நூல் அறிமுகம் : கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரை நினைத்ததும் எனக்கு அமரர் காவலூர் எஸ்.ஜெகநாதன் நினைவுக்கு வருவார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டவர். கே.எஸ்.சுதாகரும் பல சிறுகதைப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்ற பரிசு எழுத்தாளர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பத்துத்தடவைகளும், ஏனைய ஊடகங்களில் பதினெட்டுத் தடவைகளும் பரிசுகள் பெற்றவரென்று கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான தி.ஞானசேகரன் குறிப்பிடுகின்றார்.
யாழ் தெல்லிப்பளையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கே.எஸ்.சுதாகர் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. அவரது 'பால்வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய எனது எண்ணங்களே இக்கட்டுரையாகும். ஏற்கனவே இவரது 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்', 'எங்கே போகின்றோம்' ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மானுடப் பிறவிகளுக்கு 


‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதமையினால், உங்கள் முகநூல் குறிப்புகளை தங்கள் பதிவுகள் இணையத்தளம் ஊடாகத்தான் படிக்கின்றேன். அண்மையில் தங்கள் தந்தையார் பற்றிய நினைவுப்பதிவும் படித்தேன். உடனே எனது தந்தையாரும் நினைவுக்கு வந்தார். எமது குடும்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக முதல் முதலில் அங்கீகரித்து ஊக்கம் தந்தவர்தான் எனது தந்தையார். அதன்பிறகுதான் அம்மாவும் குடும்ப உறவுகளும் வருகிறார்கள். ( காரணம் எழுத்து சோறு போடாது என்பதுதான் அவர்களின் பொதுவான சிந்தனை. ஆனால், எனக்கு எழுத்துதான் சோறு போட்டது )
கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.
சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள், தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’ ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம். இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.





இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.