விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் 09 - தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் நிகழ்வுக்கான அழைப்பு!
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், இனக்குழும மோதல்கள் பற்றி ஆய்வு செய்யும் துறைசார் அறிஞர்கள் இனக்குழும பன்மைத்துவம் [ETHNIC DIVERSITY] காணப்படும் பகுதிகளில், இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத புதிர் [PUZZLE] தன்மையுடைய அனுபவ யதார்த்தத்தைக் கண்டனர். சில பிராந்தியங்கள் [REGIONS], தேசங்கள் [NATIONS], சில நகரங்கள், சில கிராமங்கள் ஆகிய பகுதிகளில் ஒரு கால எல்லைக்கு முன் இனக்குழுக்களிடையே அமைதி பேணப்பட்டு வந்ததையும், வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானித்தனர். இப்பகுதிகளில் பின்னர் இடைவிடாது நம்பவே முடியாத வகையில் வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையிலான இன வன்முறை, சூறைக் காற்று போல் வீசியடித்து கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போவதையும் கண்டனர். இதனை இனத்துவமும் தேசியவாதமும் [ETHNICITY AND NATIONALISM] பற்றிய தீர்வுகாணப்படாத புதிர் [UNRESOLVED PUZZLE] என்று குறிப்பிடுவதோடு 'காலமும் இடமும் [TIME AND SPACE] சார்ந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வது எப்படி?' என்னும் வினாவை வார்ஷ்னே [VARSNEY] என்ற ஆய்வாளர் தமது நூல் ஒன்றில் முன்வைக்கிறார். [பேராசிரியர் உயன்கொடவின் 2010 இல் வெளியான நூலின் பக்-22 இல் தரப்பட்ட மேற்கோள்].
மேலே குறிப்பிட்டது போன்ற விடுவிக்கமுடியாத புதிர்கள் பல உள்ளன. இப்புதிர்களை விடுவிப்பதற்குத் தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் [THEORIES OF NATIONALISM] உதவ முடியுமா? என்ற வினாவை முன்வைத்து 'அறிதலும் பகிர்தலும்' அரங்கில் 9 ஆவது உரையாடல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM], நவீனத்துவ வாதம் [MORDENISM], இனக்குழும குறியீட்டுவாதம் [ETHNO-SYMBOLISM], கருவிவாதம் [INSTRUMENTALISM] போன்ற தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களையும் எரிக் ஹொப்ஸ்பாம், பெனடிக்ட் அன்டர்சன், அந்தனி டி.சிமித் போன்ற கோட்பாட்டாளர்களின் கருத்துக்களையும் முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் இவ்வுரையாடலை நிகழ்த்துவார். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் திரு. சத்தியதேவன்.

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -

ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”


நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.



பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு. 



கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









