'ஈரான் - அமெரிக்க' யுத்தம் பற்றியதோர் அலசல்! - எல். ஜோதிகுமார் -


சீனா, திபெத் பீடபூமியில், ஓர் 540 அடி உயரமான அணையை, கட்டி முடித்துள்ளதாக தகவல். இதன், நிலப்பரப்பானது, செங்குத்தான மலை தொடர்களையும், மிக மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதைவிட, சுவாசத்திற்கு தேவைப்படும் ஒட்சிசனின் அளவும் குறைவாகவே இங்கு காணப்படுகின்றது.
இக் காரணிகளை கவனத்துள் கொண்ட சீனா, முற்றும் முழுதாய் தானியங்கி ட்ராக்குகளையும் தானியங்கி புல்டோசர்களையும், மற்றும் தேவைப்படும் ஏனைய அனைத்து தொழில் முறைகளையும், தானியங்கி முறையில் (AI, 5G) Auto ரோபோக்களின் உதவியோடு, மனித கை சம்பந்தப்படா வகையில் அணையை கட்டி முடித்துள்ளதாக தகவல். மனிதர்களின் சம்பந்தமில்லாமல் இம்மாபெரும் அணையை நிர்மாணிப்பதில் சீனாவின் விஞ்ஞானிகள் வெறுமனே அலுவலக மேசையில் வரைபடங்களை கீறி, திட்டங்களை தீட்டுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனா அறிவித்துள்ளது.
இதனை போன்றே, நவீன விஞ்ஞான தொழிநுட்பங்களை முற்றும் முழுதாய் பயன்படுத்தி, சீனா Guangz Hou எனும் கப்பல் துறைமுகத்தையும் கட்டி முடித்துள்ளது. அமெரிக்காவின், மாபெரும் துறைமுகங்களை ஒன்றாக சேர்த்தாலும் இதன் கொள்ளளவு, அவற்றை மீறியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
லட்சக்கணக்கான, மாபெரும் கன்டெய்னர்களை ஏற்றுவதும் இறக்குவதும், அவற்றை ஒரு கச்சிதமான முறையில் வரிசை தவறாமல் அடுக்கி வைப்பதும், மீண்டும், AI தொழிநுட்பத்துடனும் தானியங்கும் நவீன விஞ்ஞான வசதிகளுடனும் சீனா உருவாக்கியுள்ளது. இரண்டொருவர் மாத்திரமே கம்பியூட்டர் மூலமாக இத்துறைமுகத்தை இயக்க செய்ய போதுமானவர்கள் எனவும் சீனா அறிவித்துள்ளது. இதனை போலவே, இன்னும் 52 துறைமுகங்களை நாடு முழுவதும் சீனா அமைத்திருப்பதாக கூறியுள்ளது.


கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

எழுத்தாளர் ஜெயமோகனை நெருங்கவைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் அவரைக் கேள்விப்பட்டதும் இல்லை.
இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறை அதிகமாக மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக “மின்னணு அடிமையாதல்” (Digital Addiction) என்ற பிரச்சினை தீவிரமாக உருவாகியுள்ளது. இதே சமயம், மரபு மற்றும் பண்பாட்டு மதிப்புகள் பின்தள்ளப்படுகின்றன என்பது கவலைக்குரிய நிலையாகும்.

யமுனா அனைத்து வேலைகளையும் முடித்து தூக்கத்திற்குப் போக மணி சாமம் 12:30 ஆகிவிட்டது. அவளுக்கோ குளிர் வேறு எலும்புகளூடு ஊடுருவி உடம்பு எல்லாம் குத்துவது போல உணர்வு. அதிகாலை எழவேண்டும், மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:00, 6:15, 6:30 என மூன்று அலாரங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள். ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள் சுருண்டு படுத்திருந்த மகனின் இருமல் அவளை மீண்டும் எழச் செய்தது. இந்தக் குளிர் ஆரம்பித்தது முதல் எந்நேரமும் குழந்தைக்கு இருமலும் தடிமனும் தான். பாவம் குழந்தை தொடர்ந்து இருமிக் கொண்டிருக்க இளஞ்சூடான தண்ணீர் கொடுத்து மீண்டும் அவனைத் தூங்க வைக்க மணி இரண்டு ஆகி விட்டது. அவளுக்கோ குழம்பிய தூக்கம் மீண்டும் வர மறுக்கின்றது. புரண்டு புரண்டு படுக்கின்றாள் . அவ்வப்போது இடைக்கிடை மீண்டும் குழந்தையின் இருமல். குழந்தையின் முதுகைத் தடவிவிட்டபடியே ஒருவாறு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் யமுனா . 

கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,


காலச் சுழற்சிக்குள் ஊரில் வாழ்ந்து, அனுபவித்து மகிழ்ந்தவையெல்லாம் இப்போது ஞாபக முடிச்சுக்களாகவே மனசுக்குள் பின்னிக் கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விடுதலையாக்குதல் என்பதும் ஒருவித சுகம்தான்! அதிலொன்றுதான் அன்று நாம் எழுதிய கடிதங்கள்.

வரலாறு தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் தருணங்களில், மொழி தனது வழக்கமான அழகியலை இழந்து ஒரு 'சாட்சியமாக' (Witness) மாறுகிறது. "பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது” (When the School Bell Fell from the Sky) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஒரு மீ-கவித்துவப் புலம்பல் (Meta-Poetic Lament). இங்கே 'பள்ளி மணி' என்பது காலத்தின் அறிவிப்பு. அது வானத்திலிருந்து விழும்போது, ஒரு தலைமுறையின் எதிர்காலம் புவிமட்டமாக்கப்படுகிறது. இந்தக் கவிதைகளில் தாய்மார்களின் துயரம் ஒரு தனிநபர் உணர்வல்ல; அது மனித நாகரிகத்தின் தோல்வியைக் காட்டும் ஒரு கண்ணாடி. நவீனத்துவக் கவிதையின் சுருக்கமும், மௌனத்தின் அடர்த்தியும் இதில் இழையோடுகின்றன. ஒரு பள்ளி அழிக்கப்படும்போது, அங்கே ஒரு கட்டிடம் வீழ்வதில்லை; மனிதகுலம் தன்னைக் குறித்து வைத்திருந்த 'நம்பிக்கை' எனும் விதை கருகிப் போகிறது. இநப் பிரதி அந்த இழப்பின் உண்மையை மறதிக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரு தார்மீகச் செயல்.
கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை. 
அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









