராக இவரை அடையாளம் காண முடியும்.

எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் செய்தது) 'தமிழ் டைம்ஸ்' ஜூலை 15,2001 இதழில் மீள்பிரசுரம் செய்திருந்தார். இணையத்திலிருந்து கண்டெடுத்து அதனைப் பிரசுரித்திருந்தார். தான் நம்பிய கருத்துகளுக்காக, அவற்றைச் சமரசம் செய்யாத ஒருவராக அவரை நான் இனங்காண்கின்றேன். அவர் இழப்பால் வாடும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.


The Experience of Diaspora to SriLankan Tamil Literary Oeuvre; Changing Landscape and Identities in Tamil Culture. இதனை எழுதியவர் Hildegard Anne Maria,

அவ்வப்போது இணையத்தைத் தேடிப்பார்ப்பதுண்டு. அவ்விதமானதொரு தேடலில் அகப்பட்ட ஆங்கில ஆய்வுக் கட்டுரையிது. சென்னையில் நடந்த ஆய்வரங்கலொன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்களின் புகலிட இலக்கியம் பற்றியது. The Experience of Diaspora to SriLankan Tamil Literary Oeuvre; Changing Landscape and Identities in Tamil Culture. இதனை எழுதியவர் Hildegard Anne Maria, MA English, St.Alosyius College, Mangalore, India

இணையத்திலுள்ள எனது படைப்புகளைப் பலர் தேடிப்படித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றார்கள். உண்மையில் இது இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று. இக்கட்டுரையில் எனது படைப்புகளைப்பற்றியும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

One of the eminent writers, V.N. Giridharan showcases the lives of Srilankan people through his short stories. His exploration into the effects of asylum-seeking as well as immigration in Canada and the most vital and cherished components of traditional Tamil culture and Tamil homeland of Sri Lanka had received international attributions. His books discusses on the consciousness of linkages within the Sri Lankan Tamil diaspora so that, despite being numerically small and geographically dispersed, it has emerged as a vocal and influential force in shaping political developments in Sri Lanka. The diaspora’s economic, cultural, and political importance in relation to the Tamil community in Sri Lanka has also increased. (p. 496)

V.N. Giridharan reveals the altered fibre of a community that has tried to adhere rigidly to the traditional ideals of an idealized Tamil culture in a North American nation that physically serves as home, yet remains insistently alien. Recognizing the ambiguity of the boundaries of diaspora, he presents the plight of the diaspora which cannot still feel a homeland as a place that has to be imagined by nurturing a sense of communal distinctiveness, socially though not geographically. Under these circumstances, the imagination of “home”, however, does not have to take the shape of a particular community rooted in a particular sort of place, whereas modernist theories of nation conceptualize nations as a particular community rooted in a specific place, geography, or physical setting (Billig 1995).


என்னால் புத்தகங்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வாசிப்பும், எழுத்தும் இல்லாத இருப்பில் ஒருபோதுமே என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று நான் எழுதுகின்றேன். வாசிக்கின்றேன்.

என் பதின்ம வயதின் இறுதிப்படியில் அவர் மறைந்து விட்டார். 77 ஆணிக் கலவரச்சூழலில் நானும் , இளைய தங்கையொருவரும் யாழ்ப்பாணத்தில் ஆச்சி வீட்டில் தங்கி நிற்கும் சூழலில், போக்குவரத்து நிலைகுலைந்திருந்த அச்சூழலில், அராலியிலிருந்து சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து எங்களிருவரையும் பார்த்துவிட்டுச் சென்றார். படையினரின் அச்சுறுத்தல் மிகுந்திருந்த அச்சமயத்தில் கடற்கரை வெளியினூடு தனியாகச் சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து சென்றிருக்கின்றார். அந்த அன்பை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு இழகும். அதன் பின் இரு மாதங்களில் அவர் எம்மை விட்டுச் சென்று விட்டார்.

அவரை நான் இழந்துவிட்டதாகவே கருதுவதில்லை. காரணம் எப்பொழுதும் என் வாசிப்பில், எழுத்தில் அவர் இருக்கிறார். என் ஆரம்ப எழுத்துகளை ஊக்குவித்தார். விமர்சித்தார். தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர். அதனால் சுதந்திரன் எப்பொழுதும் வீட்டிலிருக்கும். கூடவே அந்தனிசிலின் 'தீப்பொறி'யும் வெளியானபோது வாங்கினார். பின்னர் பதின்ம வயதுகளில் தமிழக அரசியலில் நாங்கள் எதிரும் புதிருமானோம். அவர் கலைஞரின் பக்கம். நான் வாத்தியார் பக்கம். 77 தேர்தலின்போது தமிழக முதல்வருக்கான வேட்பாளர்களான கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் வானொலியில் பேசச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்பொழுது தன்னைக்கூத்தாடி என்று எள்ளி நகையாடிய எதிர்கட்சியினருக்கு 'ஆம் நான் கூத்தாடிதான்' என்று குறிப்பிட்டு எம்ஜிஆர் ஆற்றிய உரையினை அவர் கலைஞர் பக்கமாக இருந்தபோதும் பாராட்டினார். நெஞ்சினைத்தொட்டதாகக் கூறினார்.
அவருக்குக் கிரிக்கட் நேர்முக வர்ணனையைக் கேட்பது மிகவும் பிடிக்கும், ட்ரான்சிஸ்டர் ரேடியோயில் இந்திய அணிக்கும் , ஆஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்ற நேர்முக வர்ணனையை அவருடன் நானும் கேட்டேன். சென்னை சேப்பாக்க மைதானமாகவிருக்க வேண்டும்.

இரவுகளில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கிப் படுத்திருந்து விண் சுடர்களை, விரையும் செயற்கைக்கோள்களைப் பார்த்துக் களித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவுள்ளன. ஒரு சமயம் அதிகாலைகளில் அப்போது வானில் காட்சி தந்த வால்வெள்ளியைப் பார்ப்பதற்காக எம்மையெழுப்பிக் காட்டுவார். அவையெல்லாம் பால்யபருவத்து அழியாத கோலங்கள்.
என் இருப்பிருக்கும் வரையில் உன் நினைவு இருந்துகொண்டேயிருக்கும் தந்தையே!



கலைச்செல்வியின் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது. அதுவரை கழுத்துறையில் வெளியான ஈழதேவி சஞ்சிகை 58 இனக்கலவரத்துடன் நின்று போகவே, அதனைக் கலைச்செல்வியாகத் தொடர முடிவெடுக்கப்பட்டு , ஈழதேவி என்னும் பெயர் கலைச்செல்வியாக மாற்றப்பட்டு வெளிவரத்தொடங்கியது. முதலாவது இதழிலேயே இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பகுதியாக 'வளரும் எழுத்தாளர் பகுதி' ஆரம்பமாகியுள்ளது. 'வளரும் எழுத்தாளர் பகுதி'யில் வெளியான முதல் ஆக்கம் யாழ்நங்கையினுடையது. எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரைதான் யாழ்நங்கை என்பது அனைவரும் அறிந்ததொன்றே.

அவரைப்பற்றிய அறிமுகத்தில் கலைச்செல்வி பின்வருமாறு கூறுகிறது: "இராமநாதன் கல்லூரி மாணவிதான் 'யாழ்நங்கை'. சற்று முயன்றால் சிறந்த கவிஞராகலாம். இக்கவிதை சென்ற சித்திரையில் எழுதப்பட்டது.)

'அன்னையின் ஆவல்' என்னும் அக்கவிதை தமிழன்னையின் ஆவலை விபரிக்கும் நல்லதொரு கவிதை. அந்த வயதில் அக்கவிதையின் சிறப்பு என் கவனத்தை ஈர்த்தது. அக்கவிதையைக் கீழே தருகின்றேன்:

 

'தரணியெலாம் முழக்கி மனம் மகிழ்ச்சியுறச் செய்வீர்!' என்று பாடசாலை மாணவியாகவிருந்த சமயம் யாழ்நங்கை இவ்வரிகளை எழுதினார். ஆனால் இன்று உலகமெலாம் தமிழ் கோலோச்சுகின்றது. 'தனியரசு புரிந்திடவே தமிழ் மாது என்னைத்' என்று தனியரசு பற்றியும் யாழ்நங்கை தனது கவிதையில் கூறியிருப்பது இலங்கையிலெழுந்த தனியரசுக்கோரிக்கை பற்றிய வரலாற்றில் முக்கியமானது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here