பேராசிரியர் சி.மெளனகுருவின் கடிதம்.....
- பீஷ்மப் பிரதிக்ஞை என்னும் ஓரங்க நாடகம் பற்றிப் பதிவுகளில் வெளியான நிகழ்வுக் குறிப்பையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு எழுதிய எதிர்வினையிது. - பதிவுகள்.-

மிகவும் நன்றி கிரிதரன், பீஷ்மப் பிரதிக்ஞை வெறுமனே ஓர் ஓரங்க நாடகம் மாத்திரம் அன்று. "பாத்திர உருவாக்கம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற ஒரு செயல் முறை அரங்க நிகழ்வுக்காக மேடை இடப்பட்ட நாடகம். இதிலே பீஷ்மர் என்னும் பாத்திரத்தை
பீஸ்மப் பிரதிக்ஞை ஓரங்க நாடகம்! - மு.இளையராஜா -

- பீஷ்மராகப் பேராசிரியர் சி.மெளனகுரு -
27.04.2025 அன்று, கொழும்பு தமிழ் சங்கம் நடாத்திய அரங்கியல் கருத்தரங்கில் "பீஷ்ம பிரதிஞ்ஞை என்ற ஓரங்க நாடகத்தில் அயூரனின் வேண்டுகோளுக்கு இணங்க பீஷ்மர் பாத்திரத்தை ஏற்றிருந்தார் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள். இதற்கான எழுத்து பிரதியையும் இவரே வழங்கியிருந்தார்.
நடிப்பின் மீதும் மாணவர்களின் மீதும் உள்ள பற்றுதல் காரணமாக, வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேராசிரியர் மௌனகுரு அவர்கள், மேடையேறி, மற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இப்படி முன்னுதாரணமாய் பாத்திரமேற்று நடிப்பது உற்சாகமளிக்க கூடிய விடயமாகும்.
மேலும் இவரது இத்தகைய பங்களிப்புகள் தமிழ் நாடக உலகுக்கு ஒரு வரப்பிரசாதமாகின்றது. இதனால் பயன்பெற போவது தமிழ் இலக்கிய நாடக உலகமே என்றால் மிகையாகாது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Plantation Teachers Forum Srilanka
பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினன் ஏப்ரில் 29!

பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்
பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது
பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்
நாமக் கல்லார் நற்கவி ஆவார்
கவிமணி தமிழின் கற்கண் டாவார்
பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
அதுவே அவரின் ஆசியே ஆகும்
உடைபடும் இணைய முகமூடிகள்! - ஜி.ஏ. கௌதம் (சென்னை) -

* ஓவியம் - AI
முன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.
அலைபேசிகள், கணினியின் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருக்கும் பிரச்சனைகள், புதிதாக வெளியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து காணொளிகளை YouTube சானலில் வெளியிடும் நந்தக்குமார் எனும் ’PC Doc நந்தா’ சமூக ஊடகங்களில் மிகப்பிரபலம். கடினமான தொழில்நுட்ப விளக்கங்களையும் கூட வடிவேலு, மதுரை முத்து போன்ற காமெடி நடிகர்களின் காணொளிகளைக்கொண்டு நகைச்சுவையாக எளிய மனிதர்களுக்கும் புரியும் அளவுக்கு பாடமெடுக்க அவரால் முடிகிறது. திரைக்குப்பின் அவருக்காக வேலை செய்ய ஒரு தனி படையே இருக்கிறது.
விருவிருப்பான படத்தொகுப்பு, குழந்தை முகத்துடன் சிரிப்பு, தொழில்நுட்பம் குறித்த updates விரல்நுனியில் வைத்திருக்கும் நந்தாவின் YouTube சானலை, 1.90+ மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் விளைவு, தனது திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், படத்திற்கான விளம்பரத்திற்கு விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நிறைய திரைப்பிரபலங்கள் நந்தாவின் சானலுக்கு படையெடுக்க துவங்கினார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி கேட்கும் ரசிகர்கள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர், பல யூடியூபர்களுக்கும் பிரபலங்களுக்கும் கணினியை தயார்செய்து கொடுக்கும் தொழில்நேர்த்தி என இவரது ஏறுமுகம் எந்த சறுக்கலும் இன்றி உயர்ந்து கொண்டிருந்தது. ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்ற Youtuber காணொளி வெளியிடும் வரை. ஜேசன் சாமுவேல் நந்தாவைப்பற்றி சாட்சிகளுடன் வெளியிட்டிருக்கும் 25 நிமிட காணொளி, கையும் களவுமாக நந்தாவை சமூக ஊடகங்களின் முன்னே நிற்க வைத்தது.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம் - சுலோச்சனா அருண் -

- எழுத்தாளர் குரு அரவிந்தன் -
இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (1) : கார்க்கி - ஜோதிகுமார் -

- டால்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -
1
இருபதாவது முறை, வாசிக்கும் போதே, இச் சிறியவரிகளில் மறைந்து கிடக்கும் எண்ணங்களை ஓரளவில் புரியக் கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தினச் சுருக்கமாகக் கூறுதல் என்பது கடினம். ‘கடுகைத் துளைத்து’ எனச் சொல்வதுபோல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான் காணகிட்டுகின்றன. ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவதாய் இருக்கின்றது.
இறைவன் பொறுத்த டால்ஸ்டாயின் அபிப்ராயங்கள் விசித்திரமானவை. தொளதொளவென்ற தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, பின், ஒரு டயரியின் நைந்த பகுதியை எடுத்து, கார்க்கியிடம் தந்துவிட்டு: “இறைவன்… அதுவே எனது… ஆர்வம்…” என்று வரையறுக்கும் இந்த மனிதரின் வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் நிலைக்குலையச் செய்வதே. என்ன இது? ஆசையா அல்லது மனுகுலத்தின் மேல் கொண்டுள்ள ஒட்டுமொத்த மரியாதையின் பிரதிபலிப்பா?.
ஆயிரம் இலக்கியங்களை நுகர்ந்ததன் அனுபவங்களும், தத்துவச் செல்வங்களைத் தேடித் திரட்டி, கிரகித்தபின், ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்வாங்கி அவிழ்த்து விடப்படும். இவரது வார்த்தைகள் மகாபாரதத்தின் தோற்றுவாயையும், இராமாயணத்தின் ரிஷி மூலத்தையும் உள்ளடக்கவே செய்கின்றன. இக் கருத்து நிலையில் இருந்து உதிப்பதே இவரது கலையாகின்றது.
இவரது கடவுள் எனும் கருத்தும், இங்கேயே பரிணமித்திருக்கலாம்.
இது பாரதியின் கடவுளுடன் ஒப்புநோக்க வேண்டிய தேவையை எழுப்பாமல் இல்லை.
வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்! - வ.ந.கிரிதரன் -

எனக்கு இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில் என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.
இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும் விண்ணை ஆராய்வதற்குரிய் வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம். அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.
இவர் ஒரு வழக்கறிஞர். வானியலில் ஆர்வம் மிக்கவர். இலங்கை வானியற் சங்கத்தின் செயலாளராக 1965 - 1967 இல் இருந்திருக்கின்றார். இவர் பெயர் செந்தில்நாதன்.
ஆனால் இவரது வானியல் துறை சம்பந்தமான கட்டுரைகள் எவற்றையும் நான் ஈழநாடு போன்ற அக்காலகட்டத்தில் வெளியான தமிழ்ப்பத்திரிகைகளில் கண்டதாக நினைவிலில்லை. வெளிவந்திருந்தாலும் என் கவனத்தில் படும் அளவுக்கு அதிகமாக அது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன் வானியற் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர் வானியற் கழகம் பற்றி அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்பற்கான காரணம் தெரியவில்லை. என்னைப்போன்ற வானியற் துறையில் ஆர்வம் மிக்க மாணவர்கள் பலர் அதனால் நிச்சயம் பலனடைந்திருப்பார்கள்.
தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்! - நந்திவர்ம பல்லவன் -

(* ஓவியம் AI)
தேர்தல் வெற்றிக்காக, உங்கள் அரசியல் நலன்களுக்காகத் தொடர்ந்தும் இனவாதம் பேசாதீர்கள். அவன் சிங்களவன். அவனுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று கோசம் எழுப்பாதீர்கள். அது இனவாதம். அதற்குப் பதிலாக இதுவரை கால அரசுகள் இனவாதம் பேசின. நாமும் இனவாதம் பேசினோம். இனியும் இனவாதம் பேசுவதைத் தவிர்ப்போம். ஆனால் இதுவரை இலங்கையில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும், போர்களுக்கும் காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இதுவரை கிட்டவில்லை. அதுவரை பிரதேசமொன்றில் வாழும் மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பது ஆரோக்கியமானது, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க அது அவசியம் என்று கோரிக்கை விடுங்கள். அது நியாயமானது. ஆரோக்கியமானது. இனவாதமற்றது.
அதே நேரத்தில் எம் அரசியல்வாதிகள் இதுவரை புரிந்த அனைத்துத் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணத்துக்கு எம் பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென்று வந்த நிதியைத் திருப்பி அனுப்பினோம். ஆனால் அதே சமயம் நாம் எமக்கு, எம் பதவிகள் காரணமாகக் கிடைத்த நன்மைகளை உதாசீனம் செய்யவில்லை. முன் கதவாலும், பின் கதவாலும் ஏற்றுக்கொண்டோம்.
பரதம் பரப்பும் வித்தகி ஸ்ரீமதி அம்பிகா சிற்சபேசன்! நியூசிலாந்தில் இருபது ஆண்டுகள் தாண்டும் புனிதப் பணி! - கலாநிதி மு. ந. சிவச்செல்வன், இளைப்பாறிய பேராசிரியர், நியூசிலாந்து -
இந்தியக் கலாச்சாரத்தியே முதன்மையான பாரம்பரியக் கலையான பரதநாட்டியம், தென்னிந்திய தமிழ்நாட்டின் தெய்வீகத் தொன்மை கொண்டதும் மிகவும் பிரபலமானதுமாகும். இந்த நாட்டிய வடிவமானது, தெய்வீகத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைந்து, உடல்சார்ந்த பாவங்களை வெளிக்கொணரும் சாத்வீகமான தூயகலையெனலாம்.
ஆகவே, இந்துசமய, சமண மதங்கள் சார்ந்த ஆழ்ந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாடுகள் சார்ந்த தத்துவங்களையும், உள்ளடக்கியே பரதநாட்டியங்கள் யாவையும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே, ஒரு சைவ சமய கோட்பாடுகளையும், சமய ஆசாரத்தையும் பேணிவாழும் குடும்பமொன்றில், என் மதிப்புக்குரிய ஆசிரியரான அமரர் அருணாசலம் அவர்களின் புதல்வியாக உதித்த திருமதி அம்பிகா சிற்சபேசன், சிறுமியாக இருக்கும்போதே இப் புனிதமான கலையில் கவரப்பட்டது ஆச்சரியமானதல்ல. அதோடு, பொறியியல் மேற்கல்வியைத் தொடரும் சந்தர்ப்பம் கிடைத்ததால் அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் பரதநாட்டியக் கல்வியையும் பாரம்பரிய குரு சிஷ்யை முறையில் கற்று அதை முழுதாகக் கற்றுதகைமைசால் நடன வித்தகியாக வெளியேறினார்.
நெடுங்கவிதை: அந்நிய மண்ணில் அடைக்கலம் தந்த தெய்வங்கள்! -இந்து லிங்கேஸ் -

கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,
ஒன்றுகூடி அடித்துப்பெய்தது மழை.
எதிர்த்திசையில் ஓடிவரும் கார்களின்
கூரிய வெளிச்சங்கள் என்
கண்களைக் குளப்பின.
நித்திரை முளித்து வேலைசெய்த களைப்பில்,
அரைத்தூக்கத்தில்
காரை ஓட்டிவந்த எனக்கு அன்றைய
காரிருள் ஆழ் மனசுக்குள் புகுந்து
காலங்களைப் புரட்டிப்போட்டது.
விழிகள் புதிதாய்ப் பூத்தது
போன்ற உசாரில்
காரை இன்னும் நிதானமாக
ஓட்டி வந்தேன்.
'காலச்சக்கரத்தின் சுற்று
கடுகதி வேகத்தில் சுழன்று
கொண்டேயிருக்கின்றது.
அதில் நானே அச்சாணி.
அச்சாணிக்கும்
எப்போது ஓய்வுவரும்?'
என்பதுபோன்ற
எண்ணச்சிதறல்கள்
மனசுக்குள் கரைந்தோடின.
இந்த
'அச்சாணிவாழ்வு'தந்த
அனுபவம் என்ன?
கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' - வ.ந.கிரிதரன் -

பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில் நன்றி.
இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆளுமையின் மறு பக்கத்தை பேராசிரியரின் உரையாடல்களூடு எடுத்துக் காட்டுகின்றார். வாதப்பிரதிவாதங்களை எழுப்பக்கூடிய விபரிப்புகள். 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு, ஜெயமோகனின் ரப்பர் நாவல்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள் ஆழமான தர்க்கங்களை வேண்டி நிற்கின்றன.
வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்! - வ.ந.கிரிதரன் -

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!
அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார். வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு - https://www.aaees.org/e4saward
தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
மீள்பிரசுரம் (விகடன்.காம்) : பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி! - சு. அருண் பிரசாத் -
பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பேட்டியிது. இதன் முக்கியத்துவம் கருதி, நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”
60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன். தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், பாரதி குறித்து இதுவரை அறியப்படாத அரிய தகவல்களையும், பாரதியின் எழுத்துகளையும், பாரதி பற்றிய எழுத்துகளையும் பதிப்பித்துள்ளார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', ‘பாரதி நூற்பெயர்க் கோவை' ஆகியவை இவரது பெரும் சாதனைகள்.
“தம் வாழ்வையே பாரதி ஆய்வுக்காக அர்ப்பணித்த சீனி. விசுவநாதனின் பணியைப் போற்றும் வகையில், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று கடந்த செப்டம்பர் மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவின்போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், சீனி. விசுவநாதன் உள்ளிட்ட பாரதி ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' வழங்கிச் சிறப்பித்தார்.
பாரதியின் 139-வது பிறந்தநாளை ஒட்டி, மூத்த பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனுடனான சிறப்புப் பேட்டி.
“உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?”
“1934-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று பரமத்திவேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1944-ல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில் என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம் வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.”
கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.
உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.
விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.
புத்தக வாசிப்பின் மகத்துவம்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

* ஓவியம் - AI
மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.
இத்தகைய மொழியின் வெளிப்பாடுகளை நாம் நூல்களின் வழியாகவே அதிகமாகப்; பார்க்கமுடிகின்றது. இதுபோன்ற நடைமுறைகள் சமூகத்தில் இவை மிக முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. கல்வி வேறு அறிவு வேறு என்பதை முதலில் நாம் புரிதல் அவசியமாகின்றது. வெளியில் இருந்து உள்ளே செல்வது கல்வி. அந்தக் கல்வியைப் பயன்படுத்தி உள்ளிருந்து வெளியில் வருவதுதான் அறிவு என அனுபவ வாயிலாக உணர்வதை நாம் அவதானிக்கலாம்..
புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பதுபோல எனக் கூறலாம். புத்தகம் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். வாசிப்பு என்பது மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். புத்தக வாசிப்பு என்பது மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். அதிகமான அறிஞர்கள் புத்தக வாசிப்பினால்த் தான் உலகில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களாகத் திகழ்கின்றார்கள் அந்த வகையில் உலகில் உயர்ந்த மனிதர்கள் சிலரைக் குறிப்பிட்டு இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.
கம்பராமாயணத்தில் சுவை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

முன்னுரை
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
சுவை அணி
உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் புலனாக விளங்க எட்டு வகையான மெய்ப்பாட்டாலும் நடப்பது சுவை எனும் அலங்காரமாகும்.
“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே”
(தண்டியலங்காரம் 42)
சுவை அணியின் வகை
உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய் வழியாகப் புலப்படுத்தும் தன்மை மெய்ப்பாடு என விளம்புதலாயிற்று. இது எட்டு வகைப்படுதலாகும். இத்தன்மையினை
“அவை தாம்
வீரம் அச்சம், இழைப்போடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே”
(தண்டியலங்காரம் 43)
இதையேத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3)
என்று கூறியுள்ளார்.
ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - சுலோச்சனா அருண் -

கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.
கண்ணையெரிக்கும் புகைக்காற்று - இக்பால் அலி -
![]()
கண்ணைக் கரிக்கும்
புகைக் காற்று
தேர்தல் பண்டிகைகளில்
தீப் பிளம்பாய் வீசும்.
காதிலே சேல் வடியும்.
தீய அடுப்புக்ளை மூட்டி
காய்ந்த விறகுகளையும் சருகுகளையும்
தீப்பிளம்புக்குள் போட்டு பத்த வைத்து
சட்டி பானைக்குள் எண்ணெய்யை ஊற்றி
பதமாக சுட்டு இறக்குகின்ற பலாகாரங்களை
ஈன இரக்கமில்லாமல் வெந்து கரியாய் தீய வைத்து
யாருமே உண்ண மனமில்லாத
குப்பைக் குழிக்குள்; போட்டு மூடும் பலகாரங்கள்தான்
இங்கே மூக்கைத் துளைக்கின்றன.
இவையேதான் நாவுக்கு சுவையென
விளம்பரங்கள் செய்து
பசியாறிக் கொள்ள சிறந்த சாதனம் என்று
வெடிக் கொளுத்தி
மொழிகளில் முழுக்கமிடுகிறார்கள்.
விசங்களைக் கக்கிக் கொண்ட எரிந்த விறகுகள்
கால ஒட்டத்தில் சாம்பலாகி தோல்வியைத் தழுவினாலும்
வயிறு நிறையத் தின்று ஏப்பமிட்ட தலைக்கனம்
மீளவும் அடுப்புக்களை மூட்டி
விறகுகளை எரிக்க ஆயத்தம் செய்யும்.
கவிதைகள்: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா? & சோக்கிரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் -AI
துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.
இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.
பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?
உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்கள் நினைவாக! ஆறாவது ஆண்டையும் கடந்து செல்லும் ஆறாவடு! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம்! - முருகபூபதி -

இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. 2019 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் சில தற்கொலைக் குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.40 வெளிநாட்டவர்களுடன் 45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் அரசுகளும் மாறின, அதிபர்களும் மாறினார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசு காலத்திலாவது உண்மைகள் கண்டறியப்படுமா? என்பதும் தெரியவில்லை. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர், அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் பின்னாளில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மாறிய ரணில் விக்கிரமசிங்கா.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர். எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானர். அவர் வெளியேறியபோது, எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஜனாதிபதியானார்.




இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 39 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார். அண்மைக்காலமாக அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார். எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார். தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது, அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும் நாம் கடந்துதான் செல்லவேண்டும்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









