அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -
- பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.
அ.ந.க. வாசிப்பு அனுபவமும், எழுத்தனுபவமும் அதிகம் வாய்க்கப்பெற்றவர். இந்த நாவலை மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னிப் படைத்துள்ளார். மேற்படி முடிவுரையில் வரும் அவரது பின்வரும் கூற்று அ.ந.க.வின் நாவல் பற்றிய புரிந்துணர்வினையும், அப்புரிந்துணர்வின் விளைவாகவே அவர் இந்நாவலினைப் படைத்துள்ளார் என்பதையும்தான்:


கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கின்றன. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை. இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!
நண்பரும் எழுத்தாளருமான அ. கணபதிப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தது கனடிய தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். தாய்வீடு பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டன. தாய்வீடு ஒன்று கூடல்களில் மட்டுமல்ல, மற்றும் இலக்கிய நிகழ்வுகளிலும் சந்தித்து இலக்கியம், அரசியல் சார்ந்து அனேகமாக உரையாடுவோம். இலங்கையின் வடபகுதியில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்த இவர் மிகவும் அமைதியானவர் மட்டுமல்ல, எல்லோரோடும் பண்பாகவும்,அன்பாகவும் பழகக்கூடியவர். முன்பு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்.
- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும் எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான் . மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை . மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற ஒரு விபத்து . மனிதம் தின்று வாழ்கிறவர்கள் அதிகமாகிப் போனதனால் அதில் ஒரு அங்கமாகி தலைவராகி , இவை நிகழ்வதற்கு தார்மீக ஆதரவையும் , கூடுதலாக படையினரின் ஈனச் செயல்களையும் அனுமதித்து விடுகிறார்கள் . பழையபடி அரசநாயகத்தில் நழுவி விழுந்து தலைவர்களாகத் ( அரசர்களாக ) தான் போட்டி நடை பெறுகின்றது . இன்று , நம்நாடு போர்க் குற்றங்கள் மலிந்த ஒரு ஈன நாடாக காட்சி அளிக்கின்றது . பெயர் கெடுக்கப்பட்டு விட்டிருக்கிறது . படைப்பிரிவுகளைக் கலைத்து மீள புதுதாக ஏற்படுத்த வேண்டிய தேவை கிடக்கிறது . குற்ற விசாரணைகளைச் செய்ய வேண்டிய பணியை சமூக நீதிமன்றங்களிடம் தள்ளி விட வேண்டும் . அப்ப தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் . ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லகிற அழுகிய நிலை வேண்டாம் . அரசியல் அத்திவாரம் சரியில்லை . அதைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது . ஆனால், நம்நாடு , சீராகி மூச்சு விடுமா? , விடவே நூறு ஆண்டுகள் செல்லும் போல இருக்கிறது .

நண்பகல் வேளை, நான் பெருமாள் மலை போய் சேர்ந்திருந்தேன், பேச்சிப்பாறை நீர்வீழ்ச்சியை காணும் பொருட்டு. வானம் மேகமூட்டமாய் இருந்தது. மழை அல்லது தூறலாவது, மாலை வேளையில் சாத்தியம் என்பது போல இருந்தது. பிரதான பாதையில் இருந்து கீழிறங்கி, ஓர் இரண்டு கிலோமீற்றர் நடந்தாக வேண்டும் – பள்ளத்தாக்கை நோக்கி. சுகமான நடை. கீழிறங்கும் போது, ஓர் அரை கிலோமீற்றர், ஒரு சிறிய நீரோடையுடன் அதன் கரையை ஒட்டினாற்போல், பெரிய பெரிய மரங்களின் கீழாக, அவற்றின் நிழலில் நடக்கும் போது நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் மென் காற்று, சில்லென முகத்திலறைந்து நடந்த நடைக்கு மேலும் உற்சாகம் தருவதாயிருந்தது. நீர்வீழ்ச்சி ஒன்றும் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. செங்குத்தான பாறையில் விழும் ஓர் சிற்றோடை. அவ்வளவே. ஒரு வேளை, வருடத்தின், வேறுபட்ட காலத்தில் நீர் அதிகமாக வந்து விழுவதாய் இருக்கக்கூடும். இருந்தும், முக்கியமானது, நீர்வீழ்ச்சியை கீழிருந்து தரிசிக்கவில்லை என்ற உண்மையாகும். மேலிருந்து பார்க்கும் போது எந்த ஓர் நீர்வீழ்ச்சியும் தன் உண்மை பரிமாணத்தை வெளிப்படுத்தாது என்பது தெளிவு, சில மனிதரை போன்று. அதாவது குறித்த புள்ளிகளில் நின்று நோக்கினாலன்றி, அது நீர்வீழ்ச்சியானாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி அவையவை தத்தம் உண்மை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில்லை போலும். மொத்தத்தில் அந்த நீர்வீழ்ச்சி, என் கால்களை, கூச வைத்ததுடன் சரி. மடிப்பு மடிப்பாக, ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து ஒன்றை ஒன்று முந்துமாப் போல் முண்டியடித்து வருமே, பிரமாண்டமான நீர்படைகள்– அதொன்றும் இங்கே காணமுடியவில்லை – இப்படி மேலிருந்து பார்த்ததால். ஆனால், கீழிருந்து பார்த்திருந்தால் கூட, இந்த வற்றிய காலத்தில் அப்படி எதையும் நான் பெரிதாக கண்டிருக்கவே போவதில்லை என்பதும் புரிந்தது. மொத்தத்தில், என்னை கவர்ந்தது நீர் வீழ்ச்சியின் பிரமாண்டம் என்பதை விட இப்பாறையின் பிரமாண்டம் என கூறுவதே சரி. மேலும், இதுதான், பேய்ச்சி பாறையோ என்பதனையும் நான் விசாரித்தேனில்லை – துரதிர்ஷ்டவசமாக.

டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.

மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.




உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









