இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனப்படுகிறது. வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.
1அண்மையில், தமிழ் தேசியத்தை கட்டுவிக்கும் முயற்சிகளில் சிலதாக, இலங்கையின் வடக்கில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:
1. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரியமை.
2. தமிழர் தேசியத்தைக் கட்டிவளர்க்கும் பொருட்டு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு யாழ் கூட்டம்.
3. சாந்தனின் மரணச்சடங்கு.
இவற்றுடன் வேறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவற்றில் சாந்தனின் மரணச்சடங்கானது, தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் அதே சமயம் இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டிவிடும் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகவும் அமைந்து போனது. ஆனால் இவையாவும், இறுதியில், எந்தளவில் வெற்றியை எய்தின என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
காரணம், மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, அது, ஒப்பீட்டளவில், அற்ப சொற்பமாகவே இருந்தது என்பது சில ஆய்வாளர்களின் கணிப்பானது. இதனாலோ என்னவோ அண்மைக்காலங்களில் வீறு குறைந்து விட்ட தமிழ் தேசியத்தைப்பற்றிப் பல்வேறு அறிக்கைகள் வெளிவருவதாய் அமைந்திருந்தன. “தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் ஆட்டங் காண்கின்றன” என புருஷோத்தமன் தங்கமயிலும் (முரசு: 17.03.2024) “நாம் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை துவங்குவதற்கு முன் எமது மக்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்க வேண்டியுள்ளது.” என யோதிலிங்கமும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் எனலாம். விக்னேஸ்வரன் ஐயாவின் வடமாகாணசபை நாட்டியம் முதல் தமிழரசு கட்சியின் தேர்தல் , குருந்தூர் மலை அரசியல் வரை பார்த்து முடித்துவிட்ட தமிழ்மக்கள், தேசிய அரசியல் பொறுத்து ஒரு விமான பார்வையை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.
( ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600 )
திருப்பூர் சக்தி விருது குழு,( (கனவு / முத்தமிழ்ச்சங்கம் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகம் தளக்குறிப்பு கூறுகிறது:
இன்று நண்பர் தயாநிதி (பொறியியலாளர், யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர், ஓராயம் அமைப்பின் தலைவர்) அவர்களின் தந்தையார் அமரர் பண்டிதர், சைவப்புலவர் ஏகாம்பரநாதன் பரஞ்சோதி அவர்களின் ஒராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நினைவு கூர்தல் மற்றும் மதியபோசன நிகழ்வுக்கு நண்பர் பேரா சவுந்தரநாதனுடன் சென்றிருந்தேன். அங்கு என் பால்ய, பதின்மப் பருவத்து நண்பர்களான ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை), பிறேமச்சந்திரா, குருபரன் மற்றும் கலை, இலக்கிய ஆளுமைகளான மீரா பாரதி, திவ்வியராஜன், ஶ்ரீரஞ்சனி, அகணி சுரேஷ், யாழ் இந்து பழைய மாணவர்கள் எனப் பலரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. தயாநிதி அவரது மனைவு முனைவர் மைதிலி, தயாநிதியின் சகோதரி ரஞ்சனி அவரது கணவர் ஶ்ரீகதிர்காமநாதன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
இலங்கை வடபுலத்தில், தென்மராட்சியில் விநாயகர் – சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து, தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி, பாடசாலை ஆசிரியராக , அதிபராக பணியாற்றி , பின்னாளில் தென்னாபிரிக்காவிலும் கல்விச்சேவையாற்றியிருக்கும் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள், கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் இலக்கிய மற்றும் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டவர்.
இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் மறைந்திருக்கும் கவிஞர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் விடைபெற்றுள்ளார்.
அவருடன் எனக்கு நெருக்கமான இலக்கிய உறவு இல்லையாயினும், அவர் பற்றிய நினைவுகள் நெஞ்சில் பசுமையாக வாழ்கின்றது. நினைவுகளுக்கு மரணம் இல்லை அல்லவா..?
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், எங்கள் நீர்கொழும்பூரில் இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தில் மூன்று நாட்கள் தமிழ் விழா நடந்தது. அப்போது அதன் அருகே அமைந்திருந்த விவேகானந்தா வித்தியாலயத்தில் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) நான் ஐந்தாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.
கண் கண்ணாடி இயற்கையை வர்ணிக்கிறது,
பின்னாடி கூடு விட்டுக் கூடு பாய்கிறது!
பார்வையில் பல இயற்கை வண்ணங்கள்,
கண்டு மகிழ்கிறது கன்னங்கள்!
சிந்தனையில் பல எண்ணங்கள்
உணர வைக்கிறது பல கோணங்கள்,
இயற்கையைக் கண்டேன்.
போரின் தணல்மேவி,
சாம்பல் தகிக்கும் நிலத்தில்,
வரண்டு இழுபடும் ரப்பர் ரொட்டியும்
பிழிகையில் துளியும் சிந்தாத
தேங்காய்த் துருவலும்
அண்ணாந்திருக்கும்
வெற்றுப் பாத்திரங்களும்
இருந்துமில்லாத
எனது சமையலறையில்
வேறு என்னதான் இருக்கும்...?
இலக்கியப்பணியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்த கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்வும் பணியும் காலங்காலமாக போற்றப்பட வேண்டும். கடந்த வாரம் மார்ச் 11இல் ஆசான் கலாமணியின் முதலாவது மாத நினைவாக அல்வாயில் உருவச்சிலையும், மூன்று நினைவு நூல்களும் வெளியாகின.
தமிழ் உலகிற்கு அவர் ஆற்றிய இலக்கிய, நாடகப் பணி வரலாற்றில் முக்கியமானது. தலைமுறை தலைமுறையாக செய்யவேண்டிய நாடக வழி முறைகளையும், அதனால் கிடைக்கிற பிரதிபலன்கள் அனைத்து மக்களிடம் கிடைக்க வேண்டுமென்கிற ஆர்வம்தான் கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்நாள் சாதனையாக மிளிர்கிறது.
எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன. அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதைச் போதமும் காணாத போதம் 07, என் கவனத்தை ஈர்த்தது. அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக் கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.
- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -
'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு. குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள். இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக நூலுருப் பெற்றது. இதனால் கனடாவில் நூலுருவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் மண்ணின் குரலென்று கூறலாம்.
மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.
இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14. வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது சிறப்புச் சார்பியற் கோட்பாடு.
இது போல் புவியீர்ப்பு பற்றிய இவரது பொதுச் சார்பியற் கோட்பாடு அது ஒரு விசையேயல்ல. வெளிநேரப் பிரபஞ்சத்தில் , பொருளொன்றின் பொருண்மையானது ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஏற்படும் வடிவ மாற்றமே என்பதை வெளிப்படுத்தியது. உதாரணத்துக்குச் சூரியன் அதன் பொருண்மை காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து விடுகின்றது. அந்த வளைவே பூமியை அவ்வளைவு வழியே பயணிக்க வைக்கின்றது என்பதை வெளிப்படுத்தியது.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மையில் உடல் நிலை காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சத்திர சிகிச்சையின் பின்னர் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார். இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கவிஞர் மிக விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த மனோதிடமும், நம்பிக்கையும் உள்ள ஆளுமை அவர்.
அவர் பூரண நலத்துடன் மீளட்டும். இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடட்டும்.
'
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற'வர்க்கு
துருவத்துச் சுடரென நின்றாய்.
சுடர்ந்தாய். வாழ்க! வாழ்க!
-
மே 14 கார்ல் மார்க்ஸ் அமரரான தினம். -
பயனுள்ள இணைப்பு - https://www.history.com/topics/european-history/karl-marx
தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
சிறுகதை
அளவிற் சிறிதாக இருப்பது சிறுகதை, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருப்பனவெல்லாம் இதிலடங்கும் என்பர். ஆனால் கால எல்லை மட்டும் அதன் முழு இலக்கணம் அன்று. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஓர் உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு பாத்திரம், ஒரு மனவுணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி என ஏதேனும் ஒன்றை மட்டுமே நிலைக்களனாக வைத்துக் கொண்டு படைப்பது சிறுகதையாகும்.
சிறுகதை என்பது வாசிப்பவனின் மனதில் சோர்வு இல்லாமலும், அக்கதை படித்து முடிக்கும் வரை, அவன் மனதில் பல்வேறு சமுதாயக் கருத்துகளை எடுத்துக் கூறும் இலக்கிய வகை எனலாம்.
ஓர் இனக்குழு வேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய படுவதைக் கண்டு அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பதற்கு பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் தெரிகிறது.
அந்த அனுபவத்தை சிந்து சீனு அவர்கள் இந்த நாவலில் எழுதி இருக்கிறார் அந்த மக்களில் சிலர் கல்வி அறிவு பெற்று உயர்ந்த பதிவுகள் வருவது, மகிழ்ச்சி சந்தோஷம் துக்கம் என்ற பல வகைகளில் வாழ்க்கை அவர்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்ந்த பகுதியை அம்பேத்கர் நகர் என்று பெயரிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது. அவர்களின் உரிமைகள் எப்படி மீட்கப்பட்டன. அந்த ஊருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதை ஒரு சரித்திரமாக செய்தியாக இந்த நாவலில் சொல்லி இருக்கிறார்
இந்த நாவல் பல்வேறு விதமான தலித் மக்கள் பற்றிய சரித்திர ரீதியான அடக்குமுறைகள், சாதியக் கொடுமைகள் பதிவுகள் உள்ளன. வேலூர் நகரம் விரிவடையும்போது அதில் பல்வேறு சாதியினுடைய பங்களிப்பு, கிறிஸ்துவர்களின் கல்விப் பணி மற்றும் மருத்துவத் துறை பங்களிப்பு என்று இந்த நாவல் நீள்கிறது எல்லா பகுதிகளிலும் கோவில் இருக்கிறது. நம் நம் பகுதிகளில் கோவில் இல்லை என்று அவர்கள் ஒரு கோவிலை கட்டுகிறார்கள் அதுதான் மாதம்மா கோயில் அதுவே பின்னால் மாரியம்மன் கோயில் என்று மாறிவிடுகிறது. இந்த வரலாறு ஒரு முக்கிய இடத்தை இந்த நாவலில் வைத்திருக்கிறது.
எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
தங்கமகன் கந்தவனம் தமிழ்க்கவிதை கேட்பதற்கு
நிறைவாழ்வு வாழ்ந்திட்டார் நீள்துயில் கொண்டிட்டார்
அவரிடத்தை நிரப்புதற்கு ஆர்வருவார் அவனியிலே
அன்புநெறி அணைத்தார் அதற்குத் துணையானார்
விசுவலிங்கம் நட்பை விருப்புடனே அவரேற்றார்
சைவத்தை மனமிருத்தி சன்மார்க்க வழிநடந்தார்
தமிழ்க்கவிதை வாகனத்தில் தரணியெங்கும் வலம்வந்தார்
ஆசானாய்ப் பணிசெய்த ஆளுமையே கந்தவனம்
ஆங்கிலமும் செந்தமிழும் அறிந்தவரே கந்தவனம்
ஆன்மீகம் அவரகத்தில் ஆழமாய் பதிந்ததனால்
அன்புநெறி பயணித்து ஆண்டவன் அடிசேர்ந்தார்
- கவிஞரின் இறுதிச் சடங்கு பற்றிய தகவலை அனுப்பியவர் எழுத்தாளர் இளவாலை ஜெகதீசன் -
கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் - சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் தனது பவழவிழாவைக் கொண்டாடியிருந்தார். திருமண பந்தத்தின் காரணமாக குரும்பசிட்டியைப் புகுந்த வீடாக்கிக் கொண்டார். இலங்கையில் ஆசிரியராகவும், அருனோதயாகல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியவர். உயர் கல்வியை தமிழ்நாட்டில் பெற்ற இவர், இலங்கையில் நாடக கல்வி சார்ந்த டிப்புளோமா பட்டமும் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வரும் இவர் நாடகம், கவிதை, சிறுகதை, சமயம் நிகழ்ச்சிகள் என்று எமது இனத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்பணித்தவர்.
இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருட்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர் போன்ற பல பட்டங்களைச் சமூக நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன. இன்று பல நிகழ்ச்சிகளில் தமிழில் இசைக்கப்படும் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.
https://noolaham.net/project/755/75434/75434.pdf
கவிஞர் கந்தவனம் அவர்கள் மறைந்த தகவலினை முகநூலில் 'தாய்வீடு' திலிப்குமாரின் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
என் எழுத்துலக அனுபவத்தில் என் வாசிப்பனுபவத்துடன் பின்னிப்பிணைந்த இலங்கை எழுத்தாளர்களில் ஒருவர் கவிஞர் கந்தவனம். வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் நான் எழுதத்தொடங்கிய என் பால்ய பருவத்தில் அச்சஞ்சிகை மூலம் அறிமுகமானவர். பின்னர் எப்பொழுதும் இவரது படைப்பையோ அல்லது இவர் பற்றிய செய்தியையோ ஏதாவதொரு பத்திரிகையிலோ அல்லது சஞ்சிகையிலோ பார்த்திருக்கின்றேன். வாசித்துமிருக்கின்றேன்.
யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர். தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.
இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்' எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.
இவரது ஓவியங்கள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். Shan Sundaram என்னும் இவரது முகநூற் பக்கத்தில் மேலும் பல ஓவியங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
* தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவு மேம்பாடு - முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் , முனைவர் இரா. நித்யா, கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், ஆங்கிலத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, & தகவலுழவன், விக்கிமீடியர், சேலம் -
ஆய்வுச்சுருக்கம்இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுரை
கல்வி என்பது உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு சமூக அமைப்பாகும். சமுதாயத்தில் நன்னடத்தையுடன் கூடிய திறன் சார்ந்த மானுடத்தை உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கல்வியை முறையாகப் பயில பாடத்திட்டக் கட்டமைப்பு முறையானது முதன்மையானதாகத் திகழ்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்பப் பாடத்திட்ட வடிவமைப்பு என்பது தன்னகத்தே பற்பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துறைச் சார்ந்த முதன்மைச் செயல்பாடாகப் பாடத்திட்ட வடிவமைப்பு திகழ்கிறது. இப்பாடத்திட்ட வடிவமைப்பானது, தமிழ்ப் பட்டப் படிப்பிற்குக் கட்டமைக்கப்படும் திறன் குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடதிட்டக் கட்டமைப்பு முறைகள் – சில முன் வரைவுகள்’ எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
இலக்கிய இலக்கணத் தொடர்புடையது
தமிழின் தொன்மையான இலக்கணங்களைத் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வதால் மொழியின் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் அறிய ஏதுவானதாக அமைகிறது. மேலும், இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ் மொழியின் தொன்மை, சமூக அறநெறிகள், வாழ்வியல் முறைகள், பண்பாட்டு நெறிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தொன்மையான இலக்கிய இலக்கணங்களை கற்கும் மாணவர்களால் சமுதாயத்தில் நன்மதிப்புகளை உருவாக்கும் இயலும் என்பது திண்ணம்.