வாசிப்பும், யோசிப்பும் 381 : எழுத்தாளர் நடேசனும், சிறுகதை பற்றிய அவரது எண்ணங்களும்! - வ.ந.கிரிதரன் -

- எழுத்தாளர் நடேசன் -
எழுத்தாளர் நடேசன் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் சிறுகதை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கினறார்:
" தற்போது இலங்கை பத்திரிகைகளில் சிறுகதைகள் பக்கத்துக்கேற்ப குறைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறது . சிறு கதைகளில் பாத்திரம் , சம்பவம் முழுமையாக வரவேண்டும். சம்பவங்கள் சுரியலில் வருவதுபோல் இலக்கியத்தில் தற்செயலாக நடக்கமுடியாது . அதேபோல் பாத்திரத்தின் செயலுக்கு காரணம் தேவை . ஆனால் 800 வார்த்தைகளில் எழுதுவது அம்மாவின் சீலையில் பாவாடை தைப்பது போன்ற விடயமாகி விட்டது . கட்டுரை ,நாவல் வறண்டு போய் விட்ட நிலையில் சிறுகதைகளும் சிதைந்துவிடுமோ என்ற பயத்தில் எழுதுகிறேன்.' விக்கிபீடியாவின் சிறுகதை பற்றிய கருத்துகளையொட்டி அவர் கருத்துகளைக் கூறியுள்ளார்.
என்னைப்பொறுத்தவரையில் சிறுகதையொன்றுக்கு இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கூற முடியாது. ஒரு பிரதேசம் பற்றிய விபரிப்பு கூட சிறுகதையாக இருக்க முடியும். ஒரு சம்பவம் தாக்கிய உணர்வைக் கூட சிறுகதையொன்று விபரிக்கலாம். இந்த வரைவிலக்கணத்தின்படி பார்த்தால் புதுமைபித்தனின் மிகச்சிறந்த சிறுகதைகளிலொன்றாகக் கருதப்படும் 'பொன்னகரம்' ஒரு சிறுகதையேயல்ல. அது ஓர் இருபக்கச் சிறுகதை. மாநகரின் ஒரு பகுதி பற்றிய விவரணச் சித்திரம். அதில் பாத்திரங்கள் முழுமையாக வார்க்கப்படவில்லை. ஆனால் அப்பகுதி பற்றி, வாழ்க்கை முறைகளைப்பற்றி கடுமையாக விமர்சிக்கின்றது. 800 சொற்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் சொற்களைக் கொண்ட சிறுகதை 'பொன்னகரம்'


பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022). இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது. 

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி, ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும் தேர்ந்த இலக்கிய வாசகர் சிற்சபேசன் அவர்களை எமது வாசகர் முற்றத்திற்கு அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர். 

நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.
நினைவுகளின் தடத்தில் - 23


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
முன்னுரை

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!
தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









